Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்19Points19134Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்19Points46793Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்12Points8910Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்10Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/10/24 in Posts
-
ஆமையும் தமிழனும்....
10 pointsஇவ்வாறாக ஆமையில் ஏறி மட்டும் அல்ல, அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள். இதைத்தான் பின்னாளில் வைரமுத்து கூட ஒரு பாடலில் எடுத்தாண்டிருப்பார். இதே போல் தமிழர்கள் அமேரிக்கா போன போது, அங்கே மனிதர் யாரும் இருக்கவில்லை. தாம் ஆமையில் போய் அடைந்த கண்டம் என்பதை குறிக்கும் வகையில், இதை பண்டை தமிழர்கள் ஆமை- அருகா என்றே முதலில் அழைத்தனர். பின்னர் ஐரோப்பியர் வாயில் ஆமை-அருகா அமெரிக்கா என மருவி விட்டது. இதே போல ஊமல் கொட்டைகள் நிறைந்த ஒரு தீவை தமிழர்கள் ஆண்டனர். இங்கே ஊமல் கொட்டை வாங்க வருவோர் “கொட்டை இருக்கா”? என கேட்டு, கேட்டு - அதுவே அந்த தீவின் பெயராகி, இப்போ கோஸ்டோரீக்கா என வழங்குகிறது. முன்னர் தமிழர்கள் அமேரிக்க கண்டத்தை ஆட்சி செய்த போது, அங்கே சேலம் Salem என்று ஒரு நகரை எழுப்பினர். அதே போல் நீர்வழ நாடு என்ற கருத்தில் நீர்யோகபுரம் என இருந்த நகர்தான் இன்றைய நியூயோர்க். இவ்வளவு ஏன் மத்திய கிழக்கில் உள்ள ஜெருசலம் கூட தமிழர் நகரமே. எருமைகள் பல இருந்த சேலம் நகரை எரு-சேலம் என அழைத்தனர். அதுவே ரோமர் ஆட்சி காலத்தில் ஜெருசலேம் என்றாகிறது. அதே போல் முகமது நபி கூட தமிழர்தான் - முருகன் கந்தசாமி மகன் துரைச்சாமி என்பதே அவர் முழுப்பெயர். இதையே அவர் சுருக்கி மு.க.ம.து என ஆக்கி கொண்டார். இப்படி இன்னும் பல அரிய தகவல்கள் உள்ளன. நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன். - உடான்ஸ் சாமி மூலிகை மயக்கத்தில் அருளியது- காலம் 10/04/2024 இடம் முன்னர் இலந்தை நகர் என அழைக்கப்பட்டு, இப்போ இலண்டன் என மாறிய நகர்.10 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சர்வதேச ஊடகங்கள் எல்லாம் நூறு வீதம் உண்மையை சொல்லிக்கொண்டுதானே திரியுது?5 points
-
சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
3 pointsசூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்.. திங்க ள் வேலைக்கு லீவு வேணும்.. சாட்டேதும் சொன்னால் மனிசி நோண்டுவா.. அடிச்சது லக்கு… சூரிய கிரகணம் சனிதோசம்…உள்ளவை கட்டாயம் பார்க்க வேணும்..இது செல்வகணபதி ..அய்யர் கண்மூடி மூன்று நிமிசம் பார்த்தால்… கண்ட தோசமும் ஓடிடும்..இது அம்மன் கோயில் அய்யர்…. அடிசக்கை…ஆரும் இதை விடாதையுங்கோ பாருங்கோ..பெரும்பேறு கிடைக்கும் அய்யப்பன் அய்யர்.. சனியனை சாட்டுச் சா ட்டாக சொல்லி சமாளிச்சு …லீவு எடுத்தாச்சு.. எனி பிளான் இரண்டு… மச்சுமுடிய இரண்டு மணியாகும் கிரகணம் மூன்று மணிக்கு… காலை பத்துமணிவரை காவல் இருக்கோணுமே.. பிளான் மூன்றும் ரெடி… நடைபயிற்சி பொய்சொல்லி.. தமிழ் கடையில்.. கொடுவாமீனும்…காரல்மீனும் கீரையும் மாங்காயும் வாங்கிவந்தாச்சு… முழுகிவிட்டு… முழுச்சமையல்..நான்.. மனுசி வடக்கு சமையல் என்றால் இன்று நான் தெற்கு சமையல் அம்மணியும் பச்சைக்கொடி..காட்டியாச்சு. மச்சும் தொடங்கியிட்டுது… தோனிவர..கைதட்டி மரியாதை செய்துவிட்டு மனம் விட்டு மச்சை ரசித்தால் நேரமோ வட்டுக்கிள்ளை போட்டுது.. கிரகணம் வரப் போகுது.. கிங்சும் வெண்டுட்டுது.. சந்தோசத்தில் சமையல் நாலு அடுப்பிலும் நடக்குது.. கிரகணத்தை பார்க்க பின்புற காணியில்.. பொடியன் கமராவுடன் மனிசி போனுடன்.. நானும் இரண்டு கறுப்பு கண்ணடியுடன் ரெடி.. குழம்பு,காரல் தீயல் கீரைக்கறி அடுப்பில் கொதித்தபடி.. பொடியன் அப்பா வாங்கோ வாங்கோ.. கண்ணடி போட்டு கிரகணம் காண புல்லரித்த உடம்பு…நேரம் மறந்தது.. கைகூப்பி கண்மூடி மனுசியையும் மூடவைத்து கும்பிட்டவுடன் என்னை மறந்தவுடன்.. வித்தியாசமான வாசனை அடுப்படில் இருந்து அடித்துப் பிடித்து ஓடிப்போய் பார்த்தால்.. கீரையும் அடிப்பிடித்து காரல் தீயலும் தண்ணியின்றி என்னைப் பார்த்து சிரிக்குது.. அய்டியா ஆறுமுகம் எனக்கு.. அடுக்களை வேலயென்ன கொக்கா.. தீயலக்கு…புளியும் கீரைக்கு பாலும் விட்டு.. சமையல் முடித்தாயிற்று.. கிரகணம் பார்த்த கிரகங்கள் இரண்டும் குசினிக்குள் வர எனக்கு.. கிரகமாற்றம் ஆரம்பிச்சிட்டுது பொடியன்…மக்டொனால்ட்ஸ் போட்டான்.. தெற்குச் சமையலை சாப்பிட்ட மனுசியின் முகம்பார்க்க..அஞ்சி நானும் ரிம்கோட்டனுக்கு .. பறந்திட்டன்… இனி இந்த கிரகணப்பலன் வேலை செய்யும்.. சுப்பர் கிங்க்ஸ் மச் பார்க்கு மட்டும் தோனி தலைவா என்னை நீயே காப்பாற்று.. (சொற்பிழை..பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும்...இது எனது..இன்றைய நாள்..அல்வையன்..08 04 2024)3 points
-
"மனு தர்மம் / வினைப் பயன்கள்"
3 points"மனு தர்மம் / வினைப் பயன்கள்" மனு தர்ம சாத்திரம் அல்லது மனுஸ்மிருதி என்பது இந்தியாவின் பண்டைய ஆரிய சமூக அமைப்பில் எழுதப்பட்ட அரசியல் சட்டம். ஆனால் அது ஸ்மிருதிதான். அது ஸ்ருதி அல்ல. ஸ்ருதி என்பது இயற்றப்படாதது, தொன்று தொட்டுப் பரம்பரை பரம்பரையாக காதால் கேட்டு மனதில் இருத்தி வைத்து பிறர்க்கு கூறப்பட்டது அல்லது எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது. ஸ்மிருதி என்பது ஒரு காலத்துக்காக மனிதரால் எழுதப்பட்டது. மனு வாழ்ந்த காலம் கி.மு 1500 என நம்பப்படுகிறது. அந்த காலத்தின் தேவையை பொறுத்து, அவர்களின் அறிவு, நம்பிக்கையைப் பொறுத்து எழுதப்பட்டது. அவ்வளவுதான். அத்துடன் பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்காகவும் வந்தது தான் இந்த ‘மனு தர்மம்’என்ற சூழ்ச்சி. அது மட்டும் அல்ல சிந்து வெளி பழங்குடிகள் எதோ பல காரணங்களால் வீழ்ச்சி அடைந்து தெற்கு நோக்கி போனபின்பும், சிலர் அங்கேயே தங்கி ஆரியருடன் இணைந்த பின்பும் எழுதப்பட்டது. