Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என நினைப்பது தவறு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என நினைப்பது தவறு : இரா.சம்பந்தன்

வீரகேசரி நாளேடு 2/15/2010 9:11:45 AM - அடிமைகளாக என்றாலும் ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என்று எவராவது சிந்தித்தால் அது தவறான விடயமாகும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஏற்கவில்லை என்பதை தமிழ்ப் பேசும் மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக வாக்களித்து இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு நிரூபித்துள்ளனர் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.பிமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நிரந்தர தீர்வுக்கு நாம் வலியுறுத்த வேண்டுமானால் பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ்ப் பேசும் மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளிக்க வேண்டும். இதன் மூலம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எமது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்து நிரந்தர தீர்வுக்கு வலியுறுத்த முடியும் என்றும் அவர் சொன்னார்.

இந்தியாவுடன் யுத்த சூழலிலும் அதற்குப் பின்னரும் நாம் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றோம், எமது மக்களின் கோரிக்கைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லாது நாம் யாருக்கும் அடிபணியப் போவதில்லை. பாராளுமன்ற தேர்தலின் பின்னர் நிரந்தரமான தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா எமக்கு வாக்குறுதியளித்துள்ளது. எனவே எமது மக்கள் வரும் தேர்தலில் 90 வீதம் வாக்களித்து தமது நிலைப்பாட்டை மீள உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திருமலையிலுள்ள அவரது வீட்டில் நேற்று நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்களுடனான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார். மாவட்டக் கிளைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான க.துரைரெட்ணசிங்கம், தலைமையில் நேற்றுக் காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மேலும் பேசிய ஐ. சம்பந்தன் கூறியதாவது.

மாவட்ட ரீதியாக வேட்பாளர் தெரிவு

நாங்கள் மாவட்ட ரீதியாக வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம், மாவட்ட ரீதியாக மக்களால் முன்மொழியப்படும் பிரதிநிதிகள் தொடர்பாக எமது கட்சியின் உயர்பீடம் கொழும்பிலே வரும், செவ்வாய், புதன்கிழமை கூடி பிரதிநிதிகளை உறுதி செய்யவுள்ளது.

ஊடகங்கள் வாயிலாக எமது கட்சியை விட்டு மக்களைப் பிரிக்க அரசு பல்வேறு சதிகளை செய்துவருகிறது. அதனையிட்டு நாம் கவலையடையவில்லை. நாம் எமது மக்களின் கோரிக்கையில் உறுதியாகவுள்ளோம்.

நாங்கள் எமது போராட்ட வரலாற்றில் முக்கிய கால கட்டத்தில் இருக்கின்றோம். நாங்கள் ஒரு போதும் வன்முறையை விரும்பவில்லை. கடந்த 60 ஆண்டுகால போராட்டத்தில் 30 வருட காலம் ஆயுதப் போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். அவர்களின் தியாகத்தை நாம் மதிக்கின்றோம்.

அந்தக் காலத்தில் 94 ஆம் ஆண்டு மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் இரு சந்தர்ப்பங்கள் எமக்கு கிடைத்தன. அவை தவறவிடப்பட்டு விட்டன. ஒஸ்லோப் பேச்சுவார்த்தையில் இரு பகுதியினரும் உள்ளக சுய நிர்ணய உரிமைக்கு இணங்க வேண்டும் என்பது முடிவாகியிருந்தது. அவை துரதிஷ்டவசமாக அது கைகூடவில்லை.

ஆனாலும் நாம் மக்களின் கோரிக்கையை அரசியல் உரிமைகளைத் தாரை வார்த்து, ஒருக்காலும் செல்ல மாட்டோம். நாங்கள் ஒரு போதும் நாட்டை பிளவுபடுத்திச் செல்லவில்லை. இந்தியாவில், பிரான்சில், சுவிசர்லாந்தில் இருப்பது போன்று அந்தந்த மாநில மக்கள் அவர்களது தேவைகளை பரிபாலனங்களைச் செய்கிறார்கள்.

