Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. புலவர்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    5829
    Posts
  2. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    10705
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46775
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/03/21 in all areas

  1. நாங்கள் எல்லாம் அந்தக்காலத்திலை லேடீஸ்ன்ரை கையை டச் பண்ண மாட்டம். அவ்வளவுத்துக்கு ஒழுக்க சீலர்மார்.😎
  2. இந்தப் புத்தாண்டில் இருந்து தொந்தியை இழந்து தினமும் ஐந்து நிமிடம் ஒதுக்கி ஆரோக்கியமாய் வாழ சும்மா ஆசைப்படுவோம்........! 👍
  3. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25 ஆவணி 2006 கருணா துணைப்படையினர் சிறுவர்களைக் கடத்திச் சென்று பயிற்சியளிக்கின்றனர், அவர்களுடனான அரசின் தொடர்பு கவலையளிக்கிறது - மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை கடந்த வியாழக்கிழமை மனிதவுரிமைக் காப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் கருணா குழுவின் சிறுவர் கடத்தல்களில் அரச ராணுவமும் சேர்ந்து ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியிருக்கிறது. 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை கருணா குழு கடத்திச் செல்வதும், அக்குழுவிற்கு அரச ராணுவம் கடத்தல்களில் உதவிவருவதும் தமக்கு பாரிய கவலையாக உருவெடுத்துள்ளதாக அவ்வமைப்பின் சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் ரொஸ் தெரிவித்தார். "கருணா குழுவிற்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பு மிகத் தெளிவாக இப்போது புரிகிறது. அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் அரச ராணுவத்தின் அனுசரணையின்றி கருணா குழுவினரால் சிறுவர்களைக் கடத்த முடிவதென்பது சந்தேகத்திற்குரியது. சிறுவர்களைக் கட்டாயமாக ராணுவப் பயிற்சிக்குக் கடத்திச் செல்லும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேரவிரும்புவதுபோலத் தெரிகிறது. உலகில் மிகவும் மோசமான மனிதவுரிமைகளில் ஈடுபடும் பர்மிய ராணுவத்துடன் ஒப்பிடக்கூடியளவிற்கு இலங்கை ராணுவம் செயற்பட விரும்புவதுபோலத் தெரிகிறது. சிறார்களை ராணுவப் பயிற்சிக்கு கட்டாயமாகக் கடத்திச் செல்லும் செயற்பாடுகளில் இலங்கை ராணுவம் ஈடுபட்டு வருவதுபற்றி அரசு தீவிரமாகச் சிந்திக்கவேண்டிய தருணம் இது" என்று கொழும்பிற்கு விஜயம் செய்தபோது அவர் செய்தியாளர்களிடம் கூறினார். கிழக்கு மாகாணத்தில் மிக மோசமான வன்முறைகள் அரச ராணுவத்தினராலும், துணைப்படையினராலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில் பல நூற்றுக்கணக்கான சிறார்களும் இளைஞர்களும் கருணா துணைப்படையினராலும், அரச ராணுவத்தாலும் ராணுவப் பயிற்சிக்குக் கடத்தப்பட்டு வருகின்றனர். கருணா துணைப்படையினரின் முகாம்களில் இருந்து தப்பிவந்த சில இளைஞர்களின் தகவல்களின்படி பெருமளவு சிறார்களும் இளைஞர்களும் அரச ராணுவத்தால் தமிழர்களுக்கும், புலிகளுக்கும் எதிரான நிழல் யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்கு பயிற்றப்பட்டு வருகின்றனர் என்று தெரியவருகிறது. மிக அண்மையில் ஏறாவூர் பொலீஸில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின்படி விஷ்ணு ஆலயத்தில் விளையாடிக்கொண்டிருந்த 15 இளைஞர்களை வெள்ளைநிற வான்களில் வந்த கருணா குழு கடத்திச் சென்றிருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற இக்கடத்தலில் ஆயுதம் தரித்த கருணா துணைப்படையினர் இளைஞர்களை இழுத்துவந்து வான்களில் ஏற்றும்போது ராணுவம் கருணா குழுவினருக்கு பாதுகாப்பு வழங்கியதாகத் தெரியவந்திருக்கிறது.
