Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. உங்களின் லண்டன் என்ற கனவுலகத்திற்கு வந்தவுடன் உங்களை எல்லோரும் பவுண் காசு கொடுத்து வரவேற்பார்கள் என்றுதானே நினைத்திருந்தீர்கள். இங்கு வாழ்க்கையை இழுத்து பிடித்து வாழ்வதற்கு பலர் வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். லண்டன் உங்களை பாராட்டி, சீராட்டி வளர்க்கும், பணத்தை அள்ளித்தரும் என்று நினைத்தால் அது உங்களின் முட்டாள்தனம்.ஹீத்ரோ எயார் போட் உங்களை செங்கம்பளம் போட்டு வரவேற்காது உங்களை குத்தி குடையும். போனகிழமை வெளிநாட்டுக்கு போய்விட்டு ஹீத்ரோ எயார் போட் இமிக்கிறேசன் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்து கவுண்டரில் ஒரு நேபாள தேசத்து பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் இளம் பெண் ஸ்ருடன்ட் விசாவில் வந்திருக்கிறாள்.இமிக்கிறேசன் ஒபிஸர் கேட்கும் கேள்விக்கு கூட ஆங்க…

  2. Started by nunavilan,

    காஞ்சனை - புதுமைபித்தன் அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால் என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும் பொய்; அதாவது - கடவுள், தர்மம் என்று பல நாமரூபங்களுடன், உலக 'மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள். இந்த நகல…

    • 3 replies
    • 1.3k views
  3. அந்த மாதிரி பொம்பளை மனம் இறுக்கமாகவே இருந்தது. அம்மா மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இத்தனைக்கும் அப்பா போன பிறகு அம்மாதான் எல்லாமாமுமாக இருந்து என்னைப் பார்த்து கொள்கிறாள். இருந்தும் கோபத்தின் கனலில் மனம் பின்னோக்கி சென்று எண்ணிப் பார்த்தது. எங்கள் தெருவில் வசித்து வந்த பவானி அம்மாள் இறந்து விட்டாள். அம்மாவை விட நான்கைந்து வயது இளையவளாக இருக்கக் கூடும்.என் சிறுவயது பருவத்தில் இதே தெருவில்தான் வசித்து வந்தாள். குழந்தைகள் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம். அதுவும் நானென்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் என் அம்மாவோ, இல்லை மற்ற குழந்தைகளின் அம்மாக்களோ அவளை எப்போதும் அருவெறுப்பாகவே பார்ப்பார்கள். அவள் எங்கள் தெருவில் வரும்போது எங்களுக்கு அதட்டல் விடப்படும். "ஏன்மா அந…

  4. ‘ஓ பார்த்திட்டன்’ என்று சொன்னான். ஆனால் அவன் நாங்கள் இருந்த வீட்டைப் பார்க்கவில்லை. அவன் அன்று நாங்கள் இருந்த வீட்டைப் பார்த்திருந்தால் அவனுக்கு பெரிய வெள்ளி. அலட்சியம் செய்ததால் அன்று நாம் பிழைத்தோம். நாங்கள் தொடர்ந்து நகர்வை மேற்கொள்ள முடியாது புதுக்குடியிருப்பை நோக்கி ஆமிக்காரரை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனங்களின் தொடர் போக்கும், நவீன கருவிகளைப் பொருத்திய பெரிய வாகனங்களும் சென்றவாறே இருந்ததோடு, புதுக்குடியிருப்புப் பக்கமிருந்து பெரும் வெடிச் சத்தங்களோடு, கடும் சண்டை நடைபெறும் சத்தமும் கேட்டவாறேயிருந்தது. அப்போது நாங்கள் எங்களுக்குள்ளேயே எங்கட ஆட்கள் அடிக்கிறாங்கள் போல எனக் கதைத்துக் கொண்டோம். எங்கட (ரீமில்) அணியில் இப்ப ஐந்து (05) பேருக்கு சின்னமுத்து (அம்மாள் வ…