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு ‘மனு தர்மம்’ கூறும் தத்துவம் இப்படி இருக்கலாம் என்று எண்ணுகிறேன் ? இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் அந்த தத்துவம். "தவறு விடும் பலர், சமுதாயத்தின் மத்தியில் வளர்ந்து கொண்டே செல்கின்றதை நாம் அவதானித்துள்ளோம். ஆனால் ஆன்மீக வாதிகள் கூறுவது போன்று அவர்களுக்கு அடுத்த பிறவியில் தண்டனை கிடைக்கும் என்று கூறுவது தான் நம்பத்தகுந்ததாக தெரியவில்லை" ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது. அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா? ஆகவே இதில் ஒரு சூழ்ச்சி உண்டு. மனுஸ்மிருதி அல்லது மனு தர்மம் என்ற பெயரில்? நான் என்ன நினைக்கிறேன் என்றால் .... துன்பப்படுபவர்களைப் பார்த்து, இவர்கள் தம் ஊழ்வினையால் இன்று துன்பம் அடைகிறார்கள், ஆகவே அவர்களே தேடிக்கொண்ட இந்த துன்பத்திற்கு நாமேன் உதவவேண்டும் என்று நினைப்பவர் எவரும், தம்மை அந்த துன்பப்படும் மனிதரின் இடத்தில் வைத்து பார்த்து ஒருவேளை அடுத்த பிறவியில் [ஒரு கதைக்காக] நான் இப்படி இருந்தால் எனக்கும் ஒருவரும் உதவ முன் வரமாட்டார்கள் என்று நினைத்தால், கட்டாயம் அவர்கள் எவருடைய துன்பத்தையும் முன்வினைப் பயன் என்று ஒதுக்காமல் அவர்கள் உதவுவார்கள் என்பதுதான். இப்பிறவியில் நான் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வந்து விட்டால் மறுபிறவியைப் பற்றி கவலை தேவையே இல்லை. இப்படித்தான் நான் நம்புகிறேன். நீங்கள் எப்படியோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]3 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
எமது விடுதலை எம்மால் மட்டுமே சாத்தியமாகும். அதனை 2009 வரை அடைய முடியாமல் அழித்தவர்களும், இன்றுவரை எம்மால் எந்த முயற்சியையும் எடுக்கவிடாமால் தடுப்பவர்களும் அவர்களே.3 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
புலி ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்து இருக்கின்றார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே? எதற்கு அவர்கள் உளவாரம் செய்து மினைக்கட வேண்டும்? அதை விட புலி ஆதரவாளர்களை கண்டறிய ஒவ்வொரு மாவீரர் தினங்கள் போதுமே! இதற்கு ஏன் தூசண பிக்குகளையும் தேவதைகளையும் களத்தில் இறக்க வேண்டும்?3 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
மேற்குலகு என்பவர்கள் யார்? அவர்கள் இதுவரை எங்களுக்காகச் செய்தது என்ன? 1. 80 களில் இருந்து எம்மைச் சோசலிசவாதிகள் என்று அழைத்து எமது போராட்டத்தை அழிக்கத் துணைபோனவர்கள். 2. எமக்கெதிரான இனக்கொலைக்கு 80 களின் ஆரம்பத்திலிருந்தே ஆயுதமும், பயிற்சியும், ஆலோசனையும், கூலிப்படைகளும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள். 3. உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாம் மேற்கொண்ட உயிர்ப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று அழைத்து உலகெங்கும் எம்மை முடக்கியவர்கள். 4. 2009 வரை இனக்கொலைக்கான சகல உதவிகளையும் செய்து, தமிழர்களின் போராட்டம் முற்றான அழிவையும், தமிழ் மக்களில் கணிசமானவர்கள் கொல்லப்படுவதையும் உறுதிப்படுத்தி, தமிழர்களின் இறையாண்மையினை தமது பிராந்திய நலன்களுக்காகவும், சர்வதேச நலன்களுக்காகவும் விருப்பத்துடனேயே எப்பம் விட்டவர்கள். 5. இனக்கொலை முடிவிற்கு வந்தபின்னரும் தமது நலன்கள் உறுதிப்படுத்தப்படுவதற்காக இனக்கொலையினையும் போர்க்குற்றங்களையும் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்வதைத் தடுத்தும் அல்லது அவற்றை மிகவும் பலவீனமாக்கி, ஈற்றில் நீர்த்துப் போகச் செய்து போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றியதன் மூலம் தமது நலன்களை உறுதிப்படுத்திக்கொண்டிருப்பவர்கள். 6. இன்றுவரை எமக்கு நடக்கும் அநீதிகளும், எம்மீதான அடக்குமுறையும், எம்மீதான திட்டமிட்ட இனழிப்பும் நடப்பது நன்கு தெரிந்தும், அதனை அமோதித்து வருபவர்கள். 7. எம்மைப்போன்றே விடுதலைக்காகப் போரிடும் இனங்கள் மீதான அடக்குமுறைகளை, படுகொலைகளை ஆதரித்து, உதவிசெய்து, சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளி வருபவர்கள். ஆக, இவர்களிடமிருந்துதான் நாம் நற்சான்றிதழ் பெறக் காத்திருக்கிறோம். நற்சான்றிதழ் கிடைத்தவுடன், எமக்கான விடிவும், சுதந்திரமும், எமது தாயகத்தின் விடுதலையும் எமக்குத் தங்கத் தட்டில் கொண்டுவந்து தரப்படும். பிணந்திண்ணிப் பேய்கள். நீங்கள் எழுதுங்கள். உங்கள் உணர்வுகளை அப்படியே எழுதுங்கள், மேற்குலகிடம் இறைஞ்சும் ஜனநாயக மேதாவிகளின் பிதற்றல்களை ஓரத்தில் போட்டுவிட்டு எழுதுங்கள். எமக்கான விடுதலையும், மீட்சியும் எமது கரங்களில் இருந்தே வரவேண்டும். மேற்குலகு ஒன்றும் இறைவர்கள் அல்ல, மிக மோசமான பிணந்திண்ணிக் கழுகுகள். மேற்குலக அக்கிரமப் பிசாசுகளின் விருப்பங்களும், எண்ணங்களும், நோக்கங்களுமே அவர்களின் பணத்தினால் நடத்தப்படும் ஊடகங்களில் வெளிவருகின்றன. சர்வதேச ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டே தமது படுகொலைகளை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். ஆகவே, இவர்களின் ஊடகங்களில் நாம் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டால், நாம் அவர்களுக்கும், அவர்களின் நலன்களுக்கும் எதிரானவர்கள் என்று பொருள். ஆகவே, தொடர்ந்து நடவுங்கள். மேற்குலக ஜனநாயகப் பிணந்திண்ணிகளின் அலோசனைகளை அப்படியே தனது பத்திரிகைக் கட்டுரையில் வரையும், எமது வாழ்தலுக்கான போராட்டம்பற்றிய எதுவித தெளிவும் அற்ற ஒருவன் எழுதும் கருத்துக்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.3 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அப்பிடி போடு அருவாளை..... இன்று வரைக்கும் விடுதலைப்புலிகள் தமது போராட்ட காலங்களில் கேவலமாக நடந்து கொண்டார்கள் என எந்தவொரு ஊடகங்களும் தெரிவிக்கவில்லை. ஒரு சில தமிழ் வக்கிர இணைய தளங்களை தவிர....3 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தலைவரை பற்றியும் அவரது போராளிகள் பற்றியும் எதிரியான சிங்கள ராணுவ தளபதியே மிக சிறந்த சான்றிதழை கொடுத்துவிட்டார் . இதட்கு மேலே என்ன வேண்டும். இந்த மாதிரியான ஈனமானவர்களை அடிப்பதால் ஒன்றும் குறைந்து விடாது.3 points
-
குரு தட்சணை
