Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விற்றுத்தீர்ந்த காதல் கதை (பாகம் -26)

Featured Replies

 

இக்கதையின் முன்னைய பகுதிகளை வாசிக்க...

 

விற்றுத் தீர்ந்த காதல் கதை (Part 01-02-03-04-05-06-07 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 08-09-10-11-12 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 13-14-15-16 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 17-18-19-20 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 21 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part - 22 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம்-23)

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம்-24)

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம் -25)

 

 

 

கவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி  பிரிந்திருக்கும் காதலர்களுக்கு பேருதவியாக இருக்கின்ற இந்தக் காலத்தில், அஞ்சலியையும் இவனையும் பற்றி சொல்லியா தெரியவேண்டும். நேரம் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் பேசிக்கொள்வார்கள். 'ஸ்கைப்' என்கின்ற ஒன்று அவர்கள் இருவரும் முகம்பார்த்துப் பேசுவதற்கு பெரும் வசதியேற்படுத்திக் கொடுத்திருந்தது.

 

அவனுக்கு வேலைப்பழு அதிகமாக இருந்தாலும் அஞ்சலியுடன் கதைப்பதற்காக நேரம் ஒதுக்கத் தவறுவதில்லை. இருந்தாலும்  சில சமயங்களில் வேலைப்பழு காரணமாக சரியான நேரத்தில் ஃபோன் எடுப்பதற்கு அவ்வப்போது மறந்துவிடுவான். அப்பொழுதெல்லாம் அஞ்சலி கொஞ்சம் கோபப்பட்டாலும் இவனது  கெஞ்சும் வார்த்தைகளினால் பின்னர் சமாதானமாகிவிடுவாள். அவனுக்கும் அவளுக்குமிடையில் சண்டை வருவதென்றால்,  அதற்கு ஒரே காரணம் அவனது வேலைப்பழுவினால் ஏற்படும் அந்த பாழாய்ப்போன 'மறதி'யாகத்தானிருக்கும்.  

 

மலேசியா இவனுக்கு அவ்வளவு இலகுவான வாழ்க்கையைக் கொடுத்திருக்கவில்லை.  ஆனாலும் தன் கஷ்டங்கள் , கவலைகள் எதனையும் அஞ்சலியிடம் வெளிப்படுத்தியதும் இல்லை. 'அவள் படித்துக்கொண்டிருக்கிறாள். தன் கஷ்டங்களை சொல்லப்போய்.... வீணாக அவளைக் குழப்பக்கூடாது' என நினைப்பவன் இவன். ஆனால் அஞ்சலியின் எதிர்பார்ப்போ அதற்கு எதிர்மாறாக இருந்தது.

 

kajalagarwalunseen16.jpg

 

அவனைப்பற்றி  எல்லாவற்றையும் அவளிடம் சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பவள் அவள். அதைப்போல தன்னைப்பற்றியும் தன்னைச்சுற்றி நடக்கும் விடயங்கள் அனைத்தையும் இவனிடம் பகிர்ந்தும் கொள்வாள். அவள் அப்படி எதிர்பார்த்ததில் எந்தத்தப்பும் இல்லைத்தான். ஆனால் 'அவள் வருத்தப்படுவாள்.... அவளை வீணாகக் கஷ்டப்படுத்தக் கூடாது' என நினைத்து அவன் தன்னுடைய கஷ்டங்கள் கவலைகள் அனைத்தையும் அவளிடமிருந்து  இவன்  சொல்லாமல் மறைத்ததிலும் ஒரு நியாயம் இருந்தது. ஆனாலும் அவளின் அன்பான குரலைக் கேட்டாலே தன் கஷ்டங்கள் எல்லாம் காற்றோடு கரைந்ததுபோவதுபோல் உணருவான். அவன் அப்பொழுது மிகுந்த சந்தோசமாகவிருந்த தருணங்கள் என்றால் அது  அவளுடன் பேசிக்கொண்டிருந்த நிமிடங்களாகத்தான் இருக்கமுடியும்.

 

 

இவன்  ஏதாவது பிரச்சினைகளால் எப்போதாவது 'மூடவுட்' ஆக இருந்தால்.... "என்ன ஆச்சுடா?" என க் கரிசனையோடு விசாரிப்பாள். ஆனால் இவன்  "ஒன்றுமில்லை"  என சொல்லிச் சமாளித்துவிடுவான்.

தொடர்ந்தும் வற்புறுத்திக் கேட்டாளென்றால்... "பிறகு விளக்கமா சொல்லுறன்" என்பான்.  "ஏன்டா என்னிட்ட சொல்லக் கூடாதா?" என அவள் உரிமையாய் எப்படிக் கேட்டாலும் தன் பிரச்சினைகளை அவன் அவளிடம் சொல்லியதில்லை.  

