Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    4
    Points
    46791
    Posts
  2. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    9976
    Posts
  3. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    1836
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    4
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/18/23 in all areas

  1. விடுப்பு பார்க்கிறதுல ஒரு விருப்பம்தானே அதான் கேட்டுப்பார்த்தன் இந்த 6 மாத விசிட்ட அப்ப போதும் என்று சொல்கிறீர்கள் போல அப்ப சரி ஆளை விடுவம் இது தெரியாம நாம திரிஞ்சு இருக்கிறம் என்றா பாருங்கோவன்
  2. முகநூல் பதிவு ஒன்று: நான் உண்மையின் ஆதரவாளன்! Dr. Gabor Mate ஹங்கேரியில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்த “கபோர் மற்றே” (Gabor Mate) அவர்கள் “கொலோகாஸ்ற்” படுகொலையிலிருந்து தப்பிய ஒரு 5 மாதக் குழந்தை. 1944 இல் பிறந்த அவர் இப்போ கனடாவில் உளச்சிகிச்சை வைத்திய நிபுணராக இருக்கிறார். இது குறித்த தனது ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை 5 நூல்களை எழுதியுள்ளார். அவரது குடும்பம் கொலோகாஸ்ற் படுகொலைக்கு இரையான தாக்கம் அவர் இத் துறையை தேர்ந்தெடுக்க வைத்ததோடு அதற்குள் ஆழமாகப் போகவும் செய்தது. அவர் ஒரு அரசியலாளர் அல்ல. இன்றைய இஸ்ரேல்-காஸா நிலைமைகள், அதன் பின்னணி குறித்து முன்வைக்கும் அவரது கருத்துகள் வேறொரு தளத்தில் இருப்பதால் இதை மொழிபெயர்த்திருக்கிறேன். Russell Brand அவர்கள் நடாத்தும் இணைய ஒளிபரப்பில் Under The Skin என்ற நிகழ்ச்சியில் Dr.Gabor Mate அவர்கள் முன்வைத்த கருத்துகள் இவை. நான் அவுஸ்விற்ஸ் கொலோகோஸ்ட் (Auschwitz Holocaust) இலிருந்து தப்பிய ஒரு குழந்தை. எனது அப்பா அப்பப்பா அம்மா அம்மம்மா என எல்லா உறவினர்களும் அதில் கொல்லப்பட்டார்கள். இதுதான் எனது குடும்பப் பின்னணி. எனது யூத அடையாளம் குறித்த அவமானத்துடன் நான் வளர்ந்தேன். உலக யுத்தத்தின் பின்னரும் ஹங்கேரியில் நான் ஒரு யூதன் என்பதற்காக அவமானப்படுத்தப் பட்டேன். அவ்வாறான சந்தர்ப்பங்களில் என்னைக் காப்பாற்ற வரும் எனது நண்பன் ஒருவனை நான் ஞாபகப்படுத்த முடிகிறது. அவன் சொல்வான் “அவனை விட்டுவிடுங்கள். அவன் யூதனாகப் பிறந்தது அவனது தவறில்லை” என்பான். இது தவறு. ஆனால் இது அவனது தவறல்ல. இது ஒரு பாதுகாப்பு அரண். இவ்வாறான சூழலில் நான் வளர்ந்தேன். எனது அப்பப்பா ஒரு இயற்பியல்வாதியும் எழுத்தாளரும் ஆவார். அவுஸ்விற்ஸ் இல் கொல்லப்பட அவர் விளாடிமிர் யப்போற்றின்ஸ்கி (Vladimir Jabtinky) என்பவரின் நண்பன். யப்போற்றின்ஸ்கி பெரும் சியோனிசத் தலைவர்களில் ஒருவர். கனடாவில் எனது விடலைப் பருவத்தின்போது சியோனிஸ்டாக (Zionist) உருவானேன். அது யூத மக்களின் கனவாக, தமது வரலாற்று நிலத்தில் உயிர்த்தெழுதலாக, அவுஸ்விற்ஸ் இன் முட்கம்பி சுருள் வேலியிலிருந்து விட்டுவிடுதலையாகி ஒரு யூத அரசின் எல்லைக்குள் வியாபித்தலாக, அதுவும் பலம்பொருந்திய இராணுவத்தின் பாதுகாப்பு அரணுக்குள் அடைக்கலமாதலாக உணர்ந்ததில் யூத மக்களின் விடுதலையைக் கண்டேன். இந்தக் கனவை நம்புதல் களிப்பூட்டியது. பிறகு அது அப்படியில்லை என்பதை கண்டேன். இந்த யூதக் கனவை ஒரு யதார்த்தமாக அடைய அந்த மண்ணின் உள்ளுர்வாசிகள் அச்சமூட்டும் அனுபவங்களை தரிசிக்க வேண்டியிருந்தது. சியோனிச கோசம் ஒன்று இருக்கிறது. “நாடே இல்லாத மக்களுக்காக, மக்களே இல்லாத ஒரு நாடு” என்பதே அது. ஆனால் மக்களில்லாத ஒரு நாடும் கிடையாது. அங்கே மக்கள் இருப்பார்கள். அவர்கள் நூற்றுக் கணக்கான வருடங்களாகவோ அல்லது அதைவிட நெடிய காலம் கொண்டதாகவோ அவர்கள் அங்கு வாழ்ந்திருப்பார்கள் என்பதே உண்மை. டேவிட் பென் குரியன் (David Ben Gurion) இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியாக இருந்தவர். அவர் கேட்டார் “யார் அந்த பலஸ்தீனியர்?. ஏனெனில் றோமர் காலத்தில் எல்லா யூதர்களும் பலஸ்தீனத்தை விட்டு வெளியேறியிருக்கவில்லை. பலர் அங்கு தங்கியிருந்தார்கள். பலர் இஸ்லாம் க்கு மதம் மாறினார்கள். அதனால், பலஸ்தீனர்கள் எங்கே இருக்கிறார்கள்?. உய்த்துணருங்கள். ஒருவழியில் அவர்கள் புராதன யூதர்களின் வழித்தோன்றல்கள். வேண்டுமானால் அவர்கள் எமது மைத்துனர்கள் என கூறலாம்” என்றார். இது குறித்து உங்கள் பார்வை எதுவாகவும் இருக்கட்டும். உள்ளுர் மக்களை அடக்கியொடுக்காமலும், வெளியேற்றாமலும் ஒரு யூத அரசு உருவாக்கப்பட்டிருக்க சாத்தியமில்லை. இதைத்தான் அவர்கள் 1947 இல் செய்தார்கள். எல்லாவற்றுக்கும் முதலில் இந்த அரசு பிரித்தானியப் பேரரசின் பாதுகாப்பினுள் இருந்தது. 