  5. ஞாபகப் புதைகுழி அல்லது சிதம்பரநாதன் அவனை நான் முதன்முதலில் பார்த்தபோது மாடுகளைச் சாய்த்தபடி போய்க்கொண்டிருந்தான். ‘ஹெய் ஹேய்’என்ற அவனது குரலுக்குக் கட்டுப்பட்டோ அல்லது பழக்கம்காரணமாகவோ கலையாது நிரையாகப் போய்க்கொண்டிருந்தன அவை. சின்னதும் பெரிதுமாய் நூற்றைம்பது மாடுகளுக்குக் குறையாது. நடுநாயகமாக கேப்பை மாடொன்று தன் பெரிய திமிலும் கொம்புகளும் அனைத்துக்கும் மேலாகத் தெரிய மெத்தனத்தோடு நடந்துபோனது. கறுப்பு மை பூசப்பட்ட கூரிய கொம்புகள் அச்சம் தருவதாயிருந்தன. நாங்கள் அந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன. பள்ளிக்கூடத்தில் சேர்ந்த நாளன்று புதுவகுப்பில் எனக்குப் புதிதான முகங்கள் நடுவில் மிரட்சியோடு அமர்ந்திருந்தபோது மீண்டும் அவனைப் பார்த்தேன். கக்க…

  6. Started by nunavilan,

    ஆசை ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான். தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான். பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? என்…

  7. Started by நிலாமதி,

    லிவிங் டு கெதர் ..............திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்தல் .படித்ததில் பகிர்ந்தது. கடவுள் என்ற மூட நம்பிக்கையில் உங்கள் காலத்தைவீணடிக்காதீர்கள்.நமக்கெல்லாம் பகுத்தறிவு எதற்கு இருக்கிறது.அதை கொஞ்சமாவது உபயோகப்படுத்திவாழுங்கள் .கடவுளை விட உங்களுக்கு அதிகம் சக்தி கிடைக்கும்...` பலத்த கரகோசத்துடன் பேசி முடித்தான் ஆகாஷ். ஆகாஷ் இன்றையத் தேதியில் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவன்.அவனது பகுத்தறிவுக் கொள்கை மற்றும் பின்னவீனத்துவமான எழுத்துக்களில் கிறங்கிப்போய் அவனுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.அவனது புகழ் பெருகக் காரணம் அவனது பேச்சுத் திறனும் எழுத்து நடையும் மட்டுமல்ல.நிஜ வாழ்க்கையில் கூட அவன் பகுத்தறிவுவாதியாக தனக்குப் …

  8. தாயகத்தை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட 20 வருடங்களாகின்றது. நான் தாயகத்தை விட்டு வெளியேறும் போது அங்கு இருந்த உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களில் பலர் உலகத்தின் வெவ்வேறு மூலைகளில் சிதறிப் போய் இருக்கிறார்கள். சிலர் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாது. சிலர் உயிருடன் இல்லை. இப்பொழுது பலர் தாயகத்துக்கு சென்று வருகிறார்கள். ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்கள் ஒரு செவ்வியில் நல்லூர் திருவிழாவுக்கு ஐம்பதினாயிரம் வெளினாட்டவர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். தாயகத்துக்கு தற்பொழுது செல்பவர்களில் சிலருக்கு அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் இருக்கிறார்கள். பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். பல வருடங்களா…

  9. Started by sathiri,

    என்ன செய்யலாம் நேசக்கரம் அமைப்பிறகாக பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியில் நிகழ்ச்சியொன்று புதன் வெள்ளி மற்றும் சனிக்கிழைமைகளில் சாந்தி ரமேசும் நானும் செய்வது வழைமை .சில நேரங்களில் நான் நிகழ்ச்சி செய்வதாக அடித்து சத்தியம் செய்து விட்டு நிகழ்ச்சி செய்யாமல் எஸ்கேப்பாகி சாந்தியிடம் திட்டுவாங்குவதும் வழைமையான நிகழ்ச்சிநிரலில் அடங்கும். இதுபோலத்தான் ஒருநாள் வானொலி நிகழ்ச்சி முடிந்து வழைமை போல உதவ விரும்புபவர்கள் தொடர்புகொள்ளவும் என்று சாந்தியினுடைய தொ.பே மற்றும் என்னுடைய தொ.பே இலக்கங்களை அறிவித்து நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் எனது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது மறு முனையில் ஒரு ஆணின் குரல் அதனை உரையாடல் வடிவிலேயே இங்கு தருகிறேன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான். வண…