சுய நிர்ணய உரிமைகளே தேவை

அதேபோன்று எமது தமிழ் பேசும் மக்களும், தமது பூர்வீகமாக வாழும் பகுதியில் உள்ள சுய நிர்ணய உரிமைகளையே நாம் கேட்கிறோம். நாம் இதனை பலமுறை பாராளுமன்றத்திலும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்தியுள்ளோம்.

அவற்றைப் பெற்றுக் கொள்ள எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து சாத்வீகமாக போராடவும் தயங்கமாட்டோம்.

சிங்கள மக்கள் நிச்சயமாக இதனை, எமது நிலைப்பாட்டை உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள். தந்தை செல்வா ஒரு காலத்தில் தெரிவித்தார், தமிழர்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ளும் சிங்களத் தலைமைகள் இந்த நாட்டில் தோன்றவில்லை. ஆனால் அதுவரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.

நான் இங்கு வர முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேசிவிட்டுத்தான் வந்தேன். இத்தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் இணைந்து ஒற்றுமையாகவுள்ளோம். அண்மையில் கல்முனையில் என்னை முஸ்லிம் மக்கள் கௌரவித்தார்கள். இது தந்தை செல்வாவினால் வளர்த்து வரப்பட்ட இக்கட்சியின் கொள்கைக்குக் கிடைத்த பாராட்டாகும்.

இன்று ஜனாதிபதி சிங்கள மக்களின் அதிகப்படியான வாக்குகளால் தெரிவாகியுள்ளார். அதனால் ஜனாதிபதி ஆட்சி, அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனைப் போன்று எமது தமிழ் பேசும் மக்களும் முழுமையான வாக்களிப்பைச் செய்து மக்களின் அந்த அதிகாரத்தைத் தர வேண்டும். அதன் மூலம் எமது உரிமைகளை கோரிக்கைகளை இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்திடம் உரத்துக் கேட்க முடியும்.

நீங்கள் அளிக்கும் அதிகப்படியான வாக்குகள் சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித உணர்வை ஏற்படுத்த வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் நிலைப்பாட்டை நீங்கள் தேர்தலில் காட்ட வேண்டும்.

இந்த அரசு இரகசியமான சூழ்ச்சிகரமான திட்டத்தை செயற்படுத்தி வருகிறது. அதாவது எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ, அவர்களை சிறுமைப்படுத்தி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. பெரும்பான்மையாக இருந்தால் தானே உரிமை பற்றி பேச முடியும்?

அரசின் முயற்சி ஒரு நாளும் பலிக்காது. அதனை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை கடந்த தேர்தலில் காட்டியுள்ளனர். இறுதியாக ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். விவேகமாக ஆளும் கட்சியுடன் சேர்ந்துதான் அடிமைகளாகி என்றாலும் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என எவராவது சிந்தித்தால் அது தவறான வழியாகும். நாம் கடும் போக்கைச் சிந்திக்காமல் தொடர்ந்து செயற்பட்டு எமது தீர்வைப் பெறுவோம், அதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம்."

இவ்வாறு அவர் கூறினார்.

Edited by தமிழ் சிறி

வெற்றி பெற்றதின் பிறகு பேரம் பேசுறதுதான் மிக நல்லது...

  • கருத்துக்கள உறவுகள்

ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என நினைப்பது தவறு. இரா.ச

அது!!பாராளுமன்றம் கலைக்க முதல் இந்த யோசனைகள் பெரிதாகப் பேசப்படவில்லையே? ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க எதிர்க் கட்சிகளுடன் ஓடி ஓடி பேச்சுவார்த்தைகள் நடந்தது ஏன்.ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியவுடன் இறங்கி வருகிறார்கள். நல்லது நடந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

அது!!பாராளுமன்றம் கலைக்க முதல் இந்த யோசனைகள் பெரிதாகப் பேசப்படவில்லையே? ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க எதிர்க் கட்சிகளுடன் ஓடி ஓடி பேச்சுவார்த்தைகள் நடந்தது ஏன்.ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியவுடன் இறங்கி வருகிறார்கள். நல்லது நடந்தால் சரி.

