அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
இலங்கையில் சிறுபான்மையும் ஒற்றைத் தேசிய அடையாளமும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையில், “சிறுபான்மை இனங்கள் இல்லை; பல்வேறு இனக்குழுக்கள் உள்ளன. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அண்மையில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்தக் கருத்தை, சில தமிழ் அரசியல்வாதிகள் கைதட்டி வரவேற்கிறார்கள். பொதுப்படையாகப் பார்த்தால், இது நல்லெண்ணம் மிக்க கருத்தாகவே தெரிகிறது. அந்தளவில், அதற்குரிய வரவேற்பும் பொருத்தமானதே! ‘அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டு, நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்’ என்கிற குரல், அனைவரும் ‘ஸ்ரீ லங்கன்ஸ்’ என்ற தேச அடையாளத்துக்குள் வரவேண்டும் என்கிற ‘சிவில் தேசிய…
-
- 1 reply
- 347 views
-
-
வடகிழக்கு இணைப்பே முஸ்லீம் மக்களின் பாதுகாப்பு அண்மையில் கண்டியிலும் அம்பாறையிலும் ஏற்பட்ட முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் சிறுபான்மை சமூகத்திற்கு பெரும்பான்மை சிங்கள மக்களால் பாதுகாப்பு இல்லை என்பதையே வலியுறுத்தியுள்ளது. 1911ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையும் காலத்துக்கு காலம் சிங்கள முஷ்லிம் குழப்பம் அல்லது தமிழ் சிங்கள குழப்பம் ஏற்பட்டே வரலாறே தொடர்கிறது. தமிழ்பேசும் மக்களை பொறுத்தவரை வடகிழக்கு தாயகத்தில் தமிழர்களும் முஷ்லிம்களும் இணைந்து வாழ்ந்துவரும் ஒரு நிலப்பரப்பை கொண்ட பிரதேசமாகவே வடகிழக்கு மாகாணம் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. இணைந்த வடகிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வேண்டியே இலங்கைதம…
-
- 1 reply
- 390 views
-
-
‘சஹ்ரான் உயிர் வாழ்கிறார்’ என்ற கதையின் பின்புலம் Editorial / 2019 மே 09 வியாழக்கிழமை, பி.ப. 12:38 Comments - 0 -இலட்சுமணன் சஹ்ரான் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டார் என்று ஒரு கதை, இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவர் தற்கொலைத் தாக்குதலில் இறந்துவிட்டார் என்று, கடந்த வாரம் வரை சொல்லிக் கொண்டிருந்த பாதுகாப்புத் தரப்பு, திடீரென்று இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கியிருக்கிறது. இலங்கையில் கொழும்பு , நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கிவரும் ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டு, உயிர்த்த ஞாயிறன்று (ஏப்ரல் 21) குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களில் அபு உபைதா எனும் ஐ.எஸ். பெயருடை…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்த முறையை விளங்கிக்கொள்ளுதல் November 24, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — 2024 நவம்பர் பாராளுமன்ற தேர்தல் கண்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல ‘முதலாவதுகளில்” கூடுதலான அளவுக்கு கவனத்தை ஈர்த்திருப்பவை தேசிய மக்கள் சக்தி சாதித்த இரு சாதனைகளேயாகும். தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்டமான வெற்றி இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தனியொரு கட்சி அல்லது கூட்டணி பாாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்ற முதலாவது சந்தர்ப்பத்தை குறித்து நிற்கிறது. அடுத்ததாக நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தை தவிர, ஏனைய சகலவற்றிலும் தேசிய மக்கள் சக…
-
- 1 reply
- 198 views
-
-
