Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    3124
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19667
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88812
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33349
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/04/25 in Posts

  1. ராணுவ ரகசியம் --------------------------- நாய்கள் குலைத்து குலைத்து அடங்கிக் கொண்டிருந்தன. பொழுது இன்னும் விடிந்திருக்கவில்லை, நேரம் அதிகாலை நாலு அல்லது ஐந்து மணி ஆகியிருக்கும் போல. வெளியில் இருட்டு இன்னும் கும்மிக் கொண்டிருந்தது. இந்த நாய்கள் இவர்களுக்கு ஏன் அடங்கிப் போகின்றன என்பது கொஞ்சம் ஆச்சரியம் தான். ஒரு வேளை குலைக்கும் நாய்களை எப்படி குலைக்காமல் அடக்குவதென்று இந்திய ராணுவத்தில் ஒரு பயிற்சியும் இருக்கின்றதாக்கும். இதுவே இலங்கை ராணுவம் எவ்வளவு தான் பதுங்கிப் பதுங்கி வந்தாலும், எங்கள் ஊர் நாய்கள் விடாமல் குலைத்து, சில வேளைகளில் இலங்கை இராணுவத்திடம் அடிவாங்கி இழுபட்டு ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டே ஓடியும் இருக்கின்றன. இலங்கை இராணுவத்திற்கும், இந்திய இராணுவத்திற்கும் இருந்த வித்தியாசங்களில் ஒன்று இந்திய ராணுவத்தின் மணம். அந்த மணம் அல்லது வாடை எங்கேயிருந்து அவர்களின் மேல் வருகின்றது என்று தெரியவில்லை. ஆனால் நண்பன் ஒருவன், அவன் ஒரு நாள் இவர்களிடம் தனியாக மாட்டுப்பட்டான், சொன்ன தகவல்களின் படி அந்த மணம் அவர்களின் சட்டை அல்லது நீண்ட காற்சட்டைப் பைகளுக்குள் இருக்கும் சப்பாத்திகளின் மணமே. இந்திய இராணுவத்தினர் சப்பாத்திகளை அங்கங்கே சுருட்டி வைத்திருக்கின்றார்கள் என்று அவன் சொன்னான். ஒரு பனங்கூடலுக்குள்ளால் அவனை நடத்தி கூட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்த போது அந்தச் சப்பாத்தியில் ஒன்றை அவர்கள் அவனுக்கும் கொடுத்ததாகச் சொன்னான். உயிரா அல்லது அந்தச் சப்பாத்தியா என்று நினைத்து அதை சாப்பிட்டதாகச் சொன்னான். அவன் வேறு சிலவும் சொன்னான், அவை பொதுநலம் கருதி இங்கே தவிர்க்கப்படுகின்றன. ஒரு தடவை இந்திய ராணுவம் ஊரைச் சுற்றி வளைத்து தேடுகின்றார்கள் என்ற செய்தி கேட்டு, நாங்கள் சிலர் விழுந்தடித்து அருகில் இருக்கும் ஒரு ஊருக்கு ஓடிப் போனோம். அங்கு ஒரு விளையாட்டுத் திடல் இருக்கின்றது. அந்த விளையாட்டுத் திடலுக்கு ஒரு பெயர் இருக்கின்றது. அப்படி ஒரு பெயரை எந்த இடத்திற்கும் வைக்கவே கூடாது. ஆகவே அதையும் இங்கே தணிக்கை செய்கின்றேன். அந்த திடலின் மூன்று பக்கங்களிலும் அடர்த்தியான பனங்கூடல்கள் இருந்தன. ஒரு பக்கம் மட்டுமே வீடுகள் மற்றும் பாதை இருந்தன. மூன்று பனகூடல்களுக்குள்ளும் ஒற்றையடி பாதைகள் இருந்தன. அப்பாடா............ இன்றைக்கு இந்த இந்திய ராணுவத்திடம் இருந்து தப்பியாகி விட்டது என்று அந்த திடலின் ஒரு பக்கமாக நின்று சாவகசமாக கதைத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று எங்களுக்கு பின்னால் இருந்த பனைகளுக்கு இடையால் திபுதிபுவென்று இந்திய இராணுவத்தினர் வெளியே வந்தனர். எங்கேயிருந்து, எப்படி வருவார்கள் என்ற ஒரு வரையறை இவர்களுக்கு கிடையாது. இந்திய ராணுவம் வந்த ஆரம்ப நாட்களில் அவர்கள் சுற்றி வளைத்து எங்களை பிடிப்பது நாங்கள் சின்ன வயதுகளில் விளையாடும் கள்வன் - போலீஸ் விளையாட்டு போலவே. 'ஆ..... உன்னைப் பார்த்தாச்சு.............. நீ அவுட்.............' என்று சொல்வது போல, எங்களைக் கண்டால் கூட்டிக்கொண்டு போவார்கள். ஏதாவது ஒரு பாடசாலை, கோவில் வீதி, மைதானம் இப்படி எங்காவது வைத்திருந்து விட்டு, அநேகமாக எல்லோரையும் அன்றே விட்டுவிடுவார்கள். அவர்கள் எங்களை விடுதலை செய்யும் வரை எங்களின் அம்மாக்கள் வந்து அந்த இடத்தை சுற்றியே நிற்பார்கள். ஒரு நாள் அவர்கள் எங்களைப் பிடித்து விட்ட பின்னர், வரும் வழியில் அந்த இராணுவத்தினரில் ஒருவருக்கு எவ்வளவு நீட்டு தலைமுடி என்று அம்மா ஆச்சரியத்துடன் சொன்னார். அம்மாவும் எங்களைப் போலவே இலேசாகத்தான் அங்கே வெளியில் நின்றிருக்கின்றார். ஆனால் மிக விரைவிலேயே நிலைமைகள் மாறியது. அமைதி என்று ஆரம்பித்தது அடிபிடியாகியது. சுற்றி வளைப்பில் பிடிபட்டால் சப்பாத்தி கொடுக்கும் காலம் முடிந்து, சப்பாத்தால் மிதித்தாலும் மிதிப்பார்கள் என்ற ஒரு கஷ்ட காலம் மீண்டும் வந்திருந்தது. எங்களின் ஆட்கள் சிலரே அவர்களுக்கு உதவியாளர்களாக மாறியது தான் பெரும் கலக்கமாக மாறியது. சுற்றி வளைப்பில் எங்களை பிடித்துக் கொண்டு போக, அங்கே உதவியாளர்களாக இருக்கும் நம்மவர்கள் தலையாட்டிகளாக மாறினார்கள். அவர்கள் எங்களைப் பார்த்து தலையை ஆட்டினால், தலையாட்டப்பட்டவர்கள் உள்ளே. மற்றவர்களை விட்டுவிடுவார்கள். உள்ளே போனவர்களை, பெரும்பாலும் எல்லோருமே அப்பாவிகள் தான், வெளியே எடுப்பதற்கு பலர் வரவேண்டும். பாடசாலை அதிபர்கள், ஊர்ப் பெரியவர்கள், மத குருக்கள், இப்படிச் சிலர் இந்தக் கடமையையும் செய்து கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த இந்திய ராணுவ முகாமில் பிரதான தலையாட்டியாக இருந்தவரை எனக்கு நல்லாவே தெரியும். அதைவிட முக்கியம், அவருக்கும் என்னை நல்லாவே தெரியும் என்பது தான். கிட்டத்தட்ட ஒரே வயது தான். அந்த பிரதான இராணுவ முகாம் ஊடாகவே பேருந்துகள் போய் வந்து கொண்டிருந்தன. பேருந்துகளில் போய் வந்து கொண்டிருந்த சில நண்பர்களை காரணமே இல்லாமல் இறக்கி நல்லாவே அடி போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். எங்களால் ஊகிக்க முடிந்த ஒரே ஒரு காரணம் அந்த பிரதான தலையாட்டி மட்டுமே தான். என்னையும் ஒரு நாள் தலையாட்டி பார்த்தார், ஆனால் இறக்கவும் இல்லை, அடிக்கவும் இல்லை. அப்பவும் நான் வம்பு தும்பு என்று எதற்கும் போவது இல்லை என்பது தான் காரணம் போல. இன்னொரு சின்னக் காரணமாக அவருடைய முறைப்பெண் முறையான ஒருவர் என்னிடம் படித்துக் கொண்டிருந்ததும் என்று நினைக்கின்றேன். வீட்டில் நின்று இந்திய ராணுவத்தின் கைகளில் சிக்கவே கூடாது என்ற முடிவை ஒரு சம்பவத்தின் பின் எடுத்திருந்தேன். ஒரு நாள் எல்லாப் பக்கத்தாலும் வீட்டுக்குள் அவர்கள் திடுப்பென வந்தார்கள். மூன்று நாய்கள் முற்றத்தில் அவர்களைக் கண்டும் காணாதது போல தங்கள் முகநாடிகள் தரையில் தேயும்படி படுத்திருந்தன. பின் வளவுக்குள் இருந்த பனம்பாத்தி என்ன என்பதே அவர்களின் முதலாவது கேள்வி. அவர்களுக்கு அதை என்னவென்று ஆங்கிலத்தில் விளக்கிச் சொல்லும்படி வீட்டில் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். என்னுடைய விளக்கத்தின் பின்னும் அவர்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போனார்கள். நான் கொடுத்த பனம்பாத்தி