57af1df92-1.jpg

 

இவர்களுக்குள்   இடைவெளியை ஏற்படுத்தும் ஒரு காரணமாக அவனது இந்தச் செயல் அமையும் என

அவனுக்கு அப்பொழுதே தெரிந்திருந்தால் அவன் அப்படி நடந்திருக்கவே மாட்டான்.

 

                     *******                   *******                      *******                          *******                                  *******

 

2009ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி

 

இவர்களின் காதல்கதையில் 'வில்லன்' இல்லாத குறையைத் தீர்க்க ஒரு கதாபாத்திரம் அறிமுகமாகிறது இவனுக்கு.

 

பிரதாப் - அஞ்சலியின்  தந்தை வழியில் ஒன்றுவிட்ட அண்ணன்.  லிவர்பூலிலுள்ள அக்காவோடு தங்கியிருந்தார். அஞ்சலியின் அண்ணன் என்றாலும் ஒப்பீட்டளவில் அவரின் வயது கொஞ்சம் அதிகம்... கிட்டத்தட்ட நாற்பதைத் தொட்டிருந்தது. கொஞ்சம் வில்லங்கமான பேர்வழி. அஞ்சலியைப் பொறுத்தவரையில், அண்ணன் என்ற உரிமையை அளவுக்கதிகமாக எடுத்து அதிகாரம் பண்ணும் குணம் கொண்ட ஒருவர்.

 

பிரதாப்பை இவனுக்கு ஆரம்பம் முதலே பிடிக்காமல் போனதற்கு அவரது இந்தக் குணம் மட்டுமல்ல,

அப்போது நடந்தேறிய சில சம்பவங்களும்  பிரதான காரணங்களாயிருந்தன.

 

அவற்றில் முதலாவது,

 

ஒருமுறை பிரதாப் அஞ்சலியின் மன்செஸ்டர் வீட்டுக்கு சொல்லாமற்கொள்ளாமல் வந்திருந்தார்.

வந்தவரின் கண்ணில் முதலில் பட்டதே அஞ்சலியின் மேசையிலிருந்த  அஞ்சலியும் அவனும் இணைந்துநின்று எடுத்திருந்த அழகான ஜோடிப்படம் தான். பிறகென்ன சொல்லவா வேண்டும்...!?

அஞ்சலியிடம் சி.ஐ.டி விசாரணைபோல் விசாரணை நடத்தப்பட,  அஞ்சலி தன் காதல் விடயத்தை அவரிடம் சொல்லவேண்டியதாகியது. பிரதாப்போ... அதை அவளின் தந்தையிடம் சொல்லப்போவதாக மிரட்டவும்,

 

"இல்லை அண்ணா... படிப்பு முடிஞ்சதும் நானே சொல்லத்தான் இருக்கிறன். தயவுசெய்து இப்போதைக்கு சொல்லிப்போடாதையுங்கோ! படிப்புக் குழம்பிப் போயிடும்"  என கெஞ்சிக்கூத்தாடி ஒருவாறு அதைத் தடுத்துவிட்டாள் அஞ்சலி.

64136393vijay-kajal.jpg

 

 

 

ஆனால் அதன்பின்னர் அவர் செய்த சில விடயங்கள் இவனுக்கு மிகுந்த எரிச்சலூட்டியது. அஞ்சலியின் பெற்றோர்களைத் தொடர்புகொண்டு லண்டனில் ஒரு நல்ல மாப்பிள்ளை இருப்பதாகவும் அவர்களுக்கு விருப்பமென்றால் கூடியவிரைவில் அஞ்சலிக்குத்  திருமணம் செய்து வைக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார் பிரதாப். ஆனால் அஞ்சலியின் படிப்பினைக் கருத்திற்கொண்டு அப்போதைக்கு அதனை நிராகரித்திருந்தனர் அஞ்சலியின் பெற்றோர்.

 

அஞ்சலி ஒருவனை மனமாரக் காதலிக்கிறாள் எனத் தெரிந்திருந்தும் அஞ்சலிக்கு வேறு ஒருவரை திருமணம் செய்துவைக்க முயற்சித்த அந்தச் செயல் பிரதாப்பின்மேல் இவனுக்கு விழுந்த முதலாவது கறுப்புப் புள்ளியாய் அமைந்தது.

 

அடுத்தது,

 

லிவர்பூலிலிருந்த அஞ்சலியின் ஒன்றுவிட்ட அக்காவின் திருமணத்துக்கு அஞ்சலி தன் பல்கலைக்கழக நண்பர்கள் சிலருடன் சென்றிருந்தாள். திருமணநாளிற்கு முன்னைய நாளில், எல்லா முன்னேற்பாட்டு வேலைகளும் நடந்துகொண்டிருந்தவேளையில் சில வேலைகளைச் செய்துமுடித்துவிட்டு அஞ்சலியும் நண்பர்களும் சிறிது ஓய்வாகக் கதைத்துக்கொண்டிருந்தனர். கலகலப்பாகக் கதைத்துக்கொண்டிருந்ததில் அவளது அண்ணன் பிரதாப் அஞ்சலியினை பலமுறை அழைத்திருந்தது அவளின் காதில் விழுந்திருக்கவில்லை.

