வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
391 topics in this forum
-
யார் இந்த யாழ் சேகர்….? சேகர் அண்ணா (தமிழ்ச்சூரியன்.) பற்றி ஜேர்மனியிலிருந்து வெளிவந்துள்ள பதிவொன்று இசை :யாழ் சேகர் இவர் இன்று கொலன்ட் நாட்டில் வாழ்ந்துவருகிறார் இவர் ஓர் கிற்றார் வாத்தியக் கலைஞராக மிளிர்ந்து நின்றவர் இப்போது ஒர் சிறந்த இசையமைப்பாளராக கலைப்பணி தொடர்கிறார். பலவிதமானபாடல்களுக்கு இசையமைத்துள்ள இவர் இசையமைப்பில் உருவான பாடல் : தமிழ் வந்து நிறைகின்ற குவியம் வரிகள் :வேலணையூர் தாஸ் குரல் :ராஜீவ் இசை :யாழ் சேகர் வெளியீடு :யாழ் இலக்கியக்குவியத்தின் படைப்பு இதில்வருகின்ற வரிகள் அனைத்தும் இலக்கியம் சார்ந்தது எழுத்துக்கள் சார்ந்தது நல்ல சிறந்த இசையமைப்பு நல்ல பாடல் வரிகள். பாடியகுரல், பாவங்கள் என்று எத்தனையே சொல்லிக்கொண்டுபோகலாம் .அதைவிட முழுமைய…
-
- 24 replies
- 2.1k views
-
-
மாலினி பரமேஸ் மெல்லிசைக்கு மெருகூட்டிய வான்மதி இலங்கையில் சங்கீத கலைஞர்களும் சிறந்த தமிழ் ஒலிபரப்புச் சேவையும் இருந்த போதும் அறுபதுகளில் ஈழத்தில் இசைத்தட்டு என்ற ஒன்று இருக்கவேயில்லை. அதே வேளையில் திருகோணமலையில் வாழ்ந்து வந்த பிள்ளைப்பாட்டுக் கலைஞர் என்ற கெளரவம் பெற்ற யாழ்நூல் யாத்தளித்த சுவாமி விபுலானந்தரின் முதல் மாணவன் வித்தியாதிகாரி மா. பீதாம்பரத்தின் புதல்வர்களான பரமேஸ் கோணேஸ் இசைக் கலைக்கூடம் ஆரம்பித்து 68 முதல் இசைத் தென்றல் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி வர ஆரம்பித்தனர். திருகோணமலையில் சென் மேரீஸ் கல்லூரியில் கல்வி கற்று வந்தவர்தான் மாலினி பரமேஸ். 69 முதல் பரமேஸ் கோணேஸ் இசைத்தென்றலின் ரசிகையாக இருந்தவர். இந்த வேளையில் சிவமாலினியின் அன்புத் …
-
- 0 replies
- 1.5k views
-
-
உலகின் மிகமுக்கியமான திரைப்படவிழாக்களில் ஒன்றான ‘ஷங்காய் சர்வதேச திரைப்பட விழா’வில் (Shanghai International Film Festival) விருதுக்கு போட்டியிடும் படங்களில் ஒன்றாக A GUN & A RING என்கின்ற ஈழத்தமிழரின் திரைப்படமும் தெரிவிவாகியிருந்தது. ஈழத்தமிழர் விஷ்ணு முரளியின் தயாரிப்பில் லெனின் எம்.சிவம் இயக்கத்தில் TTN ‘படலைக்குப்படலை’ புகழ் மன்மதன் என்கின்ற பாஸ்கர் மற்றும் பலரின் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ‘ஷங்காய் திரைப்பட விழா’வில் சிறந்த நடிகர் என்ற பாராட்டைப் பெற்றுத் திரும்பியிருந்த பாஸ்கர் அவர்களை, எமது ஊடக இல்லத்திற்கு அழைத்து நேர்காணல் செய்திருந்தோம். அவர் எம்முடன் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். ஊடக இல்லம்:- எமது ஊடக இல்லத்தின் சார்பாக உங்களை வரவேற்பதில் ம…
-
- 1 reply
- 821 views
-
-
