Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. தாயகத்தில் தயாரிக்கப்பட்ட 'அம்மா நலமா', 'ஆணிவேர்', 'குருதிச்சின்னங்கள்', இலண்டனில் தயாரிக்கப்பட்ட 'கனவுகள் நியமானால்', கனடாவில் தயாரிக்கப்பட்ட 'தமிழச்சி' ஜேர்மனியில் வாழ் ஈழத்தமிழரால் தயாரிக்கப்பட்ட 'மல்லிகை வாசம்' ஆகிய திரைப்படங்கள் கடந்த 7,8 வருடங்களில் சிட்னியில் திரையிடப்பட்ட எம்மவர்களின் திரைப்படங்களாகும். நான் மேலே குறிப்பிட்ட எல்லாப்படங்களையும் திரையில் பார்த்தேன். நாங்கள் ஆதரிக்காது விட்டால் யார்தான் ஆதரிப்பார்கள் என்ற நோக்கத்துக்காக எம்மவர்களின் படங்களை திரையரங்கில் சென்று பார்ப்பேன். பொதுவாக எம்மவர்களின் படங்கள் தரமற்றவை என்ற அபிப்பிராயம் எங்களுக்குள் இருக்கிறது. அனுபவம் இல்லாதவர்களினால் இப்படங்கள் உருவாகப்படுவதும் காரணமாக இருக்கலாம். லெனின் அவர்கள் இயக்க…

  2. பூமணி - கி.ராஜநாராயணன் - வண்ணநிலவன் எண்பதுகளின் தொடக்கத்தில் இலக்கியக் கோட்டி பிடித்து எழுத்தாளராவதைத் தவிர வேறு மார்க்கமேயில்லை என்று நாங்கள் (நான், நாறும்பூநாதன், சாரதி, திடவைபொன்னுச்சாமி, அப்பணசாமி) கோவில்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தின் பொட்டல் வெயிலில் சத்தியம் செய்திருந்தோம். புத்தகங்களைத் தின்று தீர்த்தோம். அதுவரை தெரிந்த உலகமே இப்போது வேறொன்றாய்த் தெரிந்தது. உலக, இந்திய, தமிழ், எழுத்தாளர்களோடு ஏற்பட்ட பரிச்சயம் எங்கள் நடையையே மாற்றிவிட்டது. தரையில் கால் பாவியதாக நினைவில்லை. நாங்கள் வேறு பிறவிகள் என்ற நினைப்பு. பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, கு. அழகிரிசாமி, கு.ப.ரா., சுந்தர ராமசாமி, கு. சின்னப்ப பாரதி, டி. செல்வராஜ், கி. ராஜநாராயணன், வண்ணதாசன், வண்ணநிலவன், பூம…

  3. வணக்கம் என் நண்பர்களே எமக்கு கிடைத்த முத்துக்களை பற்றி பத்மலிங்கம் ஒரு அருமையான கர்நாடகா சங்கீத முத்து புத்தூரில் பிறந்து எங்களுக்கு பெருமையை தந்த உன்னதமான ஒரு சொத்து http://www.youtube.com/watch?v=1Sts_4UnJxE நன்றி முகனூல்

  4. எம்.எஸ்.விஸ்வநாதனின் 87வது பிறந்தநாள் இன்று: - அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி[Wednesday 2015-06-24 19:00] காலாத்தால் அழிக்க முடியாத பல காவிய பாடல்களை கொடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் 87வது பிறந்தநாள் இன்று. இவருக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிய, அவருடைய ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தும் படி ஒரு செய்தி வந்துள்ளது. இவருக்கு இன்று திடிரென்று மிகவும் உடல் நிலை முடியாமல் போனது, இதனால், சென்னையின் பிரபல மருத்துவமனையில் ICUல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்செய்தி இவருடைய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=134760&category=EntertainmentNews&language=tamil

  5. துணிச்சல் தன்னம்பிக்கை ரவி மாஸ்ரர் சொல்லும் கதைகள்?????? ஊடகப்பயணத்தில் போர் செய்யும் மனிதன்.