    • 187 replies
    • 14.5k views
  10. அன்றுதான் அவளுக்காக காத்திருந்தேன் என்னவோ தெரியாது.எனது காரியாலத்தில் வேலை செய்யும் உயரதிகாரியான மோகன் அண்ணா வந்து புதிதாக ஒரு பெண் வேலைக்கு வருவதாகவும் இன்று அவளை நீங்கள் நம் ஊழியர்கள் வேலை செய்யும் இடங்களுக்கெல்லாம் ராஜன் நீங்கள் ஏத்தி செல்ல வேண்டும் என்று சொன்னார் நானும் சரியென தலையாட்டி அவள் வரவுக்காய் காத்துக்கொண்டிருந்தேன். எங்கள் நிறுவனமோ காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பது ஆனால் சுயமாக எந்த முடிவுகளூம் எடுக்கமுடியாது ஆனால் அரசாங்கத்திற்கு ஒரு வெளி நாட்டு நிறுவனம் கைக்கூலியாக செயற்பட்டு வந்தது அதில் நான் ஒரு சாரதியாக பணி புரிந்து கொண்டிருந்தேன் மட்டுநகரில். நானும் வாகனத்தில் அவள் வரவுக்காய் காத்துக்கொண்டிருந்தேன் . காரியாலயத்தில் பெண் ஒன்று உள் நுழைவதை கண்டேன்…

  11. மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்கனவே அண்ணவின் பை தண்ணீர் போத்தல் மத்திய உணவு பெட்டி என்று தோளில் மாட்டி பல முறை ஒத்திகை பார்த்தாயிற்று . அந்த சுப நாளும் வந்தது . முதலில் பாலர் வகுப்பு என்னும் .( அரிவரி )வகுப்பு . முதல் நாள் அதிகாலயே எழுந்து விட்டேனாம். அப்பா அப்போது பட்டணத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். எனது நச்ச்ரிப்பு தாங்காமல் அம்மா கடிதம் எழுதி எனக்கு தேவையாதை ஒரு நண்பர் மூலம் கொடுத்து விட்டிருந்தார் . பள்ளிக்கு போகுமுன்பே அதை பிரித்து ஒத்திகை பார்த்தாயிற்று. அந்த சுப நாள் ஒரு திங்கட்கிழமை. மாத ஆரம் பம என எண்ணுகிறேன். அங்கு இரு பெண ஆசிரியைக ளும் ஒரு தலை…

  12. குறை சொல்ல முடியாத குற்றங்கள்! இயக்க ஆட்கள் காசுக்கு வந்திருக்கினம் போல கிடக்குது. நீங்கள் கீழே வராதையுங்கோ நான் ஏதாவது சொல்லி அனுப்புறேன். அன்று ஞாயிற்றுக்கிழமை, வீட்டு அழைப்பு மணி ஒலித்தவுடன் பக்கத்தில் படுத்திருந்த கோமதி சாத்திரம் பார்த்தது போல சரியாகச் சொல்லிவிட்டு கீழே இறங்கிப் போனாள். இங்கே வாருமப்பா! அவர்களை நிக்கச் சொல்லும், உடுப்பு மாத்திக் கொண்டு வாறன். அவங்கள் மனுசிமாரையும் வேலைக்கு விடாமல் ஐந்தாறு அறைகளிலே வீடும் வாங்கிக் கொண்டு புதுப் புதுக் கார்களிலே திரியட்டும். நீங்கள் வீட்டிலே நிற்க நேரமில்லாமல் ஒன்றுக்கு மூன்று வேலை செய்து அவையளுக்கு அறுத்துக் கொண்டு இருங்கோ. போங்கோ என்னவாச்சும் செய்யுங்கோ. கோமதி திரும்பி வந்து முகத்தை மூடிக்கொண்…

