துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
641 topics in this forum
-
என் ப்ரிய வெ.சா… சேதுபதி அருணாசலம் இன்று காலை யதேச்சையாக ஃபேஸ்புக்குக்குள் நுழைந்தால் முதலில் கண்ணிற்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் ப்ரொஃபைல் படமாக வெ.சா இருந்தார். சடாரென்று மனம் ஒரு கணம் துணுக்குற்றது. “கடவுளே, ‘அந்த’ செய்தியாக இருக்கக்கூடாதே” என்று வேண்டிக்கொண்டே பார்த்தேன். ‘அதே’ செய்திதான். இன்று வெ.சா இல்லை. ஒரு நொடி தரையில் கால் பாவவில்லை. வெ.சாவுக்கும் எனக்குமான உறவை வார்த்தைகளில் என்னால் எழுதிப் புரியவைத்துவிடமுடியும் என்று தோன்றவில்லை. என்னாலேயே கூட அதைச் சரியாக உள்வாங்கிப் புரிந்துகொள்ளமுடியுமா என்பது சந்தேகம்தான். இலக்கியம், எழுத்து, கலை, விமர்சனம் இதையெல்லாம் தாண்டி ஒரு ஆத்மார்த்தமான சிநேகம் அவருக்கு என் மீது இருந்தது. அதற்கு நான் தகுதியானவன்தானா என்று தெரியவ…
-
- 0 replies
- 955 views
-
-
நல்லூர் எசமானி காலமானார் January 28, 2024 நல்லூர் எசமான் அம்மா சுகிர்தா தேவி குமராதாஸ் மாப்பாணமுதலியார் குகபதமடைந்தார். நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்களது துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களது தாயாருமாகிய அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று (28) குகபதமடைந்தார். அன்னாரது இறுதிகிரிகைகள் யாழ்ப்பாணம் நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்று தகனகிரிகைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்க்கு எடுத்துச் செல்லப்படும். https://globaltamilnews.net/2024/20…
-
- 3 replies
- 954 views
-
-
தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார் ஜூன் 15, 2025 “மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்…” என்ற புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை எழுதிய கவிஞர் தமிழ் அறிஞர் பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்கள் காலமானார். பண்டிதர் பரந்தாமன் வடமராட்சியை புலோலியைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் ஆவார். இவர் கிளிநொச்சியில் உள்ள பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும், இவர் எழுதிய “தமிழர் உறவுமுறைச் சொல் வழக்கு அகராதி” என்ற நூல் குறிப்பிடத்தக்கது. கெரில்லாப் போர் விரகுகள் என்ற விடுதலைப் போராட்டம் சார்ந்த முக்கிய நூலையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் மனிதரும் கடவுளும் மற்றும் வேர் – …
-
-
- 13 replies
- 954 views
-
-
முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது 13.05.2009 அன்று காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர். அதன் போது கந்தசாமி தருமகுலசிங்கம் எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்டார் .இவர் நாட்டுப்பற்றாளராக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டார் . நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை பற்றி புலம்பெயர் மக்களுக்கு காணொளி வழியாக தகவல்களை வழங்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது. http://meenakam.com/2011/05/13/24672.html அன்று நான் உங்களோடு இன்று நீங்கள் என்னோடு அழியாத நினைவாய் என் இதயத்தில் உங்கள் தியாகம் நிச்சயம் வென்று தரும் தமிழீழம்
-
- 1 reply
- 952 views
- 1 follower
-
-
தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு மகத்தான பங்களிப்பு வழங்கிய மாமனிதர் கலாநிதி மகேஸ்வரன் மறைந்தார் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு பல்வேறு வழிகளிலும் பிரித்தானியாவில் இருந்து அயராது பாடுபட்டுவந்திருந்த பொறியியலாளர் கலாநிதி மகேஸ்வரன் சதாசிவம் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 15.12.2024 அன்று லண்டனில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 70. மகேஸ்வரன் தனது ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பாடசாலையிலும் மற்றும் அப்போதிருந்த பரமேஸ்வரா கல்லூரியிலும் பயின்று பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய…
-
- 8 replies
- 949 views
-
-
இயல்பு வெளிப்பாடுகளை வைத்து மனிதர்களை அளவிடுவது தவறு - செல்வநாயகம் ரவிசாந்த் 16.04.2007 ஆம் ஆண்டு படு கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரும், கவிஞரும், இலக்கிய வாதியுமான ‘எஸ்போஸ்’ எனப்படும் சந்திரபோஸ் சுதாகரின் நினைவுப் பகிர்வு நிகழ்வு மறுபாதிக் குழுமத்தின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை 16.04.2016 பிற்பகல் -4 மணிக்கு ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள புதிய உயர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. விமர்சகர் சி.ரமேஸ் நிகழ்வை முன்னிலைப்படுத்தினார். கவிஞர் கருணாகரன், ஆசிரியர் பெருமாள் கணேசன், ஆசிரியர் ப. தயாளன், எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், சமூக ஆய்வாளர் தெ . மதுசூதனன், கவிஞர் தானா விஷ்ணு ஆகியோர் எஸ்போஸுடனான தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அதனைத…
-
- 0 replies
- 948 views
-
-
வட, கிழக்கு மாகாண முன்னாள் செயலாளர் காலமானார்! வடக்கு – கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் சிவகுருநாதன் இரங்கராஜா தனது 71வது வயதில் நேற்று (15) காலமானார். பொன்னாலையில் பிறந்த அவர் இலங்கை நிர்வாக சேவை அதிசிறப்புத் தரத்தில் மாகாண பிரதம செயலாளர் பதவியை வகித்தார். இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணதின் பிரதம செயலாளராகவும் பின்னர் வடக்கு மாகாணத்தின் நிர்வாகம் தனியாகப் பிரிக்கப்பட்ட பின்னர் அதன் முதலாவது பிரதம செயலாளராகவும் சிவகுருநாதன் இரங்கராஜா பதவி வகித்தார். மாகாண சபை நிர்வாகம் தொடர்பில் நன்கு அனுபவம் உடைய அவர், அனைத்துத் தரப்பினருடன் இணைந்து சேவையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் பூதவுடல் கொழும்பில் உள்ள அவரது …
-
- 3 replies
- 945 views
- 1 follower
-
-
எனது நெருங்கிய உறவின் ( அக்காவின் கணவர் ) இழப்பின் போது அனுதாபம் தெரிவித்தஇணை யவனுக்கும் அத்தனை யாழ் கள உறவுகளுக்கும், தனி மடலில் தொடர்பு கொண்டவர்களுக்கும் ,எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் ஒவ்வொருவரின் பெயரையும் எழுத முற்பட்டால் இப்பதிவு மேலும் நீண்டு விடும்......மரணச்சடங்கு கொழும்பில் வியாழக்கிழமை ( நேற்று) நடைபெற்றது அவருக்கு வயது 72.டயபடிக் , ஒரு கால் விரல் எடுத்தது சாட்டு. பின்பு செவ்வாய் அதி காலை மாரடைப்பினால் காலமானார் .எனக்கு ஒரு நல்ல தந்தையை போல் .இருந்தவர். எனது மூத்த சகோதரியின் கணவர். நான் குடும்பத்தில் ஐந்தாவது இடையில் மூன்று சகோதரர்கள். இழப்பு மிகவும் துயரமானது தான் ஆனால் வாழ்வில் நிச்சயமானது இறப்பு.உறவினர்கள் வீட்டுக்கு சந்திக்க வருவதால் ந…
-
- 1 reply
- 944 views
-
-
ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்.! ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கிய மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார். இவர் நேற்று (புதன்கிழமை) மாலை கொழும்பில் காலமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மா சோமகாந்தன், பெண்கள் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்ததுடன் எழுத்து ஆளுமையாலும் பல விடயங்களை சமூகத்திற்கு எடுத்துரைந்த எழுத்தாளர் ஆவார். இவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/மூத்த-பெண்-எழுத்தாளர்-பத/ கண்ணீர் அஞ்சலிகள் ..
