Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    20
    Points
    46808
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    38778
    Posts
  3. புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    13683
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87997
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/14/21 in all areas

  1. காசும் போச்சுது….கையிலையிருந்த சுறாவும் போச்சுது…! கண்களில் கண்ணீர் முட்டிய படியே...கரையிலிருந்து சிரிப்பு வந்த திசையை நோக்கிச் சந்திரன் திரும்பவே ...அந்தச் சிரிப்புக்குரியவள் அங்கே நின்று கொண்டிருந்தாள்! மீனவர்களுக்கேயுரிய கொஞ்சம் பரட்டையான தலை மயிர்! நீல நிறம் கொஞ்சம் கலந்த கண்கள்! வெளிர் நிறம்! அந்தக் கண்களில் ஒரு குறும்பு..! வீட்டை விருந்தாளிகள் வந்திருக்கினம் போல கிடக்குது! வெறும் கையோட போகப் போறீங்களோ? விருந்தினர் வீட்டுக்கு வந்தது அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று சந்திரன் ஆச்சரியப்பட வேண்டியே இருக்கவில்லை! நெடுந்தீவில் அந்தக் காலத்திலிருந்தது ஒரேயொரு இ.போ.ச பஸ் மட்டும் தான், மாவலித் துறைமுகத்திலிருந்து குருக்கள் மடம் வரைக்கும் ஓடுவதுண்டு! யாராவது தூரத்தில் ஓடி வருவதைக் கண்டால், அவர் பஸ்ஸுக்கு வரும் வரைக்கும் அந்த பஸ் காத்திருக்கும்! அதே போலவே குறிகாட்டுவான் போகும் வள்ளமும் பஸ்ஸைக் காணும் வரை காத்திருக்கும்! அதனால் ஊருக்குப் புதிதாக யார் வந்தாலும் அது ஊருக்கே தெரிந்து விடுவதில் ஆச்சரியம் எதுவும் இருப்பதில்லை! சரி...இப்ப என்ன செய்யப் போறீங்கள் என்று கூறியவள் கடலுக்குள் மெல்ல இறங்கினாள்! தண்ணீர் இடுப்பளவில் வரும் வரைக்கும் நடந்து போனவள்...திடீரெனத் தண்ணீருக்குள் புதைந்து போனாள்! செத்தல் தேங்காய்கள் இரண்டைக் கட்டிக்கொண்டு கரையில் நீந்துவதுடன் அவனது நீந்தல் அறிவு மட்டுப் பட்டிருந்தது! கண்களை அகல விரித்த படி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில்...அவள் மீண்டும் தண்ணீருக்கு மேலே வருவது தெரிந்தது! பின்னர் நடந்து கரைக்கு வந்தவளின் கைகளில் ஒரு பெரிய கயல் மீன் இருந்தது! கயல் மீனின் பிடரிப்பக்கம் கறுப்பாக இருக்குமென்ற வரையில்..அவனுக்குத் தெரிந்திருந்தது! எதுவும் பேசாமலே...கண்களில் மட்டும் நன்றியைக் காட்டிய படியே மீனை வாங்கிக் கொண்டாள்! கோடாலியைத் தொலைத்து விட்டுக் கவலையுடன் குளத்துக் கரையில் குந்திக்கு கொண்டிருந்த குடியானவன் முன்பு தோன்றிய தேவதையின் கதையின் நினைவு வந்தது! எவரோ போட்டு வைத்த களங்கண்டிப் பட்டியிலிருந்து...அந்த மீனை அவள் கள்ளமாகக் களட்டிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று அப்போது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! அதன் பின்னர் அவளைக் காணும் போதெல்லாம் ...அவனுக்குள் ஒரு எதிர்பாராத உணர்வு ஒன்று தோன்றுவது உண்டு! எல்லோரும் அவளைப் பிலோ என்று கூப்பிடுவதால்..அவனும் அவ்வாறே அவளைக் கூப்பிடுவான்! அடிக்கடி ‘பிலோவைக் ’ காணும் சந்தர்ப்பங்களை வேண்டுமென்றே அவன் உருவாக்கிக் கொள்வான்! அப்படியான சந்திப்பு ஒன்றின் போது உனது கண்கள் ஏன் நீலமாக இருக்கின்றன எனச் சந்திரன் கேட்கவே, உண்மையிலேயே நீங்கள் ஒரு அப்பாவி தான் என்று கூறியவள் ஒரு நாட்டுப் பாடலொன்றைப் பதிலாகத் தந்தாள்! என்ன பிடிக்கிறாய் அந்தோனி எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே பொத்திப் பொத்திப் புடி அந்தோனி பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே அப்போது அவனுக்கு...அந்தப் பாடலின் கருத்துப் புரியவேயில்லை! அது புரியும் காலத்தில் அவள் அருகில் இருக்கவில்லை!! ஒரு நாள் அருகிலிருந்த தேவாலயத்தில் அவள் பிரார்த்தனையில் இருந்தாள்! சந்திரனும் கண்களை மூடிப் பிரார்த்தித்தான்! தேவாலயங்களில் எப்போதுமே ஒரு அமைதி குடி கொண்டபடி இருப்பதால், அது ஒரு பொதுவான சந்திப்பிடமாக அமைந்தது! கடவுளிடம் என்ன வேண்டிக்கொண்டாய் என அவள் கேட்டாள்! வலசைப் பறவைகளைப் போல எனக்கு இறக்கைகள் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்! நீ என்ன கேட்டாய்? மீனைப் போல...பூவல்கள் வேண்டுமென்று கேட்டிருப்பாய் என்றான்! இல்லையே...நீ நல்லாயிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்! நீ நல்லாயிருந்தால் தானே...நான் நல்லாயிருக்க முடியும் என்று அவள் கூறிய போது தான் அவர்களது நட்பு எவ்வளவு தூரம் ஆழமாகி விட்டது என்று அவனுக்குப் புரிந்தது! அதெல்லாம் சரி….எதற்காக வலசைப் பறவைகளைப் போல நீ வலசை போக வேண்டும்? அந்தப் பறவைகள் வாழுகின்ற இடத்தில்...இரவுகள் மிகவும் நீளமானவை! பகல் பொழுதுகள் மிகவும் குறைந்தவை! பனிக்காலம் அதிகம்! கோடை காலம் குறைவு! அதனால் அவை வலசை போக வேண்டியது காலத்தின் கட்டாயம்! வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் பறவைகள்…..தென்னிந்தியாவின் வேடந்தாங்கல் சரணாலயம் நிரம்பிய பின்னர்...அவற்றின் கண்களில் அடுத்த தெரிவு நெடுந்தீவு தான்! அதனால் அங்கு வாழும் மக்களின் பேச்சு வழக்கில்..வலசை போகும் பறவைகள் உதாரணமாக அடிக்கடி வருவதுண்டு! தம்பி...தோசைக்குப் போட்டிருக்கிறன்...கொண்டு வரட்டே? அந்தப் பெரியவரின் குரல் அவனது சிந்தனையை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தது! சரி...ஐயா ..என்று கூறியவன் பிலோமினா அன்று கூறியது எவ்வளவு உண்மை என்று சிந்தித்தான்! நான் எதற்காக வெளி நாடு போனேன்? இன்று வரையில் அந்தக் கேள்விக்கான பதில் அவனுக்கு கிடைக்கவேயில்லை! எல்லோரும் போகின்றார்களே என்ற ஒரு மந்தை மனநிலையில் தான் சந்திரன் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்! தோசையைக் சாப்பிட்டு விட்டுச் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கியவன் கொஞ்ச நேரம் காற்றை நன்றாக உள்ளிளுத்து..வெளியே விட்ட படியே சைக்கிளை மிதித்தான்! நீண்ட நாட்களாக ஓடாததால்...