  13. நோக்கப்படாத கோணங்கள் இன்றைக்கு எங்களுடைய கல்யாண நாள் மாமா, நான் ஒருக்கா கோவிலுக்குப் போட்டு வாறன், பிள்ளை படுத்திருக்கிறாள், எழும்பினால் இந்தப் பாலைக் குடுங்கோ என்ன? ஓடியாறன். ஞாயிற்றுக்கிழமை பொழுது விடிந்ததும் விடியாததுமாக குளியல் அறையில் கேட்ட தண்ணீர் சத்தத்துக்கும் சமையல் அறையில் இருந்து வந்த தாளித்த மணத்துக்கும் விடை தெரியாமல் படுக்கையில் கிடந்து தவித்த ஓவிசியர் தணிகாசலம் மருமகள் சியானியை நிமிர்ந்து பார்த்தார். தினமும் இறுக்கமான ஜீன்சும் ரீசேட்டும் என்று பரபரப்பாக இருப்பவள் இன்று பட்டுப் புடவையில் மட்டுமல்ல ஒருவித வெட்கமும் கலந்த தொனியில் சொல்லிவிட்டுத் திரும்பினாள்.இந்தா பிள்ளை கொஞ்சம் நில்லு! என்ற ஓவிசியர் சட்டைப் பையிலிருந்து நூறு டொலர் காசை எடுத்து நீட்ட…

    • 8 replies
    • 1.3k views
  14. சின்னத்துரையரிண்ட கொம்பனிக்கு நியூ யோற்கில இருக்கிற ஒரு நாலு பில்லியன் டாலர் நிறுவனத்தில ஒரு இருபது மில்லியன் பவுண்ட்ஸ் கொன்ராட் பிடிக்கவேண்டும். சின்னத்துரையிரிண்ட பாஸ் நாலு பேரை இந்த முக்கிய வியாபர குழுவில் போட்டுவிட்டார். மற்றைய மூன்று பேரும் இந்த டீலை தவறவிட்டால் வேலை போய் விடுமோ என்ற பயத்தில் சின்னத்துரையரை முன்னுக்கு தள்ளிவிட்டார்கள். பாஸ் வேற சின்னா குழறுபடி செய்துபோடாதை என்று சொல்லி வெருட்டிப்போட்டார். நியூ யோற்க்கில சின்னத்துரையர் இறங்கியவுடனேயே கையில் ஏனோ ஒரு சிறு நடுக்கம். ரூபன்ஸ்டைன்: வெல்கம் சின்னா. சின்னா: நன்றி திருவாளர் ரூபன்ஸ்டைன். ரூபன்ஸ்டைன்: நான் நினைத்தேன், இலண்டனில் இருந்து ஒரு பெரிய குழுவே வரும் என்று. சின்னா: ஒ அதுவா…

    • 2 replies
    • 890 views
  15. Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்….. அழைப்பில் போனதும்…அக்கா…..எங்கை சத்தத்தை காணேல்ல….? என அவன்தான் பேச ஆரம்பிப்பான். எப்பிடியிருக்கிறீங்கள்….? வளமையான எனது விசாரிப்புக்கான பதிலாக அன்றும் சிரித்தபடி சொன்னான். உயிரோடை இருக்கிறனக்கா….காதொண்டு கேக்குதில்லை…ஒரே வலியாக்கிடக்கு…..என்றான். அப்ப மருந்தெடுக்கேல்லயா….? எங்களுக்கென்னக்கா மருந்து பனடோல்தான் தருவினம். அதையும் சிரித்தபடிதான் சொன்னான். ஆரும் கதைச்சவையோக்கா ? அவனது விசாரணைகளுக்கு பதில் சொல்லி முடியச் சொன்னான். முயற்சியை விடாத…