சாவேஸ் என்ற சகாப்தமும் சோசலிசப் புரட்சியும் : சபா நாவலன் நாம் வாழும் நூற்றாண்டில் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரக்கரங்களிலிருந்து ஒரு அங்குலம் கூட நகரமுடியாது என்று அச்சம் உலகதின் ஒவ்வொரு மனிதனிடமும் குடிபுகுந்திருந்த வேளையில் அமரிகாவின் கொல்லைபுறத்தில் நெஞ்சை நிமிர்த்தி தனது நாட்டின் மக்களுக்காக வாழ்ந்த தனிமனிதன் ஹூகோ சாவேஸ். வெற்றிகரமான தனது ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை செயற்படுத்திக்காட்டியவர். ஏகாதிபத்திய நலனுக்கு உலகில் திரும்பிய திசைகளிலெல்லாம் மனிதர்கள் கோழைத்தனமாக மண்டியிட்ட போது, தனி மனிதனாக உலகில் மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தவர். ஹூகோ சாவேஸ் என்ற சகாப்தம் 05.03.2013 அன்று தன்னை இடைநிறுத்திக்கொண்டது. இந்த நூற்றாண்டின் இணையற்ற வீரனின் இறுதி மூச்சு அதிகால…
-
- 1 reply
- 819 views
-
-
வளைகுடாவில் கட்டார் வளைந்து கொடுக்குமா? இலங்கையர்களாகிய நாம் கட்டார் என்னும் போது எம்மவர் தொழில் செய்யும் நாடு என்பது தான் ஞாபகத்துக்கு வரும். இலங்கையின் வடபகுதியைப் போன்று கட்டாரும் ஒரு குடாநாடுதான். அதன் ஒரே ஒரு தரை எல்லை சவூதி அரேபியாவுடனானதாகும். மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டது. தொன்று தொட்டு மீன்பிடித்தலுக்கு பெயர் போன நாடாகும். எழுபதுகளின் இறுதியில் அரேபிய எண்ணெய் வளநாடுகள் OPEC அமைப்பின் தோற்றத்தாலும் தீர்மானங்களாலும் செல்வந்த நாடுகளாக நிமிர்ந்தன. இதற்கு முன்னர் இந்நாடுகளின் எண்ணெய்வளம் ஐரோப்பிய, அமெரிக்க கம்பனிகளால் சுரண்டப்பட்டது. இவ்வாண்டு ஆனிமாதம் சவூதி அரேப…
-
- 1 reply
- 607 views
-
-
தீபச்செல்வன் - 9 JUNE, 2011 ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் ஈழத்து மக்களிடம் ஏற்பட்டுள்ள அரசியல் வெறுமையும் அரசின் ஆக்கிரமிப்பு நிலையும் சேர்த்து ஈழத்து மக்களை நிலமற்ற வாழ்வுக்குள் தள்ளியிருக்கிறது. கொடும் போரால் ஈழத்தை ஆக்கிரமித்துள்ள இலங்கை அரசு ஈழத்து மக்களின் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் தன் ஆக்கிரமிப்புக் கனவைத் திணித்துவருகிறது. இத்தனை அழிவுகளின் பிறகும் தம் வாழ் நிலத்திற்காகப் போராட வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஈழத்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. போர் முடிந்த பின்னர் மிகவும் கவர்ச்சிகரமானதாக முன்வைக்கப்பட்ட மீள்குடியேற்றம் என்னும் வார்த்தையில்தான் இந்த நிலப் பிரச்சினை அடங்கியிருக்கிறது. எல்லாத் துயரங்களின் பிறகும் தலைமுறைகளுக்காகவும் சந்ததிகளுக்காகவும் …
-
- 1 reply
- 811 views
-
-
கலப்பு நீதிமன்றம் அல்லது சிறப்புத் தீர்ப்பாயம் : கம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்… நிலாந்தன் April 14, 2019 நிலாந்தன்… கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை கம்பூச்சியாவில் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கெமரூச் ரிபியூனல் என்று அழைக்கப்படும் ஒரு கலப்பு நீதிமன்றம் இரண்டு போர்க் குற்றவாளிகளுக்கு இரண்டாவது தடவை ஆயுள் தண்டனைகளை விதித்தது. தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் கியூ சம்பான் 87 வயது. கெமரூச் அரசாங்கத்தின் அரசுத்தலைவராக இருந்தவர். மற்றவர் நுஓன் சே 92 வயது. கெமரூச் இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தளபதியாகவும் அவ்வியக்கத்தின் தலைவரான ப…
-
- 1 reply
- 670 views
-
-