கிட்டத் தட்ட ஒரு நீராவி எஞ்சினைப் போலவே, அவனது மூச்சுச் சத்தம் அவனுக்குக் கேட்டது! கொஞ்சம் களைத்துப் போனவன் கண்களில் ஒரு பெட்டிக்கடை தெரிந்தது! சைக்கிளை நிறுத்தி விட்டுக் கடையில் நின்ற சிறுமியிடம் ஒரு சோடா வாங்கிக் குடித்தவன் சிறுமியிடம் காசைக் கொடுக்கக் காசை வாங்கிய சிறுமி மெத்தப் பெரிய உபகாரம் என்றாள்! வெள்ளைக்காரர் கடைகளில் காசு கொடுக்கும் போது அனேகமாகத் தாங்க் யூ என்று சொல்லுவார்கள்! அதைத் தான் அந்தச் சிறுமியும் சொல்லுகின்றாள்! இந்த வழக்கம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இருந்திருக்குமா? இப்போதெல்லாம் சாமான் ஏதாவது வாங்கினால், ஒரு இடமும் நன்றி கூடச் சொல்வதில்லையே! தொலைந்து போகின்ற நல்ல பழக்கங்களில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் என நினைத்துக் கொண்டான்! எங்கேயோ நிறையக் கிளைகள் விட்ட பனை மரம் ஒன்று நின்றது நினைவிலிருந்தது!! இப்போது அதனைக் காணவில்லை! மகா வித்தியாலயத்தை அண்மித்ததும் அவனது பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன! பிலோமினாவின் வீட்டை அண்மிக்கும் போது, முன்பு கிடுகுகளினால் மேயப் பட்டிருந்த அந்த வீடு, இப்போது ஒரு சின்ன ஒட்டு வீடாக மாறியிருந்ததைக் கண்டு அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! விறாந்தையில் ஒரு வயசானவர் ஒருவர், சாய் மனைக்கதிரையில் சாய்ந்த படியே, வீரகேசரி வாசித்துக் கொண்டிருந்தார்! தூரத்தில் வரும்போதே அவரை அடையாளம் கண்டு கொண்டவன், சைக்கிளைக் கொண்டு போய்ப் பகிர் வேலியில் சாத்தி வைத்தான்! கண்ணாடியைக் கழட்டியவர் தலையை நிமிர்த்திச் சந்திரனைப் பார்த்தார்! ஆச்சரியத்துடன், தம்பி இண்டைக்குக் காலமையிலையிருந்து இந்தக் காகம் விடாமல் கத்திய படியேயிருந்தது! இண்டைக்கு யாரோ வரப் போகினம் எண்டு எனக்கு அப்பவே தெரியும் என்றவர் தனது இரு கரங்களாலும் அவனைக் கட்டிப் பிடித்துத் தழுவினார்! மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக அவர் காணப்பட்டார்! சந்திரனும் தான் கொண்டு வந்த சூட் ஒன்றை அவரிடம் கொடுக்கத் தம்பி...இதைப் போட்டுக் கொண்டு நான் எங்க போறது என்று ஆதங்கப் பட்டார்! ஏன், ஞாயிற்றுக் கிழமைகளில் சேர்ச்சுக்குப் போறதில்லையோ எண்டு கேட்க...அதெல்லாம் முந்திப் போல இல்லை மகன் என்று கூறினார்! அவர் எப்போதுமே சந்திரனை மகன் என்று தான் அழைப்பார்! இப்ப கடலுக்குப் போறதில்லையோ என்று சந்திரன் கேட்க ' இல்லையப்பன், கண்டறியாத சரள வாதம் ஒரு காலில வந்த பிறகு தண்ணிக்குள்ள கன நேரம் நிக்கேலாது! வலது கால் விரல்களில மரத்துப் போன மாதிரி ஒரு விதமான உணர்ச்சியும் இருக்காது! அந்தக் காலத்தில்..அவர் திருக்கைகளைக் கருவாட்டுக்காகக் கீறி எறியும் அழகு இப்போதும் கண் முன்னே தெரிந்தது! பருந்துகள் வானத்தில் வட்டமிட்ட படி...கடலுக்குள் வீசியெறியப் படும் திருக்கைக் குடல்களைத் தூக்கிக் கொண்டு போவதற்காக வட்டம் போட்டுப் போட்டுக் கீழே இறங்கி வருவது, ஒரு சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி விமானங்கள் வந்திறங்குவது போலவே இருப்பதால், சந்திரனும், பிலோமினாவும் அதை எப்போதும் ரசிப்பது உண்டு! அத்துடன் அவளைத் தான் கருவாட்டுக்குக் காவலாக விட்டுப் போவதால் கிடைக்கும் தனிமையையும் சந்திரன் விரும்புவதுண்டு! அங்கு வரும் மீனவர்களின் வலைகளில் சில வேளைகளில் பெரிய சிங்கி றால்கள் சிக்குவதுண்டு! அவ்வாறு கிடைப்பவகளில் பெரிதானவைகளைத் தெரிந்து பிலோவின் அப்பா அவனிடம் கொடுப்பதுமுண்டு! இதை யாழ்ப்பாணம் கொண்டு போனால் நிறையக் காசு வருமே என்று சந்திரன் சில தடவைகளில் அவரிடம் சொல்லும் போது,மகன் இதை யாழ்ப்பாணம் கொண்டு போற காசு இதன் விலையை விடக் கூடவாக இருக்கும் என்று கூறுவதுண்டு! எதுவோ ஒரு பெரிய பொருளாதாரத் தத்துவம் ஒன்றைக் கூறி விட்டது போல, அவரது முகத்தில் ஒரு சிரிப்பொன்று எப்போதும் வந்து போகும்! கருவாடு காய விடும் போது...கொஞ்சம் வெயில் ஏறியதும், கடற்கரை கொஞ்சம் வெறுமையாகத் தொடங்கும்! காய்கின்ற கருவாடுகளை காவலுக்கு நிற்கும் நாய்கள் பார்த்துக் கொள்ள சந்திரனும், பிலோமினாவும் எதிர்பார்க்கும் தனிமை கொஞ்சம் கிடைக்கும்! இன்னும் வரும்....!
  2. காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....? இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...! அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன? மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்! அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்! கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு உயர்ந்து போயிருக்கும்! சந்திரனின் மனதிலிருந்து ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி, குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது! தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது! வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்! அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..! இப்போது அவனை ஒருவருக்கும் தெரியாது..! ஆரோ வெளிநாட்டுக்காரர் போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக் காரனாக்கி விட்டதை நினைக்கக் காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்! வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! நயினாதீவு நாக பூஷணி அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது! அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்! ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன் நினைத்துக் கொள்வதுண்டு! தேர்த் திருவிழா பார்க்க வந்து அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த இருபத்தியொரு பேரும் ஒரு முறை வந்து நினைவில் போனார்கள்! வள்ளம் எழாத்துப் பிரிவைத் தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்! கொஞ்சம் தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத் தொடங்கியது! முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது! இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்! முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்! இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..! முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம் ஓடாமையெல்லோ கிடக்குது! வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள். அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்! இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை! இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்! தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன! ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்! அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்! இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது! அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்! மாவலி இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது போல இருந்தது! அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள் மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது! அடுத்த பகுதியில் முடியும்…!
  3. சுதா சந்திரனின் சூப்பர் மூவ்மென்ட்ஸ் ........! 👍
  4. "நினைவில் வைத்துக் கொள் உன் வாழ்க்கையில் உறக்கம் இரக்கம் இரண்டும் அளவோடு தான் இருக்க வேண்டும். உறக்கம் அளவுக்கு மீறினால் சோம்பேறி என்பார்கள். இரக்கம் அளவுக்கு மீறினால் ஏமாளி என்பார்கள்."
  5. கருணா அம்மான் வடக்கைப் போல கிழக்கிலும் பெரும்படைகள் கட்டவேண்டும் என்று சமாதானக் காலத்தில் கோயில் திருவிழாக் காலங்களிலும் கட்டாயமாக அள்ளிக்கொண்டு போனவர்தானே. பிரிவுக்குப் பின்னாலும் இரு பகுதியும் பிள்ளைகளைப் பிடிப்பதில் மட்டும் ஒற்றுமையாக இருந்தார்கள்.
