Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. கி.பி.அரவிந்தன்: உணர்வுக்குள் இருந்து வழிநடத்தும் ஒப்பற்ற ஆளுமை ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காக, உரிமைப் போராளியாக, அரசியல் போராளியாக, ஆயுதப் போராளியாக, ஊடகப் போராளியாக, இலக்கியப் போராளியாக, பலமுனைகளில் தடம் பதித்த கி.பி.அரவிந்தன் அவர்கள் மறைந்து இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன. சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுக்கு எதிராக துண்டுபிரசுரங்களின் மூலம் தமிழ் மக்களை விழிப்படையச் செய்வதில் ஆரம்பித்து, தமிழ் மக்களின் உரிமைகளை உரத்துச் சொல்வதற்காக ‘புதினப்பலகை’ இணையத் தளத்தை முன்னெடுத்துச் சென்றது வரை அவரது வரலாறு போராட்டங்களால் தான் நிரம்பியிருக்கிறது. கி.பி.அரவிந்தன் ஒரு வரலாறு. ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் அவருக்கென ஒரு தனிவரலாறுப் …

    • 0 replies
    • 892 views
  2. பேராசிரியர் கா.சிவத்தம்பி: புதிய வார்த்தை அ.முத்துலிங்கம் எம். ஏ. நுஃமானிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இன்று வந்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி காலமானார். கடந்த 25 வருடங்களாக நான் அவரைக் காணவில்லை. அவருடன் தொலைபேசியில் உரையாடி 15 வருடங்கள் ஓடிவிட்டன. கடைசிக் கடிதம் எழுதி 10 வருடம் இருக்கும். ஒரு காலத்தில் எவ்வளவு அணுக்கமாக அவருடன் இருந்தேன் என்பதை நினைத்தபோது மனம் கனத்தது. காலை ஆறு மணி இருக்கும். ஒடுக்கமான மாடிப்படிகளில் ஏறி ஓர் அறையின் கதவைத் தள்ளுகிறான் இளைஞன். அவனுக்கு 19, 20 வயதிருக்கும். வழக்கம்போல கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. திறந்து உள்ளே சென்றால் அங்கே இரண்டு கட்டில்களில் இரண்டு பேர் தூங்குகிறார்கள். இளைஞன் அங்கேயிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்து கொள்க…

  3. அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி :: 50 ஆண்டுகளாக தமிழுக்கு உழைத்த ரஷ்ய தமிழறிஞர் மரணம்.! ரஷ்ய நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோவில் கொரோனாவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. இவர் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ் பணியாற்றி வந்தார். ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி காலமானார். அவர் உயிரிழந்த தகவலை சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் கலாசார மையத்தின் நிர்வாகிகளும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 1941-ல் பிறந்த அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் புலமை பெற்றவர் துப்யான்ஸ்கி. தமிழைச் ச…

  4. மட்டக்களப்பின்... பொக்கிஷமாக கருதப்படும், மாஸ்டர் சிவலிங்கம் காலமானார்! இலங்கையில் சிறுவர்களுக்கு கதைகூறுவதில் விசேட தன்மையினைக்கொண்டிருந்தவரும் மட்டக்களப்பின் பொக்கிஷமாகவும் கருதப்படும் மாஸ்டர் சிவலிங்கம் நேற்று (புதன்கிழமை) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லடியை சேர்ந்த இவர் சிறுவர்களுக்கு கதைகள் கூறுவதில் பிரபல்யம்பெற்றவராகவும் கலைஞராகவும் எழுத்தாளராகவும் பல்திறமைக்கலைஞராகவும் திகழ்ந்துவந்தார். காலமான மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் இறுதிக்கிரியைகள் கல்லடியில் உள்ள இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று கல்லடி உப்போடை இந்து மயானத்தில் மாலை 4.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள…

