அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
அரசாங்கத்தின் அலட்சியமும் கொரோனாவின் மீள்பரவலும் புருஜோத்தமன் தங்கமயில் இலங்கை எப்போதுமே ஆச்சரியங்களால் நிறைந்த நாடு. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உலகம் பூராவும் சுகாதாரத்துறையினர் தலைமை தாங்கிக் கொண்டிருக்கையில், இலங்கையில் இராணுவம் தலைமையேற்றிருக்கின்றது. சுகாதார அமைச்சரோ, மத அனுஷ்டானங்களை நடத்தி, பானையில் அடைக்கப்பட்ட புனித நீரை ஆற்றில் கொட்டுவதில் கவனமாக இருக்கிறார். பிரதமரோ, மத - மார்க்க நிறுவனங்களிடம் கொரோனா வைரஸுக்கு எதிரான பிரார்த்தனைகளை முன்னெடுக்குமாறு கோருகிறார். ஜனாதிபதியோ, கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பொதுமக்களைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார். கொரோனா வைரஸ்ஸுக்கு எதிரான நடவடிக்கைகளில், முதல் தரப்பாக இருக்க வேண்டிய வைத்திய…
-
- 1 reply
- 869 views
-
-
தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு வடக்கு - கிழக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களினால் மூர்க்கம் பெற்றிருக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டங்கள் மற்றும் அரச வேலை கோரும் பட்டதாரிகளின் போராட்டங்கள் என்று போராட்டங்களுக்கான காரணங்கள் தமிழர் தாயகப் பகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன. கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று புதன்கிழமை 59 ஆவது நாளாகத் தொடர்கின்றது. உறுதியான பதிலோ தீர்வோ கிடைக்காத பட்சத்தில் போராட்டத்தினை…
-
- 1 reply
- 477 views
-
-
திண்ணைப் பேச்சும் தமிழரசுக் கட்சியும்! நிலாந்தன். November 7, 2021 கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாசவிடுதியில் 7 கட்சிகள் கூடின. 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் நோக்கமாக இருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் அழைக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்ட போதிலும் பங்குபற்றவில்லை. மனோ கணேசனும் ரவுப் ஹக்கீமும் சந்திப்புக்காக கொழும்பிலிருந்து வந்திருந்தார்கள். எனினும், எதிர்பார்த்தபடி ஒரு இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு ஒரு தீர்மானத்தை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பில் முடிவெடுப்பதற்கு தமிழரசுக்க…
-
- 1 reply
- 555 views
-
-
ஆண்டு 2001 தமிழர் தேசத்திற்கெதிரான அனைத்துலக திட்டமாக முக்கியமான நான்கு திட்டங்களை வரைவு செய்கிறது அமெரிக்கா. 1. புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்த்தேசிய செயல்பாடுகளை முடக்குதல் 2. புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல் 3. ஈழத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல் 4. இறுதியாக புலிகளை படைகளை அழித்தொழிப்பு செய்தல் இந்த திட்டத்திற்கு பெயர்தான் “ஆபரேஷன் பெக்கன்” முதலில் அவர்கள் செய்த வேலை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களில் புலிகள் அமைப்பை தடை செய்தது... நிதி ஆதாரத்தை முடக்கியது... தெற்காசிய பிராந்தியத்தில் குறிப்பாக திரிகோணமலையில் தனது இராணுவ தளத்தை அமைக்கவேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்ட நாள் கனவு. இதன் மூலம் தெற்காசியா…
-
- 1 reply
- 734 views
-
-