  6. சுதந்திரம் எம் சுவாசம். "சுதந்திரம் விரும்பி சுவாசத்தை நிறுத்திய அத்தனை வீரர்களுக்கும் வந்தனம்". மரத்தினின்று வீழ்ந்த பழுத்த சருகுகள் வேருக்கு உரமாகின்றன மரணித்த வீரனின் பாச நினைவுகள் மனதில் தடுமாறுகின்றன சுதந்திரம் ஒரு பசுஞ்சுனைதான் அதை நோக்கி நாம் கொடும் பாலையில் அல்லவா நடக்கின்றோம் கண்தொடும் தூரம் கானல் நீர் நாம் எதைத் தொலைத்தோம் எங்கே தொலைந்து போனோம் எம் மூதாதையர் வாழ்ந்தார்களே நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்களே சுதந்திரமாய் வாழ நினைத்தோமே சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட முயன்றோமே யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் காக்கை வன்னியனும், கருணா நிதியும் நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா சுதந்திரத்தை விற்பார்களா காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா ஓ ....வீரனே ...... திறந்திருக்கும் உன் விழிகளில் இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி விழுந்து கிடக்கும் உன் உடல்கூட முட்களையும், கற்களையும் ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு இனம் காட்டி விட்டல்லவா விதையாகியது.......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.........!
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 28, ஆவணி 2018 திருகோணமலையில் தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே பிளவினை உருவாக்க துணைராணுவக் கொலைக்குழுக்களைக் களமிறக்கிவரும் ராணுவப் புலநாய்வுத்துறை ராணுவப் புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் துணைராணுவக் கொலைப்படை பிரமுகர் ஒருவர் கிழக்கில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, திருகோணமலை மாவட்டம் மூதூர் பகுதியில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையில் முறுகலினை ஏற்படுத்த கட்டைப்பறிச்சான் ராணுவ முகாமிலிருந்து செயற்பட்டு வரும் ராணுவப் புலநாய்வுத்துறையினர் கருணா துணை ராணுவக் கொலைப்படை உட்பட இன்னும் வேறு துணைராணுவக் குழுக்களைப் பயன்படுத்திவருவதாகத் தெரிவித்திருக்கிறார். தமிழர் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட இனரீதியிலான தாயகச் சிதைப்பிலிருந்து மக்களின் கவனத்தினைத் திசை திருப்பி, தமிழ் முஸ்லீம் சமூகங்களுக்கிடையே கைகலப்பினை உருவாக்குவதன் மூலம், தமது இன அடக்குமுறையினை மேற்கொள்ள மைத்திரிபால - ரணில் நல்லாட்சி அரசு முயல்வதாகவும் இந்த ஆயுததாரி மேலும் தெரிவித்தார். அண்மைய நாட்களில் மூதூர் பகுதியில் இடம்பெற்ற இரு சமூகங்களுக்கிடையிலான பிணக்கில் கருணா குகுழுவே இருந்ததாகவும், ராணுவப் புலநாய்வுத்துறையினரின் வழிகாட்டலிலேயே இவர்கள் செயற்பட்டுவருவதாகவும் தெரிகிறது. அரசின் அமைச்சுக்களூடாக மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழரின் தாயகச் சிதைப்பிற்கு முஸ்லீம்களைக் காரணமாகக் காட்டுவதன் மூலம், அவர்கள் மீதான தாக்குதல்களை கருணா துணைக் கொலைப்படையுறுப்பினர்கள் தலைமையில் "தமிழர்கள்" எனும் போர்வையின் கீழ் நடத்த எத்தனிப்பதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, மூதூரில் முஸ்லீம் தீவிரவாத அமைக்களுடன் நெருங்கிச் செயற்பட்டுவரும் ராணுவப் புலநாய்வுத்துறையினர், அவர்களுக்கு போதைவஸ்த்துப் பாவனையினை அறிமுகப்படுத்திவருவதாகவும், தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகளுக்காக முஸ்லீம் இளைஞர்களை இவர்கள் தூண்டிவருவதாகவும் இந்த கொலைக்குழு முக்கியஸ்த்தர் மேலும் கூறுகிறார். திருகோணமலை மாவட்டத்தில் எல்லையிலிருந்து முல்லைத்தீவு மாவட்டம் வரையான கரையோரப் பகுதிகளில் சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் குடியேற்றங்களைத் தமிழர்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வருவதையடுத்து, அவர்களின் கவனத்தைத் திசை திருப்பவே தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே பிரிவினையொன்றினை மீள ஆரம்பித்து நடத்த ராணுவப் புலநாய்வுத்துறை முயன்றுவருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, ஆடி 2018 கருணா, பிள்ளையான், டக்கிளஸ் துணை ராணுவக் கொலைக்குழுக்களை மீள அணிதிரட்டும் இலங்கை ராணுவ புலநாய்வுத்துறை ராணுவப் புலநாய்வுத்துறையினரால் இயக்கப்பட்டுவந்த முன்னாள் துணைராணுவக் கொலைக்குழு உறுப்பினர்கள் சிலரின் தகவற்படி தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் மைத்திரிபாலவும் ரணில் விக்கிரமசிங்கவும் தமக்குக் கீழான பாதுகாப்புப் பிரிவுகளின் புலநாய்வுத்துறையினருக்கு வழங்கியுள்ள பணிப்புரையின்படி வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ராணுவப் புலநாய்வுச் சேவைக்கு வலுச் சேர்க்கும் முகமாக கருணா மற்றும் பிள்ளையான் துணை ராணுவக் கொலைக்குழுக்களை மீள ஒருங்கமைத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்துமாறு பணித்திருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த 4 வாரங்களாக இலங்கை ராணுவத்தின் தளபதி மகேஷ் சேனநாயவுக்கும் துணைராணுவக் கொலைக்குழுக்களுக்கும் இடையே நடந்துவரும் சந்திப்புக்களில் இதுபற்றி கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், மீள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கும் கொலைக்குழு உறுப்பினர்களுக்கு தகுந்த சன்மானமும், சலுகைகளும் வழங்கப்படும் என்று ராணுவத் தளபதியினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. துணைராணுவக் கொலைக்குழுக்களை மீள் ஒருங்கிணைத்து அதன் நடவடிக்கைகளை தொடங்கும் முகமாக மகேஷ் சேனனாயக்கவின் பதவிக்காலம் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் மேலும் ஒரு வருடத்தால் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துணைராணுவக் கொலைக்குழுக்களுக்கான நேர்முக தெரிவுகள் யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் போர்காலத்தில் வெள்ளைவான் கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மக்கள் மேல் உளவியல் ரீதியிலான அச்சமூட்டும் நடவடிக்கள் ஆகியவற்றில் கைதேர்ந்த அதிகாரிகளினால் நடத்தப்பட்டு வருவதாக மேலும் தெரியவருகிறது. பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் கடத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்குக் காரணமான இந்த ராணுவப் புலநாய்வுத்துறை அதிகாரிகள் யுத்தத்தின்பின்னர் பல உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதுடன், இவர்களில் அனைவருமே முன்னள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மிகுந்த விசுவாசம் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. மைத்திரிபால மற்றும் ரணில் ஆகியோரின் புதிய அரசில் இந்த அதிகாரிகள் தெற்கின் பகுதிகளுக்கு பதவி உயர்வுடனும், சம்பள அதிகரிப்புடனும் மாற்றப்பட்டு வந்தனர் என்று தெரியவருகிறது. இவர்களையே மீண்டும் தமது கொலைப்பணிகளை ஆரம்பிக்க துணைராணுவக் கொலைக்குழுக்களை மீள் ஒருங்கிணைக்கும் பணிக்கு நல்லாட்சி அரசாங்கம் வரவழைத்திருக்கிறதென்பது குறிப்பிடத் தக்கது.