நீங்கள் சொல்வதில் ஒரு நியாயம் இருந்தாலும்

ஐனாதிபதி தேர்தல் என்பது

இருவரில் எவரை என்பது சம்பந்தமானது

ஆனால் பாராளுமன்றதேர்தல் அ

எமக்கான பிரதிநிதிகள் சம்பந்தப்பட்டது

இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை பார்த்த பின்பாவது தமிழ் மக்கள் ஒற்றுமையாக தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து, தமது பலத்தை சிதற விடாது நிரூபிக்க வேண்டும். தமிழர்க்கு துண்பம் கொடுக்கும் சிறு நரிக்கூட்டம் கலைந்து ஓட வேண்டும். தமிழர் நலன் பற்றி சிந்தியாதவர் எவராக இருந்தாலும் அரசியல் அனாதைகள் ஆக்கபட வேண்டும். எத்தனையோ பேருக்கு எத்தனையோ சந்தர்ப்பம் கொடுத்தோம் இந்த முறை இவர்களுக்கு முழுமையாக எமது ஆதரவை கொடுத்து பார்ப்போம், வெற்றியின் பின் வழிதவறின், அமுதலிங்கத்தின் வரலாற்றை ஞாபகப்படுத்துவோம்.

இதை பார்த்த பின்பாவது தமிழ் மக்கள் ஒற்றுமையாக தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து, தமது பலத்தை சிதற விடாது நிரூபிக்க வேண்டும். தமிழர்க்கு துண்பம் கொடுக்கும் சிறு நரிக்கூட்டம் கலைந்து ஓட வேண்டும். தமிழர் நலன் பற்றி சிந்தியாதவர் எவராக இருந்தாலும் அரசியல் அனாதைகள் ஆக்கபட வேண்டும். எத்தனையோ பேருக்கு எத்தனையோ சந்தர்ப்பம் கொடுத்தோம் இந்த முறை இவர்களுக்கு முழுமையாக எமது ஆதரவை கொடுத்து பார்ப்போம், வெற்றியின் பின் வழிதவறின், அமுதலிங்கத்தின் வரலாற்றை ஞாபகப்படுத்துவோம்.

இந்த சந்தர்பத்தை பயன் படுத்தி கூட்டமைப்பு மகிந்தாவோடு ஒப்பந்த அடிப்படையில் சேரலாம், சேர்வதாக இருந்தால் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும், அனைத்து போராளிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும், கூட்டமைப்பு வடக்குகிழக்கில் முழுவதும் தனியாக நின்று வென்றாலும், அரசுடன் சேர்ந்து தமிழர்களின் விடுதலையையும் ,இயல்பு வாழ்வையும்தான் முன் வேலை திட்டங்களாக வைக்கும், அதையே நிபந்தனையாக வைக்கலாம், இதனால் ஒட்டுக்குழுக்களின் மந்திரிபதவிகளுக்கும் ஆப்பு வைக்கலாம், ஒட்டுகுழுக்களை அரசியலில் இருந்தே ஓரம் கட்டலாம். வடக்குகிழக்கு மக்களின் வாக்கு வேண்டுமென்றால் கூட்டமைப்பினதும், முஸ்லீம்காங்கிரசின் ஒத்துழைப்பும் இன்றி எதுவும் நடவாது என்னும் நிலையை கொண்டு வரவேண்டும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களை படித்தக்கு நன்றி, சம்பந்தர் இப்படி முடிவு எடுத்து இருகிறார் என்றால் அதில் நீண்டதூர நோக்கு இருக்கும். அவர் அரசியலில் பழம்தின்று கொட்டை போட்டவர். இப்போது வந்த சிறுவர்கள் எல்லாரும் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். எமக்கு எப்படியாவது நமது மக்களும், போராளிகளும் விடுதலை பெற வேண்டும் என்ற கருத்தை கள உறவுகளுக்கு அடிக்கடி நினைவு படுத்தும் உங்கள் ஆதரவுக்கு நன்றி :)

