Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கூட்டமைப்புக்கு கைகொடுக்குமா ஐ.தே.க? கே. சஞ்சயன் / 2018 டிசெம்பர் 14 வெள்ளிக்கிழமை, மு.ப. 04:38 Comments - 0 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென நிரூபிக்கும் வகையில், நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்த விவகாரமும், அதுசார்ந்து நடத்தப்பட்ட பேச்சுகளும் இணக்கப்பாடுகளும், இப்போது பரவலாக விவாதிக்கப்படும் விடயமாக மாறியிருக்கிறது. இதை அரசியலாக்குவதில், கூட்டமைப்பின் போட்டியாளர்களும், ஐ.தே.கவின் அரசியல் எதிரிகளும், முனைப்புக் காட்டி வருவதால், இந்த விவகாரம், இன்னும் ச…

  2. இரண்டு இனங்களையும் சமாளிக்கிறார் ரணில் ? நிலாந்தன். குருந்தூர் மலையில் பூசைக்குள் நுழைந்த பிக்குவை அங்கிருந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும் பக்தர்களும் எதிர்க்கும் காணொளியொன்று வெளிவந்திருக்கிறது. போலீஸ்காரர்கள் அந்த பௌத்த மத குருவை சாந்தமாக,பணிவாக அரவணைத்துக் கையாளுகிறார்கள். ஆனால் அங்கிருந்த தமிழர்கள் அவரை ஒரு வேண்டாத விருந்தாளியாக,பூசையைக் குழப்ப வந்தவராகக் கருதி அங்கிருந்து அகற்றுகிறார்கள். இவைபோன்ற சில காட்சிகள் போதும், மேர்வின் டி சில்வா,சரத் வீரசேகர,உதய கமன் பில,விமல் வீரவன்ச போன்றவர்கள் தென்னிலங்கையில் இன முரண்பாடுகளை ஊக்கிவிப்பதற்கு. இவையாவும் அரசாங்கத்துக்கு தெரியாமல் நடக்கவில்லை. அல்லது எதிர்பாராமல் நடக்கவும் இல்லை.அரசாங்கத்துக்கு எல்லாமே தெரியும்.…

  3. குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன? கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ‘த நேசன் நாழிதழின் முன்னாள் துணை ஆசிரியர் கீத் நொயர் வழக்கு மற்றும் ‘த சண்டே லீடர் வாரஇதழின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை வழக்கு விசாரணைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறையால் கல்கிசை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய சாட்சியமானது, ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முன்னர் சேகரிக்கப்பட்டது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். கடந்த வாரம் டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய போதே கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார். தமது ஆட்சியின் போது இவ்விரு வழக்கு விசாரணைகள் தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகள் மற்றும…

  4. தமிழ்த்தேசியச் சபைக் கனவு நனவாகுமா? இலங்கேஸ்வரன் கடந்த 11ம் திகதி தமிழ் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கட்சிகளுக்கிடையே கலந்துரையாடல் ஒன்று மன்னாரில் இடம்பெற்றது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் இதற்கு தலைமை வகித்தார். கலந்துரையாடல் இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது. முதலாவது அமர்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவுசெய்வது தொடர்பான விடயத்தையும், வடமாகாணசபைத் தேர்தலில் ஒருமித்துப் போட்டியிடுவது என்பதையும் பற்றியது. இரண்டாவது அமர்வு கட்சிகளுக்கிடையே ஓர் இணக்கப்பாட்டை உருவாக்கி பொதுவேலைத் திட்டம், பொது அமைப்பு என்பவற்றை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டிருந்தது. ஆனாலும் முதலாவது அமர்வில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றே தகவல்கள் வருகின்றன. சம்பந்தன் ஜனவரி மாத…