  9. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, புரட்டாதி 2018 தனது சகாக்களுக்காக மேய்ச்சல் நிலங்களை வலிந்து விவசாய நிலங்களாக மாற்றும் துணைராணுவக் கொலைப்படை ஆயுததாரி கருணா கோரளைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள் அண்மையில் தெரிவித்த கருத்தின்படி சுமார் 550 ஏக்கர்கள் மேய்ச்சல் நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றும்படி முன்னாள் துணையமைச்சரும், துணைராணுவக் கொலைப்படை ஒன்றை வழிநடத்துபவருமான கருணா எனும் ஆயுததாரி தமக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இனக்கொலையாளி ராஜபக்ஷெவுடன் சேர்ந்து 2009 இல் முடித்துவைக்கப்பட்ட தமிழினக்கொலையில் பங்கெடுத்த கருணா, அரசின் செல்லப்பிள்ளையாக வலம்வடுவதுடன், தனது கொலைப்படையின் ஆயுததாரிகளுக்கும் தனது செல்வாக்கினைப் பாவித்து நிலங்கள், சொத்துக்கள் என்று தென் தமிழீழ மக்களின் வளங்களைச் சூறையாடிப் பெற்றுக்கொடுத்துவருவது தெரிந்ததே. அதனடிப்படையிலேயே, கோரளைப்பற்று பகுதியில் தமது வாழ்வாதாரத்தினை காலநடைகளை மேய்ப்பதன் மூலம் நடத்திச்செல்லும் பண்ணையாளர்களின் வயிற்றில் அடிக்கும் கைங்கரியமான மேய்ச்சல் நிலங்களை விவசாயக் கணிகளாக்கி தனது சகாக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் செயலில் கருணா இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. கிரான் மற்றும் செங்கலடி கால்நடை பண்ணையாளர்கள் அமைப்பின் செயலாளர் நிமலன் கந்தசாமி இதுபற்றிக் கூறுகையில், "எமது மேய்ச்சல் நிலங்களை கருணா விவசாய நிலங்களாக மாற்றி தனது அரசியலுக்குப் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் நாம் முறைப்பாடுகளை முன்வைத்து வருகிறோம், ஆனால் கிரான் விவசாய அம்பிவிருத்தி அதிகரியோ கருணாவின் கட்டளைக்குப் பயந்து எமது மேய்ச்சல் நிலங்களை கருணாவின் சொற்படி விவசாயக் காணிகளாக மாற்றும் நடவடிக்கையினை ஆரம்பித்துவிட்டார்" என்று கூறினார். மேலும், கருணாவினால் புதிய விவசாயக் காணிகளைப் பெற்றுக்கொள்ளவிருக்கும் அவரது கொலைப்படை உறுப்பினர்களும், அவர்களது நண்பர்களும் இம்மேய்ச்சல் நிலங்களில் இன்னும் கால்நடைகளை வளர்த்துவரும் பண்ணையாளர்களை அதிகாரிகளின் முன்னிலையில் தொடர்ச்சியாக மிரட்டிவருவதாகத் தெரியவருகிறது. கருணாவினால் அபகரிக்கப்பட்டிருக்கும் இந்த மேய்ச்சல் நிலம் பாலை வெட்டுவான் பகுதியில் அமைந்திருப்பதுடன் நீர்த்தேக்கங்களையும் கொண்டிருக்கிறது. கால்நடை வளர்ப்பிற்கு மிகவும் உசிதமான பகுதியென்பதால் பெருமளவு பண்ணையாளர்கள் இப்பகுதியினை தமது வாழ்வாதாரத்திற்காகப் பாவித்து வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. கருணாவின் இந்த நில அபகரிப்பினால் பாதிக்கப்பட்டிருக்கும் பண்ணையாளர்கள் இதுபற்றி மேலும் கூறுகையில், "அரச ஆதரவுடன், தீவிர சிங்கள பெளத்த பிக்குகள் தலைமையில் சிங்களமயமாக்கப்பட்ட எமது நிலங்களால் நாம் ஏற்கனவே வாழ்வாதாரங்களை இழந்துவருகின்ற நிலையில், கருணாவைப் பாவித்து சிங்களப் பேரினவாதம் அதே பிரித்தாளும் தந்திரம் மூலம் எமது நிலங்களை காவுகொள்ள பார்க்கிறது" என்று கூறுகின்றனர். கருணாவின் பலாத்கார காணி அபகரிப்பிற்கு பிரதேச செயலாளரும், மவட்ட செயலாளரும் துணைபோவதாகவும், தமது நலன்களுக்காகவும், பதவிகளுக்காகவும் கருணாவுக்குத் துணையாக நின்று மக்களை வஞ்சிப்பதாகவும் அவர்கள் மேலும் கவலை தெரிவிக்கின்றனர்.
  10. ஓயா உன் கருணைக்கு உளமார்ந்த நன்றி - 2 பாயாத இடமெல்லாம் பாய்ந்தோடிடும் காயாமல் அவையங்கு பலன் நல்கிடும் - என்றும் ஓயா உன் கருணைக்கு உளமார்ந்த நன்றி - 2 1.) காலங்கள் மாறலாம் கடல் வற்றிப் போகலாம் ஆனால் ஆனால் உன் கருணையோ மாறாது. மலை மண்ணாய் போகலாம் மனம் கல்லாய் மாறலாம் ஆனால் உன் கருணையோ தீராது மாறாத இறைவா தீரா உன் கருணை இறவாத வரையில் மறவாது புகழ்வேன். 2.) சொந்தங்கள் மாறலாம் சுவையாற்றுப் போகலாம் ஆனால் உன் கருணையோ மாறாது எல்லாமும் மாறலாம் இல்லாமல் போகலாம் ஆனால் உன் கருணையோ தீராது மாறாத இறைவா தீரா உன் கருணை இறவாத வரையில் மறவாது புகழ்வேன்
  11. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கருணை உள்ளம் கொண்டவன்
  12. மொழி ஆதிக்கம்..! ************ சிங்கள நகரமெல்லாம் சீன எழுத்துக்கு முதலிடமா.. சிங்களம் ஆங்கிலம் அதற்கு கீழே இருப்பது சிரிப்பைத் தருகிறது. ஊர் பலகையில்-தமிழ் மொழி இல்லையென்று உனக்கு மகிழ்வு இருந்தால் விரைவில்.. உன் மொழியும் அழிந்து உலக மொழியொன்று வியாபிக்கும்.. இது உண்மை. அப்போதும் உணருவாயோ தெரியவில்லை ஏனென்றால் இப்போது தேசத்தின் கீதம் கூட குயிலாக இருந்தாலும் மயிலாக இருந்தாலும் சிங்கம் போலத் தான் கர்ச்சிக்க வேண்டுமாமே. உன்நாட்டில்.. அன்புடன் -பசுவூர்க்கோபி-
  13. தொழில் நுட்பம் தெரிந்த பறவை......! 🐟
  14. நயினா தீவும் நல்ல ஒரு இடம், தனி! சிலப்பதிகாரத்தில் வரும் மணிபல்லவம் என்னும் பெயருள்ள தீவும் இது தான்! கௌதம புத்தர் நயினாதீவு ஊடாகத் தான்..இலங்கைக்கு வந்தார் என்று...குறிகாட்டுவான் துறையில் எழுதியிருந்தார்கள்! அந்தக் காலத்தில்...இராமர் பாலத்தால் அவர் நடந்து வந்திருக்கும் சாத்தியங்களே அதிகம் உள்ளன! அவரைக் காரில் கொண்டு திரிந்தது போல...இப்போது புத்த பிக்குமார் சிலர் கதை விடுகின்றார்கள்! யாழ், மட்டக்களப்பு இளைஞர்களில் கைகள் குடும்பம் என்னும் கயிறு கொண்டு இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளன! கையைக் கொடுத்து அவளைத் தூக்கி விடுவதுடன் கையைக் காட்டி விட வேண்டியது தான்! இப்போது கையைக் காலைக் கொஞ்சம் நீட்ட முடியும் என்று நம்புகின்றேன்!