  5. நேற்று ஒக்டோபர் 31. அன்னை இந்திரா மறைந்த நாள். அவரின் இறப்பின் நினைவாக நான் முன்பு எழுதிய கவிதையை இங்கு தருகிறேன் அன்னை இந்திரா சாய்ந்தனள் இமயம் சரிந்தது இந்திரா சாய்ந்தனள் உமையவள் வீழ்ந்தனள் உண்மை சரிந்தது அலையெறியுங்கடல் அசைய மறந்தது குலமகளிர் நுதற் குங்குமம் தீய்ந்தது மலைமகள் வீழ்ந்த மலைப்பினில் இந்த உலகச் சுழற்சியும் ஓர் கணம் நின்றது காலன் அழுதனன் காதகர் செய்கையைக் காணவொட்டாது முகம் சுழித்திட்டனன் வேலையில்லாதவரால் எனக்குப் பழி வீண் பழி வீண்பழி என்றுயிர்;த்திட்டனன் நர்த்தனஞ் செய்த தென் நாடுடையோன் நடம் அர்த்தமிலாச் செயல் கண்டுடன் நின்றது இத்தரை ஓர் கணம் ஏங்கிக் குலுங்கிட மெய்த்தவத்தோர் தம் தியானங் குழம்பினர் பெண்மையர் செய்த பழியது நான்மறை உண்மை உரைக்கும் ஒளியை மற…

    • 0 replies
    • 876 views
  6. திரு. கதிர்காமர் பாலசுந்தரம் (யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஓய்வுநிலை அதிபர், எழுத்தாளர் ,சமூக ஆர்வலர் , இலக்கியவாளர்) யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், வீமன்காமம், கொழும்பு, புறூனை, லண்டன் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமர் பாலசுந்தரம் அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர்-வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும், Dr. கயல்விழி (கீத்தா), யாழ்கோவன் (தீபன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், யுசிலானந்தன், சந்திமா ஆகியோரின் அன்பு மாமனாரும், Dr. யவ்வனா, மிதுசனா (ஆசிர…

  7. தலைவர் பிரபாகரனின் நெருங்கிய நண்பர் காலமானார்! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நெருங்கி நண்பரும் அவ்வமைப்பின் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கான பொறுப்பதிகாரியுமாக விளங்கிய பிறைசூடி காலமானார். யாழ்ப்பாணம், வடமராட்சியை பிறப்பிடமாக கொண்ட இவர், உடல் நலக் குறைவின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் காலமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர். இவர் அரசதுறையில் சேவையாற்றிய வேளையில் இலங்கையில் தனிச்சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டு, தமிழ் அரச ஊழியர்கள் அனைவரும் சிங்களத்தை கற்க வேண்டியது அவசியமென வலியுறுத்தப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை துறந்திறந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது. பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புக…

  8. மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் காலமானார் நெல்லை Published : 10 May 2019 10:29 IST Updated : 10 May 2019 10:30 IST சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் உடல்நலக் குறைவால் திருநெல்வேலியில் இன்று காலமானார். அவருக்கு வயது 74. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் என்ற ஊரில் 1944-ம் ஆண்டு தோப்பில் முஹம்மது மீரான் பிறந்தார். நாவல் மொழி, கதை சொல்லும் விதம், வடிவ நேர்த்தி என படைப்பில் தனித்துவம் கொண்டவர். கடற்புர இஸ்லாம் சமூகத்தின் அகவுலகை முதன்முறையாகப் படைப்பாக்கிய முன்னோடி ஆளுமை தோப்பில் முஹம்மது மீரான் என்றால் அது மிகையாகாது. தமிழ் இஸ்லாமியப் படைப்பாளிகளுள் முக்கியமானவராகக் க…

    • 1 reply
    • 855 views
  9. பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய் ரா.கிரிதரன் முதல் முறை பாடகர் P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களைப் பார்த்தபோது சட்டைப் பையில் அவர் வைத்திருந்த பலவிதமான வண்ணப் பேனாக்கள் முதலில் ஈர்த்தன. சென்னை உட்லாண்ட்ஸ் ட்ரைவ் இன் ஹோட்டலில் அவர் உட்கார்ந்திருந்த மேஜைக்கு இரண்டு மூன்று மேஜைகள் தாண்டி நான் உட்கார்ந்திருந்தேன். தூரத்திலிருந்து பார்த்ததும் அவர்தானோ என சந்தேகம் இருந்ததால் அவரைப் பார்த்தபடி காலியாக இருந்த சீட்டைத் தேடி உட்கார்ந்திருந்தேன். அப்போது அவர் அடிக்கடி அங்கே வருவார் என்பதோ, அடுத்தஇரண்டு வருடங்களில் பல முறை பார்க்கப்போகிறேன் என்பதோ உணராதிருந்தேன். ஒரு பிரபலத்தை திடீரெனப் பொது இடத்தில் சந்தித்தால் வரும் பதட்டம் இருந்தது. என்னுடன் வந்த வடக்கத்திய நண்பருக்கு சந்தேகமாகவே இருந…

