Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழகக் கரும்புலி வீரனுக்கு அஞ்சலிகள் எமக்காய் தன்னை ஈந்த தமிழகக் கரும்புலி வீரன் செங்கண்னுக்கு (தனுஸ்கோடி செந்தூர்பாண்டியன், சாத்தூர்,சிவகாசி, தமிழ் நாடு) வீர வணக்கங்கள்.

  2. தமிழீழக் காவல்துறையின் முன்னாள் ஆய்வாளர் ரஞ்சித்குமார் பிரான்சில் சாவடைந்துள்ளார்! March 27, 2022 http://www.errimalai.com/wp-content/uploads/2022/03/tempsnip.jpg தமிழீழக் காவல் துறையில் ஒரு முதன்மை ஆய்வாளராகவும் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்வரை தமிழீழ மக்களோடு மக்களாக நின்று தமிழீழக் காவல்துறையின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றி இனவழிப்பின் சாட்சியமாகவும் இருந்துவந்த திரு. இம்மானுவல் நிக்சன் ரஞ்சித்குமார் (வயது 51) அவர்கள் பிரான்சில் இன்று (27. 03. 2022) ஞாயிற்றுக்கிழமை சாவடைந்துள்ளார். http://www.errimalai.com/wp-content/uploads/2022/03/FB_IMG_1648414187254-191x300.jpg …

  3. மட்டக்களப்பின்... பொக்கிஷமாக கருதப்படும், மாஸ்டர் சிவலிங்கம் காலமானார்! இலங்கையில் சிறுவர்களுக்கு கதைகூறுவதில் விசேட தன்மையினைக்கொண்டிருந்தவரும் மட்டக்களப்பின் பொக்கிஷமாகவும் கருதப்படும் மாஸ்டர் சிவலிங்கம் நேற்று (புதன்கிழமை) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லடியை சேர்ந்த இவர் சிறுவர்களுக்கு கதைகள் கூறுவதில் பிரபல்யம்பெற்றவராகவும் கலைஞராகவும் எழுத்தாளராகவும் பல்திறமைக்கலைஞராகவும் திகழ்ந்துவந்தார். காலமான மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் இறுதிக்கிரியைகள் கல்லடியில் உள்ள இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று கல்லடி உப்போடை இந்து மயானத்தில் மாலை 4.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள…

  4. கிழக்கு லண்டன்... நியுகாம் தொழிற்கட்சி கவுன்சிலராக பல ஆண்டுகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு வந்த போல் சத்தியநேசன் உடல்நலன் குறைவு காரணமாக கடந்த 5ம் திகதி காலமானார். இவர் அடிப்படையில் புளொட் அமைப்புச் சார்ந்தவராக இருந்தாலும்.. புலம்பெயர் மண்ணில்.. தமிழீழத்துக்கு சார்பான நிகழ்வுகளை முன்னின்று நடத்துவதிலும் பிரித்தானியர்களிடம் தமிழ் மக்களின் பிரச்சனைகளைக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றியவர் ஆவார். 1980 களில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்களுக்கு அரசியல் தஞ்சம் கிடைக்க பல வழிகளிலும் இவர் தன் உதவிகளை வழங்கி வந்திருப்பது தெரிந்ததே. கடந்த சில காலங்களாக தாயகத்தில் சில வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வந்திருக்கிறார். இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இன்…

      • Thanks
      • Sad
    • 11 replies
    • 1.3k views
  5. சிறிலங்கா இராணுவம் வடபோர் முனையில் மேற்கொண்ட வலிந்த தாக்குதலின் போதும் அதற்கெதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட முறியடிப்புச் சமரின் போதும் போராளிகள் வீரச்சாவைத் தழுவினார்கள். நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவியவர்களில் இதுவரை கிடைக்கப்பெற்ற 75 பேரின் விபரங்கள் 11.08.2006 வீரவேங்கை வாணி மார்க்கண்டு சாந்தமலர் விடத்தல்தீவு, பள்ளமடு, மன்னார் பளைப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான சமரின்போது வீரவேங்கை கவிமதி/கிண்ணியா றெங்கநாதன் தேவிகா முரசுமோட்டை, கிளிநொச்சி. த.மு: இடைக்கட்டு, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு. வீரவேங்கை அருங்கதிர்/மதனி சிவப்பிரகாசம் யோகேஸ்வரி யாழ். மாவட்டம். வீரவேங்கை நீலச்சுடர் அன்ரன்பெனடிற் பிறேமலதா …

