Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள் கிரிஷாந் யாழ்ப்பாணத்தின் பக்கத்தில் ஒரு மினி நகரம் தான் திருநெல்வேலி. செல்லமாக தின்னவேலி என்று அழைப்பார்கள். இங்கே மிடில் கிளாஸ்தான் ஆதிக்கம் அதிகம். பெரும்பாலும் வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள், வங்கிகளின் மற்றும் தனியார் கம்பனிகளின் கொத்தடிமைகள் என்று நகரமே பரபரப்பாகதானிருக்கும். ஸ்பெஷலாக சொல்வதென்றால், தின்னவேலி மார்க்கெட் ரொம்ப பிரபலம். காலையிலேயே களை கட்டிவிடும். பொடி நடையாக நடந்துபோனால் பின்வருபவனவற்றை நீங்கள் பார்க்கலாம். பீடியை இழுத்து பனியில் அற்புதமாக விடும் வீபூதி பூசிய வயதான முகங்கள், கொஞ்சம் தள்ளி மரக்கறி வந்து நிற்கும் வண்டிகள், மூட்டை தூக்கும் தொழிலாளிகள், அவர்கள் எப்போதும் மூட்டையை தூக்குவதில்லை, கைப்பற்ற…

  2. படம் | கட்டுரையாளர் இலங்கையின் பண்டைய வரலாற்றைச் சொல்லும் கதைகளில் இயக்கர், நாகர் என்கிற இரு இனங்களைப் பற்றிய குறிப்பு வரும். அதாவது, இலங்கைக்கு விஜயன் இந்தியாவிலிருந்து வருகின்ற வேளையில் இங்கு சுதேச குடிமக்களாக இயக்கரும், நாகரும் வாழ்ந்தனர். அந்த இனத்திற்கு நூல் நூற்கும் தொழில் செய்யும் குவேனி தலைவியாக இருந்தாள், என்கிற கதை இலங்கை வரலாறு படித்த அனைவருக்குமே நினைவிருக்கலாம். அதில் நாகர் வழிவந்த இனத்தின் மிச்ச சொச்சங்களும், நாகர்களின் பண்பாட்டைப் பின்பற்றுகின்ற கலாசார தொடர்புகளும் உள்ள ஓரிடம் 2014 இன் பின் அரைப் பகுதியில் எப்படியிருக்கின்றது? நாகர்கோவில், யாழ்ப்பாணத்தையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் நிரந்தரமாகவே பிரித்துவைத்திருக்கும் ஏரிப் பகுதியின் ஓரத்தில் அமை…

  3. இன உறவுகளைச் சிதைத்த "சிங்களம் மட்டும் சட்டம்" இலங்கைத் தமிழர்களின் தலைவிதியையே மாற்றியமைத்த அந்த இருள் சூழ்ந்த தினத்தின் 58 ஆண்டுகள் பூர்த்தி இன்றாகும். அந்நியர் ஆட்சியின்போது ஒதுக்கி வைக்கப்படாது தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழினம் கூனிக்குறுகி நிற்கும் வகையில் அடிமைச் சாசனம் ஒன்று எழுதப்பட்ட அந்த நாளை தமிழர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள். சிங்கள இன வெறியர்கள். தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் காட்டிய இன மொழி வெறியின் பிரதிபலிப் பின் பயனாகவே சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக இருக்கும் வகையிலான சிங்களம் மட்டும் சட்டம் இலங்கை நாடாளு மன்றத்திலே 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி நிறைவேற்றி வைக்கப்பட்டது. இலங்கை அரசின் சகல கருமங்களும் சிங்கள மொழியில் மட்டு…

    • 0 replies
    • 679 views
  4. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கலந்த வணக்கங்கள்! புது வருடத்தில் புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன். யாழ் களத்தில் இப்போதெல்லாம் அதிகளவு வெட்டி ஒட்டுதலே நடைபெறுவதால் (அதைத்தான் நானும் எப்போதும் செய்து வருகின்றேன்!) களத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் புதிதாக வருபவர்களும் வந்து வாசித்துவிட்டுப் போவதுதான் அதிகமாக உள்ளது. சுயமான ஆக்கங்கள் குறைந்து கொண்டே போவதும், நீண்ட கருத்தாடல்கள் திரிகள் இல்லாமல் இருப்பதும் யாழின் மீதான ஒட்டுறவைக் குறைக்கின்றது. எனவே மீண்டும் யாழ் மீதான ஒட்டுதலை அதிகரிக்கவும், எமது ஊர் உலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தத் திரியை ஆரம்பிக்கின்றேன். பிற உறுப்பினர்களும் ஆர்வத்தோடு பங்குபற்றுவார்கள் என்ற முழுநம்பிக…