  5. 22 JUL, 2025 | 12:32 PM கறுப்பு ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு 42 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அந்த வன்செயல்களின் நிழலிலேயே தொடர்ந்தும் இலங்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது. வீடுகள் எரிக்கப்பட்டன, வாழ்வாதாரங்கள் நிர்மூலம் செய்யப்பட்டன, அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. தலைநகர் கொழும்பில் தொடங்கி நாடுபூராவும் அந்த கலவரங்களும் வன்செயல்களும் பரவின. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள். ஆனால், அந்தக் கொடிய வன்செயல்களுக்காக இன்னமும் பொறுப்புக் கூறப்படவில்லை. உத்தியோகபூர்வ நீதி கிடைக்கவில்லை. மீண்டும் அத்தகைய வன்செயல்கள் மூளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேசிய சமாதானப் பேர…

  6. ஜி-20 இல் ஒலிக்கம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் தற்போது G20 தலைவர் பதவியை வகிக்கும் இந்தியா, குறிப்பாக பசுமை மேம்பாடு, காலநிலை நிதி மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) மற்றும் உலக அமைதி ஆகியவற்றில் முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல் ஆகிய துறைகளில் உலக நிலைத்தன்மையை நோக்கி ஈர்க்கக்கூடிய அளவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. டிசெம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா G20 ஐ வழிநடத்தும். G20 இல் இதுவரை இல்லாத 43 பிரதிநிதிகள் தலைவர்கள்- இந்த வருடம் செப்டம்பரில் நடைபெறும் இறுதி புதுடெல்லி உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். G20 இலக்குகளை அடைவதற்காக நாடு தொடர்ச்சியான நிகழ்வுகளை…

    • 0 replies
    • 698 views
  7. கண்டியில் பறந்த சிங்களக் கொடியும், தமிழ் முஸ்லிம்களின் அச்சமும் சிங்கள தேசியவாதிகளுக்கு நாடு இனி எப்போதும் உருப்படாது பிரிந்து போவதை தவிர சிங்களத்தின் வீராமா சிங்க கொடியில்??? கொடியில் ஓளிந்திருக்கும் கோழைகள். இனியாவது சிங்களத்தின் அடிவருடிகள் தங்களின் நிலையென்ன என யோசிப்பார்களா? சுய அறிவு தன்மானம் என்ற ஒன்று இருந்தால்

    • 2 replies
    • 698 views
  8. சாதாரண தமிழ் மக்களுடன் பேசுகின்ற போது அவர்களில் பலர் சஜித் பிரேமதாச பற்றி பேசுவதை காணக் கூடியதாக இருக்கின்றது. இப்படித்தான் முன்னர் மைத்திரிபால பற்றி பேசியிருந்தனர். இறுதியில் ஏமாந்து போயினர். ஆனால் இம்முறை பொதுவாகவே, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியி;ல் அக்கறையற்ற தன்மையே காணப்படுகின்றது. அதற்கு அனேக காரணமுண்டு. அதனை பின்னர் பார்ப்போம். ஆனால் கூட்டமைப்பை வழிநடத்தும் சம்பந்தன்- சுமந்திரன் தரப்போ, சஜித்தை சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் சஜித் கூட்டமைப்பிலிருந்து சற்று எட்ட நிற்பதாகவே தெரிகிறது. இதுவரை அவர் கூட்டமைப்புடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. அதே போன்று கூட்;டமைப்பும் அவருடன் எந்தவொரு உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தையிலும்…

    • 1 reply
    • 697 views
  9. சுமந்திரனால் காலியாகும் “வீடு” – அகிலன் October 13, 2024 “வீட்டிலிருந்து வெளியே வர எமக்கு விருப்பமில்லை. ஆனால், அங்கு இப்போது ஒரு தனிநபரின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருக் கின்றது. அந்த ஒருவரால் பலா் வெளியேறிக் கொண்டிருக்கின்றாா்கள். இறுதியாக கட்சித் தலைவா் மாவை சேனாதிராஜா கூட பதவியைத் துறந்துவிட்டாா்.” இது யாழ். மாவட்ட முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினா் ஈ.சரவணபவனின் கூற்று. தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனநாயக தமிழரசுக் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை அமைத்து யாழ். மாவட்டத்தில் களமிறங்கியுள்ள இந்தக் கட்சிக்கு பிரபல சட்டத்தரணி கே.வி.தவராஜா தலைமைதாங்குகின்றாா். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை இக்கட்சியின் சாா்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னா் சரவணபவன்…