சம்பந்தனின் நிதானத்தால் சிங்கள ராஜதந்திரத்தை எதிர்கொள்ள முடியுமா? யதீந்திரா புதிய அரசியலைப்பு தொடர்பான விவாதத்திற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், பௌத்த மாகாசங்கத்தினர் இந்த அரசியல் யாப்பு முயற்சிகளை நிறுத்துமாறு அறிவித்திருக்கின்றனர். அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களை இணைக்கும் காரக மகா சங்கமே இந்த அறிவித்தலை வெளியிட்டிருக்கிறது. அதாவது, தற்போதிருக்கும் அரசியல் யாப்பே போதுமானது எனவே புதிய அரசியல் யாப்பு ஒன்று இலங்கைக்கு தேவையில்லை என்பதே அவர்களின் அறிவிப்பு. மகா சங்கத்தினரின் இந்த அறிவிப்பை மிகவும் ஆழமாக ஊடுருவிப் பார்த்தால் இதில் ஒரு மிக முக்கியமான விடயம் இருக்கிறது. அதாவது, தற்போதிருக்கின்ற அரசியல் அமைப்பே எமக்கு சிறந…
-
- 1 reply
- 499 views
-
-
பேச்சுக்கான முஸ்தீபு மும்முரம்? December 12, 2022 — கருணாகரன் — எதிர்பார்க்கப்பட்டதற்கும் மாறாக அடுத்த சில தினங்களில் அதிகாரப்பகிர்வுக்கான பேச்சுகள் நடப்பதற்கான சூழல் கனிந்துள்ளது போலிருக்கு. தமிழ்த் தரப்பிலும் இதற்கான கவனம் ஏற்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் இதைப் பற்றிக் கூடிப் பேசுவது, பேச்சுகள் குறித்துப் பொதுவெளியில் உரையாடுவது, பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது என்று பச்சைக் கொடி காட்டியுள்ளன. ரெலோ இதில் இன்னும் முன்னுக்கு வந்து இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக – பேச்சுக்கு செல்லும்போது நாம் ஒரு பொறிமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று ரெலோவின் பேச்சாளரான சுரேந்திரன் கேட்டுள்ளார். “ஐ.நா.…
-
- 1 reply
- 796 views
-
-
இந்தியாதான் காப்பாற்றியது - நாங்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்பை மனதில் கொண்டிருப்போம்- இந்திய ஊடகத்திற்கான பேட்டியில் ரணில் Published By: RAJEEBAN 10 FEB, 2024 | 04:43 PM இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்தவேளை இந்தியா வழங்கிய உதவிகள் ஆதரவிற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமான wion ற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு நன்றி இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் தப்பியிருக்கமாட்டோம், இதன் காரணமாகவே இரு நாடுகள் மத்தியிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கேள்…
-
- 1 reply
- 288 views
- 1 follower
-
-
-
பொது மக்கள் மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கும் வகையில் அபிவிருத்தி நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான அனுமதியை சிறிலங்காவின் அமைச்சரவை அண்மையில் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பை கொழும்பிலுள்ள அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக வெளியிட்டார். சிறிலங்கா அமைச்சரவையின் இந்த தீர்மானமானது, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் மீளிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட, மேலும் மோசமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதையே சுட்டிக்காட்டுவதாக கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகவியலாளரான குசல் பெரேரா தெரிவித்துள்ளார். இந்தத் தகவலானது மங்கள சமரவீரவால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துடன் ஒப்பிடும் போது முரண்பாட்டைத்…
-
- 1 reply
- 782 views
-
-
நன்றி - யூரூப்
-
- 1 reply
- 519 views
-
