Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    87990
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19134
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    38770
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/23/25 in all areas

  1. காணொளி: 👉 https://www.facebook.com/reel/9840218522704246 👈 👆 குறிகாட்டுவானில்... ஜட்டி தொழிற்சாலை வரப்போகுதாம். 😅 இன்றே வாங்கிப் பாவியுங்கள்... குறிக்கட்டுவான் ஜட்டிகள். 🤣 @குமாரசாமி , @goshan_che , @suvy , @ஈழப்பிரியன் , @alvayan , @satan , @nunavilan , @Kandiah57 , @putthan, @நிழலி , @உடையார், @புலவர் , @ஏராளன் , @கிருபன் , @விசுகு , @பாலபத்ர ஓணாண்டி, @பெருமாள், @புங்கையூரன், (குறிகாட்டுவான் படகுத்துறை | kurikadduvan jetty)
  2. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 41வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பப் போனதால் 13 ஓட்டங்களிலேயே 4 விக்கெட்டுகள் பறிபோயிருந்தது. பின்னர் ஹென்றிக் க்ளாஸனின் 71 ஓட்டங்களுடனும் அபிநவ் மனோகரின் 43 ஓட்டங்களுடன் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களையே எடுத்தது. ட்ரென்ட் போல்ற் 26 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் இலகுவான வெற்றி இலக்கை வேகமாக அடையும் நோக்கில் வேகமாக அடித்தாடினர். ரோஹித் ஷர்மாவின் 70 ஓட்டங்களுடனும், சூர்யகுமார் யாதவின் ஆட்டமிழக்காமல் புயல்வேகத்தில் எடுத்த 40 ஓட்டங்களுடனும் 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 146 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை இலகுவாக அடடைந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: இறுதிப் படியில் நின்ற @நிலாமதி அக்கா மேலே முன்னேற @Ahasthiyan இறங்குமுகத்தில் கீழே வந்துள்ளார். கூடவே @Eppothum Thamizhan உம் நிற்கின்றார்!
  3. வென்றால் மாலை, வெல்லாவிட்டால் பாடை 🤣
  4. அப்பிடி ஒரு நினைப்பு இருக்கோ. ஹைதராபாத் மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும், ஆர் வந்தாலும் போட்டு அடிக்கிறது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. மும்பை பாவம். வந்து மாட்டுப்பட்டிருக்கு. ரோகித்து போன போட்டியில அரைச்சதம் அடிச்சதால, இன்னும் இரண்டு மூன்று போட்டிகள் சொதப்புவார். பிறகென்ன. அதோட நான் இந்தமுறை பெரியகை எல்லாம் இருக்கிற குழு. இந்தக் குழுவே, ஆர் வந்தாலும் அடிக்கும். பிறகென்ன கவலை நமக்கு: ஈழப்பிரியன் சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு நுணாவிலான் கிருபன் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் அகஸ்தியன்
