Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    15791
    Posts
  3. வாலி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    5063
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/07/24 in all areas

  1. அவரேன் போட்டியிடப் போறார். எல்லாத்தையும் முடிச்சாப்பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு அவர் பாராளுமன்றம் போகவேணும்?
  2. இதை கொடுமை என்று சொல்லும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது???
  3. இவருக்காக நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். இவர் எந்தப் பெண்ணையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கவில்லை, நம்பி கெடுக்கவில்லை, திருமணம் முடிக்கின்றேன் என்று ஏமாற்றவில்லை. இவர் செய்த பிழை என்னவெனில் நம்பிக்கை தரும் அளவுக்கு தன்னுடன் கதைத்த ஒரு பெண்ணை நம்பியதுதான். புலம்பெயர் சமூகத்தில் இவரைப்போல பல நூற்றுக்கணக்கானவர்களை நாம் காண முடியும். வந்த காலத்தில் இருந்து நரை முடி காலம் வரைக்கும் உறவுகளுக்காக சகோதரர்களுக்காக உழைத்து அழைத்து ஈற்றில் இளமை தொலைந்த பின் திருமணம் முடித்த நிம்மதி இல்லாத பலரை காண முடியும். வெறுமனே உடல் தேவைக்காக இப்படியானவர்கள் இந்த சதிகளுக்குள் மாட்டுப்படுவதில்லை. ஆதரவாக கதைக்கும் ஒருவர் கூட அருகில் இல்லாமல் அவரை வெறுமனே பணம் கறக்கும் இயந்திரமாக பாவிக்கும் நெருங்கிய உறவுகள் இருப்பவர்கள் இப்படியாக ஏமாற்றுகின்ற கூட்டத்திடம் அகப்பட்டு எந்த நிம்மதிக்காக கதைக்க தொடங்கினார்களோ அந்த நிம்மதியை தொலைத்து விடுகின்றார்கள். இந்த வழியான மோசடிக்கு பெயர் sextortion. வயதான எளிதில் இலக்கு வைக்கபடக் கூடிய நபர்களை கண்டறிந்து ஏமாற்றும் ஒரு சைபர் கிரைம். நாம் இந்த குற்றங்களுக்கு இலக்கானவரை திட்டிவிட்டு இந்த குற்றத்தை புரிந்தவரை நியாயப்படுத்துகிறோம், கலாச்சார காவலர்கள் என்ற போர்வையில். குற்றம் செய்யாத எவனோ அவனே முதலில் கல்லை எறியட்டும் என்று இயேசுநாதர் சொன்னது போல் இங்கு திருமணம் முடித்தபின் வேறு எந்த பெண்ணையும் மனசால் கூட ஆசைப்படாத ஒரு ஆண் இங்கிருந்தால் அவர் சொல்லட்டும் இவர் செய்தது தவறு என்று. இங்கு நடப்பதும் victim blaming தான்.
  4. இந்தியாவின் அடுத்த ஆக்கிரமிப்பு....பொருளாதார,ஆத்மீக ஆக்கிரமிப்பு அன்று பிரித்தானியா நாடுகளை கைப்பற்றி பாலம் ,துறைமுகம்,ரயில்பாதை,மதம் பரப்பினர் இன்று இந்தியா ,சீனா போன்ற நாடுகள் அதை செய்கின்றனர் ..அபிவிருத்தி என்ற போர்வையில்
  5. விழிப்புலன்ற்ற ஒருவருக்கு பிறந்த குழந்தை, பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்து விட்டது, அவருக்கு குழந்தை இறந்த விடயத்தினை உறவினர், உங்கள் குழந்தை பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்துவிட்டது என கூறினார்கள், அதற்கு அவர் பால் எப்படி இருக்கும் என வினவினார் ( இது ஒரு கதைக்காக மட்டும்), அதற்கு உறவினர்கள் கொக்கு போல் வெள்ளையாக இருக்கும் என்றார்கள், அதற்கு அவர் கொக்கு எப்படி இருக்கும் என்றார், இவர்கள் தமது கையினை வளைத்து கொக்கு போல் செய்து காட்டினார்கள் அதனை தடவி பார்த்துவிட்டு இப்படிப்பட்ட முரட்டுப்பாலை குடித்தால்குழந்தை எப்படி இறக்காது என கேட்டார். இலங்கையர்களின் பிரச்சினை இனவாதம், மதவாதம், சாதியம் என பல பிடிவாதங்கள், பாதிக்கப்பட்டவர்களிற்கு மேல் குற்றம் சாட்டி தமது தவறுகளை தொடர்தல், தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது. இதனாலேயே போர் முடிந்த பின்னரும் மொத்த நாடே வங்குரோத்தானது, இது ஒரு தொடர்கதை ஆக தொடரும், இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்றவர்கள் தற்போது அதே சுதந்திரத்தினை இந்தியாவிடம் அடகு வைத்துள்ளார்கள். இந்தியாவின் ஆசீர்வாதம் இல்லாமல் தொடர்ந்து ஆட்சியில் கூட தாக்குபிடிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். இவர்களுக்கு இது கடைசி வரை புரியப்போவதில்லை, இலங்கையில் உள்ள பிரச்சினைக்கு சிறுபான்மையினர் காரணம் அல்ல என்பதை புரியாதவர்களால் எப்படி நாட்டை வழிநடத்த முடியும்? இலங்கை, வல்லரசுகளின் போட்டிக்கு, கோயிலுக்கு நேர்ந்துவிட்ட முட்டாள் ஆடு.
