Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    1866
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20018
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46791
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/02/24 in Posts

  1. Beggars can’t be choosers , தமிழனிற்கு எதையும் வழங்க விடக்கூடாதென தம் நாட்டையே படுகுழியில் தள்ளி இன்றும் சிந்திப்பதாக தெரியவில்லை. பத்திரம் பத்திரம் பானை பத்திரம் என மாதான முத்தாவின் பானையும் போய் ஆடும் போய் விட்ட கதைதான்................
  2. குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதையும் வித்தாச்சா??
  3. உங்களது பிள்ளைகள் ஒரு வயதுக்கு வந்தபின்புதானே இந்த முடிவை எடுத்திருக்கிறீர்கள். ஆனால் அவர்களது சிறு வயதில் அவர்களுடன் ஊரில் போய் இருக்க நினைத்திருப்பீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் எனக்கு தெரிந்த ஒருவர் தனது இரு சிறுவயது பிள்ளைகளுடன் ஊரில் போய் ஒரு வருடம் இருந்த பின் இங்கே திரும்பிவிட்டார் காரணம் பிள்ளைகளை அங்கே பாடசாலையில் bully செய்வதாலும் மொழிப் பிரச்சனையாலும். அவர் இப்பொழுது கூறுவது பிள்ளைகள் வளர்ந்த பின்பு போக நினைத்திருப்பதாக. புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த பிள்ளைகள் ஊரில் போய் படிக்கும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள் அவர்களைப் பாதிக்காதா? எனக்கும் ஊரில் போய் வாழ விருப்பம் ஆனால் முடியாது. நான் பார்த்த அளவில் அங்கே சமூகம் விதிக்கும் அல்லது எதிர்பார்க்கும் வரையறைக்குள் இருக்கவேண்டும் அது எனக்கு சாத்தியமாகத் தெரியவில்லை. அவுஸ் வராமல் அங்கேயே தொடர்ந்து வாழ்ந்திருந்தால் அதனை ஒட்டி வாழ்ந்திருக்கலாம் ஆனால் இப்பொழுது முடியாது என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து. ஆனாலும் பிறந்த இடம், சொந்த மண் என்பதால்தான் இன்று வரை அங்கே தேடித்தேடிப் போகிறேன்.
  4. வலையன்மடம் - வலையனைக் காணவில்லை ஆனால் தனித்து நிற்கும் மரத்தைத் தான் காணமுடிந்தது. புதுமுறிப்புக் குளம் - வாய்காலில் விளையாடும் சிறு வயசுப் பையன்கள் கயிறாக காத்திருக்கும் சணல்..சுண்டிக்குளம் போகும் வழியில்..
  5. அந்நேரம் வந்தவர்கள் எல்லோருமே இதே மனநிலையில் இருந்தார்கள். நான் நினைக்கிறேன் புலிகள் போன போக்கிற்கு கட்டாயம் தமிழீழம் கிடைக்கும் என்று நான் உட்பட எல்லோரும் எண்ணத்தில் இருந்திருப்போம்.
  6. Zubin Karkaria CEO and Founder of VFS Global Born: 1968 (age 56 years) Education: R A Podar College Of Commerce & Economics, University of Mumbai Nationality: Indian https://en.wikipedia.org/wiki/VFS_Global இந்தியாக்காரன் தான்😂 (https://www.independent.co.uk/news/uk/home-news/vfs-global-home-office-outsourcing-visa-applications-a9061476.html) பிறந்தது, படிச்சது, கக்காபோனது எல்லாமே இந்தியாவிலைதான் 🤣 இந்தியாக்காரனின்ட தூதுவராலயம் வழக்கம் போல புழுகுது, பிடிபட்டவுடனை🤥😏🙄
  7. இந்தியர் சிறீலங்காவின் சர்வதேச விமான நிலையத்தில் சிறீலங்கா விசா வழங்குகிறார். இப்படி வேறு எங்கேயாவது நடக்குமா? மோடி ஜீ வாழ்க….
  8. இந்திய கம்பனியே இதை நடத்துவதாக செய்தியில் கூறும்போது அவசர அவசரமாக இந்தியாவுக்கும் இதுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஏன் இந்திய உயர்ஸ்தானிகர் அறிக்கை விட்டார். எவ்வளவு ஒரு முக்கியமான பொறுப்பு வாய்ந்த துறையை போதிய பரிசோதனைகள் செய்யாமல் எப்படி களமிறக்கிவிட்டனர். நீங்கள் ஆச்சரியப்பட்டது தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இன்னும் இன்னும் வரும். மயங்கி விழுந்துடாதேங்கோ.
  9. முன்பும் எழுதி இருந்தேன் என நினைக்கிறேன். நிச்சயமாக என் பின் பதின்ம வயதுகளில், நான் இலங்கையில் இருக்கும் போதே, தனி நாடு கிடைக்கும் என நான் நம்பவில்லை. புலிகளை ஒரு போதும் சலித்ததில்லை. ஆனால் தலைவர் இருக்கும் போது இது முடிந்து விடவேண்டும் என அங்கலாய்தேன். அவர் இருக்கும் போது ஒரு பாதி தீர்வு கிடைத்து அதை அவர் 20 வருடம் அமல் படுத்துவது, அவர் இல்லாத போது தனி நாடே கிடைப்பதை விட மேலானது என நம்பினேன். எல்லோரை போலவும் தலைவரின் இயங்கு-காலமும் மட்டுப்பட்டது, இயற்கை இனவாதிகளுக்கு சார்பாக இருக்கிறது. அவர்களும் இதை உணர்ந்து playing for time. என்பதை உணர்ந்திருந்தேன். தனி நாடு கிடைத்திருந்தாலும் நான் 100% திரும்பி போய் இருக்க மாட்டன் என்றே நினைக்கிறேன். ஏனையோரை பற்றி தெரியவில்லை, என்னதான் வெளிநாடு என சொன்னாலும், எனக்கு இங்கேயும் வேர் கொஞ்சம் ஆழமாகவே ஓடி விட்டது. அடுத்தது சுதந்திரம் ஒரு பொல்லாத சாமன் - அதற்கு பழக்கப்பட்டு விட்டால் கஸ்டம். அதை இங்கே போல், கொழும்பிலோ அல்லது புலிகளின் ஆளுகையின் கீழோ என்னால் அனுபவித்திருக்க முடியும் என நான் நம்பவில்லை. குரு அள்ளி கொட்டுதாம்… கொட்டினதை அப்படியே சனி வழிச்சு எடுக்குதாம்… இதுதான் நம்ம லைப் ஸ்டோரி ஆச்சே🤣
  10. உண்மைதான்... நம்பியிருந்தோம் ஆனால் எம்மை விட புலிகள் காலத்தில் அவர்களை சலித்து கொட்டியவர்கள் தான் இன்று புலிகள் இருந்தால் நல்லது என முணுமுணுக்கின்றார்கள்.
