Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46783
    Posts
  2. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    16477
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/14/24 in all areas

  1. ஆபிரகாம் லிங்கன், கென்னடி வரிசையில் இப்போது ட்ரம்ப் ........! சிறந்த பழங்களைத்தான் வண்டு துளைக்கும், திறமையான ஜனாதிபதிகளை குண்டு துளைப்பது அமெரிக்காவில் ஒன்றும் புதிதல்ல.......அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களுக்கும் ட்ரம்தான் சிறந்த தலைவர் என்பதை சம்பவம் உணர்த்துகின்றது.........!
  2. மூன்றாவ‌து எந்த‌ நாடு என்ர‌ போட்டி இந்த‌ ஜ‌ரோப்பா போட்டியில் ந‌ட‌த்த‌ வில்லை உல‌க‌ கோப்பை போட்டியில் ந‌ட‌த்துற‌வை...................... ஸ்பேனிய‌ன் அணி வீர‌ர்க‌ள் நீங்க‌ள் சொல்வ‌து போல் விளையாட்டும் வெற்றியும் ச‌ந்தோஷ‌மும் இதை தான் பார்க்க‌ முடியும்....................... ப‌ல‌ருக்கு பிடிச்ச‌ நாடு இஸ்பேனிய‌ன்🙏🥰.........................
  3. இது வெறுப்பல்ல.... விளையாட்டு திறமையுடன்..... ஒரு இளைஞர் அணி..ஸ்பெயின் அணி உங்களைப்போன்ற பால்குடிகள் விளையாடிய விளையாட்டு.....அத்துடன் அவர்கள் எக்கணத்திலும் தலைக்கனத்துடன் விளையாட இல்லை. இங்கிலாந்து அணியின் சிலர் கோல் அடித்தவுடன் உச்சரித்த சொற்கள் முகம் சுழிக்க வைத்தவை..
  4. ஆயுதபலத்தோடு தமது நிலத்தைக் காத்துத் சுயமாக வாழத் தமிழர்கள் நகர்ந்தபோது தேடிவந்து கூடித் தமிழ்க்குடியை அழித்த கூட்டுகள். கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழினத்தின் குருதியிலே தமது நலன்களை அடையக் கீழ்த்தனமாக ஓடித்திரிகின்றன.தமது நரித்தந்திர செயற்பாட்டிற்கு புதிய புதிய பெயர்களைச் சூட்டியவாறு அலைகிறார்கள். ஆனால், தமிழின அழிப்பையோ, ஆக்கிரமிப்பையோ இன்றுவரை நிறுத்தமுடியவில்லை.இந்தக் கேவலமான இன அழிப்பு ஆக்கிரமிப்பு அரசியலுக்கு உலக ஒழுங்கு அது இது என்று ஊளையிட்டுச் சுரண்டிவாழ்தல் அல்லது கொள்ளையடித்து வாழ்தலே கொள்கையாகக்கொண்டு, அதற்குத் தடையாக இருக்கும் இனங்களையும் அரசுகளையும் பயங்கரவாதிகள், பயங்கரவாத அரசுகள் என்று பெயர்சூட்டி அழித்தவர்களிடம் மற்றும் அழிப்பவர்களிடம் உதவியை எதிர்பார்க்க முடியுமா? உலக இனங்களை சுயநிர்ணய உரிமையோடு வாழவிட்டாலே மனித அழிவைக் குறைத்துவிடலாம். ஆனால் ஏகபோகத்துக்காக அலையும் உலகு அதனை அனுமதிக்காது என்பதை முள்ளிவாய்காலில் இருந்து காஸா மற்றும் உக்ரேன் வரை உணர்த்திநிற்கிறது. தமிழினம் தமது பொருளாதார மனிதவள மேப்பாட்டை அடைவதன் மூலமே தனது இருப்பைத் தக்கவைக்க முடியும் என்பதையே கடந்தகாலங்கள் உணர்த்திநிற்பதைத் தமிழினம் உணர்ந்தும் உணராதிருப்பது மாறும்வரை மாற்றங்கள் நிகழாது. மடைமாற்றுவோரும் ஓயார்.
