Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளைப் போலத் தனியரசு நடத்துகிறது பொதுபல சேனா! – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
புலிகளைப் போலத் தனியரசு நடத்துகிறது பொதுபல சேனா! – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசனம். 
[sunday, 2014-04-13 05:51:07]
Rishad-130414-150.JPG

விடுதலைப் புலிகள் இலங்கைக்குள் சமாந்தரமான அரசு ஒன்றை இங்கு நடத்தியமை போன்று பொதுபல சேனாவும் அரசு ஒன்றை நடத்துகின்றது, புலிகள் போல விரும்பிய இடத்தில், விரும்பிய நேரத்தில் தாக்கிவிட்டு யாராலும் விசாரிக்கப்படாமல் சுதந்திரமாக அதனாலும் செல்ல முடிகின்றது. என்று அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் பகிரங்கமாக வேதனை வெளியிட்டிருக்கின்றார். நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஒரு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

  

பொதுபல சேனாவின் அண்மைக் கால நடவடிக்கைகளைக் கண்டித்துத் தாம் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு வேதனை தெரிவித்திருக்கின்றார். பொதுபல சேனா தன்னை சட்டபூர்வமற்ற ஒரு பொலிஸ் என்பது போல அறிவிக்கும் 'தைரியத்தை' வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆனால் அதனை யாராலும் கேள்விக்கு உட்படுத்த முடியவில்லை. பொதுபல சேனா கடந்த இரண்டு வருடங்களாக சிறுபான்மையினரை - குறிப்பாக முஸ்லிம்களை - இலக்குவைத்துச் செயற்பட்டு வருகின்றது. ஆனால் இந்த அழிவுப் போக்கு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் தவறிவருவதால் ஊடகங்களின் முன்னாலேயே பகிரங்கமாக அத்தகைய அராஜகங்களில் ஈடுபடும் அளவுக்கு அவர்கள் உத்வேகம் அடைந்திருக்கிறார்கள்.

சட்டத்தின் முன் அனைவரும் சமரசம் என்பதை நடைமுறைப்படுத்துமாறு உரிய அதிகாரிகளைக் கோருகின்றோம். யுத்தத்தின் முடிவின் பின்னர் சிறுபான்மையினருக்கு - குறிப்பாக முஸ்லிம்களுக்கு - எதிராக நிகழ்த்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும். - இப்படி அவர் மேலும் கோரியுள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=107433&category=TamilNews&language=tamil

ஆனால் நீங்கள் தமிழரை கிழக்கில் கொல்ல வடக்கில் புலிகள் உங்களை பாதுகாப்பாக அனுப்பியது போல் பொது பல சேனா செய்யாது.

இன்னொரு கருப்பு யூலை தான்.

இவர்  ஏன் புலிகள் என்று எல்லாவற்றுக்கும் வசை பாடுகிறார். அவர் இனம் ,மதம்  சார்ந்த அல்கைய்தா வை  உதாரணம் காட்ட வேண்டியது தானே.  

 

இல்லாட்டி  பலஸ்தீன  பயங்கரவாதம், காஸ்மீர் பயங்கர வாதம் என்று  நிறைய  உதாரணங்கள் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபல சேன பெளத்த சிங்கள பேரினவாதம்.. முஸ்லீம் மதவாத்தை.. ஜிகாத்தை ஒரு வழி பண்ணாமல் விடாது. விடவும் கூடாது. இவர் இப்படியே ஓதிக்கிட்டு திரியட்டும். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபல சேன பெளத்த சிங்கள பேரினவாதம்.. முஸ்லீம் மதவாத்தை.. ஜிகாத்தை ஒரு வழி பண்ணாமல் விடாது. விடவும் கூடாது. இவர் இப்படியே ஓதிக்கிட்டு திரியட்டும். :lol::D

 

 

உண்மைதான்  நெடுக்கு.....

மரத்தில் ஏறியிருந்து

அடியைத்தறிப்பது என்பது இதைத்தான்

 

செய்யட்டும்

செய்யட்டும்

இசுலாமியர்கள்  உலகெங்கும்  இதைத்தான் செய்கிறார்கள்.......

  • கருத்துக்கள உறவுகள்

Rishad-130414-150.JPGஇவரின் அடாத்தான குடியேற்றம் பொதுபலசேனாவுக்கு புண்ணில் புளியை கரைத்தது போலுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.