Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்14Points19134Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்10Points7053Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்8Points2957Posts -
நியாயம்
கருத்துக்கள உறவுகள்7Points2138Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/10/23 in all areas
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக: 1. இஸ்ரேலியர்கள் காட்டும் வரலாற்றுக் காரணம்: இஸ்ரேல், யூதேயா ஆகிய தேசங்கள் அரசர்களின் கீழ் 2000 ஆண்டுகள் முன்பே இருந்திருக்கின்றன. இந்தத் தேசங்களில் வாழ்ந்தோரே யூதர்கள். எனவே தேசமொன்றாக இருந்த மக்கள் யூதர்கள் என்பது உண்மை. மறுவளமாக, பலஸ்தீனம் பல்வேறு பெயர்களில் பலஸ்ரைன் (Palestain), பெரும் சிரியா (Greater Syria), சிரியா பலஸ்தீன், "Mandatory Palestine" எனும் பெயர்களில் பலஸ்தீன் என்ற பிரதேசத்தில் அரபு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் ஒரு தனித் தேசமாக இருக்கவில்லை என்பது யூதர்களின் வாதம். 2. நடைமுறைக் காரணம்: பலஸ்தீனம் ஒரு தேசமாக இருந்திருக்கா விட்டாலும் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த மண்ணை தாய் நிலமாகக் கொள்ள வேண்டும், எனவே இரு நாடுகள் அந்தப் பிரதேசத்தில் உருவாக வேண்டும் என்பது ( கோசான் சொல்லியிருப்பது போல) 90 களில் இருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. எனவே, இரு பகுதிக்கும் உரிமை சமனானது என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. 3. முட்டுச்சந்து: இரு நாடுகள் உருவாக வேண்டுமானால் இரு பகுதிக்கும் அடிப்படையாக "நிலம்" வேண்டும். இங்கே தான் முட்டிக் கொண்டு நிற்க வேண்டியிருக்கிறது. பலஸ்தீனர்களின் கீழ் இருந்த நிலத்தில் 50% இற்கும்சிறிது அதிகமான பகுதி 1948 இல் ஐ.நா தீர்மானம் மூலம் இஸ்ரேலுக்குப் போனது. இதை ஏற்றுக் கொள்ளவோ, சமாதானமாகப் போகவோ விரும்பாத பலஸ்தீனர்களும், அரபு நாடுகளும் இஸ்ரேலைத் தாக்க முனைந்த போது போர் உருவாகி 1949 இல் மிக அதிக அளவிலான பலஸ்தீனப் பகுதி (78%?) இஸ்ரேல் வசமாகியது. 1967, 6 நாள் யுத்தத்தில் இது இன்னும் அதிகரித்தது. இதில் பாடம் என்னவெனில், ஒவ்வொரு முறையும் பலஸ்தீன கிளர்ச்சியும், அரபு நாடுகளின் தாக்குதலும் நடந்த போதெல்லாம், இஸ்ரேலுக்கு மேலும் அதிக நிலம் கிடைத்திருக்கிறது. அல்லது, மேலும் பாதுகாப்பு என்ற போர்வையில் பலஸ்தீனத்தைக் கட்டுப் படுத்தும் சாட்டுக் கிடைத்திருக்கிறது. இந்த முறையும் இதுவே நடக்கும். அனேகமாக, காசவினுள் இஸ்ரேல் படைகள் நுழையாது. அப்படி நுழைய வேண்டுமென்ற ஹமாசின் ஆசைக்கு இஸ்ரேல் பலியாகாது என நினைக்கிறேன். ஆனால், காசா, மேற்குக் கரை மீதான இஸ்ரேலின் பிடி இன்னும் இறுகும். மிகக் கடினமான ஒரு வாழ் நிலைக்குள் காசா வாழ் பலஸ்தீனர்கள் தள்ளப் படுவர். அவர்களாகவே ஹமாசை எதிர்த்தாலொழிய வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்த இஸ்ரேல் முயலும்.7 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒரு நிலப்பரப்பில் ஒரு இனத்தின் தொன்மை பற்றிய உண்மையை எடுத்து சொல்ல அந்த இனமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை பற்றிய அறிவு இருந்தாலே போதுமானது. நான் வக்காலத்து வாங்கித்தான் யூதர்கள் வாழவேண்டிய நிலையில் அவர்கள் இல்லை. ஆனால் - ஈழத்தமிழர் மத்தியில் நெடுங்காலமாகவே யூதர்கள் இன்னொருவன் நிலத்தை அபகரித்து வாழ்கிறார்கள் என்ற பொய், மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த பொய்யை - பொய் என்று சுட்டுவது மட்டுமே நான் செய்வது. தவிர என்னிடம் இஸ்லாமிய விரோதம் துளியும் இல்லை. யூதரின் நில உரிமையை நான் எடுத்து சொல்வது எனது இஸ்லாமிய வெறுப்பாலும் அல்ல. இலங்கை முஸ்லிம்கள் - 1948 இல் அவர்கள் எத்தனை வீதமாக இருந்தாலும், 2023 இல் அவர்கள் கிழக்கின் 1/3 மக்கள் - ஆகவே அவர்களுக்கு எமக்கு நிகரான நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகை கொடுக்க நாம் முன்வரவேண்டும் என யாழில் எழுதும் ஒரே கருத்தாளர் நான் என நினைக்கிறேன். இதே அணுகுமுறையைத்தான் நான் இஸ்ரேல்- பலஸ்தீன முரணிலும் எடுக்கிறேன். ஆபிரகாம் கால வரலாறையும் விடுங்கள், 2000-1942 ஐயும் விடுங்கள், 1942-2022 ஐ விட்டு விடுங்கள். 2023 இல் அங்கே இரு இனக்குழுக்கள் வாழ்கிறன - ஆகவே சமனான இரு நாடுகளை உருவாக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. பிகு காசாவில் நடப்பவை உங்களை பாதித்துள்ளமை புரிந்துகொள்ள கூடியதே…. ஆனால் அதற்காக நீங்கள் இலங்கையில் ஒரு அப்பாவி இஸ்லாமிய பெண்ணின் அபாயாவை வலுகட்டாயமாக காடையர்கள் நீக்கியதை ஆதரித்து வரவேற்ற ஆட்களிடம் எல்லாம் நீதி கேட்டு எழுதுவது - கோவம் உங்கள் கண்களை மறைத்து விட்டதோ என எண்ண வைக்கிறது.4 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பல வருட கள அனுபவம் உள்ளவர்களுக்கு சாதாரண பதிவு சம்பந்தப்பட்ட விஷயங்களியே தெளிவில்லையே, பல தசாப்த போரில் பக்கத்தில் நின்று பார்த்ததுபோல் அடுக்கடுக்காய் குற்றம் சுமத்துவற்கு வெறும் கர்ண பரம்பரை கதைகளையே ஆதாரமாக கொண்டுள்ளார்கள் என்பது வெளிப்படை. இவர்களுக்காக மூச்சிரைக்க மூச்சிரைக்க பதில் சொல்லி மாளும் கோசானுக்காக மனம் வருந்துவதை தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.3 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதைத் தான் நானும் ஆரம்பத்திலேயே எழுதினேன் ...அவர் ஆரை ஆதரித்தாலும் எனக்கு அது பற்றி அக்கறை இல்லை ...ஆனால் பாதிக்கப்படட இனத்தில் இருந்து கொண்டு எப்படி மற்றவர்களின் இறப்பை ரசிக்க முடிகிறது?...எதிரியே ஆனாலும் அதற்குரிய மரியாதை கொடுங்கள் என சொல்லியவர் தலைவர்...அவரை மாமா என சொல்லி கொண்டு அப்பாவி மக்களது இறப்பை ரசிக்க எப்படி இவர்களுக்கு மனம் வருகுது இவர் மேல் இருந்த மதிப்பு நன்றாக குறைந்து விட்டது ... ஓவராய் புலி பாட்டு பாடுபவர்கள் இப்படி தான் சறுக்குவார்கள் என்று எனக்கு முதலே தெரியும் ...அதுக்காக இவரை துரோகி என்று எல்லாம் சொல்ல மாட்டேன்...அது வால்களின் வேலை2 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