-
ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்! August 21, 2024 — கருணாகரன் — நெருக்கடி காலத்திலிருந்து நாட்டை – மக்களை மீட்டது தானே என்கிறார் ரணில் விக்கிரமசிங்க. அதாவது தானொரு மீட்பர், ஆபத்பாந்தகர் என்றெல்லாம் சொல்கிறார். “அன்றைய நெருக்கடிச் சூழலில் யாருமே பொறுப்பேற்க முன்வராதபோது தனியாளாக முன்வந்து அந்தப் பொறுப்பைத்துணிவுடன் ஏற்றேன். நெருக்கடியிலிருந்து நாட்டைமீட்பதற்கான தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காகச் சஜித்தையும் அநுரவையும் கூட அழைத்தேன். அதைப்போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் மலையக் கட்சிகளையும் முஸ்லிம்களையும் கேட்டிருந்தேன். யாரும் வரவில்லை. ஆனாலும், இணைந்து பணியாற்றக் கூடியவர்களைச் சேர்த்து ஆட்சியை அமைத்தேன். அதன் மூலம் பொருட்களுக்காகக் கா…
-
- 1 reply
- 697 views
-
-
சந்தேகங்களை களைவாரா ‘மாவை’? -புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை என்பது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்தும் செயன்முறையாக மாத்திரம் இருந்து விடக்கூடாது என்று, சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் சுட்டிக்காட்டி இருந்தார். இதையடுத்து, அவரை அவசர அவசரமாகச் சந்தித்த மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையின் தேவையையும் அதன் செயற்பாட்டு நோக்கங்களையும் குறித்து விளக்கமளித்து இருக்கின்றார். தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, தமிழ்த் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டமொன்றைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்கிற அடிப்படையில் மாவை சேனாதிராஜா முன்னெடுத்திருந்த…
-
- 1 reply
- 723 views
-
-
விடுதலைப் புலிகளும் கமாஸ் இயக்கமும் —பலஸ்தீனம் தனி நாடாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நாவில் உண்டு. இந்தியா. இலங்கை உட்படப் பல நாடுகள் அதனை ஏற்றுள்ளன. அமெரிக்கா மாத்திரம் ஏற்கவில்லை. ஆனால் பலஸ்தீனம் போன்று ஈழத்தமிழர்களுக்கான அங்கீகாரம் ஐ.நாவில் இதுவரை கிடைக்கவில்லை. இஸ்ரேல் – கமாஸ் போர் ஈரான் அரசின் அணுசக்தியை அழிப்பதற்காக ஈரான் மீதான போராக மாறக் கூடிய ஏது நிலை தென்படுகின்றது— அ.நிக்ஸன்- பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையும் பலஸ்தீனம் தனி நாடாக வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் பதினொரு வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்துடன் கமாஸ் இயக்கத்…
-
- 1 reply
- 464 views
-
-
மாற்றம் மாற்றமா? - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா 16 மே 2015 முள்ளிவாய்க்கால் நினைவு வாரப் வெளியீடு - 1: விடுதலைப்புலிகள் தமது கைகளில் எடுத்துக்கொண்டு நிகழ்த்திய தமிழீழ விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்டு ஆறுவருடங்கள் முடிந்துவிட்டன. போரை நிகழ்த்தி வெற்றி அடைந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இலங்கையின் அரசு கடந்த மூன்று தசாப்தங்களில் எதிர்கொண்ட உள்நாட்டுப் போரில் இருந்தும் பின் தொடர்ந்த ஊழல் நிறைந்த ஆட்சியில் இருந்தும் விடுபட்டுள்ளது. இலங்கையில் மாற்றம் வேண்டும் என்ற குரல் எழுச்சியுடன் மகிந்தவின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. மகிந்த அரசாங்கம் அது கொண்டிருந்த மோசமான ஊழல் மற்றும் சர்வாதிகாரக் குணங்களுக்காக சிங்களமக்களாலும் நான்காம் …