  5. தலித் என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் - சிதைக்கப்பட்டவர்கள். இந்திய சாதிய அமைப்பில், சாதிகளின் பிரிவுக்கு வெளியே, அதாவது ஆக குறைந்ததாக கருதப்படும் சாதியிலும் குறைவாக, அதாவது சாதிய கட்டமைப்புக்கு வெளியே உள்ள மக்கள் தான் தலித் என விளிக்கப்பட்டனர். ஆங்கிலத்தில் out-cast என்றனர். இதன் மாற்று பெயர்களாக தீண்டதகாதவர் (untouchables) என்பது வழங்கியது. இதை மாற்றி இவர்கள் கடவுளின் பிள்ளைகள், எனவே இவர்களை ஹரிஜனம் என அழைக்க வேண்டும் என்றார் காந்தி. பழைய விகடன், குமுதத்தில் இந்த சொல் கையாளப்பட்டிருக்கும். ஆனால் இப்படி ஒரு பெயரை தமக்கு அளிப்பது தலையை தடவி இழிக்கும் போக்கு (patronizing) என கூறிய அம்பேத்கர் அதை மறுதலித்து, எதை இழிசொல்லாக கூறினரோ அதுவே எம் பெருமை மிகு அடையாளம் என தலித் என்ற சொல்லை முன்னிறுத்தினார். கூடவே அவர் சமைத்த அரசியல் ஆட்டம் இந்த சாதிகளை ஒரு பட்டியலில் இட்டதால் அவர்கள் பட்டியலினத்தவர் (schedule castes) என்றும் வழங்கப்படுகிறனர். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் எழுச்சி, அதை தொடர்ந்து வந்த விசிக, தேவேந்திர குல வேளாளர் சாதிய அமைப்புகளின் எழுச்சி இந்த சொல்லின் பாவனையை, தலித்-மக்கள் மைய அரசியலை அதிகரித்தது. நிற்க, இங்கே ஆரம்பத்தில் நான் கூறிய தலித் என்ற அடையாளத்துள், அதாவது சாதிய கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட மக்கள் கூட்டம் என இலங்கையின் வடக்கு-கிழக்கில், மூன்று மக்கள் கூட்டங்கள் மட்டுமே இருப்பதாக எனக்கு படுகிறது. அவையாவன, பறையர், நளவர், பள்ளர் (தமிழ் நாட்டில் தேவேந்திரகுல வேளாளர்). ஆகவே இவர்கள் மட்டுமே இலங்கையில் தலித் என்ற அடையாளத்துக்குள் அடங்க கூடியவர்கள். ஆனால் பிரிதானியர் கூட இவர்களை சாதிய கட்டமைபுக்கு அப்பாற்பட்டோர் என, பட்டியல் இடவில்லை என்பது நோக்கத்தக்கது. ஆகவே, இந்த மூன்று மக்கள் பிரிவினர் கூட, இலங்கையில் outcast ஆக நடத்தபட்டனரா, படுகிறனரா என்பது கேள்விக்குரியது. இலங்கை சாதிய கட்டமைப்பு இவர்கள் மூவரையும் சாதிய கட்டமைபுக்குள் உள்வாங்கியே உள்ளது என்போரும் உளர். அப்படியாயின் இவர்கள் கூட தலித் என்ற அடையாளத்துள் வரார். அதேபோல் இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்பு போராட்டம் தனியே இவர்களை மையபடுத்தி மட்டும் அல்ல, அது வெள்ளாள சாதிய அடக்குமுறைக்கு எதிராக, முற்போக்கான ஒரு சில வெள்ளாளர் உட்பட வெள்ளாளர் அல்லாதோரின் உரிமை போராட்டமாகவே அமைந்தது. இலங்கையில் நடந்த, நடக்கின்ற சாதி எதிர்ப்பு அரசியல் - நீங்கள் சொன்ன சாதியினர் + தலித் என்ற அடையாளத்துள் வரும் சாதியினர் அனைவருக்குமான, வெள்ளாள ஆதிக்க எதிர் அரசியலே ஒழிய - அது தலித் மைய அரசியல் அல்ல. உதாரணம் மூலம் சொல்வதாயின், திருமாவளவன் தலித் மக்களின் நலனை முந்தள்ளும் தலித்திய அரசியல்வாதி. பெரியார் பிராமணர் அல்லாதோர் நலனை முந்தள்ளிய பிராமண ஆதிக்க எதிர்ப்பு அரசியல்வாதி. இலங்கையில் திருமாவின் அரசியல் நடக்கவில்லை. இலங்கையில் நடந்தது, நடப்பது வெள்ளாள ஆதிக்க எதிர்ப்பு அரசியல். வரும் காலத்தில் இலங்கையில் நளவர், பள்ளர், பறையர் சாதியிரனரை மட்டும் பிரதிநிதிதுவபடுத்தி ஒரு அரசியல் முன்னெடுக்கப்படின் - அதை தலித் அரசியல் எனலாம்.
  6. அடுத்த மேட்ச் பிக்சிங்! அம்பயர் அவுட் கொடுக்கவில்லை, அல்ட்ரா ஸ்நிக்கோ மீட்டரிலும் எதுவுமில்லை ஆனால் பேட்ஸ்மேன் தானே அவுட்டென்று போகிறார்! எங்கே போய் தலையை முட்டுவது! ஓ, இவர் ஏழு வருசமா மும்பாய்க்கு விளையாடினர் எல்லோ! செஞ்சோற்றுக்கடன் போல! பரதேசிகள்!