    • 11 replies
    • 2.1k views
  6. Started by சிறி,

    14.02.1987 அன்று கைதடியில் காவியமாகிய லெப்.கெணல் பொன்னம்மான், மேஜர் கேடீல்ஸ், கப்டன் வாசு மற்றும் 7வேங்கைகளின் 18 வது நினைவு நாள் இன்று. அவர்களுக்கு எமது வீர வணக்கம்

  7. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அவுஸ்த்திரேலியாவில் வசித்து வந்தவருமான திரு. நோயேல் ஹரன் அவர்கள் இன்று அதிகாலை கொழும்பில் அகால மரணமானார். இவர் ஜுலிட்டா அவர்களின் அன்புக் கணவரும், ஹரினி, ஜெயஹரன் ஆகியோரின் அன்புத் தகப்பனும் ஆவார். 39 வயதே நிறைந்த நோயேல் ஹரன் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவரும், மொரட்டுவை பல்கலைக் கழகத்தில் கட்டிடத்துறையில் பட்டம் பெற்றவருமாவர். தனது பட்டப் படிப்பின் பின்னர் மத்திய கிழக்கில் சுமார் 7 வருடங்கள் பணியாற்றிய ஹரன், 2005 இலிருந்து அவுஸ்த்திரேலியாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். தகவல் : ரஞ்சித்

  8. லெப். கஜேந்திரன் வித்துடல் புனித விதைகுழியில் விதைப்பு [திங்கட்கிழமை, 25 செப்ரெம்பர் 2006, 17:49 ஈழம்] [தாயக செய்தியாளர்] மாவிலாறு மோதலில் வீரச்சாவடைந்த லெப். கஜேந்திரனின் வித்துடல் ஆண்டான்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. திருகோணமலை மாவிலாறில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிறிலங்கா இராணுவத்தினருடன் மோதல் நடைபெற்றது. இதில் வீரச்சாவைத்தழுவிய லெப். கஜேந்திரனின் வித்துடல் ஆண்டான்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் முழுமையான தமிழீழ இராணுவ மரியாதைகளுடன் விதைக்கப்பட்டது. முன்னதாக கதிரவெளி பாடசாலையில் லெப். கஜேந்திரனின் வித்துடல் வைக்கப்பட்டு வீர வணக்க கூட்டம் நடைபெற்றது. திருகோணமலை மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகப் பொறுப்பாளர் தென்ன…

    • 11 replies
    • 2.2k views
  9. இன்றுடன் ஜோசப் பரராஜ சிங்கம் சிங்கள் ஒற்றர்களால், ஒட்டுக்குழுக்களின் துணையுடன் கொல்லப்பட்டு சரியாக 4 வருடங்கள் பூர்த்தி. எனக்கு உறவு முறையில் மாமனாகவும், தமிழர்களுக்கு பல வழிகளில் பல படுகொலை சம்பவங்களை வெளிக் கொண்டு வந்த ஒரு தைரியமுள்ள தமிழ் தேசிய உணர்வாளனாகவும், ஈற்றில் மட்டக்களப்பு மக்களால் பிரதேச வாத தேர்தலில் நிராகரிக்கப்பட்டு பின் தேசியப் பட்டியல் மூலம் எம்.பி யாக வந்தவராகவும் ஆன மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு என் கண்ணீர் நினைவு துளிகள் கிறிஸ்மஸ் தினம் அன்று, தேவாலயத்தில் வாயில் அரைவாசி புனித அப்பத்தை தின்றபடி நிற்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட இவரின் கொலையை இலங்கையில் இருந்த எந்த பங்குத் தந்தையும் கண்டிக்க வில்லை எனும் மிக மோசமான வரலாற்று உண்மை ஒவ்வொரு நத்தார் …

  10. சிராட்டிக்குளம் சண்டையில் வீரச்சாவடைந்து வீர காவியமான 26 மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள். வீரப்பரணி எழுதப் புறப்பட்ட தமிழ் தாயவள் குஞ்சுகளே.. வீரக் களமதில் சிராட்டிக்குள மண்ணதில் வீழ்ந்திட்ட நாயகரே நிச்சயம் உம் இலட்சியம் வெல்லும் உறங்குங்கள் வேங்கைகளே..!