  6. சுமந்திரனும் சாணக்கியனும் ஊதிய சங்கை விட சின்னதாகவே இருக்கும் என நம்பலாம்.🙂
  7. கிழக்கு மாகாணத்தில் இவருக்கு கிடைக்கிற அடி எப்பவுமே வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரித்துவிடப்போகின்றது. தமிழர் தாயகம் இணைந்த வடக்கு கிடக்கு மாகாணங்கள் என்ற நிலைப்பாட்டிற்கு பலத்த அடிவிழப்போகின்றது!
  8. மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல. மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. அது சரி நீங்கள் ஏன் ஏதோ உங்களை எண்பது வயது பெண்ணுக்கு வாழ்க்கைப்பட வைத்தது போல் பீல் பண்ணுகின்றீர்கள்? அது போலவே உங்கள் இருபத்து ஐந்து வயது மகள் விடயத்திலும் பீதி அடைகின்றீர்கள்? உலகத்தில் ஆயிரத்து பத்தாயிரத்து ஐநூற்று ஏழு விடயங்களும் அதற்கு மேலேயும் காணப்படும். அனைத்தையும் நமது வாழ்க்கை நிலமையில் ஒப்புவமை, கற்பனை செய்ய தேவை இல்லையே. மற்றும் ஆண், பெண் இரு பாலினரிடையேயும் வயதுக்கு மீறிய ஈர்ப்புக்கள் எமது சமூகத்தில் ஒன்றும் புதியவை அல்ல. கிளுகிளுப்பு உணர்ச்சிகளை தாராளமாக கொடுத்து படைத்தவனும் என்ஜோய் பண்ண சொல்கின்றான். சட்டமும் போதியளவு இடம் கொடுக்கின்றது. இந்த நாட்டாண்மைகள் கொஞ்சப்பேர் குத்தி முறிகின்றார்கள்.
  9. சாலையில் வன்புணர்வு செய்வதை... வீடியோ எடுக்கும் மக்கள் வசிக்கும் நாடு தான் இந்தியா.... த்தூதூ.... வெட்கம் கெட்டவங்கள். 😡
  10. புலரின் தற்காலிக செயற்பாட்டிமாக முதியோர் சங்க கட்டிடத்தை பாவிக்கிறோம் அக்கா. அங்கே மதிய உணவு மட்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய முதியோர்களுக்கு கொடுக்கினம். அதற்கு முதியோர்கள் பலர் இணைந்து தனியான நிர்வாகம் செய்கிறார்கள். எனது தந்தையார் தலைவராக இருக்கிறார். வெளிநாட்டு, உள்நாட்டு மக்களின் நன்கொடைகளால் முதியோர் சங்கம் செயற்படுகிறது.
  11. அதுகும்… வளர்ப்பு மகளை திருமணம் செய்யும் துணிவு, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கும் வருமா…. தந்தை பெரியாருக்கு வந்ததே… கெத்து சார். 😂
  12. விதி விலக்குகள் உண்டு. என்னுடன் படித்த இருவர், இருவரும் மருத்துவர்கள் முதியோர் காப்பகங்களை கொழும்பில் / தெற்கில் நடாத்தி வருகின்றனர். என் நண்பர்களின் வயதான தந்தைமார்கள் சிலர் அங்கு தான் இருக்கின்றனர். ஊரில் அவர்களது உறவினர்கள், தந்தைமார்களின் சகோதரங்கள் பலர் இருப்பினும், இக் காப்பகங்களில் தான் உள்ளனர். மிகவும் தரமான, சுத்தமான காப்பகங்கள் இவை. வயோதிபர்களை நன்றாக பராமரிக்கின்றனர். இங்குள்ள (கனடா) காப்பங்களை விட நன்றாக உள்ளன. அண்மையில் மாமியார் மருமகள் பிரச்சனைகளால் என் நண்பர் ஒருவரின் அம்மாவை இங்கிருந்து அங்கு தான் கொண்டு போய் விடும் நிலை ஏற்பட்டது. தாயார் பம்பர்ஸ் கட்ட மறுத்து வீடு முழுக்க மலசலம் கழிப்பார். நண்பனும், அவன் மனைவியும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது அவரின் கழிவுகள் தான் வரவேற்கும். இப்ப அங்கு போய், பம்பர்ஸ் அணிகின்றார்.