  7. நாளைக்கும் அமோகம்தான்.🤣 கைதராபாத் அணி ஒரு தார் ரோடு ஏற்பாடு செய்கிறதாம், அதில மும்பாயினை போட்டு உருட்டுவதற்கு (கட்டாந்தரை ஆடுகளம்), எல்லோரும் எதிர்பார்க்கும் 300 எடுக்க வேணும் எனும் முனைப்பில் இருக்கிறார்களாம், ஆனால் மும்பாய் கைதராபாத்தினை அதே ரோட்டில போட்டு உருட்டி உருட்டி அடிக்க போகிறதோ தெரியவில்லை. நானும் மும்பாய்தான், செம்பாட்டானை போட்டு உருட்டி எடுப்போம்.🤣 அவர் இப்போது என்னை போல சான்விச் மசாஜினை அனுபவித்து கொண்டுள்ளார், மேலேயும் இல்லை கீழேயுமில்லை.🤣
  8. சோபா சகதி கதை என்று கிருபன் சொல்வதை பார்த்திருக்கிறேன் இவர்கள் இருவரை பற்றி எனக்கு தெரியவில்லை சீமானிடம் ஏமாந்து இன்பமாக கனவு காண்கின்ற வெளிநாட்டு ஈழ தமிழர்கள் போல் தானேஅவர்கள் இருவரும் 😂 இப்போது விளங்குகின்றது
  9. மூலக்கருத்து முதலே சொல்லப்பட்டு விட்டது. லஞ்சங்களையும் வாக்குக்கு லஞ்சம் கொடுப்பதையும் நிறுத்துங்கள். அதன் பின் நிதர்சன அரசியலைப்பற்றி பேசலாம்.
  10. முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள். ஆஆஆஆஆஆஆஆ என்னது கிளி ராஜஸ்தான் சீட்டை தூக்கியிருக்கு. மட்டக்கிளப்பு மாந்திரீகர் நாலு பேரை விசிட்டர் விசாவில் எடுக்கப்போகின்றேன் ..வெயிட் பண்ணுங்க. யாரையாவது பிடித்து என்னென்றாலும் செய்யுங்க. இந்த கிளியையும் கொஞ்சம் கவனத்தில் எடுங்க. விசயம் முத்திக் கொண்டு போகுது.
  11. @ரசோதரன் னின் கிளியை கூண்டோடு தூக்கடா.
  12. இலங்கையில் இன்றளவும் கூட இந்த சொல் பாவனையில் இல்லை. டொமினிக் ஜீவா போன்றோரிடம் நேரடியாக பழகிய போதும், சண்முகதாசன் போன்றோரை பற்றி வாசித்து, கேட்டறிந்ததிலும் இவர்கள் தம்மை தலித்கள் என்றோ, தலித்திய போராளிகள் என்றோ சுய அடையாளப்படுத்தவோ, சமூகம் அவ்வாறு அடையாளபடுத்தவோ இல்லை. தமிழ் நாட்டுக்கே அம்பேத்கருக்கு பின்பு வந்த சொல்தான் தலித். அதை கீழே விளக்குகிறேன். எதிலும் தமிழ் நாட்டை பார்த்து குறி சுட்டு கொள்வதில் சோபா சகதி, வரதராஜ பெருமாள் போன்றோருக்கு ஒரு அலாதி பிரியம் உண்டு. அதன் ஒரு வெளிப்பாடே இது. இன்றளவும் இலங்கையில் இருந்து, இலங்கைக்காக எழுதும் வடக்கு, கிழக்கு எழுத்தாளர்கள் இந்த சொல்லை அதிகம் பாவிப்பதில்லை. மலையக, மேலக எழுத்தாளரிடம் உண்டு - தமிழ்நாட்டு சாதிய அமைப்பு அப்படியே அவர்களிடம் தொடர்வதால் அது லொஜிக்கலானதும் கூட.