விளக்கம் அவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் நான் என்ன சொன்னேன் என்று எனக்கே புரிந்திருக்கவில்லை. தலையாட்டப்படாமலேயே அன்று தடுத்து வைப்பார்கள் என்று நினைத்தேன், அன்றும் பிரதான தலையாட்டி எனக்கு தன் தலையை ஆட்டவில்லை. ஆனால் எங்களின் நண்பர்களில் ஒருவனை தடுத்து வைத்துவிட்டனர். பின்னர் அன்றிரவு, வழமையான முயற்சிகளின் பின், அவன் விடுவிக்கப்பட்டான். அடுத்த நாள் ஒரு பெரிய தேடுதல் ஊரில் நடக்கப் போவதாக அப்பா வந்து சொன்னார். சல்லடை போட்டுத் தேடப் போவதாகாவும், பலரைக் கைது செய்யும் திட்டம் இருப்பதாகவும் சொன்னார். இந்த தகவல் மிகவும் இரகசியமானது என்றும், இந்திய ராணுவத்தில் இருக்கும் ஒரு தமிழ்நாட்டு வீரர் மூலம் தெரிய வந்ததாகவும் கூட சொன்னார். அயலூர் ஒன்றைத் தவிர மற்றைய ஊர்கள் எல்லாவற்றையும் அதிகாலையிலேயே சுற்றி வளைக்கப் போகின்றார்கள் என்றும் சொன்னார். அந்த அயலூரில் மாமி ஒருவர் இருந்தார். ஆதலால் எல்லோரும் இப்பவே கிளம்பி மாமி வீட்டை போவோம் என்றும், நாளை மறுதினம் திரும்பி வரலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. எங்களின் வீட்டில் ஏராளமான ஆட்கள், அதை விட மாமியின் வீட்டில் இன்னும் அதிகம். எங்கள் எல்லோருக்கும் மாமியின் வீட்டில் இடம் இருக்கவில்லை. நல்ல காலமாக மாமியின் வீட்டிற்கு அருகில் ஒரு வீடு காலியாக இருந்தது. அந்த வீடு வரலாற்றில் மிக முக்கியமான ஒருவரின் வீடு. அவரின் பெயரையும் இங்கு தணிக்கை செய்து கொள்வோம். அவரின் குடும்பத்தார்கள் எப்போதோ இந்தியாவுக்கு போய்விட்டார்கள். மாமியிடமே அந்த வீட்டின் பொறுப்பு இருந்தது. மாமியின் வீட்டில் இரவு சாப்பிட்டு விட்டு, நாங்கள் சிலர் அருகில் இருக்கும் அந்த வீட்டிற்கு போனோம். அந்த வீட்டில் படுத்திருக்கும் போது தான், விடிகாலையில் நாய்கள் குலைத்து குலைத்து அடங்கிக் கொண்டிருந்தன. இராணுவத்தினர் சாரைசாரையாக இங்கிருந்தும் அங்கே எங்களூருக்கு போகின்றார்கள் போல என்று நினைத்துக் கொண்டே மீண்டும் நித்திரையாகினேன். விடிந்து கொண்டு வர, முன் கதவைத் திறந்து கொண்டு ராணுவத்தினர் உள்ளே வந்தார்கள். எங்களைக் அப்படியே அள்ளிக் கொண்டு போய் ஒரு பாடசாலை மைதானத்தில் வைத்திருந்தனர். அன்றைய நாள் முடிவில் விசாரணைகள் முடிந்து எங்களை விட்டார்கள். நாங்கள் தங்கியிருந்த அந்த வீட்டின் விபரங்கள் அங்கு வந்து எங்களைக் கொண்டு போன இந்திய இராணுவத்தினருக்கு தெரிந்திருக்காதது எங்களின் அதிர்ஷ்டம். அடுத்த நாள் காலையில் எங்கள் வீட்டுக்கு வந்தோம். எங்கள் ஊரில் எந்த சுற்றி வளைப்பும் நடக்கவே இல்லை என்று சொன்னார்கள்.
  2. ஓட வெளிக்கிட்டாலோ பயந்து பின்வாங்கும்போதோ நாய்கள் கடிக்க முனையும் என நினைக்கிறேன். ஒரு தடவை தான் கடிவாங்கினேன். அது கடிநாய் வீட்டிலே தான் இருப்பது. ஒரு முறை எமது முச்சந்தியில் எதிர்பாரத விதமாக எதிரே வந்துவிட்டது. அதனை கண்டவுடன் பயத்தில் நான் அலற, வேகமாக வந்து பாய்ந்து தொடையில் கவ்விவிட்டது. இப்போது எனது முச்சக்கரவண்டியில் மிகமெதுவாக(10-12 கி.மீ/மணி வேகம்) பயணித்தாலும் இலகுவான கடிக்கும் வாய்ப்புள்ளதால் உடனடியாக நிறுத்தி சத்தமிடுவேன், பின்னர் இன்னும் மெதுவாக நகர்ந்து அவைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிடுவேன்.
  3. முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி வீரர்கள் தொடர்ந்து நிலைத்து ஆடமுடியாததால் 49.3 ஓவர்களில் 264 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி சாதாரணமான இலக்கை விராட் கோலியின் 84 ஓட்டங்களுடனும், கேஎல் ராகுலின் அதிரடியான 42 ஓட்டங்களுடனும் 48.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்களை எடுத்து எட்டியது. முடிவு: இந்திய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனக் கணித்திருந்த 17 பேருக்குத் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. முதலாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @Eppothum Thamizhan மீண்டும் முதல்வராகியுள்ளார்! நிலைத்து நிற்பாரா?
  4. நாளைக்கு தென் ஆப்பிரிக்கா வென்றாலும் எப்போதும் தமிழன்தான் முதல்வர். எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.என்னுடைய பார்வையில் எப்போதும் தமிழன்தான் முதல்வராக வருவார் என்று நினைக்கிறேன்.அவருக்கு வாழ்த்துகள்.
  5. நீங்கள் யாழில் நிலைப்பீர்கள் என்ற நம்பிக்கை துளிர்கிறது. அந்த மணம் (வாசமா கடவுளே) வருவது - சப்பாத்தியில் சப்பாத்து பொலிஷில் உடுப்பு தோய்க்கும் சவர்காரத்தில் குளிக்கும் சவர்காரத்தில் கடலை என்ணையில் பாமாயிலில் தலைக்கு வைக்கும் எண்ணையில்… என பல ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன🤣. அவர்கள் ஓடும் வாகனத்தின் புகையில் கூட இது இருப்பதையும், அவதானித்துள்ளேன். ஆனால் ஒரு தரம் சென்னை-பம்பாய் ரயில் பயணத்தில் ஒரு கூட்டம் இந்திய ஆமிகாரருடன் பயணித்தேன். மணம் இல்லை. இலங்கையில் தம் பிரசன்னத்தை அறிய, இரவு வேளைகளில், இதர இடங்களில், ஏதோ ஒரு மணத்தை கலந்தார்களோ? நாய்கள் உச்சா போவது போல.
  6. நாளையான் மைதான‌ம் ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம் , நாணய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்யும் அணி 350 ர‌ன்ஸ் அடிக்க‌ வாய்ப்பு இருக்கு இர‌வு நேர‌ம் உந்த‌ மைதான‌த்தில் ர‌ன்ஸ் ஈசியா அடிக்க‌லாம்....................... உந்த‌ மைதான‌த்தில் வெற்றி தோல்விய‌ தீர்ம‌னிப்ப‌து நாண‌ய‌ம் தான்......................... தென் ஆபிரிக்கா நியுசிலாந்தை வென்று பின‌லுக்கு போகும் பின‌லில் இந்தியாவிட‌ம் தோல்வி அடைய‌க் கூடும்.......................
  7. இது சட்ட நடைமுறைதான். Ex parte அல்லது without notice application என சொல்வார்கள். ஒரு வழக்கில் மறு பகுதியின் நியாயத்தை கேட்காமல் ஒரு தடையுத்தரவு (injunction) கொடுப்பது. இங்கே தமிழ் நாடு அரசுக்கு - பதில் கூற பத்து நாள் கழித்து ஒரு தவணை கொடுக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். ஆனால் இங்கே கூட உச்சநீதி மன்றம் சீமானுக்கு அனுகூலமாக நடந்துள்ளது. சீமானின் அப்ளிகேசனை பத்து நாள் தள்ளிவைத்து, தமிழ்நாடு அரசின் பதிலையும் பெற்று முடிவெடுக்காமல் - நேரடியாக 2 மாத அவகாசம் வழங்கி உள்ளனர். இந்த 2 மாச அவகாசம் மத்திய அரசின் துணையுடன் மீண்டும் ஒரு தடவை பெங்களூரில் இருக்கும் விஜி அண்ணியை மிரட்டி வாபஸ் வாங்க வைக்கவே. நிச்சயமாக…. இப்போதே எதிர்வு கூறுகிறேன்… விஜி அண்ணி மீண்டும் மிரட்டி வழக்கை வாபஸ் வாங்க வைக்கப்படுவார், அல்லது பணத்தை கொடுத்து கோர்ட்டுக்கு வெளியே இருதரப்பும் சமாதானம் ஆகி விட்டனர் என முடிப்பார்கள். இதனால்தான் இந்திய உச்சநீதிமன்றம் மாமா வேலை பார்க்கிறது என எழுதினேன்.