  15. ஓகே...ஒகே...இப்ப விளங்குது..! இரண்டு கைகள் கறுப்புக் கைகள்....இரண்டு கைகள் வெள்ளைக் கைகள்...! அது தானே சிறியர்?🥶
  16. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, மாசி 2018 காயங்கேணியில் செயற்கையான சதுப்பு நில உருவாக்கத்தில் ஈடுபடும் சிங்களவர்களும், அவர்களுக்குச் சார்பாகக் களமிறங்கும் கருணா துணைராணுவக் கொலைப்படையும் மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 115 கிலோமீட்டர்கள் வடக்கே அமைந்திருக்கும் கரையோரப் பகுதியான காயங்கேணியில் செயற்கை முறையில் சதுப்பு நிலங்களை அமைக்கும் கைங்கரியத்தில் சிங்களவர்களின் நிறுவனம் ஒன்றினை அரச மீன்வளத்துறை மற்றும் அபிவிருத்தி அமைச்சு அமர்த்தியிருக்கிறது. சீமேந்துக் கற்களினால் கட்டப்பட்டு, கரையோரப்பகுதியெங்கும் புதைக்கப்பட்டுவரும் இந்தச் செயற்கை சதுப்பு நில ஊக்கிகளால் மீன்வளமும், சதுப்புநிலத்தின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாகக் கூறும் தென் தமிழீழத்தின் மீனவர்கள், இந்த செயற்பாட்டிற்கெதிராகக் குரல் கொடுத்துவருகின்றனர். சூழலைப் பாதிக்கும் இந்தச் செயற்பாடு குறித்துக் கருத்துத் தெரிவித்த மீனவர் சங்கத்தின் தலைவர் அன்டன் இதுபற்றிக் கூறுகையில், சுமார் 6 இலிருந்து 8 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் அகழ்ந்தெடுக்கப்படும் இந்தச் சீமேந்தினால் உருவாக்கப்பட்ட சதுப்பு நில பாறைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதோடு, புதிய சீமேந்துக் கற்கள் மீண்டும் புதைக்கப்படுவதாகவும், இது இப்பகுதியில் ஆரோக்கியமான சூழல் அமைப்பிற்கு பாரிய பங்கத்தினை ஏற்படுத்துவதாகவும் கூறுகிறார். காயங்கேணியில் அகழப்பட்ட செயற்கையான சதுப்புநில பாறைகள் பல நாடுகளில் சதுப்பு நில ஆரோக்கியத்தை மாசுபடாவண்ணம் சிறந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும்வேளையில் சிங்கள அரசால் தமிழர் தாயகத்தில் சகட்டுமேனிக்குச் செய்யப்பட்டுவரும் இவ்வாறான செயற்பாடுகள் உண்மையிலேயே தமிழரின் கடல்வளத்தினை நீண்டகால அடிப்படையில் பாதிக்கவல்லன என்றும் அவர் கூறுகிறார். அவரின் கூற்றுப்படி காயங்கேணிப்பகுதியில் சுமார் 8000 செயற்கை சதுப்புநிலக் கற்கள் 2017 ஆம் ஆண்டில் மட்டும் புதைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. தனது செயற்பாடுகளுக்கு உள்ளூர் மீனவர்களிடமிருந்து வரும் எதிர்ப்பினைச் சமாளிக்க அரசாங்கம் துணைராணுவக் கொலைப்படையான கருணா குழுவை களமிறக்கியிருப்பதாகத் தெரிகிறது. அரசின் செயற்பாடுகளை விமர்சித்துவரும் பல சமூக ஆர்வலர்கள் காயங்கேணிப்பகுதியில் கருணா குழுவினரால் மிரட்டப்பட்டுவருவதாகத் தெரிகிறது. அதேவேளை, பல சிங்கள வியாபாரிகள் இப்பகுதியில் இருக்கும் மீனவ சமூகங்களின் பிரதிநிதிகளுக்கு லஞ்சமாகப் பெரும் பணத்தினை வழங்கி தமது நடவடிக்கைகளைத் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. சிங்கள ஆக்கிரமிப்பினுள் முற்றாக உள்வாங்கப்பட்டிருக்கும் இப்பகுதி மீனவர்கள் இதுபற்றிக் கூறுகையில், அரசியல் ரீதியாக எமது குரல் ஒலிப்பதற்கும், இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கும் வழியின்றித் தவிப்பதாகக் கூறுகிறார்கள். செயற்கையான முறையில் உருவாக்கப்படும் சதுப்புநில பாறைகள் கொழும்பிற்கு எடுத்துச் செல்லப்படுவதற்காக பாரவூர்தியில் ஏற்றப்படும்பொழுது. இப்பகுதி சமூக ஆர்வலர்கள் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், இப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் ஒருபோதுமே இடம்பெற்றிருக்கவில்லை என்றும் , இவ்வாறான சுரண்டலினை புலிகள் இறுதிவரை தடுத்தே வந்திருந்தார்கள் என்றும் தெரிவிக்கின்றார்கள். கிழக்கின் அபிவிருத்திபற்றி தொடர்ச்சியாகப் பேசிவரும் ஆக்கிரமிப்பு அரசும், அதன் பினாமிகளான கருணா மற்றும் பிள்ளையான் கொலைப்படையினரும் கிழக்கு மக்களின் வளங்களைச் சுரண்டி, தெற்கின் சிங்களவர்களின் அபிவிருத்தியையே முன்னெடுத்துவருவதாக பாதிக்கப்பட்டுவரும் காயங்கேணி மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் செயற்கைமுறை சதுப்புநில உருவாக்கத்தில் ஈடுபடுவதற்காகக் குடியமர்த்தப்பட்டிருக்கும் சிங்களவர்கள் தமக்கென்று புத்த விகாரையொன்றினையும் நிறுவிவருவதாகவும், இதன்மூலம் தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியொன்றில் சிங்களக் குடியேற்றம் ஒன்று மெதுவாக நிகழ்ந்துவருவதாகவும் கூறுகிறார்கள்.
  17. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, தை 2018 படுவான்கரையில் கால்நடைகளைச் சுட்டுக் கொன்று இறைச்சிக்கு விற்றும், பண்ணையாளர்களை அடித்து விரட்டியும் வரும் துணை ராணுவக் கொலைப்படை ஆயுததாரி கருணா ! தமிழனக்கொலையாளி மகிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்து தமிழினம் மீது பாரிய இனக்கொலையொன்றினை நடத்தி முடிக்க பேரினவாதத்திற்குச் சகலவிதத்திலும் உதவிய கருணா எனப்படும் துணைராணுவக் கொலைப்படை ஆயுததாரி மீண்டும் தனது புதிய எஜமானர்களுக்காக களத்தில் இறங்கியிருப்பதாகத் தெரியவருகிறது. அதன் ஒரு அங்கமாக சித்தாண்டிப் பகுதியில் கால்நடை பண்ணையாளர்களைக் குறிவைத்திருக்கும் கொலைப்படை ஆயுததாரி கருணா , தனது புதிய எஜமானர்களுக்காக இப்பகுதியில் தமிழர்களால் மேய்ச்சலுக்குப் பயன்படும் நிலங்களையும் , காட்டு நிலங்களையும் தனது எஜமானர்களுக்கு வாக்களிப்பவர்களுக்கும், அவர்களுக்காக வேலை செய்பவர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதாகத் தெரியவருகிறது. 2004 இல் தமிழினத்திற்கெதிராக செய்யப்பட்ட வரலாற்றுத் துரோகத்தின்பின்னர் தமிழர்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போன கொலைப்படை ஆயுததாரி கருணா, மீண்டும் சித்தாண்டிப்பகுதியில் தமிழர்களை ஏமாற்றி தன்வசப்படுத்தவே இதனைச் செய்வதாக கால்நடைப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். கருணாவின் கட்டளைப்படி பல ஆயுதம் தாங்கிய கொலைப்படையினர் சித்தாண்டி பண்ணையாளர்களைத் தாக்கியுள்ளதோடு, பல கால்நடைகளையும் கொன்றுள்ளதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர். சிங்கள குடியேற்றங்களால் அழிக்கப்பட்டுவரும் மயிலத்தைமடு மேய்ச்சல் நிலத்திற்கு மிக அருகிலிருக்கும் பாலைக் காட்டு வெட்டை எனும் மேய்ச்சல் நிலப்பகுதியில் சுமார் 200 ஏக்கர்களில் பண்ணையாளர்களை அடித்து விரட்டியுள்ள கருணா இப்பகுதியை தந்து எஜமானர்களின் தேர்தல் வெற்றிக்காக லஞ்சமாகக் கொடுக்க எண்ணியிருப்பதாகத் தெரிகிறது. கருணாவும், அவனது கொலைப்படையினரும் வன வள அமைச்சுடன் சேர்ந்து இப்பகுதியில் மேலும் 150 ஏக்கர்கள் வனப்பகுதியில் காடழிப்பில் ஈடுபட்டு விவசாய நிலங்களாக மாற்றியிருப்பதாக மட்டக்களப்பு செயல அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு நகரிலிருந்து 21 கிலோமீட்டர்கள் வடக்கே அமைந்திருக்கும் சித்தாண்டிப் பகுதியில் மேய்ச்சல் நிலங்களை