2 points
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் பங்கு இலங்கையில்: Israeli complicity in Sri Lanka war crimes must be investigated During the civil war, Israel sold weapons and backed the Sri Lankan army while it was committing grave atrocities. Eitay Mack Human rights lawyer Sri Lankan Air Force's Kfir fighters prepare to take off at Bandaranaike International Airport, near Colombo on January 2, 2009 [Buddhika Weerasinghe/Reuters] It has been more than 14 years since the civil war in Sri Lanka came to an end. Although a semblance of peace has returned to the parts of the country devastated by the 29-year conflict, its victims are yet to see justice delivered. Over the years, the United Nations and human rights organisations have diligently documented war crimes committed during the war. Their focus has been mainly on atrocities carried out by government forces and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). But there has been almost no attention paid to international backers of the Sri Lankan government who may have been complicit in the war crimes it committed against civilians. Israel is one of them. In the 2000s, Sri Lanka became one of Israel’s most important clients in Asia, undertaking significant procurement of Israeli military technology. Israelis also trained Sri Lankan troops involved in the war. Evidence that I and activists from Israeli human rights organisations Combatant for Peace, Yesh Gvul and Torat Tzedek have gathered reveals that Israeli weapons and military equipment were likely used in atrocities committed in Sri Lanka. We want Israeli complicity in these crimes exposed and prosecuted. Israeli drones in Sri Lankan skies In the mid-1970s, Israel bought primitive surveillance unmanned aerial vehicles (UAVs) that the United States had used a decade earlier in the Vietnam War and started developing them. In the 1980s, the Israeli army made groundbreaking use of this uncrewed aircraft during the war in Lebanon and later developed offensive prototypes, which were deployed in its assaults on the Gaza Strip. These UAVs – repeatedly tested on civilians and military targets in the Middle East – have become one of Israel’s most sought-after products around the world. They were also among key military purchases the Sri Lankan government made from Israel in the 1990s and 2000s as the war against LTTE was raging. In the Sri Lankan army’s own words the Israeli-made UAVs “played a critical role in the war“. Senior Sri Lankan government and security forces officials have repeatedly said in interviews and statements that before attacks, they would watch videos shot by UAVs to verify that no civilians were found in the area, in accordance with their policy of “zero harm to civilians”. But the UN has uncovered evidence that there was, in fact, severe severe harm done to civilians. According to its estimates, in the last months of the war alone, between 40,000 and 75,000 civilians were killed, most of them due to deliberate fire by government security forces. A 2015 UN report concluded that given the use of UAVs, “the loss of civilian life and damage to civilian property […] may have been anticipated, known and accepted by Government and military leaders in breach of international humanitarian law”. In other words, Israeli UAVs did not prevent civilian deaths, they facilitated them. Other Israeli weapons also played a significant role in war crimes and crimes against humanity committed in Sri Lanka. Sri Lanka bought Israeli-made Kfir combat aircraft, Dvora and Shaldag battleships, artillery systems and Gabriel sea-to-sea missiles. The Israeli surveillance UAVs were used to give direction to these heavy weapons, which deliberately bombed civilians and humanitarian sites and helped win the war at a heavy human cost. One of the most famous incidents in which Kfir planes were used occurred on August 14, 2006. The Sri Lankan Air Force used the aircraft to bomb a girls’ orphanage in the village of Senchcholai, killing some 60 children and injuring dozens. Other countries also sold weapons and training to the murderous government in Sri Lanka. However, according to Israeli analyst Shlomi Yass, “Israel stands out in regards to the scope of weapons provided, reaching hundreds of millions of USD.” This has also been confirmed by Donald Perera, Sri Lanka’s former chief of staff who was appointed as an ambassador to Israel after the war. In an interview with the Israeli Ynet News website, on July 21, 2010, he said: “For years Israel has aided our war on terror through the exchange of information and the sale of military technology and equipment…We have received billions of dollars in aid over the past few years.” Seeking justice in Israel and Sri Lanka Despite accumulated evidence and multiple reports from international bodies and human rights