  8. இலங்கை அரசினர் இன அழிப்பு , இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த வன்கொடுமை இரண்டையும் நாங்கள் மட்டுமல்ல உலகமே பக்கத்தில் படுத்துக்கிடந்து பார்த்தது.. ஏனெனில் இது ஒரு பெட் ரூமுக்குள் இரண்டு பேருக்கு நடுவே மட்டும் நடைபெற இல்லை.. எங்கள் வீடு உங்கள் வீடு பக்கத்துவீடு என்று எல்லோருமே இதனால் பாதிக்கப்பட்டோம்.. வாழும் சாட்சிகள்.. ஆனால் லிவ்விங் ருகெதர் ஆக வாழ்ந்த காலப்பகுதியில் சீமானுக்கும் விஜலட்சுமிக்கும் இடையே நடந்ததை,தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கு நடுவே இருந்த உறவை, நீதிமன்றம் கண்டுபுடிக்கும் முன்னமே ஒரு சிலர் பாத்திருக்கிறார்கள்.. பாலியல் வல்லுறவு என்பதை கண்டிருக்கிறார்கள்.. அப்படி எனில் அவர்கள் ஒன்றில் இந்த இருவரும் அந்த காலப்பகுதியில் வாழ்ந்த பெட் ரூமில் விளக்கு பிடிப்பவர்களாக அல்லது மாமா வேலை பார்ப்பவர்களாக அல்லது அடுத்தவன் பெட் ரூமில் கமெரா வைத்து அந்த வீடியோக்களை பார்த்து ரசிக்கும் சைக்கோக்களாகத்தான் இருந்திருக்க வாய்ப்புள்ளது..
  9. எங்கை தேடுதல் செய்யிறது எண்டது தான் ரகசியம் போல. அது நெய் மாதிரி ஒரு எண்ணெய் மணம். இந்திய சாப்பாட்டுக்கடைகளில் கூட வரும். மறக்க முடியுமா... அவங்கடை எந்த வாகனம் போனாலும் அந்த மணம் கொஞ்சநேரத்துக்கு றோட்டிலை இருக்கும். நாய்களுக்கு அந்த மணம் பிடிக்குமோ என்னவோ. இல்லாட்டிநாய்களுக்குப் போடத் தான் சப்பாத்தி கொண்டு வாறவங்களோ?
  10. அவள் லண்டன் வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டதுதான். போர் முடிந்தும் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் வதனி வந்ததுக்கு இன்னும் இலங்கை போகவில்லை. ஆறு வயதிலும் நான்கு வயதிலும் கொண்டுவந்த பிள்ளைகள் இருவருமே படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் அவள் இலங்கைக்குப் போகும் ஆசையை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறாள். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. கணவன் நோயில் இறந்தபின் கணவனின்றி எங்குமே அவள் செல்வதை நிறுத்திவிட்டிருந்தாள். வாரம் ஒருதடவை மகனை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்தால் பிறகு அடுத்த வாரம்தான். பிள்ளைகளும் ஆண் பிள்ளைகள் என்பதால் அவர்களைக் கூட்டிக்கொண்டு செல்லவேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னர் தாய்க்குப் புற்றுநோய் என்று தம்பியார் அறிவித்ததில் இருந்து அவள் மாதாமாதம் பணத்தை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறாள். “தெல்லிப்பளையில் மருத்துவம் எல்லாம் இலவசம் அக்கா. எதுக்கு அவைக்கு மாதாமாதம் காசு அனுப்புறியள்” என்று நண்பி மலர் கூறினாலும் “தம்பி பொய்யோ சொல்லப்போறான்” என்று இவள் மலரின் கதையை காதிலும் எடுக்கவில்லை. இவள் கணவன் செய்த ஸ்பொன்சரில் எப்பிடியோ லண்டனுக்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாளாயினும் வந்து சேர்ந்ததை நினைக்க இப்ப நினைத்தாலும் பெரும் மலைப்பாகவே இருக்கும். இவளுக்கு ஆங்கிலமும் சுட்டுப் போட்டாலும் வரவில்லை. ஆனாலும் தட்டுத் தடுமாறி ஏதோ விளங்கிக் கொண்டாலும் கணவரும் இவளை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததில் மொழி தெரியாததும் ஒரு பிரச்சனையாகப் படவில்லைத்தான். கணவன் இறந்தபின் இரு மாதங்கள் திண்டாடித்தான் போனாள். அந்தநேரம் கணவனின் அண்ணன் தான் கைகொடுத்தது. வேலைக்கு லீவு சொல்லிவிட்டு இவர்களுடன் வந்து ஒருமாதம் நின்று எல்லா உதவிகளும் செய்து இவர்களின் அலுவல்கள் எல்லாம் பார்த்தது. கணவன் ஆயுட்காப்புறுதி செய்து வைத்திருந்ததில் வீட்டுக்குக் கட்டவேண்டிய பணம் முழுதும் கட்டப்பட்டுவிட, மூத்த மகனுக்கும் உடனேயே வேலை கிடைத்ததில் இவள் நிம்மதியாய் தொடர்ந்தும் இருக்க முடிந்தது. இரண்டு ஆண்டுகளாக மூத்தமகனின் சம்பளம் மொத்தமாக இவள் கைகளுக்கு வர, சீட்டுப் பிடிக்கிறேன் என்று பத்தாயிரத்தைத் தொலைத்தபின் மகனும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் இவளுக்குக் கொடுத்துவிட்டுத் தானே சேர்த்து வைக்க ஆரம்பிக்க, பிள்ளை தன் கைவிட்டுப் போய்விட்டாதே என்ற ஆதங்கம் எழுகிறது. “உன் அப்பா இருந்திருந்தால் என்னை இப்படி உங்களிட்டைக் கையேந்த வீட்டிருப்பாரே” என்று அழுது பார்த்தும் மகன் முழுச் சம்பளத்தையும் அதன்பின் கொடுக்கவே இல்லை. இப்ப இரண்டு வாரங்களாக தம்பியாரின் போன் “வந்து அம்மாவைப் பார் அக்கா. சரியான சீரியஸ் என்று சொல்லிப் போட்டினம்” என்று ஒரே தொல்லை. அம்மாவைப் போய்ப் பார்க்கவேணும் என்று இவளுக்கு அத்தனை பாசம் ஒன்றும் இல்லை. இவள் காதலித்து வண்ணனைக் கலியாணம் செய்யப் போகிறேன் என்றதும் தந்தையிலும் பார்க்க தாய்தான் குதியோ குதி என்று குதித்தது. இவள் வீட்டுக்குத் தெரியாமல் கலியாணம் கட்டிக்கொண்டு வந்தபிறகும் “நீ செத்திட்டாய் எண்டு நினைச்சுக்கொள்ளுறன். இனிமேல் இந்த வீட்டில உனக்கு இடமில்லை” என்று கதவை அடிச்சுச் சாத்தினபிறகு, பேரப் பிள்ளைகள் பிறந்தபிறகும் கூட தாய் வதனியையோ பேரப் பிள்ளைகளையோ பார்க்க வரவே இல்லை. வெளிநாடு போக முதல் ஒருக்காச் சொல்லிப்போட்டுப் போவம் என்று பிள்ளைகளுடன் போனவளை நிமிர்ந்துகூடத் தாய் பார்க்கவில்லை. அந்தத் தாயின் மகள்தானே இவளும். ஆனால் தம்பியில் உள்ள பாசம் இவளுக்குக் குறையவே இல்லை. தம்பியும் இவளின் கணவர் இருக்கும் வரை இவளோடு தொடர்பு கொள்ளவில்லைத்தான். கணவர் இறந்தபின் வாரம் ஒருதடவை போன் எடுத்துக் கதைப்பது வழமையாகியது. இவளுக்கும் வேறு என்ன வேலை. தம்பியின் பிள்ளைகளும் அத்தை அத்தை என்று ஒரே வாரப்பாடுதான். ஆனால் பெடியள் இருவரும் “உங்கடை சொந்தத்திலை நாங்கள் கலியாணம் செய்யவே மாட்டம்” என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். அது இவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான் என்றாலும் பிள்ளைகளின் மனதை மாற்ற முடியாது என்பதால் இவளும் தான் ஆசையை அடக்கிக் கொண்டாள். நேற்றுப் போனில் கதைக்கும்போதும் “அக்கா ஒருக்கா வந்திட்டுப் போங்கோ, அம்மா இண்டைக்கோ நாளைக்கோ என்று இருக்கிறா” என்றதில் பிள்ளைகள் இருவரிடமும் கதைத்ததில் “நினைவே இல்லாமல் கிடக்கிறவவைப் போய் பார்த்து என்ன பிரயோசனம் அம்மா” என்கிறான் மூத்தவன். புதிதாக வேலைக்குச் சேர்ந்து இரண்டாம் மாதச் சம்பளம் பெற்றுக்கொண்ட துணிவில் இரண்டாவது மகன் “அண்ணா நான் அம்மாவுக்கு டிக்கற் போட்டு அனுப்புறன். செலவுக்கு மட்டும் நீங்கள் காசு குடுங்கோ என்றதில் சரி போனால் போகட்டும் என்று ஆயிரம் பவுண்டஸ் தாறன் என்று மூத்தவன் சொல்ல, இப்ப விடுமுறை காலமாதலால் இரு மடங்கு விலையில் டிக்கட் புக் செய்து தாயை நேரடியாகப் போகும் விமானத்தில் ஏற்றிவிடுகிறார்கள். கொழும்பு