    • 22 replies
    • 3.4k views
  16. யாருக்கும் என்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியங்கள் எதுவும் எனக்கில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் அது தேசம் நெட், ரயாகரன் என்னைப் பற்றி எழுதத் துவங்கிய போதே நான் இதை எழுதியிருப்பேன். தனிநபர் தூற்றல்கள், வசவுகள், இது பற்றி நான் கவலைப்பட்டிருந்தால் ஆதவன் தீட்சண்யாவுக்கு மட்டும் நான் பத்து பதில் கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும். சோபா சக்தி எழுதியிருக்கும் சமீபத்திய பதிவுகளும் சரி, ஏற்கனவே எழுதியவர்களும் சரி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் சில உண்மைகளும் பல பொய்களுமாக கலந்து கட்டி எழுதுகிறார்கள். சோபா சக்தியைப் பொறுத்தவரை சில விஷயங்களில் நான் பேசாததை பேசியதாகச் சொல்கிறார். அவர் நிறுவ நினைக்கும் விம்பத்தைக் கட்டமைக்க நான் எழுதிய கட்டுரைகளில் இருந்து சில வரிக…

    • 9 replies
    • 2.1k views
  17. ஊருக்கு போக வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் வருவது போல் எனக்கும் வந்தது .அதுவும் இருப்பதைந்து வருசங்களுக்கு பிறகு பிறந்த நாட்டுக்கு செல்ல முடிவெடுத்த நாளிருந்து மனம் தன்னுள்ளே துள்ளி குதித்து சந்தோசம் கொண்டாடியது. நான் செல்லும் விமானம் முக்கி முனகி ஏறும் முன்பே நாட்டுக்கு சென்று விட்டேன் மனத்தளவில்.ஊரிலிருக்கும் வரை ஊரின் அருமை தெரியாமால் தான் இருந்தது .அதன் அருமை புலத்தில் நினைவு மீட்டல்களாக அங்கென்றுமாக இங்கொன்றுமாக வந்து ரீங்காரம் இடத்தான் அதை இழந்த வலி தெரிந்தது.நான் இப்போழுது அந்த நானாக இல்லை அது போல் ஊரும் அதே ஊராக இருக்காது மனத்தின் ஒரு பகுதி வந்து அலாரம் அடித்தாலும்.மனதின் மறு பகுதி அவற்றுக்கெல்லாம் மறுத்தான் போட்டு கொண்டு காலத்தால் அழிந்த அவைகளை நினைவுகளால் அலங்க…

  18. கிறிஸ்மஸ் நேரம் எண்ட படியால் கூட வேலை. பதினான்கு மணி நேரம் வேலை செய்துவிட்டு, வீட்டுக்கு ஓட்டம் எடுக்க காரில் ஏறினால், பெட்ரோல் குறைவு என்று டிங்கு டிங்கு எண்டு சத்தம் போட்டு காரும் வெறுப்பேத்தியது. பெற்றோலை போட்டுவிட்டு மட்டையை பாவிக்காமல் காசுடன் உள்ளுக்கு சென்றார் சின்னதுரை, ஒரு போலிஷ் கார வயோதிபர் கவுண்டரின் பின்னால் நின்றார். சின்னதுரையை பார்த்தவுடன், ஏன் கவலையாய் இருக்கிறாய் என்று கேட்டார்? சின்னதுரைக்குள் ஒரு பரப்புரை பொறி தட்டியது. சின்ன: எனது ஊரில எண்ட சொந்த காரரை ஸ்ரீ லங்கா இராணுவம் கடத்தி போட்டான். போலிஷ்: என்னது? உனது நாட்டு இராணுவமே மக்களை கடத்துகிறதா? சின்ன: இராணுவம் மட்டுமில்லை. எங்கட அமைச்சர், ஜனாதிபதி எல்லாம் ஆக்கள் கடத்து…