-
- 3 replies
- 940 views
-
-
அடுத்த மாதம் சிறிலங்கா அரசு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கிறது [புதன்கிழமை, 27 டிசெம்பர் 2006, 13:24 ஈழம்] [பா.பார்த்தீபன்] இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்வை முன்வைக்க அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி குழுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசு தனது தீர்வுத்திட்டத்தை அடுத்த மாதம் முன்வைக்கவுள்ளதாக அனைத்து கட்சிக்குழுவின் தலைவரும் விஞ்ஞான தொழில்நுட்பத்துறை அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இந்த திட்டம் மாகாணங்களுக்கான தனியான அதிகாரங்களை கொண்டுள்ளது. தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னதாக ஜனவரி இரண்டாம் வாரம் அனைத்து கட்சிக்குழு கூடவுள்ளது. அதன் போது மேலும் விவாதங்கள் நடத்தப்படும். இந்…
-
- 0 replies
- 938 views
-
-
பழம்பெரும் நடிகர், இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார் சென்னை: தமிழ் சினிமாவின் பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், நடிகருமான 'வியட்நாம் வீடு' சுந்தரம் சென்னையில் இன்று(சனிக்கிழமை) காலமானார். தமிழ்த் திரையுலகில், 1970-ம் ஆண்டு 'வியட்நாம் வீடு' என்ற திரைப்படத்தின் மூலம் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமானவர் சுந்தரம். இவர் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபல திரை நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார். இவரது கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான 'கௌரவம்' படம் பலராலும் பாராட்டப்பட்டது. மேலும், பல பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'வள்ளி' தொடர்வரை அவர் நடித்திருக்கிறா…
-
- 8 replies
- 933 views
-
-
இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார் By T. SARANYA 21 OCT, 2022 | 11:56 AM இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், இன்று (21) காலை 88 ஆவது வயதில் காலமானார். இன்றுவரை எழுத்துத்துறையில் தனக்கென தனித்துவம் கொண்டிருந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், இலங்கை அரசாங்கத்தினால் 'சாகித்திய ரத்னா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virake…
-
- 6 replies
- 931 views
- 1 follower
-
-
Date of birth 1952 Profession Mayor, Politician Date of death 11 September 1998 Pon Sivapalan (1952 – September 11, 1998) was a Sri Lankan politician. Sivapalan succeeded Sarojini Yogeswaran as mayor of Jaffna after she was assassinated in 1998 . வஞ்சகம் வென்றதோ நஞ்சர் குண்டுகள் உந்தன் நெஞ்சைத் துளைத்தனவோ அறிவிலிகள் துரோகிகள் பின்னிய சதி பட முன்னின்று உயிர் கொடுத்தாய் மறப்போம நாம் உன்னை பிரிந்தாலும் நீ என்றும் நிறைவாய் எம் நெஞ்சில் வாழ்வாய் உன் மண்ணில் .
-
- 5 replies
- 922 views
-
-
மயிலந்தனைப் படுகொலை: இன்றைக்குப் பத்தொன்பது ஆண்டுகளின்முன் 1992ஆம் ஆண்டு ஆகசுடு 0...9ஆம் நாள், மட்டக்களப்பு நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மயிலந்தனை என்ற கிராமத்தில் சிங்கள இராணுவத்தினர் நடத்திய வெறியாட்டத்தில் 39 அப்பாவித்தமிழ் மக்கள் சுடப்பட்டும், வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். 34பேர் கை, கால்கள் வெட்டப்பட்டு அங்கவீனர்களாக்கப் பட்டனர். கொல்லப்பட்டோரில் கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். இவ்வெறியாட்டத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு ஊழிய சலுகையும், அதிகாரி பதவிகளும் வழங்கப்பட்டு அவர்கள் மேலும் ஊக்குவிக்கப்பட்டனர். திராய்க்கேணி படுகொலை: 21 ஆண்டுகளின்முன் ஆகசுடு 07ஆம் நாள் 1990ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள திராய்க்க…
-
- 1 reply
- 922 views
-
-
நாவற்குழி இராணுவ முகாம் தகர்ப்பு முயற்சியில் 14-02-1987 அன்று வீரமரணம் அடைந்த லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ், கப்டன் வாசு, லெப். சித்தாத்தன், 2ம்லெப். பரன், வீரவேங்கை யோகேஸ், வீரவேங்கை கவர், வீரவேங்கை அக்பர், வீரவேங்கை குமணன், வீரவேங்கை தேவன் ஆகியோருக்கு வீரவணக்கங்கள்!
-
- 1 reply
- 921 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் துணைத் தளபதி கேணல் ரமணன் அவர்களிற்கு நான்காவது ஆண்டு வீர வணக்கங்கள்.
