Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சங்கரா மீன் குழம்பு சங்காரா மீன் செந்நிறமுடையது. இந்த மீன் குழம்பின் சுவை நாவில் நீர் ஊறச் செய்யும். எளிதில் செய்யலாம். தேவையான பொருட்கள் சங்கரா மீன் – 5 கனிந்த தக்காளி சிறியது – 3 புளி - சிறிய எலுமிச்சை அளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன் சின்ன வெங்காயம் – 100 கிராம் மிளகாய்த்தூள் - 3 டீ ஸ்பூன் மல்லித்தூள் – 2 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன் நல்லெண்எண்ணெய் – 4 டீ ஸ்பூன் கடுகு - 1/2 டீ ஸ்பூன் சீரகம் - 1/2 டீ ஸ்பூன் வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன் பெருங்காயம் – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து உப்பு - தேவையான அளவு செய்முறை சங்கரா மீனில் உள்ள செதில்களை உப்பு, கோதுமை …

  2. இட்லி , தோசையுடன் சாப்பிடுவதற்கு ஏற்றது உள்ளி சட்னி. அத்துடன்... உள்ளியில், கொலஸ்ரோலை கட்டுப்படுத்தும் மருத்துவ குணமும் உள்ளது.

    • 4 replies
    • 904 views
  3. பெருநாள் என்றாலே எல்லார் வீட்டிலும் இனிப்பு நிச்சயம் இருக்கும். அதுவும் வட்லாப்பம் தான் பெரும்பாலான வீடுகளில் ஸ்பெஷல். அதன் எளிமையான வித்தியாசமான செய்முறை தேவையான பொருட்கள் முட்டை - 8 காய்ச்சிய பசும் பால் – 1 ½ லிட்டர் சீனி – 2 ரைஸ் குக்கர் கப் வன்னிலா எசன்ஸ் – சில சொட்டுக்கள் முந்திரி 10 ஏலக்காய் 6 நெய் 20 மில்லி செய்முறை பாலை காய்ச்சி ஆறவைத்து வன்னிலா எசன்ஸ் சேர்க்கவும். முட்டையையும் சீனியையும் நுரை வரும் அளவுக்கு மிக்ஸ்யில் அடித்து வைக்கவும். முந்திரி மற்றும் தோல் நீக்கப்பட்ட ஏலக்காய் (விதை மட்டும்) மிக்சியில் இட்டு ஒரு கல் உப்பிட்டு மிக சற்று தண்ணீர் இட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடித்து வைத்த முட்டையையும் சீனியையும் சேர்த்து வடித்து ஆறிய பா…

  4. ஹோட்டல் சாம்பார் நானும் பல வழிகளில் செய்து பார்த்துவிட்டேன். இட்லிக்குத் தொட்டுக்குக்கொள்ள ஹோட்டலில் வைக்கும் சாம்பார் போல வருவதேயில்லை. வீட்டு சாம்பாரில் ஹோட்டல் ருசியைக் கொண்டுவருவது எப்படி? - எம். கலை, திருச்சி. ரேவதி சண்முகம், சமையல்கலை நிபுணர், சென்னை. துவரம் பருப்புடன் பரங்கிக்காய் துண்டுகளைச் சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். தனியா, கடலைப் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் சின்ன வெங்கயாம் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கொஞ்சம் புளியைக் கரைத்து ஊற்றுங்கள். …

    • 4 replies
    • 2.6k views
  5. கம கமவென மணம் வீசும் யாழ்ப்பாணத்து உணவு வகைகள்.!! யாழ்ப்பாணத்தின் முதன்மை உணவு, ஏனைய ஆசிய நாடுகளில் இருப்பதைப் போல, அரிசிச் சோறு ஆகும். அரிசி, யாழ்ப்பாணக் குடா நாட்டில் குறைந்த அளவிலும், தலை நில வன்னிப் பகுதியில் பெருமளவும் நீண்டகாலமாகவே செய்கை பண்ணப்பட்டு வந்தது. ஐரோப்பியப் படைகளின் ஆக்கிரமிப்பும், அக்காலங்களில் அடிக்கடி ஏற்பட்ட காலரா முதலிய கொள்ளை நோய்களும், வன்னிக் குடியேற்றங்களைப் பெருமளவில் இல்லாது ஒழித்ததுடன், பெருமளவில் அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் அரிசியே தொடர்ந்தும் விருப்பத்துக்குரிய உணவாக இருந்து வந்தது. உலக யுத்தக்காலத்தில், அரிசிக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் நிலவிய தட்டுப்பாடு காரணமாக, அப்போதைய ஆங்கிலேய அ…