  5. இருண்ட தருணங்களிலிருந்து மீண்ட ரம்ப் அவர்கள் நலமடைய வேண்டுகின்றேன்.
  6. இலங்கையில் ஆரம்ப காலங்களில் தமிழர் உரிமைகள்,இனப்பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை அது இது ஆரம்பித்த காலங்கள் என பலருக்கும் ஞாபகம் இருக்கும். எல்லாம் தோல்வியடைந்த நிலையில் தந்தை செல்வாவினால் தனித்தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கு தீர்வு எனும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எந்தவொரு ஆயுத வாசனைகளும் இருக்கவில்லை. இருந்தாலும் ஒருவித உந்துதலின் காரணமாக இளைஞர் அணிகள் ஆயுதம் தூக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எல்லோரின் நோக்கமும் தனித்தமிழ் தனிநாடாகவே இருந்தது. அதில் ஒரு சில அமைப்புகள் தனி நாடு சரிவராது என ஒதுங்கியது மட்டுமல்லாமல் சிங்கள இனவாத கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தனர். அது அவர்கள் தனிப்பட்ட விடயம். இருந்தாலும் இலங்கை தமிழ் மக்களுக்கு தனித்தமிழீழம் சாத்தியம் என சாதித்து காட்டியவர்கள் விடுதலைப்புலிகள்.தமக்கென சகல துறைகளையும் உருவாக்கி தனி அரசு போல் நடத்தி காட்டியவர்கள் விடுதலைப்புலிகள். துரோகத்தால் மட்டும் வீழ்ந்தவர்கள் விடுதலைப்புலிகள். தவறுகளால் அல்ல.
  7. பையன் சொல்வது போல் 3 ம் இடத்துக்கான போட்டி நடாத்தப்படுவதில்லை ( யூரோ கோப்பையில்)
  8. Bro ர‌ம்புக்கு கீழ‌ தான் இவை எல்லாரும் Donald Trump Joe Biden Kamala Harris Gavin NweSonm Michelle Obama Gretchen Whitmer Hillary Clinton ர‌ம்புக்கு தான் அதிக‌ ஆத‌ர‌வு என்று என‌க்கு தெரிந்த‌ த‌ள‌த்தில் பார்த்தேன்................2020 பைட‌ன் தான் ஆட்சிய‌ பிடிப்பார்க‌ள் என்று சொன்னார்க‌ள் அதே போல் பைட‌ன் ஆட்சிய‌ பிடித்தார் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் யார் உட்காருவது என்று முடிவெடுப்ப‌து இரண்டே இரண்டு மாநிலங்கள் தான் ஒன்று California இர‌ண்டாவ‌து Texas.............அமெரிக்க ம‌க்க‌ள் தொகை 38கோடி அதில் Californiaவில் ம‌ட்டும் 8கோடி ம‌க்க‌ள் . Texasசில் 7கோடி ம‌க்க‌ள் இந்த‌ இர‌ண்டு மானில‌த்தில் ம‌ட்டும் 15 கோடி ம‌க்க‌ள் மீத‌ம் உள்ள‌ மானில‌ங்க‌ளில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் 11மாத‌ தேர்த‌ல் முடிவு சொல்லும் யார் அமெரிக்கா ஜ‌னாதிப‌தி என்று ர‌ம் வெல்வ‌து உறுதி👍😁.........................
  9. இந்த தோழர் பாலன் உயிரோடு இருந்தும் தமிழீழம் கிடைக்கவில்லை. எனவே இவரும் இருந்தும் தமிழருக்கு எந்த பிரயோசனமும் இல்லை. இவர் செத்தாலும் தமிழருக்கு இழப்பு இல்லை. 😂😂
  10. பையன்.... தூரத்தில் இருந்து, துப்பாக்கியால் சுட்டு எல்லாம் ட்ராமா செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படி ட்ராமா செய்திருந்தாலும்... இப்போதைக்கு, ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும். அப்படி எவரும் நீங்கள் நினைத்தமாதிரி எழுதியாக தெரியவில்ல. உண்மைச் சம்பவம் போலதான் தெரிகின்றது. ட்ரம்ப்... மயிரிழையில் உயிர் தப்பியதாகவே நான் கருதுகின்றேன். ஒருவனுக்கு ஆயுள் நல்ல பலமாக இருந்தால், எந்த உயிர் ஆபத்தில் இருந்தும் தப்பி விடுவார்கள்.