கருத்துக்களை படித்தக்கு நன்றி, சம்பந்தர் இப்படி முடிவு எடுத்து இருகிறார் என்றால் அதில் நீண்டதூர நோக்கு இருக்கும். அவர் அரசியலில் பழம்தின்று கொட்டை போட்டவர். இப்போது வந்த சிறுவர்கள் எல்லாரும் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். எமக்கு எப்படியாவது நமது மக்களும், போராளிகளும் விடுதலை பெற வேண்டும் என்ற கருத்தை கள உறவுகளுக்கு அடிக்கடி நினைவு படுத்தும் உங்கள் ஆதரவுக்கு நன்றி :D

இரண்டு கருத்தும் மாறாட்டமாய் இருக்கண்ணை. இரண்டுக்கும் இடையிலை ஏதாவது சிவபாணம் பாவிச்சனீங்களோ.? அதுதான் அண்ணை கஞ்சா. :o

இப்படி நம்பி நம்பியே நாசமாய் போங்கோ.

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு கருத்தும் மாறாட்டமாய் இருக்கண்ணை. இரண்டுக்கும் இடையிலை ஏதாவது சிவபாணம் பாவிச்சனீங்களோ.? அதுதான் அண்ணை கஞ்சா. :o

இப்படி நம்பி நம்பியே நாசமாய் போங்கோ.

நாங்கள் ஜடியாமட்டும்தான் கொடுப்போம் சம்பர் ஜயா எல்லாத்தையும் அலசி ஆரய்ந்து ஒரு நல்லமுடிவை எடுப்பார், அவர் எடுக்கிறது எல்லாம் நல்ல முவாகவே இருக்கும். அவ்ர் எவ்வளவு பெரிய ஆள். எவ்வளவு அனுபவம, இப்படி எத்தனை பேரை பாத்து இருப்பார் :D

நாங்கள் ஜடியாமட்டும்தான் கொடுப்போம் சம்பர் ஜயா எல்லாத்தையும் அலசி ஆரய்ந்து ஒரு நல்லமுடிவை எடுப்பார், அவர் எடுக்கிறது எல்லாம் நல்ல முவாகவே இருக்கும். அவ்ர் எவ்வளவு பெரிய ஆள். எவ்வளவு அனுபவம, இப்படி எத்தனை பேரை பாத்து இருப்பார் :o

நல்லா சமாளிக்கிறீயள். அதுவும் நல்லாத்தான் இருக்கு.

சம்பந்தன் பற்றி நானும் கேள்வி பட்டனான் இந்தியன் ஆமி காலத்திலை இருந்து இப்படித்தானாம் அமோகமாக தமிழ் மக்களுக்காக போராடி வெற்றிகளை குவிச்சவர். அமிர்தலிங்கம், நீலன், ஆனந்த சங்கரி எண்டு எல்லாரையும் திண்டு ஏப்பம் விட்ட மனுசன் எல்லோ.? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா சமாளிக்கிறீயள். அதுவும் நல்லாத்தான் இருக்கு.