வந்து அக்காவைக் கூட்டிவர வானுக்கு 70,000 ரூபாய் என்கிறான் வதனியின் தம்பி குகன். மூத்தவன் விசாரித்ததில் கொழும்பிலிருந்து போக 35 ஆயிரம்தான். ஆனால் அம்மா தனியப் போறபடியால் மாமாவே கொழும்புக்கு வந்து கூப்பிடட்டும். காசு போனால் போகிறது என்கிறான் இளைய மகன். விமான நிலையத்துக்கு வதனியின் தம்பியார் மட்டுமன்றி மனைவி பிள்ளைகள் என்று அனைவரும் அக்காவை அழைத்துப்போக வந்திருக்க வதனிக்கும் மகிழ்வாகவே இருக்கிறது. இருபது ஆண்டுகளின் பின்னர் வருவதில் எல்லாமே புதிதாய் இருக்கிறது. ஏன் அக்கா பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே என்கிறான் தம்பி. அவங்களுக்கு வேலையில லீவு குடாங்கள் இந்த நேரம். ரிக்கற்றும் விலைதானே என்று சமாளிக்கிறாள் வதனி. காலையில் வந்தபடியால் இடையில் ஒரு உணவகத்தில் நிறுத்தி உண்டபின் பயணம் தொடர்கிறது. வீதி எங்கும் கடைகள் மாடிக் கட்டடங்கள் எனப் பார்க்க மலைப்பாக இருக்கிறது வதனிக்கு. ஆறு மணிநேரப் பயணத்தின் பின் அவள் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு வர அழுகை வருகிறது. தாயை நினைத்துத்தான் அவள் அழுவதாக எல்லோரும் நினைத்துக்கொள்கின்றனர். கணவர் பிள்ளைகளுடன் வர முடியவில்லையே என்பதில் வந்த அழுகையே அது. அக்கம் பக்கத்தவர்கள் சிலர் வந்து விசாரித்துவிட்டுப் போக நேரம் மாலை ஐந்து மணியாகிவிட்டதில், தம்பி ஒழுங்கு செய்த காரில் தம்பி குடும்பமும் இவளும் போய்த் தாயைப் பார்க்கின்றனர். நினைவின்றிக் கிடக்கும் தாயைப் பார்க்க இவளை அறியாமலே கண்ணீர் வருகிறது. இரண்டு நாட்களின் பின் “எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். இங்கே வைத்திருந்து பிரயோசனமில்லை. நீங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகலாம்” என வைத்தியர் கூற அடுத்த நாள் தாயை வீட்டுக்குக் கூட்டிவருவதாக ஏற்பாடு. தாயை வீட்டில் வைத்துப் பராமரிக்க ஒருவரை ஒழுங்கு செய்யலாம் என்றால் ஒரு நாளைக்கு மூவாயிரம் என்கின்றனர். ஆனாலும் அக்கா இருக்கும் துணிவில் சரி என்கின்றனர். உயர்த்திப் பதிக்கும் பிரத்தியேக கட்டில் ஒன்றரை இலட்சம் ரூபாய்கள். எந்த நேரமும் சாகத் தயாராக இருக்கும் அம்மாவுக்கு இத்தனை செலவில் கட்டில் வாங்கத்தான் வேணுமா என்று யோசித்தவளின் கௌரவம் வெற்றிபெற, வாங்கு தம்பி என்று பணத்தைப் பவுண்ஸ்சாகவே தம்பியிடம் கொடுக்கிறாள். தாயை வீட்டுக்குக் கொண்டு வந்தபின் அயலட்டைச் சனம் தொடங்கி சொந்தக்காரர் எல்லாம் தாயாரின் சாட்டில் வதனியையும் பார்த்துப் புதினங்கள் கேட்டுவிட்டுப் போகின்றனர். வீடு எந்தநேரமும் கலகலப்பாக இருக்கிறது. ஆட்கள் அடிக்கடி வந்து போவதனால் அப்பப்ப கடையில் இருந்தும் உணவு எடுக்கின்றனர். வடை, முறுக்கு, ரோள்ஸ் என்று வதனியையும் தாயையும் பார்க்க வருபவர்களுக்கு உபசரிப்பும் நடக்கிறது. தாயில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. மின் விசிறி இல்லாமல் முதல் நாள் இரவு வியர்வையில் குளித்ததில் காலை எழுதவுடனேயே “தம்பி பான் இல்லாமல் படுக்கேலாதடா என்றது மட்டுமன்றி உங்களுக்கும் சேர்த்துப் பான் வாங்குங்கோ என்றதில் எல்லாமாக நான்கு பான்கள் வந்திறங்க, வதனிக்கு நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது. அம்மா படுத்திருக்கும் வராந்தாவுக்கு ஒன்று. உங்கள் அறைக்கு ஒன்று. பிள்ளைகள் படுக்கும் அறைக்கும் எங்கடை அறைக்குமாக நான்கு வாங்கினது. சரிதானே அக்கா என்று தம்பி கேட்க ஓம் என்று தலையாட்டுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் வதனியால். இவள் வந்து இருவாரங்களில் தாயில் எந்த வித மாற்றமும் இல்லாவிட்டாலும் ஆட்கள் வந்துபோவது குறைகிறது. நல்லூர் திருவிழாவும் ஆரம்பித்துவிட்டதில் “அம்மாவைப் பார்த்துக்கொள்ள ஆள் இருக்குத் தானே அக்கா, நல்லூருக்குப் போட்டு வருவம் என்று தொடங்கி ரிச்சா பாம் வரை ஒவ்வொருநாளும் ஒரு இடமாக தம்பி குடும்பம் வதனியை ஊர் சுற்றிக் காட்டியதில் வதனி பிள்ளைகளுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்துக் கொண்டுவந்த பணமும் மொத்தமாகக் கரைந்து போக, மூன்று வாரங்களில் இத்தனை செலவா என மலைத்துப்போகிறாள் வதனி. கிடந்த மிச்சப் பயணத்தில் லண்டன் நண்பிகள் சொல்லிவிட்ட பற்றிக் நைட்டி முதற்கொண்டு அவர்கள் பிள்ளைகளுக்கு உடைகள், கோப்பித்தூள், அரிசிமா, மிளகாய்த்தூள் என வாங்கி முடிய இவளுக்குத் தாயைப் பார்க்கத்தான் தான் வந்தது என்பதே மறந்து போகிறது. இவள் வெளிக்கிடும் நாள் நெருங்க தம்பி குடும்பமே அதிகம் கவலை கொள்கிறது. மீண்டும் எழுபதாயிரம் ரூபாய்களுக்கு வான் ஒழுங்கு செய்து அக்கம்பக்கம் சொல்லிக்கொண்டு தம்பி குடும்பத்துடன் விமானநிலையம் வந்து சேர ஒருவித நிம்மதி பிறக்கிறது வதனிக்கு. தம்பி குடும்பம் கொழும்பிலிருந்து கிளம்பி நான்கு மணி நேரம் ஆகியிருக்கும். தாய் இறந்துவிட்டதாக தாயைப் பார்ப்பவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புச் சொல்ல, “ஐயோ அக்கா உனக்கு விதியில்லாமல் போச்சே” என அழும் தம்பியைப் பார்க்க முடியாத தூரத்தில் பறந்துகொண்டிருக்கிறது வதனியின் விமானம்.
  11. இலண்டனைச் சேர்ந்த ஈழப்பற்றாளரும்.. மார்ஸல் ஆர்ட்ஸ் வீரருமான, கென் சுதாகரன் அண்மையில் ஐரோப்பாவில் நடைப்பெற்ற Fight Star Championship போட்டியின் இறுதி போட்டியில் மிகப் பலமாக விளையாடி வெற்றியீட்டி சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டார்! சகோதரருக்கு எமது வாழ்த்துகள் 👏 ஈழ மங்கை. -
  12. பூனைகளின் பேச்சுவார்த்தை ----------------------------------------------- எவ்வளவு பெரிய பூனையாலும் எவ்வளவு சின்ன சுண்டெலியையும் அடித்துப் பறிக்க இயலாத ஒரு காலம் பூமியில் வந்திருந்தது அந்த ஒரு நாளில் ஒரு சுண்டெலியை சில பூனைகள் கூப்பிட்டன வரச் சொல்லி சமாதான காலம் தானே என்று கூட்டமும் சுற்றி நிற்கும் தானேயும் என்று துணிந்து உள்ளே வந்தது சுண்டெலி சுண்டெலியின் வீரம் தீரம் போற்றி ஆரம்பித்த பூனைகள் அடுத்ததாக அடித்துப் பறிக்க முடியாததை எழுதிப் பறிக்க ஆயத்தமாகின கேட்கிறதை கொடுக்கின்றேன் ஆனால் இன்னொரு அநியாயப் பூனை அது அங்கே என் வேலியில் எந்நேரமும் நிற்கின்றது அதை பதிலுக்கு தடுங்கள் என்றது பேச வந்த சுண்டெலி 'ராஜதந்திரமாக அணுக வேண்டும்.....' என்றது பெரிய பூனையின் உதவிப் பூனை கொஞ்சம் குனிந்த சுண்டெலி 'எந்த வகை ராஜதந்திரம்..........' என்று உதவிப் பூனையை மெதுவாகக் கேட்டது பூனைக் கூட்டம் துள்ளி விழுந்தன மின்சாரம் அடித்தது போல 'மியாவ் மியாவ்.......' என்று கத்தின நமக்கு இது அவமானம் என்று குறுகின நன்றி கெட்ட சுண்டெலி என்றன ஒரே ஒரு வார்த்தையால் அடிபட்ட பூனைகள் சுண்டெலிக்கு பொறி வைக்க வேலியில் நிற்கும் அந்தப் பூனையுடன் இனிப் பேசும்.