    • 103 replies
    • 24k views
  5. வெலிக்கடை சிறைக்குள் நடந்தது கலவரம் அல்ல - இனப்படுகொலையே... : ச.ச.முத்து (1983 யூலை 25,28ம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலை இனக்கொலை நினைவாக) முப்பத்தி ஒரு வருடம் கடந்து விட்டிருக்கிறது. அந்த இனப்படுகொலை மிகவும் திட்டமிட்ட முறையில் வெலிக்கடை சிறைக்குள் நிகழ்தப்பட்டு, அது மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒரு இனக்கொலை அங்கமே. ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களின் மொழியை, இலக்கியத்தை, நிலத்தை அபகரி, அழி என்று சொல்லப்பட்ட தத்துவங்களில் சொல்லப்படாத ஆனால் மறை முகமான ஒன்று அதுதான் மிகமிக முக்கியமானது. ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் போராட்ட கருத்துக்களை அதன் வீரத்தை அழித்தாலே போதும். மற்றவை எல்லாவற்றையும் இலகுவாக எதிரியால் செய்துவிட…

    • 0 replies
    • 740 views
  6. நான்இறந்த பின்பு எனது இரு கண்களையும் ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப் போகும் தமிழீழத்தை நான் அந்த இரு கண்களாலும் பார்க்க வேண்டும் அமைதி நிலவிய அந்த நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் கம்பீரமாக நின்றிருந்த அந்த இளைஞனின் குரல் அங்கு கூடியிருந்தவர்களையே அதிர வைக்கிறது. தனக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட போகிறது என்பது தெரிந்திருந்தும் இறப்பு பற்றிய கவலையோ பயமோ இன்றி இறப்பின் பின்பும் விடுதலை பெற்ற தாயகத்தைத் தன் கண்களால் காண வேண்டும் என்ற அவனின் உன்னத வேட்கை அங்கே கொழுந்துவிட்டு எரிகிறது. அவனுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பெழுதுகிறது. அவன் வெலிக்கடைச் சிறையில் தாயக விடுதலைக்காகத் தான் எழுதப் போகும் தியாக வரலாற்றைப் பதிவு செய்யும் நாளுக்காகக் காத்…

    • 0 replies
    • 845 views
  7. கடந்து போகுமா கறுப்பு ஜூலை? கிஷோர் படம் | Therepublicsquare தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் மிகுந்த கணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று நேற்றல்ல, இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பல்வேறு விதமான முறைகளில் சிறுபான்மையினமான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் அதி உச்சமே இறுதிக் கட்ட யுத்தத்தில் நடந்தேறிய சம்பவம் என பல்வேறு தரப்பாலும் கூறப்பட்டு வருகின்றது. ஆனாலும், இவ்வாறு காலத்திற்கு காலம் திட்டமிட்டு நிகழ்ந்தேறிய பல சம்பவங்களில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மறக்க நினைத்தாலும், மறையாமல் அடி மனதில் கறையாக படிந்த சம்பவம் தான் 1983 ஜூலை மாதம் நடந்தேறிய இனக்கலவரம். இவ் இனக்கலவரம் இலங்கையின் தலைநகரில் தமிழர்களின…

  8. மறக்க முடியாத கறுப்பு ஜூலை! சி.அ.யோதிலிங்கம் படம் | JDSrilanka இலங்கையில் நடைபெற்ற கலவரங்களில் 1983ஆம் ஆண்டின் கலவரம் தமிழ் மக்களின் இதயத்தில் ஆறாவடுவை ஏற்படுத்திய கலவரமாகும். இக்கலவரத்தின் பாதிப்பு இலங்கை வரலாற்றில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன் பின்பு தான் இயக்கங்கள் பெரிதாக வளர்ந்ததும், இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டதும், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் மேற்கு நாடுகளை நோக்கி ஓடியதும் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. இக் கலவரத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், வியாபார ஸ்தலங்கள் எரிக்கப்பட்டன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இருபத்தைந்து அகதி முகாம்கள் திற…