  11. பிறந்த ஊர், வாழ்ந்த இடங்கள் என்பன எனது நினைவுகளில் இருந்து மறையாத ஒன்று அதனால்தான் அவற்றைத் தேடிதேடி மீண்டும் போவதுண்டு. ஆகையால் இந்தத் திரியில் நான் ஊருக்குப் போகும் பொழுதெல்லாம் நான் பார்க்கும் இடங்களை எனது நினைவுகளின் தொகுப்பாக இருப்பதற்காக இங்கே பதிவிடுகிறேன். சில தடவைகள் ஊருக்குப் போய் வந்தாலும் சித்திரை வருடப்பிறப்பு சமயத்தில் போக சந்தர்ப்பம் வந்தது மிகவும் குறைவு, இந்த வருடம் சித்திரையில் போக சந்தர்ப்பம் கிடைத்தது அதனால் இந்த வருட கைவிசேசம் எனக்கு மிகவும் முக்கியமானது.. என்னைக் கவர்ந்த இன்னொரு இடம்..சுண்டி இழுக்கும் சுண்டிக்குளம் கடற்கரை
  12. Published By: VISHNU 01 MAY, 2024 | 09:37 PM வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவனசெய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்கவேண்டும் என்று சொல்லிவருகின்றோம். அதெப்படி என்று நீங்கள் கேட்கக்கூடும். பொதுவேட்பாளர் தேர்தலில் நாம் தேர்தலில் வெல்ல போட்டியிடவில்லை. பின் எதற்காக என்று கேட்டால் எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றை வட கிழக்கு மாகாணங்களில் பெற ஆவனசெய்யவுமே தான் இந்த ஏற்பாட்டை வலியுறுத்துகின்றோம். ஐ.நா வினால் வடகிழக்கு மாகாணங்கள் மக்கள் தீர்ப்பிற்கு விடப்பட்டால் மக்களின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். முன்னைய தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவாறு தமிழர்களாகிய நாம் எமது வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து சில போராட்டங்களில் ஈடுபட வேண்டும். வன்முறை தேவையில்லை. பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பொது வேட்பாளரை முன் நிறுத்தி எமது தமிழ்ப் பேசும் உறவுகளை ஒன்றிணைத்து எமக்கென உலக அரங்கத்தில் சில நன்மைகளைப் பெற முயற்சிப்பதே இந்தப் போராட்டம். அவ்வாறான ஒரு போராட்டவழிமுறையாகவே தமிழ் பொதுவேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தும் செயல் அமைகின்றது. தக்க பொதுவேட்பாளர் ஒருவரை நாம் முன்னிறுத்தினால் அவர் மும்மொழிகளிலும் எமது வரலாறு பற்றி, எமக்கிழைக்கப்பட்ட அநியாயங்கள் பற்றி, இன்னல்கள்,பாகுபாடுகள் பற்றி உலகுக்கு எடுத்துரைத்து எமது வடக்குகிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை ஐக்கிய நாடுகள் நடத்தக்கூடிய தகுந்த மக்கள் வாக்கெடுப்பின் மூலம் வெளிக் கொண்டுவர முடியும் என்ற கருத்தை நிலைநாட்டமுடியும். பலர் பொதுவேட்பாளரை முன்னிறுத்தினால் தமக்கு வேண்டிய சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது போய்விடும் என்று அஞ்சுகின்றார்கள். அது தவறு. பொதுவேட்பாளருக்கு நாம் எமது முதல் வாக்கை அளித்துவிட்டு 2ஆம் 3ஆம் விருப்பு வாக்குகளை நாம் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு அளிக்க முடியும். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பேணப்படும். எமது எதிர்பார்ப்புக்கள் உலகறியச் செய்யப்படும். அதேநேரத்தில் எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் இடமளிக்கப்படும். இவ்வாறு செய்வதால் இனக்கலவரங்கள் வெடிக்கவேண்டிய அவசியம் எதுவும் ஏற்படாது என்றார். https://www.virakesari.lk/article/182440
  13. Azhagu Raja · #மணவாழ்க்கை..... மணவாழ்க்கை*_ யார்க்குத்தான்*_ சரியாக*_ _*இருந்தது*_ தசரதனுக்கும்_ அவன்_ _மனைவிகளுக்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ இராமனுக்கும் சீதைக்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ கண்ணகி_ மாதவி_ _கோவலனுக்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ அகலிகைக்கும்_ முனிவனுக்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ புத்தனுக்கும்_ யசோதைக்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ பட்டிணத்தார்க்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ ஒவ்வொரு_ சாமியார்க்கும்_ சித்தனுக்கும்_ மணவாழ்க்கை_ சரியாக இருந்தால்*_ அவன் ஏன்*_ காட்டை நோக்கிச்*_ செல்கிறான்*_ ஐந்துவிரலும்_ ஒரே நீளமாகவா_ இருக்கு_ ஒவ்வொரு*_ தலையிலும்*_ ஒரு விதி*_ எழுதப்பட்டிருக்கு*_ அதை அழிக்க_ முடியுமா_ பணக்காரன்*_ ரகசியமாகப்*_ புலம்புறான்*_ ஏழை வெளியில்_ புலம்புறான்_ அனைவருடைய*_ வாழ்விலும்*_ ஓட்டையும்*_ _*ஒடச்சலும்*_ இருக்கத்தானே*_ செய்கிறது*_ எல்லாமே_ சரியாக இருந்தால்_ இறைவனை_ மறந்துவிடுவாய்_ என்ற_ _காரணத்தினால்_ கூட்டியும்*_ _*பெருக்கியும்*_ கழித்துவிடுகிறான்*_ மனிதனின்*_ வாழ்க்கையை*_ ஆணும்_ _புலம்புகிறான்_ பெண்ணும்_ புலம்புகிறாள்_ இருந்தும்*_ வாழ்க்கை*_ நடந்துக்கொண்டுதான்*_ இருக்கு*_ அதில் நாமும்_ கடந்துக்கொண்டே_ இருக்கோம்_ வாழ்வதும்*_ வாழ வைப்பதும்*_ நம்ம*_ _*கையில்தான்*_ இருக்கிறது*_ புரிந்து கொண்டு வாழுங்கள்......! 😴
  14. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 17/12/1990 பக்கம்: 1 இரு தமிழர்கள் வெட்டிக்கொலை திருகோணமலை மாவட்டம் தோப்பூரில் கடந்த 14 ஆம் திகதி முஸ்லிம் ஊர்காவல் படையினர் இரு தமிழர்களை வெட்டிக்கொலை செய்துள்ளனர். உப்பூறல் பகுதியைச் சோர்ந்த ந. தம்பிராஜா (24 வயது) த.விஜயசிங்கம் (40 வயது) ஆகிய இருவருமே வெட் டிக் கொல்லப்பட்டுள்ளனர். [உ-5] ******
  15. $50 க்கு கொடுத்த வீசாவை, இப்ப $75 மற்றும் $25 (கம்பனியின் அட்மின் பீஸ்) ஆக மாற்றியுள்ளனர். கொள்ளைதான் வேறு என்ன. இந்த VFS கம்பெனிதான் இலங்கையில் இருந்து யூகே விசா, யூகேயில் இருந்து இந்தியன் வீசா போன்ற பலதை கையாள்கிறது. ஆனால் இவர்கள் முடிவு எடுப்பதில்லை, அதை அந்த நாட்டு குடிவரவுத்துறையே மேற்கொள்ளும். தொடர்பான திரி
  16. சிங்கள ஊடகங்கள் தான்… இப்படி தவறான தகவல்களை பரப்புகிறது என்று பார்த்தால்… Canada City Newsம் நம் மேல் சேறு அடிக்குது.😁
  17. வாழ்த்துக்கள். குடும்பத்துடன் சந்தோசமாக வாழுங்கள்.