  13. நான் சொன்ன ஆண்டை யும் பின் குறிப்பையும் கவனித்தீர்களா? (Wink, wink).
  14. யாழ் கள விளையாட்டு போட்டி எதிர்வு கூறலில் முன்னணியில் நிற்பவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
  15. அதிகம் பதறினால் இது நடக்கும். இங்கே எங்கள் ஆட்கள் (இந்திய, இலங்கை வம்சாவழியினர்) யாராவது வளர்ப்பு நாயை நடை பாதையில் கூட்டி வருவதைக் கண்டால், அரை மைல் தூரத்திலேயே வீதியின் மறு கரைக்குப் போய் விடுவார்கள்😂. அவ்வளவு பயம். ஆனால், இங்கே அனேக வளர்ப்பு நாய்கள் பழக்கப் பட்டவை, உரைத்துக் குரைக்கக் கூட முடியாதவை. அதிலும் Labrador போன்ற சாதுவான வகை நாயினம் என்றால் ஓனர் தான் அதனை அணில், பூனை ஆகியவற்றிடமிருந்து பாதுகாக்க வேண்டும்! அவ்வளவு சாது இவை!
  16. போட்டிகள் தொடங்க முன்னர், பாகிஸ்தான் இந்தியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தும் என்று நானும் ஒரு சாத்திரம் சொல்லியிருந்தேன்................... நான் தான் வீழ்ந்து போனேன்.................🤣.
  17. 🤣............... மூன்று தடவைகள் நாய்க்கடி வாங்கியிருக்கின்றேன் என்று சொல்ல எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது................... ஏனென்றால் இதை வைத்தே சில பகிடிகளை சொல்லுவார்களே என்று. உங்களுக்கும் மூன்று தடவைகள் இது நடந்திருக்கின்றது என்பது ஒரு புதுத் தைரியத்தை கொடுக்கின்றது...........🤣. அடுத்த தடவை ஊருக்கு போகும் போது, எப்படியும் இந்தச் சந்தர்ப்பம் அமையத் தான் போகின்றது..... மெதுவாக அவைகளைக் கண்டும் காணாமல் போகப் போகின்றேன்...... ஆனால் நான் பாடுவதாக இல்லை......... இங்கு வட கலிஃபோர்னியாவில் ஒரு நண்பர் மிருக வைத்தியராக இருக்கின்றார். சில மாதங்களின் முன் என்று நினைக்கின்றேன், சிகிச்சைக்கு வந்த ஒரு பெரிய நாயை அவர் எதற்காகவோ தூக்கவோ அல்லது அசைக்கவோ முற்பட, அது திமிறியதில், அவருக்கு இடுப்பு பிடித்து, பல நாட்கள் சிரமப்பட்டார்.........
  18. நிச்சயமாக! முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதி பகுதியாக பார்க்க வாய்ப்புள்ளது.
  19. பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (05 மார்ச்) இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், தென்னாபிரிக்கா அணி (குழு B முதல் இடம்) எதிர் நியூஸிலாந்து அணி (குழு A இரண்டாவது இடம்) 07 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒரே ஒருவர் மாத்திரம் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக்கணித்துள்ளார். போட்டியில் இல்லாத வேறு அணிகளைக் கணித்த 16 பேருக்குப் புள்ளிகள் கிடையாது! நாளைய அரையிறுதிப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
  20. Editorial / 2025 மார்ச் 04 , பி.ப. 07:18 - 0 - 25 பாலித ஆரியவன்ச இந்தியாவின் தமிழ்நாடு புதுக்கோட்டை கிராமத்தில் பிறந்த தெய்வானை ராமசாமி, தனது 4 வயதில் தனது தந்தையுடன் இலங்கைக்கு வந்தார். அவர் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலைக்குச் சென்றபோது அவருக்கு 8 வயது. ஒரு தேயிலைச் செடியை விட உயரமில்லாத இந்தப் பெண், முதுகில் தொங்கும் ஒரு பிரம்புக் கூடையுடன் கொழுந்துகளை பறிக்கும்போது, கங்கனியால் பலமுறை பிரம்பால் அடிக்கப்பட்டிருக்கிறாள். வேறு எந்தக் குற்றத்தாலும் அல்ல. ஏனென்றால் தேவையான அளவு தேயிலை கொழுந்து பறிக்கப்படவில்லை என்பதற்காக. இந்தத் துன்பங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு வேலை செய்யக் கற்றுக்கொண்ட தெய்வானி, டீன் ஏஜ் பருவத்தை அடையும் போது, தோட்டத்தில் அதிக கொழுந்துகளை பறிக்கும் திறமையான இலை பறிப்பாளராக மாறிவிட்டார். நான் என் மாமாவுடன் சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு 15 வயது. பின்னர், அந்தப் பெயர் முத்து தெய்வானை என மாற்றப்பட்டது. பெற்றோரின் அழுத்தம் காரணமாக, அந்தத் தம்பதியினரின் வாழ்க்கை இப்படித்தான் தொடங்கியது. இந்த தகவலை அன்னை தேவி சுமார் 2 வருடங்களுக்கு முன்பு என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவள் எனக்குக் கூடுதல் தகவல்களைச் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. அன்று அன்னை தெய்வானியின் கதையை நான் ஆவலுடன் கேட்டேன். "கடந்த காலத்தில், தோட்டங்கள் வெள்ளையர்களால் நிர்வகிக்கப்பட்டன. தேயிலைத் தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது. நாங்கள் சுண்ணாம்பு அறைகளில் இருந்தோம். அவர்கள் சுண்ணாம்பு அறைகளை உரம் மற்றும் களிமண்ணைப் பயன்படுத்தி மிகவும் சுத்தமாக வைத்திருந்தனர். வெள்ளைக்கார மனிதர் குதிரையில் வந்து எலுமிச்சை பழங்களின் சுத்தத்தைப் பரிசோதிக்கிறார். அது அழுக்காக இருந்தால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால் இப்போது போலல்லாமல், அப்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அரிசி ரேஷன் மற்றும் மாவு ரேஷன் தோட்டத்திலிருந்தே வழங்கப்படுகிறது. விறகுகளும் தோட்டத்திலிருந்துதான். தோட்டத்தில் கிடைக்கும் தேயிலை இலைகள் மற்றும் பிற பொருட்களின் விலை மிகவும் குறைவு. நாங்கள் பெரும்பாலும் அரிசி, கொண்டைக்கடலை உள்ளிட்ட தானியங்களை சாப்பிட்டோம். நோய் குறைவாக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நம் நாடு சிறிது காலம் நன்றாகச் செயல்பட்டாலும், இப்போது தோட்டங்கள்இடிந்து விழுந்துவிட்டன. நான் இப்போது ஸ்பிரிங் வெலி தோட்டத்தில் கொட்டகொட பிரிவில் இருக்கிறேன், அது ஒரு எலும்புக்கூடு போல தோற்றமளிக்கும் ஒரு தொழிற்சாலை. தொழிற்சாலை மூடப்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது போன்ற பல தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன என்று என் பேரக்குழந்தைகள் கூறும்போது என் இதயம் உடைகிறது. ஊட்டச்சத்து இல்லை. குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள், அவர்களின் குழந்தைகளின் குழந்தைகள் படும் துன்பங்களைப் பார்க்கும்போது, சில சமயங்களில் நானும் பாவம் செய்துவிட்டேன் என்று நினைக்கத் தோன்றுகிறது.அன்று தெய்வானை சொன்னாள். கடைசியாக அவளைப் பற்றி செய்தி வெளியிட்டபோது, அவளுக்கு 108 வயது. வீட்டின் முன் இருந்த சிறிய முற்றத்தை அவர் பெருக்கி சுத்தம் செய்த விதம், கோழிக் கூடுக்குள் புகுந்து முட்டைகளை வெளியே எடுத்த விதம், கடந்த காலத்தை நினைத்து சிரித்த விதம் ஆகியவற்றை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். ஏழு குழந்தைகள், 45 பேரக்குழந்தைகள் மற்றும் 15 நான்காம் தலைமுறை குழந்தைகளைப் பார்க்கும் ஆசீர்வாதத்துடன் தாய் தெய்வானை 110 ஆண்டுகள் வாழ்ந்தார். ஸ்பிரிங் வேலி தேயிலைத் தோட்ட மக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அவர்களின் நீண்ட பயணத்திற்குப் பிறகு சிறிது நேரத்திலேயே அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். தேவியின் பேத்தி மலகமட ராசலிங்கம் மல்லிகா, அவரது வாழ்க்கையை பின்வருமாறு விவரித்தார்: "பாட்டிக்கு ஒருபோதும் உடம்பு சரியில்லாமல் போனதில்லை." மிகவும் ஆரோக்கியமான பாட்டி. எங்கள் குழந்தைகளைக் கூட பாட்டி கவனித்துக் கொண்டார். நான் என் வீட்டுப்பாடத்தை நன்றாகச் செய்தேன். என் பாட்டியின் 