  9. ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள்... - 01 [ திங்கட்கிழமை, 26 மே 2014, 07:58 GMT ] [ புதினப் பணிமனை ] [போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளின் பின்னான தனது எண்ணங்களை யாழ்ப்பாணத்திலிருந்து பகிர்கின்றார் திருச்சிற்றம்பலம் பரந்தாமன். இந்த கட்டுரையாளர், தி. வழுதி என்ற பெயரில் எமது தளத்தில் முன்னர் கருத்துரைகள் வரைந்தவராவார்.] பிரபாகரன் இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. அவரது கோட்பாடுகளைப் பரப்பவது இங்கு எனது நோக்கமல்ல. ஏனென்றால் - இந்தக் கருத்துரையைப் படித்துவிட்டு, நான் ஒருவகையில் அவரை நினைவுகூர முற்படுவதாகக் குறைபட்டுக்கொண்டு விசாரணையாளர்கள் யாரும் எனது வீட்டுக் கதவைத் தட்டுவதை நான் விரும்பவில்லை. ஆனாலும் - நான் உண்மையைச் சொல்லியே ஆக வேண…

  10. ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட 'தரப்படுத்தல்" என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது. தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்…

    • 1 reply
    • 2.7k views
  11. தீபச்செல்வன் ஈழமும் சிங்கள தேசமும் வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் இரண்டு நாடுகளாகவே இருக்கின்றன. அந்நியர்களால் ஒன்றிணைக்கப்பட்ட இந்த தேசங்கள் இன்னமும் தனித் தனித் தேசமாகவேகாணப்படுகின்றன என்பதை அண்மையில் நடந்த நிகழ்வுகள் மீண்டும் உணர்த்தியிருக்கின்றன. இந்த இரு தேசங்களும் நிலத்தாலும் நிலத்தின் குணத்தாலும் இனத்தாலும் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. வடக்கில்பனைகளும் தெற்கில் தென்னைகளும் மாத்திரம் இந்தப் பிரிவை உணர்த்தவில்லை. இந்த நாட்டின் மக்களின் உணர்வுகளும் இரண்டாகவே பிரிந்திருக்கின்றன. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுவதுதான் இந்த தீவின் அறுபதாண்டுகாலப் பிரச்சினை. ஸ்ரீலங்காவில் நாங்கள் இர…

    • 5 replies
    • 1.7k views
  12. Glasgow வில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தை பற்றிய தமிழ் இளையோர் அமைப்பின் கருத்துக்களும் கலந்துரையாடலும். அன்று தொடக்கம் இன்று வரை இலங்கையை ஆண்டு வந்த ஜனாதிபதிகள் தமிழ் மக்களினை இனப்படுகொலை செய்வதையே முழுவேலையாக கொண்டுள்ளார்கள். மகிந்த ராஜபக்சே அதற்கு சற்றும் குறைவல்ல அதியுச்ச இனப்படுகொலைகளை அரங்கேற்றியதற்கு இவருக்கு முதலிடம். மூன்று லட்சம் தமிழ் மக்கள் வாழும் பிரித்தானியாவிற்கு எத்தனையோ முறை மஹிந்த வந்து புண்பட்டு திரும்பி சென்ற வரலாறுகள் ஏராளம். மீண்டும் ஒருமுறை ஸ்காட்லான் பகுதியில் இடம்பெற இருக்கும் விளையாட்டு போட்டியில் பங்குபெறவும் அதனை தொடக்கி வைக்கவும் இங்கு வரும் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அணைத்து தமிழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு தமிழ் இளையோர் …

    • 0 replies
    • 1k views
  13. இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ச யூலை 23 நாம் இலண்டன் (ஸ்கொட்லான் கிளாஸ்கோவிற்கு) வருகிறான். அவன் கால் இலண்டன் வானூர்தி நிலையத்தில் படக்கூடாது. அவனின் கால் பட்டால் அது தமிழினத்திற்கே கேவலமாகும். எல்லாரும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுப்பதன் ஊடாக மகிந்த ராஜபக்ச திருப்பி சிறீலங்காவுக்கு ஓடவேண்டும் என தமிழகத்திலிருந்து உங்கள் மகனாக, உங்கள் உறவாக மறவன் அவர்கள் உரிமையுடன் கோரிக்கை விடுக்கின்றார். http://www.pathivu.com/news/32258/57//d,article_full.aspx

    • 0 replies
    • 776 views
  14. http://youtu.be/F7zJhI3dxxY உள்ளத்தில் நிறைத்து வைத்திருக்கும் தாயகக் கனவே வேர் விட்டு நீளமாகவும் ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில் பதிந்துள்ளோம். எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது 'உங்களிடம் இருக்கும் தமிழீழ திரைப்படங்கள், ஒளிவீச்சு, தமிழீழ கானங்கள் மற்றும் மாவீரர் குறிப்புகள், புத்தக ஆவணச் சுவடுகள் உங்களிடம் இருக்குமாயின் அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்'. தேசக்காற்று இணையத்தளம்:- http://thesakkaatu.com/ தேசக்காற்று மின்னஞ்சல் (Email) :- thesakkaatu@gmail.com தேசக்காற்று முகநூல் (Facebook) :- https://www.facebook.com/Thesakkaatu?... தேசக்காற்று டிவிட்டர் (Twitter) :- ht…