  18. ஒரு ஜேர்மனியனுக்கு இந்த பிரச்சனை இருக்க தான் செய்யும் 🤣🤣
  19. தமிழ் கதைக்கத் தெரியும். வாசிக்க கொஞ்சம் பிரச்சினையாய் இருக்கு.😂 அதுகும்… இப்பிடியான செய்திகள் என்றால் வாசிக்க பெரும் சிரமம்.🤣
  20. 2009 வரை எதுவாக இருந்தாலும் ஈழம் நோக்கியே. உலகத்தில் எங்கும் எந்த சொத்தும் வாங்கியதில்லை. அவ்வளவு பிடிவாதம். இருந்த, பழகிய இடமும் அப்படி. அதன் பின்னர் எல்லாமே இழந்து நிர்க்கதியாக நின்ற போது ....... மீண்டும் 83இல் கொழும்பில் நின்ற நிலை. பிரான்ஸ் வந்ததிலிருந்து வீட்டுக்காக 10 வருடங்கள், நாட்டுக்காக 15 வருடங்கள், ஊருக்காக 20 வருடங்கள்..... சரி இனியாவது மனைவி பிள்ளைகளுக்காக வாழலாம் உழைக்கலாம் என்று எடுத்த முடிவுப்படிதான் இனி என் வாழ்க்கை. அதன் கடைசிப் பணியாக கடைசி மகளின் படிப்பு (வைத்தியத்துறை) 2025இல் முடிகிறது. எனது இரண்டாவது மகன் பரிசில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் அப்பா அம்மா பிற்காலத்தில் வாழ என்று தோட்டக்காணி உட்பட அனைத்து வசதிகளுடன் வீடு ஒன்றை தானே திட்டமிட்டு புதிதாக கட்டி திறப்பை தந்து இருக்கிறான். அந்த இடத்தில் எங்கள் பென்சன் வாழ்வை வாழலாம் என்று இருக்கிறேன். நன்றி.
  21. கனடா , ஒன்ராரியோ மாகாணத்தில், டுறம் பிரதேசத்தில் வசிக்கும் இரு தமிழர்களான லக் ஷாந்த் செல்வராஜா (27 வயது), மற்றும் அக் ஷயா தர்மகுலேந்திரன் ..
  22. லக்ஸாந்த செல்வராஜபக்ஸ and அக்ஸயா தர்மகுலேந்திர.................. இப்போது திருப்தியா? 🤣
  23. Vignesh Waran · செருப்பு தைக்கிறவங்க கிட்ட நாம காட்டுற வீரம் கோழையை விட கேவலமானது.. தெருவுல கீரை விக்கிற பாட்டிகிட்ட ரெண்டு ரூபா பேரம் பேசி ஜெயிச்சுட்டு 2000 ரூபாய் கோயில் உண்டில போட்றதால எந்த வரமும் கிடைச்சிட போறதில்ல.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, சுமார் எட்டு வருசத்துக்கு முன்னாடி, நான் ஒரு முறை பேங்க் ல Loan கட்ட போயிருந்தப்ப நடந்த நிகழ்வு இது.. ஒருத்தர் 70 75 வயசு இருக்கும்.. பாத்தா விவசாய கூலி வேலை செய்றவர் மாதிரி இருந்தாரு..கையெல்லாம் காச்சு போயிருந்தது..அவர் Passbook Entry போட்றதுக்காக அரை மணி நேரமா வரிசைல நின்னுட்டு இருந்தார். நான் அவர் பின்னாடி நான் நின்னுட்டு இருந்தேன்.. அவரோட வாய்ப்பு வரும் போது, அவர் Entry போட்றவர் கிட்ட, "ஐயா.. இந்த புக்ல எவ்வளவு பணம் இருக்குன்னு பாத்து சொல்லுங்க ஐயா.. அப்படியே எழுதி குடுங்கய்யா" ன்னு சொல்ல, Bank officer, "350 ரூபா இருக்கு.. இதுக்கு ஒரு entry வேறயா.. போ..போய் வெளிய ATM ல போட்டுக்கோ - ன்னு கேவலப்படுத்தி" அனுப்ப, அந்த அய்யா ATM எதுன்னு தெரியாம அரை மணி நேரம் அலஞ்சுட்டு மறுபடியும் வரிசைல வந்து நிக்கிறாரு.. அந்த Employee, "யோவ்..மறுபடியும் என்னய்யா நீ வரிசைல நிக்கிற.. போயா.. அந்தப்பக்கம்..னு திட்ட, அவர் என்ன செய்றதுன்னு தெரியாம திரு திரு முழிச்சிட்டு இருந்தப்ப, Security வாங்கய்யா ன்னு நான் போட்டுத் தரேன் கூட்டிட்டு போனாரு.. கஷ்டப்படுறவனுக்கத் தான் அடுத்தவனோட கஷ்டம் புரியுதுல.. அப்பவே,இன்னோருத்தர் வேக வேகமா Manager கிட்ட ஓடிவந்து, ஐயா.. "ஏன்யா என் பேர Board எல்லாம் போட்டு இருக்கீங்க, வீட்டுக்கு letter வந்துருக்குன்னு" கேட்டார்.. அதுக்கு Manager, "நீ ரெண்டு மாசம் வட்டி கட்டல.. அதான் போட்டுட்டோம்..னு Cool aa பதில் சொன்னாரு.." அந்த மனுஷன்.. எங்கேயோ போய் யார்கிட்டையோ காசு வாங்கி மொத்த கடன் 22000 த்த மொத்தமா அடச்சிட்டு.. அய்யா..இப்ப என் பேரு அழிங்க அய்யான்னு ஒரு சின்ன கொழந்த மாதிரி கேட்டது..அவங்க இவ்ளோ கஷ்டத்துலயும் அவங்க தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழக்க தயாரா இல்லன்னு காட்டுது.. (அது வேற யாரும் இல்ல எங்க அப்பா தான்...22000 ரூபா தறி Loan க்கு மானியம் போக வட்டி அது இதுன்னு 28000 ரூபாபாவ கண் கலங்கிக் கிட்டே கட்டுணது எனக்குள்ள இன்னமும் வலிக்கு) Drainage Clean பண்றவங்களை பாத்தா முகம் சுழிக்கறது, சர்வர் கிட்ட சவுண்டு விட்றது, ரோட்டாரம் காய்கறி விக்கவறங்க கிட்ட கறாரா பேசுறது, நமக்கு கீழ வேலை செய்றவங்கள ஒருமைல பேசுறது, இந்த மாதிரி Scene போட்றத எல்லாம் விட்டுட்டு,அவங்களுக்கும் சரிசமமான மரியாதை குடுத்து பழகுவோம்.. இங்க யாரும் மேலயும் இல்ல.. கீழயும் இல்ல.. படிச்சவங்க படிப்புக்கு ஏத்த வேலை செய்றாங்க.. மித்தவங்க அவங்களுக்கு தெரிஞ்ச வேலய செய்றாங்க.. உழைப்பாளன் கேட்பது தகுந்த ஊதியமும் குறைந்தபட்ச மரியாதை மட்டுமே.. உழைப்பாளனின் வியர்வை மணத்திற்கு இணையான நறுமண பொருள் இன்றுவரை கண்டுபிடிக்க படவில்லை.. உங்களுக்கு மேல இருக்கிறவங்களுக்கு நீங்க கொடுக்குற மரியாதைக்கு காரணம் பயம்.. உங்களுக்கு கீழ இருக்கிறவங்களுக்கு நீங்க கொடுக்குற மரியாததான் உங்களோட Character. என்ன வேலைன்னு எல்லாம் பாக்காம வேர்வ சிந்தி உழக்கிறவங்க எல்லாருக்கும் மரியாதை கொடுத்து பழகுவோம்.. முடிஞ்சா அவங்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.. நம்ம கிட்ட அதிகாரம் இருந்ததுன்னா அதை வச்சு இல்லாதவங்களுக்கு என்ன பண்ணி அவங்க வாழ்க்கைத் தரத்த உயரத்தலாம் ன்னு யோசிப்போம்.. உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்........! 🙏
  24. இப்படி ஒத்துழைக்கும் ஒரு பெண் கிடைத்தால் நாளைக்கு நானும் ஒரு ஆட்டம் ஆடலாம் என்று இருக்கிறேன்.......! 😂
  25. இன்று உமா ராமணனுக்கு விதிவிலக்காக வர்ணத்தில் பாடல் ..........! 💐
  26. கையோட குருபெயர்ச்சி,சனிபெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சி தான் காரணம் எண்டு சோல்லிட்டு போறது....🤣
  27. இவ்வளவு காலமாக தம்மை மீறி யாரும் வாலாட்ட மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இருந்தவை. ஆனால் இப்போது மும்முனைப் போட்டியில் சிக்குண்டுள்ளனர். இதைத் தானே அண்மையில் கட்டாரில் பார்த்தோம். இலங்கையில் செய்ததை கனடா அமெரிக்காவில் செய்யப் போய் மாட்டிக் கொண்ட அனுபவமும் இருக்கு.