  6. கருணைக் கிழங்கு மசியல் மூன்று பேருக்கான அளவு கருணைக் கிழங்கு – 1/4 கிலோ / உள்ளங்கைப்பிடி கையகலம் இருக்கும் மூன்று நான்கு கிழங்குகள் புதுப்புளி – சிறிய எலுமிச்சை அளவு - 100 ml தண்ணீரில் நன்றாக கரைத்து வடிகட்டி புளிஜலமாக்கி வைத்துக் கொள்ளவும். நீள வரமிளகாய் - 5-6 வறுத்தது வெந்தயம் – 1/2 டீஸ்பூன் வறுத்தது ஜீரகம் – 1 டீஸ்பூன் வறுத்தது இஞ்சி – சிறு துண்டு - தோல் நீக்கித் துருவிக் கொள்ளவும் (வதக்க வேண்டாம்) சின்ன வெங்காயம் - 10-15 வரை - வதக்கிக் கொள்ளவும் கல் உப்பு – ஒரு டீஸ்பூன் கும்பாச்சியாக (Heap) கறிவேப்பிலை பச்சை கொத்தமல்லி தாளிக்க: நல்லெண்ணெய் – ஒரு பால் கரண்டி கடுகு செய்முறை: கிழங்கை மண் போக நன்றாக அலம்பி, பீலரால் (pe…

    • 4 replies
    • 1.8k views
  7. சப்பாத்திக் கொத்து தேவையான பொருட்கள் சப்பாத்தி – 4 வெங்காயம் – 2 மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு. தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு. செய்முறை வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். கடைசியாக நறுக்கி வைத்திருக்கும் சப்…

  8. மதுரையை அசத்தி வரும் "விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பை" புது முயற்சிக்கு மதுரை மக்கள் கொடுக்கும் அதிர்ச்சி.!! உணவு, அரசியல் இரண்டிற்கும் பிறப்பிடமாக தோன்றும் இடம் மதுரை . இந்த புதிய வரலாற்றை படைப்பதும் மதுரை தான். உணவுக்கு மதுரை மிஞ்ச எந்த ஊரும் இல்லை.அந்த வகையில் விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பையை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது மதுரை. கோன் வகை பனி கூழ் சாப்பிடுவது போல தேத்தண்ணீர் அல்லது கொப்பியைக் குடித்தவுடன் கோப்பையும் ருசித்து சாப்பிடும் வகையில் உணவு வகையான "விசுகொத்து கோப்பை" என்ற புது தேத்தண்ணீர் வகையை வாடிக்கையாளா்களிடையே அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆா்.எஸ்.பதி நிறுவனம் மதுரை மேலமாசி வீதியில…

    • 4 replies
    • 1.3k views
  9. கிறிஸ்துமஸ் ஃபுரூட் கேக் கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேட் தான் எப்போதுமே சிறந்தது. அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபுரூட் கேக்கிற்கு பழங்களை ரம் மற்றும் பிராந்தியில் 1 மாதத்திற்கு முன்பு ஊற வைத்து செய்தால், அதன் சுவையே தனி. அதற்கு நேரம் இல்லாவிட்டால், குறைந்தது 1 வாரத்திற்காவது ஊற வைத்து செய்யுங்கள். அதிலும் இந்த கேக்கை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த ஃபுரூட் கேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: ரம் மற்றும் பிராந்தியில் ஊற வைத்த பழங்கள் - 3 கப் கேரமலுக்கு... சர்க்கரை - 1 கப் தண்ணீர் - 1 கப் கேக்கிற்கு.. மைதா - 2 1/2 கப…

  10. தட்டை (அ) எள்ளடை தேவையானப் பொருள்கள்: புழுங்கல் அரிசி_2 கப்புகள் பொட்டுக்கடலை_1/2 கப் கடலைப் பருப்பு_1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய்_6(காரத்திற்கேற்ப) பூண்டு_2 பற்கள் பெருங்காயம்_சிறிது உப்பு_தேவையான அளவு எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: புழுங்கல் அரிசியை தண்ணீரில் நனைத்து ஊற வை.நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அரைக்கும் போதே அதனுடன் பூண்டு,காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்தெடு.மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும்.அதே சமயம் மழமழவென அரைக்க வேண்டும்.அப்பொழுதுதான் எள்ளடை மொறுமொறுப்பாக இருக்கும்.இல்லை எனில் கடினம…

  11. தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ வெங்காயம் - 2 (பெரியது மற்றும் நறுக்கியது) தக்காளி - 3 (பெரியது மற்றும் நறுக்கியது) உருளைக்கிழங்கு - 2 (பெரியது மற்றும் தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது) குஜராத்தி மசாலா - 4 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1/4 கப் தாளிப்பதற்கு... பட்டை - 1 பிரியாணி இலை - 2 ஏலக்காய் - 6 கிராம்பு - 5 அன்னாசிப்பூ - 1 மசாலாப் பொடிகள்... மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி - 2 டீஸ்பூன் கு ஜராத்தி மசாலாவிற்கு... இஞ்சி - 1/4 கப் (நறுக்கியது) பூண்டு - 30 பற்கள் பச்சை மிளகாய் - 7 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு …

    • 4 replies
    • 1k views
  12. திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலப்பாக்கட்டு பிரியாணி கடைகளைப் பார்க்கலாம். அந்த அளவில் அது மிகவும் பிரபலமானது. ஆனால் அந்த தலப்பாக்கட்டு பிரியாணியை எப்படி செய்வதென்று தெரியுமா? அதுவும் திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: நெய் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் பாசுமதி அரிசி - 2 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்…

    • 4 replies
    • 3.1k views
  13. புரட்சி தலைவர் எம்.ஜி .ஆர் சத்துணவு... தேவையானவை: அரிசி ஐ.ஆர் 20 அல்லது பொன்னுமணி=2 டம்ளர் பருப்பு துவரை அல்லது மைசூர் டால்= 1/2 டம்ளர் மஞ்சள் தூள்=1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்=2 டீஸ்பூன் மிளகாய் தூள் = 2 டீஸ்பூன் புளி சிறிதளவு... உப்பு=3 டீஸ்பூன் காய்கறிகள் ஏதாவது 3 வகைகள்... தாளிக்க: கருவேப்பில்லை சிறிதளவு கொத்துமல்லை இலை சிறிதளவு.. பெரிய வெங்கயம் 2 கடுகு 1 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் செய்முறை: முதலில் அரிசியையும் பருப்பையும் நன்றாக கலந்து அதை தனியாக வைத்து கொள்ளவும் ... மூன்றுவகை காய்கறிகளையும்சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும் பிறகு .. புளியை நன்றாக 3 லிட்டர் அளவுள்ள தண்ணீரில் கரைத்து புளிகரைசல் தயார் …

  14. முருங்கைக் கீரை – 1 கப் சின்ன வெங்காயம் – 6,7 இளம் சிவப்பான பச்சை மிளகாய் – 4 (பச்சை நிறத்துடைய மிளகாயைத் தவிர்த்து இளம் சிவப்பு மிளகாய் சேர்துக் கொண்டதும் முருங்கை இலையை எடுத்துச் சாப்பிடும் போது மிளகாயை இலகுவாக எடுத்து அகற்றலாம்.) 2தேங்காய்ப் பால் – 2 கப் தண்ணீர் – ¼ கப் உப்பு தேவையான அளவு மஞ்சள் பொடி விரும்பினால் தேசிச்சாறு – 1 தேக்கரண்டி தாளிக்க விரும்பினால் கடுகு – ¼ ரீ ஸ்பூன் உழுத்தம் பருப்பு – ½ ரீ ஸ்பூன் இலையைக் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நீளமாக வெட்டி வையுங்கள். பச்சை மிளகாய்களை வாயைக் கீறிவிடுங்கள். பாத்திரத்தில் இவற்றைப் போட்டு உப்பிட்டு தண்ணீர் ஊற்றி 5-7 நிமிடங்கள் இலை அவியும் வரை அவிய விடுங்கள். அவிந்ததும் தேங்காய்ப் பால் ஊற்றி…

  15. சூப்பர் கத்தரிக்காய் கிரேவி, கத்தரிப் பிரியர்களுக்காக.....! 🍆

  16. தீபாவளிக்கு என்ன மட்டனா? இதை ட்ரை பண்ணலாமே! எப்பவும் செய்யும் உணவுகளை விட கொஞ்சம் ஸ்பெசலாய் செய்தால்தான் அது தீபாவளி. இந்த தீபாவளிக்கு அசைவ ப்ரியர்கள் கண்டிப்பாக மட்டனை மிஸ் செய்யமாட்டார்கள் என்பதால் அவர்களுக்கான "காரைக்குடி ஸ்பெசல் மட்டன் நெய் பிரட்டல்" செய்முறை. மட்டன் பிரட்டல் வகையில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் ரெசிப்பி இது. முதலில் தேவையானவை - (செய்முறை 1 கிலோ மட்டனுக்கு ) மட்டன் - 1 கிலோ நெய் 100 கிராம் 10 - வரமிளகாய் 1 தேக்கரண்டி மல்லி 1 தேக்கரண்டி சீரகம் 1 தேக்கரண்டி சோம்பு 2 தேக்கரண்டி மிளகு 15 முந்திரி பருப்புகள் 1 மேஜைக்கரண்டி பூண்டு இஞ்சி பேஸ்ட் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் பட்டை இரண்டு விரல…