3 points(குறுங்கதை) குரு தட்சணை ----------------------- அம்மாச்சி கதையை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார். எப்பவோ பெய்ய ஆரம்பித்திருந்த மழை இன்னும் விடவில்லை. ஓடும், தகரமும் சேர்ந்த வீட்டுக் கூரையில் இருந்து இரண்டு விதமான ஒலிகள் கலந்து வந்து கொண்டிருந்தன. மழைக்கு இதமாக அம்மாச்சிக்கு அவரின் கையில் ஒரு சுருட்டு இருந்தது. அம்மாச்சியின் அருகில் ஒரு பணிஸூம் ஒரு கடதாசியால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கதைகளின் நடுவில் சில இடைவெளிகளை இடைக்கிடை எடுத்து, அம்மாச்சி அந்த பணிஸில் ஒரு துண்டை சாப்பிடுவார். சுருட்டும், பணிஸும் அவன் அம்மாச்சிக்கு வாங்கிக் கொடுப்பவை. அம்மாச்சி சொல்லும் கதைகளுக்கு அது அவர் கேட்கும் கூலி. ஒரு ஏழு வயதுப் பையனிடம் ஏது காசு? ஆனாலும் ஏதோ ஒரு வழியில் அவன் அந்தக் காசை அடிக்கடி சேர்த்து விடுவான். இங்கு வேறு எவரும் அவனின் அம்மாச்சிக்கு சுருட்டோ அல்லது பணிஸோ வாங்கிக் கொடுப்பது இல்லை. அம்மாச்சியின் கதைகளை வேறு எவரும் கேட்பதும் இல்லை. ஆனால் சுடு சோறும், சிவப்பு மீன் குழம்புக்கும் அடுத்த படியாக அம்மாச்சி சொல்லும் கதைகளே அவனுக்கு இந்த உலகத்தின் உன்னதங்களாக இருந்தன. அவனின் அம்மாவும், அம்மாச்சியும் அவ்வளவாக கதைப்பது இல்லை. வெளியில் கொட்டும் மழையின் நடுவில், அம்மாச்சியின் அனுமார் இலங்கையை எரித்துக் கொண்டிருந்தார். அசோகவனம் தவிர்ந்து இலங்காபுரி முழுவதும் அனுமாரின் வால் நீண்டு, அது நீண்டு தொடும் இடம் எல்லாம் பற்றி எரிந்தது. இலங்காபுரியில் பச்சை வாழைகள் எங்களூர் சிவன் கோவிலில் வருடம் ஒரு தடவை எரிக்கப்படும் சொக்கப்பனை போல் கொழுந்து விட்டு எரிந்தன. பெரும் தீயிலிருந்து பறக்கும் சாம்பல்கள் வானத்தை மூடியது, கடல் நிறம் மாறியது என்று அம்மாச்சி சொல்லிக் கொண்டே போனார். அவன் பயத்தில் அம்மாச்சியுடன் ஒட்டி, மெதுவாக அவரின் சேலைத் தொங்கலுக்குள் போய்க் கொண்டிருந்தான். அம்மாச்சிக்கு ஆயிரம் கதைகள் தெரியும். சில கதைகளை உண்மைக் கதைகள் என்று சொல்லிச் சொல்வார். பருத்தித்துறை சந்தையில் தான் வியாபாரம் செய்ததாக அம்மாச்சி சொல்லியிருக்கின்றார். பல நாட்களில் அவரின் வியாபாரம் முடிய இருட்டி விடும். சிலர் ஒன்றாகச் சேர்ந்து பருத்தித்துறையிலிருந்து எங்களூரிற்கு அந்த இருட்டில் நடந்தே வருவார்களாம். வழியில் சில சுடலைகளை தாண்டியே அவர்கள் வரவேண்டும். ஒரு தடவை, முழு அமாவாசை, அம்மாச்சியும் மற்றவர்களும் நடந்து ஊர் எல்லை வரை வந்து விட்டனர். அம்மாச்சி எல்லோருக்கும் பின்னால் வந்து கொண்டிருக்கின்றார். திடீரென்று, 'சுந்தரி, சுருட்டுக்கு நெருப்பு இருக்குதா?' என்று அவரின் பின்னால் இருந்து ஒரு குரல். அம்மாச்சி திரும்பிப் பார்க்கின்றார். அங்கே ஒரு உருவம். அதன் ஒரு கை நீண்டிருக்கின்றது. நீண்டிருக்கும் கை முழுவதும் நெருப்பு சுவாலைகளாக எரிகின்றது. அதன் முகம் முழுவதும் எரிகின்றது. அம்மாச்சி அப்படியே மயங்கி விழுந்து விட்டார். பின்னர் பல ஆங்கிலப் படங்கள், தமிழ்ப் படங்களில் இப்படியான காட்சிகளை அவன் பார்த்திருக்கின்றான். ஆனால், இவர்களுக்கு எத்தனையோ வருடங்களிற்கு முன்னேயே அவனின் அம்மாச்சி இந்தக் காட்சியை, ஒரு அழுக்கு சேலையையே எப்போதும் கட்டிக் கொண்டு, தன்னந்தனி ஆளாக, உருவாக்கி இருந்தார். அம்மாச்சி என்ன படித்தார் என்பதில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அம்மாச்சி படிக்கவேயில்லை, ஒரு நாள் கூட பள்ளிக்கூடம் போனதில்லை என்று அவனின் மாமா சொல்லுவார். அம்மாச்சிக்கு பல பிள்ளைகள் பிறந்தாலும், உயிர் தப்பி இருப்பவர்கள் அம்மாவும், அம்மாவின் தம்பியான மாமாவும் மட்டுமே. அம்மாச்சி எதையும் வாசித்தும் அவன் பார்த்ததில்லை. ஆனால், அம்மாச்சி தான் பள்ளிக்கூடம் போனதாகவும், முதலாம் வகுப்பு முடித்ததாகவும் சொல்வார். அம்மாச்சியின் மகாபாரதத்தில், 'அம்மா, கனி ஒன்று கொண்டு வந்திருக்கின்றோம்...' என்று பாண்டவர்கள் ஐவரும் குந்திதேவியிடம் சொல்கின்றனர். 'ஐவரும் அதை சமமாக எடுத்துக் கொள்ளுங்கள்..' என்று குந்திதேவி உள்ளிருந்து பதிலுரைக்கின்றார். தாயின் சொல்லை மீற முடியாததால், அவ்வாறே பாஞ்சாலி ஐவரினதும் மனைவி ஆகின்றார் என்று அம்மாச்சி தன் காவியத்தில் ஒரு நியாயம் சொன்னார். பஞ்ச தந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், தெனாலிராமன் கதைகள், கூனன் கதைகள் என்று அம்மாச்சியின் உலகம் பெரியது. அம்மாச்சி சொன்ன சில கதைகளை பின்னர் அவன் எங்கும் பார்த்ததே இல்லை. அம்மாச்சிக்கு அவரின் அம்மாச்சி சொல்லியிருப்பார் போல. அம்மா ஒரு கதையும் சொல்லவில்லை, அவருக்கு நேரம் இருந்ததும் இல்லை. சில காலத்தின் பின், அம்மாச்சி அவனின் மாமா வீட்டிற்கு போய் விட்டார். இனிமேல் மாமாவுடனேயே அம்மாச்சி இருக்கப் போகின்றார் என்று அவனின் அம்மா சொன்னார். மாமா பக்கத்து ஊரில் இருந்தார். மாமா எப்போதாவது அவனின் வீட்டிற்கு வருவார். அவன் மாமாவின் வீட்டிற்கு போவது மிக அரிது. மாமாவிற்கும் பல பிள்ளைகள். ஒரு வருடம் ஓடினது. அம்மாச்சிக்கு உடம்பிற்கு முடியாமல் போய் விட்டது. ஒரு நாள் அம்மா அம்மாச்சியை பார்க்க அவனின் மாமா வீட்டிற்கு போனார். ஒருவாறு இவனும் அம்மாவுடன் சேர்ந்து மாமா வீட்டிற்கு போனான். அம்மாச்சி படுத்திருந்தார். கண் மூடி இருந்தது. மெல்லிய அணுங்கல்கள் அம்மாச்சியிடம் இருந்து வந்து கொண்டிருந்தன. 'அம்மாச்சி, நான் வந்திருக்கின்றேன்' என்றான். அம்மாச்சி கண்ணைத் திறந்து, மெதுவாக எழும்ப முயன்றார். இவன் பின்பக்கமாக கைகளில் மறைத்து வைத்திருந்த சுருட்டையும், பணிஸையும் அம்மாச்சியின் முன் நீட்டினான். அப்படியே எழும்பின அவனின் அம்மாச்சி அதை கையில் வாங்கிக் கொண்டே, இங்கு எவரும் அவரிடம் கதை கேட்பதில்லை என்றார். சுருட்டும், பணிஸும் கூட ஒருவரும் வாங்கிக் கொடுப்பதில்லை என்றும் சொன்னார். 'இரு, நான் உனக்கு ஒரு கதை சொல்கின்றேன்.' 'இல்லை அம்மாச்சி, கதை ஒன்றும் வேண்டாம்' என்றான் அவன்.3 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
3 points3 points
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
படங்கள் IV கல்கிசையில் தெருவோர கடை ஒன்றில் விற்பனைக்கு இருக்கும் டிவியில் ஆப்கான்-இலங்கை கிரிகெட் போட்டி ஓடுகிறது. ஏழைகள் நிரம்பி வழியும் “நரகாபுரியில்” வீதியோர சோரூம் கடை ஒன்றில் ஏன் இந்த டிவியை வைத்துள்ளார்களோ, அதை வாங்கத்தான் யாரிடமும் காசில்லையே🤣. 👆🏼துறைமுக நகர் நுழைவுவாயில் அருகே. உள்நுழையும் போது👆🏼 👆🏼து.மு.ந வில் இருந்து கொழும்பு ஆகாய-கோடு (skyline). 👆🏼பாலம், நடை பயிலும் பாதை, செயற்கை கடற்கரை 👆🏼வெளியாகும் வழி. தனியே ஆங்கிலம், சீன மொழி மட்டுமே பாவனையில்.3 points- தேனும் விஷமும்