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25 ஆவணி 2006 பதின்ம வயது இளைஞரை கட்டாயப்படுத்தி தற்கொலைத் தாக்குதலுக்கு அனுப்பிய கருணா துணைப்படை மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் தயாமோகன் அவர்களின் கூற்றுப்படி, அரச ராணுவத்தினால் வழிநடத்தப்படும் கருணா துணைப்படையினர் கட்டாயப்பயிற்சிக்கு கடத்திவந்த 19 வயது இளைஞரை வெடிமருந்து கட்டப்பட்ட உந்துருளியில் புலிகளின் முன்னரங்குகள் நோக்கி அனுப்பி தூரவிருந்து இயக்கும் கருவிமூலம் வெடிக்கவைத்துக் கொன்றனர் என்று கூறியுள்ளார். தமது தற்கொலைத் தாக்குதலில் 5 புலிகள் பலியானதாக கருணா துணைப்படை உரிமைகோரியிருந்தபொழுதும், தமது முன்னரங்கிலிருந்து குறைந்தது 80 மீட்டர்கள் தொலைவில் அந்த இளைஞர் வரும்பொழுதே கருணா குழுவினர் குண்டை வெடிக்க வைத்ததனால் தமக்குச் சேதம் எதுவும் ஏற்படவில்லையென்பதை உறுதிப்படுத்திய தயாமோகன் அப்பாவி இளைஞரைக் கட்டாயப்படுத்தி கருணா குழு கொன்றதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். திமிலைதீவு சந்தை வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட அப்பாவி இளைஞரான சத்தியசீலன் தர்ஷன் சில தினங்களுக்கு முன்னரே கருணா குழுவினரால் கடத்தப்பட்டிருந்ததாகவும், அவரையே வவுனதீவு முன்னரங்கு நோக்கி கருணா குழு கட்டாயப்படுத்தி அனுப்பிக் கொன்றுபோட்டதாகவும் தெரியவருகிறது. தர்ஷனின் உடலைக் கையளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கும் அதேவேளை, அண்மையில் முச்சக்கரவண்டியொன்றில் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு புலிகளின் முன்னரங்கு நோக்கி வந்தவேளை குண்டுவெடித்து இரு துணைப்படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.
  5. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30 ஆவணி 2006 கடத்தப்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் பொலொன்னறுவையில் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் அம்பாறை மாவட்டத்திலிருந்து கருணா துணைப்படையினரால கடத்திச் செல்லப்பட்ட பெருமளவு சிறுவர்களும் இளைஞர்களும் பொலொன்னறுவையில் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று யுனிசெப் பிரதிநிதிகளைச் சந்தித்த புலிகள் முறையிட்டிருக்கின்றனர். இவ்வாறு கடத்தப்பட்டவர்களில் பலர் இலக்கத்தகடற்ற வெள்ளை வான்களில் வலம்வரும் ராணுவ துணைப்படைக் குழுக்களால் கடத்தப்பட்டிருப்பதாகவும் இந்த முகாம்களுக்கு விஜயம் செய்வதன்மூலம் இச்சிறாரின் கதிபற்றி அறிந்துகொள்ளுமாறும் புலிகள் வேண்டுகோள் விடுத்தனர். அம்பாறை மாவட்டம், பாவட்டை பகுதியில் இடம்பெற்ற இச்சந்திப்பில் யுனிசெப் பிரதிநிதிகளைச் சந்தித்த புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் ஜெயா அம்பாறை மாவட்டத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெறும் கடத்தல்கள் பற்றி முறையிட்டார். இதற்குப் பதிலளித்த யுனிசெப்பின் டி புருட் தம்மிடம் இவ்வாறான 32 கடத்தல்கள் பற்றி முறைப்பாடு கிடைத்திருப்பதாகவும், புலிகளும் தம்மிடம் இருக்கும் 18 வயதிற்குக் கீழான போராளிகளை விடுவிக்குமாறும் கோரிக்கை முன்வைத்தார். ஜெயா அவர்கள் மேலும் இக்கடத்தல்கள் பற்றித் தெரிவிக்கும்போது, கடத்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோரின் கூற்றுப்படி வெள்ளைநிற இலக்கத்தகடற்ற வான்களில் வந்த தம்மை கருணா குழு என்று அடையாளப்படுத்திக்கொண்ட ஆயுததாரிகள் ராணுவம் பாதுகாப்பிற்கு நிற்க பெற்றோரிடமிருந்து அச்சிறார்களை இழுத்துச் சென்றதாக கூறினார். மேலும் அவர் கூறும்போது, இளைஞர்களின் விருப்பிற்கு மாறாக கடத்தப்பட்டு பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெரும்பாலானோர் பொலொன்னறுவை மாவட்டம் தீவுச்சேனைப் பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். திருக்கோயில் அதிரடிப்படையினர் அப்பகுதி வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மீது கொடுத்துவரும் துன்புருத்தல்கள்பற்றி ஜெயா விவரித்தபோது, இதுபற்றி தமது தலைமைக் காரியாலயத்திற்கு அறியத்தருவதாக டி புருட் கூறினார்.