organisations on atrocities committed during the war, those directly responsible for them have not been prosecuted, nor have those who assisted them indirectly from Israel and other countries. The UN failed to protect civilians during the war, which was reflected in its own internal report leaked to the media in 2011. After the war, the UN failed the civilian victims again, never providing them with recourse to justice for the war crimes and crimes against humanity committed against them. Western countries, which are normally big on defending human rights rhetorically, have preferred to continue “business as usual” with the Sri Lankan government in pursuit of their narrow economic, military and political interests. This has sent a signal to dictators and repressive regimes around the world that attacks on civilians can be committed with absolute immunity. This is precisely why neither the Sri Lankan officials accused of war crimes, nor their foreign accomplices should be let off the hook so easily. In recent years, we – Israeli human rights activists that also work to stop the State of Israel’s apartheid policies, crimes against humanity and war crimes against the Palestinian people – have gathered information about Israeli involvement in the Sri Lankan civil war between February 2002 and May 2009. There is more than enough evidence to justify opening a criminal investigation into the involvement of Israeli companies, officials and private individuals in the crimes committed, under both international and Israeli penal law. We have decided to submit a demand to Israel’s attorney general to start a criminal investigation against the Israelis involved in the crimes in Sri Lanka and we will do the same in international forums. The chance of legal action proceeding is slim but we will not give up. Perhaps if the world had taken the crimes in Sri Lanka seriously, we would not have seen crimes being committed by Bashar al-Assad in Syria, Salva Kiir in South Sudan, Min Aung Hlaing in Myanmar and Vladimir Putin in Ukraine. We would not have seen Israel continue to commit crimes in Gaza and the West Bank either. The globalisation of methods and technologies of repression and violence must be met with the globalisation of accountability. The views expressed in this article are the author’s own and do not necessarily reflect Al Jazeera’s editorial stance. Eitay Mack Human rights lawyer Eitay Mack is a human rights lawyer and activist. https://www.aljazeera.com/amp/opinions/2023/6/27/israeli-complicity-in-sri-lanka-war-crimes-must-be-investigated2 points- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்லாமியருக்கும், கிறிஸ்த்தவர்களுக்கும் யூதர்தான் மூதாதை. ஆனால் யூதருக்கு லெமூரியக் கண்டத்தின் தமிழர்தான் மூதாதை!!! ‘அகண்ட இஸ்ரேலும்’ ஆவேச பாலஸ்தீனமும்! - எஸ்.பி.ராஜேந்திரன் அக்டோபர் 9, 2023 செப்டம்பர் 22, 2023. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் அந்த நபர் பேசிக் கொண்டிருந்தார். திடீரென ஒரு வரைபடத்தை எடுத்து அவையோரிடம் காட்டி, இனி இதுதான் ‘புதிய மத்திய கிழக்குப் பிரதேசம்’ (The New Middle East) என்று கூறினார். பலரும் அந்த வரைபடத்தை உற்று நோக்கினார்கள். அதில் பாலஸ்தீனம் என்ற ஒரு நாடே இல்லாமல் செய்யப்பட்டிருந்தது. அந்த வரைபடத்தை மிகுந்த இறுமாப்போடு, தான் செய்து கொண்டிருப்பது முற்றிலும் ஒரு சட்ட விரோத காரியம் என்பதை உணர்ந்தே வெளியிட்டவர் வேறு யாருமல்ல, இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நேதன்யாகு. 56 சதவீதமும் 78 சதவீதமும் 1947இல் யூத மக்களுக்கு சொந்தமாக ஒரு நாடு வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு பாலஸ்தீனத்தின் 56 சத வீத நிலப்பகுதியை பிரித்து அவர்களை குடியேற்றம் செய்ய வைத்து, இஸ்ரேல் எனப் பெயரிடப்பட்டது. ஆனால் பாலஸ்தீனத்தை பிரித்து சரிபாதிக்கும் அதிகமான நிலப்பகுதியை வேறொரு நாடாக மாற்றுவதை அன்றைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கவில்லை. எனினும் இஸ்ரேல் என்ற நாடு உருவாகி விட்டபின்னர் 1950ல்தான் இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது என்பது தனி வரலாறு. உருவானது முதலே இஸ்ரேலின் ஆட்சியாளர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக, ஏவலாளிகளாக, பாலஸ்தீன மக்களை அழித்தொழிக்கும் இனவெறி கொண்டவர்களாக செயல்பட்டார்கள். 1947-48இல் அதிபயங்கரமான தாக்குதல் சம்பவங்களை இஸ்ரேல் அரங்கேற்றியது. பாலஸ் தீனத்தின் ஐநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களை இஸ்ரேல் ராணுவம் அழித்தொழித்தது. 7.5 லட்சம் பாலஸ்தீனர்கள் வீடுகளை இழந்து, கிராமங்களையும், நகரங்களையும் இழந்து அகதிகளாக நின்றார்கள். இதையொட்டி நடந்த மோதல்களில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், இஸ்ரேலிய ராணுவத்தினர் மற்றும் யூத இனவெறி கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். 56சதவீத நிலப்பகுதிக்கு பதிலாக இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனத்தின் 78 சத வீத நிலப்பகுதியை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது. இந்த பாலஸ்தீனப் பேரழிவின் 75ஆம் ஆண்டு, சமீபத்தில் 2023 மே மாதம் நினைவு கூரப்பட்டது. அன்று துவங்கிய பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்பு கடந்த 75 ஆண்டுகளாக - உலக நாடுகள் அனைத்தும் கண்டித்த போதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றிய போதிலும்- அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் கொடூரமான முறையில் இப்போது வரை நீடிக்கிறது. 