  28. இப்படியான ஜென்மங்கள் அப்பாவி சீவனுகளை ஏமாற்றி பிழைப்பதை விட ரோட்டில இருந்து பிச்சை எடுக்கலாம்...
  29. நோ…நோ பிக் ப்ரோ நீங்கள் என்னை தப்பாக புரிந்து கொண்டு விட்டீர்கள். இதுவரை எனது வாழ்க்கையை எடுத்தால் நான் அதில் அண்ணளவாக 59% ஐ யூகேயில் தான் கழித்துள்ளேன். 41%தான் இலங்கையில். ஆகவே நான் ஒரு பாதி இங்கிலீஸ்காரன்யா🤣. யாழ்கள வழக்கப்படி மரியாதையாக சொன்னால் மேற்கின் அடிமை. ஆகவே எனக்கு அதுவும் இதுவும் இரெண்டு கண்கள் போல. ஒன்றை விட்டு விட்டு இன்னொன்றோடு வாழவே முடியாது. எனக்கு இலண்டனில் இருந்து உதயன் வாசிக்கவும் பிடிக்கும், யாழ்பாணத்தில் இருந்து கார்டியன் வாசிக்கவும் வேண்டும். ஆறுமாதம் இங்கே நின்றால் நெய் பரோட்டா கேட்கும். ஆறு மாதம் அங்கே நின்றால் ஒரு ஷீஷ் கெபாப் விடாய்க்கும். ஆகவே அங்கே, இங்கே என வாழ்வதுதான் என் குறிக்கோள். ஆனால் - பெறக்கூடாது, பெற்றால் எம்மால் முடிந்தளவு வாய்ப்புக்களை கொடுக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அந்த வாய்புக்கள் ஒரு 3ம் உலக நாட்டை விட, உலகின் 4/5 வது பெரிய பொருளாதாரத்தில் அதிகம் என நான் நம்புகிறேன். ஆகவே என் இன்பத்துக்காக இப்போதைக்கு அங்கே, இங்கே என போகப்போவதில்லை. தந்தை இல்லாத ஆண் பிள்ளைகளின் சீரழிவை நேரிலேயே கண்டுள்ளேன். ஆகவே அந்த புரொஜெக்ட் முடியும் மட்டும் அரக்க முடியாது. அடுத்தது - அங்கே, இங்கே வாழ்வது என்றால் - காசு வேணும். ஆகவே சில ஏற்பாடுகளை இப்பவே செய்ய தொடங்கினால் காலம் கனியும் போது செய்யலாம். கற்ற கல்வி கடைசி வடக்கும் சோறு போடுமாமே? முயற்சித்து பார்க்கலாம். ஆனால் நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைத்து இது நிறைவேறாமலே போகலாம். போகட்டுமே….போகும் போது நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். முடிந்தளவு அவற்றை இன்பமானதாக சேர்க்க முனைந்தோம் என்ற நிம்மதியில் கண் மூடலாம். #ஆண்டி ***யை தட்டினால் பறப்பது புழுதி🤣
  30. திருமதி உமா ரமணன் அவர்கள் மறைந்தாலும் பாடிய பாடல்கள் என்றும் அவரை நினைவூட்டும். அஞ்சலிகள்.
  31. யதார்த்த பாடகி. இளையராஜா மிக நன்றாக இவர் குரலை தன் இசைக்கு பயன்படுத்தியிருப்பார். ஆர்ப்பாட்டமில்லாத பாடகி. ஆழ்ந்த அஞ்சலிகள்.
  32. இது தானாம்! இங்க யாழ் இணையத்தில இவரவிட நான்கிற்கு மேற்பட்ட மொலிகழிள் (மொழிகளில்) பாண்டித்தியம் பெற்றவர்கள் இருக்கின்றனர். தான் போறதுக்கு மூஞ்சூறுக்கு வழியக் காணேல்லையாம் விளக்குமாத்தையும் சேத்து காவிக்கொண்டு போக வெளிக்கிட்டிச்சுதாம்! 👀
  33. என்னைப் பொறுத்தவரை ஒரு உறவில் நான் நானாக இருக்கமுடியாது என உணரும் பொழுது அந்த உறவில் இருக்க முடியாது என்பதுதான் உண்மை மனைவிக்கு அல்லது காதலிக்குப் பிடிக்கும் என்பதற்காக தனது கொள்கை/விருப்பங்களை மாற்றி வாழ நினைத்தாலும் கூட ஒரு கட்டத்திற்கு மேல் அப்படி இருக்க முடியாமல் போகும் என்றுதான் நினைக்கிறேன். ஒரு உறவில் இருக்கும் ஆணும் சரி பெண்ணும் சரி அவரவர் விருப்பங்களுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால்தான் அந்த உறவு விரிசல் இன்றி தொடரும். ஆனால் தேவையற்ற விதமாக கட்டுப்படுத்துவதும் விதிகளைப் போடுவதும் அந்த உறவினை நம்பவில்லை என்பதுடன் அவமானப்படுத்துவதாகவே கருதப்படும் என நம்புகிறேன். ஒரு உறவில் இருக்கும் பொழுது மூச்சு முட்டி சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமல் இருப்பது அடிக்கடி நிகழுமாயின் அங்கே அந்த உறவில் விரிசல் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். நீண்ட காலம் ஒன்றாக வாழ வேண்டும் என நினைத்தால் ஒருவரை ஒருவர் உண்மையாக நேசித்தால், இருவரும் ஒருவரில் ஒருவர் பரஸ்பர நம்பிக்கையும் வைத்திருக்கவேண்டும். அத்துடன் அவரவர் உணர்வுகளுக்கும்/விருப்பங்களுக்கும் மதிப்பு கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் தங்களையும் ஏமாற்றாமல் வாழலாம்.