  10. வடபோர் முனையில் துப்பாக்கி மோதல் யாழ் முகமாலை வடபோர் முனையில் சிறிலங்கா இன்று அதிகாலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது. இத் தாக்குதலில் இரு உடலங்களையும், ரி-56 ரக துப்பாக்கி ஒன்றையும், பூகோள நிலைகாட்டி ஒன்றையும் தாம் கைப்பற்றியதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எதுவித தகவலும் இதுதொடர்பில் வெளியாகவில்லை http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 0 replies
    • 848 views
  11. தொலைக்காட்சி வரலாற்றில் பல முதலாவதுகளைக் கண்ட கமலா தம்பிராஜா மறைவு! *இலங்கையின் முதலாவது தொலைக்காட்சித் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் *இலங்கையின் முதலாவது பெண் தொலைக்காட்சித் தமிழ்ச் செய்திகள் பெண் வாசிப்பாளர் *இலங்கையின் முதலாவது – தமிழ்த் தொலைக்காடசி நிகழ்ச்சிகள் -பெண் தயாரிப்பாளர் *இலங்கையின் முதலாவது தமிழ் சிறுவர் நிகழ்ச்சித் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் *முதலாவது : திரைப்படத்தில் நடித்த மின் ஊடகப் பெண் ஊடகவியலாளர் *முதலாவது: அச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்தில் தயாரிப்பாளராக வந்த பெண் ஊடகர் *முதலாவது: அச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்திற்…

  12. நாளையுடன் (29-April-2009) டி.சிவராம் அண்ணா கொல்லப் பட்டு நான்கு வருடங்கள் முடிவடைகின்றன. மிகச் சிறந்த இராணுவ பத்தி எழுத்தாளராகவும், தமிழ் தேசியம் தொடர்பாக பல பங்களிப்பை ஆற்றியவருமான டி.சி யின் இழப்பு ஏற்படுத்திய வெற்றிடம் (vacuum) இன்னும் நிரப்பப் படாமல் எம் சமூகத்தில் இருப்பது வேதனையான விடயம். 70 களில் சிங்கள இனவாதம் யாழ்ப்பாணத்தில் நூல் நிலையம் எரித்து ஆரம்பித்து வைத்த 'தமிழ் புத்திஜீவிகளை, தமிழ் புலமைசார் தளத்தினை அழிக்கும் படலம்' குமார் பொன்னம்பலம் அவர்களின் கொலையுடன் மீண்டும் 2000 களில் புத்துயிர்ப்பு பெற்று டி.சிவராம் அண்ணாவையும் காவு கொண்டு இன்று பலரை தினம் தினம் கொன்று கொண்டு வருகின்றது. கிழக்கு பல்கலைகழக உபவேந்தர், விரிவுரையாளர்கள் என நீளும் இந்த பட்ட…

  13. Published By: NANTHINI 02 AUG, 2023 | 10:46 AM மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் தனது 75ஆவது வயதில் காலமானார். இலண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் விமல் சொக்கநாதன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர், தான் எழுதிய 'லண்டனிலிருந்து விமல்' என்ற நூலை அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டிருந்தார். அதன் பின்னர், உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீதின் 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலின் அறிமுக விழா கொழும்பில் நடைபெற்றபோது, அந்நிகழ்வினை விமல் சொக்கநாதன் தலைமையேற்று நடத்தியதோடு, நூல் வெளியீட்டிலும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. …

  14. வீரகேசரி, மித்திரன் போன்ற பத்திரிகைகளின் செய்தியாளர்களில் ஒருவரும், T.R.T, I.B.C மற்றும் கனேடிய தமிழ் வானொலிகளில் செய்திகள் வாசிப்பாளரும், மனித உரிமைப் பேரவை அங்கத்தவருள் ஒருவரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சாத்வீக வழிகளில் பெரும் பங்காற்றியும் வந்த விஜயரத்தினம் வரதராஜா (வீ ஆர் வரதராஜா) அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று யேர்மனியில் காலமானார். தற்போது சமகால நிகழ்வுகள்பற்றி எழுதிவரும் இவரது இழப்பு ஊடகத்துறைக்கும் ஒரு பேரிழப்பாகும். அன்னாருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள்!!