  11. எது எப்படியோ..... ஈழ அரசியலின் முக்கிய அரசியல்வாதி சம்பந்தனின் மரண சடங்கின் நிகழ்வுகள் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு நல்ல படிப்பினையாக அமையும். இன்றைய காலகட்டத்தில் வாயில்லா பூச்சிகளான தமிழினம் தாம் கொண்ட கொள்கையில் மாறவில்லை என்பதை சம்பந்தனின் மரண நிகழ்விற்கு வந்த மக்கள் தொகை உணர்த்தி நிற்கின்றது. சாது மிரண்டால் காடு கொள்ளாது.
  12. ஆஹா இது நள்ளிரவு ........! 😍
  13. இந்தியா vs ஜிம்பாப்வே: வெற்றிக்கு வித்திட்ட இளம் இந்திய அணியின் 'புதிய பாணி' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இளம் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் ஓய்வுக்குப் பிறகு, பும்ரா, சிராஜ், சஹல், குல்தீப், ஹர்திக், ரிஷப் பந்த், ஆகிய அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் இளம் இந்திய அணி முதல் தோல்விக்குப் பிறகு வென்ற டி20 தொடர் இது. அடுத்த தலைமுறை மாற்றத்துக்கு இந்திய அணியை மாற்றும் விதத்தில் இந்தத் தொடருக்கு வீரர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டனர். இதில் பெரும்பாலான வீரர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏராளமான வீரர்கள் குறிப்பாக தொடக்க ஆட்டத்துக்கு மட்டும் ஜெய்ஸ்வால், கெய்க்வாட், கில், அபிஷேக் என 4 வீரர்கள் இருப்பதால் இதில் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சுழற்பந்துவீச்சில் ரிங்கு சிங், வாஷிங்டன், குல்தீப், சஹல், வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், தேஷ்பாண்டே, கலீல் அகமது, முகேஷ் குமார் என ஏராளமான வீரர்கள் இருப்பதால் அடுத்தடுத்து வரும் தொடர்களில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது புதிய பயிற்சியாளர் கம்பீருக்கு சவாலான பணியாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹராரேவில் நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது. 153 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 28 பந்துகள் மீதமிருக்கையில் 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. ஜிம்பாப்வே பேட்டர்கள் கடினமாகச் சேர்த்த இந்த 152 ரன்கள்கூட இந்திய பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருக்கவில்லை. ஜிம்பாப்வே அணி வீரர்கள் மொத்தமாகவே 10 பவுண்டரிகள்தான் அடித்திருந்தனர். ஆனால் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மட்டுமே 13 பவுண்டரிகள், கேப்டன் கில் 6 பவுண்டரிகள் என 19 பவுண்டரிகளை விளாசியிருந்தனர். சேஸிங் மட்டும் குறி வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், “சேஸிங்கை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று மட்டும் ஆலோசித்தோம். முதல் போட்டியைப் போல் அல்லாமல் சிறப்பாக முடித்திருக்கிறோம். சிறந்த வீரர்களைக் கொண்ட ஆகச் சிறந்த அணியாக இது இருக்கிறது. அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று முன்னோக்கி நகர்வோம். வீரர்களை மாற்றுவது குறித்து இதுவரை ஆலோசிக்கவில்லை, டாஸ் போட்ட பிறகு வீரர்கள் மாற்றம் குறித்து தெரிவிப்பேன்,” எனத் தெரிவித்தார். ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிரடியாக பேட் செய்த ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்களுடனும்(13 பவுண்டரி, 3 சிக்ஸர்), கேப்டன் கில் 39 பந்துகளில் 58 ரன்களுடனும் (6 பவுண்டரி, 3 சிக்ஸர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை ஜெய்ஸ்வால் வென்றார். தொடக்கம் முதலே ஜெய்ஸ்வால், கில் ஜிம்பாப்வே பந்துவீச்சை வெளுத்தனர். ரிச்சர்ட் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகளை விளாசினார். சதாரா வீசிய முதல் ஓவரிலும் 4 பவுண்டரிகளை ஜெய்ஸ்வால் வெளுத்தார். நான்கு ஓவர்களுக்குள் இருவரும் பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். இந்திய அணி 3.5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியதில், ஜெய்ஸ்வாலின் ஸ்கோர் மட்டும் 39 ரன்களாக இருந்தது. பவர்ப்ளே ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்து ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்டை உயர்த்தியது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் அரை சதம் அடித்தார். 