1947-48 இல் நடந்த இஸ்ரேலின் மிகப் பெரும் இனஅழிப்பு நடவடிக்கையில் வாழ்விடங்களை இழந்த பாலஸ்தீனர்கள் மேற்குகரையிலும் காசா திட்டுப் பகுதியிலுமாக குடியேறினர். ஏராளமானோர் லெபனான், சிரியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். அன்று முதல் இஸ்ரேல் பாலஸ்தீனை படிப்படியாக ஆக்கிரமித்து, மேற்குகரையில் ஒரு சிறிய பகுதி மற்றும் காசா நகரம் ஆகிய இரண்டு இடங்கள் தவிர அனைத்து பகுதிகளையும் தன்வசமாக்கிவிட்டது. தற்போது வெறும் ஏழு சதுர கிலோ மீட்டர் அளவிற்கு மட்டுமே பாலஸ்தீனர்கள் வாழும் பகுதியாக உள்ளது. ‘அகண்ட இஸ்ரேல்’ இந்தப் பகுதியையும் அழித்து, இங்குள்ள பாலஸ்தீனர்களை முற்றாக ஒழித்து, வேறு நாடுகளுக்கு விரட்டி, நாடற்றவர்களாக ஆக்குவதுதான் இஸ்ரேலின் தற்போதைய திட்டம். இதைத்தான் பெஞ்சமின் நேதன்யாகு ஐ.நா. பொதுச் சபையில் பகிரங்கமாக முன்வைத்தார். அவர் வெளியிட்ட வரைபடத்தில் சிரியா மற்றும் லெபனானின் சில பகுதிகளை யும் உள்ளடக்கி ‘அகண்ட இஸ்ரேல்’ (Greater Israel) என்று பெயரும் வைத்து விட்டார். இவருக்கு முன்பே இந்தாண்டு துவக்கத்தில் இஸ்ரேல் நிதியமைச்சர் பெசாலல் ஸ்மோட்ரிச், பாலஸ்தீனம், லெபனான், சிரியா ஆகிய மூன்று நாடுகளையும் அழித்து, ஒரு வரைபடத்தை வெளியிட்டார். இவையனைத்தும் உள்ளடக்கியதுதான் நாங்கள் எதிர்நோக்கும் அகண்ட இஸ்ரேல் என்று அறிவிக்கவும் செய்தார். ஹமாஸ் இயக்கத்தினர் அதிரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதன் பின்னணி இதுதான். பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதற்கு முன்பு மேற்கு கரை மற்றும் காசா இரண்டுக்குமான தலைமையிடமாக மேற்குகரையில் உள்ள ரமல்லாவே இருந்தது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO)இந்த ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களை உணர்வூட்டி, இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு எதிராக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத் தலைமையில் இந்த எழுச்சி நீடித்து வந்தது. ஏராளமான பேச்சுவார்த்தைகள், அமைதி முயற்சிகள், இஸ்ரேலின் மீறல்கள், பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்கள், மேலும் மேலும் ஆக்கிரமிப்பு என வரலாறு நெடுகிலும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் களத்தில் நின்று சந்தித்தது. ஆனால் சுதந்திர பாலஸ்தீனத்துக்கான தீர்வு கிடைக்கவில்லை. இஸ்ரேலின் கொடிய அடக்குமுறைகள் தீரவில்லை. ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் இந்த பின்னணியில், ரமல்லாவை தலையிட மாகக் கொண்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் தலைமையிலான நிர்வாகத்தை காசா பகுதியில் செயல்பட்டு வந்த ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்தது. யாசர் அராபத்தும் மறைந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டமே தீர்வு என்ற முடிவு டன் ஹமாஸ் இயக்கம் மக்களை அணிதிரட்ட துவங்கியது. காசா பகுதியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுத வழி போராட்டத்தை உறுதியுடன் மேற்கொண்டது. ஏற்கெனவே கடும் ஒடுக்குமுறையை மேற்கொண்டிருந்த இஸ்ரேல், ஹமாஸ் தலைமையிலான காசா பகுதியை மேலும் மேலும் முற்றுகையிட்டு, குண்டுமழை வீசி சல்லடையாக துளைத்தது. காசாவில் 2008க்கு பிறகு இது வரை சுமார் 1.5 லட்சம் பாலஸ்தீன மக்களின் உயிரைப் பறித்துள்ளது இஸ்ரேலிய ராணுவம். இவர்களில் 33ஆயிரத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். தற்சமயம் 20 லட்சத் திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் காசா, உலகிலேயே மிக மிக மோசமான முறையில் சிதைக்கப்பட்ட, எதிர்காலம் முற்றிலும் சூனியமாக்கப்பட்ட நகரம். ஐ.நா.சபையின் தோல்வி 75 ஆண்டு கால வரலாற்றில் பாலஸ்தீனத்திற்கு உரிய நியாயத்தை உறுதி செய்வதில், ஐக்கிய நாடுகள் சபை அப்பட்டமாக தோல்வியடைந்துள்ளது. ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கூட அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆதரித்ததில்லை. மாறாக, இஸ்ரேலை ஏவலாளியாக பயன்படுத்தி வளைகுடா பிரதேசத்தில் நிரந்தரமான பதற்றத்தை நிலவச் செய்வதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இத்தகைய பின்னணியில்தான், இஸ்ரேலில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அதிதீவிர வலதுசாரியான பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான அரசு, பாலஸ்தீனத்தையே முற்றாக அழிப்பது என்ற நோக்கத்துடன் மேற்கொண்ட நகர்வுகள், ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீன மக்களின் இயக்கங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுப்பதே பொருத்தமானது என்று, மிகுந்த நுட்பத்துடன் திட்டமிட்டு, இஸ்ரேலின் வலுவான உளவு அமைப்புகளின் கண்களில் மண்ணைத் தூவி, வலுவான தாக்குதலை நடத்தியுள்ளது ஹமாஸ் இயக்கம். இதற்கு இஸ்ரேல் தரப்பில் எதிர்வினை கடுமையாக இருக்கும் என்பது தெரிந்ததே. கடந்த இரண்டு நாட்களாக ‘போர்’ அறிவித்து காசாவை இன்னும் கடுமையாக தாக்கி வருகிறது இஸ்ரேல். இந்தியா என்ன செய்ய வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றிக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை இப்போதேனும் பாலஸ்தீன மக்களின் தாய்நாட்டிற் கான சட்டப்பூர்வமான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்; கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்டு சுதந்திர பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்குவது என ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக அமலாக்க வேண்டும்; பாலஸ்தீனத்தின் ஒட்டுமொத்த பகுதிகளிலிருந்தும் இஸ்ரேல் குடி யிருப்புகளும் ராணுவமும் அகற்றப்பட வேண்டும். இதுதான் தீர்வு. ஆனால் இந்தத் தீர்வை எட்டுவதற்கு ஆயுத மோதலோ, உயிர் பறிக்கும் கொடிய போரோ வழி