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ் உரைநடையிலும் சிறுகதை களிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். ராம கிருஷ்ணன். உலக இலக்கியங்கள், சர்வதேசத் திரைப்படம் ஆகியவற்றின் மீது தமிழ் சமூகத்தின் கவனத்தைக் குவித்ததில் எஸ்.ராமகிருஷ்ணனுக்குப் பெரும் பங்கு உண்டு. மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய ‘உப பாண்டவம்’ இவரது சிறந்த படைப்புகளில் ஒன்று. இவரது சமீபத்திய நாவல் ‘சஞ்சாரம்’. நாவல், சிறுகதை, சினிமா, பத்திரிகை எழுத்து எனப் பல முகங்களைக் கொண்ட எஸ். ராமகிருஷ்ணனிடம் ‘தி இந்து’ சித்திரை மலருக்காக நடத்திய நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது இன்றுள்ள சிறுகதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்… தமிழுக்கென ஒரு கதை சொல்லும் முறை இருக்கிறது. தமிழில் உள்ள அளவுக்கு வேறு…
-
- 0 replies
- 656 views
-
-
சென்னை, நவ. 8- எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் மிக உயரிய நட்புறவு விருது (ஆர்டர் ஆஃப் ஃபிரண்ட்ஷிப்) வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய எழுத்தாளர் ஜெயகாந்தன். இதற்கு முன்னதாக, பிரபல திரைப்பட இயக்குநர் மிர்ணாள் சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஜெயகாந்தனுக்கு இந்த விருது வழங்குவது குறித்து ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் பிறப்பித்த உத்தரவின் நகலை இந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் நிகோலாய் ஏ லிஸ்தபதோவ், ஜெயகாந்தனிடம் சென்னையில் திங்கள்கிழமை வழங்கினார். இது குறித்து அவர் கூறுகையில், "ரஷ்யாவின் உண்மையான நண்பர் ஜெயகாந்தனுக்கு விருது வழங்குவதில் பெருமையாக உள்ளது. இந்திய - ரஷ்ய உறவு வலுவாக அமைய ஜெயகாந்தன் ஆற்றிய பங்கு அபாரமானது. ரஷ்ய எ…
-
- 35 replies
- 4.3k views
-
-
"நிலவே என்னிடம்"~ கீபோர்ட் இன்னிசை விருந்தில் லண்டன் மாநகரில் என்னுடன் இணைந்து தபலா இசைத்து மகிழ்வித்த இளம் நல்கலைஞன்,ஜனன் சத்தியேந்திரன்!~மற்றும் நமது கலையுலக நண்பர்'ஆறுமுகம் ரவீந்திரனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
-
- 5 replies
- 946 views
-
-
[size=3] ஈழ விடுதலை வரலாறு தமிழ்த் தியாகி விஜயராஜை தன்னுள் வைத்துப் போற்றும் [/size][size=3] தமிழ்த் தாயின் மைந்தன் , வீரமறத் தமிழ் உணர்வாளன்,ஈழம் தமிழகம் என்கிற பேதமில்லா இனத் தமிழன், தமிழினத்திற்கு நிகழ்ந்த பேரவலங்களின் துயர் சுமந்த எங்களின் தமிழ் சகோதரன் ஈகி விஜயராஜ் அவர்களின் உயிர் பிரிந்தமையறிந்து மனம் கலங்குகின்றோம். நீதி கேட்டு தன்னைப் தீயில் போட்டு மாய்ந்த செய்தி ஆறத் துயர் தருகிறது. [/size][size=3] அவர்களின் குடும்பத்தினர் , உறவினர்கள் ,நண்பர்கள், அவரின் மறைவால் துயருறும் அத்தனை தமிழ் மக்களோடும் இப் பெரும் துயரினைப் பகிர்ந்து கொள்கிறோம்.[/size][size=3] -தன் சொந்த இனத்தின் ஒரு பாதியினர்,அருகிலேயே, இயற்கையால் பிரிக்கப்பட்ட இன்னுமோர் நிலப்பரப்பில் இனவ…
-
- 0 replies
- 552 views
-
-
