Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் காலமானார் நெல்லை Published : 10 May 2019 10:29 IST Updated : 10 May 2019 10:30 IST சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் உடல்நலக் குறைவால் திருநெல்வேலியில் இன்று காலமானார். அவருக்கு வயது 74. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் என்ற ஊரில் 1944-ம் ஆண்டு தோப்பில் முஹம்மது மீரான் பிறந்தார். நாவல் மொழி, கதை சொல்லும் விதம், வடிவ நேர்த்தி என படைப்பில் தனித்துவம் கொண்டவர். கடற்புர இஸ்லாம் சமூகத்தின் அகவுலகை முதன்முறையாகப் படைப்பாக்கிய முன்னோடி ஆளுமை தோப்பில் முஹம்மது மீரான் என்றால் அது மிகையாகாது. தமிழ் இஸ்லாமியப் படைப்பாளிகளுள் முக்கியமானவராகக் க…

    • 1 reply
    • 854 views
  2. பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. மும்பையை சேர்ந்த ‛பாலிவுட்' பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். அவரது மறைவால் திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியா…

  3. என் உடன்பிறவா சகோதரனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!

  4. 29 DEC, 2024 | 11:11 AM ஈழத்தின் மூத்த எழுத்தாளர், படைப்பாளி நா. யோகேந்திரநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை காலமானார். கனடாவில் வசித்துவந்த இவர், யாழ்ப்பாணம் கரம்பொன் தெற்குப் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். யோகேந்திரநாதன் எழுதிய “34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு” நாவல் அண்மையில் வெளியாகி மிகவும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202436

  5. யாழ் கள உறவு வாதவூரனின் தந்தையார் அண்மையில் தாயகத்தில் காலமானார். தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் வாதவூரன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  6. இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக உழைத்தவர் இரா.சம்மந்தன்; ச.குகதாசன் எம்.பி 06 JUL, 2025 | 02:48 PM இலங்கையில் இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக பாடுபட்டு உழைத்தவரே மறைந்த தலைவர் இராஜவரோதயம் சம்மந்தன் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார். மறைந்த பெருந் தலைவர் இரா.சம்மந்தனின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (06)இடம் பெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 1976ம் ஆண்டு முதல் 2023 வரை மிகவும் நெருக்கமாக அவருடன் பணியாற்றியுள்ளேன் 1933 பெப்ரவரி 05ல் இராஜவரோதயனுக்கு இரண்டாவது மகனாக பிறந்த இரா.சம்மந்…

  7. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகளும், தழல் இதழின் ஆசிரியருமான அம்மா தேன்மொழி அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகளும், தழல் இதழின் ஆசிரியருமான அம்மா தேன்மொழி அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம் | நாம் தமிழர் கட்சி தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதே தனது அருந்தவப்பயனென வாழ்ந்து மறைந்திட்ட தமிழ்த் தேசியத் தந்தை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் அன்பு மகளும், சொல்லாய்வறிஞர் ஐயா ப.அருளியார் அவர்களின் இணையரும் தழல் இதழின் ஆசிரியருமான பெருமதிப்பிற்குரிய அம்மா ‘தழல்’ தேன்மொழி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மன வேதனை…

  8. யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவானந்தன் அவர்கள் 22-06-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

    • 3 replies
    • 739 views
  9. மெல்பேர்னில் வெள்ளிக்கிழமை(29.05.2020) காலமான தமிழ் சமூக செயற்பாட்டாளர் சபேசன் சண்முகம் குறித்த நினைவுப் பகிர்வை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்வில் பங்கேற்றோர் மெல்பேர்னிலிருந்து Dr.நடேசன் மற்றும் சிட்னியிலிருந்து A.ரஜீவன் ஆகியோர். https://www.sbs.com.au/language/tamil/audio/a-eulogy-for-sabesan-shanmugam

    • 10 replies
    • 1.6k views
  10. புலிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் சுரேந்திரன் சாவடைந்தார்! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் சுகயீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) தமிழகத்தில் சாவடைந்தார். நடராஜா சுரேந்திரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண வட்டவைக்கு உட்பட்ட பகுதிகளில் ”புலிகளின் குரல்” என்று அழைக்கப்பட்டு பின்னர் ”உறுமல்” என்று பெயர்மாற்றம் பெற்று யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திகளில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கரும்பலகைகளில், அன்றைய யுத்தகாலச் செய்திகளை எழுதும் பொறுப்பை ஏற்று கடமையாற்றியவர். இதேவேளை இவரது ஆங்கில புலமையையும், எழுத்தாற்…