103வது பிறந்தநாளுக்கு நாங்கள் அழகாகத் தயாராகிக் கொண்டிருந்தபோது, இந்தியாவில் ஒரு மகன் (என் மாமாக்களில் ஒருவர்) இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அதனால் நாங்கள் அந்த பிறந்தநாளைக் கொண்டாடவில்லை. பாட்டி இறக்கும் வரை அந்த மரணம் பற்றி அவளுக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் பாட்டியின் 110வது பிறந்தநாளைக் கொண்டாடினோம். அன்று இலங்கையில் தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், அழகான கேக் வாங்கப்பட்டது, பல உணவுகளை சமைத்தார். இந்தியாவில் உள்ள ஒரு மகளின் மகனால் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை, அதனால் அவர் சில நாட்களுக்குப் பிறகு வந்தார், அவர் அங்கு இருந்தபோது, அவரது பாட்டி இறந்துவிட்டார். இந்த மரணம் வயது முதிர்வு காரணமாக நிகழ்ந்தது என்று தீர்மானிக்கப்பட்டது. அவளே அழுது கொண்டே, இந்தியாவிலிருந்து வந்திருந்த தன் பேரன் தன் பிறந்தநாளுக்குக் கொண்டு வந்திருந்த அழகான புடவையைத் தன் ஆச்சியின் உடலின் மேல் போர்த்தினாள் என மல்லிகா என்னிடம் சொன்னாள். பேரன் தியாடகராஜா, தனது பாட்டியைப் பற்றி மேலும் கூறினார். "பாட்டி தெய்வீகப் பாடல்களையும் நாட்டுப்புறப் பாடல்களையும் அழகாகப் பாடுவார், சில சமயங்களில் அருட வேலயில் பக்தியுடன் நடனமாடுவார்." நீங்கள் குழந்தைகளை, குழந்தைகளின் குழந்தைகளை, அந்தக் குழந்தைகளின் குழந்தைகளைப் பார்த்தால், சுமார் 60 தலைமுறைகள் உள்ளன. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவில் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் எங்களைப் பார்த்ததே இல்லை. "இந்த மரணம் எங்களுக்கு துக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது," என்று பேரன் கூறினார். இறுதி ஊர்வலத்தில் உடன் சென்ற நானும் ஒரு பெரிய அதிர்ச்சியை உணர்ந்தேன். உடல் மரியாதையுடன் ஒரு விலையுயர்ந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. கொடிகளை உடைக்காத தோட்ட மக்கள், தங்கள் இரங்கலைப் பகிர்ந்து கொள்ள வந்தனர். சுற்றுவட்ட மக்களும், ஸ்பிரிங் வேலி மற்றும் கோடா கிராம மக்களும் மூன்று நாட்களாக உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததாக அறியப்பட்டது. இந்து வழக்கப்படி, மதச் சடங்குகளைச் செய்த பிறகு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் உடல் வைக்கப்பட்டது. இந்த தேனா இந்தியாவில் உள்ள பிரமுகர்கள் மட்டுமே பயன்படுத்தும் தேனாவைப் போலவே தயாரிக்கப்பட்டது என்று அறியப்பட்டது. இறுதி ஊர்வலம் லைம்பேலா வழியாக பிரதான சாலைக்கு கொண்டு வரப்பட்டது. முன்னால் ஒரு இசைக்குழு அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தது. தோட்டங்களில் இறுதிச் சடங்குகளில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் இறுதிச் சடங்கு இசைக்குப் பதிலாக, மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒரு இசைக்குழு கொண்டுவரப்பட்டதாக சிலர் கூறினர். ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கேட்டபோது, "நீங்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை? வேறு யாரும் இவ்வளவு காலம் வாழ்ந்ததில்லை" என்றார்கள். இறந்தவருடன் சென்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். நாங்கள் மீண்டும் பாரம்பரிய பாடல்களைப் பாடி, கைதட்டி மகிழ்ச்சியடைகிறோம். ஏன் அப்படி? நான் கேட்டேன். தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் இந்து மக்கள், அப்படி மகிழ்ச்சியாக இருக்கும்போது, இறந்தவருக்கு நல்ல ஆன்மா கிடைக்கும் என்று நம்புவதாக அவர்கள் கூறினர். மக்களின் ஆயுட்காலம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால், அன்னை தெய்வத்திடமிருந்து நீண்ட ஆயுளைப் பெறுவது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தோட்டத்தின் ராணியாக இருந்த அவளுடைய பாசத்தை இழப்பது அனைவருக்கும் ஒரு துக்கமாகும். எனக்கு உயிர் கொடுத்த தேயிலை மரம், தேயிலை புதர்களுக்கு மத்தியில் நான் கல்லறையில் தனியாக படுத்திருந்த தேயிலை மரம், தேயிலை மரத்தை குடிக்கக் கொடுத்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் போது, ஒரு மழைத்துளி கண்ணீர் துளியாக விழுந்து தேயிலை மரத்தை முத்தமிட்டது. Tamilmirror Online || 110 ஆண்டுகள் ராணியாகவே வாழ்ந்த தெய்வானை
  21. சந்தேகம் வேண்டாம். தியரி பிழை😂. நாய் போன்ற வேட்டைக்குப் பழக்கமான மிருகங்களை முன்னே நின்று நேரே கண்களைப் பார்த்தால், அவை உங்களை அச்சுறுத்தலாகத் தான் பார்க்கும்! அதனால் நிச்சயம் கடிக்கவே செய்யும். ஏராளன் சொல்வது போல, ஓடினால் நாய் துரத்துவதற்கான வாய்ப்பு அதிகம். ஏனெனில், வளர்ப்பு நாய்க்குக் கூட, ஓடும் ஒன்றைத் துரத்த வேண்டுமென்ற default setting இருக்கிறது. இதனால் தான் வளர்ப்பு நாய் உள்ள வீட்டில் சிறு குழந்தைகள் இருக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். எனவே, கடி வாங்காமல் இருக்க ஒரே வழி, கடி நாய்/தெரு நாயைத் தவிர்ப்பது தான். அப்படித் தவிர்க்க முடியா விட்டால், பையப் பைய (கூலாக ஒரு பாட்டை முணுமுணுத்தபடி) சாதாரணமாக நடந்து போக வேண்டும்😂. திரும்பிப் திரும்பி பார்த்து வேகமாக நடந்தால், கடி வாங்கும் வாய்ப்புகள் அதிகம். என் அனுபவத்தில் சுவாரசியமான விடயம்: நான் மிருக வைத்தியராக வருவதற்கு முன்னர் 3 தடவைகள் நாய்க் கடி வாங்கியிருக்கிறேன். மிருக வைத்தியராக வந்து நூற்றுக் கணக்கான நாய்களைக் கையாண்ட போது, ஒரு தடவை கூடக் கடி வாங்கவில்லை. எந்த விலங்கை எப்படி அணுக வேண்டுமென்ற பயிற்சியை முதல் வருடத்திலேயே தந்து விடுவார்கள்.
  22. உங்களுக்கும், எல்லோருக்கும் என்னுடைய அனுமதி தாராளமாக இருக்கின்றது. நான் துண்டு துண்டாக பலதையும் பத்தையும் இங்கு களத்தில் எழுதிக் கொண்டிருக்கின்றேன். இங்கு களத்தில் எழுதுவதை ஒரு பொழுதுபோக்காகவே ஆரம்பித்தேன். இதே தலைப்பில் அல்லது இவை சம்பந்தமான விடயங்களை தொடர முடிந்த அளவிற்கு முயற்சி செய்கின்றேன். உங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி...................🙏.
  23. இதெல்லாம் கோர்ட் தீர்மானிக்க வேண்டியது, விரும்பி இருந்தாரா, ஆசை காட்டி ஏமாற்றியதால் இருந்தாரா என்று - இனி கோர்ட்டும் தீர்மானிக்காது, சீமான் உச்ச நீதி மன்றில் போய் ஒளிந்து கொண்டதால். அதுவல்ல முக்கியம்: சீமான் உங்களுக்கு யார், நான் உங்களுக்கு யார்? நான் ஒரு சக கருத்தாளன், என் குடும்பம் இங்கே விவாதத்தில் இல்லை! ஒரு பிரபலம் கடந்த சில நாட்களாக நடந்து கொண்ட விதம், இந்திய இராணுவ விங் என்று புதிதாக ஆரம்பித்திருப்பது போல பாலியல் குற்றவாளிகள் விங் என்றும் தொடங்கலாம் என்றேன். இதற்காக, என்னை நீங்கள் தாக்கும் அளவுக்கு உங்களுக்கு "சுட்டு" விட்டதா? அப்படியானால் நீங்கள் சீமானா😂? அல்லது சீமானின் அடிமையா? கருத்தொன்று உங்களை நோக்கி சொல்லப் படுகிறதா அல்லது வாதத்தின் மையப் பொருளான அரசியல்வாதி நோக்கிச் சொல்லப் படுகிறதா என்ற அடிப்படைத் தெளிவை வாசித்துப் பெற இயலாமல், ஏன் பெயரில் மட்டும் "தமிழ்" வைத்திருக்கிறீர்கள்😂? இந்த போலிப் பந்தாவைத் தான் "சீமான் தம்பிகளின் இயல்பு" என்றேன்!