    • 12 replies
    • 1.7k views
  19. இனிய காலை வணக்கம் தொடர்ந்து கேட்க இருப்பது ஆத்மீக ஆராதனை என இந்திய தமிழ் பெண்குரல் வானோலியில் தவழ்ந்து வந்து என்னை எழுப்பியது. ஒவ்வொரு நாளும் என்னை எழுப்புவது இந்த ஆத்மீக ஆராதனைதான்.டி.எம்.எஸ்.இனிய குரலில் ஒரு இந்து பாடலும்,ஜோனி எபிரகாமின் குரலில் கிறிஸ்தவப்பாடலும்,இ. எம்.கானிபாவின் குரலில் இஸ்லாமிய பாடலையும் பாடி ,தங்களது மத கருத்துக்களை திணித்தார்கள்.நானும் கருத்துக்களை கச்சிதமாக உள்வாங்கிக் கொண்டு காலைக்கடன்களை முடித்து பூஜை அறைக்குள் சென்றேன். பூஜை அறையில் சமஸ்கிருத ஒம்,பக்கத்தில் இந்திய சாமியார் சாய்பாபா கையை உயர்த்தி பிடித்து ஆசிர்வாதம் வழங்கும் போஸ் கொடுக்க ஏனைய பழைய சாமி பிள்ளையார்,முருகன்,சிவன் எல்லோரும் ஓவ்வொரு மூலையில் இருந்து என்னை பார்த்துகொண்டிருந்தன…

  20. அழகுக்குட்டி செல்லம் சென்ற வார விடுமுறையில் என் அக்கா மகள் வீட்டுக்கு சென்று இருந்தேன்..அவளுக்கு பெண குழந்தை கிடைத்து பத்து மாதங்கள் ஆகின்றன. முதற்குழந்தை, அவளது தாயார் தாயகத்தில். இடையில் நானும் அவளது ம ச்சாளும் (கணவனின் தங்கை) உதவியாய் இருந்தோம். . கணவன் காலயில் வேலைக்குபோயவிடுவார். நம்ம செல்லக் குட்டி எழும்பிவிடுவாள். காலையில் டாட்டா பாய் சொல்லி ..அப்பாவை அனுப்பி வைப்பாள். அக்கா மகள் தன் வேலைகள் ஆரம்பிப்பாள் .அடிக்கடி நப்பி மாற்றுதல்,( diaper )தூங்க செய்தல் ...நேரத்துக்கு பாலூட்டுதல் என்று தனியாகவே எல்லாம் செய்வாள். கற்றுக் கொண்டுவிடாள். சில சமயம் வீட்டில் எல்லோரும் தூங்கக் செல்லக்குட்டி மட்டும் கொட்ட கொட்ட விழித்துக் இருப்பாள். . இதனால் தாயும் காலயில் சேர…

  21. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், முன்பு எழுந்தமானமாக எழுதத்தோன்றும் போதெல்லாம் எழுதமுடிந்தது. இப்போது காலம், சூழ்நிலை பார்த்தே எழுதவேண்டியுள்ளது. இதனால் முன்புபோல் நம்மால் அடிக்கடி அங்கும் இங்குமாக ஆக்கங்களை படைக்க முடியவில்லை. ஆயினும்.. யாழ் இணையத்துடன் - நம்மைப்போன்ற வலைத்தள கருத்தாளர்களுடன் நீண்டதூரம் பயணம் செய்து அண்மையில் அமரத்துவம் அடைந்த 'வசம்பு' என அழைக்கப்படும் மதிப்புக்குரிய ‘சிவஞானசுந்தரம் கிருபானந்தன்’ அவர்களை நினைவுகூர்ந்து ஓர் ஆக்கத்தை படைக்கவேண்டிய கட்டாயத்தை எனது உள்ளம் கடந்த சில நாட்களாக வலியுறுத்தியது. ஆரம்பத்தில் இரண்டு வரிகளாயினும் ஓர் கவிதையாக - அஞ்சலிப்பா எழுதலாம் என்று பார்த்தேன். கவிதை எழுதுவதற்குரிய உளநிலை எனக்குள் ஏற்படவில்லை. எனினும்.. …

    • 46 replies
    • 5.8k views
  22. ஆட்டிசம் வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நம்மில் பலர் குழந்தைகளைப் பார்த்தவுடன் மனச்சுமை எல்லாவற்றையும் மறந்து குழந்தையோடு குழந்தையாகி விளையாடும்போது மனம் எவ்வளவு லேசாகி விடுகிறது. “யாழினிது குழலினிது என்பர் மழலை மொழி கேளாதோர்” என்று சும்மாவா பாடி வைத்தார்கள்? ராசன் சுஜா தம்பதிகள் குழந்தைச் செல்வம் வேண்டுமென்று தவமிருந்து பெற்ற பிள்ளை தான் நர்மிதா. எல்லாப் பெற்றோரைப் போலவும் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு சிறிய வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்துப் பூரித்துக்கொண்டிருந்தவர்களுக்கு எப்போது தம்பிள்ளை தங்களைப் பார்த்துச் சிரிப்பாள், தூக்கச் சொல்லிச் சிணுங்குவாள, தவழ்ந்து வந்து செல்லக் குறும்புகள செய்து தங்களைச் சிரிக்க வைப்பாள் என்ற எதிர்பார்ப்பெல்லாம் ந…