சம்பந்தன் பற்றி நானும் கேள்வி பட்டனான் இந்தியன் ஆமி காலத்திலை இருந்து இப்படித்தானாம் அமோகமாக தமிழ் மக்களுக்காக போராடி வெற்றிகளை குவிச்சவர். அமிர்தலிங்கம், நீலன், ஆனந்த சங்கரி எண்டு எல்லாரையும் திண்டு ஏப்பம் விட்ட மனுசன் எல்லோ.? :D

ஆனால் அவற்றை ஒரு சொல்லுக்குதானே சனம் வாக்கை அள்ளி வீசுகினம். :o

ஆனால் அவற்றை ஒரு சொல்லுக்குதானே சனம் வாக்கை அள்ளி வீசுகினம். :o

யாரின் சொல்லுக்கு.? கூட்டமைப்பினதா.? அப்படி எண்டால் ஒருவருடம் முன் வந்த மாகான சபை தேர்தலில் கூட்டமைப்பு எப்படி தோற்றது.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரின் சொல்லுக்கு.? கூட்டமைப்பினதா.? அப்படி எண்டால் ஒருவருடம் முன் வந்த மாகான சபை தேர்தலில் கூட்டமைப்பு எப்படி தோற்றது.?

அப்ப எப்படி கூட்டமைப்பு ஆதரித்த சரத் வடக்கு கிழக்கில் வென்றார்,

அப்போ கூட்டமைப்பு சொன்னால் மகிந்தாவுக்கும் மக்கள் வோட்டு போட்டு இருப்பார்களா?

மக்களுக்கு வேறு தெரிவு இல்லை அதை விட மகிந்தா செய்த கொடுமைகளை தற்காலிகமாவது சரத் முலம் இல்லாம செய்ய்வே மற்றும்படி கூட்டமைப்பு சொன்னதால தான் சரத்துக்கு போட்டார்கள் என்பது சுத்த முட்டாள்த் தனமான கருத்து. உண்மையில் கூட்டமைப்பு மகிந்தாவுக்கு ஆதரவு சொல்லி இருந்தால் அப்போ தெரியும் உண்மை( சர்த் வென்றும் இருப்பான்)

யாரின் சொல்லுக்கு.? கூட்டமைப்பினதா.? அப்படி எண்டால் ஒருவருடம் முன் வந்த மாகான சபை தேர்தலில் கூட்டமைப்பு எப்படி தோற்றது.?

தமிழ்ச் சனம் தமிழ் கூட்டமைப்புக்கு ஆதரவில்லையா?

போச்சுட... பிறகேன் உரிமை பற்றி பேசுவான்.. பேசாமல் அரசியல் பற்றி பேசலாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ கூட்டமைப்பு சொன்னால் மகிந்தாவுக்கும் மக்கள் வோட்டு போட்டு இருப்பார்களா?

மக்களுக்கு வேறு தெரிவு இல்லை அதை விட மகிந்தா செய்த கொடுமைகளை தற்காலிகமாவது சரத் முலம் இல்லாம செய்ய்வே மற்றும்படி கூட்டமைப்பு சொன்னதால தான் சரத்துக்கு போட்டார்கள் என்பது சுத்த முட்டாள்த் தனமான கருத்து. உண்மையில் கூட்டமைப்பு மகிந்தாவுக்கு ஆதரவு சொல்லி இருந்தால் அப்போ தெரியும் உண்மை( சர்த் வென்றும் இருப்பான்)

கூட்டமைப்பு சொன்னால் சனம் மகிந்தாவிற்குதான் போட்டு இருப்பினம், ஆனல் சரத் வெண்று இருப்பான் சிங்களவரின் வாக்காள், இது சம்பந்தரின் ராச தந்திரம். :o

கூட்டமைப்பு சொன்னால் சனம் மகிந்தாவிற்குதான் போட்டு இருப்பினம், ஆனல் சரத் வெண்று இருப்பான் சிங்களவரின் வாக்காள், இது சம்பந்தரின் ராச தந்திரம். :o

கிட்டத்தட்ட உங்களுக்கு கூட்டமைப்பு மேலை கடுமையான பக்தி வந்திட்டுது போல. விட்டால் கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்வியள் போல.