  13. அங்கு ஒரே மொழி தான் பல மொழிகள் இல்லை உலகம் முழுவதும் தமிழ் மொழி பேசினால் உலகில் ஒரு பிரச்சினையும் ஏற்பாடது 😀
  14. எப்படி எடுத்துக் கொண்டாலும் சரிதான் . ....... !
  15. தெரியேல்ல , தான் கருப்பு என்று கவலைப் பட்டார்கள் அதுதான் உங்களை விட கருப்பான நானே கவலைப் படேல்ல என்று ஆறுதல் கூறினேன் .......... ! 😁
  16. https://www.facebook.com/share/v/1AuLRZGnhb/?mibextid=wwXIfr முதலில் இவருக்கு ஒரு ஜட்டி ஓடர் பண்ணுங்கோ
  17. மட்டையாளருக்குத் தெரியும் என்று எடுக்கவேண்டியதுதான். இரண்டாவது தடவை அவர் இப்பிடிப் போயிருக்கிறார்.
  18. எங்கே முக்கியமான நபர்களை காணவில்லையே அமெரிக்கா ஐஸ்ரின். அவுஸ்திரேலியா கந்தப்பு கனடா வாலி ஜேர்மனி கேலி சிந்திர நிபுணர் கவி சென்னை புரட்சி மதுரை வீரன். வன்னி பிரித்தானியா நெடுக்கர் இவர்கள் எல்லோரும் ஐட்டி போடுவதில்லையா ??? நான் சின்ன. வயதிலேயே போடுவதில்லை அம்மா போட்டுவிட்டாலும். கழற்றி ஏறிந்துவிட்டு சுதந்திரமாக திரிவேன். எனது தாத்தா டோய் எங்கையாடா. கோஷான். [இது யாழ் கள உறுப்த்உறுப்பினர் இல்லை ]😂 போடாட என்று பேசுவார். மட்டுமல்ல எடுத்து போட்டும். விடுவார் இது தான் அவருக்கு தொழில் சாறம். இருக்கும்போது இது தேவையா. குறிப்பு,...அக்கா குஷ்பு தாலி. காட்ட. முடியாது என்கிறார் ஆண் பெண் சமத்துவம். இல்லை என்கிறார் ஒவ்வொரு வருஷமும். ஐந்து பவுன் கூட்டி. கூட்டி. புதுப் புது தாலி கட்டுகிறார்கள் புலம்பெயர் நாடுகளில் .....பார்த்த தமிழ்நாட்டு பெண்களை தாலி இல்லாமல் திருமணம் செய்யலாம் போல இருக்கிறது இது C.A. இல். விளம்பரத்தில். பார்த்தேன் 4.99. மட்டுமே
  19. “தலித்” என்ற பதம் அதாவது இந்த பெயர்சொல் இலங்கையில் பாவனையில் இல்லை. ஆனால், அந்த சொல்லால் வட இந்தியாவில் வகைப்படுத்தப்படும் செயலான சாதி ஒடுக்கு முறைகள் நிறையவே இலங்கையில் நீண்ட காலமாக உள்ளது. இன்றும் உள்ளது.
  20. மன்னிக்கவும் சிறி. ஏறத்தாள 15 வருடமாக பொக்சர் என்று இதைத் தான் அணிகிறேன்.
  21. அத்திம்பேர் தூங்கலை... செத்துப் போயிட்டாரு.
  22. இங்கே தான் இடிக்குது...... நான் எந்தக்கட்சியும் சாராதவனாம். ஆனால் சீமான் எதிர்ப்பாளனாம். இஞ்சை என்ன கோழிச்சண்டையா நடக்குது?