  23. அந்தச் சிறுவனுக்கு பத்து வயசுதான் இருக்கும். இதற்குமுன்னர் அவனுடைய அதிகபட்ச ஆசைகள் எல்லாம் சின்னச் சின்ன விளையாட்டுச் சாமான்கள் மேலேயே இருந்தது. ஆனால், வயசும் கூடியதாலோ என்னவோ, இப்போது அவன் கொஞ்சம் அதிகமாகவே ஆசைப்பட்டான். அவனுக்கு ஒரு சைக்கிள் வேண்டும். அவனுடைய பாடசாலை நண்பர்களில் பலபேர் சைக்கிள் வைத்திருந்தார்கள். அவர்களிடம் அடிக்கடி கேட்பான், "நான் ஒருக்கா ஓடிப் பார்க்கவா?" என்று. கெஞ்சிக்கேட்டும் ... அந்த சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கவில்லை. "என்ர சைக்கிளில சைக்கிளோடப் பழகி அதை உடைச்சிட்டியென்டால்...யார் தர்றது?" என்ற நக்கலான பதில்களே வந்தன. ஆனாலும் அப்பாவின்ர கிழட்டுச் சைக்கிளில வாருக்குள்ளால கால விட்டு ... பலதடவை விழுந்தெழும்பி ஓரளவுக்கு சைக்கிள் ஓடப் பழகியிருந்த…

  24. கடலும் கடல் சாந்த நிலமும் கொண்ட அந்த நாடுக்கு திருமண்ம பேசி அனுப்ப பட்டவள் தான் வாசுகி . பாஸ்கரனை கைப்பிடித்து வளமாகவும் நலமாகவும் வாழ்ந்தார்கள். பாஸ்கரன் அந்நாட்டின் தொடர்பு நிலையத்தில் கணணி தொழில் நுட்ப பிரிவின் அதிகாரியாக பணியாற்றினான். இல்லறம் இன்பமாகவே போனது. இருவரும் தாயகத்தில் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றவர்களின் விருப்பப்படி வாசுகி மண ஒப்பந்தமாகி அந்த நாட்டுக்கு சென்றவள். ஆரம்ப காலத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்த வாழ்வின் பரிசாய் ஒரு பெண குழந்தைக்கு தாயானாள் . தனித்தனியான அவர்கள் வாழ்வு ஒரு குடும்பமானது . காலப்போக்கில் அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டாவது குழந்தையும் பெண குழந்தையாகியது . காலயில் பணிக்கு செல்லும் பாஸ்கரன் இடைவேளையின் போது த…

  25. அந்தச் சிறுமி தன் தாயுடன் இரயில் நிலையம் வந்திருந்தாள். துறுதுறுவென்று அழகாயிருந்த முகத்தில் வறுமையின் சாயல் தெளிவாய்த் தெரிந்தது. அவள் அணிந்திருந்த ஆடைகள் அவர்களுடைய நிலையை முழுவதுமாய் உணர்த்தியது. அவள் தாய்க்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு நேரெதிரே இருந்த இருக்கையில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார். வெள்ளை வேட்டி சட்டையில் பார்ப்பதற்குக் கம்பீரமாகவே தெரிந்தார். இப்பொழுது இரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது. சிறுமி ஜன்னலூடாக வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். மரங்களும் கட்டடங்களும் மிக வேகமாக பின்னோக்கி ஓடுவது அவளுக்கு வியப்பாய் இருந்தது. சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள் மெதுவாக இருக்கையில் வந்து அமர்ந்த…

    • 17 replies
    • 6.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.