  34. அன்றொருநாள் நானும் நீயும் ஆடும் ஆடுமாய் ஆடினோம் இதோ இந்த இடத்தில் ஆடியபோது என் முதுகில் ஆட நீ ஓடிவந்து தாவினாய், நான் சற்று விலகியபோது போனவன்தான் , நீ வருவாயென நானும் இங்கு .......! 😴
  35. ஆர்வ/காம மிகுதியால மூக்குத்தி மூக்கை கடிக்க/----- ......மூக்குத்தி இரைப்பைக்கு போன சம்பவங்களும் உண்டெல்லோ...😍
  36. நல்ல காலம்....நமக்கு 40 வருசத்துக்கு முதலே எல்லாம்......😎
  37. நமது முட்டாள் தனம் எதிரிகளுக்கு மூலதனம்.
  38. சித்திரை 27 இல் மகனுக்கு ஒரு மகன் பிறப்பதாக இருந்தது.ஏற்கனவே திகதிகள் தெரிந்தபடியால் 13ம் திகதி வட கரோலினா போவதற்கு விமான சீட்டுகளும் எடுத்து வைத்திருந்தோம். அதற்கிடையில் மனைவியும் நானும் பார்க்க வேண்டிய வைத்தியர்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். 10ம் திகதி Cardiologist இடம் பகல் 10;30 க்கு பார்க்க வேண்டும்.(6 மாதத்துக்கொரு தடவை வழமையாக பார்ப்பது தான்). 10 மணி போல வைத்தியரைப் பார்க்க போய்க் கொண்டிருந்த போது மகனிடமிருந்து தொலைபேசி அலறுகிறது.மணிக்கூட்டைப் பார்க்க மகன் தான் எடுக்கிறான் என்று தெரிகிறது.சட்டைப் பையில் இருந்து உடனடியாக எடுக்க முடியவில்லை. வண்டியை ஓரம்கட்டி விட்டு என்னடா வேலைக்கு போகலையா? வீட்டிலிருந்து வேலையா? என்றேன். இல்லை இல்லை ஆஸ்பத்திரியில் நிற்கிறேன்.இன்றிரவு அல்லது காலை பிள்ளை பிறக்க போகுது.உடனடியாக ரிக்கற்றை போட்டுட்டு வாங்கோ. ஏனடா ஏதாவது பிரச்சனையோ? ஒன்றுமில்லை.இப்ப டாக்ரரைப் பார்க்க வேண்டாம் கான்சல் பண்ணிப் போட்டு போய் வாற அலுவலைப் பாருங்கோ.பிற்பகல் 4-4;30க்கு மற்றவங்கள் பாடசாலையால் வர முதல் இங்கே நிற்க வேண்டும்.இப்ப டாக்ரர்மாரை 24 மணிநேரத்துக்கு முன் கான்சல் பண்ணலை என்றால் 50 டாலர்கள் தண்டம்.சரி சரி நாங்கள் வாறம் பிரச்சனை இல்லை. உடனே மனைவிக்கு விடயத்தைச் சொல்லி நான் டாக்ரரைப் பார்த்துவிட்டு வருகிறேன் உடுப்புகளை அடுக்கி போற அலுவலை பார்.டாக்ரரின் அலுவலகத்தில் சிறிய பிரச்சனை அவசரம் போக வேண்டும் கனநேரம் செல்லுமா என இல்லை அடுத்தது நீ தான். அன்று எனது நல்லகாலம் வழமையை விட நேரத்துக்கே முடித்து வீடு வந்து விமான பயணத்துக்கு ஆராய தொடங்கினேன்.உடனே போவதென்றால் பல மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டும்.சில விமானங்கள் குறைவாக இருந்தாலும் புத்தக பையைத் தவிர வேறு எது கொண்டு போனாலும் கூடுதாக பணம் செலுத்த வேண்டும். பிற்பகல் மூன்று மணிக்கே விமானம்.திடீரென்று புறப்படுவதால் எதைஎதை எப்படி செய்வதென்றில்லாமல் செய்து முடிந்து வீட்டிலிருந்து புறப்படும் போது மணி 2 ஆகிவிட்டது.3;10 க்கு விமானம். விமானநிலையம் போய்ச் சேர 2;20 ஆகிவிட்டது.வடகரோலினாவில் இருந்து சன்பிரான்சிஸ்கோ போவதால் ஒரு பெரிய பெட்டியும் கொண்டுவந்தோம்.சரி நீ போய் வரிசையில் நில் வெளியே உள்ள மெசினில் பெட்டியைப் போடுவதற்கு துண்டுகளை எடுத்துக் கொண்டு வாறன் என்று அதையும் ஓடிஓடி முடித்தோம். அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்வதால் குளோபல் என்ரி எடுத்து வைத்திருக்கிறோம்.அதனால் வழமையான பாதையால் போகாமல் விசேடமாக பாஸ் வைத்திருப்பவர்களுக்கான பாதையால் போய் கையில் கொண்டு போன சிறிய பொதிகளையும் சோதனை முடிந்து எமது கதவுக்கு போனால் எல்லோரும் விமானத்தில் ஏறிவிட்டார்கள்.கடைசி ஓரிருவர் நின்றார்கள்.அப்பாடா என்று ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் விமானத்தில் ஏறினோம். ஆனாலும் 5 மணிக்கு வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு வீடு போய் சேர 6 மணியாகிவிடும்.மகனுக்கு விடயத்தை சொன்னேன்.பிரச்சனை இல்லை நண்பர் குடும்பம் ஒன்றை ஒழுங்கு பண்ணியுள்ளேன்.நீங்கள் வரும்வரை அவர்கள் வீட்டில் நின்று பார்ப்பார்கள். மகனின் வீடுவந்து சேர 6;15 ஆகிவிட்டது.பிள்ளைகளுக்கு ஒரே சந்தோசம்.நின்றவர்களுக்கு நன்றி சொல்விட்டு பிள்ளைகளின் அலுவல் களைப் பார்த்து உறங்கிவிட்டோம். காலை பிள்ளைகளை பாடசாலை அனுப்புவதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போது 8 மணிபோல மகன் கதைத்தான். காலை 7;33க்கு மகன் சுகமாக பிறந்துள்ளான்.அனேகமாக நாளைக்குத் தான் விடுவார்கள்.மனதுக்கு பெரியதொரு நிம்மதியாக இருந்தது.