அல்ல. இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளும் - அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அலட்சியம் செய்து - இஸ்ரேலை முற்றாக தனிமைப்படுத்தி, அதன் மூலம் அரசியல் தீர்வுக்கு வரச் செய்ய வேண்டும். அத்த கைய தீர்வை நோக்கி உலகை உந்தித் தள்ளுவதில் இந்திய அரசுக்கும் முக்கியப் பங்கு உண்டு. https://theekkathir.in/News/articles/உலகம்/greater-israel-and-palestinian-palestine2 points- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான். போர் என்றாலே அழிவுதான் அதிலும் இந்த மாதிரி கிடைத்த சந்தர்ப்பத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பது சாதாரனமான ஒன்றாகிவிட்டது. இவர்களால் எங்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லேயோ ஆனால் எங்களது கொடியை இதற்குள் சேர்ப்பது தேவையற்ற ஒன்று2 points- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது. ஜெருசலேம் உள்பட நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போருக்கான தயார் நிலையை இஸ்ரெல் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்த டஜன் கணக்கான ஆயுதக்குழுவினர் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து தற்போது தலைமறைவாக உள்ளனர். காஸா பகுதியில் உள்ள இலக்குகளை ஹமாஸ் ஆயுதக் குழு தாக்கி வருவதாகவும் அப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை மதிப்பிட்டு வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக, 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. இதனால் நாடு முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையை அறிவிக்கும் விதமாக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஆப்பரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம் என்ற பெயரில் இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலின்போது ஒருவர் கொல்லப்பட்டதுடன், டெல் அவிவ் மற்றும் காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அதன் ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தும் பிரிவு 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவியதாக அறிவித்துள்ளது. "காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் போது இஸ்ரேலிய ராக்கெட்டுகள் இலக்கு வைக்கப்பட்டன" என்றும் ஆயுதக் குழுவினர் "வெவ்வேறு இடங்களில்" இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்ததாகவும் இஸ்ரேலின் பாதுகாப்புப் படை (IDF) கூறியுள்ளது. இஸ்ரேலிய பொது ஊழியர்களின் தலைவர் "சூழ்நிலை மதிப்பீட்டை" நடத்தி வருவதாகவும், "இந்த நிகழ்வுகளுக்கான விளைவுகளையும் பொறுப்பையும் ஹமாஸ் எதிர்கொள்ளும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள அதே நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் "தற்காலிக முகாம்களுக்கு அருகிலேயே இருக்க" அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. பட மூலாதாரம்,ABED RAHIM KHATIB/ANADOLU AGENCY VIA GETTY IMAGES ஒருவர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலின் மேகன் டேவிட் ஆடோம் மீட்பு நிறுவனம் கூறியுள்ளது. அஷ்கெலோன் நகரில் தீயை அணைக்கும் பணியில் இஸ்ரேலிய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள காட்சிகள் காட்டுகின்றன. அதில் வாகனங்கள் எரிந்து கரும்புகை வெளியேறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக பாதுகாப்புத் துறையின் முக்கிய அதிகாரிகளின் சந்திப்பு நடைபெற உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,MOHAMMED SABER/EPA-EFE/REX/SHUTTERSTOCK காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் "அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள்" ஊடுருவியுள்ளதாகவும், சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரேலின் தற்காப்புப் படைக் குழுவின் ஆரம்ப அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் பாதுகாப்புப் படை "நாடு முழுவதும் உள்ள இஸ்ரேலியர்கள் - ஷபாத் மற்றும் சிம்சாட் தோராவின் விடுமுறை நாளில் சைரன்கள் ஒலிப்பதையும், ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் வீசும் சத்தத்தையும் கேட்டுக் கண் விழித்தனர். நம்மை நாமே காத்துக் கொள்வோம்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் வீசப்பட்டன: ஹமாஸ் அறிவிப்பு பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, தாக்குதலுக்கு இலக்கான இடங்களில் எரியும் தீயில் இருந்து கரும்புகை வெளியாகி வருகிறது. இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைவரான முகமது டெய்ஃப், "ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம்" என்ற பெயரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலைத் தொடங்க சனிக்கிழமை அதிகாலை 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவப்பட்டதாகவும் கூறினார். "இஸ்ரேலின் நடவடிக்கைகளை பொறுத்தது போதும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று டெய்ஃப் கூறினார். “நாங்கள் ஏற்கெனவே எதிரியை எச்சரித்துள்ளோம். இஸ்ரேலிய ராணுவம் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான படுகொலைகளை அரங்கேற்றியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக நேர்ந்த குற்றங்களால் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான தியாகிகள் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்." "ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்மின் தொடக்கத்தை நாங்கள் அறிவிக்கிறோம். மேலும் எதிரிகளின் ராணுவ நிலைகள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ கோட்டைகளைக் குறிவைத்த முதல் தாக்குதலில் 5,000 ஏவுகணைகள் மற்றும் ஷெல்களை கொண்டு நாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளோம்." பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டுள்ளது. "போருக்குத் தயார்நிலை" பிரகடனத்தை