பெரும் போரை நோக்கிய ஐரோப்பிய அரசியல் நகர்வுகள் – உலகப்போர் 2 முதல் உலகப்போர் நடைபெற்ற வருடங்கள் என்றால் 1914 முதல் 1918 வரை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஆனால் இரண்டாம் உலகப் போரை இப்படி ஒரு காலகட்டத்திற்குள் அடக்கி விட முடியாது. வரலாற்று ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் போரின் காலகட்டம் குறித்து மாறுபடுகிறார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளபட்ட கணக்கு 1939 முதல் 1945 வரை என்றாலும், சிலருடைய கூற்றுப்படி, இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் 1939 அல்ல 1931. சீனா மீது ஜப்பான் தாக்குதல் தொடுத்த ஆண்டு அது. 1931 தொடங்கி 1939 வரை ஐரோப்பாவில் நடைபெற்ற உள்நாட்டு போர்கள், கலகங்கள், யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், அத்துமீறல்கள் அனைத்தும் இரண்டாம் உலகப்போருடன் நேரடியாக தொ…
-
- 1 reply
- 946 views
-
-
புதிய அரசமைப்புக்கான முயற்சியை அரசாங்கம் கைவிடுமா? புதிய அரசமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்ளத் தாம் பதவிக்கு வந்த நாள் முதல், அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போகுமா என்று சந்தேகம் கொள்ளக் கூடிய நிலைமை நாட்டில் உருவாகியிருக்கிறது. கடந்த வாரம் இலங்கையில் முக்கிய மூன்று பௌத்த பிரிவுகளின் தலைமைப் பிக்குகள், அதாவது மகாநாயக்க தேரர்கள் கூட்டாக எடுத்த முடிவின் காரணமாகவே அந்தச் சந்தேகம் உருவாகியிருக்கிறது. கடந்த வாரம் கண்டியில் கூடிய இலங்கை பௌத்தர்களின் மூன்று முக்கிய நிகாயாக்கள் என்றழைக்கப்படும் ‘சியம் நிக்காய’, ‘ராமஞ்ஞ நிக்காய’ மற்றும் ‘அமரபுர நிக்காய’ ஆகிய பிரிவுகளின் தலைவர்கள் நாட்டுக்குப் புதிய அர…
-
- 1 reply
- 399 views
-
-
ஜே.வி.பி.யும் தேசிய இனப்பிரச்சினையும் வீரகத்தி தனபாலசிங்கம் (எஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஆலோசக ஆசிரியர்) ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி)யின் கொள்கை பரப்புச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு ஆங்கில தினசரியொன்றுக்கு அளித்திருந்த நேர்காணலில் தெரிவித்த கருத்துக்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அவரது கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக அமைந்திருந்தன. அதுவும் குறிப்பாக அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் இக்கருத்துக்கள் முக்கிய கவனத்துக்குரியவையாகின்றன. இனப்பிரச்சினைக்கான காரணங்கள் …
-
- 1 reply
- 1.4k views
-
-
[ வியாழக்கிழமை, 30 யூன் 2011, 09:43 GMT ] [ நித்தியபாரதி ] அண்மையில் ரஷ்யாவின் சென்பீற்றேர்ஸ்பேக்கில் இடம் பெற்ற பொருளாதார உச்சி மாநாட்டில் சீன அதிபர் கூ ஜின்ராவோவை [Hu Jintao] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இவ்விரு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் தமது நாடுகளிற்குத் தேவையான உதவிகள் தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளனர். சீனா-சிறிலங்கா உறவு நிலை தொடர்பாக புதுடில்லியிலுள்ள ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தின் அனைத்துலக அரசியல் மற்றும் ஆயுத ஒழிப்பு விடயம் தொடர்பான மையத்தின் பேராசிரியரும் தலைவருமான சுவரன் சிங் [swaran Singh], World Politics Review - WPR தளத்துடனான மின்னஞ்சல் மூலமான நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். WPR: அண்மைய நாட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் சரியானதா? கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் மிகவும் மோசமான முறையில் நடந்துகொள்ளும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இவ்வாறு நடைபெறும் சம்பவங்கள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை கோவைக்கு முரணாக காணப்படுகின்றது. அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை மற்றும் நற்பண்புகளில் முக்கியமானவை சில பின்வருமாறு, சகல உறுப்பினர்களும் சபையின் ஒவ்வொரு அமர்விற்கும், அத்தக…