கூட்டமைப்பின் செயற்பாடுகள் தமிழ்மக்களுக்கு ஏற்றது போல் இல்லை புலிகள் இருந்த காலத்தில் கூட்டமைப்பின் நானய கயறு புலிகள் கையில் இருப்பது போன்று ஒரு பிரமை இருந்த்து ஆனால் தற்போது புலிகள் இல்லாத கூட்டமைப்பி கட்டு அறுத்து செல்லும் காளை போல் ஓடிச் சென்று கள்ள மாடு அடிப்பவர்களான(இந்தியா)விடம் மாட்டுப்பட்டு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டத்தட்ட உங்களுக்கு கூட்டமைப்பு மேலை கடுமையான பக்தி வந்திட்டுது போல. விட்டால் கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்வியள் போல.

பக்தி இல்லை இது யதார்தம், இருப்பதில் நல்லதை தெரிவு செயவதும், அவர்கள் மூலம் தமிழரின், இயல்பு வாழ்வு திருப்ப உழைப்பதும் ஒவ்வொரு மானமுள்ள தமிழரின் கடமை என நான் நினைக்கிறேன்.

கூட்டமைப்பின் செயற்பாடுகள் தமிழ்மக்களுக்கு ஏற்றது போல் இல்லை புலிகள் இருந்த காலத்தில் கூட்டமைப்பின் நானய கயறு புலிகள் கையில் இருப்பது போன்று ஒரு பிரமை இருந்த்து ஆனால் தற்போது புலிகள் இல்லாத கூட்டமைப்பி கட்டு அறுத்து செல்லும் காளை போல் ஓடிச் சென்று கள்ள மாடு அடிப்பவர்களான(இந்தியா)விடம் மாட்டுப்பட்டு இருக்கிறார்கள்.

பெரும் தலைவர் கருணாநிதி போல பெரும் தலைவர் சம்பந்தரும் வளரும் வாய்ப்பு உள்ளது.

பக்தி இல்லை இது யதார்தம், இருப்பதில் நல்லதை தெரிவு செயவதும், அவர்கள் மூலம் தமிழரின், இயல்பு வாழ்வு திருப்ப உழைப்பதும் ஒவ்வொரு மானமுள்ள தமிழரின் கடமை என நான் நினைக்கிறேன்.

கூட்டமைப்பு சொல்லி இருந்தால் சனம் மகிந்தவுக்கு வோட்டு போட்டு இருப்பினம் எண்டது ஜதார்த்தமா ?? எனக்கு என்னவோ யாரோ கீச்சுகீச்சு முட்டுறது போலவே இருக்கு. :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும் தலைவர் கருணாநிதி போல பெரும் தலைவர் சம்பந்தரும் வளரும் வாய்ப்பு உள்ளது.

கூட்டமைப்பு சொல்லி இருந்தால் சனம் மகிந்தவுக்கு வோட்டு போட்டு இருப்பினம் எண்டது ஜதார்த்தமா ?? எனக்கு என்னவோ யாரோ கீச்சுகீச்சு முட்டுறது போலவே இருக்கு. :o

நான் எனது நிலப்பாட்டை சொன்னேன் யதார்தம் என்று, மக்களின் செயல் நம்பிக்கை, நம்பிக்கைதானே வாழ்கை.

  • கருத்துக்கள உறவுகள்

பழைய வேட்பாளர்களின் நீக்கம் நிகழுமாயின் அது குறித்து சம்பந்தன் மக்களுக்கு குறித்த வேட்பாளர்கள் முன்னிலையில் அவர்களின் கருத்தை நேரடியாக வழங்க வேண்டும். ஈபிடிபி ஆயுக் குழு முன்னாள் ஆதரவுக் கோஷ்டியினரை புதிய வேட்பாளர்கள் ஆக்குவதின் நோக்கங்களையும் சம்பந்தன் மக்களுக்கு விளக்க வேண்டும். இன்றேல் சம்பந்தன் எதிர்பாராத முடிவுகளை மக்கள் எடுக்க முற்படலாம். அது தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதில் சிங்களக் கட்சிகளோடு இணைந்து செயற்படுபவர்களுக்கு வாய்ப்பாக அமையும். :o

Edited by nedukkalapoovan

நான் எனது நிலப்பாட்டை சொன்னேன் யதார்தம் என்று, மக்களின் செயல் நம்பிக்கை, நம்பிக்கைதானே வாழ்கை.