1948 இல் பலஸ்தீனியர்களின் வெளியேற்றம் தொடர்ச்சியாக இருந்ததாக இஸ்ரேலிய யூத வரலாற்றாசிரியர்கள் எந்த சந்தேகத்துக்கும் இடமின்றி காட்டியிருக்கிறார்கள். இது பரவலாக நடைபெற்றது. இது குரூரமானது. கொலைகாரத்தனமானது. இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட ஒன்று. இதுவே அரபு மொழியில் “நாக்பா” (Nakba) எனப் படுகிறது. அதாவது பேரழிவு அல்லது நாசகாரமானது என்பது பொருள். கனடாவில் ஒரு சட்டம் இருக்கிறது. அதன்படி நீங்கள் கொலோகாஸ்ற் இனை மறுக்கவே கூடாது. அப்படியான சட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது இருக்கட்டும். ஆனால் இஸ்ரேலில் ஒருவரும் நாக்பாவை குறிப்பிட்டு பேசவே கூடாது. இஸ்ரேல் என்ற நாட்டின் தோற்றத்தின் அடித்தளமே இந்த நாக்பாவின் மீது கட்டப்பட்டது என்ற போதும்கூட, யாரும் அதை உச்சரிக்கக் கூடாது. ஆம், நாம் எமது அழகிய கனவை நனவாக்கினோம். ஆனால் அதற்காக நாம் இன்னொருவர் மீது கொடுங் கனவை திணித்தோம். முதலாவது துணிகரமான பலஸ்தீனர்களின் எழுச்சியான இன்ரிபாடா (Intifada) நடந்த காலகட்டத்தில், இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை சென்று பார்த்தேன். அங்கு நான் கண்ட காட்சிகளால் இரண்டு வாரமாக ஒவ்வொரு நாளும் அழுதேன். ஆக்கிரமிப்பின் மிருகத்தனத்தையும் துன்புறுத்தல்களையும் அதிலிருந்த கொலைகாரத்தனத்தையும் கண்டேன். பலஸ்தீனியர்களை எரித்ததையும் பலஸ்தீனர்களின் ஒலிவ் மரங்களை வெட்டி வீழ்த்தியதையும் கண்டேன். அவர்களுக்கான நீரின் மீதான உரிமை மறுப்பையும், அவமானப்படுத்தல்களையும் கண்டேன். அது பிறகும் தொடர்ந்துகொண்டே இருந்தது. இதுதான் இஸ்ரேலிய அரசின் தோற்றப் பின்னணி. இது வேறு வடிவில் நிகழ்ந்திருக்கவும் முடியாது. ஏனெனில் மீண்டும் சொல்கிறேன், உள்ளுர் மக்களை அடக்கியொடுக்காமலும் வெளியேற்றாமலும் இந்த பிரத்தியேகமான யூத அரசை அவர்களால் நிறுவியிருக்க முடியாது. 20ம், 21ம் நூற்றாண்டுகளின் மிக நீண்ட இனச்சுத்திகரிப்பு இது. அது இப்போதும் தொடர்கிறது. இப்போதைய நிலைமை அந்த முன்னைய நிலைமையைவிட இன்னும் மோசமானது. காஸாவில் இருப்பவர்கள் யார்? இது ஒரு சிறிய நிலப்பரப்பைக் கொண்டது. இஸ்ரேலிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் அல்லது இஸ்ரேல் என இன்று அழைக்கப்படுகிற நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் நேரடி வாரிசுகள் அல்லது பேரப்பிள்ளைகள் அவர்கள். நான் ஒரு யூத இனத்தவனாக என்னால் நாளைக்கே ரெல் அவீவ் (Tel Aviv) க்கு போய் இறங்கி பிரசாவுரிமை கோர முடியும். இது திரும்புதலுக்கான உரிமை (Right to Return) என்ற சட்டத்தின் கீழ் சாத்தியமாக உள்ளது. ஆனால் ஜெரூசலத்தில் பிறந்து தற்போது வன்கூவரில் வசிக்கும் எனது பலஸ்தீனிய நண்பன் ஹன்னா ஹவாஸ் குறைந்தபட்சம் அங்கு சென்றுவரக்கூட உரிமை மறுக்கப்படுகிறது. இதை இன்னொரு வகையில் கூறினால், யூத வரலாறு சொல்கிறபடி எடுத்துக்கொண்டால், அது கேள்விக்கிடமானது என்றபோதும், 2000 ஆண்டுகளுக்குப் பிறகும் நான் திரும்பிச் செல்லும் உரிமை எனக்கு உள்ளதெனின், ஹன்னா 70 வருடங்களுக்குப் பிறகு திரும்பிச் செல்ல ஏன் உரிமையில்லை?. எனவே யாருடைய காஸா அது? தனிமைப்படுத்தப்பட்ட, தடுக்கப்பட்ட இந்த மக்கள் பயங்கரமான விதத்தில் அடைத்துவைத்திருக்கப் பட்டிருக்கிறார்கள். உலகின் மிகப் பெரிய திறந்தவெளிச் சிறைச்சாலை என மக்கள் அதை அழைக்கிறார்கள். அது அவ்வாறாகவே உள்ளது. மிக மோசமான வறுமை, 50 வீத வேலைவாய்ப்பின்மை அங்கு நிலவுகிறது. ஹமாஸ் ஒரு இஸ்லாமிய அமைப்பு. அது இஸ்ரேலினால் ஊக்குவிக்கப்பட்டு ஆதரவு வழங்கப்பட்ட ஓர் அமைப்பு. இஸ்ரேலால் விரும்பப்படாததும் மதச்சார்பற்றதுமான பலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) ஓர் எதிர்முகாமாக ஹமாஸை இஸ்ரேல் கருதியதே அதற்குக் காரணம். இந்தவகையில் அனுமதிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட நிபந்தனைகளுள் மக்கள் தமக்கான ஒரு அதிதீவிரத் தலைமையை தேர்வுசெய்வதே உண்மையில் நடக்கிறது. பரிதாபகரமானதும் நம்பிக்கை இழந்ததுமான நிலைக்குள் தள்ளப்பட்டதோடு, பறிக்கப்பட்ட எல்லா சாத்தியப்பாடுகள் மற்றும் இன்னோரன்ன இன்மைகளினுள் விடப்பட்ட மக்கள் அதைத்தான் செய்ய முடியும். பலஸ்தீனர்களின் உரிமைக்கான போராட்டத்தில் நீங்கள் ஹமாஸின் கொள்கைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில்லை. அங்கு நடந்த தேர்தல்களை சர்வதேச சமூகம் கண்காணித்தது. இதுவரை அரபு உலகத்தில் நடந்த தேர்தல்களிலேயே அதிக சுதந்திரமான தேர்தல் அவை என கண்காணிப்பாளர்கள் அறிவித்திருந்தனர். ஹமாஸ் வெற்றிபெற்றிருந்தது. அவ்வாறாக வென்ற ஹமாஸை ஒரு இராணுவச் சதி மூலம் கவிழ்க்க இஸ்ரேலும் அமெரிக்காவும் முயற்சி செய்தன. ஹமாஸ் அதை தோற்கடித்தது. அதற்கான தண்டனையாகவே காஸா மீது தடைகளை அறிவித்ததுடன் உணவு, மருத்துவ வழங்கல்கள், போதியளவு நீர் விநியோகம் என்பவற்றையும் இஸ்ரேல் மறுத்தது. இப்படியே நிலைமைகள் தொடர்ந்தன. இப்போ இந்த மோதலில் வந்து நிற்கிறது. இஸ்ரேல் இப்போ அறுவடை செய்கிறது என்கிறார்கள் அவர்கள். அதன்மூலம் அவர்கள் சொல்ல வருவது பலஸ்தீன மக்களின் கூட்டுப் படுகொலைக்கான விளைவைத்தான். இப்போ ஹமாஸ் ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் ஏவி மக்களை கொல்கிறார்கள் என்பது உண்மையா?. ஆம் உண்மை. அதை நான் ஆதரிக்கிறேனா? இல்லை. ஆனால், அப்பாவி மக்களின் கொலை என வருகிறபோது, 1982 இல் இஸ்ரேல் இருபதினாயிரம் லெபனான் மக்களை கொத்துக் குண்டுகள் போன்ற தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் கொண்டு கொன்று தீர்த்தது. ஒரு யுத்தத்தில் எந்தவகையிலும் ஒரு மதிப்பீட்டுக்கு வர முடிவதில்லை. அதிகாரம், பொறுப்புக் கூறல், ஒடுக்குமுறை என்ற வகைமைகளில் ஒரு ஒப்பீடு செய்தால் குறிப்பிடத்தக்க வகையில் அது ஒரு பக்கத்திலேயே இருக்கிறது. ஹமாஸ் பற்றி நீங்கள் முன்வைக்கக்கூடிய மிக மோசமான செயல்களின் அளவை ஆயிரம் மடங்குகளால் பெருக்கினால்கூட, பலஸ்தீன மக்களின் மேலான இஸ்ரேலின் அடக்குமுறை மற்றும் கொலைகளின் அளவை எட்ட முடியாது. மேற்கத்தைய ஊடகங்களை கவனியுங்கள். கொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் மீது கல் எறிந்தால் அது சாகசம் வாய்ந்ததாக காட்டப்படுகிறது. மியன்மாரில் அடக்குமுறை இராணுவத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கவண் எறிந்தால், அதுவும் சாகசம் வாய்ந்ததாக காட்டப்படுகிறது. ஆனால் பலஸ்தீன சிறார்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் மீது கல் எறிந்தால் அது பயங்கரவாதமாகக் காட்டப்படுகிறது. அத்தோடு மேற்கத்தைய ஊடகம் மற்றைய நாடுகள் மீது விமர்சனம் செய்கிற அளவுக்கு அது இஸ்ரேலை கண்டுகொள்வதில்லை. அண்மையில் ஒரு பலஸ்தீனிய பெண் என்னை தொடர்கொண்டு பேசினார். அவர் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் விடலைப் பருவ சிறார்களுக்கான ஒரு நிகழ்ச்சியை செயற்படுத்தி வருபவர். 14, 15, 16 வயதுகளை உடைய அந்த சிறுவர்கள் சில வேளைகளில் தங்களது குடும்பத்தவரை காணும் சந்தர்ப்பம் மாதக் கணக்கில்கூட வாய்ப்பதில்லை. அவர்களுக்கான உளவழி சிகிச்சையை அந்தப் பெண் செயற்பாட்டாளர் செய்து வருகிறார். தியானம், ஆடல், பாடல், சுபி டேர்விஷ் என்ற மெல்லசைவு நடனம் போன்ற வழிகளில் அந்தச் சிறார்களை உளவியல் சிக்கலிலிருந்து மீட்க பாடுபடுகிறார். பிள்ளைகள் பின்-உள அதிர்ச்சி (post-traumatic) நெருக்கடியிலான பாதிப்பில் இல்லை. அதாவது உள அதிர்ச்சி (trauma) அவர்களுக்கு ‘பின்னையதாக’ இல்லை. அது நாளாந்த உள அதிர்ச்சியாக இருக்கிறது என்றார். என்னைப் போல உங்களது சியோனிச நண்பரும் காஸாவின் ஆக்கிரமிக்க்பட்ட பகுதிகளை சென்று பார்க்க வேண்டும் என அவாவுறுகிறேன். அதன் பிறகு அவர் பேசட்டும். அவரிடம் ஒரு அவுன்ஸ் மனிதாபிமானமாவது எஞ்சியிருக்குமாயின், நான் அங்கு இருந்தபோது இரு வாரமாக அழுதது போலவே அவரும் அழுவார். உங்களுக்கு அல்பேர்ட் ஸ்பீர் (Albert Speer) இனை ஞாபகப்படுத்த முடிகிறதா. நாசிகளின் ஆட்சியில் ஆயுத விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தவர். அவர் ஒரு போர்க் குற்றவாளி. போர் முடிவடைந்த பின்னர் ஸ்பான்டௌவ் (Spandau) சிறையில் 