-
- 1 reply
- 645 views
-
-
http://www.kaakam.com/?p=1814 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக உலகந்தழுவி தமிழர்களின் அரசியல் பரப்பில் கூடுதலாக ஒலிக்கப்படுவதும், அதிலும் கூடுதலாக அதன் உட்கிடைசார்ந்து மலினப்படுத்தப்படுவதுமான சொல் யாதெனில் “தமிழ்த்தேசியம்” எனலாம். தமிழீழ விடுதலைப் போராட்டம் களத்தினில் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் தமிழர்தேசம், தமிழர் தாயகம், தன்னாட்சியுரிமை, தமிழீழ விடுதலை, தமிழின விடுதலை, தமிழினவெழுச்சி போன்ற சொற்களே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடையாளப்படுத்துவனவாக அரசியல் அரங்கில் இடைவிடாது ஒலிக்கப்பட்டு வந்தன. தமிழிய சிந்தனைத்தளத்தில் செயலாற்றும் முனைப்புக்கொண்ட புரட்சிகரமானோர்களிடத்தில் தமிழ்நாடு விடுதலை, தமிழ்த்தேசிய மீட்சி போன்ற சொல்லாடல்கள் வெகுமக்களிடத்தில் ப…
-
- 1 reply
- 1k views
-
-
கம்யூனிஸமா? நாஸிசிசமா? இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு என்று என்னைக் கேட்டால், நான் கம்யூனிசம் என்று தான் சொல்வேன். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. 1937 ல் சேர்ச்சில் இப்படி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நாடான பிரிட்டனை ஆட்சி செய்திருந்த சேர்ச்சில் கம்யூனிசத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரே காரணத்தோடு தான். கம்யூனிஸம், நாஸிஸம் இரண்டையும் அவர் ஒரே வரிசையில் வைத்து தான் ஒப்பிடுகிறார். சாம்பர்லைன் ஹிட்லரை ஆதரிப்பதை தொடக்கம் முதலே சேர்ச்சில் எதிர்த்து வந்திருந்தார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். நாம் இணைய வேண்டியது சோவியத்துடன் என்று 1938 முதலே சேர்ச்சில் சொல்லி வந்திருக்கிறார். ஐரோப்பாவை சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்து வந்தது. …
-
- 1 reply
- 734 views
-
-
கொரோனா கட்டுப்பாடுகளும் குளறுபடிகளும் -புருஜோத்தமன் தங்கமயில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலம், மக்களை நாளாந்தம் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு 3,000 என்கிற அளவைத் தொட்டிருக்கின்றது; உயிரிழப்புகளும் 30 என்கிற அளவில் ஒவ்வொரு நாளும் பதிவாகின்றது. உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு அப்பால், தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, இன்னும் அதிகமிருக்கலாம் என்பது, சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட தரப்புகளின் அச்சமாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகள், கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் அமலுக்கு வந்திருக்கின்றன. மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையோடு ஆரம்பித்த கட்டுப்பாடுகள், தற்போது வீடுக…
-
- 1 reply
- 563 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கோரி நிற்கும் கடப்பாடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக நாளை காலை (மே 18) மீண்டும் கூடப் போகின்றோம். மௌன வணக்கம் செலுத்தி, அஞ்சலிச் சுடரை ஏற்றி, நினைவு உரைகளை நிகழ்த்திவிட்டுக் கலைந்து செல்வதுடன் இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முடித்துக் கொள்ளப்போகிறோம்(?). அப்படியானால், முள்ளிவாய்க்காலில் நாம் மேற்கொள்ள வேண்டிய கூட்டுச் சத்தியத்துக்கான கடப்பாடு எங்கு போனது? முள்ளிவாய்க்கால் என்பது நினைவேந்தலுக்கான களம் மட்டும்தானா? அதனை மீறிய கூட்டுப் பொறுப்பையும் நீதி கோரலுக்கான தார்மீகத்தையும் அது கொண்டிருக்கவில்லையா? இப்படி ஏராளமான கேள்விகளினால் தொக்கி நிற்கிறது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல…