பல்லாண்டு காலமாக உபயோகித்துவரும் பண்ணையாளர்கள் ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இனத்துரோகியால் நடத்தப்படும் துணை ராணுவக் கொலைப்படியினரின் அச்சுருத்தலினையும் எதிர்நோக்குவதாகக் கூறப்படுகிறது. பாலை வெட்டவான் பகுதியிலுள்ள மேய்ச்சல் நிலங்கள் மிகவும் செழிப்பானவை என்பதுடன், பல நீர்த் தேக்கங்களையும் இப்பகுதி தன்னகத்தே கொண்டுள்ளது. மயிலத்தைமடு பகுதியில் இதுவரை காலமும் காலநடைகளை மேய்த்துவந்த பண்ணையாளர்கள் கூட இப்பகுதிக்கு நீர் வசதி காரணமாக கால்நடைகளை அவ்வப்போது அழைத்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த செழுமையான மேய்ச்சல் நிலமே கருணாவினால் அழிக்கப்பட்டு தேர்தல் நோக்கத்திற்காக கூறுபோடப்படவிருக்கிறது. கருணா கொலைப்படையினர் சித்தாண்டியில் கால்நடைகளைப் பிடிப்பதற்கு இரவில் பொறிகளை வைப்பதாகவும், இவ்வாறு அகப்படும் பல கால்நடைகளை கருணா கொலைப்படையினர் சுட்டுக் கொல்வதாகவும் அண்மையில் தனது கால்நடைகளை இழந்துள்ள பண்ணையாளர் ஒருவர் தெரிவித்தார். வாழைச்சேனைப் பொலீஸில் முறையிடச் சென்ற பண்ணையாளர் ஒருவரை "முறையிட்டால் உன்னைக் கொல்வேன்" என்று கருணா மிரட்டிய நிலையிலும், அவர் தனது முறைப்பாட்டினைப் பதிவுசெய்துள்ளதாகத் தெரியவருகிறது. ஆரம்பத்தில் பண்ணையாளருக்குச் சார்பாக இயங்கிய பொலீஸார், கருணாவின் தலையீட்டினையடுத்து தம்மால் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கையைவிரித்துவிட்டதாகத் தெரிகிறது. கருணாவுக்கும் அரசுக்கும் இடையே இருக்கும் நெருக்கமே பொலீஸார் இவ்விடயத்தில் தலையிடாமல் இருப்பதன் காரணமென்று சித்தாண்டிப் பகுதி பால் உற்பத்தியாளர் சங்கம் தெரிவிக்கிறது. தமிழ்ப் பண்ணையாளர்களின் கால்நடைகளைக் கொன்றுவரும் துணை ராணுவக் கொலைப்படையான கருணா குழு, இவ்வாறு தம்மால் கொல்லப்பட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்றுவருவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். கிரானில் அமைந்திருக்கும் அனைத்து மேய்ச்சல் நிலங்களையும் விவசாயக் காணிகளாக்கி அரசுடன் சேர்ந்து குடியேற்றங்களை ஏற்படுத்தப்போவதாகத் தெரிவித்திருக்கும் கருணா, இப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடும் பண்ணையாளர்கள் உடனடியாக இப்பகுதியிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்றும் அச்சுருத்தியிருப்பதாகத் தெரிகிறது. இப்பகுதியில் பல்லாண்டுகாலமாக மேய்ச்சலில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்கள் கருணா தமக்கும் விவசாயிகளுக்குமிடையிலான பிரிவொன்றினை ஏற்படுத்தவே முயல்வதாகவும், சிங்கள குடியேற்றவாசிகளின் அச்சுருத்தலினை எதிர்கொண்டுள்ள தமக்கு கருணா எனும் வடிவில் புதியதொரு அச்சுருத்தல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். கருணாவின் துரோகத்தால் 2007 இற்குப்பின்னர் கிழக்கில் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தினை வனவளம், அபிவிருத்தி, தொல்லியல், உல்லாசபயணத்துறை ஆகிய பெயர்களைக் கொண்டு சிங்களப் பேரினவாதம் ஆக்கிரமித்துவரும் வேளையில், இனத்துரோகி கருணாவும் தன்பங்கிற்கு தமிழர்களை மேலும் துன்புருத்திவருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
  18. முழுச்சாப்பாடு சாப்பிடலாம் வாங்கோ.....! 😂
  19. நேரம் வேலையும் பிள்ளையும் இருப்பதால முற்றாக எழுதி முடிக்க முடியல கணணியை திறந்தால் ஏறி மடியில் இருந்து கீ போட்டை தட்டுகிறாள் ரெண்டு மூணு கீ போர்ட் மாத்தியாச்சு என்றால் பாருங்கோவன் கருத்துக்கு மிக்க நன்றி விரைவில் கதை முடியும் ( தணிக்கைகைகளுக்குள் கதையும் கட்டுப்படுகிறது) நன்றி புத்து கருத்துக்கும் வருகைக்கும் மகிழ்ச்சி தோழர் நன்றி உடையார் ஒரு பக்க விமர்ச்னம் என்பதை உன்மையெனவும் ஏற்றுக்கொள்ள மனம் ஏற்க மறுக்கிறது எங்கள் பயிற்ச்சி ஆரம்பமானது அரைகாற்சட்டையுடன் முடி ஒட்டையாக வெட்டி பயிற்ச்சிகள் கனமாக இருந்தது எனது பெயரோ மாற்றப்பட்டு கங்கையாழியன் என அழைக்கப்பட்டது கங்கா எனவும் சுருக்கமாக‌ அழைத்தார்கள் நாள் தோறும் காலையில் அம்மா வருவா ஆனால் சந்திக்க முடியாது பயிற்சி முடிவடைந்ததும் தளபதிகள் முன்னிலையில் அணி வகுப்பு நடந்து பாசறையிலிருந்து வெளியேறுகிறோம். அன்றுதான் முக்கியமான தளபதிகளை நேரில் காண்கிறோம் அன்று பூசிக்கப்பட்டவர்கள் அவர்கள். வன்னிக்கான படையும் செல்ல தயாராக இருந்தது கிழக்கில் பெரும் சண்டைகள் தொடர்வதில்லை அதனால் வன்னிக்கே படையணிகளில் அதிகமானவர்கள் அனுப்பப்படுவதுண்டு போராட்டத்தின் இதயம் அது தலைவர் தலைவரே எல்லாம் என எங்களுக்கும் உரம் ஊட்டப்பட்டது அவரின் நாமத்துக்கே பலபேர் இணைந்தார்கள் என்றும் சொல்லலாம் அந்த அணியில் என் பெயர் இல்லை ஆயிரக்கணக்கில் போராளிகள் மட்டக்களப்பில் இருந்ததை அன்று காணக்கிடைத்தது மட்டக்களப்பில் பொருட்களுக்கு பஞ்சம் இல்லை ஆனால் மாற்று இயக்கத்திற்கும் , ஆளஊடுவல் செய்யும் ஆட்களும் மிகவும் சவாலாக இருந்தார்கள். அதையும் சமாளித்து போராட்டம் வலுபெற்றிருந்த காலம் அது. அதற்கு புலனாய்வு துறையை சிறப்பாக செய்த தளபதியை பாராட்டலாம் கிழக்கை அக்குவேர் ஆணிவேராக அறிந்திருந்தவர் வன்னி போல் அல்லாமல் கிழக்கில் எந்தப்பக்கமும் இருந்தும் எதிரிகள் உள் நுழையலாம் அத்தனை பேரையும் சமாளிக்கும் துணிச்சல் மிக்க அணிகள் அவர்கள் அப்போது மாவீரர் நாள் வருகிறது துயிலுமில்லங்கள் வண்ணக்கோலம் பூண்கிறது போராட்டம் , இழப்பு , பாராமரிப்பு என அத்தனை விடயங்களும் கற்று அன்றைய நாளுக்காககவும் நினைவு கூரலுக்காகவும் புலிப்படை திரள்கிறது அதில் நானும் எனும் போது பிரமிப்பாக இருக்கிறது .அன்றைய நாளில் எனைக்காண வந்த அம்மா, அண்ணா , தங்கச்சியை கண்டதில் மிகுந்த சந்தோசம் எனக்கும். எல்லாச்சாப்பாடும் கிடைக்குமாடா ஓமோம் அங்க கிடைக்காத சாப்பாடு எல்லாம் கிடைக்கும் இங்க அதுக்கு கவலையே இல்ல அம்மா. எனது குடும்பம் சந்தோசத்திலிருக்க மற்ற அம்மாக்கள் அழ துளிர்விட்டசந்தோசமும் அழுகையாக மாறுகிறது அம்மாவை தேற்றியவனாக அங்கே துயிலும் எங்கள் உறவுகளின் கனவுகளை சொல்லி அம்மாவை தேற்றுகிறேன். மாவீரர் நாள் முடிந்ததும் அழைக்கப்படுகிறோம் சின்ன தாக்குதலுக்கு அன்றுதான் முதல் சண்டையென்பதால் ஒரு பத பதப்பும் , பயமும் தொற்றிக்கொள்கிறது நாங்கள் 10 பேரும் சில‌விபரங்களுடன் காட்டுக்கு செல்கிறோம் பல கிலோ மீற்றர் நடந்து சென்று சருகுக்குள் ஆளை மறைத்து படுத்துக்கொள்கிறோம் காலை விடிகிறது நேரம் 6 மணி இருக்கும் சருகு மெல்ல சரசரக்கிறது சிங்கள உரையாடலுடன். பேச்சு சத்தம் எங்களை நோக்கி வருகிறது இன்னும் பயம் அதிகரிக்கிறது போர் என்றால் ஆளையாள் சுடுவார்கள் என்ற நினைப்பு அந்த நொடி எனக்குள் வரும் போது அது என்னை மிரட்டும் நொடியாக அந்த நிமிடம் இருந்தது . எந்த ஒரு அசைவும் வராமல் நாங்கள் பதுங்கியே இருந்தோம். இன்னும் ஒரு பகுதி மட்டும் மீதம் இருக்கிறது ....................