2 pointsதேனும் விஷமும் ------------------------------ நண்பன் ஒருவர் ஒரு சந்தியின் முப்பது வினாடிகள் காட்சி ஒன்றை அனுப்பியிருந்தார். நண்பன் அயலூர் தான் என்றாலும், இப்பொழுது தான் இந்தச் சந்திக்கு முதன் முதலாகப் போயிருப்பதாகச் சொன்னார். எந்தச் சந்தியும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களினதும், கதைகளினதும் களம். 'எப்படியும் சந்திக்கு வந்திடும்', 'சந்தி சிரிக்கும்', 'கடைசியாக சந்தியில் தான் நிற்கப் போகின்றாய்' என்ற அடைமொழிகளுடன் சாகாவரம் பெற்று நிற்கும் சாட்சி சந்திகள். நண்பனின் சந்திக் காட்சி ஆரம்பிக்கும் இடத்தில், குமார் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற அன்று, 1976 அல்லது 1977 அல்லது அந்த ஆண்டுகளில் ஒரு நாள், இராணுவம் வரிசையில் நின்றிருந்தார்கள். இராணுவ வரிசைக்கு நடுவில் பயத்தில் உதறி உதறி வீடு போய்ச் சேர்ந்தது அப்படியே நினைவில் இருக்கின்றது. இராணுவத்தின் மீதான பயமும், வெறுப்பும் ஆரம்பித்த இடம் இந்தச் சந்தி. அயலூரில் நடந்த ஒரு உதைபந்தாட்ட போட்டியில் எங்கள் அணியினரை அயல் ஊரவர்கள் அடித்து விட்டார்கள் என்று ஒரு நாள் திடுமென பலர் இந்தச் சந்தியில் கூடினர். நின்றவர்கள் சில வாகனங்களில் ஏறினர். ஒருவரின் கைக்குள் வெள்ளியாக மினுங்கும் ஒரு பொருள் இருந்தது. போகும் வழியில் யாரோ இவர்களை தடுத்து நிற்பாட்டியிருக்க வேண்டும், அன்று அறிந்தவரையில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. அதே இடத்தில் தான் சந்தி வாசிகசாலை, இன்னமும் இருக்கின்றது. ஊர் முழுக்க வாசிகசாலைகள் இருந்தாலும், இந்த வாசிகசாலையில் மட்டுமே டொமினிக் ஜீவா அவர்களின் 'மல்லிகை' சஞ்சிகை போட்டார்கள் என்று நினைக்கின்றேன். அந்த வயதுகளில் தெரிந்து வாசிக்கும் அறிவோ அல்லது பக்குவமோ இருக்கவில்லை. எந்தக் கல் என்றாலும் சுற்றி வந்து ஒரு கும்பிடு போடுவது போல, எல்லாம் ஒரே வாசிப்பே. தமிழ்நாட்டிலிருந்து வரும் எல்லா பிரபல சஞ்சிகைகளும் அன்று இந்த வாசிகசாலையில் போடப்பட்டன. ஜீவாவின் அயராத முயற்சியைப் பற்றிப் பின்னர் தெரிய வந்தது. இன்று ஈழ திரை படைப்பாளிகளுக்கும், தமிழ்நாட்டு திரை படைப்பாளிகளுக்கும் இடையில் இருக்கும் போட்டியும் இவ்வாறானதே. இதில் போட்டியே இல்லை, போட்டியே போட முடியாது என்பது தான் அன்றைய நிலையும், இன்றைய நிலையும். பின்னர் ஒரு நாளில் கமலம் கொலை வழக்கில் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவருக்கு இந்தச் சந்தியில் மரண தண்டனை வழங்கப்பட்டது. கடைசியாக அவருக்கு சிகரெட் ஒன்று கொடுக்கப்பட்டது. அருகிலிருந்தவர்கள் சுடவில்லை, சந்தியின் இன்னொரு பக்கத்திலிருந்து வேறொருவர் சுட்டார். நாங்கள் பலர் பார்த்துக் கொண்டு நின்றோம். அரசாங்கம் ஒரு நவீன சந்தையை இந்தச் சந்தியில் கட்டிக் கொடுத்தது. பின்னர் அந்த அரசாங்கமே ஒரு நாள் புதிய சந்தையின் மீது குண்டும் போட்டது. நவீன சந்தையின் கூரையும், மேல் தளமும் இடிந்து போனது. கீழ் தளத்தில் சில கடைகள் அதன் பின்னரும் இயங்கின. எங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஒரு தனியார் கல்வி நிலையம் நடத்தி வந்தார். அதற்கு புதிய இடம் தயார் செய்வதற்காக சந்தையின் உடைந்த கூரையிலிருந்து நாங்கள் மரங்கள், வளைகளை எடுத்தோம். அதை ஒருவர் நகரசபைக்கு சொல்லிக் கொடுத்தார். நகரசபை விசாரணை, வாருங்கள் என்றது. நகரசபையில் வேலையில் இருந்த இன்னொருவர் எங்களைக் காப்பாற்றி விட்டார். இதுதான் சமூகம் என்றால் நாலு பேர்கள் என்பது. சந்தியின் நடுவே ஒரு பெரிய அரசமரம் நின்றது. ஒரு இயக்கத்தை இன்னொரு இயக்கம் தடை செய்த போது, இங்கே ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அன்றைய தளபதி ஒருவர் அரசமரத்தின் அருகே அவரது வாகனத்தை நிற்பாட்டி, வாகனத்தின் மேல் ஏறி இருந்தார். இரண்டு இயக்கங்களுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்த இடம் இந்தச் சந்தி. அது அந்தக் கூட்டத்திலும் தெரிந்தது. கூடியிருந்த கூட்டம் ஏறி இருந்த தளபதியின் கருத்துகளை ஆமோதிக்கவில்லை. கூட்டம் சத்தம் போட்டது, மனைவிமார்களும், சொந்தங்களும் அழுதனர், ஆனாலும் காணாமல் போன அண்ணன்மார்கள் என்றும் திரும்பவில்லை. உயிர்களின் வாழும் விருப்பம் நிகரற்றது. அழிவுகளின் நடுவேயும் எல்லா உயிர்களும் வாழ முயன்று கொண்டேயிருக்கும். பெரும் பூகம்பத்தின் பின்னும் வாழ்க்கைகள் இருக்கும், அதே பாதைகளில் பயணிக்கும். அழகான பெண் பிள்ளைகளின் பின்னால் இந்தச் சந்தியினூடாகப் போய்க் கொண்டிருந்தவர்கள், எவை நடந்தாலும், என்ன இழப்புகளின் பின்னரும், அவை முடிய முடிய, போய்க் கொண்டே இருந்தார்கள். சந்தியின் ஒரு ஓரத்தில் நாங்கள் சிலர் ஒட்டுகளில் இருப்போம். 'இப்படியே இருந்து எப்படியடா உருப்படப் போகிறீர்கள்' என்று அக்கறையுள்ள அண்ணன் ஒருவர் ஒரு தடவை கேட்டார். நல்லூரில் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்த பொழுது, இந்தச் சந்தியிலும் உண்ணாவிரதம் இருந்தார்கள். தலைவர் கூட ஒரு இரவு வந்து பார்த்து விட்டுப் போனதாகச் சொன்னார்கள். மற்றைய இரவுகளில் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தோம். அநேகமான நண்பர்கள், தெரிந்தவர்கள் இந்தச் சந்தியிலிருந்து தான் கடைசியாக கொழும்புவிற்கு வாகனத்தில் ஏறினர். போனவர்களில் பலர் ஒரு முறை கூட இந்தச் சந்திக்கு திரும்பி வரவேயில்லை. வர முடியாத சூழலும் கூட. நான் பல வருடங்களின் பின் அந்தச் சந்திக்கு போன பொழுது, அந்த அரசமரம் இல்லை, இப்பொழுது அதே இடத்தில் புதிதாக ஒரு அரசமரம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. பழைய நினைவுகள் என்பது தேன் தடவிய விஷம் என்று சமீபத்தில் வாசித்திருந்தேன். அது எப்படி விஷமாகும் என்று ஒரே குழப்பமாகவே இருந்தது. ஒரு முப்பது வினாடிகள் வந்த காட்சியால் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கும் நினைவுகளிலேயே தேனும், விஷமும் கலந்து தான் இருக்கின்றது.2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சர்வதேச அபிப்பிராயம் 2009க்கு பின்னர் எதை என்னத்தை ஈழத்தமிழர் விடயத்தில் கீறி கிழித்தத்து?2 points- 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
https://www.espncricinfo.com/series/women-s-under-19s-tri-nation-in-sri-lanka-2023-24-1427797/sri-lanka-women-under-19s-vs-england-women-under-19s-3rd-match-1427800/full-scorecard https://www.espncricinfo.com/series/women-s-under-19s-tri-nation-in-sri-lanka-2023-24-1427797/australia-women-under-19s-vs-england-women-under-19s-2nd-match-1427799/full-scorecard2 points- தேனும் விஷமும்