20 ஆண்டுகளை கழித்தவர். அவர் நாசிகளின் குற்றங்கள், இனப்படுகொலை, மனிதவிரோதங்கள், போர்க் கொடுமைகள் என பல விடயங்கள் பற்றி பேசியிருந்தார். குறிப்பாக யூதர்கள் மீதான இனப்படுகொலை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அவர் தனது சுயசரிதையில் கூறுகிறார், “உனக்கு எவை தெரிந்திருந்தன?” என அடிக்கடி கேட்டார்கள். “எனக்கு என்ன தெரிந்திருந்தது” என்பது பொருத்தமான கேள்வி அல்ல. அந்தக் கேள்வி இவ்வாறு இருக்க வேண்டும். “நீ விரும்பியிருந்தால் எவையெவைகளைத் தெரிந்து கொண்டிருக்கலாம்” என கேட்கப்பட வேண்டும் என்கிறார். அதற்கான போதுமான குறிப்புணர்தலை பெற்றிருந்தேன் என்கிறார் அவர். ஒரு உதாரணத்தை முன்வைக்கிறார். தான் ஒரு ஆயுத உற்பத்தித் தொழிற்சாலைக்குச் சென்றபோது, அவர் அங்கு வேலைக்கு கொண்டுவரப்பட்ட holocaust கைதிகள் சிலர் கண்ணில் எதிர்ப்பட்டார்கள் என்றும், தான் அவர்களை “நீங்கள் இங்கு இருக்க விரும்பிறியளா அல்லது முகாமிலா” என மட்டும் கேட்டதாகவும் சொல்கிறார். ஆனால் தான் அதைக் கேட்டபோது அவர்களின் முகத்தில் திடீரென அதிர்ச்சி வெளிப்பட்டதாகவும் சொல்கிறார். ஆனால் நான் அவர்களை “ஏன் எனது இந்தக் கேள்விக்கு அதி அதிர்ச்சி அடைகிறீர்கள்” என கேட்டதில்லை என்கிறார். ஒருமுறை தான் ஜேர்மன் ஜெனரலிடம் (அவர் நாசி ஜெனரல் என சொன்னாரில்லை) தான் ஜேர்மனியின் கிழக்குப் பகுதிக்கு செல்ல யோசிப்பதாகச் சொன்னபோது, “நீங்கள் அங்கே என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டியதில்லை” என பதிலளித்தார். “நான் ஒருபோதும் ஏன் என்று கேட்கவில்லை” என்கிறார் அவர். எனவே கேள்வி “அவருக்கு என்ன தெரிந்திருந்தது” என்பதல்ல. “அவர் விரும்பியிருந்தால் எதைத் தெரிந்துகொண்டிருப்பார்?” என்பதே அதன் சாரம். இப்போ நாங்கள் நாசி ஜேர்மனியில் வாழவில்லை. எவரும் யுரியூப் க்கு போய் இலான் பப்பே (Ilan Pappe) சொல்வதை அவதானிக்க முடியும். அவர் ஒரு சிறந்த இஸ்ரேலிய வரலாற்றாசிரியர். இஸ்ரேலில் தனது வாழ்வு நெருக்கடியாக இருந்ததால் இங்கிலாந்துக்கு வந்தார். அதேபோலவே நோர்மன் பின்கெல்ஸ்ரைன் (Norman Finkelstein) இனை அவதானிக்க முடியும். அவர் ஒரு யூத பேராசிரியர். காஸா குறித்து நிபுணத்துவம் பெற்றவரும், உலகில் அறியப்பட்டவரும் ஆவார். அவர் இஸ்ரேலின் கொள்கைகளுக்கு எதிராக பொதுவெளியில் பேசியதால் பல்கலைக்கழக பேராசிரியர் பதவிக்காலம் பறிக்கப்பட்டவர். இஸ்ரேலிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் சிலரின் பேச்சுகளை அவதானிக்க முடியும். தாம் இராணுவத்தில் பணியாற்றியபோது புரிந்த மனிதவிரோத அல்லது காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்காக கவலைப்படுகிறார்கள். இஸ்ரேலிய வான்படையைச் சேர்ந்த சிலர் தாம் ஏன் காஸா மீதான பறத்தலுக்கும் தாக்குதலுக்கும் மறுத்தோம் என்பது பற்றி பேசுவதை அவதானிக்க முடியும். அதாவது நீங்கள் விரும்பும் எல்லா தகவல்களையும் இப்போ பெறக்கூடியதாக இருக்கிறது. எனவே எவராவது எதையாவது தெரியாமல் இருப்பது என்பது தகவல்களின் போதாமையால் அல்ல. அதாவது உங்களுக்கு என்ன தெரியும் என்பதல்ல பிரச்சினை, மாறாக நீங்கள் விரும்பினால் எதையெதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க முடியும் என்பதே. இஸ்ரேலுக்காக நிற்கும் யூதர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஏனெனில் நானும் அதே முகாமில் பயணிக்க வைக்கப்பட்டவன். நாசிகளின் கொடுமையான இனப்படுகொலைப் பயங்கரங்கள் தந்த அவநம்பிக்கை பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதை நான் புரிந்துகொள்கிறேன். ஆம், அவை எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறேன். ஆனால் இவை எதுவுமே நாம் இப்போ என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை நியாயப்படுத்தாது. தேர்ந்த உண்மைகளை தெரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு மன்னிப்பும் வழங்காது. அத்தோடு யூதர்களோ யூதர் அல்லாதவர்களோ எவராக இருந்தாலும் ஒருவர் குரல்கொடுப்பதை அதன் பெயரால் மௌனமாக்கும் முயற்சிகள் வேண்டுமென்றே செய்யப்படுவதையும் ஏற்க முடியாது. அதிகாரம் மற்றும் கட்டுப்படுத்தல் என்ற தோரணையில் நிகழ்த்தப்படுபவைகளுக்கு நேரடியாக எதிர்த்து நிற்க வேண்டும். இரு