-
- 1 reply
- 378 views
-
-
வரவு செலவுத் திட்டம் 2022: கட்டியிருந்த கந்தையும் காணாமல் போதல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் கடந்த இரண்டு தசாப்தகால வரவு செலவுத் திட்ட அனுபவங்கள் உணர்த்துகின்ற செய்தியொன்று உண்டு. உள்ளே எதுவுமற்ற ஒன்றை, அழகாக நிறந்தீட்டிக் காட்சிப்படுத்துவதற்கு அப்பால், எதையும் செய்யும் திறனற்றவை, அந்த வரவு செலவுத் திட்டங்கள் என்பதே அச்செய்தி. ஆனால், ஒவ்வொரு முறையும் வரவு செலவுத் திட்டத்தின் மீது, ஒரு நம்பிக்கையிருக்கும்; சில எதிர்பார்ப்புகள் இருக்கும். சாதாரண மக்களுக்கான சில திட்டங்கள் ஆறுதல் அளிக்கும். இம்முறை, சில அதிவிஷேசங்களோடு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அவை, இலங்கையின் பொருளாதார அடிப்படையின் குறைகளின் பாற்பட்டவை. இலங்கையின் பொர…
-
- 1 reply
- 325 views
-
-
எதிர்பாராத மாற்றம் - செல்வரட்னம் சிறிதரன் 24 ஜனவரி 2015 எதிர்பாராத விடயங்கள் நடைபெறுகின்ற ஆண்டாக இந்த ஆண்டு - 2015 ஆம் ஆண்டு தோற்றமளிக்கின்றது. ஜனவரி 8 ஆம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள் மிகுந்ததாகவே இருக்கும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக கத்தியின்றி சத்தமின்றி மாற்றம் நிகழ்ந்தது என்பதை நிதர்சனமாக்கும் வகையில் அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகிய உடன் - முன்னாள் ஜனாதிபதி மகிந்த வெற்றிபெற்றிருந்தாலும்சரி, தோல்வியுற்றிருந்தாலும்சரி, தேர்தலின் பின்னர் வன்முறைகள் நாட்டின் பல இடங்களில், குறிப்பாகத் தலைநகர் கொழும்பில் மோசமான முறையில் வெடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. தேர்தலில் தோல்வியு…
-
- 1 reply
- 462 views
-
-
தேர்தல்களுக்கும், தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கான தீர்வுக்கும் உள்ள உறவு குறித்து:ரகுமான் ஜான் பெப்ருவரி மாதம் 20 ம் திகதி கனடாவிலுள்ள ஸ்காபுரோ நகரில் “மே 18 இயக்கம்” ஒழுங்கு செய்த கூட்டத்தில் ரகுமான் ஜான் அவர்கள் ஆற்றிய உரை இங்கு இடம் பெறுகிறது. அன்பார்ந்த தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். இலங்கையில் தேர்தல் காய்ச்சல் தீவிரமாக வீசிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் சந்திக்கின்றோம். இந்த காலகட்டத்தில் நடைபெறும் இந்த தேர்தல்களுக்கும். தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கான தீர்வுக்கும் உள்ள உறவு குறித்து நாம் கேள்வி எழுப்புவது நியாயமானதே. அதுவே எனது இன்றைய உரையின் தலைப்புமாகும். ஒரு இருண்ட காலத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கும் நாம் நிறைய விடயங்களை…
-
- 1 reply
- 606 views
-
-
சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராகியதன் மூலம் சாதிக்கப் போவது என்ன? இக்கேள்விக்குரிய பதில் மற்றிருகேள்விகளில் இருந்தே தொடங்குகிறது. முதலாவதுகேள்வி, அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதற்கான உள்நாட்டுப் பின்னணிஎது? இரண்டாவது கேள்வி அவர் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பிராந்தியமற்றும் அனைத்துலக பின்னணி எது? முதலாவது கேள்வி. அவர் எதிர்க்கட்சித் தலைவராக ஏன் தெரிவுசெய்யப்பட்டார்? ஏனெனில் யார் எதிர்க்கட்சியார் ஆளும் கட்சி என்று துலக்கமாகக் கூற முடியாத ஓர வித கலங்கலான நிலை நாடாளுமன்றத்தில் தோன்றியுள்ளது. சரி. அப்படி ஒரு நிலை தோன்றக் காரணம் என்ன? காரணம் - ஜனவரி 08 ஆம் திகதி நிகழ்ந்த ஆட்சிமாற்றம்தான் அந்த ஆட்சி மாற்றமானது ஆளும் கட்சிக்கு எதிராக …