  15. இயற்கை எய்தினார் மிருதங்க பூபதி அவுஸ்திரேலியாவில் மிருதங்க பூபதி, ஞானச்சுடரொளி, கலாபூஷணம், யாழ்ப்பாணம் ஸ்ரீ ஆறுமுகம்பிள்ளை சந்தானகிருஷ்ணன் காலமானார். எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த வல்லமை படைத்த மிருதங்க வாத்தியக் கலைஞர் ஸ்ரீ ஆ.சந்தானகிருஷ்ணன் அவர்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இயற்கை எய்தினார். ஈழமணி திருநாட்டின் யாழ்ப்பாணம் மூளாய் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தன் தந்தையாரான ஸ்ரீ ஆ.வி. ஆறுமுகம்பிள்ளையிடம் குருகுல முறைப்படி கல்வி கற்றவர். அமரர்களான இசை மேதைகள் வலங்கைமான் ஸ்ரீ ஏ.சண்முகசுந்தரம்பிள்ளையும், ஸ்ரீ ஏ.பாலகிருஷ்ணனும் (மூளாய்) இவர்களது சகோதரர்கள் ஆவார்கள். காலம் சென்ற சந்தானகிருஷ்ணன் ஓய்வுபெற…

  16. சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் காலமானார் சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அன்னார் தனது 65 ஆவது வயதில் நேற்று(செவ்வாய்கிழமை) காலமானார். இலங்கையின் தமிழ் ஊடகத்துறையில் நடுநிலை செய்தியாளராகவும், சர்வதேச செய்தி அறிக்கையிடலின் சிறப்புத் தேர்ச்சி பெற்றவராகவும் அன்னார் அளப்பரிய பங்காற்றியுள்ளார். பல்வேறு தமிழ் பத்திரிகைகளில் சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் எழுதிய கட்டுரைகள் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன. http://athavannews.com/சிரேஷ்ட-ஊடகவியலாளர்-நல்ல/

  17. புகழ்பூத்த பொறியியல் பேராசிரியர் எஸ்.மஹாலிங்கம் யாழ்ப்பாணத்தில் காலமானார்:- "தனது திறமையால் தனக்கு கிடைக்க இருந்த பெரும் அன்பளிப்பை ஜெற் இன்ஜினாக வாங்கி தனது பல்கலைக்கழகத்திற்கு வழங்கிய மாமேதை" குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- முன்னணி பொறியியலாளரும், தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியருமான மஹாலிங்கம் நேற்று காலை யாழ்ப்பாண வைத்தியசாலையில் காலமானார். எஸ்.மஹாலிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறிமுறைமை பொறியியற் பீடத்தின் பேராசிரியராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மஹாலிங்கம் லண்டன் பல்கலைக் கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். 1970களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக அவர் கடமையாற்றத் தொடங்கினார். யாழ்ப்பாணம் அ…

  18. அஞ்சலி: மேலாண்மை பொன்னுச்சாமி ஜெயமோகன் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களை நான் 1992ல் திருவண்ணாமலையில் பவா செல்லத்துரையின் இல்லத்தில் சந்தித்தேன். அன்று திருவண்ணாமலையில் நடந்துகொண்டிருந்த கலையிலக்கிய இரவு இடதுசாரிகளின் திருவிழா. அதில் என்னுடைய ’திசைகளின் நடுவே’ என்னும் தொகுதி வெளியிடப்பட்டது. அவ்விழாவை ஒட்டி நிகழ்ந்த கருத்தரங்கில் பேசுவதற்காக மேலாண்மை பொன்னுச்சாமி வந்திருந்தார். மிக எளிமையான தோற்றம். மேலாண்மறைநாடு என்னும் சிற்றூரில் மளிகைக்கடை வைத்திருந்தார். மளிகைக்கடைக்காரருக்குரிய அனைத்துமே அவரிடம் அமைந்திருந்தன. அனைவரிடமும் பாந்தமான சிரிப்பு. நட்புத்தோரணை. எதையும் உடனே விலைவிசாரித்துக்கொள்ளும் இயல்பு. எல்லாவற்றையும் லௌகீகமாக மட்டுமே பார்க்கும் பார்வை.…