 

சற்று உரத்த தொனியில் கடுமையாக அஞ்சலியினைக் கூப்பிட்ட பிரதாப்பினை அப்பொழுதுதான் கவனித்தாள் அஞ்சு. "என்ன அண்ணா...?" என்றவாறு அப்பாவித்தனமாகப் பிரதாப் பக்கத்தில் போனவளிடம்,

"அங்கையென்ன இளிச்சுக் கதைவேண்டிக்கிடக்கு....?" என திட்டியபடி அவளது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டதும் அஞ்சலி கதிகலங்கிப் போனாள். அந்த எதிர்பாராத அறையினைத் தாங்கும் வல்லமை மிக மென்மையான அஞ்சலியிடம் இருக்கவில்லை. அதிர்ச்சியிலிருந்து மீண்டவளை அழுகைதான் அரவணைத்துக் கொண்டது.

 

319076_447789595279033_1734531756_n.jpg

 

அவளின் இயலாமை, அழுகை,அவமானம் எல்லாமே ஒன்றுசேர சிறிதுநேரம் கழித்து இவனிற்கு போன்பண்ணி நடந்தவற்றைச் சொன்னபோது,  இவன் மிகவும் கொதித்துப் போனான்.

 

'பெண்களுக்கு கைநீட்டி அடிப்பது என்பது ஆண்மையின் இயலாமை' எனக் கருதுபவன் இவன். அது கட்டிய மனைவியாக இருந்தாலும் சரி... யாராக இருந்தாலும்,  பெண்களிடம் கைநீட்டக் கூடாது என்பதுதான் இவனது கொள்கை. தன் மனைவியை வேறொருவர் அடிப்பதை இவனால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்??? மிகுந்த கோபப்பட்டவனை ஒருவாறு சமாளித்து "இதை ஒரு பெரிய பிரச்சினை ஆக்காமல் விடுங்கோ !" எனச்  சமாதானப்படுத்தினாள் அஞ்சலி. ஆனால், 'எதிர்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதாப்பை தன் உறவென்றோ சொந்தமென்றோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லை' என்று தீர்மானமாக அஞ்சலியிடம் கூறிவைத்தான்.

 

ஆனால்  பின்னொருநாளில்....  அஞ்சலிக்கும் அவனுக்கும் இடையில் எந்த  உறவுமேயில்லாமல் ஆக்கப்போவதில் முக்கிய பங்கு வகிக்கப்போவது அந்தப் பிரதாப்தான் என அப்பொழுது அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

 

 

தொடரும்...

கதையின் தொடர்ச்சிக்கு:

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம் -27)

 

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுவதற்கு நன்றி கவிதை

தொடருங்கள் கவிதை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகக்குறி மட்டும் தான் ........... :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கவிதை!

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள், கவிதை!

  • தொடங்கியவர்

தொடர்ந்து எழுதுவதற்கு நன்றி கவிதை

 

 

தொடருங்கள் கவிதை!

 

 

தொடருங்கள் கவிதை!

 

 

தொடர்ந்து எழுதுங்கள், கவிதை!

 

நிச்சயமாக தொடர்ந்து எழுதி முடிப்பேன். என்ன நேரத்தில் எழுத ஆரம்பித்தேனோ தெரியவில்லை... இப்பொழுது மூன்றாவது நாட்டிலிருந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன். :rolleyes:  மிக நீண்ட ஒரு பயணத்தினால் இடைக்கிடை தொடர்ந்து எழுத இயலாத சூழ்நிலைகள் உருவாகியிருந்தன. தாமதங்களிற்கு தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள்.

 

பலமுறை சொல்லியிருக்கின்றேன்.... இக்கதை முற்றுமுழுதாக உண்மையாக நடந்த நடந்துகொண்டிருக்கின்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்படுவது.  முடிவு தெரியுமுன்பே... முடிவிலிருந்துதான் கதையை எழுத ஆரம்பித்திருந்தேன். ஆனால் அதுவும் அப்படியே அமைவதுபோல் பல மாற்றங்கள்.... பல சம்பவங்கள் நடந்தேறிவிட்டன....நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அவையனைத்தும் இக்கதையின் தொடர்ச்சியாக வரும்.

மனநிலையும் சூழ்நிலையும் சரியாக அமைந்தால் நிச்சயமாக வெகுவிரைவில் எழுதி முடிக்கின்றேன். :)

 

தாங்கள் அனைவரும் தரும் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் என் தாமதங்களை பொறுத்துக் கொண்டமைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். :)

தொடருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் எழுதுவது கண்டு சந்தோசம் கவிதை..தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..வேறை ஒன்றும் சொல்லத் தோன்ற இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.