திரையறிவுக்காய் கிளிநொச்சியில் பாலுமகேந்திரா நூலகம்.! ரம்மியா ஹம்சிகா எனும் இரு இளம் ஊடகவியாலா ளினிகள் கிளிநொச்சியிலிருந்து என்னுடன் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்தனர். ஓர் அழைப்பும் விடுத்தனர் “நாங்கள் சிலர் இணைந்து பாலுமகேந்திரா பெயரில் ஓர் நூல் நிலையமும் பயிற்சிக் கூடமும் ஆரம்பிக்கிறோம். 27.12.2020 இல் அதன் ஆரம்ப விழா நடைபெறவுள்ளது அதில் ஓர் சிறப்பு விருந்தினராக நீங்கள் கலந்து கொள்ளவேண்டும். அதில் பாலுமகேந்திராவுடனான உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும்” சரி என ஒப்புக்கொண்டேன் பாலு மகேந்திரா என் ஊரவர். எனது வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் 300 அல்லது 400 யார் தூரம்தான் இடைவெளி, அவர் என்னை விட 4 வயது மூத்தவர் அவரை நாம் மகேந்திரன் …
-
- 0 replies
- 958 views
-
-
-
- 25 replies
- 3.1k views
-
-
1973ம் ஆண்டு சாஹித்ய அகாதமி விருது பெற்ற மாபெரும் எழுத்தாளர் அந்தப் பெண்மணி. ஆனால் இன்று ஆதரவுக்கு ஆளின்றி ஒரு முதியோர் இல்லத்தில் தன் மிச்ச நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அவர்... ராஜம் கிருஷ்ணன். தமிழின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இடதுசாரி சிந்தனைகளுடன், அதே நேரம் மக்களின் யதார்த்த வாழ்க்கையை முற்போக்கான 50க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் நூறுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகளைத் தமிழுக்குத் தந்தவர். 1950-லேயே புகழ்பெற்ற நியூயார்க் ஹெரால்ட் டிரிபியூனின் சர்வதேச விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இவராகத்தான் இருக்கும். உப்பள மக்களின் வாழ்க்கையின் அடிப்படையில் இவர் எழுதிய வேருக்கு நீர்தான் இவருக்கு சாஹித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது. இவர…
-
- 6 replies
- 3.8k views
-
-
தமிழ் விக்கிபீடியாவில் சேர்த்துக் கொள்வதற்காக பின்வருபவர்களைபற்றிய மேலதிக விபரங்கள் தயவு செய்து அறியத்தாருங்கள். பண்டிதர் கே.வீரகத்தி 'மன்னவன்' கந்தப்பு திருமதி யோகா பாலச்சந்திரன் பேராசிரியர் கே.சிவலிங்கராசா கரவைக்கிழார்
-
- 5 replies
- 2.2k views
-
-
‘விடை பெறுவது நடராஜ, சிவம், இந்தக் கம்பீரமான குரலைக் கேட்காத, சட்டென அடையாளம் காணாத இலங்கைத் தமிழனே இருக்க முடியாது. அவ்வளவுக்கு ஆழமான தனித்துவமான, ஆழமான, ‘பேஸ்’ குரல் அவருடையது. நேரில் பார்த்தால் குரலைப் போலத்தான் இளமையாக, தோற்றத்திலும் பேச்சிலுமாகத் தெரிகிறார் நடராஜ சிவம். இவர் குரல் வளம் கொண்ட அறிவிப்பாளர், வானொலித்துறை சார்ந்தவர் மட்டுமல்ல; நடிகர், கலைஞர் எனப்பல்வேறு முகங்கள் இவருடையது. இவர் இறுதியாக நடித்த காதல் கடிதம் திரைப்படம் தற்போது ஒளித்தட்டாக வந்திருக்கிறது. அதில் இவரது பண்பட்ட நடிப்பைக் காணலாம். 40 வருடங்களுக்கும் மேற்பட்ட வானொலி அனுபவங்களைக் கொண்டிருக்கும் இவர்தான் சூரியனின் உதயத்துக்கும் அது உச்சிக்கு போவதற்கும் பின்புலமாக நின்றவர். அது அஸ்தமிக்கலாம் என்றி…
-
- 3 replies
- 1.3k views
-
-