வெளியிட்ட இஸ்ரேல் ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "போருக்கான தயார் நிலை" பிரகடனம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்களை அழைக்க பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளது என்பதுடன் ஹமாஸ் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது. இதற்கிடையே, தொடக்கத்தில் 5,000 ராக்கெட்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு, மேலும் இரண்டாயிரம் ராக்கெட்டுகளை ஏவியதாக ஹமாஸ் தொலைக்காட்சி சேனல் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்த காட்சிகள் நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஹமாஸ் ஆயுதக் குழு மிக மோசமான தவற்றைச் செய்துள்ளது என இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார். யோவ் காலன்ட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இன்று காலையில் மிக மோசமான செயலைச் செய்துள்ளனர். இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான ஒரு போரைத் தொடங்கியுள்ளது," எனத் தெரிவித்துள்ளார். மேலும், எதிரிகள் இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது என்றும், இந்தப் போரில் இஸ்ரேல் ராணுவம் விரைவில் வெற்றிக்கொடி நாட்டும் என்றும் கூறியுள்ளார். ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் இந்த திடீர் தாக்குதலில் காயமடைந்த மற்றும் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/articles/cp9xkn0rdldo1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
85ம் ஆண்டு இவர் பால்குடியாய் இருந்திருப்பார்😀...பிறகு கொழும்பு வந்து ,வெளிநாடு வந்த இவர் போன்றவர்கள் சொல்வதை வேத வாக்காய் எடுத்து கொள்ளட்டாம் என்று சொல்கிறார்1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆம் கர்த்தர் ஆபிராகாமுக்கு உன் சந்ததியை மணலைபோலவும், வானத்தின் நட்சத்திரங்களை போலவும் பொருகப் பண்னுவேன் என்றார்.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆம் யோவான் புத்தகத்தில் இது குறிப்பிடபட்டுள்ளது. அருமை கோசான் இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதை நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் சொல்லத்தேவையில்லை!! இதைத்தான் சொல்வார்கள், சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்று!!1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
The Israeli-Sri Lankan Relationship “At Israel’s inception, it faced diplomatic hostility from the Arab world, and many post-colonial countries—including India—refused to recognize it as an independent state. But Sri Lanka’s first PM, D.S. Senanayake, initiated the island nation’s cooperation with Israel, despite the disapproval of many Asian and African states. During the Senanayake era, the Sri Lankan Navy purchased its first gunship from Israel, the Gajabahu 1. In addition, Israeli technical advisors assisted in the digging of tube wells in the dry zone of northern Sri Lanka.” https://besacenter.org/israel-sri-lanka-relationship/1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்த நிலையில் சீனா தாய்வான் மோதல் ஏற்பட்டால் எப்படி இருக்கும். சீனாவுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இலங்கை எனும் நாட்டில் முஸ்லீம்கள் ஒரு தனி இனம். அவர்களுக்கு உரிமைகள் உள்ளன. இலங்கையில் முஸ்லீம்கள் இலங்கை தமிழர்களின் போராட்டத்திற்கு முரணாக செயற்பட்டனர் எனவே பாலஸ்தீனியத்தில் உள்ளவர்களும் முஸ்லீம்கள் அவர்களுக்கு கொடுமைகள் நிகழ வேண்டும், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிடம் அடிவாங்கி சாகவேண்டும், அவர்களுக்கு உரிமைகள் கிடைக்கக்கூடாது என எண்ணுவது சிறுபிள்ளைத்தனம் என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வெஸ்ட் பாங்க், காசா பாலஸ்தீனியர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளதா? இரண்டும் திறந்தவெளி சிறைச்சாலைகள் என்பது உங்களுக்கு தெரியாதா? சர்வதேச விதிமுறைகளை உதாசீனம் செய்து இஸ்ரேல் நிலங்களை கையகப்படுத்தி உள்ளது. கொழும்பான், விளங்கநினைப்பவன் (நீங்கள்) பக்குவப்பட்ட, நிதானமாக சீர்தூக்கி ஆராய்ந்து கருத்து எழுதும் கருத்தாளர்கள் என நினைத்தேன். உங்கள் வாதத்தின்படி பார்த்தால் தமிழர்களும் தனிநாடு பெற்று வாழ்வதற்கு அருகதை அற்றவர்கள். எப்படிப்பட்ட மோசடி பேர்வழி தமிழர்கள் எல்லாம் உள்ளார்கள். பாலஸ்தீனர்களின் குணாம்சங்களை விபரித்து அவர்கள் உரிமைகளை மட்டு கட்டும் தமிழர்கள் நகைப்புக்கு உரியவர்கள்.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இது ஒரு நம்பிக்கை என முன்பே கூறியுள்ளேன். சுருக்கமாக இந்த நம்பிக்கை யாதெனில் ஆபிரகாமுக்கும் அடிமை பெண்ணுக்கும் இஷ்மாயில் பிறந்த பின் எதிர்பாராத வயதில் ஆபிரகாமுக்கும் மனைவி சாராவுக்கும் மகனாக ஐசாக் பிறக்கிறார். அதன் பின் சாரா ஈஷ்மாயில்லையும் அவர் தாயையும் ஆபிரகாமின் தேசத்தில் இருந்து விலக்கி வைக்க கோரி, ஆபிரகாம் சஞ்சலபட, கடவுள் ஆபிரகாமை அவ்வாறே செய்யும் படி கூறி, இஷ்மாயிலும் ஆபிரகாமின் ஒரு மகன் என்பதால் அவர் ஒரு பெரும் இனக்குழிவின் தலைவர் ஆவார் எனவும். அந்த இனகுழு செல்வம் படைத்து இருக்கும் எனவும் ஆபிரகாமுக்கு கடவுள் வாக்களிக்கிறார். இவ்வாறு இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்ட இஸ்மாயிலின் வழி வந்தவர்கள்களே அரபு மக்கள். இவர்களும் பல உட்பிரிவாக இருந்தனர். அதில் ஒரு பிரிவான குரோசி யில் பிறந்தவரே மொகமட். இது மகாபாரதம், இராமாயணம் போல ஒரு இதிகாசம். இதை வைத்து இஸ்ரேலில் அரபு மக்களுக்கு ஆட்சி உரிமை உள்ளது என வாதாட முடியாது. ஆனால் அப்படியே வாதாடினாலும் கூட - இஸ்மாயிலின் வழி வந்த அரபுகள் இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்டோர். எனவே அவர்களுக்கு அங்கே ஆட்சி உரிமை இல்லை. அனால் இந்த கதைகள் எதுவும் தேவையில்லை. 2023 இல் அங்கே யூதரும், அரபிகளும் உள்ளார்கள். ஆளை ஆள் அழிக்க முனையாத இரண்டு நாடுகளை உருவாக்குவதே செய்ய வேண்டியது.1 point- நானும் கவிதாயினியும்.....💕