2 pointsநன்றி. உங்கள் எழுத்தும், சிந்தனையும் அபாரம். வேலைபளுவின் மத்தியிலும் சுண்டி இழுக்கிறது. குவாலிட்டி மட்டும் அல்ல குவாண்டிட்யும் பிரமிக்க வைக்கிறது. ஒருமுறை @Justinஜெயமோகனை தமிழின் prolific writer என அழைத்தார். அதே போல் நீங்கள் யாழின் புரோலிபிக் எழுத்தாளர். எப்படி சச்சின் ரன் அடிப்பதை மட்டுமே குறியாக கொண்டு விளையாடுவாரோ அப்படி அற்புதமாக, அசுர வேகத்தில் எழுதுகிறீர்கள். இதே போல் எப்போதும் தொடரவும்🙏.2 points- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பேசாலாம் பேசினால் மரத்தை வெட்ட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து வாக்கு எடுப்புக்கு விடுவார்கள் 🤣😀இலங்கை எதிர்க்கும் .....எங்கே புத்தரின் சிலைகள் வைப்பது என்று தெரியாமல் போய் விடும் குறிப்பு,...தலை. கவனம்2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
எந்த சர்வதேச ஊடகங்கள் கொஞ்சம் இணைக்க முடியுமா ? கோபம் வேணாம் தேடிபடிக்க பஞ்சி அவ்வளவே .😃எப்படி எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்கணும் .2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை சுடச்சுட செய்து விடவேண்டும் விசுகர். இல்லையேல் எம் இனத்திற்கு நடந்த அனுபவங்கள் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. ஏனெனில் எதிரி எப்படி முன்னேறினான் என்பதற்கு உதாரணங்கள் தேவையில்லை. அந்த பெண்ணிற்கு நடந்த சிறு தாக்குதல் சம்பந்தமாக பெரும்பாலான ஊடகங்களில் இணையத்தளங்களில் சரியனவே 99 வீதமானோர் கருத்திட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் தமிழினத்திற்கு பாதிப்புகள் வரப்போவதில்லை என்பது என் கருத்து. இன்னொரு சில்லறை தலையெடுக்காமல் இருக்க சில்லறைத்தனங்களும் தேவை.2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தலைவர் சொன்னதை விரிவாக சொல்கிறீர்கள்? சும்மா இருந்தாலும் அழிப்பான் தட்டிக் கேட்டாலும் அழிப்பான். தட்டி கேட்டா சிலவேளைகளில் வெல்ல சந்தர்ப்பம் உண்டு. முயன்று பார்க்கலாம்.2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இவளது செயற்பாட்டினை சட்ட ரீதியாக அணுகினால் என்ன? பிரான்ஸில் உள்ளவர்கள் இதை ஏன் முயற்சிக்கக் கூடாது? விசுகு அண்ணை, இதுகுறித்து எவருடனாவது பேசினீர்களா? அல்லது முயற்சிக்க முடியுமா? இவள் இப்படியே தொடர்வது பலரையும் மனதளவில் பாதிக்கப்போகிறது. இங்கே சிலர் விமர்சனத்திற்கும், தூற்றலுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரியாது பேசுகிறார்கள் என்றே நினைக்கிறேன். இது விமர்சனம் இல்லை. அப்பட்டமான இனவிரோதக் காழ்ப்புணர்வுடன் கொட்டப்படும் வக்கிரங்கள். இதை ஜனநாயகத்தைப் பேணுவோம், விமர்சனங்களுக்கு இடம்கொடுப்போம், ஆகவே அவளைப் பேச விடுங்கள் என்று எவராவது கருதினால், அவர்கள் அவள் பேசுவதைக் கேட்கவில்லையென்றே பொருள்.2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
2009 வரை அந்த நம்பிக்கை எமக்கு இருந்ததுதானே கோஷான்?1 point- காஸா யுத்தம்: ஜேர்மனிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு
https://www.virakesari.lk/article/180883 ரஸ்யாக்காரன் சொன்னானோ ,சீனா சொன்னானோ? Nicaragua ( Sandinistas) இவையின்ற ஆட்களும் புரட்சிகர படை வைத்திருந்தவையள் அல்லோ? நண்பேன்டா... கொள்கை .... எங்கன்ட சிவப்புகச்சை போராளிகளும் உவையளின்ட போராட்டத்தை பற்றி பாடங்கள் எடுத்து கொண்டு திரிஞ்சவையல் அல்லோ...79/80 களில் ... மீண்டும் உலகம் அமேரிக்கா எகாதிபத்தியம்...ரஸ்யா ,சீனா கம்னியுசம் என்ற பாதையில் செல்ல போகிறதா.. இந்த சைக்கிள் கப்பில இஸ்லாமிய தீவிரவாதம் தனது இலக்கை நோக்கி நகருகிறது போல...1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
மன்னிக்கனும் ரகு அண்ணா ஐந்து விரலும் ஒரு மாதிரி இல்லை.........................தமிழீழ உணர்வு கொண்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நடை போக்கில்..................அவர்கள் செய்தது பிழை இவர்கள் சொல்வது சரி என்று நாம் புலம்புவதில் அர்த்தம் இல்லை...................அவர்களுக்கு சரி என்று பட்டதை அவர்கள் செய்தார்கள்........................2009க்கு பிறக்கு புலம் பெயர் நாட்டுக்கு வந்த பெடியங்களுக்கு அவள் சொன்னது கடும் கோவத்தை வர வைச்சு இருக்கும் ஏன் என்றால் அவா விட்ட வார்த்தை அப்படி மகிந்தா உங்க எல்லாரையும் விட்டு வைச்சது தப்பாம்........................மகிந்தா ஒன்றும் பெரிய கொம்பன் கிடையாது பல உலக நாடுகள் உதவி செய்ய எம் போராட்டம் அழிக்கப் பட்டது ஆயுதம் மெளவுனிக்கப் பட்டது................. இந்த பெண் தமிழ் நாட்டில் இருந்த படி இப்படி ஒரு காணொளி போட்டு இருந்தா வீரப்பன் பானியில் கடத்திட்டு போய் கதைய முடிச்சு விட்டு இருப்பாங்கள் நம்ம பெடியங்கள்.......................இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் என்னை உங்களை விட தலைவரை அதிகம் நேசிக்கும் பெடியங்கள் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கினம்........அதிகம் நாம் தமிழர் கட்சியில்.................................. தமிழ் நாட்டை சேர்ந்த பெடியன் சிங்கபூரில் வேலை செய்கிறார் அந்த கொம்பனியில் சிங்களவன் ஒருவனும் வேலை செய்கிறார் எங்கட போராட்டத்தை தலைவரை பற்றி தப்பா கதைக்க தமிழ் நாட்டை சேர்ந்த பெடியன் அந்த சிங்களவனுக்கு அடிக்க போக மற்ற ஆட்கள் ஓடி வந்து தடுத்திட்டினம்....................பிரபாகரன் தமிழர்களின் இரத்தத்தில் கலந்த தலைவர் அவரை பற்றி யாரும் தப்பா சொன்னா பல்லு உடையுதோ கை முறியுதோ யாருக்கு தெரியும்.................. வாழ்க பிரபாகரன் புகழ்.......................1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இது இன்று நேற்று அல்ல சகோ செயற்பாட்டாளர்களை செயற்படாதவர்களும் பங்களிப்பாளர்களை பங்களிக்காதவர்களும் போராளிகளை போராடதவர்களும் பிள்ளைகளை கொடுத்தவர்களை பிள்ளைகளை கொடுக்காதவர்களும் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு போகிறவர்களை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு போகிறவர்களும் இப்படி தான் தம்மை அதிமேதிவிகள் புத்திசாலிகள் தீர்க்கதரிசனம் உள்ளவர்கள் மற்றெல்லோரும் மூடர்கள் என்பார்கள். இவர்களின் இந்தவகை பரப்புரைகள் அதிகரிக்க அதிகரிக்க செயற்பாட்டாளர்களின் தொகை வீழ்ச்சி கண்டதன் பயனைத் தான் தமிழினம் இன்று அனுபவிக்கிறது.1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நான் சொன்னது இன்னும் தீவிர செயற்பாட்டில் உள்ள ஆதரவாளர்கள் என்பது, புலிகள் அமைப்பு செயலிழந்த பின்னும் இலங்கை அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் வலைபின்னமைப்பில் உள்ள தீவிர செயற்பாட்டில் உள்ளவர்கள் பற்றியதானது அவர்களும் , புலி ஆதரவாளர்களும் ஒன்றல்ல, உதாரணத்திற்கு புலி ஆதரவாளரான நீங்களும், சிங்களம் கருதிக்கொண்டிருக்கிற இன்னும் உடைபடாத புலம்பெயர் புலிகள் கட்டமைப்பின் தீவிர செயற்பாட்டாளரும் ஒன்றல்ல. ஆதரவாளர்களை கைது செய்வதென்றால் புலம்பெயர் தேசம் எதுக்கு வடகிழக்கில் கடந்த ஓரிரு வருடங்களில் மாவீரர்நாள் அனுஷ்டித்த மக்களை அங்கேயே சிங்களவன் கைது செய்யலாமே. சிங்களவன் சூழ்ச்சி விஷயத்தில் எச்சரிக்கையாய் இருங்கள் என்று தாக்குதல் செய்தவர்களை சொல்லவந்தால் நீங்கள் என்னை தாளிப்பதில் குறியாயிருக்கிற்ர்ர்கள் என்பது புரிகிறது பரவாயில்லை, , அதையும் ஒரு கருத்தாக எடுத்துவிட்டு போகிறேன்.1 point- இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