    • 0 replies
    • 716 views
  6. எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது" - தீபச்செல்வன் பேட்டி: நிந்தவூர் ஷிப்லி ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி நகரம் ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறார் தீபச்செல்வன். கவிதைகள், ஓவியங்கள், வீடியோ விவரணம், புகைப்படங்கள், விமர்சனங்கள் என பலதுறையில் இயங்கிவரும் தீபச்செல்வன் முக்கிய கவிஞராக அறியப்பட்டு வருகிறார். போர், அரசியல், மாணவத்துவம், தனிமனித உணர்வுகள் என்று இவர் பிரக்ஞைபூர்வமாக எழுதி வருகிறார். இவருக்கும் எனக்குமான இரண்டாவது சந்திப்பு இது. இது போன்ற உரையாடல்கள் வழியாக இளைய எழுத்துச்சூழலை செப்பனிடுவதே எங்கள் நோக்கம். 01) நிந்தவூர் ஷிப்லி:- உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை முதலில் தாருங்கள் தீபச்செல்வன் :- நான் ஆனந்தபுரம் க…

    • 1 reply
    • 2.3k views
  7. ஈழநிலத்தின் நித்திய வடுவாயிருக்கும் ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து அய்ந்து நிமிடப் பயணத்தூரத்திலிருக்கும் ‘இயக்கச்சி’ கிராமத்தில் 1963-ல் பிறந்தவர் கவிஞர் கருணாகரன். ஈழப்போராட்டம் முனைப்புற்ற எண்பதுகளின் ஆரம்பத்தில் காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் தொழிலாளியாகயிருந்தபோது மார்க்ஸியத்தால் ஈர்க்கப்பட்டு, இடதுசாரிச் சிந்தனையுள்ளதாக அறியப்பட்ட ஈழப் புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) தன்னை இணைத்துக்கொண்டவர். 1990-ல் அந்த அமைப்பு கலைக்கப்பட்டதன் பின்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சு மற்றும் காட்சி ஊடகப்பிரிவுகளில் பணியாற்றியவர். 2009-ல் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசபடைகளும் புலிகளும் தமிழ் மக்களுக்கு இழைத்த பெருங் கொடுமைகளை, தடுப்பு முகாமிற்குள் இருந்தவாறே தனது எழுத்துகளால் உலகம் அறியச்…

  8. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை - யோ. கர்ணனுடனான நேர்காணல் இணையத்தின் மூலம் எனக்கு அறிமுகமான யோ கர்ணனை இந்த வருடத்தின் ஆரம்பகாலப் பகுதியில் நான் தாயகம் சென்ற பொழுது நேரிடையாகவே சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பழகுவதற்கு மிகவும் இனிமையான இவர், நேரடி சந்திப்பின் பின்பு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவராகிவிட்டார். இங்கிருந்து வெளியாகும் ஆக்காட்டி சஞ்சிகைக்கு ஓர் நேர்காணல் ஒன்று தரமுடியுமா ??என்று நான் கேட்ட பொழுது ,உங்களுக்கு இல்லாத நேர்காணலா என்று மிகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். மின்னஞ்சல் மூலம், நான் அவரிடம் நடத்திய நேர்காணல். நேசமுடன் கோமகன் ************************************** யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்…

    • 5 replies
    • 1.3k views
  9. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ் உரைநடையிலும் சிறுகதை களிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். ராம கிருஷ்ணன். உலக இலக்கியங்கள், சர்வதேசத் திரைப்படம் ஆகியவற்றின் மீது தமிழ் சமூகத்தின் கவனத்தைக் குவித்ததில் எஸ்.ராமகிருஷ்ணனுக்குப் பெரும் பங்கு உண்டு. மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய ‘உப பாண்டவம்’ இவரது சிறந்த படைப்புகளில் ஒன்று. இவரது சமீபத்திய நாவல் ‘சஞ்சாரம்’. நாவல், சிறுகதை, சினிமா, பத்திரிகை எழுத்து எனப் பல முகங்களைக் கொண்ட எஸ். ராமகிருஷ்ணனிடம் ‘தி இந்து’ சித்திரை மலருக்காக நடத்திய நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது இன்றுள்ள சிறுகதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்… தமிழுக்கென ஒரு கதை சொல்லும் முறை இருக்கிறது. தமிழில் உள்ள அளவுக்கு வேறு…