நவம்பர் 29: கலைவாணர் பிறந்த தினம் தமிழ் சினிமாவின் முதல் சமூகப்படமான ‘மேனகா’வில் மொட்டைத் தலையுடன் அறிமுகமான என்.எஸ்.கே. எத்தனை சாதனைகள் படைத்திருந்தாலும் காலம் எல்லோரையும் பொக்கிஷமாகப் பொத்தி வைத்துப் பாதுகாப்பதில்லை. நூறாண்டு தமிழ்த் திரைக்கு ஆரம்ப அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டுத்தந்த ஜாம்பவான்களில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தமிழ் சினிமா மறக்காத பொக்கிஷம். நகைச்சுவையைச் சமூக மாற்றத்துக்காகப் பயன்படுத்த முனைந்த முதல் முன்மாதிரி. ஒப்புமையும் மாற்றும் இல்லாத அசல் கலைஞன். ‘சிரிப்பு என்பது வியாதிகளை விரட்டும் மருந்து’ என்று மருத்துவர்கள் கண்டறிந்து சொல்லும் முன்பே, மக்களுக்குப் புரிய வைத்தவர். தனது முற்போக்குச் சிந்தனைகளால், கட்டியங்காரனுக்கும் கோமாளிக்கும் நாடக மேடை…
-
- 0 replies
- 700 views
-
-
"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி வாடும் வயிற்றை என்ன செய்ய காற்றையள்ளித் தின்று விட்டு கையலம்பத் தண்ணீர் தேட...... பக்கத்திலே குழந்தை வந்து பசித்து நிற்குமே...- அதன் பால்வடியும் முகம் அதிலும் நீர் நிறையுமே.......... அதன் பால்வடியும் முகம் அதிலும் நீர் நிறையுமே.........." நிர்க்கதியான நிலையில் ஆண்டவனைக் கதியென்று பற்றித் தேவார திருவாசகங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்போமே, அப்படியானதொரு வேளையில் எம்மக்களுக்கான ஊட்டமாக எழுந்தவை இந்த ஈழத்து எழுச்சிப்பாடல்கள். எண்பதுகளில் விடுதலைப் போராட்ட களத்தில் எல்.வைத்யநாதன், தேவேந்திரன் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், மற்றும் தமிழகக் கலைஞர்களோடும் இணைந்து இலேசாக அரும்பிய இந்த எழுச்சிப்பாடல்கள் தொண்ணூறுகளில் பெரும் …
-
- 3 replies
- 3.4k views
-
-
பூமணி - கி.ராஜநாராயணன் - வண்ணநிலவன் எண்பதுகளின் தொடக்கத்தில் இலக்கியக் கோட்டி பிடித்து எழுத்தாளராவதைத் தவிர வேறு மார்க்கமேயில்லை என்று நாங்கள் (நான், நாறும்பூநாதன், சாரதி, திடவைபொன்னுச்சாமி, அப்பணசாமி) கோவில்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தின் பொட்டல் வெயிலில் சத்தியம் செய்திருந்தோம். புத்தகங்களைத் தின்று தீர்த்தோம். அதுவரை தெரிந்த உலகமே இப்போது வேறொன்றாய்த் தெரிந்தது. உலக, இந்திய, தமிழ், எழுத்தாளர்களோடு ஏற்பட்ட பரிச்சயம் எங்கள் நடையையே மாற்றிவிட்டது. தரையில் கால் பாவியதாக நினைவில்லை. நாங்கள் வேறு பிறவிகள் என்ற நினைப்பு. பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, கு. அழகிரிசாமி, கு.ப.ரா., சுந்தர ராமசாமி, கு. சின்னப்ப பாரதி, டி. செல்வராஜ், கி. ராஜநாராயணன், வண்ணதாசன், வண்ணநிலவன், பூம…
-
- 1 reply
- 965 views
-
-
அகவை தொண்ணூற்றி மூன்றில் டொமினிக் ஜீவா June 27, 2020 -கனடாவில் இருந்து எஸ்.பத்மநாதன் டொமினிக் ஜீவா ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளர். “மல்லிகை” எனும் மாசிகையை ஆரம்பித்து 2012 நவம்பர்-டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர். கம்யூனிஸ்ட் கட் சியின் மிக உன்னதமான பிரமுகரானதுடன், இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தின் முன்னோடிகளில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் பரிசினை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அப்பரிசினைப் பெற்ற பெருமைக்குரிய படைப்பாளி. அத்துடன் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய நாடு…