    • 6 replies
    • 1.4k views
  11. தமிழீழத்தில் புகழ்பூத்த கவிஞர் நாவண்ணன் நேற்றிரவு காலமானார். புலிகளின் குரல் ஊடாக பெருமளவான படைப்புக்களை வெளிப்படுத்திய அவர், தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால், இரண்டு தடவை தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். நேற்றிரவு கவிஞர் நாவண்ணன் சாவடைந்தாலும் அவர் தந்து சென்ற படைப்புக்கள் சாகா வரம் பெற்றவை. புரட்சி கீதம் பாடிய புரட்சி கவிஞனுக்கு புரட்சிகர வணக்கங்கள்........ தகவல்:புலிகளின் குரல்

    • 24 replies
    • 4.4k views
  12. 2) யாழ் மருத்துவமனை: 1987 Oct21- Oct.... நன்றி: தோழர் ஈழவன்85 தமிழ்நாடு ரொக்..... கிந்திய அமைதிபடையால் கொல்ல பட்ட அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள் ...

  13. பிரபல மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்! சிரேஷ்ட ஊடகவியலாளரும்,ஞாயிறு தினக்குரல், தினக்குரல் இணையம் ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியருமான இராஜநாயகம் பாரதிஉடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். கடந்த சில வாரங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று யாழில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினக்குரல்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றய அன்னார் அரசியல் ஆய்வு மற்றும் கலை செயற்பாடுகளில் மிகுந்த ஆளுமை உள்ளவராக காணப்பட்டிருந்தார். மேலும் அண்மையில் வீரகேசரியின் சிரேஷ்ட ஊடகவியலாளராக யாழ் காரியாலயத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் கடமை ஆற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அன்னாரது…

  14. கரும்புலிகள் தினம் ஜூலை 5 2007 கரும்புலி கப்டன் மில்லர் 5.7.87 அன்று நெல்லியடி மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையினரின் தளத்தினுள் வீரகாவியமானார்.அன்றிலிருந்த? கரும்புலிகள் என்னும் உயிராயுதங்கள் எம்மண்னில் விளையத்தொடங்கின கிட்டத்தட்ட 300 வரையிலான கரும்புலிகளும் எண்ணிக்கை தெரியாத முகம் காட்டாத கரும்புலிகளும் வீரகாவியமாகிவிட்டனர் தமிழீழ அன்னைகாக வீரகாவியமான அனைத்து கரும்புலி மாவீரர்களுக்கும் எம் வீரவணக்கம் முதல் கரும்புலி கப்டன் மில்லர்[/b] முதல் கடற்கரும்புலிகள் முதல் பெண் கரும்புலி இந்தியா சிவகாசி மண்னை சேர்ந்த கரும்புலி மாவீரன்

  15. 5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் 1000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலி கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி இன்றுடன் 2000 ஆயிரம் நாட்கள் நிறைவு. ஜ செவ்வாய்கிழமைஇ 14 ஆகஸ்ட் 2007 ஸ ஜ றஞ்சன் ஸ 5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் 1000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலி கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி இன்றுடன் 2000 ஆயிரம் நாட்கள் நிறைவடைகிறது. பல ஆயிரம் பொதுமக்கள் இன்றும் காணாமல் போனவர்களாகவே இலங்கை இருக்கும் நிலையில் உடன்படிக்கையை நம்பிய ஈழத்தமிழர்கள் இண்றும் அகதிகளாக நிர்கதியாகவே இருக்கும் நிலையில் உடன்படிக்கையின் நடுநிலையாளர்களான உலக சமூகம் தமிழ் மக்களின் அவலத்தில் வேடிக்கை பார்க்கின்றது. உடன்படிக்கை கைச்சாத்திடபட்டதை தொடர்ந்த…