-
- 1 reply
- 449 views
-
-
அனைத்துலக உறவுகளை வென்றெடுப்பது குறித்து கா.சிவபாலன் அண்மைக்காலமாக தமிழ் அரசியல்வாதிகள் ஆய்வாளர்களின் பேச்சுக்களை, கட்டுரைகளை அவதானிக்கும்போது அடிப்படையில் பல பிழைகளை (fundamentally flawed) காணக்கூடியதாக இருக்கிறது. அரசியல்வாதிகளின் பேச்சில் தளம்பல் நிலையும், தாங்கள் கொண்டுள்ள கொள்கையில் அல்லது அவர்களின் அல்லது அவர்களைப் பின்பற்றுவோரின் முயற்சியில் பிழைகளும், சரியோ பிழையோ அவற்றை அடைவதற்காண வழிகளை சரியாக கூறமுடியாமையையும் காணலாம். எழுத்தாளர் எஸ்.பொ. அவர்கள் தன்னுடைய எழுத்தில் பிழை காணும் ஒரு விமர்சகரைப்பற்றி பேசும்போது, 'நான் 200 சிறுகதைகளை பெற்றவள், 4 நாவல்களை பெற்றவள், 8 குறுநாவல்களை பெற்றவள், எனக்கு இந்த இரும்பூரில் (Birmingham) தமிழ் படித்த துரும்பன், இவற…
-
- 1 reply
- 422 views
-
-
புல்வாமா தாக்குதலுக்கு பின் - சுணங்கிப் போன காங்கிரஸ். இந்துத்வா, தேசியவாதம், பாரத் மாதா கீ ஜெய் என சாதுர்யமாக காய் நகர்த்திய பாஜக
-
- 1 reply
- 511 views
-
-
இலங்கையின் உண்மையான வம்சாவளிகள் தமிழரா ?சிங்களவரா ? சுரேன் ராகவன் | Sooriyan
-
- 1 reply
- 424 views
-
-
2019-08-21 12:29:31 இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்தமை குறித்து ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளும் தமது அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்து வதுதான் ஜனாதிபதி மைத்திரியின் நோக்கம். அந்த அடிப்படையில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடந்த கால நடவடிக் கைகள் அமைந்துள்ளன. ஜனாதிபதியும் பிரதமரும் நமக்குச் சமன். இருவரையும் வைத்துக் கொ…
-
- 1 reply
- 617 views
-
-
பாலையும் வாழையும்* : பின்நவீனத்துவ அடையாளம் - மாற்று அரசியல் - மனித உரிமை - 19 ஜூலை 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்- புலிகள் பிழையா? அனைத்து விடுதலை இயக்கங்களும் பிழையா? ஜனநாயகம், மனித உரிமை, சமத்துவம் போன்ற கருத்தாக்கங்கள் பிரபஞ்சமயமானவை. வர்க்கம், பால்நிலை, சாதி, இனம், மதம் என எதனை வைத்துப் பேசினாலும் ஜனநாயகம், மனித உரிமை மற்றும் சமத்துவம் என்பது அனைவருக்கும் பொதுவானவை. வர்க்கத்தின் பெயராலோ அல்லது பால்நிலை, இனம், மதம், சாதி என்பதன் பெயராலே ஒரு சமூகப்பிரிவினர் பிறிதொரு சமூகப்பிரிவினருக்கு ஜனநாயகம், மனித உரிமை, சமத்துவம் போன்றவற்றை மறுத்துவிட முடியாது. ஓரு விமோசனத் தத்துவம் எனும் அளவில் மாரக்சியம் இதனைக் கோட்பாடாகவும் நடைமுறையாகவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட அரசியல் நியாயம்: தமிழர் தலைமைகளின் கூட்டுச் சதி 05/16/2015 இனியொரு... “ஆப்கானிஸ்தானிலும், அரபு நாடுகளிலும், ஆபிரிக்காவிலும் ஆசிய நாடுகளிலும் எங்களுக்கு அக்கறையிருக்கிறது. அங்கு மனித் உரிமைகள் மீறப்படும் போதும் மக்களுக்காகக் குரல் கொடுப்போம், அந்த நாடுகள் எல்லாம் அபிவிருத்தியடைவதற்கு நாம் உறுதுணையாக இருப்போம். ” இப்படித்தான் மேற்கு ஏகபோக நாடுகள் உலக மக்களை ஏமாற்றிக்கொண்டே அவர்களைச் சுரண்டி ஏழைகளக்கி அழித்து வருகின்றன. ராஜித சேனாரத்ன மேற்கு நாடுகளால் கற்பிக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் தமது உள்ளூர்ப் பதிப்பை ஆரம்பித்துள்ளது. “போர் வெற்றியை நாங்கள் வழமை போலக் கொண்டாடப் போவதில்லை. இலங்கையின் ஒரு பகுதி இன மக்களுக்கு எதிராகத் தொடுக்கப…
-