-
- 3 replies
- 1.5k views
-
-
பிரெஞ்சு நாட்டின் பெருமதிப்பு வாய்ந்த விருதான "செவாலியர்' விருது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். செவாலியர் என்றதும் "சட்' டென்று எமக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஞாபகத்துக்கு வராமல் போகாது! அங்கு வேறு சில பிரமுகர்களும் அவ்விருதைப் பெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், நமது இலங்கைத் திருநாட்டில்..? இதுவரை நாம் கேள்விப்பட்டதில்லை. அந்த பெருமைக்குரிய விருதினைப் பெற்ற ஒருவர் நம் நாட்டில் இருக்கிறார் என்றால் ஆச்சரியப்படுவீர்கள். அதுவும் அவர் ஒரு தமிழ்ப் பெண் என்றால் மேலும் வியப்படைவீர்கள் யார் இவர்? இவரது பெயர் திருமதி சிவா இராமநாதன் (சிவயோகநாயகி என்ற பெயரின் சுருக்கம்) யாழ். பருத்தித்துறை பொலிகண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரை அண்மையில் கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு …
-
- 10 replies
- 2.9k views
-
-
எஸ்.பி.பாலசுப்ரமணியம் தென்னிந்திய இசைவானின் துருவ நட்சத்திரம். பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய சாதனையாளர். நூற்றுக்கணக்கான இசையமைப்பாளர்களுக்கு எல்லாவிதமான பாடல்களையும் பாடிய இசைச் சித்தர். சாதாரண இசையமைப்பாளர் சுமாராகப் போட்ட மெட்டைக்கூட தனது சங்கதிகள் மூலமும் குரலில் ஏற்படுத்தும் Vibrato எனப்படும் மாற்றங்கள் மூலமும் அந்த மெட்டை உருவாக்கிய இசையமைப்பாளரே திகைக்கும் வண்ணம் அவரது மெட்டில் எதிர்பார்க்காத அழகியல்களை மாற்றங்களைச் செய்ய வைக்கக்கூடிய பிறவிப் பாடகர்… 1990 களில் பாலு உச்சத்தில் இருந்த காலம். அந்தக் காலத்தில்தான் இரவு நேரத்தில் பாடல்களைப் பதிவு செய்யும் கலாசாரம் தமிழ்திரையிசையில் உரு…
-
- 0 replies
- 2.1k views
-
-
வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன் பேட்டி சமீபத்தில் சினிமாவை சொல்லித்தர தமிழீழம் சென்று வந்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன்.. தமிழ் சினிமாவின் பல விதங்களை விமர்சித்து நம்மிடம் பேசியனார் அனலும், சாந்தமும், சூடும் பறந்த பேட்டியிலிருந்து விரைவில் 'சாசனம்' வெளிவரப்போகிறதா, சந்தோஷமாக இருக்கு... அப்படியரு சூழ்நிலை வந்திருக்கு. எதுவும் சுமூகமான நிலைக்கு சம்பந்தமில்லாத நிலையில் இல்லை. தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க ராஜ அம்சம் கொண்ட பகுதி செட்டிநாடு நகரத்தார்களின் வாழ்க்கை தான் கதை. அவர்களின் பழக்கவழக்கங்கள், பளீரென்று எதையும் பெரிதாகச் செய்கிற பதவிசு எல்லாமே என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கு. வானவில் மாதிரி வெளிச்சமும் நீரும் ஒளிந்து வி…
-
- 1 reply
- 1.7k views
-
-
துணிச்சல் தன்னம்பிக்கை ரவி மாஸ்ரர் சொல்லும் கதைகள்?????? ஊடகப்பயணத்தில் போர் செய்யும் மனிதன்.