  6. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30 ஆவணி 2006 கருணா துணைப்படை மற்றும் இராணுவத்தால் வெட்டிக்கொல்லப்பட்ட மீனவர் - வாழைச்சேனையில் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம், கண்ணகிபுரம், கோராவில் வீதியைச் சேர்ந்த மீனவரான 27 வயது நிரம்பியவரும் இரு பிள்ளைகளின் தந்தையுமான பெரியதம்பி வேலுப்பிள்ளை எனும் குடும்பஸ்த்தர் செவ்வாயன்று இரவு கருணா துணைப்படையினராலும், பாதுகாப்பிற்கு வந்த இராணுவத்தாலும் குரூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். கல்மடு "50 வீடுகள்" கிராமத்தில் வாழ்ந்துவந்த இவரை கருணா துணைப்படையினர் கடத்தமுயன்றவேளையில் அவர்களிடமிருந்து தப்பியோடி அருகிலிருந்த வீடொன்றில் பதுங்கியிருந்தார். தப்பியோடுபோது காலில் துப்பாக்கிச் சூடுபட்டுக் காயமடைந்த அவரை மீண்டும் தேடிக் கண்டுபிடித்த துணைப்படையினர் அவர் மறைந்திருந்த வீட்டிலிருந்து வெளியே இழுத்துவந்தனர். நடக்கப்போகும் அசம்பாவிதத்தை உணர்ந்துகொண்ட அப்பகுதி மக்கள் அவரைக் கொல்லவேண்டாம், இங்கே சிறுபிள்ளைகள் இருக்கிறார்கள் என்றுக் கெஞ்சியபொழுதும் அவர்மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்த துணைப்படையினரும் ராணுவமும், மக்கள் பார்த்திருக்க அவரது தலையை வாட்களாலும் கோடரிகளாலும் கொய்தெடுத்தனர். துணைப்படையினரும் ராணுவமும் வீதியில் அவரது உடலை வீசிவிட்டுச் சென்றபின்னர் அங்கே வந்த பொலிஸார் அவரது உடலை வாழைச்சேனை வைத்தியசாலைக்குப் பிரதேசப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இவர் கொல்லப்பட்டதற்கான காரணத்தை துணைப்படையினரோ ராணுவமோ இதுவரை வெளியிடவில்லை. கட்டாய ராணுவப் பயிற்சிக்கு வரமறுத்ததாலேயே இவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார் என்றும், பயிற்சிக்கு வரமறுப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்படியே இவ்வாறு இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
  7. அதிகப் பாதுகாப்போடு வாழ்பவர்கள்
  8. அதை ஏன் பேசுவான்... இன்றா இரண்டா எடுத்துச்சொல்ல...?
  9. முதலையின் வாயிலகப்பட்ட புலி.......! 🐊
  10. சுவையான இளநீர்ப் பாயாசம், சிம்பிள் & டேஸ்ட் ......! 👍
  11. 1970 ம் ஆண்டுப் பகுதியில் துருக்கிநாட்டில் இருந்து ஜேர்மனியில் குடியேறிய குடும்பம். மஞ்சள் நிறத்திலான ரீ சேட்டுடன் காணப்படும் சிறுவன் இன்று கொரோனா தடுப்பு மருந்தை உலகத்திற்கு அளித்த விஞ்ஞானி!
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன்
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன் .
  14. ஏராளன் .இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நலமோடு வாழ்க
  15. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன் .
  16. நீரும் நிலமும் வானும் கலந்துறவாடும் காலத்தில் கதிரவனோ மேற்கில்......! 😁
  17. இருமணங்கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்......! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.