10 ஓவர்களுக்குள் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. இருவரையும் பிரிக்க கேப்டன் சிக்கந்தர் ராசா பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பந்துவீசச் செய்தும் எந்தப் பலனும் இல்லை. கில், ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து ஜிம்பாப்வே பந்துவீச்சை துவம்சம் செய்தனர். கில் 35 பந்துகளில் அரை சதம் அடித்தார். 14.5 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்களை எட்டியது. 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற்றது. இளம் இந்திய அணியின் புதிய பாணி ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 13 பவுண்டரிகளை விளாசியுள்ளார். ஜெய்ஸ்வால் தான் எதிர்கொண்ட 53 பந்துகளில் 2 பந்துகளை மட்டுமே தற்காப்பு ஆட்டத்தில் விளையாடியுள்ளார். மற்ற பந்துகளில் எல்லாம் ரன்களை சேர்த்து, பெரிய ஷாட்களையும் அடித்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன் இருந்த இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் முதலில் தங்கள் விக்கெட்டை பாதுகாத்துக் கொண்டு, நிலைப்படுத்தி அதன் பிறகுதான் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுப்பார்கள். ஆனால், ஜெய்ஸ்வால் தொடக்கமே அதிரடியாக இருக்கிறது, புதிய இளம் இந்திய அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெறாத நிலையில் அபிஷேக் 2வது டி20 போட்டியில் 46 பந்துகளில் சதம் அடித்து இளம் இந்திய அணி ஆக்ரோஷமானது என்பதை வெளிப்படுத்தினார். ஜெய்ஸ்வால் 3வது மற்றும் 4வது டி20 போட்டிகளில் பங்கேற்று ஆடியதும், அவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய பாணியைக் கையில் எடுத்துள்ளார். ரோஹித் சர்மாவுக்கு அடுத்தார்போல் பவர்ப்ளே ஓவர்களுக்குள் 50 ரன்களுக்கு மேல் குவித்த முதல் பேட்டர் ஜெய்ஸ்வால்தான்.கடந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்தது. இதில் ஜெய்ஸ்வால் பவர்ப்ளே ஓவர்களுக்குள் 25 பந்துகளில் 53 ரன்களை சேர்த்திருந்தார். டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருருந்தாலும், ஜெய்ஸ்வாலுக்கு கடைசி வரை வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு ஜெய்ஸ்வால் விளையாடாத நிலையில் அவரின் ஃபார்ம் குறித்த கேள்விகள் எழுந்தன. ஆனால், அனைத்தும் கடந்த 2 போட்டிகளில் ஜெய்ஸ்வால் பதிலடி கொடுத்துள்ளார். தவறைத் திருத்திய ஜிம்பாப்வே ஜிம்பாப்வே பேட்டர்கள் இந்திய அணிக்குப் பெரிய இலக்கை நிர்ணயித்துவிட வேண்டும் என்ற நோக்கில் ரன் சேர்க்கப் போராடினர். ஆனால், கடந்த 3 டி20 போட்டிகளிலும் பவர்ப்ளே ஓவர்களுக்குள் குறைந்தபட்சம் 2 விக்கெட்டுகளை ஜிம்பாப்வே இழந்து வந்தது. ஆனால், இந்த முறை அந்தத் தவறை ஜிம்பாப்பே பேட்டர்கள் செய்யவில்லை. மாறாக பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் சேர்த்தனர். மருமனி, வெஸ்லே இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்து 8.4 ஓவர்களில் 63 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். மூன்றாவது ஓவரிலேயே மருமனி ஆட்டமிழந்திருக்க வேண்டியது. ஆனால் ஷிவம் துபே கேட்சை கோட்டைவிட்டாதால், 32 ரன்கள் சேர்க்க முடிந்தது. இருவரின் விக்கெட்டுகளையும் எடுக்க முடியாமல் இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர் என்றுதான் கூற வேண்டும். பிரதான பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் இதையடுத்து, பகுதிநேரப் பந்துவீச்சாளர்களான ஷிவம் துபே, அபிஷேக் ஷர்மாவை பந்துவீச கேப்டன் கில் அழைத்தார். அதற்கு பலன் கிடைத்து, மருமனி 32 ரன்களில் அபிஷேக் பந்துவீச்சிலும், மாதவரே 25 ரன்களில் துபே பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை ஜிம்பாப்பே இழந்தது. 