  11. பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆர் எஸ் மனோகர் மரணம் தமிழ்த்திரயுலகின் பழம்பெரும் நடிகரும், நாடகக் கலைஞருமான ஆர் எஸ் மனோகர் இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார், அவருக்கு வயது 81. மனோகர் சிறிது காலமாகவே உடல்நலக் குன்றியிருந்தார். ஆர் எஸ் மனோகர் இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் ஆர் எஸ் மனோகர், இலங்கேஸ்வரன், சுக்ராச்சாரியார் போன்ற அவரின் நாடங்களின் மூலமும் புகழ் பெற்றார். தமிழ் நாடக உலகில் இதிகாச, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றி அதில் பெரும் பொருட் செலவில் புதுமையான யுத்திகள், தந்திரக் காட்சிகளையும் இடம் பெறச் செய்தவர் மனோகர். -பீபீசி தமிழ்

  12. லண்டனில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மாலதி படையணி முன்னாள் போராளி உயிரிழப்பு.! இலண்டன் லூசியம் பகுதியில் வாழ்ந்துவந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணி போராளியான தமிழன்பு என்று அழைக்கப்பட்ட பா சுபாசினி அவர்கள் உடல் நலக்குறைவால் சாவடைந்துள்ளார். தமிழீழ தேச விடுதலைப்போரில் கிளாலிப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் தனது காலை இழந்த இவர் பின்னர் கணனிப்பிரிவுடன் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . அத்துடன் போரின் கொடூர பக்க விளைவுகளால் மிகவும் கடுமையான வலிகளை சுமந்தபடி லண்டனில் வாழ்ந்து வந்த ஒரு பிள்ளையின் தாயான இவர் அன்று (22/11/2020) மரணமானார். https://newsthamil.com/லண்டனில்-தமிழீழ-விடுதலைப/

    • 11 replies
    • 1.3k views
  13. தமிழர்களின் கடல்சார் தொன்மையை வெளிகொணர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு. சென்னை: கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். அவருக்கு வயது 60. திருச்சி உறையூரில் பிறந்த இவரின் உண்மையான பெயர் சிவ பாலசுப்ரமணியன். பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்ததால் ஒரிசா பாலு என அழைக்கப்பட்டார். தமிழர்களின் கடல்சார் தொன்மை தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர், தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடற்பயணம் மேற்கொண்டதை கண்டறிந்தவர் இவர்தான். மேலும், குமரிக்கண்டம், கடலில் மூழ்கிய பூம்புகார் உள்ளிட்ட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக அறி…

  14. மோகன் ஆர்ட்ஸ் - மூனா எழுபதுகளின் நடுப்பகுதியில் பருத்தித்துறையில் மோகன் வரைந்த விளம்பரப் பலகைகளே அதிகமாக இருந்தன. மோகனின் வரவுக்கு முன்னர் ஜெயம் ஆர்ட்ஸ்தான் நகரில் பிரபலம். அடிமட்டம் வைத்து எழுதியது போன்றிருக்கும் ஜெயம் ஆர்ட்ஸின் நேரான எழுத்துப் பாணியை மோகனின் வளைந்த நெளிந்த எழுத்துக்கள் மேவி நின்றன. மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என்று நேரடி வர்ணங்கள் இல்லாமல் வர்ணக்கலவைகளை தனது எழுத்துக்களில் மோகன் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இது அப்பொழுது ஒரு மாற்றமாகவும் புதுமையாகவும் இருந்ததால் பல வியாபாரிகள் மோகனின் வாடிக்கையாளர்களாக மாறி இருந்தார்கள். மோகன், தமிழ்நாட்டில் ஓவியர் மாதவனிடம் சித்திரக்கலையைப் பயின்றவர். ஓவியத்துறையை தொழிலாகவும் செய்யலாம் என்ற…