  24. இந்தியை இராணுவ அனுபவம்...உங்கள்கதையை பார்த்தபின் கண்முன்னே ஓடுகிறது..அடிவாங்கி ..பிடிபட்டு ..உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் வாழ்ந்தகாலம்...இந்த இரு இராணுவத்தாலும் பட்ட அனுபவத்தை ...சொல்லமுடியாது... நல்ல அழகான எழுத்துநடை...தொடர்க
  25. இந்த கோணத்தில்தான் சீமானின் அரசியல் எதிரிகள் இதை அணுகுவார்கள். நீங்கள் சொல்வது போது இது சீமான் வாழ்வில் ஒரு தீராத வடுவாகவே இருக்கும். சீமான் குற்றவாளி, குற்றமற்றவர் என தீர்ப்பு வருவதை விட, இப்படி முடிவதே சீமானின் எதிர்களுக்கு மிகவும் சாதமகானது. இதை வைத்து வாழ்நாள் பூராவும் சீமானை வெளுப்பார்கள். நானும் எந்த நிலைக்கும் இறங்கி சீமானை வெளுக்க தயார்தான். ஆனால் இது மிக அநீதியானது. பிகு விஜி அண்ணி உயிருக்கு ஆபத்து ஏதும் வந்து விடக்கூடாது என்பதே சீமானின் இப்போதைய பெருங்கவலையாக இருக்கும். திமுக காரனே போட்டு தள்ள கூடும். அப்படி ஏதும் நடந்தால் சீமானின் அரசியல் வாழ்வுக்கு சங்குதான்.
  26. அடுத்தவன் சொல்லைக் கேட்டு ஆடினால் இது தான் நடக்கும். இத்தோட விட மாட்டாங்கள். தேர்தல் வரும் நேரங்களில் ஏதாவது சொல்லி ஏமாற்றி கூட்டி வருவார்கள்.
  27. 🤣......... இந்திய ராணுவம் வந்த ஆரம்ப நாட்களில், அவர்கள் எங்களுடைய உறவுகள், எங்களுக்கு உதவிகள் செய்யப் போகின்றார்கள் என்ற எண்ணத்தில் நாங்கள் பலரும் இருந்தோம். நாங்கள் 'லிபரேஷன் ஆபரேஷன்' நடந்த போது ஊரை விட்டு ஓடியிருந்தோம். இந்திய ராணுவம் வந்தவுடன் ஊருக்கு திரும்பி வந்தோம். வரும் வழிகளில் அவர்களைப் பார்த்த போது மிகவும் நேர்மறையான எண்ணம் இருந்தது. ராணுவ ரகசியம் என்னவென்றால்................. ராணுவம் எப்போதுமே ராணுவம் தான்............... எவ்வளவு தூரத்தில் அவர்களை வைத்திருக்கின்றமோ அவ்வளவிற்கு அனுகூலம்.........👍. நாய்களின் கண்களை நின்று நேரே பார்த்தால், அவை பின்னால் போகும் அல்லது அடங்கி விடும் என்று எங்கோ வாசித்த ஞாபகம். மூன்று தடவைகள் நாய்களிடம் கடி வாங்கியிருக்கின்றேன், இரு தடவைகள் இலங்கையில், ஒரு தடவை திருச்சியில்........... ஆதலால் இந்த தியரியில் பலத்த சந்தேகம் இருக்கின்றது................🤣.
  28. இது நான் முதலே சொல்லிவிட்டேன்… நாம் லிவிங்கி ருகெதரில் இருந்தோம் செட்டாகவில்லை பிரிந்துவிட்டோம் என்று அப்பவே சீமான் சொல்லி இருந்தால் இன்று பலரின் நேரம் மிச்சமாகி இருக்கும்…
  29. வாழ நினைத்தால்... வாழலாம், வழியா இல்லை பூமியில்.
  30. ஈ வே ரா இதற்குள் வருவார்… ஆனால் அக்னி அவரை ஆதரிப்பதில்லை. ஈவேரா வை நானும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில்லை, குறிப்பாக அவரின் பாலியல் சுதந்திரம், கடவுள் குறித்த நிலைப்பாட்டில். அப்படி என்றால் உச்ச நீதி மன்றம் வழக்கு விசாரணைக்கு பூரண தடை அல்லவா போட்டிருக்கும்? ஏன் சீமானை விஜி அண்ணியோடு இழப்பீடு தொடர்பாக பேச 2 மாதம் அவகாசம் கொடுத்தது? குற்றவியல் வழக்குகள் எப்போதும் state vs Individual தான். யூகேயில் அரசரை குறிக்கும் முகமாக R என்பார்கள். உதாரணமாக R vs Goshan. Individual vs Individual அல்ல (அவை சிவில் வழக்குகள்). ஆகவே புகார் கொடுத்தவர் வாபஸ் வாங்கினாலும் ஒரு குற்றவியல் வழக்கை அரசு தொடர்ந்து நடத்தலாம். ஆனால் பாதிப்புக்கு உள்ளானவர் சாட்சியம் கொடுக்காவிடின் குற்றத்தை நிறுவுவது கஸ்டமாகும்.
  31. திங்கக்கிழமையில இருந்து ஞாயித்துக்கிழமை வரை நாம் தமிழர் கட்சியை திட்டுவதையும் அங்கிருந்து ஆட்கள் விலகிக்கொண்டிருக்கிறார்கள் என்று விளம்பரம் செய்வதிலும் திமுக மற்றும் சீமான் போபியாக்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்க தலைவன் தன்வழியில் அரசியல்கூட்டங்கள் மக்கள் போராட்டங்கள் என்று மக்களோடு பிஸி.. நேற்றும் ஒரு இடத்தில் சீமான் கொலமாஸ் என்ரி குடுத்த தருணம்.. மக்கள் விரும்பி அழைக்கிறார்கள்..கூட்டம் அள்ளுது..சீமான் போபியாக்கள் வயிறு எரியுது..🤣🤣
  32. நீங்கள் புள்ளிகள் போய்விட்டது என கவலைப்படுகிறீர்கள் அங்கு ஒருவருக்கு பதவி போய்விட்டது.🤣
  33. அவரின் ஆடை அலங்காரமெல்லாம் மக்கள் முன் அவரை உயர்ந்தவராக காட்டவில்லையே? உந்த ஆடை அவருக்கு தகுதியற்றது என ஆயிற்று. செய்வாரென்றா நினைக்கிறீர்கள்? அப்படியானால் ஏன் சிறிதரனை அங்கே கலைத்து தான் பாராளுமன்றம் போக முயற்சிக்கிறார்? தானே முதலமைச்சருக்கு போட்டியிடலாமே? அவர் இப்போ தன் நிலைமையை இன்னும் மோசமாக்கி வைத்திருக்கிறார். அவரெல்லாம் தேர்தலில் நின்று வெல்வதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. யாரையாவது விழுத்தி, ஏமாற்றி, குறுக்குவழியில் பாராளுமன்றம் போய் அநுராவின் காலை பிடிப்பதற்கு முயற்சிக்கிறார். அவருக்கு தெரிந்ததெல்லாம் அந்த தொழில்தான். சுமந்திரனுக்கு இப்போ இறங்கு முகம் போலுள்ளது, அவரது எஜமான்கள் வீழ்ந்தது. கண்டிப்பாக! அதுவரை அவருக்கு உறக்கமில்லை. அவர் எடுக்கிற முயற்சியெல்லாம் தடக்கிறது.
  34. வேறை விளக்கம் கொடுத்தபடி எப்படியும் பாராளுமன்றம் வந்து தமிழரை கருவறுத்து சிங்களத்துக்கு சேவகம் செய்யும் இந்த சுமத்திர ஓணான் .
  35. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இல்லா விட்டால் ஐரோப்பாவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்திருக்கும். இருந்தாலும் உந்த கூட்டணி ஏதோ ஒரு நாடகம் போல் தெரிகின்றது.
  36. சீமான் என்டு எழுதி ஒரு துண்டை குடுத்தா நையிட்டு தின்னுட்டு.. காலைல... பஸ் புடிச்சி வந்துடுவாங்கள்... இன்னும் ஒன்டு தா எண்டு...🤣
  37. எனக்கு 2016 இல் ட்ரம்ப் ரீம் தந்த பாடம் தான் நான் சீமான் போன்றோரைத் துகிலுரியக் காரணம். அமெரிக்காவில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பெரிய காட்சிப் பலகைகளில் காட்டுவார்கள்: "If you see something, say something" "ஏதும் சந்தேகத்துக்கிடமாகக் கண்டால், உம்மென்றிருக்காமல் வாயைத் திறந்து சொல்லு" என்பது தான் தொனி. இதை அமெரிக்கர்கள் எல்லோரும், எல்லா சூழ்நிலைகளிலும் பின்பற்றியிருந்தால் இன்றைக்கு உலகம் தலைகீழாக மாறியிருக்காது! 2015 இலேயே வெட்டிப் போட்டிருக்க வேண்டிய விஷச் செடியை, சின்னச் சின்ன லாபங்கள், கோபங்களுக்காக சிலர் ஆதரிக்க, ஆதரிக்காதோர் மௌனமாக இருக்க, இன்று அந்த விஷச் செடியே உலகின் சக்தி மிக்க அரசைச் சுற்றி வளைத்திருக்கிறது. பாடம்? சிறிதோ, பெரிதோ - பிழையை, மொள்ளமாறித்தனத்தை சுட்டிக் காட்டவும், போட்டு மிதிக்கவும் வேண்டும்! நாம் மிதிப்பதால் உலகம் மாறிவிடுமா என்று தத்துவம் பேசிக் கொண்டிருக்காமல், அறரீதியில் சரியான பக்கம் நிற்கவும், பேசவும் வேண்டும்!