    • 0 replies
    • 650 views
  10. எழுத்தாளர் ஜெயமோகன்| கோப்புப் படம். எண்பதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகின் பிரதான ஆளுமைகளில் ஒருவர். நாவல், சிறுகதை, விமர்சனம், தத்துவம், வரலாறு எனப் பல தளங்களில் இயங்கும் இவர், பெரும் விவாதங்களையும் தொடர்ந்து உருவாக்கிவருபவர். தற்போது மகாபாரத இதிகாசத்தை வெண் முரசு என்னும் பொதுத் தலைப்பில் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் எனப் பத்தாண்டுகள் திட்டமிட்டு எழுதத் தொடங்கியிருக்கிறார். மகாபாரதத்தை நாளுக்கொரு அத்தியாயமாக எழுதிவருகிறீர்கள். இதற்கான உந்துதல் எது? மகாபாரதத்தை முழுமையாக எழுதுவது சிறு வயதிலிருந்தே இருந்துவந்த ஒரு கனவு. ஆனால் அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். ஒரு நாள் காய்ச்சலின் காரணமாக உடல் சோர்ந்திருந்தது. கணிப்பொறியின் முன்னால் உட்க…

  11. எழுத்தாளர் சுஜாதாவின் செவ்வி https://www.youtube.com/watch?v=n95UbgiDpHA

  12. சென்னை, நவ. 8- எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் மிக உயரிய நட்புறவு விருது (ஆர்டர் ஆஃப் ஃபிரண்ட்ஷிப்) வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய எழுத்தாளர் ஜெயகாந்தன். இதற்கு முன்னதாக, பிரபல திரைப்பட இயக்குநர் மிர்ணாள் சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஜெயகாந்தனுக்கு இந்த விருது வழங்குவது குறித்து ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் பிறப்பித்த உத்தரவின் நகலை இந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் நிகோலாய் ஏ லிஸ்தபதோவ், ஜெயகாந்தனிடம் சென்னையில் திங்கள்கிழமை வழங்கினார். இது குறித்து அவர் கூறுகையில், "ரஷ்யாவின் உண்மையான நண்பர் ஜெயகாந்தனுக்கு விருது வழங்குவதில் பெருமையாக உள்ளது. இந்திய - ரஷ்ய உறவு வலுவாக அமைய ஜெயகாந்தன் ஆற்றிய பங்கு அபாரமானது. ரஷ்ய எ…

    • 35 replies
    • 4.3k views
  13. எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புலகம் by அரவின் குமார் நூற்றாண்டு வரலாறு கொண்ட நவீனத்தமிழிலக்கிய வரலாற்றில் எண்ணிக்கையாலும் தரத்தாலும் மேம்பட்ட பல படைப்புகளின் வாயிலாக மறுக்கமுடியாத இடத்தைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். எழுத்தாளர் ஜெயமோகனின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாக அவரின் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இந்திய ஞான மரபு கட்டுரைகள், சமூகக்கட்டுரைகள் ஆகியவற்றுடன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் வாயிலாக முன்னெடுத்து வரும் இலக்கிய, அறிவுலகச் செயற்பாடுகளைக் குறிப்பிடலாம். 1991 ஆம் ஆண்டு ஜெயமோகனின் முதலாவது நாவலான ‘ரப்பர்’ நாவல் வெளிவந்தது. ஜெயமோகனின் நாவல்கள் ஆழமான தத்துவ விசாரங்களையும் அறம் சார்ந்த விவாதங்களையும் முன்வைக்கக்கூடியவை. …

  14. எழுத்தாளர் பாலகுமாரன் நேர்காணல் - வித்தகன் நான் கவிதை எழுத ஆரம்பிச்சபோது என் வயது இருபது. கதை எழுத ஆரம்பிச்சபோது இருபத்தெட்டு. கவிதையிலிருந்து சிறுகதைக்கு மாறும்போது அது எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதை ஒரு சவாலாக நினைத்துத்தான் உழைத்தேன். இதோ நாற்பது ஆண்டுகள்ல 260 புத்தகங்கள் எழுதியிருக்கேன். இந்த ராட்சச வேகத்துக்குக் காரணம் நான் ஒரு ஒர்கஹாலிக். வேலை வெறியன். நல்லா ஒர்க் பண்றது ஒரு போதையான விஷயம். இடையறாது ஒர்க் பண்றதும் அப்படித்தான். அல்பமான விஷயங்களில் என்னால ஈடுபடவே முடியாது. உதாரணமா, எந்தப் பயனும் இல்லாம என்னால அரட்டை அடிக்கவே முடியாது. அதனால எனக்கு நண்பர்களும் கிடையாது.’ கர்ஜிக்கும் குரலில் கணீரென்று பேசிய பாலகுமாரன், ஆழத்துக்கான நேர்காணலின் ம…