பக்கங்களிலும் நிற்க முடியாது. அங்கே மக்கள் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு நிலம் இருந்தது. மற்றைய மக்கள் அந்த நிலத்தைப் பெற விரும்பினர். அவர்கள் அதை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்கின்றனர். பாரபட்சம் காட்டினர். ஒடுக்கினர். வெளியேற்றவும் செய்தனர். அதுவே நடந்தது. அதுவே இப்போதும் நடக்கிறது. நல்ல நோக்கமுள்ளவர்கள் அவதூறுகளுக்கு எதிராக நிற்க வேண்டும். அதைத்தான் நான் விரும்புகிறேன். இது பலஸ்தீன ஆதரவாளராக இருப்பது பற்றிய கேள்வியல்ல. நான் பலஸ்தீன ஆதரவாளன் அல்ல, தேர்ந்த உண்மையின் ஆதரவாளன். I am not a pro-Palastinian I am pro-Truth முடிவாக, இப்போ நடந்துகொண்டிருப்பது இஸ்ரேலுக்கு நீண்டகால நோக்கில் பேரழிவாகவே அமையும் என நினைக்கிறேன். அது மீளமுடியாததாக இருக்கும். நான் உணர்வதுபோலவே தாமும் உணரும் பல நல்ல மனிதர்கள் இஸ்ரேலில் இருக்கிறார்கள். எனவே இன்றைய கேள்வி ஒருவர் பலஸ்தீன ஆதரவாளராக இருப்பது பற்றியதல்ல. நீதியின் மீதும் அர்ப்பணிப்பு மீதும் சுதந்திரத்தின் மீதும் தேர்ந்த உண்மையின் மீதும் காதல் கொண்டவரா இருக்கிறாரா இல்லையா என்பதே ! 14102023 Thanks for image: ACERT. https://sudumanal.com/ தமிழ் மொழிபெயர்ப்பு ப .ரவி (சுவிஸ் ) https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0mycXFake4udtAsNVShGhxiBnym7sFLWamZEEW4shzwtcH7NZjGt3ZMXQQW7svwYol&id=100000166475954
  3. மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் ஆதவன் பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன? பொங்குதமிழ் தனது முதற்காலடியை எடுத்துவைத்த 2010 பொங்கல் நாளிலிருந்து, இன்றுவரையான இந்த 5 வருடங்களில் 500 கருத்துப்படங்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளார் ஓவியர் மூனா. பொங்குதமிழ் தனது 6 வது காலடியை எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இந்த இலக்கை அவர் அடைவது குறித்து பெருநிறைவு அடைகிறோம். 500 கருத்துப்படங்கள் என்பதை வெறும் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த சாதனையாக நாம் பார்க்கவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான குழப்பங்கள் நிறைந்த ஒரு காலத்தில், ஈழ அரசியல் குறித்த கருத்துருவாக்க முயற்சிக்கு மூனாவின் ஓவியங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதே இங்கு முதன்மையானது. அவரின் ஓவியங்கள் தனித்துவமானவை. அவை பேசும் மொழியும் சொல்லும் சேதியும் எளிமையானது. வாசகனை இலகுவாக சென்றடையக்கூடியது. மூனா போன்ற ஓவியர்கள் தொடர்ச்சியாக இயங்குவது என்பது சாதாரணமான ஒன்றல்ல. வாரம் தோறும் அன்றைய அரசியல் சூழல்களை மையப்படுத்தி யோசிக்கவும் வேண்டும், அந்த யோசனைகளை படங்களாக வெளிக்கொண்டுவரவும் வேண்டும். அவை வாசகனுக்கு புதிதாக ஒன்றை சொல்வதாகவும் இருக்கவேண்டும். எத்தனை நீண்ட, கடினமான பணி இது. ஆனாலும் மூனாவின் கரங்கள் ஒரு வாரம்கூட ஓய்வெடுத்ததில்லை. வாரம்தோறும் அவை எவ்வித தடங்கலுமின்றி வாசகர்களை சென்றடைந்துவிடும். இந்த 500 கருத்துப்படங்களும் பேசாத விடயங்களேயில்லை. சிங்கள பௌத்த மேலாண்மை மீதான கோபங்களை அவை வெளிப்படுத்தியுள்ளன. ஈழ அரசியலின் இரட்டைப் போக்குகள் குறித்து அவை விமர்சனங்களை முன்வைத்துள்ளன, ஈழத் தமிழ் சமூகம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவை பதிவுகளை மேற்கொண்டுள்ளன. தமிழக, உலக அரசியல் சார்ந்தும் அவை பேசியுள்ளன. மூனாவின் ஓவியங்கள் பொங்குதமிழின் முகங்களில் ஒன்று. 2009 ம் ஆண்டின் இறுதிப் பகுதி. பொங்குதமிழை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தற்செயலாக அவரின் வலைப்பக்கத்தை பார்க்க நேரிட்டது. அங்கு வெளியாகியிருந்த கருத்துப் படங்களைப் பார்த்தவுடன் அவரிடமிருந்து ஒரு படமாவது வாங்கிவிட வேண்டும் என்ற உந்துதலுடன் அவரின் மின்னஞ்சலுக்கு தொடர்புகொண்டேன். பதிலேதுமில்லை. நண்பர் இரஞ்சித் இலண்டன் ஐ.பி.சியுடன் இயங்கியவர். பலருடனும் அவருக்குத் தொடர்பிருந்தது. 'மூனா என்பவரை தெரியுமா? அவருடன் அறிமுகம் உண்டா' என்று பேச்சுவாக்கில் கேட்டேன். 