  20. சபை முதல்வரின் கூற்றுக்கிணங்க , கோவாவிலிருந்து நேராக இலங்கை கிழக்கு மாகாணம் வந்திறங்கினார் வில்லி, பயணக்களைப்பை இரண்டுநாட்கள் ஓய்விலிருந்து கழித்துவிட்டு பாடசாலையை சுற்றி நோட்டம்விட தொடங்கினார். அந்த பாடசாலையும் ,அதன் சூழலும் அவருக்கு பிடித்துப்போனது, மெது மெதுவாக பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என்று எல்லோரது மனதிலும் இடம்பிடித்த வில்லி,சில மாதங்களிலேயே முழுப்பாடசாலைக்குமே பிடித்துப்போன ஆசிரியராக மாறிப்போனார், பாடசாலை நேரம் தவிர்ந்த மாலை நேரங்களில் பாடசாலை கூடைப்பந்து அணிக்கு பயிற்சி வழங்கி மெருகேற்றினார், கிட்டத்தட்ட முழு இலங்கையிலும் முதன்முதலில் ரோனியோ மெஷினை ஐரோப்பாவிலிருந்து தருவித்து ரோனியோ மெஷின் பாவித்த முதல் பாடசாலை எனும் பெருமை பாடசாலைக்கு கிடைக்க வழிசமைத்தார், பிரதர் வில்லியம் என்று அழைக்கப்பட்டாலும் அவர் ரோனியோ மெஷின் இயக்குவதை அடிக்கடி பார்க்கும் சிறுவர்கள் எல்லாம் காலப்போக்கில் "ரோனியோ பிரதர்" என்று அழைக்க தொடங்கினர், இப்படி பாடசாலையில் ஒரு முக்கிய நபராக தன்னை தகவமைத்துக்கொண்டார் வில்லி. காலம் மெதுவாக நகர நகர இவரது சபை இல்லத்திற்கு புதிய துறவிகள் மாற்றலாகி வருவதும் போவதுமாக இருக்கும் போது வில்லியின் வாழ்க்கையை புரட்டிபோடப்போகும் ஒருவரது அறிமுகம் கிடைத்தது 2003, கிழக்கு மாகாணம் 'தீபம்' பாடசாலையின் வெள்ளிவிழா சஞ்சிகை அவனுள் ஏற்படுத்தியிருந்த பிரமிப்புகள் ஏராளம் 100 வருட பாரம்பரியம் கொண்ட அந்த பாடசாலையில் இரண்டு சஞ்சிகைகளே வெளியாகியிருந்தது, முதல் சஞ்சிகை வில்லியின் காலத்திலும் ,இரண்டாவது சஞ்சிகை இன்னுமொருஅதிபரின் காலத்திலும் வெளியாகியிருந்தது, இரண்டினதும் பிரதம பதிப்பாசிரியர் வேறுயாருமில்லை அது அவனுடைய பாட்டி அவரொரு பயிற்றப்பட்ட ஆசிரியராக பிரதர் வில்லியம் பணியிலிருக்கும் போதுதான் அவரது பாடசாலையில் இணைந்தார், வில்லியால் ஒரு பல்துறை விற்பன்னராக வளர்த்தெடுக்கப்பட்டவர் , இரண்டாவது சஞ்சிகை பதிப்பை 5 வயது சிறுவனாக வீட்டில் இருந்து வேடிக்கை பார்த்த நினைவுகள் அவனை வருடிச்சென்றன, இன்றும் அந்த இரண்டு சஞ்சிகைகளையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். சிறுவயதில் அவனது பாட்டியிடமிருந்து பல செவிவழி கதைகள் கேட்டு நினைவினில் வைத்திருந்தான் நேரம் இரவு 8:30 பாடசாலையின் கூடைப்பந்து மைதானம் முன்னே அத்தனை பேரும் ஆஜர் திட்டம் ஏற்கனவே தீட்டியதுபோல இரவு 11:00 மணிக்கு மூன்றாம் மாடி கட்டிடத்தினுள் உள்நுழைந்து நோட்டம் விடுவது, ஒவொருத்தராக மற்றவருடைய முகத்தை பார்த்துக்கொண்டு நேரத்தை போக்கிக்கொண்டிருந்தனர் நேரம் 11:00 ஒருவர் பின் ஒருவராக கட்டிடத்தினுள் நுழைந்துகொண்டிருக்க காவலாளியோ வாங்கி வைத்திருந்த அரைப்போத்தல் சோம பானத்தை உள்ளே தள்ளிவிட்டு நிறைவெறியில் சாக்குக்கட்டிலில் உழன்று கொண்டிருந்தான், மேசைகளை அடுக்கி ஏறி நின்று கொண்டு ஒவ்வொருத்தராக நோட்டம் விட ஆரம்பித்தனர், நேரம் 11:49 ஆகும் போது, அந்த வளவினை ஒட்டியிருந்த புதர்கள் சர சரக்க அதனுள்ளேயிருந்து ஒரு நாய் வெளியே வந்தது, பார்த்தமாத்திரத்திலேயே அவனுக்கும்,சுலக்சனுக்கும் புரிந்துவிட்டது இது அதே நாய் தான், வந்த நாய் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அந்தவளவின் வாயிலில் சென்று படுத்துக்கொள்ள ஒன்றுமே நடப்பதாக தெரியவில்லை, நிமிடங்கள் கரைய மேசையில் நின்று கால்கள் வலித்தது தான் மிச்சம், ஒவொருத்தராக மேசையின் மீது திரும்பி உட்கார்ந்து கொண்டு தங்களுக்குள்ளே முறை போட்டுக்கொண்டு 15 நிமிடத்திற்கொருவர் என்று நோட்டம்விட்டுக்கொண்டிருந்தனர் நேரம் 12:55 "ஐடியா மணியின்" முறை திடிரென்று அருகில் திரும்பிப்பார்த்தவாறு உட்கார்ந்திருந்த அவனின் தலையை உசுப்பி எழும்புமாறு சைகை செய்ய முழு குழுவும் எழுந்து நின்று மெதுவாக தங்கள் தலையை உயர்த்தினர்..அப்போது அங்கே சில அமானுஷ்யங்கள் நடக்க ஆரம்பித்தன (தொடரும் )
  21. அன்றைய நாள் மாலை நால்வரும் சாப்பிட ஆயத்தமாகிறார்கள். பொன்னாங்கண்ணி சுண்டல், மீன்பொரியல் ,செல்வன் மீன் குழம்பு அம்மா கையால அந்த சாப்பாடுதான் கடைசி சாப்பாடு என சின்னவன் நினைத்துக்கொள்கிறான். அடுத்த நாள் காலை மூத்தவனையும் , மகளையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு சின்னவனை கூட்டிக்கொண்டு களுவாஞ்சிக்குடி வந்து கல்லடியில் உள்ள பாடசாலையில் கதைத்து கொஸ்டலில் சேர்த்துவிட்டு மகன் இங்க நல்லா படி படிச்சால் படிக்கிற பிள்ளையெண்டு ஒன்றும் செய்ய மாட்டாங்கள். சரியா சரி அம்மா அடிக்கடி வாங்கம்மா இல்லாட்டி அண்ணாவையும் ,தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு இங்க வாங்களன் அம்மா நிம்மதியாக இருக்கலாம் தானே. இல்ல மகன் அங்கதானே எல்லாம் இருக்கு இங்க எங்க? ஆடு, மாடு வளர்க்கிற அதுகளை வளர்த்தால் தானே சோறாவது சாப்பிடலாம் நாம். அவனோ ஒன்றும் பேசாமல் இருக்கிறான் சரி மாதத்துக்கு ஒரு தடவையெண்டாலும் வாம்மா உன்ன பார்க்கணும் வரும் போது