நானும் ஒவ்வொரு வாரமும் அதிஸ்ரலாப சீட்டு வாங்கிறனான் பரிசு விழும் நம்பிக்கையில். ஆனால் எனக்கு ஒரு நாளும் விழவில்லை.

உங்கட நம்பிக்கையும் அப்படித்தான் இருக்கிறது. கிடைச்சால் அதிஸ்ரம்.

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன் யுத்த சூழலிலும் அதற்குப் பின்னரும் நாம் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றோம், எமது மக்களின் கோரிக்கைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லாது நாம் யாருக்கும் அடிபணியப் போவதில்லை. பாராளுமன்ற தேர்தலின் பின்னர் நிரந்தரமான தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா எமக்கு வாக்குறுதியளித்துள்ளது. எனவே எமது மக்கள் வரும் தேர்தலில் 90 வீதம் வாக்களித்து தமது நிலைப்பாட்டை மீள உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஜயா உங்களால் கூறப்படும் அதாவது இந்தியாவின் வாக்குறிதியை எப்படி பெற்றுக்கொண்டீர்கள்? எழுத்துமூலமா அல்லது வாய்மூலமா? இதை மக்களுக்கு நிரூபித்தீர்களா? அல்லது நிரூபிக்கப்போகின்றீர்களா?

ஜயா! இந்தியாவின் வாக்குறுதியை பெற்றீர்களோ இல்லையோ அவர்களிடம் இருந்து நல்லாக சினிமா அரசியலை படித்துவிட்டீர்கள்.

நாங்கள் எமது போராட்ட வரலாற்றில் முக்கிய கால கட்டத்தில் இருக்கின்றோம். நாங்கள் ஒரு போதும் வன்முறையை விரும்பவில்லை. கடந்த 60 ஆண்டுகால போராட்டத்தில் 30 வருட காலம் ஆயுதப் போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். அவர்களின் தியாகத்தை நாம் மதிக்கின்றோம்.

ஜயா! கடந்த ஜனாதிபதித்தேர்தலில் மக்கள் நல்ல தெளிவான நிலையில் இருந்து உங்களையும் தெளிவு படுத்திவிட்டார்கள். இப்போ அந்த பாடத்தில் இருந்து பொதுத்தேர்தலுக்கு உங்களை தயார் படுத்துகின்றீர்கள் என்பதை மேலே உங்களால் கூறப்பட்ட வசனத்தில் இருந்து அறியக்கூடியதாக இருக்கு.

இந்த அரசு இரகசியமான சூழ்ச்சிகரமான திட்டத்தை செயற்படுத்தி வருகிறது. அதாவது எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ, அவர்களை சிறுமைப்படுத்தி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. பெரும்பான்மையாக இருந்தால் தானே உரிமை பற்றி பேச முடியும்?

ஆகா! மக்களை உசுப்பேற்றுகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் அந்த தலைவனை முன்பு இருந்ததைவிட ஆயிரம்மடங்கு அதிகமாக நேசிக்கவேண்டியதேவையை காலம் ஏற்படுத்துகிறது.

மே18 2009க்கு பிறகு தமிழ் அரசியல் கோமாளிகளாலும்,கோணங்கிகளாலும்,காட்டிக்கொடுத்தவர்களாலும் நிறைந்துள்ளது.கடந்த முப்பதுவருடங்களாக இத்தகைய கோமாளிகளும்,ஈனங்களும் தலையெடுக்கவிடாமல் வைத்திருந்ததற்காகத் தன்னும் தலைவரை இன்னும் மனது விசுவாசிக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.