  39. அரங்கம் செய்திகள் தளத்தில் எழுதிக்கொண்டு இருப்பவர்கள் புலி எதிர்ப்புக் காச்சாலால் மீகவும் பீடிக்கப்பட்டு இருக்கின்றனர் போலுள்ளது. புலிகளி பாசிச வாதிகளாக மீண்டும் மீண்டும் நிறுவ முற்படுகின்றவர்களின் கூடாரமாக இந்த தளம் உள்ளது போல. ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகளை கொன்றது மிகவும் தவறான விடயம் என்பதை மறுப்பதற்கில்லை (முப்படைகளின் தளபதியாக இருந்த சனாதிபதிகள் மீதான தாக்குதல் இந்த வகையில் வராது). அதே நேரம், இவ்வாறானவை இடம்பெற்றிராத, புலிகள் களத்தில் நீக்கப்பட்ட இந்த 15 வருடங்களில், தமக்கு (தமிழர்களுக்கு) அரசியல் ரீதியிலான, நியாயமான தீர்வு அவசியமே இல்லை எனும் அளவுக்கு தமிழர்களாலே மனதளவில் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மிழ் தேசிய பிரச்சனை மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்பதை இந்த காச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். தமிழர்களுக்கு சிங்கள அரசு கொடுப்பதாக இருந்த அனைத்து தீர்வுகளும் தமிழர் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குபனவையாகவே இருந்தன. அத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளும், யுத்த நிறுத்தங்களும் சிங்கள அரசு தன்னை பலப்படுத்த எடுத்த கால அவகாசங்களே ஆகும். இதற்கு சமாந்தரமாக புலிகளும் தம்மை பலப்படுத்தவே இவற்றினை பயன்படுத்தி இருந்தனர். எனவே இருதரப்புமே நேர்மையாக இதில் நடந்து கொள்ளாத போது, வெறுமனே தலைவரையும், புலிகளையும் மட்டும் குற்றம் சாட்டி நிற்கின்றது இந்த கட்டுரை. உலகில் புலிகளையும் தலைவரையும் தவிர, சிங்கள அரசின் கபடத்தை முற்றாக புரிந்து வைத்திருந்த ஒரு அமைப்போ தலைமையோ உலகில் இல்லை. இந்திய பார்ப்பனிய அரசு ஒவ்வொரு முறையும் மூக்குடைபடும் இடமும் இதுதான். புலி நீக்க அரசியல் என்பது சரணாகதி அரசியல். ஒற்றை அரசை ஏற்று, போடும் பிச்சையை வரமாக நினைத்து வழிபடும் அரசியல். நீண்ட காலத்தில் தமிழர்கள் தம் அனைத்து அடையாளங்களையும் துறக்க வைக்கும் அரசியல். இதை வலியுறுத்தும் எந்த தரப்பும், எந்த கட்டுரையும் தமிழர்களின் நியாயமான இருப்பையும், அவர்களுக்கான தீர்வையும் நிராகரிக்கும் தரப்பை சார்ந்தவை. பி.கு: நான் சிகப்பு புள்ளியை குத்தியது, கிருபன் இதனை இங்கு இணைத்தமைக்கு அல்ல. மாறாக, கட்டுரை சொல்லும் அரசியலுக்கு எதிராக
  40. கட்டுரையில் அவசியமற்ற புலி வெறுப்பு இருக்கிறது. ஓணாண்டியார் இணைத்த காணொளி பயனுள்ளதாக இருக்கிறது. இலக்கியம் என்றால் சமூகத்தின் சமகால பிரச்சினைகளில் இருந்து வருவது, வரலாறும் அதில் இருக்கும். "ஏன் இலக்கியக் கூட்டமென்று விட்டு சாதியைப் பேசுகிறீர்கள்?" என்று கேட்ட இளையவர் எதை இலக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரோ அறியேன் (லியோ திரைப்படம், ராணி காமிக்ஸ்?😂) பி.கு: ஜேபிசி மெசின் தேர் விளக்கம் அடிக்கடி மாறுகிறது. சேற்றில் புதைந்த தேரை இழுத்தோம் என்பது மாறி இப்போது குடும்பப் பிரச்சினையாகி விட்டது.
  41. என்று கூறி, இந்தக் கட்டுரை சொல்ல வந்ததுக்கு எந்த சம்பந்தமும் இல்லாம. தமது வழக்கமான புலி எதிர்ப்பு / தலைவர் மீதான காழ்ப்புணர்வு அரிப்பை சொறிந்து சுய இன்பம் கண்டார் இதை எழுதிய ராகவன். சம்பந்தப்பட்டவர்கள் ஒருவரும் இன்று இல்லையே என்பதால் அவர் எனக்கு (மட்டும்) சொன்னார், காதில் குசுகுசுத்தார், என்று இப்படி இன்னும் எத்தனையும் எழுதலாம். இந்த வருடாந்திர இலக்கிய கூட்டம் என்பதே புலி எதிர்ப்பு காச்சலாம் நன்கு பீடிக்கப்பட்டு புலிகள் இல்லாமல் போய் 15 ஆண்டுகள் போன பின்னும் கூட, இன்னும் அந்த காச்சலின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை அதிகம் கொண்ட கூட்டத்தால் நிகழ்த்தப்படும் நிகழ்வு.
  42. இப்போ சற்று முன், பழைய வீசா வழங்கும் IT சிஸ்டத்தை மேற்பார்வை செய்த ஒரு மேலதிகாரியிடம் பேசினேன். இது முழுக்க முழுக்க அரச பணத்தை கொள்ளை அடிக்கும் செயல் என்கிறார். தாம், இதுவரை எந்த பெரிய பிரச்சனையும் இல்லாமல் 1 டாலருக்கு வழங்கிய, தொடர்ந்தும் வழங்க முன் வந்த சேவையை, புதிய கம்பெனி 18 டாலருக்கு செய்கிறதாம். நிச்சயமாக இது கொள்ளைதான். இப்போ நான் போனபோது மொத்த வீசா செலவு ஐம்பது டாலர். இனிமேல் வீசா கட்டணம் 75 அத்துடன் மேலதிகமாக VFS க்கு 25. நாட்டிடம்/ பயணிகளிடம் கொள்ளை அடித்து - இந்திய தனியார் கம்பெனிக்கு கொடுக்கிறார்கள். சுளையாக கொமிசன் வரும். புலிகளை தோற்கடித்த பின், இலங்கையில் இந்தியா தனது வகிபாகத்தை இழந்து விட்டது. இலங்கையில் இந்தியா ஒரு செல்லாக்காசு. இப்படி எல்லாம் யாழில் எழுதியவர்கள் இந்தியாவை குறை மதிப்பீடு செய்துவிட்டார்கள் என்கிறீர்களா?