தாக்குவினம் தாக்குவினம்....79 ஆம் ஆண்டு( ஈராணில் உள்ள)அமெரிக்கா தூதகரத்தை கைப்பற்றி அங்கு அதிகாரிகளை பயணக்கைதிகளாக வைத்திருந்த காலம் தொடக்கம் இன்று வரை பயங்கரவாதத்தை வளர்த்தை விட இவர்கள் செய்த ஆக்க பூர்வமான செயல் ஏதாவது? அன்றைய மாணவர் எழுச்சியில் (79 களில்),புரட்சிகர படையில் பங்கு பற்றிய மாணவர்கள் கள் தான் இன்று ஈரானின் புரட்சிபடையில் தளபதிகளாக இருக்கின்றனர்....1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
🤣 விதையில்லாத ஆலிவ், அநேகமா கொஸ்டோரிக்காவில் இருந்துதான் வந்திருக்கும்🤣1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
🤣அப்பு! இஞ்சையும் உப்புடி ஊறவைச்ச ஆலிவ் விக்குது கண்டியளோ....அதுவும் பயங்கர உறைப்போடை......😂 😎வெளிநாட்டிலை இருக்கிற நான் ஆலிவ் சாப்பிட சிலோனுக்கு போக மாட்டன்😄1 point- கருத்து படங்கள்
1 point1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
படத்தில் இருப்பதுதான் சிலோன் ஆலிவ் எனப்படும் வெரளு. பச்சை காய் அம்பரில்லா. முன்பு சிங்கள இடங்களில் பள்ளிக்கு வெளியால் வைத்து விற்பார்கள். எமது பகுதியில் இல்லை என நினைக்கிறேன். @பெருமாள் 👆🏼 பதில் உங்கள் கேள்விக்கு.1 point- 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
சிறப்பு + மகிழ்ச்சி ........பாராட்டுக்கள்.......! 👍 என்ன ஒரு சந்தேகம்......நியாயமா இனிமேல் நியாயம் காணொளி கேட்பாரெண்டு நான் நினைக்கேல்ல ...... ! 😂1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
கந்தர்மட பனங்கிழங்கு நல்லாய்த்தான் இருக்குது. அதை பிடித்து இருப்பது உங்கள் கையா...? ஊர் வெய்யிலுக்கு கறுத்துப் போனியள் போலை கிடக்கு. 😂1 point- காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் திடீர் தாக்குதல் - டாங்கிகளை பயன்படுத்தியும் தாக்குதல்
முள்ளிவாய்க்காலில் நாம் எல்லோரும் ஒன்றாக தர்மத்தின் பக்கம் நின்று தடுத்திருந்திருந்தால் ......... இனி மேலாவது தர்மம் அதர்மம் இரண்டு தான் உலகில். நடுநிலை என்று ஒன்று இல்லை என்பதை புரிந்து இவ்வுலகம் இயங்கணும். இயங்கும்.1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
பாரிஸில் ஒரு பத்திரிகை கூறுவதை நம்புவீர்கள் என்னை நம்ப மாட்டீர்கள் என்றால் தப்பு உங்கள் மீது தான் இருக்கிறது. நாலு விரல்களுக்கு பதில் சொல்ல முடிந்தவன் மட்டுமே ஜந்தாவது விரலை மற்றவர் மீது காட்டமுடியும்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
1 point- அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
சுமந்திரன் ஓய்வு பெற்றால் தமிழ் தேசியவாதிகள் அதிர்ச்சி அடைந்து நிலைகுலைந்து தமிழ் தேசியத்தின் வீழ்ச்சி ஆரம்பிக்கும்1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இன்றைய தின ஜேர்மன் செய்திகளில் பெரிய பிரச்சனை வெளிநாட்டுக்காரர்களின் குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாம். கட்டுப்பாடு இல்லாமல் ஆக்களை உள்ளுக்கு வர விட்டால் இன்னும் வரும்...இனியும் வரும்.1 point- "நினைவில் நின்றவள்"
1 point"நினைவில் நின்றவள்" நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பரீடசை எழுதிவிட்டு, மறுமொழிக்காக காத்திருந்த காலம் அது. மறுமொழிக்கு பின்புதான் முறையாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.என்றாலும் அந்த இடைவெளி காலத்தை வீணாக்க விரும்பவில்லை. எனவே உயர் வகுப்பு கணித பயிற்சி வகுப்புக்கள் நடத்த தீர்மானித்தேன். அப்படி சேர்ந்தவர்களில் அவளும் ஒருவள். அவள் கொஞ்சம் நவீனமாக, அந்த கால பாணிக்கு ஏற்றவாறு, தன்னை அலங்கரித்தும் அதற்கு பொருத்தமான ஆடையும் அணிந்து வருவாள். கொஞ்சம் பணக்கார குடும்பமும் கூட. நாள் செல்ல செல்ல அவள், கொஞ்சம் கொஞ்சமாக தனிப்பட்ட முறையிலும் என்னுடன் பழக தொடங்கினாள். அந்த நட்பு ஒரு எல்லைக்குள் இருந்தாலும், அதில் ஒரு பிடிப்பு எம்மை அறியாமலே வளரத் தொடங்கியது. "ஒட்டி உடையில் பெண்மை காட்டி எட்டி நடையில் வேகம் காட்டி சுட்டி விடையில் புத்தி காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தட்டி கழித்து நாணம் காட்டி முட்டி முட்டாமல் விலகி நிற்பவளே! " இப்படித்தான் நான் அவளை வர்ணிக்க கூடியதாக இருந்தது எனலாம். காலம் போக, அது ஆசிரியன் - மாணவி என்ற நிலை மாறி, நண்பன - நண்பி என்ற நிலையாக வலுவடைய தொடங்கியது. அதற்குள் எனக்கு பரீடசை மறுமொழிவரவும், அதை தொடர்ந்து நிரந்தர உத்தியோகம் கிடைக்கவும், நான் தனியார் கல்வி போதிப்பதை நிறுத்தி, நான் படிப்பித்த மாணவர்களிடம், அவளையும் சேர்த்து பொதுப்படையாக மட்டும் சொல்லி விட்டு, என் முதல் உத்தியோகத்தை பொறுப் பேற்க வேறு ஒரு நகரத்திற்கு சென்று விட்டேன். அவளின் நட்பை ஒரு சாதாரண ஒன்றாகவே அன்று கருதியதால், அதை நான் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஒரு மாதத்திற்கு பின்பு எனக்கு ஒரு கடிதம், நான் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அவளின் பெயருடன் வந்தது. நான் அதில் என்ன எழுதி இருக்கு என்று அறிய ஆவலுடன் உடைத்து பார்த்தேன். திகைத்தே விட்டேன். அந்த முதல் வரியிலேயே! ஆமாம் அந்த முதல் வரி, 'அத்தான்' என்று தொடங்கியது. ஒரு நவீன நாகரிக பெண்ணாக சிரித்து குலுங்கி பகிடிவிட்டு கதைத்தவள், இப்படி எழுதுகிறாள் என்று , ஒரே ஆச்சரியமாக இருந்தது, அது மட்டும் அல்ல, என் அண்ணனிடம், தான் என் பெண் நண்பி என்று தொலைபேசியில் கூறி, விலாசம் பெற்றதாக வேறு கூறி இருந்தாள். அது மட்டும் அல்ல, அவள் என்னை காதலிக்கிறாள் என்று கூட எனக்கு தெரியாது. அப்படியான எண்ணம் என்னிடம் ஏற்படவும் இல்லை. உண்மையில் அவரின் நட்பை சாதாரணமாகவே நான் இதுவரை கருதி இருந்தேன். அதை என்றும் பெரிது படுத்தவில்லை. மற்றது என் தந்தை சாதாரணமான சுருட்டு தொழிலாளி, ஆனால் நாம் எல்லோரும் நன்றாக படித்து, நல்ல உத்தியோகம் பெற்றோம். அவள் அதற்கு எதிர்மாறு ! 'இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க புன்னகை சிந்தி சடையது அலைபாய கலந்து பழகுபவளே !" இப்படி ஒரு பருவ மங்கையாக எல்லோரிடமும் மகிழ்வாக கலந்து பழகுவாள் என்பது மட்டும் தெரியும். அப்படியே என்னுடனும் நட்பாக இருந்தாள் என்று தான் நான் கருதினேன். எது எப்படியாகினும், என்னை விரும்பி ஒருவர் கை நீட்டி இருப்பதால், அதை மதித்து, அடுத்தமுறை விடுதலையில் திரும்பும் பொழுது அவரை சந்தித்தேன். இருவரும் அமைதியான கடற்கரையில், குளிர் பணம் அருந்திக்கொண்டு கதைக்க தொடங்கினோம். அவளின் கதையில், எண்ணத்தில் தமிழர் பண்பாடு முழுமையாக வெளிப்படுவதை நன்றாக உணரக் கூடியதாக இருந்தது. அது மட்டும் அல்ல இன்றைய அரசியல் பிரச்சனைகளைப் பற்றியும் பேசினாள். அதில் தமிழர்கள் சிக்கி தவிப்பதை மிக மிக கருணையாக எடுத்துக் கூறினாள். அது அவளின் உடை மற்றும் தலை முடி அலங்காரத்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு புரியாத ஒன்று!!. என்றாலும் என் பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு அது ஒத்துவராது என்பது தெரியும். ஆகவே அதில் இனிமேல் மாற்றம் செய்தால், நான் பெற்றோரிடம் அனுமதி பெறுவது இலகு என்று விளங்கப் படுத்தினேன். அது மட்டும் அல்ல, கல்யாணத்தின் பின், நீ மெல்ல மெல்ல முன்போல் உடை மற்றும் முடி அலங்காரத்தில் மாறலாம் என்றும் கூறினேன். அவள் என்னை தன் பெற்றோரிடம் முதலில் கதைக்க கூறினார். ஒரு ஞாயிற்று கிழமை நானும் அங்கு சென்றேன் . தாயும் தந்தையும் என்னை வரவேற்றனர். மகள் ஏற்கனவே எல்லாம் சொல்லி விட்டதாகவும், மகள் என்னை கல்யாணம் செய்வதில் எந்த தடையும் இல்லை என்றும், ஆனால் அவரின் கோலம், பாணி அப்படியே தான் இருக்கும் என்று ஆணித்தரமாக கூறினார். நானும் அவர் கேட்டதற்கு மற்றும் அவரின் கடிதத்துக்கு மதிப்பு கொடுத்தே சந்திக்க வந்ததாகவும், என் பெற்றோர் விரும்பும் ஒருவரையே என்னால் திருமணம் செய்யலாம் என்றும் அவர்களிடம் கூறிவிட்டு திரும்பினேன். அவள் எழுந்து கதவு வரை வந்து, நடந்த சம்பவங்களை மன்னித்து மறக்கும் படியும், பெற்றோரை மீறி தானும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், என்றாலும் தன் அன்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கொஞ்சம் கண்ணீருடன் விடை தந்தார். "கார் கூந்தல் சரிந்து விழுந்து காற்றோடு அது அலை பாய காதணி குலுங்கி இசை அமைத்து கார்த்திகை அதற்கு ஒளி வழங்க காசனம் செய்யும் விழிகள் திறந்து காதோரம் மெதுவாய் செய்தி கூறி காதல் ஆசையை இறுக்கி பூட்டி கால்கள் தள்ளாட விலகி போனாள்!" [காசனம் - Killing,slaying; கொலை] இப்படித்தான் அவளை கடைசியாக பார்த்த அந்த காட்சி என் மனதில் இன்றும் நிற்கிறது. அவளின் நடத்தையும் மற்றும் உள்தோற்றமும் எவ்வளவு அழகாகவும் பண்பாடாகவும் இருப்பதை கண்டு ஆச்சரியமும் மதிப்பும் தானாக என்னில் தோன்றி, என்றுமே நெஞ்சை விட்டு அகலாத, 'நினைவில் நின்றவள்' ஆக இன்னும் என்னுடன் வாழ்கிறாள் அவள்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointஇதயம் பலவீனமானவர்கள் கர்பிணிப்பெண்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும் .......! 😴1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நாங்களும் இங்குதான் நிக்கிறம் சாத்தன்....... இந்தத் திரி "கோம்பைக்குள் கை விட்ட குரங்கு"மாதிரி கையில் இருக்கும் வழுக்களையும் விட முடியுதில்லை, கோம்பையும் கையை விடுகுதில்லை.......! 😂1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
சிறப்பான அலட்டல்கள் அற்ற Executive Summary நன்றி அண்ணை. நானும் 2019 மார்கழி/2020 தை போய் வந்த பின்னர் போகவில்லை. அடிக்கடி நினைப்பதுண்டுஇ எப்பிடி இந்த விலைகளிலேயும் தாக்குப் பிடிக்கிறார்கள் எண்டு. மத்திய வர்க்கப் பொருளாதாரம் பரந்து செல்லுகிறது. இலங்கை பணக்கார மேட்டுக்குடிகளின் life style வெளிநாட்டு பணக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட முடியாததுஇ அது ஒரு தனி உலகம். அவர்கள் பலருக்கு அவுஸ் போன்ற நாடுகளின் PR இருக்கு. பிள்ளைகள் இந்த நாடுகளில் படிப்பார்கள். 2019 கறுவாத்தோட்டத்திலிருந்த இப்படியான ஒரு குடும்பத்தின் விருந்திற்குப் போயிருந்தேன். பலாலியில் ஏறி சென்னை போய் ஷொப்பிங் செய்து படம் பாத்திட்டு வந்த நண்பர்களும் நெல்லியடியில் தான் இருக்கிறாங்கள். என்னத்த சொல்ல. எனது தாய் மாமா போன கிழமைதான் ஊரிலிருந்து ஜெர்மனி திரும்பியிருக்கிறார். கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருசங்களுக்கு பிறகு போய் மூண்டுக்கிழமை நின்றவர்.ஆள் தனிக்கட்டைஇ இப்பத்தான் ஓய்வூதியம் எடுத்திருக்கிறார். இறால்இ கணவாய்இ நண்டு எண்டு மனிசன் பிரிச்சு மேஞ்சிருக்கிறார். ஊரோட வந்து இருக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டுத்தானாம் ஆள் வெளிக்கிட்டது.1 point- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
நீங்கள் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போனாலும், எடுக்கா விட்டாலும் அங்கு அவர்களின் பெர்மிட் எடுக்க வேண்டும். எங்களின் இங்கத்தையே வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்த்திரத்துடன் அங்கு வாகனம் ஓட்டுநர் பெர்மிட் எடுக்கலாம். போன வருடம் ஒருநாள் திரிந்து அலுவலகத்தில் தூங்கி இருந்து எடுக்க வேண்டும். இனி அதை விமானநிலையத்தில் எடுக்கலாம் என்றபடியால் வீண் அலைச்சல் இல்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இதை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் இதேபோல் யூதருக்கு எதிராக பேசி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உண்மையில் பிரான்சில் எமது சமூகத்தில் படித்தவர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள் எல்லாம் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டா இருக்கிறார்கள்? என்றே யோசிக்கிறேன். ஒரு இனத்தை, மிக் கேவலமாக இனவாதமாக திட்டுகிறார். Inciting racial hatred, inciting violence, இதை ஒத்த பிரிவுகள் நிச்சயம் பிரான்சிலும் இருக்கும். இவவை எப்போதோ கம்பி எண்ண வைத்திருப்பதோடு, சமூக வலைதளத்துக்கு வருவதில் இருந்து நிரந்தர தடையும் வாங்கி கொடுத்திருக்கலாம். அடித்தவர்களின் உணர்சியை புரிந்துகொள்கிறேன். ஆனால் வேறு மாதிரி கையாள வேண்டிய விடயம் இது.1 point- வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை..