'அவர் எனது நண்பர்தான், கேட்டுப் பார்க்கிறேன்' என்று மட்டும் சொன்னார் இரஞ்சித். எனக்கு ஏனோ நம்பிக்கையில்லை. ஆனால், நாம் எதிர்பார்த்த நாளுக்கு முன்னராகவே படம் வந்துசேர்ந்தது. அத்துடன் பொங்குதமிழின் அறிமுகம் குறித்து அவர் எழுதிய வாழ்த்தும் வந்து சேர்ந்தது. எமது வேண்டுதல்கள் எதுவும் இன்றியே தொடர்ந்தும் கருத்தோவியங்களை அனுப்பிக்கொண்டேயிருந்தார். பொங்குதமிழ் கட்டியமைக்க விரும்பிய கருத்துத்தளத்திற்கு அவரின் படங்கள் பெரிதும் துணைநின்றன. அவர் அனுப்புகின்ற படங்களில் சில வெளியாகாமலும் போனதுண்டு. ஆனாலும் அவை குறித்து அவர் எந்தக் கேள்வியும் எழுப்பியதில்லை. படைப்பொன்றை வெளியிடுவதும் தவிர்ப்பதும் பொங்குதமிழ் ஆசிரியரின் உரிமை என்ற விடயத்தில் அவர் எப்போதும் தெளிவாகவே இருந்தார். நீண்டகாலமாக ஜேர்மனியில் வாழ்ந்துவரும் மூனா, ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். கருத்துப்பட ஓவியக்கலை பெரியளவில் வளர்ச்சிபெறாத ஈழத்தமிழ் சமூகத்தில் மூனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரிடம் இயல்பாகவே உள்ள நகைச்சுவை உணர்வு கருத்துப்படங்களையும் அதே நகைச்சுவை கலந்த கிண்டலுடன் வரைவதற்கான ஆற்றலை அவருக்கு கொடுத்திருக்கிறது. தவிர, இக் கருத்துப்படங்களுடன் தொடர்பானவர்களும் மனம்கோணாத ஒரு நாகரீகமான எல்லைக்கோடு எப்பவுமே மூனாவிடம் இருந்ததுண்டு. தவிர, மூனாவின் கருத்துப்படங்கள் ஓர் உன்னதமான சமூக நோக்கில் நின்று வரையப்பட்டவை. ஆழமான கருத்துச்செறிவும், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஐந்து ஆண்டுகால வரலாற்றின் முழுமையான பதிவுகளாகவும் அவை கொள்ளக்கூடியவை. அவரின் கருத்துப்படங்களை காலஒழுங்கில் பார்க்கின்ற ஒருவர், கடந்த ஐந்தாண்டு நிகழ்வுகள் தொடர்பான ஒரு மேலோட்டமான வரலாற்று ஓட்டத்தைப் பெற்றுவிட முடியும். அந்தளவிற்கு வரலாற்று நிகழ்வுகள் குறித்து ஆழமான பதிவுகளாகவும் அவை அமைந்துள்ளள என்பதே என் எண்ணம். பொங்குதமிழுக்கென அவர் வரைந்துதரும் கருத்தோவியங்களை வேறு பல இணையத்தளங்களும் பிரதிசெய்தி வெளியிட்டு வருகின்றன. கனடாவிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளும் பொங்குதமிழில் வெளியாகும் அவரின் கருத்தோவியங்களை வெளியிட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்னர், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி குறித்து மூனா வரைந்த ஒரு கருத்தோவியம் குறித்து, குமுதம் இணையத் தொலைக்காட்சியின் விவாதமொன்றில் பேசப்பட்டதையும் நானறிவேன். உண்மையைச் சொல்வதானால், ஓவியர் மூனாவுடன் தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமேதுமில்லை. பொங்குதமிழுடன் அவர் இணைந்து பணியாற்றிய இந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைதானும் நான் அவருடன் பேசியதில்லை. ஆனாலும் 500 கருத்தோவியங்களை பொங்குதமிழில் பூர்த்திசெய்துள்ள சாதனை குறித்து எழுதவேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அவரின் தனித்துவமான இயல்புதான் அதற்கான முதற்காரணம். தன்னை முன்னிலைப்படுத்தாத இயல்பு அவருடையது. மூனா என்றும் இந்த கலைஞனுக்கு ஈழத்தமிழ் சமூகம் இன்னும் முழுமையான அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. அவரின் கருத்தோவியங்கள் நூலாக்கம் பெறவேண்டும். வரலாற்றில் அவை பதிவாகவேண்டும். வாழ்த்துக்களும் வணக்கமும். http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=7ee47c90-a649-4413-ac37-6956e4cfc4c5
  4. கவி அருணாசலம் என்னும் “மூனா”வைப் பற்றி… ஆதவன் எழுதிய கட்டுரையை 2015’ம் ஆண்டு கிருபன், “வேரும் விழுதும்” பகுதியில் இணைத்த போதும்…. எவரும் கருத்து எழுதப் படாமலே அந்தத் தலைப்பு பின்னோக்கி போய் விட்டது பெரும் சோகம். “மூனா” என்பவர் தான்… கவி அருணாச்சலம் என்று பலருக்கும் தெரிந்திராத காரணத்தால் அந்தத் தலைப்பில் எவரும் கருத்து எழுதவில்லை என நினைக்கின்றேன். கவி அருணாசலத்தை நேரில் சந்தித்தவன் என்ற வகையில்… ஆதவன் கூறிய அத்தனையும் உண்மை. நிறைகுடம் தழும்பாது என்ற மாதிரி… பல விடயங்களில் அவருக்கு ஆற்றல் இருந்தும் தனது கருத்தை மட்டும் கூறிவிட்டு அமைதியாகி விடுவார். ஒரு கலைஞனை… அதுகும் யாழ். களத்தில் தொடர்ந்து கருத்தோவியங்கள் வரையும் நமது உறவை… பாராட்டி ஊக்கப் படுத்துவது நமது கடமை. இந்தப் பதிவை மீட்டு எடுத்துத் தந்த மோகன் அண்ணாவுக்கு நன்றி.