-
- 0 replies
- 727 views
-
-
சமீபத்தில் இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்த ‘டிரம்ஸ்’ சிவமணி, தற்போது குடும்ப வாழ்வில் நுழையும் முடிவிற்கு வந்துள்ளார். சிவமணியின் இசைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் ரூனா ரிஸ்வி என்ற பின்னணிப் பாடகியை சிவமணி வருகிற நவம்பர் 10ஆம் தேதி மும்பையில் மணக்கவிருக்கிறார். சிவமணி இசையமைத்த அரிமா நம்பி திரைப்படத்தில் ரூனா ரிஸ்வி ஒரு பாடல் பாடியிருக்கிறார். நவம்பர் 10ஆம் தேதி திருமணம் நடப்பதைப் பற்றி மட்டுமே சிவமணி தெரிவித்தார். பாடகி ரூனா ரிஸ்வி, பிரபல கசல் பாடகர் ராஜ்குமார் ரிஸ்வியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. - http://thinakkural.lk/article.php?cinema/doglkw6ivz5152876e1c590216259pirsl3b1a0e95808168e1a8ff89zgmya#sthash.ejpnRsHx.dpuf
-
- 1 reply
- 2.1k views
-
-
26.07.2007 கலையரசு சொர்ணலிங்கம் அவர்களது 25வது நினைவு. கலையரசு சொர்ணலிங்கம் (30.03.1889- 26.07.1982) சலனம் இணைத்தில் பதியப்பட்டுள்ள நினைவுக்குறிப்பை இதில் நன்றியுடன் பதிவிடுகிறேன். இவர் தொடர்பான நிகழ்வு 29. 07. 2007 அன்று இலண்டனில் ஏற்பாடாகியுள்ளது. http://www.appaal-tamil.com/index.php?opti...view&id=646 கலையரசு சொர்ணலிங்கம் (எழுதியவர் மூத்த கலைஞர் ஏ. ரகுநாதன்) நாடகமே என் நினைவு நாடகமே என் இன்பம் நாடகமே என் கவலை நாடகக் கலையே ... * இவரது நடிக்கும் திறமையின் முக்கிய குணம் என்னவென்றால் வெவ்வேறு விதமான பலவிதமான பாத்திரங்களை நடித்ததேயாம். இதுவுமன்றி தான் எந்த வேடம் பூண்டாலும் தானே ம்றறொருவர் உதவியின்றி தக்கவாறு வேடம் பூணுவதில் மிக…
-
- 0 replies
- 2.2k views
-
-
‘ஆடுகள’த்தில் ஆடிய கவிஞர் ஜெயபாலன் தீபச்செல்வன் ‘ஆடுகளம்’ படத்தில் பேட்டைக்காரனாக ஜெயபாலன் என்ற ஈழத்துக் கவிஞர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இப்படி அடையாளப்படுத்தக்கூடிய பாத்திரம் ஒன்றில் ஜெயபாலன் நடித்திருக்கிறார் என்பது ஈழத்தவர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது. யார் இந்தப் பேட்டைக்காரன் என்கிற ஜெயபாலன் என்பதை ஈழத்தின் இன்றைய தலைமுறைக்கு அவசியம் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை எழுதுகிறேன். வ.ஐ.ச. ஜெயபாலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்டம் பெற்றவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக 1974ஆம் ஆண்டில் அங்கம் வகித்து பல முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார். முதலாம் வருடத்திலேயே போ…
-
- 3 replies
- 1.8k views
-
-
இயல் விருது வாங்க கனடா வந்திருந்த எஸ்.பொ விடம் ஒரு இடைமறிப்பு.-கற்சுறா கற்சுறா: 2011 ஜனவரிமாதம் நடந்த கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டினை எதிர்த்து முதற் கொள்ளி வைத்தவர் நீங்கள். கலை இலக்கிய ரீதியாக இலங்கைத் தமிழினத்தை அடிமைப் படுத்தும் ராஜபக்சேவின் திட்டம் தான் உலக எழுத்தாளர் மாநாடு என்றும் சிங்கள மொழி மேலாண்மையை தமிழர்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான் மாநாட்டின் ஒட்டுமொத்த நோக்கம் என்றும் சொல்லி அறிக்கை விட்டு மாநாட்டைப் புறக்கணித்தவர் நீங்கள். தற்போது மாநாடு முடிந்து இவ்வளவுகாலத்தின் பின் மாநாடு நடத்திவிட்டு தற்போது ஐந்து லட்சம் நட்டம் என்கிறார்கள். இவ்வளவு நட்டப்பட்டு ஏன் மாநாடு நடாத்துவான் என்று கிண்டலடிக்கிறீர்கள். மாநாடு நடத்தியவர்கள் அரசிடம்…
-
- 0 replies
- 813 views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளைப் போலவே, அரசியல், சமூக பிரச்சனைகளை விவாதிக்கும் ஒரு கலை வடிவம் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு உயிர்ப்புடன் இருந்தது என்றால் நம்பமுடிகிறதா? …
-
- 1 reply
- 1.4k views
-