அற்புதராஜா ஒரு அருமையான மனிதர்.. எனக்கு instructor ஆக இருந்தவர். It will be good and wise choice.1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointஅருமையான சாலட் ........எளிமையாய் செய்து இனிமையாய் உண்ணவும்......! 😍1 point- "உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / சிந்தனை"
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / சிந்தனை" / பகுதி: 01 காந்தி, ஒரு வெளிநாட்டு அதிகாரத்துக்கு எதிராக சுதந்திரம் வேண்டி போரிட்டார் நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிராகப் போரிட்டார் மார்ட்டின் லூதர் கிங் சமூக உரிமைக்காக போரிட்டார் இவர்களில் இருந்தும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக போராடினார் பாரதியார் சாதி, மதத்திற்கு எதிராக போரிட்ட பெரியார் தமிழர்களின் சம அரசியல் உரிமைக்காக போரிட்ட தந்தை செல்வா இவர்களில் இருந்தும், மற்றும் இதனுடன் தொர்புடைய மற்றும் பலரிடம் இருந்தும், அதேவேளை வரலாற்று செய்திகளிலும் இருந்தும் உதாரணமாக சமயத்தை எடுத்துக் கொண்டால், மேல் பழைய கற்காலப் பகுதியில் [Upper Palaeolithic Revolution] தோன்றிய முதலாவது சமய அமைப்பு ஒரு வாய்வழியாக ஒவ்வொரு இனக் குழு உறுப்பினர்களிடமும் அவர்களின் புதிய தலைமுறைக்கும் பரப்பபட்டன. அதன் பின் பல காலங்கள் கடந்து, எழுத்து முறை கண்டு பிடிக்கப்ப ட்டதும் அவை முதலில் எழுத்துருவில் பதியப்பட்டன. இதனால் அவை கால, சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் அடையக் கூடிய நெகிழ்வு தன்மையை இழந்தன. பொதுவாக வாய்வழி மரபுகள் காலப்போக்கில்- அவர்களின் அறிவு அனுபவத்திற்கு ஏற்ப- விட்டுக்கொடுப்பு களுடன் விரிவுபடுத்தக் கூடியவை, ஆனால் எழுத்துருவில் பதியப்பட்டவை அப்படியல்ல. இது ஒரு துரதிருஷ்டவசமே. ஏனென்றால், வெவேறு இடங்களில் அந்த அந்த கால, சூழ்நிலைக்கு ஏற்ப, அவர் அவர்களின் ஒரு ஊகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட வெவேறு சமயங்கள் தனித்துவமாக விட்டுக் கொடுப்பு செய்ய முடியாத நிலையில் அவை வெவ் வேறாகவே இருக்கவேன்டியதாயிற்று. அவைகளின் போதனைகள், சிந்தனைகள் மாறுபட்ட வையாக இருந்தன. அது மட்டும் அல்ல, தமது மத அறிவுறுத்தல்கள், சடங்குகள், நம்பிக்கைகள் தமது ஆண்டவனே தமக்கு நேரடியாக தந்தவை என திடமாக நம்பினர். ஆகவே வெவ்வேறு மதங்களுக்கிடையான சமரசம் அல்லது இணக்கம் அடைவது கடினமாகவும் அதிகமாக முடியாத ஒன்றாகவும் இருந்தது. உலகின் சமாதானத்திற்கு எதிரான போர், முதல் முதலில் அதிகமாக தமது சமயங்களை, நம்பிக்கைகளை பரப்புவதற்கான போராகவே ஆரம்பித்ததாக உள்ளது. அது இன்றுவரை பலவழிகளில் தொடர்கிறது. இன்று அது போராக இல்லாவிட்டாலும், பரப்புரை, சிலவேளை பொய்களும் கலந்து மற்றும் உதவி போன்றவற்றால் தொடர்கிறது. ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி,பின் கிறிஸ்தவ மதப் போதகர்,உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல,இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை.- பைபிளுடன் தொடங்கு,அது வெற்றி தரவில்லை என்றால்,வாளை பாவி என்பதாகும் - அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போகவைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள்.விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெறவில்லை.முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது. இது மேலும் மேலும் பிளவையே வளர்த்தது. சமாதான வாழ்வு சுக்கு நூறாகியது சமயத்தின் அல்லது ஆண்டவனின் பெயரால்!! இன்னும் ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக்கொண்டால், சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் பரவர் அல்லது பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் 20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும். எனவே தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். அதாவது தமிழர் என்ற ஒரு இனமே அங்கு சாக்கடிக்கப் பட்டது. இவர்கள் இனமாற்றம் செய்வதற்கு தமிழர் என்ற அடையாளத்தை மெல்ல மெல்ல மத மாற்றத்தால் இழந்ததும், மற்றும் தமிழர் பெருவாரியாக உள்ள நிலத்தை விட்டு அகன்றதும் ஒரு முக்கிய இலகுவான காரணமாக அமைகிறது ? இந்த இனப்படுகொலைக்கு காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்! பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். [This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese] ஆகவே சமயத்தை, சாதியை, நிறத்தை, இனத்தை, பொருளாதாரம் / வசதி அல்லது ஆண் பெண் வேற்றுமைகள் கடந்தால் தான் சமாதானம் கிடைக்க வழிவரும் என்று நம்புகிறேன். அதேவேளை எம் குழந்தை / இளைஞர் பாட திட்டம் கட்டாயம் இவைகளை கடந்ததாக உதாரணங்கள் மூலம் கற்பிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக் கொண்டால், இன்னும் புராணக் கதையான, உண்மைக்கு புறம்பான மகாவம்சத்தின் அடிப்படையிலேயே இலங்கை வரலாற்றை போதிக்கிறார்கள். அது தான் இன்னும் இலங்கையில் உள்நாட்டு சமாதானம் ஏற்படாததற்கு ஒரே ஒரு காரணமாகும். எனவே, நாம் இன்று அறிவியலில் மிக மிக முன்னேறி இருந்தாலும் சமாதானம் ஒரு கேள்வி குறியாகவே உள்ளது. எனவே பொருள்முதல்வாத வளர்ச்சி [materialistic development] மனிதனுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தாலும், சமாதானம் அதனால் வந்துவிடும் என்று சொல்லமுடியாது. அதற்க்கு கலாச்சார ஞானம் / அறிவு உள்ளத்தில் முழுமையாக வரவேண்டும். இங்கு தான் எம் பண்டைய அனுபவங்கள் மற்றும் இலக்கியங்கள் துணை நிற்கின்றன என்று நம்புகிறேன் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] தொடரும் பகுதி : 021 point - வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.