-
- 5 replies
- 912 views
-
-
மக்களுக்கும் போராளிகளுக்கும் வீரவணக்கம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 910 views
-
-
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் (62) ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் சிறுகதை நாவல்கள் எனப் பல சிறந்த படைப்புக்களை தமிழிற்கு தந்துள்ளார். இவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம் இன்றைய உதயனில் மேலும் விரிவான தகவல்களை பார்க்கலாம்.
-
- 1 reply
- 909 views
-
-
2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்ப்பேரலை அனர்த்தத்தின் 5ம் ஆண்டு நினைவு இன்றாகும். கடலினால் காவுகொள்ளப்ப்ட்ட்ட எம் மக்களை நினைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்துவோமாக..
-
- 3 replies
- 906 views
-
-
இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான எஸ்.நடராஜா நேற்று சனிக்கிழமை காலமானார். " நடா" என்று அழைக்கப்பட்ட எஸ்.நடராஜா வீரகேசரி பத்திரிகையில் 4 தசாப்தங்களாக பணியாற்றியதுடன் 1997 முதல் 2005 ஆம் ஆண்டுவரை முன்னாள் பிரதம ஆசிரியராகவும் அவர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=7521
-
- 6 replies
- 902 views
-
-
ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக (25) சனிக்கிழமை பி.ப 12.00 மணிக்கு இடம்பெறவுள்ளது படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகளாகின்ற போதிலும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என ஊடக அமைப்புகளினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது. 2006 இல் உயர்தரக் கல்வியை முடித்து பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை இவர் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார். மாணவர்களி…
-
- 1 reply
- 902 views
-
-
இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொ.காலமானார் இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு பொ (மு . பொன்னம்பலம்) நேற்று இரவு கொழும்பில் காலமானார். 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த மு. பொன்னம்பலம், ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராவார்.கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களித்த இவர், 1950களில் கவிதை எழுதத் தொடங்கினார்.முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான தகவல் பின்னர் அறிவிக்கப்படும். https://thinakkural.lk/article/311831
-
- 10 replies
- 899 views
- 2 followers
-
-
பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார் சென்னையில் பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். பதிவு: ஜூன் 19, 2020 15:46 PM சென்னை, தமிழ் திரையுலகில் பழம்பெரும் பின்னணி பாடகராக இருந்தவர் ஏ.எல். ராகவன். சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த அவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரை உடனடியாக சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 87. இவரது மனைவி நடிகை எம்.என். ராஜம். பல தசாப்தங்களாக பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கடந்த 1947ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் மற்றும் சுதர…
-
- 3 replies
- 896 views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான மொழி பெயர்ப்பாளராக இருந்த ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினரின் பிரதான மொழி பெயர்ப்பாளராக விளங்கிய வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் (ஜோர்ஜ் மாஸ்டர்) காலமானார். 1936ஆம் ஆண்டு பிறந்த அவர் தபாலதிபராக பணியாற்றியுள்ளார். பின்னர் 1994 ஆம் ஆண்டு காலப் பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்திருக்கின்றார். இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது பிரதான மொழி பெயர்ப்பாளராகவும் அவர் செயற்பட்டிருக்கின்றார். இற…
-
- 19 replies
- 893 views
- 1 follower
-
-
கந்தர்மடத்தை சேர்ந்தவரும் எமது உறவினருமான பாலசிங்கம் நந்தபாலன் லண்டனில் தமது 74 ஆவாது வயதில் காலமானார். மிகவும் செல்வந்தரான (பரம்பரை பணக்காரனான அவர் லண்டனில் பல சேர்விஸ் ஸ்டேஷன்கள் வைத்திருந்தவர்) இவர் விடுதலை போராட்ட ஆரம்ப காலங்களில் இருந்தே நிறைய பண உதவி செய்திருந்தார். 2009 இற்கு பிறகு போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், வறிய மக்கள், விதவையான பெண்கள் என்று பலருக்கும் பல விதமான வாழ்வாதார நிதி உதவிகளை செய்து வந்தார். அண்மையில் ஒரு திருமணத்தின்போது அருகில் இருந்தவர்கள் ஒரு வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களின் கஷ்டத்தை கேட்டுவிட்டு, அவர்களை தொடரபு கொண்டு தேவையான உதவிகளை செய்துள்ளார். அவரது பல உதவிகளும் இப்படி நடந்தவை தான். சரியாகத்தெரியவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் க…
-
- 8 replies
- 893 views
- 1 follower
-