  43. பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும் — ராகவன் — கடந்த மார்ச் 30-31 இல் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பில் நூல்கள் பற்றிய விமர்சனங்கள் அறிமுகங்கள் அத்துடன் பாலஸ்தீனப் பிரச்சனை, இன முரண்பாடு, மலையக மக்கள், பால் நிலை வேறுபாடுகள், LGBTQ, சாதியம் போன்ற பல்வேறு விடய தானங்கள் பேசப்பட்டன. விவாதங்கள் நிகழ்ந்தன. இரண்டாம் நாள் மாலை நிகழ்விற்கு நாலு பேர் புதிதாக வந்திருந்தனர். அவர்கள் நால்வரும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர். ஒருவர் யோகு அருணகிரி. மற்றவர் கார்வண்ணன். மூன்றாமவர் நெய்தல் நாடன். மற்றவர் பெயர் தெரியாது. டெலோன் மாதவன் என்ற இரண்டாம் தலைமுறையை சேர்ந்த பிரான்ஸு நாட்டு அறிஞர் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் புவியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழ் மொழி அவருக்கு தெரிந்திருப்பினும் அவரது மொழியாளுமை பிரஞ்சு மொழியில் தான். அவரது தாய் மொழி பிரஞ்சு மொழி என்றே கூறலாம். புவியியலில் மானிட புவியியல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் நிலப்பரப்புக்குமான உறவுகளை ஆய்வது. அதுவே மாதவனின் துறைசார் தேர்ச்சி. தனக்கு முடிந்தளவில் தமிழில் ஒர் அறிமுகத்தை அவர் செய்தபின் நிர்மலா அவரது ஆய்வை தமிழில் வாசித்தார். அவரது ஆய்வுக்கட்டுரை புலம்பெயர் தமிழ் இனப்பிரதேசங்களின் இயக்கவியல் பற்றியது. கோலாலம்பூர், பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழர்கள் தமது கலாசார பாரம்பரியங்களை நிலைநாட்ட முயற்சிப்பது, அதன் விளைவான புவியியல் மாற்றங்கள் போன்ற விடயங்களை ஆய்வு செய்த கட்டுரை அது. அது தவிர 2002 சமாதான ஒப்பந்த காலத்தில் அவர் இடப்பெயர்வு சம்பந்தமான சமூக, புவியியல் ஆய்வொன்றையும் யாழ் குடா நாட்டில் மேற்கொண்டிருந்தார். சாதிய அடையாளத்தை வைத்து ஒதுக்கும் முறை ஒழிந்து கொண்டு வரும் நிலை இருப்பினும், சாதிய அமைப்பு முறை ஒழிந்ததால் சாதிய யதார்த்தம் அருகிவிட்டதென பொருள் கொள்ள முடியாது. அகமணம், சாதிப்பற்று போன்ற காரணிகள் சாதியத்தை நிலை நிறுத்துகின்றன. அத்துடன் புலம் பெயர்ந்தோரிடமிருந்து வரும் பணம் சாதிய பிரிவினைக்கான உந்து சக்தியாக தொழிற்படுகிறது என்கிறார் அவர். மாதவன், தமிழர்களிடம் உள்ள மதம், சாதி இந்த இரண்டு விடயங்களையும் முன்வைத்து, அவை எவ்வாறு தொழிற்படுகின்றன என்ற தனது கள ஆய்வை மேற்கொண்டார். அதில் அவர் குறிப்பிடுவதானது – அடிமை குடிமை முறை கொண்ட சாதிய அமைப்பு முன்னர் இருந்தது. அத்துடன் சாதிய அமைப்பு ஆழமாக யாழ்ப்பாணத்தில் இருந்தது. ஆனால் தேசிய விடுதலை போராட்டம் காரணமாக நிகழ்ந்த இடப்பெயர்வு, விடுதலைப்புலிகள் சாதிய வேறுபாடுகள் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு குந்தகமானவை என்ற கருத்தியலை கொண்டிருந்தமை, சாதிய வேறுபாடுகளை எதிர்க்கும் சட்டங்களை கொண்டுவந்தமை, விடுதலைப்புலிகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் இணைந்தமை போன்ற விடயங்களால் சாதிய வேறுபாடுகள் அற்ற நிலை ஒன்று தோன்றியது. அத்துடன் தொழில் சார் சாதிய அமைப்பு முறையிலிருந்த மாற்றங்களும் சாதியத்தை ஆட்டம் காண வைத்தன. ஆனால் விடுதலைப்புலிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தி சமாதான சூழல் ஒன்று உருவாகையில் சாதியம் மீண்டும் தலையெடுத்தது என்பதாகும். அதற்கான முக்கிய காரணங்களாக இரண்டு விடயங்களை அவர் பார்க்கிறார். ஒன்று அகமணமுறை. – இளைஞர்கள் நிகழ்ந்த மாற்றங்களினால் சாதிய வேறுபாடுகளை பொருட்படுத்தா நிலை ஏற்பட்ட போதிலும் திருமணம் என்று வரும் போது பெரும்பாலும் பெற்றாரின் சொற்கேட்டு சாதிக்குள் திருமணம் செய்வது. மற்றது யுத்ததால் பெரும்பாலான வெள்ளாளர்கள் புலம்பெயர்ந்து வெளி நாடுகளில் உழைத்த பணத்தை உற்றார் உறவினர்களுக்கு அனுப்பியதால் சமாதான காலத்தில் மீண்டும் தமது இருப்பை உறுதி செய்ய ஆதிக்க சாதியினர் குறித்த பகுதிகளில் காணிகள் வாங்கி வீடுகள் கட்டி வாழ்வதால் ஏற்பட்ட சமூக புவியியல் மாற்றங்கள் பற்றி அவர் ஆய்வு செய்தார். நளவர்களில் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்து சென்றதால் அவர்களது சமூக பொருளாதார முன்னேற்றத்தையும் அவர் குறிப்பிடுகிறார். பள்ளர், பறையர் போன்றவர்களின் பொருளாதார நிலை காரணமாக அவர்களின் சமூகங்களிலிருந்து புலம் பெயர்ந்தோர் பெரிதும் இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார். தேசிய விடுதலைப்போராட்டத்தால் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் சாதியத்தின் நீடிப்பு தொடர்கிறதென்றும் குறிப்பிட்டார். முடிவில், யுத்தத்திற்கு முன்னரான சாதிய அமைப்பு யுத்தத்திற்கு பின்னராக மாறி வருகிறது. காதல் திருமணங்கள் மற்றும் சாதி சார் தொழில்கள் மாறிவருதல் போன்றவற்றால் சாதி ரீதியான புவியியல் சார்ந்த சாதிய ஒதுக்கல்கள் படிப்படியாக மறைந்து வருகின்றதென அந்த ஆய்வுக்கட்டுரையை முடிக்கிறார். அவரது ஆய்வை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. முக்கியமாக சாதி சார்ந்த தொழில்கள் அருகுவதால் சாதியம் விரைவில் ஒழிந்துவிடும் என்ற கருதுகோளை அவர் முன்வைப்பதில் சில பிரச்சனைகள் உண்டென்பதே எனது பார்வை. இது சமூக அறிவியல் ரீதியாக விவாதிக்கப்படவேண்டிய விடயம். ஆனால் ஒரு துறை சார் ஆய்வை ஒருவர் மேற்கொள்ளும் போது, அவரது உழைப்பை மதிப்பது அவசியம். அத்துடன் அவரது ஆய்வை உள்வாங்கி அதற்கான விமர்சனங்களை முன்வைப்பதே அறிவார்ந்த செயல். அவரது ஆய்வு பற்றிய எவ்வித அறிவார்ந்த பார்வையும் இன்றி, எவ்வித வாசிப்பும் இன்றி வந்தவர்களில் ஒருவரான நெய்தல் நாடன் அவரைப்பார்த்து சாதி அடிமை முறை இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள்; அதற்கான ஆதாரம் என்ன என்று கேட்டார். மாதவன் அடிமைமுறை சமகாலத்தில் இருப்பதாக சொல்லவில்லை. அத்துடன் மாதவனுக்கு தமிழ் புரிவது