  5. மேற்கத்தையவர்களுக்கு உக்ரேனை விட இஸ்ரேல் மிக முக்கியம் என்பது உங்களுக்கு தெரியாதா?😂 செலென்ஸ்கி ரஷ்யாவிடம் தஞ்சமடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.😎
  6. இருக்கலாம். என்ன பொய்யையும் சொல்ல கூடிய ஆட்கள்தான் இஸ்ரேல். முன்பும் பலதடவைகள் அப்பாவிகளை இலக்கு வைத்து விட்டு, பின்னர் மறுத்து பின் ஆதாரத்தோடு சமர்பித்ததும் வேறு வழியின்றி ஒத்து கொண்டுள்ளனர். இந்த சந்திப்பை ஈரானும் விரும்பவில்லை, இஸ்ரேலும் விரும்பவில்லை. ஆஸ்பத்திரி தாக்குதல் இரு தரப்பும் விரும்பிய முடிவை கொடுத்துள்ளது.
  7. காஸா வைத்தியசாலை மீது குண்டுத்தாக்குதல் நடத்தில் பல நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றது யாரென்பதில் இஸ்ரேலும், ஹமாஸும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு இருக்கின்றனர். இஸ்ரேல் பாலஸ்த்தீனப் பகுதி மீது நடத்தும் அகோரமான வான்வழித் தாக்குதலின் ஒரு அங்கமே இது என்று ஹமாஸும், பாலஸ்த்தீன அதிகார அமைப்பும், பாலஸ்த்தீன உதவியாளர்களும் கூறுகின்றனர். இதனை ஆமோதிப்பது போலவே இஸ்ரேலும், "அந்த வைத்தியசாலையினை விட்டு வெளியேறுமாறு 5 மணித்தியாலத்திற்கு முன்னரே அறிவித்து விட்டோம்" என்று கூறியது. அதாவது, "சொல்லிவிட்டுத்தானே அடித்தோம்" எனும் தொனி. ஆனால் இப்போது அது மாறிவிட்டது. ஹமாஸ் ஏவிய ரொக்கெட் ஒன்றே பாதிவழியில் வெடித்து வைத்தியசாலை மீது வீழ்ந்ததாக கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்கிறது இஸ்ரேல். அமெரிக்காவும், "அப்படியா, சொல்லவேயில்லை" என்கிற ரேஞ்சில் இஸ்ரேலின் கதையினை அப்படியே அவிழ்த்து விட்டிருக்கிறது. பாலஸ்த்தீனர்களை கொல்ல ஒரு கணமேனும் சிந்திக்காது கொன்றுவிடும் இஸ்ரேல் இதனைச் செய்திருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. இதில் உள்ள கொடுமை என்னவென்றால், 10 நாட்களுக்கு முன்னர் ஹமாஸ் படுகொலை செய்த 1400 இஸ்ரேலியர்கள் பற்றி இப்போது எவரும் பேசுவதுமில்லை, கவலைப்படுவதுமில்லை. அழிக்கப்பட்ட பாலஸ்த்தீனர்களின் எண்ணிக்கையில் அது அப்படியே புதைந்துவிட்டது.
  8. இலங்கை அரசுவிட்ட அறிக்கை போல் உள்ளது, காற்று பலமாக வீசியதால் யாழ் வைத்தியசாலையில் ஏறி கணைகள் விழுந்துவிட்டவென
  9. பகிர்வுக்கு நன்றி. இங்கே கண்மூடித்தனமாக மேற்கு வெறுப்பில் எழுத பட்ட பல கருத்துகள் கொடுக்காத “சிந்திக்கும் உந்துதலை” இந்த நெடிய கட்டுரை கொடுத்தது. இதைத்தான் நானும் நினைத்தேன்.
  10. அருமையான, காலத்துக்கு தேவையான ஒரு பகிர்வு விசுகு. நன்றி காசாவில் நடந்து கொண்டிருப்பது முள்ளிவாய்க்காலின் Version 2 உலகம் முழுதும் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்றுக் கொண்ட பாலஸ்தீனர்களுக்கு எதிராகவே இவ்வளவுபடுகொலைகளை ஏவி விட்டாலும் எவரும் தடுக்க மாட்டார்கள் எனும் போது எமக்கு மட்டும் எப்படி தடுத்திருப்பார்கள் என்ற கேள்வி தான் எழுகின்றது.
  11. 300 அப்பாவிகளை வைத்தியசாலையில் வைத்துக் கொன்றிருக்கிறார்கள். புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் வைத்தியசாலைப் படுகொலைகள் நினைவிற்கு வருகின்றன. அப்பட்டமான இனக்கொலை!