  10. இணைந்து வந்தார்கள்- பிரிந்து சென்றார்கள்!! வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் உரை­கள் அடங்­கிய ‘நீதி­ய­ர­சர் பேசு­கின்­றார்’ என்ற நூல் கடந்த 24ஆம் திகதி யாழ்ப்­பா­ணம்–வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் வெளி­யி­டப்­பட்­டது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னும் அந்த மேடை­யில் அமர்ந்­தி­ருந்­தார். விக்­னேஸ்­வ­ரன் ஆத­ரவு அணி­யும், கூட்­ட­மைப்­பி ­ன­ரும் சங்­க­மித்த நிகழ்­வாக அது அமைந்­தது. 5ஆண்­டு­கள் அஞ்­சா­த­வா­சம் கிட்­டத்­தட்ட 5ஆண்­டு­க­ளுக்கு முன்­பாக, 2013ஆம் ஆண்டு …

  11. இலங்கை ஒற்றையாட்சி அரசைப் பாதுகாக்க ஜெனீவா 30/1 தீர்மானத்திற்கு மீண்டும் சாயம் பூச முற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள் கோட்டாபய தன்னைச் சிறந்த தலைவராக நிறுவலாம் என்கிறார் ஜெகான் பெரேரா கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் மாற்றுக்கொள்கை மையம் (Centre for Policy Alternatives-CPA) மற்றும் தேசிய சமாதானப் பேரவை (National Peace Council-NPC) போன்ற சில தன்னார்வ நிறுவனங்கள் சர்வதேச சக்திகளோடு சேர்ந்து 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து மைத்திரி - ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. சிங்கள அரசியல்வாதிகள் பலர் அவ்வாறு…

  12. யேமன் உள்நாட்டுப் போர்: மனிதப் பேரவலத்தின் நான்கு ஆண்டுகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மார்ச் 28 வியாழக்கிழமை, பி.ப. 05:39Comments - 0 உலகில் நடப்பவை எல்லாம், கவனம் பெறுவதில்லை. கவனம் பெறுபவைகளில் பல, வெறும் பெட்டிச் செய்திகளாகவே கடந்து போகின்றன. நமக்குச் சொல்லப்படும் செய்திகளை விட, நமக்குச் சொல்லாமல் விடப்படும் செய்திகள் அதிகம். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன், இலங்கையின் உள்நாட்டுப் போர், அவல முடிவுக்கும் மனிதப் பேரவலத்துக்கும் இட்டுச் சென்ற போது, உலகம் வாழாவிருந்தது என்பது, தமிழ் மக்கள் பலரது மனக் கவலை. இன்று, பத்தாண்டுகளுக்குப் பின்னர், உலகின் ஒரு மூலையில், இலங்கையை ஒத்த இன்னொரு மனிதப்பேரவலம் அரங்கேறிக் கொண்டிருப்பதை நாமறிவோமா?…

  13. 21ம் நூற்றாண்டுக்கான உலகத்தின் புதிய அச்சு உருவாக ஆரம்பித்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது குறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் பேசிய உரைக்கு அவருடைய கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக இன்றைய காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பேரம் பேசல்களை ஆரம்பித்து, எதிர்வரும் 2015 ற்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதா இல்லையா என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தலாம் என்று கமரோன் நேற்று பிரிட்டன் பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். ஆனால் அதற்கு பதிலுரைத்த லிபரல் டெமக்கிரட்டி கட்சித் தலைவர் பிரிட்டன் மக்கள் பிரதமர் கருதுவது போல ஐரோப்பிய ஒன்றியத்தில் பங்கேற்பது குறித்து யாதொரு ஆர்வமும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளா…

  14. தமிழ்த்தேசியம் வெல்லுமா | இங்கர்சால் நார்வே | ராஜவேல் நாகராஜன் | பேசு தமிழா பேசு