  13. இந்திரா காந்தியின் தோழி சிறிமா பண்டாரநாயக்க கூட சீன ஆதரவாளர் தான். எனவே காந்தி தேச வெருட்டல்கள் சிறிலங்காவில் எடுபடாது. சிங்களவர்கள் ஹிந்தி பாட்டு கேட்பதுடன் தமது இந்திய உறவை நிறுத்தி விடுவார்கள்.🤣
  14. என்னதான் கிந்தியா முக்கினாலும் எல்லாம் ரூ லேட். சிறிலங்காவில் சீனாவின் பலமான அடித்தளம் எப்போதே உருவாகி விட்டது.
  15. யாருக்கு கழுவினாலும் விடிவில்லை .😂 இந்தியாவை மனிதராகவே மதிப்பதில்லை. சஜித்துக்கு கழுவினால் மட்டும் போற்றி விடுவமா?
  16. நீங்கள், கைதடி தானே… அப்ப உங்களுக்கு… கமலா ஹரிஸ் உடைய அம்மம்மாவை தெரியுமா.
  17. இதை தான் அறியாமை என்பார்கள்,.........வயோதிபர்கள். அனுபவசாலிகள். அனைத்து விடயங்களிலும் ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்யும் இளைஞன் அவளை திருப்தி படுத்துவதை. விட ஒரு வயோதிபன். பூரணமாக திருப்தி படுத்துவன். அனுபவம் கண்ட பெண்கள் ஒருபோதும் கிழவனை தட்டி விடமாட்டார்கள். 😂🤣 இதில் கொடுமை எதுவும் இல்லை இங்கு மேறகு நாடுகளில் நிறைய கிழவர்கள். இளம்பெண்களைத் திருமணம் செய்துள்ளார்கள்.
  18. உரும்பிராய் கைதடிக்கு பக்கத்தில் தான் 🤣🙏. அதை கைதடி என்றும் சொல்லலாம் 🤣😂
  19. ஓம் ஐயா, விச ஊசி மருந்து ஏற்ற காசு வேணும் தானே?! இலங்கையில் கருணைக்கொலை சட்டமாக்கப்படவில்லை.
  20. 70 வயது நபர் 25 வயசு பொண்ணுடன் கதாநாயகனாக ஒரு படம் நடித்தால் அதை பார்த்து மகிழக்கூடியவர்கள் 52 வயது நபர் 25 வயசு பெண்ணிடம் மயங்குவதை சகித்துக்கொள்ள மாட்டார்கள்? நமது 52 வயசு சுவிஸ் கீரோவை எங்கள் யூரியூப் தம்பிமார் பேட்டி கண்டு இணைத்தால் பலருக்கும் பிரயோசனப்படும். பல் உள்ளவன் பகோடா சாப்பிடுறான்.
  21. தேவியர் இருவர் முருகனுக்கு . .........! 😍
  22. சமூக வலை உலகம் குப்பையாகி விட்டது. பெண்கள் ஆண்கள்..பல விதத்திலும் பணம் பார்க்க பாவிக்கிறார்கள். உடலைக் காட்டி பிழைப்பது அதிகரித்துவிட்டது.. அது உடலை விற்றுப் பிழைப்பதை விட பாதுகாப்பானது என்றாகி இருப்பதால்... பலரும் களமிறங்கி விட்டார்கள். ஆனாலும்.. வெளிநாடுகளில் இருக்கும் எம்மவர்கள் பணம் வரும் வழிமுறை உணராமல் கண்டபடிக்கும் ஊருக்கும் தெற்காசியா தென்கிழக்கு ஆசியா நோக்கியும் பணத்தை வீசிவருகின்றனர். அவர்கள் உழைப்பு தானே என்று விட்டாலும்.. இதனால் மற்றவர்களும் ஊரில் உள்ளவர்களும் தேவைக்கு அதிகமான செலவை செய்து பல அத்தியாவசிய.. சேவைகளை தேவைகளை நிறைவு செய்ய வேண்டி உள்ளது. இதில் புலம்பெயர் தமிழர்களின் தாந்தோன்றித்தனமான கண்மூடித்தனமான செலவழிப்பு போக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது.