-
- 1 reply
- 288 views
-
-
[size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்து, கிட்டத்தட்ட 12 நாட்களாக நீடித்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. கிழக்கில் எப்பாடுபட்டாவது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் என்பதும், அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்பதும், தேர்தல் முடிந்தவுடனேயே தெளிவாகி விட்டது. ஆனாலும் கிழக்கில் முதலாவது முஸ்லிம் முதல்வர் பதவியேற்பதற்கு கிட்டத்தட்ட 12 நாட்களாகின. கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதல்வராக வேண்டும் என்ற முஸ்லிம்களின் கனவு, முஸ்லிம் கட்சிகளின் மூலமாகவன்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூலமே நிறைவேறியுள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் பலவீனங்களை நன்றாகவே வெளிச…
-
- 1 reply
- 567 views
-
-
[size=4]கொழும்பு கடற்கரையோரங்களில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகள் தொடக்கம், போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்படும் புதிய உந்துருளிகள்[/size] [size=2] [size=4]மற்றும் செல்லிடத் தொலைபேசிகள் வரையான பல்வேறு புதிய உற்பத்திப் பொருள்களின் பயன்பாடு, இலங்கை அறிவித்தது போன்று ஆசியாவின் தற்போதைய முன்னணிச் சந்தையாக கொழும்பு மாறிவருவதைக் காண்பிக்கின்றது.[/size][/size] [size=2] [size=4]ஆனால் இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் கூட இங்கே தனியார் முதலீடுகள் போதியளவில் மேற்கொள்ளப்படவில்லை. பொருளாதாரத் துறையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கைக்கொண்டு வரும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையில் தனியார் ம…
-
- 1 reply
- 764 views
-
-
வட மாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் தனது அமைச்சர்களில் இரண்டு அமைச்சர்களை இராஜினாமா செய்ய சொன்னதும் மற்றய இரண்டு அமைச்சர்களை கட்டாய விடுமுறையில் செல்லவேண்டுமென கேட்டுக்கொண்டதை தொடர்ந்து முதலமைச்சருக்கெதிராக அவரது கட்சியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் சிலரால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் தனக்கெதிராக சதி நடந்திருக்கின்றது எனவும் அதே நேரத்தில் முதலமைச்சர் தமிழரசு கட்சியை பழிவாங்குவதாகவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. இதை பார்த்து தமிழர்கள் ஆகிய நாங்கள் வெட்கப்படவேண்டியிருக்கின்றது. இந்த குழப்பங்களுக்கான அடிப்படை தவறு என்ன என்பது பற்றி ஆராய்வதே இப் பந்தியின் நோக்கமாகும்.…
-
- 1 reply
- 1k views
-
-
கிழக்கில் தொடரும் புறக்கணிப்பு நான் முதலமைச்சராவதற்கு ஆதரவு தாருங்கள். 4 அமைச்சர் பதவிகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பொதுத் தேர்தல் வரும் போது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்யக் காத்திருக்கிறேன். அப்போது தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரும் வாய்ப்பும் ஏற்படுமென தயாகமகே கூறியபோது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தண்டாயுத பாணி, இவ்வாறு கூறினார். சிறுபான்மை இனமாகிய முஸ்லிம் மக்களை புறம் தள்ளிவிட்டு பேரினவாத கட்சிகளான உங்களோடு சேர்ந்து நாம் கிழக்கில் ஆட்சி அமைக்கத் தயாராகவில்லை. முதலமைச்சர் பதவி, மந்திரிப்பதவியென்பன எங்களது நோக்கமுமல்ல. கிழக்கு தமிழ்– முஸ்லிம் உறவுகளோடு வளர்க…
-
- 1 reply
- 462 views
-