  12. உங்களை போன்றே அங்கே வாழ்ந்த ஏதாவது ஒரு தமிழர் கூட நன்றாக சொல்லி அறிய முடியவில்லை. மற்றது நாங்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி அங்கே போனாலும் கூட ஏழைநாடுகளை சேர்ந்தவர்களை அவர்கள் பாலஸ்தீனர்கள் எல்லாம் கீழாக தான் நடத்துவார்களாம்.
  13. ஆ இதைத் தான் எதிர்பார்த்தேன். பத்தோடு பதினொன்றாவதா ஈரானையும் போடுங்க. அதை விடுத்து தனியே ஈரானை மட்டும் சுட்டிகாட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. நன்றி வாலி.
  14. உக்கிரேனிற்கான மேற்கின் முழுமையான நிதி உதவி நின்றால் எனவே புட்டின் குறிப்பிட்டதாக கருதுகிறேன். உக்கிரேனது நாளொன்றிற்கான செலவாக் 100 மில்லியன் செலவிடப்படுகிறதாக உக்கிரேன் கூறுகிறது ஆனால் அந்த தொகை 200 மில்லியனுக்கு கூடுதலாக உள்ளதாக அண்மையில் எங்கோ வாசித்த நினைவு. https://kyivindependent.com/reznikov-russias-war-costs-ukraine-100-million-daily/#:~:text=Ukraine spends around %24100 million,state-run media outlet Ukrinform. உக்கிரேனின் பொருளாதாரம் 200 பில்லியன் பொருளாதாரம், அதாவது நாளொன்றிற்கு 1% தனது GDP இல் செலவு செய்தாக வேண்டும். தற்போது தனது GDP இல் 70% கடனை கொண்டுள்ளது, உக்கிரேனின் வட்டி விகிதம் 18% விகிதத்திற்கு சற்று கூடுதலாக உள்ளது. இந்த நிலவரங்களை வைத்து பார்க்கும் போது உக்கிரேன் மேற்கின் உதவிகள் நிறுத்தப்படுமாயின் தற்போது போல போரினை தொடர முடியாது எனவே கருதுகிறேன். மறுவளமாக எவ்வளவு காலம் இரஸ்சியா இந்த போரினை தாக்குபிடிக்கும்? இரஸ்சிய பொருளாதாரம் ஏறத்தாழ 1 ரில்லியன் என கருதுகிறேன் , அதன் கடன் 20% GDP இல் உள்ளது, வட்டி விகிதம் ஏறத்தாழ 13% அதன் பாதுகாப்பு செலவு 87 பில்லியன், இரண்டு வருட காலம் தொடர்ந்து போரினை தொடர்ந்தால் தற்போதுள்ள கடன் 30% GDP இல் அதிகரிப்பினை ஏற்படுத்தும், ஏற்கனவே தனது இருப்பில் உள்ள தங்கத்தினை இரஸ்சியா விற்றதாக கூறப்பட்டது(அளவு தெரியவில்லை). இரஸ்சியாவின் சேமிப்பு முழுமையாக இல்லாவிட்டாலும் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதனால் தற்போதுள்ள சூழ்நிலையின்படி ( பெற்றோல் விலை அதிகரிப்பு, பலனற்ற பொருளாதார தடை) எந்த வித பிரச்சினையுமின்றி போரினை தொடரமுடியும். பெற்றோலின் விலையினை சரிப்பதற்காக அமெரிக்கா மத்திய கிழக்கில் உற்பத்தியினை அதிகரிக்க கூறிய உத்தரவினை மத்திய கிழக்கு நாடுகள் அலட்சியம் செய்தமையினால் அமெரிக்கா தனது இருப்பினுள் இருந்த பெற்றோலினை குறைந்த விலையில் விற்றுவிட்டு தற்போது வெறும் 17 நாள் இருப்பு எனும் ஆபத்தான கட்டத்தில் நிற்கிறது. முன்பு ஒரு திரியில் குறிப்பிட்ட 2030 இல் இரு வேறுபட்ட வட்டி விகிதத்தில் அமெரிக்க கடன் (வட்டி விகிதம்2.5%) 1 ரில்லியன் கடன் வட்டி, அடுத்த வட்டி விகிதம் (5%) 2ரில்லியன் கடன் வட்டி என ஒரு அண்ணளவான கணிப்பினை அந்த இலக்கங்களுடன் குறிப்பிட்ட நினைவுள்ளது. https://www.foxbusiness.com/economy/the-us-paying-record-amount-interest-on-national-debt இந்த தளத்தில் 2032 1.4 ரில்லியன் கடன் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மொத்த பாதீட்டில் 10% அதிகளவான கடன் வட்டி செலுத்தும் நிலை உருவாகும், ஏற்கனவே அமெரிக்க பணமுறியினை நாடுகள் விற்பதனால் அதன் yeild 5% மேலாக அதிகரித்து விட்டது, பல தடவை ஜெனற் ஜெலன் சீன விஜயம் செய்தும் பணமுறி விற்பனை அதிகரிப்பு குறையவில்லை, இதனை வேறு ஒரு திரியில் அமெரிக்க மத்திய வங்கி 1919 பின் முதல் தடவையாக பண இழப்பை சந்திக்கிறது என குறிப்பிட்ட நினைவுள்ளது. ஒரு கட்டத்தில் அமெரிக்கா விரும்பினாலும் இந்த போரிற்கு உதவிட முடியாது. போரினை சமாதானமாக முடிப்பதே சிறந்தது.
  15. நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான். போர் என்றாலே அழிவுதான் அதிலும் இந்த மாதிரி கிடைத்த சந்தர்ப்பத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பது சாதாரனமான ஒன்றாகிவிட்டது. இவர்களால் எங்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லேயோ ஆனால் எங்களது கொடியை இதற்குள் சேர்ப்பது தேவையற்ற ஒன்று

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.