  15. வடக்கு பௌத்தம் யாருடையது? ஜெரா படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews வடக்கில் பௌத்தம் இருந்தது என்பதற்கு பலமான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அதற்கான தொல்லியல் தடயங்கள் உண்டு. இப்போது கிளிநொச்சியிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில் உண்டு. அரச மரத்தையும், சாந்த முனியையும் பார்த்தவுடனேயே அதை ஆக்கிரமிப்பின் அடையாளமாக நோக்கும் மனநிலையை சிங்கள பௌத்த அரசியல் நம்மில் திணித்துவிட்டிருக்கிறது. அரச மரத்தின் மருத்துவத் தன்மைகள் குறித்து பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சொல்லாதனவற்றையா காலத்தால் பிந்திவந்த பௌத்தம் போதித்திருக்கிறது? எவ்வளவு முக்கியமான தொல்பொருள் தடயமாக…

    • 1 reply
    • 917 views
  16. குழந்தைகளையாவது ஊருக்கு விடுங்கோ… ஜெரா படம் | கட்டுரையாளர் யாழ்ப்பாணத்து வெயில் தலையைப் பிளக்கிறது. ஆனாலும் அந்தப் பனங்கூடலுக்குள் விளையாடிக் கொண்டும், நுங்கு பிதுக்கி சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும் குழந்தைகளுக்கு வெயில் மீதான பயம் எல்லாம் கிடையாது. ஏனெனில், அவர்களின் பிறப்பே வெயிலில்தான் நிகழ்ந்திருக்கிறது. நெருக்கமான கூடுகளை அதாவது, வீடுகளை (தகரம், கிடுகு, பனையோலை, பழைய சேலை, பெட்சீற், பிளாஸ்ரிக் தகடுகள், காட்போர்ட் மட்டை, சிப்போர்ட் என பல கலவைகளால் அந்தக் கூடுகளின் கூரைகளும், சுவர்களும் காப்பிடப்பட்டிருக்கின்றன) அடையும் சின்னச் சின்ன சந்துபொந்துகளெல்லாம் அவர்களின் விளையாட்டுப் பொருட்கள். எப்போதோ நடந்த கோயில் திருவிழாவில் அப்பா வாங்கிக் கொடுத்த விளையாட்டுக் கா…

  17. எம் மண்ணின் உலக சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம். ************************************************ ஒன்பது கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த சாதனையாளர் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன் வல்வையின் விவே...கானந்தன் செல்வகுமார் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1971 ஆம் ஆண்டில் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகே…

    • 0 replies
    • 827 views
  18. தாயகத்தின் தாய் – ச.பொட்டு அம்மா எமக்கு அறிமுகமான அந்தநாள் இப்போது நினைவில் இல்லை. அது மணிமனைக் கோவைகளை பரிசீலித்தே அறிய வேண்டியதான ஒன்றாக எம் நினைவுப்பதிவுகளில் இருந்து மறந்து போய்விட்டது. எதொவொரு இலக்கத்தாலும் நினைவில் வைத்திருக்க வாகாகத்தெரிவு செய்யப்பட்ட வழமையல்லாத ஏதோவொருயெராலும், கறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அம்மாவின் கோவையும்பொல் ஒன்றாகத்தான் தூங்கும். ஆனால் அம்மா எல்லோரையும் போன்ரவரல்ல. என்றென்றும் மறக்கப்பட முடியாதவராக அந்த அம்மா எம் நிணைவுப்பதிவுகளில்…. கரீர் என்ற கறுப்பு நிறமும், மெலிவான மலர்ந்த முகமும் சளசள வென்ற ஒயாத கதையுமாய்… நகைச்சவை உணர்வுமிக்க ஒரு புலனாய்வாளனால் தமிழகத்து சிரிப்பு நடிகைகளது பெயரில் ஒன்றை புனைபெயராக அம்மாவில் வெளிப் பார்வைக்குத் …

  19. தமிழரின் அறிவுப் புதையலான யாழ்.பொது நூலகம் இனவெறிபிடித்த காடையர்களினால் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போய்விட்டது. யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருத…