  17. இந்த பிட்டு பற்றிய சமையல் குறிப்பை முன்னர் யாழில் இணைத்தெனா தெரியவில்லை?? இந்த செய்முறை 2 பேருக்கு போதுமானது. 250 கிராம் Couscous ஐ எடுத்து எடுத்து உங்கள் சுவைக்கேற்ப உப்பை கலந்து பின் மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் பரவிவிடுங்கள். நன்கு கொதித்த சுடு நீரை பாத்திரத்தில் Couscous இனை மூடி, ஒரு சென்ரி மீற்றர் உயரத்திற்கு சேருங்கள். பாத்திரத்தை இறுக்கமாக மூடி 5 - 6 நிமிடங்கள் வையுங்கள். இப்போது Couscous சுடு நீரில் வெந்து நீங்கள் இட்டதை போல் 3 மடங்கிற்கு வந்திருக்கும். அவிந்த Couscous இற்கு துருவிய தேங்காய்/ உலர்ந்த தேங்காய் துருவலை கலந்து அப்படியே கறி/ கூட்டு/ பொரியல் போன்றவற்றுடன் உண்ணலாம். அல்லது புட்டு அவிக்கும் க…

    • 4 replies
    • 4.2k views
  18. ராசவள்ளிக் கிழங்கு சிறு வயதினரிலிருந்து பெரியோர்கள் வரை விரும்பி சாப்பிடும் நல்ல ஒரு உணவு.வெளி நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இதைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை.ஆனால் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள் இதைச் சாப்பிடாதவர்களே இருக்க மாட்டார்கள்.இங்குள்ள இந்தியன் கடைகளில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி பக்கற் பண்ணி குளிரூட்டிகளில் போட்டு விற்கிறார்கள். இதையே சீன மரக்கறி கடைகளுக்கு போனால் purple jam என்ற பெயரில் வைத்திருப்பார்கள். தோலைச் சுரண்டி அளவான தண்ணீரில் போட்டு நன்றாக வெந்ததும் தேவையான அளவு உப்பு தேங்காய்ப்பால் அல்லது பசுப்பால் தேவையான அளவு தண்ணீராகவும் இல்லாமல் இறுக்கமாகவும் இல்லாத அளவு வர இறக்கி சிறிது ஆறவைக்க இன்னும் கொஞ்சம் இறுகும். உங்களுக்கு தேவையான …

  19. Started by நவீனன்,

    பீட்ரூட் வடை தேவையான பொருட்கள்: பீட்ரூட் - 4 வெங்காயம் - 1 கப் (நறுக்கியது) துவரம் பருப்பு - 200 கிராம் மிளகாய் - 6 சீரகம் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம் பருப்பை நீரில் ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பீட்ரூட்டை துருவிக் கொண்டு, அதனை வாணலியில் போட்டு எண்ணெய் சேர்க்காமல், வதக்க வேண்டும். பின்பு அத்துடன் வெங்காயத்தையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி, அதோடு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையை சேர…

  20. நவராத்திரி வரப்போது, அதுக்கு நீங்க இலகுவா வீட்ட செய்து படைச்சு குடும்பத்தோட சாப்பிட கூடிய ஒரு இலகுவான கடலைப்பருப்பு வடை எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் இத மாதிரி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என

  21. தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 250 கிராம் கடலைப் பருப்பு - 50 கிராம் மிளகாய் வற்றல் - 4 தேங்காய்த் துருவல் - 1/2 கப் பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 6 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சாம்பார் பொடி - 6 தேக்கரண்டி புளி - எலுமிச்சம் பழ அளவு மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 1 கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை : பருப்புகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கழுவி தண்ணீரை வடிய வைக்கவும். வடித்ததும் உப்பு, மிளகாய் வற்றல், தேங்காய் சேர்த்து உசிலிக்கு அரைப்பது போல் அரைக்கவும். புளியைத் தண்ணீர் அதிகம் விட்டுக் கரைத்து உபபு, மஞ்சள் தூள் கலந்து கொதிக்க வைக்கவும். இண்டாலியம் சட்டி அல்லது இருப்புச்சட்டியில் 3 தேக்கரண்டி எண்ணெய…

  22. கீரை பொரியல் (கீரை வறை) தேவையான பொருட்கள் அரைக் கீரை - 1 கட்டு பெரிய வெங்காயம் - 1 வரமிளகாய் - 5 கடுகு - 1/4 தேக்கரண்டி கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. கீரையை களை நீக்கி கொய்து, நன்றாக கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும். 4. அதனுடன் நறுக்கிய வரமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். 5. வெங்காயம் சிவக்கும் வரை நன்றாக வதங்கியதும் நறுக்கி வ…

    • 4 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.