அண்ணாவையும், தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு வாம்மா சரி நான் போறன். நீ கவனமா இரு ரோட்டால வாகனம் அதிகம் ரோட்டு மாறுததெல்லம் கவனமா மாறு ரெண்டு பக்கமும் பார்க்கணும் சரியா ம் ம் கண்களால் கண்ணீர் சொரிய இருவரும் பிரிகிறார்கள் . அடுத்த பஸ்ஸ பிடித்து ஊர் வருகிறாள் பொன்னி இரு பிள்ளைகளும் வீட்டிலே இருக்க மூத்தவன் என்ன அம்மா ஆள விட்டாச்சோ? ஓம்டா சரியா குளறுறான்டா என்று சொன்னவளும் மன நிம்மதியான அழுகையை தொடர்கிறாள். சரி அம்மா அவன்ற நல்லதுக்குத்தானே எனச் சொல்லி மூத்தவன் பொன்னியை தேர்த்துகிறான் . சில மாதங்கள் கழிகிறது மூத்தவன் ஏ எல் பரீட்சை எழுதி முடித்துவிடுகிறான் மாட்டை மேய்க்க சென்றவன் அன்று மாலை வீடு வரவில்லை. எங்கு தேடியும் அவன் இல்லை ஒரு வழியாக அவனை பொடியங்கள் பிடித்துப்போனதாய் கேள்விப்படவே வீட்டில் பெண்பிள்ளையை விட்டு தனியே செல்ல முடியவில்லை அவளால். அடுத்தநாள் காலை பயிற்சி முகாமுக்கு செல்கிறாள். அவன் வரவும் இல்லை அவனை பிடிக்கவும் இல்லை என்றார்கள் அவர்கள் இவளோ விடுவதாயில்ல என்ற பிள்ளய கொடுங்கள் இல்லாட்டால் நான் தூங்கி சாகப்போறன் என மிரட்டியும் அவன் இங்கில்லை என்ற பதிலை மட்டுமே தந்தார்கள் . அடுத்தநாள் கல்லடிக்கு வந்து சின்னவனைக்கூட்டிக்கொண்டு சைக்கிளில் அவன் ஏற்றிக்கொண்டு அவள் தம்பி இருக்கும் முகாமுக்கு செல்கிறார்கள் (பொன்னியும் இளையவனும்). அவனோ விசாரிச்சு பார்க்கிறன் அக்கா என்று சொல்லிவிட்டு விசாரிச்சு இருக்கிறான் ஓமாம் அக்கா தரவையில தான் நின்கிறான் போல அங்க போ நான் வந்தால் வேற பிரச்சினையாகும் நீ போ கத்து , வெரட்டிப்பாரு என்று சொல்ல சைக்கிள் தரவை விரைகிறது அங்கே சென்று பார்க்கும் போது பல பிள்ளைகள் பயிற்சியில் நிற்கிறார்கள் எல்லோரும் கட்டாயமாக பிடித்து செல்லப்பட்டவர்கள் . எடேய் மூத்தவா அவள் கூப்பிட கூப்பிட்ட குரலைக்கேட்டதும் அழுகிறான் அவன். அவன விடுங்கடா என்ட பிள்ளைய தாங்கடா எனக்கு என ஒப்பாரி வைக்க‌ பொறுப்பாளரோ நான் கூட இப்படித்தான் குளறுனான் என்ற அம்மாவும் இப்படித்தானி இஞ்ச நிண்டு அழுதவ என்று சொல்ல அதான் என்ற தம்பிய தந்திருக்கனே என்ட பிள்ளய விடுங்கடா பதில் இல்லை அண்ண இஞ்ச கொஞ்சம் வாங்கள் ஓம் என்ன தம்பி அண்ண அவன விடுங்கள் நான் வாரன் போராட்டத்துக்கு உங்களோட சரியா?? அம்மா மீண்டும் விறைச்சுப்போகிறாள் குளறாதீங்க அம்மா அவனுக்கு ஒன்றும் தெரியாது அவன கூட்டிட்டு போங்க என்னை பிரிஞ்சு இருந்து பழகி இருப்பீங்க தானே அது போல நினைச்சுங்க என்றான் இளையவன் அம்மா மீண்டும் ஓலமிட்டா ஆனால் ஒன்றும் ஆகப்போவதில்லையென்பதை உணர்ந்தேன் நான் உள்ளே செல்ல அண்ணா என்னை கட்டிப்பிடித்து விட்டு அம்மாவைத்தேடி ஓடுகிறான் அம்மாவோ அவனைக்கண்டதும் தம்பிய பிடிச்சிட்டானுகளென மீண்டும் அழுகிறாள் நான் தூரம் செல்கிறேன் வீட்ட போங்கள் என சைகையால் காட்ட‌ அவர்களோ போகாமல் என்னையே பார்த்திருந்தார்கள். போய் பெயர் விலாசம் எல்லாம் பதிந்த பின் வந்து பார்க்கிறேன் அவர்களைப்போல பலரை துரத்திக்கொண்டிருந்தார்கள் பொறுப்பாளர்கள் . பொறுப்பாளர் சொன்னார் இவர்களை இங்கு வைத்திருந்தால் இவர்களை பார்க்க அவர்கள் ஒவ்வொரு நாழும் வருவார்கள் இடத்தை மாற்ற சொன்னார் அவர். இடமும் மாற்றப்பட்டது . அம்மாவுக்கு அதிக பாசம் அவனுடன் மூத்த பிள்ளையும் நல்லா படிப்பான் ஆடு , மாடுகள் கோழிகள் எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக்கொண்டு அப்பா இல்லாமல் போனதும் குடும்பத்தை சுமந்தவனும் அவனே நானோ விளையாட்டுப்பிள்ளை. தொடரும் .
  22. வாவ் தொடக்கமே அட்டகாசமா இருக்கு நைனாதீவுக்கு நான் சென்ற நேரம் நம்ம கள உறவு ஜீவன் சிவா அண்ண கூட்டிக்கொண்டு சென்றார் அப்போது எனக்கு முன் ஓர் அழகிய 2 பெண் பிள்ளைகள் ஏன்டா இதுகளுல ஒன்றைப்பார்த்து கல்யாணம் கட்டிட்டு இங்க செட்டில் ஆகன்டா என்றார் மனுசன் அந்த நேரம் காஞ்ச மாடு கம்பில பாயுற ரைம் கல்யாணம் ஆகல எனக்கு புள்ள ஓகே சொன்னா நான் வேண்டாம் என்றா சொல்லப்போறன் என மனதுக்குள் நினைத்துக்கொண்டன் இந்த யாழ்ப்பாண சனம் மட்டக்களப்பார கல்யாணம் கட்டுமா? குறிப்பு அது இது என எக்கச்செக்க பிரச்சினை வரும் நான் யோசித்து அவளப்பார்ப்போம் என முன்னே நிமிர்ந்தேன் ஏனென்றால் எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் அவளைப்பார்க்கிறேன் . அவளும் என்னைப்பார்க்கிறாள் ஆகா அந்தப்பயணம் நெடுந்தீவுக்கும் செல்லாதா என நான் நினைத்தால் நைனாதீவில் படகு கரைதட்ட நான் முதலில் பாய்ந்து தரையில் இறங்கினன் அண்ணன் ஜீவன் சிவாவை வெளியே இழுத்து எறியாத குறையாக அவளை தூக்கிவிட கையை கொடுத்தேன் அவளும் சிரித்துவிட்டு கையை கொடுத்தாள் மெதுவாக தூக்க மனுசன் அங்கால திரும்பிட்டு நான் இந்த கூத்தையெல்லாம் பார்க்கல என ஓடிட்டார் பின்னர் மடத்தில் சோறு சாப்பிட போனோம் அங்கேயே நின்றாள் பார்வைகள் மட்டும் பேசி கதைத்து விடை பெற்றது . குறிப்பு இது என் மனைவிக்கு தெரியாமல் இருப்பது மிக நல்லது 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.