33 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை விரைவாக ஜிம்பாப்வே அணி இழந்தது. சிக்கந்தர் விளாசல் பட மூலாதாரம்,GETTY IMAGES அணியை மீட்க வேண்டிய நிலையில் கேப்டன் சிக்கந்தர் ராசா களமிறங்கி, கேமியோ ஆடினார். 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 28 பந்துளில் 46 ரன்களை சிக்கந்தர் ராசா சேர்த்தார். கலீல் அகமது வீசிய கடைசி ஓவரில் மேயர்ஸ் 12 ரன்களில் கலீலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மதன்டே 4 ரன்களில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். ஜிம்பாப்வே தொடக்க ஆட்டக்காரர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நடுவரிசை பேட்டர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர். கேப்டன் சிக்கந்தர் ராசாவுக்கு ஈடு கொடுத்து பேட் செய்யவும் பேட்டர்கள் ஒத்துழைக்கவில்லை. ஒருவேளை சிக்கந்தருக்கு இணையாக ஒரு பேட்டர் விளையாடியிருந்தால் கூடுதலாக 20 ரன்களை சேர்த்திருக்கும். சவாலாக வருவோம் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா கூறுகையில், “நாங்கள் 160 ரன்களை எதிர்பார்த்தோம். ஆனால் இந்த விக்கெட்டில் 180 ரன்கள் சேர்த்தாலும் போதாது என்ற அளவில் விக்கெட் மெதுவாக இருந்தது. நாங்கள் இந்த ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்தோம் என்பது கௌரவமாக இருக்கிறது. விரைவில் நாங்கள் அனைத்து அணிகளுக்கும் சவாலாக வருவோம். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 55 ரன்கள் சேர்த்தோம். இந்த டி20 தொடரை இந்திய அணி வென்றாலும் கடைசி ஆட்டத்தில் வென்று 2-3 என்ற கணக்கில் வெல்ல முயல்வோம்” எனத் தெரிவித்தார். இந்திய அணியின் பந்துவீச்சு மோசம் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பந்துவீச்சு இந்த ஆட்டத்தில் சிறப்புக்குரியதாக இல்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக தேஷ்பாண்டே தனது முதல் 2 ஓவர்களில் 21 ரன்களை வாரி வழங்கி 3 ஓவர்களில் 30 ரன்களை கொடுத்தார். கலீல் அகமது 4 ஓவர்களை வீசி ஓவருக்கு 8 என்ற ரன்ரேட் வீதம் வழங்கினார். சுழற்பந்துவீச்சில் பிஸ்னோய் ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசினாலும், வாஷிங்டனும் ஓவருக்கு 8 ரன்களை வாரி வழங்கினார். 6 பந்துவீச்சாளர்கள் நேற்று பந்துவீசியும் ஒரு பந்துவீச்சாளர்கூட ஓவருக்கு 5 ரன்களுக்குள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cw0y89100zpo
  14. கிட்டத்தட்ட டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக வருவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. பைடினோ அல்லது டிரம்போ, எவர் வந்தாலும் எமது வாழ்வு மாறப்போவதில்லை. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியாக ஜோர்ஜ் புஷ் வந்தபோதுதான் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்கிற பெயரில் விடுதலைக்காகப் போராடிய இனங்களின் போராட்டங்கள் நசுக்கப்பட்டன. அடக்குமுறையாளர்களுக்கு பணமும், ஆயுத‌ங்களும், பயிற்சியும் புஷ்ஷினால் வழங்கப்பட்டது. ஜனநாயகக் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் 2009 முள்ளிவாய்க்கால் அரங்கேறியது, தடுத்திருக்க பலமும் அதிகாரமும் இருந்தபோதிலும் ஒபாமா அதனைச் செய்யவில்லை. எமது அவலங்களுடன், இழப்புக்களுடன் தமது நலன்களுக்கான வியாபாரத்தை ஜனநாயகக் கட்சி நடத்தி வருகிறது.