  23. தேனீக்களை குடியிருப்பு பகுதிகளில் வளர்க்க முடியாது என்று எண்ணுகிறேன். அமெரிக்காவில் தேனீக்கள் குறைந்து வருவதாக அண்மையில் செய்தியில் பார்த்த ஞாபகம்.
  24. ஆண் பெண் அவர்களுடைய வயது முதல் வருமானம் சொத்து என்பன தொடர்பாக தெளிவு படுத்தி இருவரும் இணைந்து வாழ விரும்பினால் வயது ஒரு தடையாக நாம் எண்ணக் கூடாது. 18 வயது நிறைவடைந்த இருமனம் விரும்பி திருமணம் செய்தால் மறுக்க முடியாது தானே அண்ணை. 20 வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்த பலரை அறிவேன். அதே போல வயது குறைந்த ஆணை திருமணம் செய்த பலரையும் அறிவேன். அவை தனிமனித சுதந்திரம் என எண்ணுகிறேன்.
  25. இதையெல்லாம் தாண்டி வந்து கன காலமாச்சண்ணா. ஆனால் உங்கள் கேள்விகளுக்கு பதில் தரவேண்டும் என்றால் இல்லை. ஆம் என்று சொல்லும் அளவுக்கு சுயநலம் இல்லை.
  26. அநேகமான காப்பகங்களின் நோக்கம் பணம் மட்டுமே என்பது தெளிவாகிறது. 😭
  27. அவர் தன் வயதை 25 என்று சொல்லாமல், தன் உண்மையான வயதான 55 என்று சொல்லி இருந்து பழகியிருப்பார் என நம்புகின்றேன், ஏனெனில் அதனால் தான் ஒழித்து இருக்காமல் ஊருக்கு வந்து முறையிட்டு இருக்கின்றார். இவ்வாறு இவர் தன் வயதை 55 என்று சொல்லி பழகியிருப்பின் அதனை தவறு என்பீர்களா? அல்லது 55 வயதான ஆண் 25 வயதான பெண்ணை திருமணம் செய்ய முற்படுவது தவறு என்பீர்களா? எல்லாவற்றையும் விட, ஒருவர் தன் தெரிவை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது?
  28. பூங்குயில் பாடுது .......! 😍
  29. வயது வந்த பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்ப்பது இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணம். இதை விமர்சிப்பவர்கள் சிலர் இருந்தாலும், இன்றைய காலத்தில் இந்த நடைமுறைதான் உலகெங்கும் பரவலாக இருக்கிறது. யேர்மனியில், உன்னா (Unna) மாவட்டத்தில் உள்ள செல்ம் (Selm) நகரத்தில் தனது 96 வயதான தந்தையை முதியோர் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற மகளின்(53)நிலைமை சிக்கலாகிப் போயிருக்கிறது. தந்தைக்கோ முதியோர் இல்லத்துக்குப் போவதற்கு சிறிதும் விருப்பமில்லை. மகளுக்கோ தந்தையை அங்கே அனுமதிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இந்த விடயம் முற்றி தந்தைக்கும் மகளுக்கும் பெரும் வாக்கு வாதமாகப் போனது. ‘இதுதான் முடிவு’ என்று மகள் சொன்னதன் பின்னர், கோவம் கொண்ட தந்தை துப்பாக்கியை எடுத்து நான்கு முறை சுட்டதில் இரண்டு குண்டுகள் மகளின் தொடையிலும் ஒரு குண்டு அவளின் தோள்பட்டையிலும் பாய்ந்திருக்கின்றன. காயங்களுடன் அலறிக் கொண்டு ஓடிய மகளை அயலவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு அங்கு அவருக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. மகளின் உயிருக்கு ஆபத்தில்லை என வைத்தியசாலை அறிவித்திருக்கிறது. தந்தையிடம் துப்பாக்கி பாவிப்பதற்கான அனுமதி இருக்கிறது. இந்த வயதிலும் குறி தவறாமல் சுடும் அவரை எப்படி வீட்டுக்குள்ளே போய் கைது செய்வது என்று தெரியாமல் பொலிஸார் ஒன்றரை மணி நேரம் வீட்டைச் சுற்றி நின்றிருக்கிறார்கள். தந்தை தானாக வெளியே வந்து சரண் அடைந்திருக்கிறார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு வருமா அல்லது மனநல மருத்துவ மனையில் அவரை அனுமதிப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும். பேசாமல் பெரிசு முதியோர் இல்லத்துக்கே போயிருக்கலாம். 96 வயதில் இந்த வீரம் அதிகம்தான். இந்தச் செய்தியை இங்கே வாசித்தேன் (யேர்மன் மொழி) https://www.n-tv.de/panorama/96-Jaehriger-schiesst-auf-Tochter-nach-Streit-um-Pflegeheim-article25209186.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.