கடினம். எனினும் அவர் யாழ்ப்பாணம் பற்றிய மற்றவர்களின் ஆய்விலிருந்து தான் எடுத்தேன் என்றார். கார்வண்ணா எழுந்து தேசியம் பற்றி எழுதாமல் சாதியம் பற்றி எழுதியது தேசியத்தை வீழ்த்தும் சதி என்றவகையில் கூக்குரல் இட்டார். தேசியம் சமாதானத்துக்கு போன காலகட்டத்தில் சாதியம் மீண்டும் தலைதூக்கும் காரணிகளையே மாதவன் கண்டறிந்தார். அவரது ஆய்வானது சமூக புவியியல் மாற்றம் பற்றியது. எனவே தேசியம் பற்றி ஆய்வு செய்யவில்லை என கூக்குரல் இடுவது தற்குறித்தனமே. அதிருக்க அவர்கள் நான்கு பேரும் அவை நாகரீகத்துக்கு எவ்வித மதிப்பும் கொடுக்காமல் மற்றவர்களின் ஜனநாயக உரிமை பற்றி கரிசனை ஏதுமற்று தொடர்ந்து இடைமறிப்பு செய்து அவர்களது அறியாமையை வெளிப்படுத்தினர். அதனை பெரும் வீரமாகவும் நினைத்து புளங்காகிதம் அடைந்தனர். உண்மையில் மாதவன் விடுதலைப்புலிகளின் சாதி ஒழிப்பு சட்டங்களால் பாரியமாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன என்றே ஆய்வில் கண்டறிந்தார். ஒருவகையில் விடுதலைப்புலிகளின் சாதிய ஒழிப்பு நடவடிக்கைகளை விதந்துரைத்தார். இது பற்றி எவ்வித வாசிப்போ அறிவோ அற்று,ஒரு இரண்டாம் தலைமுறை புகலிட அறிவாளியை அவமானப்படுத்துவதாக நினைத்து அவர்கள் தம்மையே அவமானப்படுத்திக்கொண்டனர். சமாதான காலத்தில் சாதியம் மீளுருவாக்கம் அடைவதன் காரணிகளைத்தான் அவர் ஆய்ந்தார். இதனைக்கூட விளங்கமுடியா தற்குறிகளாகத்தான் இவர்களது நடவடிக்கை இருந்தது. அதன் பின்னர் சாதியம் பற்றிய கள நிலை உரை ஒன்றை தேவதாசன் ஆற்றினார். ஜேசிபி இயந்திரம் மூலமான தேர் இழுப்பிலிருந்து நல்லிணக்கபுர மதில் வரை விடயங்கள் பேசப்பட்டன. உரை முடிந்தவுடன் ஜேசிபியால் தேர் இழுத்ததற்கான காரணம் குடும்ப சச்சரவு என்று கார்வண்ணா கதை அளந்தார். இலக்கிய சந்திப்பில் இலக்கியத்தை பேசுவதை விடுத்து சாதி பற்றி எதற்கு பேச்சு என்று தனது அறியாமையை வெளிப்படுத்தினார். நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் இவர்கள் குறுக்கே குரல் எழுப்புவதை நிறுத்துமாறும் கைகளை உயர்த்தினால் ஒழுங்கு முறையில் அவர்களின் கேள்விக்கான நேரம் கொடுக்கப்படும் எனவும் பல முறை கூறிய போதும் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. தொடர்ந்து கூச்சல் இட்டு தமது அறியாமையை நன்கு வெளிப்படுத்தினர். ஒன்று மட்டும் தெரிகிறது. வந்தவர்கள் நால்வரும் எந்த இயக்கப்பக்கமும் தலை வைத்தும் படுக்காமல் வெளி நாட்டில் இருந்து கொண்டு வீரம் பேசும் முக நூல் போராளிகள். விடுதலைப்புலிகளின் மோசமான அரசியலை மாற்றுக்கருத்தாளர்கள் கடுமையாக விமர்சித்தபோதும் விடுதலைப்புலிகளிற்கும் மற்றைய இயக்கங்களுக்கும் தமிழ் தேசிய கருத்தியலை வரித்துச் சென்றவர்களில் பெரும்பாலும் ஒரு பண்பு இருக்கும். அவர்கள் சேர்ந்து வாழப்பழகியவர்கள். அத்துடன் ஒரு கட்டுப்பாட்டை பேணியவர்கள். இவ்வாறு கூச்சலிட்டு குழப்பும் பண்பு அவர்களிடம் பெரும்பாலும் காணப்படுவதில்லை. என்னிடம் பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் தமது அரசியல் தஞ்ச கோரிக்கைக்காக வந்திருக்கின்றனர். மிகவும் பண்பாக நடப்பர். அதேபோல் தான் மற்றைய இயக்கங்களிலிருந்து வந்த பலரும். இந்த சந்திப்புக்கு விடுதலைப்புலிகளில் அங்கத்தவராக இருந்து விடுதலைப்புலிகளை இப்போதும் விட்டுக்கொடா நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அவர் நிகழ்ச்சி முடியும் வரை கண்ணியமாக இருந்தார். தனக்கு தரப்படும் நேரத்தில் அவர் கேள்விகளையும் கேட்டார். இந்தப்பண்பு தேசியம் என்று கூக்குரலிட்டவர்களிடம் இருக்கவில்லை. பிரபாகரன் மிக மோசமான சர்வாதிகார அமைப்பாக புலிகளை உருவாக்கி அதற்கு தலைமை தாங்கி அதனை ஒரு அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றிருப்பினும் அவர் சாதிய சமூக அமைப்பு தவறானதென்ற பார்வையை கொண்டிருந்தார். சாதி ஒழிப்பிற்கான சமூக நீதி அரசியலை விடுதலைப்புலிகள் எடுக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, விடுதலைப்புலிகள் அமைப்பு சாதியத்துக்கெதிரான சட்டங்களை கடைப்பிடித்தது. விடுதலைப்புலிகளின் காலத்தில் சாதியம் இல்லாவிட்டால் அவ்வாறான சட்டங்களின் தேவை ஏற்பட்டு இருக்காதென்பதை ஒரு சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளும். அத்துடன் பிரபாகரன் ‘வெள்ளாள சோசலிசம்’ என்று ஆதிக்க சாதிகள் சோசலிசம் பேசுவதை நகையாடினார். அவருக்கு சாதியம் சம்பந்தமான ஆழமான தேடல் இல்லை எனினும் சாதிய வேறுபாடு வெள்ளாள ஆதிக்கம் என்பது பற்றிய புரிதல் இருந்தது. வெள்ளாளர்கள் எவ்வாறு தொழில்வாய்ப்பு விடயங்களில் கரையாரை ஒதுக்கினார்கள் என தனது மாமா தனக்கு சொன்னதாக என்னிடம் கூறி இருக்கிறார். அத்துடன் வெள்ளாளரை வேரறுக்க பிறந்த பரசுராமன் நானே என்றும் ஒருமுறை எனக்கு சொன்னார். அதே போல் புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவையிடம் நண்பர் ஒருவர் சாதியம் பற்றி கேட்க அவர் சொன்னாராம் : சாதி வசை செய்வோருக்கு குண்டியில் அடிச்சு பிரயோசனமில்லை ; அது மண்டையில் இருக்கு என்று. யோகுவும் கார்வண்ணனும் புலியில் அங்கத்தவர்களாக இருந்து கொண்டு சாதி இப்போது இல்லை ; ஜேசிபி இயந்திரத்தை வைத்து ஆதிக்க சாதியினர் தேர் இழுத்தது வடம் பிடித்தால் தீட்டு என்பதற்காக இல்லை என கூறி இருப்பார்களாயின் அவர்களுக்கு ஆறு மாசம் சமையல் செய்ய பனிஸ்மண்ட் கிடைத்திருக்கும். அதன் பின்னும் தொடர்ந்தால் சீட்டு கிழிக்கப்பட்டிருக்கும். இலக்கிய சந்திப்புக்குழு இவர்களை வெளியேற்றாமல் தொடர்ந்து கத்தவைத்தது ஒரு நல்ல விடயம். இவர்களது உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர்களின் முக நூல் பக்கம் சென்று பார்த்தால் இவர்களது அவதூறுகள், பெண்வெறுப்பு என்பவை வெள்ளிடை மலை. இலக்கிய சந்திப்பு காணொளியில் இவர்களது தற்குறித்தனத்தை காணலாம். https://arangamnews.com/?p=10597

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.