  19. சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்.. சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் அதிபராக இரண்டு முறை பதவி வகித்தவரும் தமிழருமான எஸ்.ஆர்.நாதன் (வயது 92) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சிங்கப்பூர் அதிபராக இரண்டு முறை பதவி வகித்த 92 வயதான நாதன், தமிழரான இவரது இயற்பெயர் செல்லப்பன். இவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதையடுத்து, அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர…

  20. பிரிகேடியர் தீபன் மற்றும் லெப். கேணல் கில்மன் ஆகிய மாவீரர்களின் தந்தையார் சாவடைந்தார்! AdminDecember 9, 2022 தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் லெப். கேணல் கில்மன் அவர்களின் தந்தை கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் நேற்று (08.12.2022) காலமானார். யாழ்.தென்மராட்சி, கொடிகாமம் வரணிப் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட அவர் சுகயீனம் காரணமாக நேற்றுக் காலமானார். http://www.errimalai.com/?p=79992

  21. திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர், கலாநிதி மரியசேவியர் அடிகளார் காலமானார். April 2, 2021 திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர், கலாநிதி மரியசேவியர் அடிகளார் தனது 82 அவது வயதில் காலமானார். இளவாலையைச் சேர்ந்த அவர் ஆரம்பக் கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் அதன் பின்னர் சென் ஹென்றிஸ் கல்லூரியிலும் கற்றார். இவர் தன் வாழ்வைக் குருத்துவப் பணியில் அர்ப்பணிக்கும் பொருட்டு 1952 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மருதனார் குருமடத்தில் சேர்ந்து சென் பற்றிக்ஸ் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1956ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி.பரீட்சையில் சித்தியடைந்து, குருத்துவ மேல் நிலைப்படிப்பைக் கண்டி அம்பிட்டிய குருமடத்தில் தொடர்ந்தார். இவர் 1958 ஆம் ஆண்டு இசையியலில் உயர…

  22. சென்னை: எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான ரா.கி.ரங்கராஜன் சென்னையில் நேற்று காலமானார். வரலாற்றுப் புதினங்கள், மொழி பெயர்ப்புகள், கிரைம் கதைகள், கட்டுரைகள் என பல படைப்புகளைப் படைத்தவர் ரா.கி.ரங்கராஜன். 1947 முதல் சுமார் 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார். குமுதம் இதழில் அரசு - என்ற பெயரில் கேள்வி பதில் எழுதியவர்களில் 'ர' என்ற நடு எழுத்துக்குச் சொந்தக்காரர் ரா.கி.ரங்கராஜன். (மற்ற இருவர் அண்ணாமலை, ஜ.ரா.சுந்தரேசன் ஆகியோர்). சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் என்ற புனைபெயர்களில் பல கட்டுரைகளை எழுதியவர். 1927ல் கும்பகோணத்தில் ரங்கராஜன் பிறந்தார். சக்தி, காலச்சக்கரம், கல்கண்டு, குமுதம் என பத்திரிகை அனுபவம் பெற்றவர். இவருட…

  23. பிரபல இலங்கை ஒலிபரப்பாளர் பொன்மணி குலசிங்கம் காலமானார் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையின் முன்னாள் இயக்குனர் பொன்மணி குலசிங்கம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ணில் காலமானார். பொன்மணி குலசிங்கம் நான்கு பிள்ளைகளின் தாயான அவருக்கு வயது 88. இசைப் பட்டதாரியான இவர், தனது பதினான்காவது வயதிலிருந்து இசைத் திறமையைக் காட்டும் வானொலிப் பாடகியாக விளங்கினார். 1956 ஆம் ஆண்டு சிறுவர் மற்றும் மகளிர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வானொலியில் சேர்ந்து கொண்ட இவர், படிப்படியாக உயர்ந்து இசைக் கட்டுப்பாட்டாளர், மேலதிக இயக்குனர், இயக்குனர் என்ற நிலையை எட்டியுள்ளார். பல முன்னணி அறிவிப்பாளர்கள் மற்றும் வானொலி தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்த பெருமை இவர…

  24. தமிழர்களின் வாழ்வில் மறக்கமுடியாத வைகாசி மாதம் -2009 வன்னிப்போரில் உயிர்துறந்த அத்தனை உறவுகளிற்கும் எனது அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றேன். அவரவர்களின் நாடுகளில் நடைபெறுகின்ற அஞ்சலி நிகர்வுகளில் பங்கு கொள்வோம் வாரீர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.