  15. இவ்வளவு கொடுமை துரோகம் தமிழருக்கு செய்த அவரின் அடிவருடிகள் ஏன் அஞ்சலி புன்சலி செலுத்தவில்லை என்று கேட்ட கேள்வி இருக்கே அதுதான் என்னால் சகிக்க முடியலை .
  16. இங்குள்ள கருத்துகளை நான் படிக்கவில்லை படிக்கவும் தேவையில்லை என்று நினைக்கிறன் லண்டன் வந்தது முதல் மரக்கறி தான் ஆனால் நாளை நடக்கும் வோசிங்கம் மாதா கோயிலுக்கும் செல்வேன் அதே நேரம் நாளை நடக்கும் நாகபூசணி அம்மன் தேருக்கு பின்னான நிகழ்வுக்கும் செல்வேன் . ஆனால் இதே கருத்தை மற்றைய மதத்துவர் சொல்ல முடியமா ? முடியாது அதுதான் இந்து மதம் .
  17. எண்டாலும் சாமியாரின் பரந்த குணம் யாருக்கும் வராது! ம். சாமியாரின் உறவுகளுக்கு மட்டும் உங்களைத் தெரிந்திருந்ததாக்கும்? தனியாக போய் விருந்துண்டால் ஒட்டுமா உடம்பில?
  18. ஈழப்பிரியன் அண்ணை, சுட்டவரின் தகவல் ஏற்கனவே கிடக்குது போலை. 😂 இப்படியான பயங்கரவாதிகள் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்படவேண்டும். டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வரக்கூடாது என நினைத்து இந்த பயங்கரவாதி சுட்டிருக்கின்றான். டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் மக்கள் வாக்குகளால் தோற்கடிக்கப்படவேண்டுமே தவிர, பயங்கரவாதத்தின் துப்பாக்கியால் தோற்கடிக்கப்படக்கூடாது.
  19. தமிழ்நாட்டில் பாஜகவால் மிகக் குறுகிய காலத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கட்சியாக பாமக வந்துள்ளது. ஒரு மத்திய அமைச்சர் பதவியை மனதில் வைத்து இந்தக் கணக்கை மருத்துவர் ஐயா போட்டிருப்பார் போல........ ஒரு கவர்னர் பதவி கொடுப்பார்கள். அந்த வகையில் பாஜகவினர் நண்பர்களைக் கைவிடுவதில்லை. ஆனால் சாதி சனங்களிற்கு என்று ஒரு கட்சியை தொடங்கி விட்டு, கடைசிக் காலத்தில் வேறு ஏதோ ஒரு மாநிலத்தில் போய் உட்கார்ந்திருக்க முடியுமா........ இந்தக் கூட்டணி பஸ்ஸில் இருந்து இறங்கி அடுத்த கூட்டணி பஸ்ஸில் ஏற வேண்டியது தான்.......
  20. வலது பக்க காது பக்கமாக தான் ரத்தம் வருகிறது..செய்தியில் கண் அருகில் என்கிறார். The Secret Service said in a statement that "the former President is safe." Former U.S. president Donald Trump is surrounded by U.S. Secret Service agents at a campaign rally after gunshots were fired, in Butler, Pa., on Saturday. (Evan Vucci/The Associated Press
  21. இல்லை. சுட்டவரும் இன்னுமொருவரும் இறந்துள்ளனர். இன்னுமொருவர் உயிருக்காக போராடிய வண்ணம் உள்ளார் என செய்திகள் கூறுகின்றன.