  38. ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்ற தேவைக்காக மட்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் -unity for the sake of unity என்பதில் எனக்கு உடன்பாடில்லை. சீமான் என்ற தமிழக அரசியல்வாதி- அவரது தொடர் பொய்கள், எங்கள் ஈழமக்களின் துன்பங்கள், புலிகளின் தலைமையின் பிரபலம்- ஆகிய எல்லாவற்றையும் கூட்டிக் கலந்து தனது வாக்கரசியலுக்குப் பயன்படுத்துகிறார். இவர் தமிழகத்தின் ஏனைய அரசியல்வாதிகளை விட திறமான ஒருவரல்ல என்பதை வெளிக்காட்டும் பல சம்பவங்கள் நடந்து விட்டன. எனவே, ஏனைய தமிழக அரசியல் வாதிகளைப் போலவே அவரையும் நடத்துவதே முறை. அதை விட்டு விட்டு, அவரைத் தலையில் தூக்கி வைப்பது, அவர் செய்யும்/பேசும் ஈனத்தனமான செயல்களையும் வெள்ளையடிப்பது என யாழில் சில ஆதரவாளர்கள் நடந்து கொள்ளும் போது, அவர்களது செயல்களை சவாலுக்குட்படுத்த வேண்டும். "ஒற்றுமை" என்ற பெயரில், இத்தகைய நச்சு விதைகளைக் காவித் திரிவோரை நாம் அணைத்துக் கொள்ள முடியாதென நான் நினைக்கிறேன்.
  39. ஓம் அண்ணை. இன்னொன்று பிளாஸ்ரிக் வடிகட்டியில் கொதிக்கும் சுடுநீரை ஊற்றி தேநீர் தயாரிப்பது. இதுவும் பாதிப்புகளை உருவாக்கும்.
  40. உ்ங்களை தர்க்கத்தில் வெல்லும் நோக்கம் எனக்கில்லை அண்ணை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தகவல்களில் தவறு இருக்கலாம் என கருதியே கைத்துப்பாக்கி அனுமதி தொடர்பான விபரங்களை பகிர்ந்தேன். கைத்துப்பாக்கி அனுமதி உள்ள பாதுகாவலர்களுக்கு சம்பளம் அதிகமாம் என குறிப்பிடுகிறார்கள். சீமானுடைய பேச்சு, முன்னைய செயற்பாடுகளால் அவர் மீது உங்களுக்கு கடும் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது என எனக்கு புரிகிறது, ஆனால் எல்லோருக்கும் அந்த புரிதல் வருகையில் உங்கள் நிலைக்கு எல்லோரும் வருவார்கள். சில வேளைகளில் அவரை திட்டமிட்டு வீழ்த்த செய்கிறார்களோ என்ற எண்ணமும் வருகிறது. எல்லாவற்றையும் விட யாழ் இணையமும் இங்குள்ள ஒவ்வொருவரும் ஒற்றுமையோடு இருக்கவேண்டும். அதற்கு பாதகமாக எந்த ஒரு எழுத்தையும் எழுத விரும்பவில்லை. அளவுக்கு அதிகமாக சிதறிவிட்டோம்.
  41. உஷ் ......... சும்மா இருங்கோ . ..........நாங்களே அவரைப் பார்த்துத்தான் ஆறுதல் அடைகிறோம் .......! வாழ்த்துக்கள் முதல்வர் புலவர் அவர்களே ......! 👍
  42. என்னாலேயே நம்ப முடியவில்லை.இதுதான் முதல்தடவை இடைக்கால முதல்வராக வந்துள்ளேன்.இதுவரை காலமும் என் தெரிவுகளில் என் விருப்பத்துக்கு முன்னுரிமை கொடுத்து பின்வரிசை உறுப்பினராக இருந்தேன்.இம்முறை திறமை அடிப்படிடையில் யதார்த்தத்துக்கு முன்னுரிமைகொடுத்து தெரிவுகளைச்செய்திருந்தேன்.3 உறுப்பினர்களை வைத்திருந்த ஜேவிபி ஆட்சியைப் பிடித்த மாதிரி தேர்தலில் தோற்ற ரணில் ஜனாதிபதியாகிய மாதிரி ஒரு பீலிங்
  43. அமெரிக்காவில் ஆட்சி மாறும் வரைக்கும் உக்ரேனுக்கு ஆயுதங்கள்,இராணுவ உதவிகள் வழங்கிக்கொண்டிருந்தவர்கள் டொனால்ட் ரம்ப் ஆட்சிக்கு வந்ததும் அமைதி விரும்பிகளாக மாறிவிட்டார்கள். 🤣 இதில் கொடுமை என்னவென்றால் உக்ரேனுக்கு ஆதரவளித்த அரசுகளும்,அரசியல் தலைவர்களும் மண்ணைக்கவ்வுவதுதான் நடைமுறை சம்பவங்களாக உள்ளன. அதிலும் நடந்து முடிந்த ஜேர்மனிய தேர்தலில் உக்ரேன் போரை முன்னெடுத்த இரு கட்சிகளும் பாரிய பின்னடைவை சந்தித்தது நல்லதொரு படிப்பினையாகும். நிற்க... பெரிய பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகினாலும் உக்ரேன் விடயத்தில் ஐரோப்பாவை பாதுகாக்க வேண்டும் என முனைப்பாக இருக்கின்றது.😂 ரஷ்யாவும் பெரிய பிரித்தானியவும் நிரந்தர பகையாளிகள் என்பது உலகறிந்த விடயம்.அதிலும் செலென்ஸ்கியும் பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் சந்திப்பு கவனிக்கப்பட வேண்டிய விசயம் கண்டியளோ😎
  44. கடைசியில் கலோவினுக்கு விற்கும் முட்டைக்கும் சாதாரண முட்டைக்கும் வித்தியாசமே தெரியாது.
  45. இவர் தமிழர்களுக்காக பேசவில்லை.பின்னால் இருக்கும் ஓரிருவருக்காக பேசுகிறார். இவர்களை நம்பினால் தமிழர்களுக்கு எப்படி விமோசனம் கிடைக்கும்.
  46. ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம் என் ஆடுகளை வேலியால் எட்டிப்பார்த்த என்னருமைத் தோழனே…. எட்டிப்பார்க்கும் அவசரத்தில் நீ பலதை உன்னிப்பாக கவனிக்கவில்லை. கவனித்தாயா? அந்த ஆடுகளுக்கு குறி சுடப்படவில்லை. இந்த பட்டியில் இதற்கு முன் நின்ற அத்தனை ஆடுகளும் பல குறிகளை தாங்கித்தான் நின்றன - அந்த தாடிக்கார மேய்பனின் புத்தகத்தை படித்த பின் தான், குறிகள் ஏதும் என் ஆடுகளுக்கு இடப்படவே இல்லை. பார்த்தாயா? ஈசான மூலையில் கறுப்பும் பழுப்புமாய் நின்ற குட்டி ஆடு உன் காமாலை கண்ணுக்கு தெரியவில்லையா? அதன் அம்மா அப்பாவை நாந்தான் சேர்த்துவைத்தேன். எங்கள் ஆட்டு மந்தையில் அது ஒரு வரலாறு. பல சம்பவங்களின் பின் நடந்தேறியது. அங்கேயும் பட்டியின் பழைய கதவுகளை நெட்டித்திறக்க எனக்கு உதவியது அந்த கெட்டிக்கார கிழவனின், வளைந்த கைத்தடிதான். ஒ..தோழனே… அந்த மூலையில் ஒரு மறிக்குட்டி, கிடாய்கள் பலதை மேச்சல் தரை நோக்கி கூட்டி போனதை ஏன் நீ கண்ணுறவில்லை? உனக்குத்தெரியுமா தோழா? என் மறிக்குட்டிகள், உன்னை போல் ஓராயிரம் கிடாய்களே ஒரு நேர்கோட்டில், ஒத்தை ரோட்டில் கூட்டிச்செல்லவல்லன. இந்த ரோட்டும், நான் ஆரம்பித்ததில்லை நண்பா - ஈரோட்டில் ஆரம்பித்தது. என் காணியின் மூலையில் இருக்கும் வேலாயுத மேடை உன் கண்ணை உறுத்தியது என நினைக்கிறேன். புரிந்துகொள் நண்பா… யார் என்ன சொன்னாலும், நானே சொன்னாலும்… உன் புத்திக்கு சரி எனப்படுவதை மட்டுமே ஏற்று கொள் என்பதுதான் எங்கள் அரிவரிப்பாடம். நாங்கள் தனிமனிதனை தொழுபவர்கள் அல்ல தோழா, எவர் சொல்லுக்கும் நாம் கட்டுப்பட்டவர்களும் அல்ல. எம் புத்திக்கு புலப்படுவதையே செய்கிறோம்… நான் மட்டும் அல்ல, என் ஆடுகளும். பட்டியில் இருந்தாலும்….பட்டி நீங்கி பயணம் போனாலும். -கோஷான் சே-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.