    • 11 replies
    • 1.4k views
  15. ஈழத்தின் பிரபல நாடகக் கலைஞரும் ஊடகவியலாளருமான டேவிட் ராஜேந்திரன் கடந்த 19-ம் திகதி வியாழக்கிழமை லண்டனில் காலமானார். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சில் வசித்து வந்த டேவிட் ராஜேந்திரன், ஓரிரு மாதங்களுக்கு முன்னரே லண்டனில் குடியேறி சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை வானொலி என்ற பெயரில் இயங்கி வந்த 1960-களின் பிற்பகுதியில் அந்த நிறுவனத்தில் தொழில் நுட்ப பொறுப்பாளராகப் பணியாற்றத் தொடங்கிய டேவிட் ராஜேந்திரன், அன்றைய நாட்களில் நேயர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சியின் தொழில்நுட்பப் பொறுப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாள…

  16. குட்டிமணியின் பாரியார் மரணத்திற்கு டெலோ இரங்கல் தெரிவித்தது! டெலோவின் அப்போதைய தலைவர் குட்டமணியின் பாரியார் மனைவி மரணச் செய்தி அறிந்து தாம் வேதனையடைகின்றோம் என டெலோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று (05) விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகராக எமது இயக்கத்தின் முதுகெலும்பாக செயற்பட்டவர் குட்டிமணி. அவரின் பாரியார் இராசரூபராணியின் இயற்கை எய்திய துயரச் செய்தி அறிந்து நாம் வேதனையடைகின்றோம். இவரது பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கு மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் சார்பாகவும் எமது ஆழ்ந்த இரங்கல்களையும், கண்ண…

  17. ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி (புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி )அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி பிப்ரவரி 14 அன்று நினைவூட்டப்படுகின்றது. வன்னியில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்டு இருந்த வேளையில் தன் இறுதி மூச்சை விடும் வரைக்கும் ஊடகப் பணியாற்றிய அன்னாரை என்றென்றும் நினைவு கூறுவோம் அன்னாரின் நினைவஞ்சலி கூட்டங்கள் சில புலம்பெயர் நாடுகளிலும் நினைவுகூறப்படுகின்றது. இது தொடர்பான செய்திகளை இங்கு இணைத்தால் மேலும் அறியக்கூடியதாக இருக்கும்

    • 11 replies
    • 1.9k views
  18. தமிழீழ ராணுவம் (TEA)இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மரணமடைந்துள்ளார்.

  19. Started by putthan,

    பாடசாலையில் ஒன்றாக படித்தவன்,ஆறாம் வகுப்பு முதல் க.பொ.த உயர்தரம் வரை ஒரே தரத்தில் வெவ்வேறு பிரிவுகளிள் படித்தோம் அதாவது அவன் "ஏ" பிரிவிலும் நான் "பீ" பிரிவிலும்.பின்பு உயர்தரம் நான் உயிரியல் பிரிவிலும் அவன் கணக்கியல் பிரிவிலும் படித்தோம் என்றாலும் இருவரும் நண்பர்கள் பாடசாலையில் படிக்கும் போது பட்ட பெயர் வைப்பது வழமை உடற்தோற்றத்திற்கு ஏற்றபடி அதாவது மெலிந்து உயர்ந்த தோற்றம் உடையவராகின் ஓட்டகம் என்றும் கொஞ்சம் மொத்தமாகவும் கொஞ்சம் கட்டையாகவும் இருந்தால் தக்காளி என்றும் வைப்பதும் வழமை.அவனது உயரத்திற்கும் மெல்லிய தோற்றத்திற்கும் உரிய பட்டதினை வழங்கி இருந்தோம். பாடசாலை படிக்கும் போது விளையாட்டு போட்டிகளிள் மிகவும் ஆர்வமாக ஈடுபடுவான் படிப்பிலும் அதே ஆர்வம்.கல்லுண்டாய் (மான…

  20. தமிழ்ச்செல்வன் அண்ணா இருந்திருந்தால் மக்களிடம் இத்தனை குழப்பங்கள் வந்திருக்காது. எப்படியாவது தெம்பூட்டும் வார்த்தைகளால் மக்களை அரவணைத்திருப்பார். அவர் இல்லை என்பது சோகமானதாக இருந்தாலும், அவரின் இலட்சியப்பாதையில் வெற்றி பெறுவதே அவரின் ஆத்மாவிற்கு செய்யக் கூடிய ஒரே ஒரு கடமையாகும். காலம்காலமாக எம் போராட்டத்தில் பல மூத்த தளபதிகளை இழந்தபோதும், அது மீண்டும் வீறு கொண்டு எழுந்ததே வரலாறு. இம்முறையும் அது மாறாது.