  22. தமிழ் மக்களின் பொருளாதார ரீதியான பின்னடைவிற்கு காரணம் இந்திய சமூக பிற்போக்குதனங்களை அப்படியே தமது சுயநலனுக்க்காக சிலர் ப்யன்படுத்துகிறார்கள், இந்தியா எப்போதும் சீனாவை போல பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய முடியாது, இரு நாடுகளும் ஒரே பொருளாதார வளர்ச்சி விகிதத்தினை 80 களில் ஜொண்டிருந்தன இந்தியாவும் சீனாவும் ஒரே மாதிரியான இடது சாரி பொருளாதார கொள்கைகளை 80 களில் பின்பற்றியிருந்தன இதற்கு ஒரு காரணமாக இந்த சாதிய அடக்குமுறைகள் காரணம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மிக வறுமையான மானிலமான பீகாரில் பல வேலையற்ற பட்டதாரிகள் காணப்படுகின்ற நிலையில் பல வேலைக்குரிய நியமனங்கள் வழங்காமல் இருப்பதற்கு குறிப்பிட்ட சாதிய அமைப்பு காரண்மாக கூறப்படுகிறது. இது பொதுத்துறையில் அதிகளவில் காணப்படுவதால் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றது (இது இந்திய பொருளாதார வள்ளுனர்களின் கருத்து). எமது பகுதிகளில் திட்டமிட்டு ஒரு பகுதி மக்களை தொடர்ச்சியாக வறுமைக்கோட்டிற்கீழ் வைத்திருந்து அவர்களை அடிமையாக நடத்துவதற்கு காலனித்துவ காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை தமக்கு சாதகமாக்கி தொடர்ச்சியாக 200 வருடங்கள் மக்களை அடிமையாக்கியுள்ளார்கள் அதற்கு சமயங்களை தமது சுய இலாபத்திற்காக பயன்படுத்தியுள்ளார்கள். சமயத்தினை பயன்படுத்தும் போது மக்கள் கேள்வி கேட்பதில்லை என்பதால் மிக தந்திரமாக இதை கையாண்டுள்ளார்கள், அப்படியான சமூக விரோதிகளை சமய தொண்டர்களாக விம்பப்படுத்துவதிலும் வெற்றி பெற்றுள்ளார்கள், ஆனால் அதிர்ச்சியான விடயம் என்னவென்றால் இப்படியான சமூக விரோதிகளை தற்காலத்திலும் கொண்டாடுகின்ற நிலைதான், அதனை விட மோசம் தாம் அடக்கப்படுவதற்கு மதம் ஒரு காரணமாக பயன்படுத்தப்படுகின்றது என தெரிந்தும் அந்த மதத்தினை பாதிக்கப்படுகின்ற மக்கள் தொடர்ச்சியாக பின்பற்றுவதனால் அவர்கள் மீதான பிடியினை இந்த சாதி வெறியர்கள் விடப்போவதில்லை என்ற புரிதல் இல்லாமை. இந்த இறுக்கமான சாதிய கட்டமைப்பு இருக்கும் வரை எந்த விதமான பொருளாதார முன் முயற்சிகளும் பெரிதளவில் எமது சமூகத்தில் பொருளாதார சமூக முன்னேற்றத்தினை ஏற்படுத்தாது, எமது சமூகத்தில் மாற்றம் ஏற்படாமல் எந்த வளர்ச்சியும் ஏற்படாது.
  23. 🤣....... படலை காவிகள்........ இதையே தலைப்பாக வைத்திருக்க வேண்டும்....🤣
  24. உதுக்குத்தான் சொல்லுறது கிடைச்சதை மூக்கு முட்ட கட்டக்கூடாது என்று. அதுதானேபாத்தேன், அது எப்படி தனக்கு தெரிந்தவர்களை, அழைப்பே இல்லாமல் கூட்டிக்கொண்டுபோய் கச்சிதமாய் பாசல் கட்டிக்கொடுக்க முடிந்ததென்று? இப்பதான் விளங்கிச்சு அதன் ரகசியம்! இருக்காதா என்ன? தனது உறவினர் வைபவத்துக்கு உங்களை அழைத்து வண்டில் கட்டி அனுப்பியவரை உப்பிடி லேசாக அவர்களுக்கு சாமியாரை தெரியாது என்று கைகழுவி விட்டு போகிறீர்களே, ஒருவேளை உங்களை அவரோடு பாத்தால் கெடுபிடி, சோதனை பலமாக இருக்கும் பயத்தில அப்பிடி சொல்கிறீர்களோ?