  15. தன்னறம் இலக்கிய விருது – 2024 jeyamohanNovember 10, 2024 ஷோபா சக்திக்கு வாழ்த்துக்கள் ஜெ எண்பதுகளின் காலகட்டத்திலேயே எழுதத் தொடங்கிய எழுத்தாளர் ஷோபா சக்தி, அப்போதிருந்து இன்று வரையிலான நாற்பதாண்டு காலகட்டத்தில் சுய வாழ்வு அலைக்கழிக்கபட்ட காலங்களின் இருள் பாதை நெடுகிலும் வாழவனுபவங்களைக் கதைகளாக்கி விதைத்து வருபவர். எழுத்தைக் கடவுளாகவும் சாத்தானாகவும் நம்புகிறவார். சென்று சேர்ந்த எல்லா நிலங்களிலும் அவர் சுமந்தலையும் நிலத்தின் ரத்தம் செறித்தக் கதைகளை சொல்லி வருகிறார். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் இருந்து குறிப்பிடத் தகுந்த பங்களிப்பையும், தீவிரமான செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புனைவுப் பரப்பில் தனக்குரிய தனி பயணத்தை கொண்டிருப்பவர். அ…

  16. புதுமைப்பித்தன் எனும் மாபெரும் மனிதன் எழுத்துலகில் தமிழ் நாட்டை மடைமாற்றியவர்.கரடுமுரடான நடையில் சிக்கிக்கொண்டு இருந்த தமிழ் கவிதையை பாரதி திசை திருப்பினான் என்றால்,சிறுகதையின் எல்லைகளை எளியவனின் திசை நோக்கி பரப்பியவர் இந்த திருநெல்வேலி திருமகன்.எள்ளலும் ,சுருட்டு வாசனையும் எப்பொழுதும் மிகுந்து இருந்த மாபெரும் அங்கதக்காரன்.எதை தவறு என பட்டாலும் உரக்க இடித்த எழுத்துலகின் புரியாத ஞானி. இலக்கியம் என்று அவர் எளிய மக்களின் வாழ்வை சொல்வதையே நினைத்தார் .சீலைப்பேன் வாழ்வு போல காதல் கத்தரிக்காய் என இருநூறு ஆண்டுகாலம் இலக்கியத்தை தேங்க வைத்து விட்டார்கள் என அவர் கருதினார் .ஏழை விபசாரியின் வாழ்க்கை போராட்டத்தை,தான் பார்க்கிற எளிய மக்களின் வாழ்க்கையை பதிவு செய்வதை பெருமையாக கருதினார…

  17. எவராலும் கற்பனை செய்ய முடியாத நான் கிழக்கு இலங்கையின் சிற்றூர் ஒன்றில் 1982-ல் பிறந்த ஸர்மிளா ஸெய்யித் ‘சிறகு முளைந்த பெண்’ என்ற கவிதைத் தொகுப்பு ஊடாக நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் தனது தடத்தைப் பதித்தவர். தொடர்சியாக, புனைவுப் பிரதிகளை மட்டுமல்லாமல் அ-புனைவுப் பிரதிகளையும் அவர் முனைப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறார். முப்பதாண்டு கால ஈழப் போருக்குப் பின்னான காலத்தில், போரின் காயங்களோடும் வடுக்களோடு அலைந்துறும் மாந்தர்களையும் இலங்கையின் இனத்துவப் பிரச்சினைப்பாடுகளையும் மையமாக வைத்து ஸர்மிளா ஸெய்யித் எழுதிய நாவலான ‘உம்மத்’ இந்த வருடத்தின் தொடக்கத்தில் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. சமகால அரசியற் பிரச்சினைகளிற்குள் சிக்கிக்கொள்ளாமல் லாவகமாக நழுவப் பார்க்…