    • 11 replies
    • 3.3k views
  21. ஆழ்ந்த அனுதாபங்கள் மயூராவின் குடும்பத்திற்கு! மயூராவின் இழப்பைக் கேட்டு அதிர்ச்சியுற்றோம். மிகவும் நட்பாக பழகக் கூடிய பண்பும் மிகவும் திறமையான மாணவியாகவும் பெற்றோர்களுக்கு ஆசை மகளாகவும் திகழ்ந்தார். இவரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம். ===>>நண்பர்கள்<<===== 9ஆம் மாத நினைவஞ்சலியும் வீட்டுக்கிருத்தியமும் Date of Birth 1985-10-11 Date of Death 2007-03-09 செல்வி முருகையா மயூரா (முகாமைத்துவப் பிரிவு, யாழ். பல்கலைக்கழகம் 2007) பொன் மயிலே! புதுச்சரமே! புன்னகையே! புதுமலரே! பூமுகத்தைக் காண்போமா? புன்னகையை இரசிப்போமா? ஆசைச் செல்வமே! அன்பு மலரே! பாசம் மாறாத நேசத்தாமரையே! கைகள் கூப்புகின்றோம் கண்மலர்கள் த…

  22. லண்டன் கரோ கவுன்ஸிலர் தயா இடைக்காடரின் தந்தையார் நமச்சிவாய இடைக்காடர் காலமானார். யாழ் இடைக்காட்டை பிறப்பிடமாகக் கொண்டவரும், யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னால் ஆசிரியருமான நமச்சிவாய இடைக்காடர் இம்மாதம் 06ம் திகதி லண்டனில் காலமானார். இவர் மகேஸ்வரியின் கணவரும், மாணிக்க இடைக்காடரின் சகோதரரும், லண்டன் கரோ கவுன்ஸிலர் தயா இடைக்காடர், சசிரேகா நந்தகுமார், கலாமணி சிறிரங்கன், நித்தியா சிவகுமார், மீரா அசோகன், மாலினி தயாபரன் ஆகியோரின் தந்தையும், நந்தகுமார், சிறீரங்கன், சிவகுமார், அசோகன், தயாபரன் ஆகியோரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் 10.30மணிக்கு NW7 1NB, Mill Hill, Holders Hill Road, Hendon Crematorium இல் நடைபெற்று பின்ன…

  23. இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(25.03.2025) அவர் உயிரிழந்துள்ளார். மாரடைப்பு மனோஜ் தனது 48ஆவது வயதில் காலமானார். சென்னையில் வசித்து வந்த மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Tamilwinபாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார் - தமிழ்வின்இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப...பெற்றோர்கள் இருக்கும் போதே பிள்ளைகள் இறப்பது மிகவும் கொடுமை. ஆழ்ந்த அனுதாபங்கள்.

  24. வீரகேசரி இணையம் 9/11/2008 4:22:49 PM - யாழ்ப்பாணத்தின் பிரபல நாதஸ்வர வித்துவான் வி. கே. காணமூர்த்தி நேற்று இரவு 11 மணிக்கு காலமானார். இவர் இறக்கும் போது வயது 65 ஆகும். இவர் தனது 15 வயதில் இருந்து நாதஸ்வர வாத்தியத்துறையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்ஸர்லாந்து ஆகிய இடங்களில் இவர் தமது திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.

    • 10 replies
    • 2.5k views
  25. அண்மையில் படுகொலை செய்யப்பட்ட அன்புறவு கேதீசுக்கும் எனது கண்ணீர் வணக்கங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.