- 1 reply
- 617 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் மற்றும் பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்களும், இலங்கை அரசைக் கண்டித்து தமிழ்நாடு மீனவர்களும் நடுக்கடலில் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். மீனவர்களுக்கு இடையே என்ன பிரச்னை? தமிழக மீனவர்கள் தங்கள் கடற்பரப்பினுள் வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறி, அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று (ஞாயிறு, மார்ச் 3) நடத்தினர். யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்துள்ள கடற்கரைப் பகுதிகளிலுள்ள மீனவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி…
-
- 1 reply
- 326 views
- 1 follower
-
-
பெரும்பான்மை இனத்தின் பாதுகாப்பின்மை உணர்வு -என்.கே. அஷோக்பரன் இலங்கையின் புகழ்பூத்த வரலாற்றியல் ஆய்வாளர்களில் ஒருவர் கே.எம். டி சில்வா. 1998ஆம் ஆண்டு பிரசுரமான, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அவர் எழுதிய நூலொன்றில், ‘இலங்கையின் இனப்பிரச்சினையானது, சிறுபான்மை மனநிலையையுடைய பெரும்பான்மைக்கும், பெரும்பான்மை மனநிலையையுடைய சிறுபான்மைக்கும் இடையிலான மோதல் என்று விளிக்கிறார். இதில் இரண்டு விடயங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. முதலாவது, ‘சிறுபான்மை மனநிலையையுடைய பெரும்பான்மை’. இரண்டாவது, ‘பெரும்பான்மை மனநிலையையுடைய சிறுபான்மை’. இரண்டாவது விடயம், கொஞ்சம் சிக்கலானது. இலங்கைத் தமிழர்கள் கொலனித்துவக் காலத்தில், ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக்கொண்டு, அவர்களது இனவி…
-
- 1 reply
- 670 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
காங்கோ - தங்கம், வைரம், இனப்படுகொலை மீண்டும் ஆப்பிரிக்கா கண்டம். மீண்டும் ஒரு ஆப்பிரிக்க நாடு. மீண்டும் பசி, பஞ்சம், படுகொலை தேசம். உலகில் இனப்படுகொலை பழியான உயிர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் பாதிக்கு மேல் இறந்தவர்கள் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட முடியும். அந்த அளவிற்கு வறுமை, வெறுமை அவர்களை ஆட்டிப்படைக்கிறது. ஒருவர் அழித்து இன்னொருவர் வாழ முடியும் என்ற நிலைமை. எல்லாம் ஐரோப்பிய காலனி நாடாக இருந்த பலன். ஆப்பிரிக்க நாடுகளில் “காங்கோ” மிகவும் வித்தியாசமானவை. மற்ற ஆப்பிரிக்க நாடுகள் போல் இல்லை. தங்கம், வைரம், செம்பு என்று எல்லா வளங்கள் கொண்ட நாடு. சூர்யா நடித்த “அயன்” படம் பார்த்தீர்களா ? ஒரு ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வைரத்தை கடத்தி இந்தியா…
-
- 1 reply
- 6.2k views
-
-
வரலாற்றில் இடம்பிடிப்பாரா மைத்திரி? சத்ரியன் “தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற விருப்பம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இருப்பதாக நாங்கள் அறிகிறோம். இந்த விடயத்தில் அவருக்கு இருக்கின்ற சவால்களை சமாளித்து தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்வாராக இருந்தால் சர்வதேச சமூகம் அவரை உள்நாட்டில் பிரச்சினைகளை தீர்த்த தலைவர் என்று அங்கீகரிக்கும்.” யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியில் நடந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்பாக- வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் மேடையில் அமர்ந்திருக…
-
- 1 reply
- 366 views
-