1 pointஆதி அந்தமில்லா இவ்வுலகத்தில் எனக்கு முற்றுப்புள்ளி வையடி நீ....❤️ சுடுகிறதடி உன் மடி ஆற துடிக்கிறதடி என் மடி.... காலம் கடந்து விட்டது தெரியவில்லையடி.....😎 உன் மீதான கண்ணனின் காதல் இன்னும் குறையவில்லையடி💘1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதைத் தானே இஸ்லாமும் சொல்கி வெகு அருமையாக சிலரை தவிர, 3 மதங்களின் தோற்றமும் ஆபிரகாம். இவை 3ம் அப்ரஹாமிக் மதங்கள் என்றே அழைக்கப்படுகின்றன ஏன் யூதம் மட்டும் தான் ஆபிராம் இல் இருந்து தோன்றியதாக, அதனால் ஆபிரகாம் யூதர் எனும் முடிவு? இஸ்லாம் சொல்லுவது பொய் என்ற எடுகோளின் அடிப்படையில். ஆகக்குறைந்தது Arabs ஆபிரகாமின் எதாவது ஒரு மகனின் வழித்தோன்றல்கள் என்பதை ஏற்றுக்கொண்டால், யூதே இனத்துக்கு உள்ள நவீன இஸ்ரேல் அதே தொன்மை உரிமை, Arab இனமான நவீன பலஸ்தீனத்துக்கு உண்டு, பலஸ்தீனியர்களுக்கு எந்த மதமும் இல்லாவிட்டாலும் என்பதை எதிர்ப்பீர்களோ மறுப்பீர்களோ தெரியாது.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உண்மையில் லெபனான் ஒரு பாவப்பட்ட நாடு. ஒரு காலத்தில் ஆட்சியில் 55:45 என கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஆளுமை செலுத்தியதோடு…ஜனாதிபதி கிறிஸ்தவர், பிரதமர் முஸ்லிம் என இருந்தது. இஸ்ரேல்லில் இருந்து ஓடிய பல பலஸ்தீனியரகள் லெபனானில் வாழ தொடங்கி, அங்கே உள்நாட்டு போரை உருவாக்கி, ஹிஸ்புலா பலம் பெற்று. பலத்த அழிவை சந்தித்தார்கள். இப்போ அமைதி உடன்படிக்கை மூலம் கிறிஸ்தவர், முஸ்லிம் 50:50 எனவும் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தும் வைத்துள்ளார்கள். ஆனால் இப்போதும் ஹிஸ்புல்லா செய்யும் சொறி சேட்டைக்கு எல்லாம் மொத்த லெபனானுமே அடிவாங்கும். ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் பாரிஸ் என புகழப்பட்ட நகரம் பெய்ரூட். நான் முன்பே சொன்னேன் அல்லவா @நன்னிச் சோழன் துருக்கி மட்டும் அல்ல, சூழ உள்ள அரபு நாடுகளே ஹமாசுக்கு உதவிக்கு வர யோசிக்கும் என. பலஸ்தீனியர்களை உள் எடுப்பதில் ஜோர்டன் மிக கவனமாக இருக்கும். ஏன் என்றால் அங்கேயும் போய் குழப்பத்தை உண்டு பண்ணுவார்கள் என்ற பயம். இன்று அபுதாபி மிக காட்டமாக ஹமாசை கண்டித்துள்ளது.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
😂 அண்மையில் ஒரு கள உறவிடம் "ஆறுமுக நாவலர் யாழ் மத்திய கல்லூரியில் படித்தார்" என்றேன். அவர் மறுத்து "யாழ் மத்திய கல்லூரியில் படித்த பின்னர் தான் அவர் நாவலர் என்ற பெயர் கொண்டார்!" என்று என்னைக் கடிந்து கொண்டார்! இப்படி இருக்கிறது உங்கள் ஆபிரகாம் பற்றிய வரலாற்றுப் புரிதல்! ஆபிரகாம் யூதர் இல்லையென்றால், இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர் அல்ல என்பது போல ஆகும் - ஏனெனில் இயேசுவைக் கொன்ற பின்னர் தான் கிறிஸ்தவம் என்ற மதம் உருவானது. ஆபிரகாம் என்ற பாத்திரம் பல தெய்வங்களை வழி பட்ட ஒரு காலத்தில் பிறந்து வந்தவர் என்றாலும் ஏக கடவுள் (monotheism) என்ற நிலை நோக்கி அவர் காலத்தில் நகர்ந்த போது தான் யூத மதத்தின் ஆரம்ப வடிவம் உருவானது. இந்த ஆரம்ப மதத்திலேயே பல பிரிவுகள் (sects) இருந்திருக்கின்றன என்பது உண்மை. அலெக்சாண்டர் யூதரைப் பற்றி எழுதவில்லையா தெரியாது, ஆனால் சாக்கடல் ஓலைகள் (Dead Sea scrolls) கி.மு 300 இல் எழுதப் பட்டவை, 1947 இல் கண்டறியப் பட்டன. இன்றைய யூதர்களினதும், கிறிஸ்தவர்களினதும் பொதுக் கதையான பழைய ஏற்பாட்டை இவற்றில் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த சாக்கடல் படிமங்கள் எழுதப் பட்ட இடம் தற்போதைய மேற்குக் கரையில் இருக்கும் Qumran ஆக இருக்க வாய்ப்புகள் உண்டென்கிறார்கள். தங்களை இவர்கள் " people of the book" என்று அழைத்துக் கொண்டார்களென சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், அக்காலத்தில் இருந்த பல யூதப் பிரிவுகளில் ஒன்று தான் இது என சாக்கடல் ஓலைகளின் உள்ளடக்கத்திலிருந்து தெரிகின்றது.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அடிப்படை லொஜிக்கல் சிந்தனை கூடவா இல்லை? ஆபிரகாமுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு அதில் இருந்து ஆரம்பமாவதே யூத மதம். அப்படி இருக்க, அந்த ஒப்பந்ததுக்கும் முதல் ஆபிரகாம் யூதர் இல்லை, எனவே அவர் யூதர் இல்லை என்பது சிரிக்கும் படியாகவல்லவா உள்ளது? ஆபிரகாம் பிறக்கும் போது யூத மதம் இல்லை. ஆனால் அதனை தோற்றுவித்தவர் அவர். ஆகவே ஆபிரகாம்தான் முதல் யூத மதத்தவர். இப்போ விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். இதுகுள்ள, என் மீது சேறடிக்கும் முயற்சி வேற🤣. சரி விடுவம்.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேற்கிற்கு ஆதரவாக எழுதாத ஒரே காரணத்துக்காக நன்னியைத் தூக்கி எறியத் துணிந்துள்ளீர்கள். உங்கள் பார்வையில் நன்னி சிறுகச் சிறுகச் சேமித்து உருவாக்கிய ஆவணங்கள் எல்லாம் அவர் இந்தத் திரியில் எழுதிய மேற்கை ஆதரிக்காத கருத்தால் ஒரு நொடியில் குட்டையிலிருந்து வந்ததாக ஆகிவிட்டது அல்லவா. எடுத்ததற்கெல்லாம் துரோகிப் பட்டம் கொடுத்துத் தமது தமிழீழ ஆதரவை வெளிக்காட்டும் போலியான தமிழ்த் தேசிதவாதியின் நிலை போன்றது உங்கள் நிலைப்பாடு.