  18. எஸ்.ஜானகி - பத்மபூஷன் இழந்த கெளரவம் விக்கி 1962-ம் ஆண்டு… எஸ்.எம்.எஸ் எனப்படும் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிற்கு ஒரு சிக்கல். ‘கொஞ்சும் சலங்கை’ படத்துக்கு சிங்கார வேலன் சந்நிதியில் ஒரு நாதஸ்வர வித்வானும், ஒரு கை தேர்ந்த பாடகியும், பக்தியும் காதலும் பொறாமையற்ற போட்டியுமாய் இணைந்து இசைக்கும் ஒரு பாடல். கீர்த்தனைகளையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஆபேரியில் அக்மார்க் தமிழிசை மரபில் அசத்தலாக ஒரு மெட்டும் ரெடி செய்துவிட்டார் எஸ்.எம்.எஸ். நாதஸ்வர சக்கரவர்த்தியாகிய ராஜரத்தினம் பிள்ளையின் சிஷ்யர் காருக்குறிச்சி அருணாசலமும் சிரத்தையுடன் ரிகர்சல் முடித்து தன் பங்கிற்கு ரெடி. தமிழ்த்திரையுலகின் கலைவாணியாகிய பி.சுசீலா பாட அழைக்கப்படுகிறார். எப்பேர்ப்பட்ட மலையையும் சாதாரணமாகத் தாண்டும் …

    • 3 replies
    • 1.9k views
  19. எஸ்.பொன்னுத்துரை: மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டு வந்தவர் November 26, 2021 — ஏ.பீர் முகம்மது — உலகளாவிய தமிழ் இலக்கியப் படைப்பியல் வரலாற்றில் எஸ்.பொ. எனப் பலராலும் அறியப்பட்ட எஸ்.பொன்னுத்துரை பெரும் ஆளுமையாக இருந்தவர். சிறுகதை, நாவல், நாடகம், நனவிடை தோய்தல், அரசியல் திறன்நோக்கு, வரலாறு, மொழிபெயர்ப்பு என்று பல துறைகளிலும் தனது எழுத்தூழியத்தினால் சிகரம் தொட்டவர். அவரளவில் இலக்கியத்தில் சாதனைகளையும் சோதனைகளையும் சந்தித்த பிறிதொரு எழுத்தாளர் நம்மிடையே இல்லை. யாழ். நல்லூரிலே பிறந்து மட்டக்களப்பு வாசியாகவே வாழ்ந்து சாதனைகள் தொட்ட இந்த எழுத்துலகச் செம்மலின் இறுதி மூச்சு அவுஸ்திரேலியாவிலே 2014 நவம்பர் 26இல் அடங்கி இன்றுடன் ஏழு வருடங்கள் முழ…

  20. ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஆங்கில பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். 2003ல் வெளிவந்த இவரின் ஃபிராங் என்ற இசைத்தட்டு ஐக்கிய இராச்சியத்தில் பெரும் வெற்றி பெற்றது. இது மெர்க்குரி பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2006ல் வெளி வந்த பேக் டு பிளாக் என்ற இசைத்தட்டு 6 கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை பெற்றது. இவரே 5 கிராமிய விருதுகளை வென்ற முதல் பிரித்தானியர் ஆவார். சிறந்த பிரித்தானிய பெண் கலைஞருக்கு வழங்கப்படும் பிரிட் விருதை 2007ல் பெற்றார். பிரித்தானியாவில் இசைத்துறை புத்துயிர் பெற இவரின் இசை வெற்றி காரணமாகவிருந்தது. இவரின் தனிப்பட்ட பாணி காரணமாக அலங்கார வடிவமைப்பாளர்கள் பலரின் ஆதரவை பெற்றிருந்தார். இவர் போதை மருந்துகளும் மதுவும் அதிகளவில் பயன்படுத்தி அதனா…