    • 0 replies
    • 1.6k views
  16. கவிஞர் திருமாவளவன் இன்று (05.10.2015) காலை காலமானார் என்ற செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம். கவிஞர் திருமாவளவனுக்கு எங்கள் நெஞ்சார்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  17. என் ப்ரிய வெ.சா… சேதுபதி அருணாசலம் இன்று காலை யதேச்சையாக ஃபேஸ்புக்குக்குள் நுழைந்தால் முதலில் கண்ணிற்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் ப்ரொஃபைல் படமாக வெ.சா இருந்தார். சடாரென்று மனம் ஒரு கணம் துணுக்குற்றது. “கடவுளே, ‘அந்த’ செய்தியாக இருக்கக்கூடாதே” என்று வேண்டிக்கொண்டே பார்த்தேன். ‘அதே’ செய்திதான். இன்று வெ.சா இல்லை. ஒரு நொடி தரையில் கால் பாவவில்லை. வெ.சாவுக்கும் எனக்குமான உறவை வார்த்தைகளில் என்னால் எழுதிப் புரியவைத்துவிடமுடியும் என்று தோன்றவில்லை. என்னாலேயே கூட அதைச் சரியாக உள்வாங்கிப் புரிந்துகொள்ளமுடியுமா என்பது சந்தேகம்தான். இலக்கியம், எழுத்து, கலை, விமர்சனம் இதையெல்லாம் தாண்டி ஒரு ஆத்மார்த்தமான சிநேகம் அவருக்கு என் மீது இருந்தது. அதற்கு நான் தகுதியானவன்தானா என்று தெரியவ…

  18. யாழ் கழ உறவு நிலாமதி அக்காவின் சகோதரியின் கணவரின் மறைவிற்காக, நானும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  19. யாழிணைய கருத்துக்களப் பொறுப்பாளர் நிழலியின் மாமியார் காலமானார். நிழலியினதும் அவரது குடும்பத்தாரினதும் துயரில் யாழ் நாமும் பங்குகொள்கிறோம். மேலதிக விபரங்கள் பின்பு தரப்படும்.

  20. அரவம் தீண்டியதில் கடந்த திங்கட்கிழமை (30.10.06) சாவடைந்த லெப். கேணல் வரதா என்றழைக்கப்படும் ஆதியின் வீரவணக்க நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் பூவிழி தலைமை தாங்கினார். மாவீரரின் திருவுருவப்படத்திற்கு மாவீரரின் கணவர் கட்டளைத் தளபதி கேணல் பால்ராஜ் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார். கட்டளைத் தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் உறவினர் உள்ளிட்டோர் மலர்மாலை அணிவித்தனர். விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பிரிவுப் பொறுப்பாளர் யோகரத்தினம் யோகி, புலிகளின்குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன், போராளி தேவரூபி ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர். யோகரத்தினம் யோகி தனது உரையில், நீண்டகாலமாக தேச விட…

  21. யாழ் இந்துக்கல்லூரியின் ஓய்வு பெற்ற உப அதிபர் கப்டன் சோமசுந்தரம் இன்று அதிகாலை காலமானார்.

  22. அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி :: 50 ஆண்டுகளாக தமிழுக்கு உழைத்த ரஷ்ய தமிழறிஞர் மரணம்.! ரஷ்ய நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோவில் கொரோனாவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. இவர் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ் பணியாற்றி வந்தார். ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி காலமானார். அவர் உயிரிழந்த தகவலை சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் கலாசார மையத்தின் நிர்வாகிகளும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 1941-ல் பிறந்த அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் புலமை பெற்றவர் துப்யான்ஸ்கி. தமிழைச் ச…

  23. நாதஸ்வரமேதை இசைப்பேரறிஞர் சாவகச்சேரியூர் கே.எம்.பஞ்சாபிகேசன் 26.06.2015 இன்று அதிகாலை 12.20 மணியளவில் கொழும்பில் காலமாகிவிட்டார். இறக்கும் போது அவருக்கு வயது 91. அவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை சாவகச்சேரியில் நடைபெறவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இருந்து சாவகச்சேரிக்குப் பூதவுடல் எடுத்துவரப்படவுள்ளது. திங்கட்கிழமை அவரது சாவகச்சேரி சங்கத்தானையில் உள்ள வீட்டில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன. தென்மராட்சியின் இசை முகவரியாகத் திகழும் இசைப்பேரறிஞருக்கு எங்கள் இதயபூர்வமான அஞ்சலி உலகளாவிய ரீதியில் புகழடைந்த பஞ்சாபிகேசன் அவர்கள் 01.07.1924 ஆம் ஆண்டு தவில்வித்துவான் முருகப்பாபிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வராய்ப் பிறந்தார். இவரது சகோதரன் நடராஜ சு…

    • 4 replies
    • 1.1k views
  24. பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்! பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று நள்ளிரவில் காலமானார். திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. திரையுலகில் நலிந்த கலைஞர்களுக்கு உதவும் மனம் கொண்டவர். விழா நேரங்களில் வலியச் சென்று பலருக்கு உதவிகள் புரிந்தவர். இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.என்.லட்சுமி, பின்னாளில் சிறந்த குணச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.