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நன்றி பிரட்டியதுக்கு. உருட்டி பிரட்டுவதில் வல்லவர் என அனைவருக்கும் தெரியும். என்னாது ஈரோசோ. இப்படி அறளைகளை என்ன செய்யலாம்??1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கமாசை பற்றி நான் எந்த விமர்சனமும் வைக்கவில்லை. அநுராதபுர தாக்குதல் 100% புலிகளால் செய்யப்பட்டது. அதனை பிழை என பலர் இத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். நீங்கள் புலிகளை விமர்சித்ததை இலகுவில் மறந்து மற்றவர்கள் மேல் கையை காட்ட முயல்கிறீர்கள். இன்னொரு தளத்தில் இருந்து ஐயர் எழுதிய புலிகளின் வரலாறு யாழ் களத்தில் பல காலமாக உள்ளதை வாசிக்கவில்லை போல. யார் விந்தை மனிதன் என தெரியவில்லை. யூக்ரேனுக்கு கவிதை எழுதியது போல் ஒரு கவிதையை இஸ்ரேலுக்கும் எழுதலாமே???1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சம்பவம் உண்மை. புலிகள்தான் செய்தார்கள் என்பதை காட்ட, புலிகளின் எதிரிகள் சொல்வது தவிர்ந்த ஆதாரம் வேறு எதும் உள்ளதா? பிகு ஒரு காலத்தின் சுய விமர்சனம் இந்த இனத்துக்கு தேவை என்று கூறி, புலிகளின் தவறுகளை விமர்சித்த என்னை குரல்வளையில் கடித்து வைத்த நீங்களும் , எப்போவும் - கேவலம் ஹமாசை நியாயப்படுத்த, புலிகள்தான் செய்தார்களா? என சந்தேகிக்கப்படும் படுகொலைகளை கூட அவர்கள் தலையில் கட்டி விடப்பார்கிறீர்கள். ஓடி…ஓடி…ஆதாரம் ஒட்டுகிறீர்கள். விந்தை மனிதர்கள்.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மன்னிக்க வேண்டும். உங்கள் பதிவை கோட் பண்ணி, அதன் கீழ் உங்கள் பதிவை கோட் பண்ணி கருத்து எழுதிய எப்போவின் பதிவையும் கோட் பண்ணினேன். இரெண்டாவது மிஸ் ஆகி விட்டது. இதில் எழுதியவை எல்லாம் உங்களுக்கான பதில் அல்ல. சிலது பொதுவானது, சிலது எப்போவிற்கானது. இவ்வளவுதான் எனது வட்டமும். ஆனால் நன்னி அடுத்த கட்டம் போய் சிந்திக்கிறார். அதை என்னால் விளங்கிகொள்ள முடிகிறது. ஆனால் ideas ahead of its time என்பார்களே அதேபோல் நன்னியின் சிந்தனை an idea not for this race. அதைத்தான் குறிப்பிட்டேன்.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதில் எனக்கும் மாற்று கருத்தில்லை. ஆனால் காலா காலமாக ஒடுக்கப்பட்டுவரும் பலஸ்தீனர்களை தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அடிச்சு விடுபவருடன் சேர்ந்து நையாண்டி செய்வதைத்தான் சகிக்க முடியவில்லை.1 point- கருத்து படங்கள்
1 point1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆ…ஊ….அப்டீக்கா…இப்டீக்கா….என்று இந்த திரியில் எழுதபட்டுள்ள இத்து போன பழைய குழாயடி சண்டையை விட, இதை பற்றிய அண்மை செய்திகள், வீடியோக்களும் காத்திரமான, இரு தரப்பு நியாயத்தையும் பேசும் நாகரீகமான கருத்தாடலும் யாழ் களத்தின் திண்ணையில் இடம் பெறுகிறது. நீங்கள் யாழின் உறுப்பினர் அல்லாத வெறும் வாசகரா? அரிய சந்தர்ப்பம்!!! இன்றே யாழ்கள உறுப்பினராகி, திண்ணை அனுமதி பெற்று, ஒரு elevated discussion இல் கலந்து கொள்ளுங்கள்!1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உங்கள் யாருக்காவது இந்த பகுதிகளுக்கு சென்று பார்த்த நேரடி அனுபவம் உள்ளதோ?1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
3 தினங்களுக்கு முன் சிரியாவில்.. ஒரு கடேட் அக்காடமி பரிசளிப்பு வைபவத்தின் மீது குண்டுகள் தாங்கிய ரோன்களை பயன்படுத்தி இஸ்ரேல்.. அமெரிக்க ஆதரவு முஸ்லிம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100 க்கும் அதிக மக்கள்.. பெண்கள்.. குழந்தைகள் என்று கொல்லப்பட்டும்.. 1000 வரை காயமடைந்தும் இருந்தனர். பல மேற்குலக ஊடகங்கள் இதனை செய்தியாகக் கூடப் போடவில்லை. மேற்குலக மனித உரிமை ஜாம்பவான் நாடுகள் வாயே திறக்கவில்லை. இன்று இஸ்ரேலை மையப்படுத்தி கட்டி வைக்கப்பட்டிருந்த அனைத்து மாயைகளும் நொருங்கிவிட்டது. மேற்குலக ஜாம்பவான்கள் கண்ணீரும் கம்பலையுமாக அறிக்கை விடுகிறார்கள். 1. உலகிலேயே சிறந்த இராணுவ பாதுகாப்பு எல்லை என்று சொன்ன எல்லையை பலஸ்தீன விடுதலைப் போராளிகள் கடந்து சென்றுள்ளமை. 2. இஸ்ரேலின் மிகச் சிறந்த உளவு அமைப்பு என்று சொல்லப்பட்ட மொசாட் படுதோல்வி கண்டுள்ளமை. 3. கமாஸின் ராக்கட்டுக்களை அழிக்க முடியாமல் திணறிய இஸ்ரேலின் அயன் சீல்ட்... ஏவுகணை பாதுகாப்பு பொறிமுறை. 4. உலகில் சிறந்த டாங்கிகளை கொண்ட இஸ்ரேலின் தாங்கிகள் மீது கமாஸ் சவாரி. செயல்திறனற்றுப் போனமை. 5. உலகில் சிறந்த இராணுவம் என்று சொல்லப்பட்ட இஸ்ரேல் இராணுவம்.. சண்டையிடாமலே.. சரணடைந்த கேவலம். 6. இத்துணை பெரிய இராணுவ நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட இஸ்ரேலின் இராணுவ கண்காணிப்பை சிதறிடித்து இஸ்ரேலுக்குள் பல முனைகளில் நுழைந்துள்ள கமாஸ் போராளிகள். எல்லாமே.. இஸ்ரேல் பற்றிய மாயையை தகர்த்துவிட்டுள்ளது. இதே இஸ்ரேல்.. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான ஆரம்பம் முதல் கடைசி வரை.. சிங்கள பெளத்த பேரினவாத அரசிற்கும் இராணுவ இயந்திரத்திரத்திற்கும் பலவேறு வழிகளில் உதவி வந்ததோடு.. முக்கிய டோரா... பீரங்கிப் படகுகள்.. கிபீர் விமானங்களை சொறீலங்கா.. தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு பயன்படுத்த தொடர்ந்து வழங்கி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆளில்லா உளவு விமானங்களையும் (வண்டு).. இஸ்ரேலே சொறீலங்காவுக்கு வழங்கி இருந்தது. கமாஸின் பயங்கரவாதத்தை விட இஸ்ரேலின் பயங்கரவாதம்.. எம்மினத்தை அதிகம் அழித்திருக்கிறது. எம்மினம் இன்று அடிமைப்பட்டுக்கிடக்க அதுவும் ஒரு காரணம். இஸ்ரேலின் பயங்கரவாதம் கமாஸினதை விட மிக மிக மிக மிக மோசமானது. அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவானது.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலில் போர் நிலை அறிவிப்பு. காசா பகுதியில் இருந்து இன்று அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் பாய்ந்த நிலையில் இஸ்ரேல் போரை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று காலை இஸ்ரேலை நோக்கி பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. ஒரு சில ஊடகங்கள் 5000 ஏவுகணைகள் வரை பாய்ந்ததாகக் கூறுகின்றன. ஆனால் ஏவுகணைகளின் எண்ணிக்கையை இஸ்ரேல் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை. ஆனால் எதிர்பாராத திடீர் ஏவுகணைகள் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் அபாய ஒலிகள் ஒலிக்க இஸ்ரேல் அரசு போர் நிலை சூழல் உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. https://athavannews.com/2023/13528241 point - இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.