  21. ஒன்பது வருடங்களாக தொடர்ந்து 'ஊரோடு உறவாடி' சாதனை செய்த புலம்பெயர் தமிழர்! இன்றைய நவீன தொடர்பூடக உலகில் ஒரு வானொலி நிகழ்ச்சியை தொடர்ந்து ஒரு வருடம் நடாத்துவது என்பது பெரியதொரு சாதனையாகவே பார்க்கப்பட்டு வருகின்றது. ஆனால் IBC-தமிழ் வானொலியில் இரண்டு மணி நேரம் கொண்ட ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து 8 வருடங்களாக இடம்பெற்று வருவதென்பது மிகப் பெரியதொரு சாதனையாகவே பார்க்கப்பட்டாகவேண்டும். அதுவும் ஒரே அறிவிப்பாளரே இந்த நிகழ்ச்சியை இந்த 8 வருடங்களும் வெற்றிகரமாக நடாத்துவதென்பது தற்கால வானொலிக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை ஒன்றும் இலகுவான காரியம் கிடையாது. IBC-தமிழ் வானொலியில் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெறும் இந்த நிகழ்ச்சியின் பெய…

  22. அம்மா என்றழைத்தாலும்... பெண் இனத்தின் ஒரு பிம்பம் பீடத்தில்- இன்னொன்று மரக்கிளையில். இரண்டுக்கும் சம்பந்தம் உண்டா? ஏன் இந்த முரண்பாடு? சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அளிக்கப்படும் 'மைல்ஸ் ஃப்ராங்க்ளின் விருது' என்ற மிகச் சிறந்த இலக்கிய விருது, ஆங்கிலேய தந்தைக்கும் ஆஸ்திரேலிய தாய்க்கும் பிறந்த பெண் எழுத்தாளர் ஈவி வைல்டுக்கு அளிக்கப்பட்டது. விருது கிடைத்ததால் ஏற்பட்ட சந்தோஷத்தைவிட இலக்கிய உலகத்தில் இருக்கும் யதார்த்தத்தால் எழுந்த சோகம் தான் அவருக்கு அதிகம். “என்னுடைய வாழ்நாளில், ஒரு ஆண் எழுத்தாளரின் எழுத்து தீவிரமாக எடுத்துக்கொள்ளப் படுவதுபோல எனது எழுத்து நினைக்கப்படும் என்பதை என்னால் கற்பனைகூட செய்ய முடியாது.” என்கிறார். “நான் கர்ப்பமாக இருக்கிறேன். எல்லோரும் என்ன …

    • 0 replies
    • 669 views
  23. அந்த ஆவண படத்தை பார்த்து முடித்த போது மனம் இரண்டு விஷயங்களில் கனத்து போயிருந்தது. மனம் முதலில் கனத்து போனதற்கு காரணம் ஆவண படம் ஏற்படுத்திய தாக்கம். இரண்டாவது காரணம் அரங்கில் பெரும்பாலும் காலியாக இருந்த இருக்கைகள். ஆவண படம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றியது இப்போது இருப்பவர்கள் இலக்கியத்தில் சினிமாத்தனத்தை காட்டும் நிலையில் சினிமாவில் இலக்கியத்தனத்தை காட்டிய மாபெரும் கவிஞர். எனது முதல்வர் நாற்காலியை தாங்கிப்படிக்கும் மற்ற மூன்று கால்கள் எது என்பது எனக்கு தெரியாது ஆனால் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனக்காக எழுதிய பாடல்கள்தான் என்று எம்ஜிஆரால் பராட்டப்பெற்றவர். பாட்டாளி மக்களின் வேர்வையையும்,விவசாயகூலிகளின் வேதனையையும்,கிராமத்து ம…

    • 0 replies
    • 843 views
  24. [size=5]ஒரு புதுச்சூழலில் எங்கள் பயணம் தொடங்குகிறது[/size] நேர்காணல்: இளந்திரையன் பொங்குதமிழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு கருத்துப்பட ஓவியராக தொடர்ச்சியாக இயங்கிவருபவர் செல்வகுமாரன். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், புலம்பெயர்ந்து நீண்ட காலமாகவே ஜெர்மனியில் வசித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட செல்வகுமாரன் ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். ஓவியத்திற்கு அப்பால் நாடகம், கவிதை, கட்டுரை என பல்தளங்களில் இயங்கும் ஒரு முழுமையான படைப்பாளி. பொங்குதமிழுக்காக இவர் வரைந்த கருத்துப்படங்கள் சமகால அரசியல் வரலாற்றின் ஓவியப் பதிவுகளாக பலரின் கவனத்தைப் பெற்று வருகின்றன. குறிப்பாக 1983, 2012 ஆண்டுகால சிறைச்சாலைப் படுகொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.