  25. எனக்கும் பயிற்றம் பணியாரம் மிகவும் பிடிக்கும். போளி ரொம்ப பிடிக்கும். கனடாவில் சாப்பிட்டேன்.ஊரில் சாப்பிட்டது போல இல்லை. ஆக்களைத் தெரியாவிட்டால் பரவாயில்லை. அட்ரஸ் தெரிந்தா காணும்.
  26. உண்மையில் ஒரு கார் களவு போகுதென்றால் அந்த காரை தயாரித்த நிறுவனத்தின் குறைபாடே காரணம் மேல் உள்ள லிஸ்ர்ரில் டெஸ்லா இல்லை . அதே போல் புதிய மொடல் வெளிவந்த உடனே போட்டி கொம்பனிகள் மாத்திரம் அல்ல டார்க் வெப் கூட்டமும் அடித்து பிடித்து வாங்கி கொள்கிறார்கள் அதன் பின் அக்கு வேறு ஆணி வேறாக ரிவேர்ஸ் எஞ்சினியரிங் செய்து அதன் முக்கிய பலவீனத்தை எப்படி இலகுவாக அந்த புதிய மொடல் காரை திருடும் உத்திகளை அதே டார்க் வெப்பில் பிட் காயின்களுக்கு விற்கிறார்கள் இப்படி திருடர்கள் உலகம் அடுத்த கட்டத்துக்கு பாய்ந்து விட்டது நாங்கதான் இன்னும் சம்பந்தருக்கு ஏன் அஞ்சலி செய்யவில்லை என்று அடிபட்டு கொண்டு இருக்கிறம் 😀
  27. அட சங்கரியரின் பின் புலம் இதுவா ? பிறகென்ன ஒரே கொண்டாட்டம் தான் ...
  28. மற்றைய இரண்டுபேர்களுடனும் சொறிச்சேட்டை விட்டால் மறவன் புலவை மறந்த புலவாக்கும் அளவுக்கு கூடி கும்மியெடுத்துவிடுவார்கள் அதுமட்டுமல்ல சிங்கள கிறீஸ்தவ பறங்கிப்படையுடனும் ஐயா சொறியமாட்டார் . தமிழ் கிறீஸ்தவர்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மை அல்லவா. ஆனாலும் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா வர வர மறவன்புலவு கூட நிக்கும் ஆட்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகுது. நல்ல சகுனமில்லை இது
  29. ஜோ பைடனை மாற்ற வேண்டி வந்தாலும், கமலா ஹாரிஸ் தவிர வேறு எவரையும் இப்பொழுது பிரேரிக்க முடியாத ஒரு சிக்கல் இருக்கின்றது. பல மாநிலங்களில் ஏற்கனவே வேட்பாளர்களின் பட்டியல் நிரப்பப்பட்டு விட்டது. ஜனநாயக் கட்சியில் ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸின் பெயர் மட்டுமே உள்ளது. இன்னும் நாலு மாதங்களே இருக்கின்றன, வேறு மாற்றங்களுக்கு போதிய நேரம் இல்லை. ஆனால், பைடன் வென்று பதவிக்கு வந்த பின் வேறு மாற்றங்கள் செய்யக் கூடியதாக இருக்கும்.
  30. அமிர்தலிங்கம் தோல்வியடைந்த தலைவர் தான். ஆனால் இவரை கொலை செய்தவர்களும் பாரிய உயிர் அழிவுகளை மட்டும் தமிழருக்கு பெற்று கொடுத்துவிட்டு தோல்வியடைந்தவர்களாக சென்றவர்களே. அமிர்தலிங்கத்தை நினைவு கூரும் வேளையில் அவரின் மனைவி கையால் தேனீர் வாங்கி அருந்தி விட்டு அவரை கொலைசெய்த பாதகர்களும் நினைவு கூரப்பட வேண்டியவர்களே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.