  15. 21 JUL, 2024 | 02:09 PM டி.பி.எஸ். ஜெயராஜ் 1983 ஜூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான வன்முறை சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையின் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு அத்தியாயம். அந்த இருண்ட மாதத்தின் பெருங்கேடான நிகழ்வுகள் இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்களின் வாழ்வை கடுமையாகப் பாதித்தன. இலங்கையின் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளன் என்ற வகையில், கறுப்பு ஜூலை என்னை தனிப்பட்ட முறையிலும் தொழில்சார் அடிப்படையிலும் பாதித்தது. மேலும், ஆயிரக்கணக்கான ஏனைய தமிழ்க் குடும்பங்களைப் போன்று எனது குடும்பமும் கொந்தளிப்பான அந்த நாட்களில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தது. அப்போது நான் வடக்கில் மன்னார் சென்றிருந்ததால் அ…

  16. ஊரடங்குத் தளர்ச்சியும் பாராளுமன்றத் தேர்தலும் சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான இரண்டு சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது. கொரொணாத் தொற்றின் பின்னர் அரசினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு குறித்து முக்கியமான தளர்வுகள் கடந்த வாரத்துக்கு முன்னைய வாரத்தின் இறுதி நாட்களிலே அறிவிக்கப்பட்டன. கடந்த 20ஆம் திகதி முதல் 18 மாவட்டங்களில் ஊரடங்கு, வார நாட்களில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாத்திரமே அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம்…

  17. இன்னொரு கூட்டமைப்பு: சவால்களும் சாத்தியங்களும் -என்.கே. அஷோக்பரன் முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன், ஊடகங்களுக்கு அண்மையில் அனுப்பிவைத்த கேள்வி பதில்களில், தமிழ்த் தேசிய கட்சிகள் நிறுவன ரீதியாக ஒன்றுபடுதல் பற்றியும், அதற்கான அடிப்படைகளாகத் தலைமைத்துவம், கொள்கைகள், நிறுவன செயற்பாடுகள் என்பனவற்றையும் அடையாளம் கண்டிருந்தார். நிறுவன ரீதியாக ஒன்றுபடுவதற்குத் தடையாக இருக்கின்ற விடயங்களாக, சுயநலத்தையும் அகந்தையையும் குறிப்பிடுகிறார். ‘நாம் ஒவ்வொருவரும், எமது கட்சிகளை மட்டும் மேம்படுத்த, சுயநலத்துடனும் அகந்தையுடனும் உளங் கொண்டிருந்தால், ஒற்றுமை சாத்தியப்படாது. அதனால், எமது மக்கள் பாதிக்கப்படக்கூடும்…

  18. மாற்றம் ஒன்றே தேவை -இலட்சுமணன் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்குரிய தேர்தல் முடிவுகள், இலங்கையின் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் எதிர்கால இனத்துவ அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு சிந்தனாவோட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, தமிழ் அரசியல் தலைமைகளினதும், அதன் எதிர் அரசியல் தலைமைகளினதும் மக்களதும் கருத்தோட்டங்களை மிகத் தெளிவாக வெளிக்காட்டி நிற்கிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், தமிழ் பேசும் இனம், ஓரணியில் நின்றும் சிங்களப் பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டிய ஜனாதிபதியாக, குறிப்பாக சிங்கள மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவாகியுள்ளார். இந்தத் தெரிவு என்பது, இலங்கை அரசியல் தலைமைகளுக்கும் சிறுபான்மை …

  19. சர்வதேச அரசியலில் பூகோள அரசியல் சார்ந்து அதிகாரம் மிக்க நாடுகள் இராஜதந்திர ரீதியாக தமது சுய நலன் சார்ந்தோ அல்லது அவர்கள் மூலோபாயம் சார்ந்தோ சர்வதேச அரசியலில் பொய் சொல்லி வருவதை பார்க்கிறோம். Selfish lies and strategic lies அரசுகள் கூறும் இப்படியான பொய்கள் அவர்களுக்கு நன்மையாகவும் முடிகின்றன அதே வேளையில் தோல்வியாகவும் முடிகின்றன. அரசுகளுக்கு இடையிலான யுத்தங்களுக்கும் குறிப்பாக சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப் போர் காலத்தில் அமெரிக்காவால் சொல்லப்பட்ட அனைத்து பொய்களும் இறுதியில் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் எல்லா நேரத்திலும் அது வெற்றி அளிக்காததற்கான பல காரணங்களும் உண்டு. அதிகாரம் கொண்ட இந்த அரசுகளின் பொய்கள் குறித்து அரசியல் வெளியுறவு ஆய்வாளர்…