  20. நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கமாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்? முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப் பொறுத்தவரை இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கை இடம்பெறப் போகிறது என்பதை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்தப் படுகொலைக் களத்தின் ஆர்வமிக்க …

    • 4 replies
    • 2k views
  21. இலங்கைத் தீவாகப் பரிணமிக்காத காலத்தே... சு.கி. ஜெயகரன் பனியுகங்களின் போதும், கற் காலத்தவர் வாழ்ந்த காலத்திலேயும், ஏழாயிரம் ஆண்டுகட்கு முன் வரையிலும், இலங்கை அன்று இந்தியத் தீபகற்பத்தின் தென் எல்லையாக இருந்தது. சிறுசிறு கூட்டங்களாக வாழ்ந்த ஆதிமனிதயினத்தவர், அன்றிருந்த தென்னிந்திய - இலங்கை ஒன்றுபட்டிருந்த நிலப்பரப்பில் பரந்திருந்த சதுப்புநிலக்காடுகள், புல்வெளிகள், மணல்வெளிகள் எங்கும் திரிந்து, வேட்டையாடியும், உணவு தேடியும் அவ்வப்போது அங்கு தங்கியும் வாழ்ந்திருந்தனர். கடைசிப் பனியுகத்திற்குப்பின் கடல் மட்டம் உயர்ந்து, இலங்கை தலைநிலத்திலிருந்து அறுபட்டுத் தீவாக உருவாகியது. அதற்குப்பின், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, சிறுசிறு அலைகளாக, சிறுசிறு குழுக்களாக தரை வழியாக வந்து க…

    • 1 reply
    • 1.7k views
  22. போதி மரப் புத்தனே..! உன் ஞானம் எங்கே..?? பார்த்தாயா உன் புத்திரரை...??? சிங்கம் வழி வந்த வம்சம்... அசிங்கம் செய்யும் மிருகங்களா? ஐந்தறிவு மிருகங்களுக்குக் கூட கொஞ்சமேனும் இரக்கம் இருக்குமே..! உனைத் துதிக்கும் இனத்திடம் எதுவும் இல்லையே புத்தா...!!! நீ போதித்த பெளத்த தர்மம் இதுதானோ? எத்தனை இசைப்பிரியாக்களில் உன் இச்சை அடங்கும்...? எத்தனை கிருஷாந்திகளில் உன்னாசை முடங்கும்...?? கூறு புத்தா... கூறு!!! எங்கள் அப்பாவிப் பெண்களை... ஏன் கூறுபோட்டாய் கூறு?! ஓ... புத்தனே...! உன் விழிகளை அகலத் திற...! உலகமே பார்க்கும்... உன் புதல்வர்கள் செய்த மகா கொடுமைகளைப் பார்!!! கண்களை மூடிக்கொண்டு... தியானமென்று நடிக்காதே...! தலையில் கைவைத்து... ஆனந்…

  23. நான்கு வருடங்களுக்கு முன்னர் நாம் பார்த்தது போலவே இன்னும் இருக்கிறது அளிக்கம்பை கிராமம். ஆனாலும், ஆங்காங்கே சிறிது சிறிதாக சில மாற்றங்கள். இருந்த போதும், அளிக்கம்பை மக்களின் வாழ்க்கை எப்போதும் போல் வரண்டே கிடக்கிறது. அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச சபை பிரிவுக்குட்பட்டது அளிக்கம்பைக் கிராமம். வனக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 306 குடும்பங்கள் வாழ்ந்து வரும் இந்தக் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளில் அதிகமாவை இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதற்கு அவர்களின் வாழ்க்கை சான்றாக இருக்கிறது. அளிக்கம்பை பிரதேசத்தில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், சில ‘தார்’ வீதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ஆனாலும், முறையான பராமரிப்புகள் இல்லாமை காரணமாக அந்த வீதிகள…

    • 2 replies
    • 2.1k views
  24. ஈழப்புயல்கள் வழங்கும் பாடல் : முள்ளிவாய்க்கால் சொல்லிய சேதி ... குரல் : நாதன் (நெதர்லாந்து) பாடல் வரிகள் : ஈழப்பிரியன் (ஜேர்மனி) இசை : சேகர் - தமிழ்சூரியன் (நெதர்லாந்து) Eelappuyalkal Presents Song: Mullivaaikkaal Solliya Sethi... Vocal : Nathan (Netharland) Lyrics:Eelappriyan (Germeny) Music:Sekar - Tamilsooriyan (Netharland) https://www.youtube.com/watch?v=RzZNccVNBHc

    • 2 replies
    • 907 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.