  20. விக்னேஸ்வரனின் தடுமாற்றம் கடந்த பத்து நாட்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி உட்பட மூன்று ஊடக அறிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். இப்போதெல்லாம் ஊடகவியலாளர்களால் எழுப்பப்படும் சிக்கலான கேள்விகளுக்கு உடனடியாக (நேரடியாக) பதிலளிப்பதைக் குறிப்பிட்டளவில் தவிர்த்து வருகின்ற முதலமைச்சர், அந்தக் கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாராந்தம் பதிலளித்து வருகின்றார். அது, கேள்வி- பதில் அறிக்கையாக வெளியாகி வருகின்றது. தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கேள்வி- பதில் அறிக்கைகள் மிகவும் பிரபலமானவை. முதுமை காரணமாகக் கருணாநிதி செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிய பின்னர், அவரின் கே…

  21. புதன்கிழமை, 06 யூலை 2011, 11:05.14 AM GMT உலக மயமாதலில், யாவும் வணிகமயமாகி மானுட உயர் மதிப்பீடுகள் உடைந்து கொண்டிருக்கும் நிலையில், மனித நேயம் குறித்து உரத்துச் சொல்வது கேலிப் பொருளாகி விட்டது.இந்திய இராணுவத்தை விமர்சித்தார் என்ற காரணத்திற்காக ஒருநாள் சிறைவாசம் அனுபவித்த அருந்ததிராய், ""இந்தியாவில், வெளியில் வாழ்வதை விட, சிறை வாழ்க்கையே மேல்'' என்று கூறியது நினைவிற்கு வருகிறது. அறிவுத் துறையின் காற்றுத்தழுவாத அதிகார வர்க்கத்திடமிருந்து எதனை எதிர்பார்க்க முடியும். இன்று தமிழினம் சிக்கியுள்ள முரண்பாடுகள் பற்றியதான விழிப்புணர்வு, அடிபணிவு அரசியல்வாதிகளாலும், தோல்விகளைத் தமது சுய இருப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களாலும் சிதைக்கப்பட்டுள்ளன. கொடுமையா…

  22. ஏதிரியின் தொழில் அழிப்பதென்பதுதான். அதனை வெட்டியோ கொத்தியோ, ஆடியோ, பாடியோ, புகழ்ந்தோ, இகழ்ந்தோ, அணைத்தோ, ஆராத்தியோ. கையில் வாளேந்தியோ அல்லது தோளில் கைபோட்டோ எப்படியாயினும் அழித்தல் என்பதுதான் எதிரியின் பிரதான இலக்கும் தொழிலுமாகும். இன்றைய நிலையில் பெரும் சிந்தனை மாற்றம் ஒன்று ஏற்படாமல், ஓர் அறிவியல் புரட்சி ஏற்படாமல் தமிழ் மக்களின் வாழ்வில் விடிவேற்பட வாய்ப்பில்லை. வரலாற்றில் இருந்து தமிழ்த் தலைமைகள் நல்ல பாடங்களைக் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை மாறாக எதிரியால் வென்றெடுக்கப்படுபவர்களாயும் இறுதி அர்த்தத்தில் தம்மை நம்பிய மக்களுக்கு தோல்விகளையே பரிசளிக்க வல்லவர்களாயுமே காணப்படுகின்றனர். ஓர் அரசியல் யாப்பிற்குரிய உள்ளடக்கத்தை புரிந்து கொள்வதிலிருந்தும,; அந்த யாப்பு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.