  23. சிங்கமும், புலியும் இல்லாத நாட்டில் மனிதர்கள் சிங்கம், புலி என அடிபட்ட ஒரே நாடு சிறிலங்காதான்🤣. காட்டில் பெரும்பா லும் ஆண் சிங்கம் இரை தேடுவதில்லை. மனிசி கொண்டு வாறத சாப்பிட்டு விட்டு, ஹாயாக தூங்குவது, ஆட்புலத்தை பாதுகாப்பது, அந்த வேலைக்கு யாரும் கூப்பிடாமலே ஆஜர் ஆவது - இவைதான் அவரின் வேலைகள். அப்ப வீட்டோட மாப்பிள்ளைதானே🤣
  24. ஒன்னொன்னா ஒன்னொன்னா சொல்லு சொல்லு . ......... ! 😍 சே . .....பாட்டை விடுங்க , ஆரம்பத்தில் அத்தானும் அக்காவும் கதைக்கும் அழகிருக்கே அதுதான் செம கிக் .......! 😂
  25. நாரதர் கலகம் நன்மையில் முடியும். 😂 கலியுக நாரதர்… ட்றம்பு. 🤣
  26. இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ....... ! 😁 நீங்கள் ரொம்ப அழகு ....... சுவியும் கருப்புதான், சுவியைவிட நீங்கள் அழகு . ...... ! 😂 இன்று ஹைதராபாத் வெல்லுது ....... ஆலம்பனா நிஜாமின் அரண்மனையில் உங்களுக்கு விருந்து உண்டு ........ ! 👍
  27. பிரதேசவாத சித்தாந்தம் போலத்தான் இடது சாரி சித்தாந்தமும் ...மக்கள் மாறிகொண்டே போவார்கள் .இந்த இடதுசாரி சித்தாந்தமும் நிலைத்து நிற்கப்போவதில்லை ..ஐயோ இந்த பழம் புளிக்கிறதே என சொல்லும் காலமும் வரும்...
  28. எது விலை போகிறதோ அதனை பயன்படுத்துகிறார்கள், இலங்கையில் மதம், பிரதேசவாதம் போல (தமிழ் தேசியம் கூட அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது) இந்தியாவில் சாதியம் பயன்படுத்தப்படுகிறது, இவை எல்லாவற்றிற்கு பொதுவான ஒற்றுமை சாதி, மதம், பிரதேசவாதம் என்பவை என்ன என்று உய்த்தறிந்து உணரமுடியாவிட்டாலும் அவற்றின் பேரால் மக்களை தம்பக்கம் இழுக்க முடிகிறது அதன் மூலம் அதிகாரத்தினை பெறமுடிகிறது, பின்னர் அதன் பெயரால் அவர்களையே அழிக்க முடிகிறது. சாதாரணமாக சிந்திக்க முடிந்த மனிதனால் இந்த மூட நம்பிக்கைகளில் வெளிவரமுடியாமல் இருக்கின்றமையால் அதனை அவர்கள் பயன்படுத்தி அனுகூலமடைகிறார்கள். இதனை புரிய வைக்க முயன்றால் அப்படி முயற்சிப்பவர்கள் மேல் கோபங்கொள்கிறார்கள், அடுத்த இரண்டு சந்ததிகளின் பின்னர் இவை காணாமல் போய்விடும், ஆனால் என்ன எமது சமூகம் அப்போது உலக ஓட்டத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருப்பார்கள். மக்களின் புலம் பெயர்வு புதிய சிந்தனைகளுக்கான அடித்தளமாக இருந்தாலும் புலம் பெயர்ந்தவர்களில் மிகவும் பின் தங்கியவர்கள் இந்த மாற்றத்தினை விரும்பாமல் அதற்கு எதிர்ப்பு கொடி தூக்குவதன் நோக்கம், மாற்றம் வந்தால் கால மாற்றத்திற்கேற்ப தம்மை உயர்த்த முடியாத இவர்கள், தாம் இந்த மாற்றங்களினால் காணாமல் போய்விடுவோம் என அஞ்சுகிறார்கள். அது தேவையற்ற பயம், ஊரார் பிள்ளையினை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்பார்கள், பொது நலனில் கூட நாங்கள் விரும்பும் சுயநலம் உள்ளது. மனிதனை சிந்திக்க தெரிந்த மிருகம் என கூறுகிறார்கள், எமது சமூகம் சிந்திக்க விரும்பாத சமூகம்.
  29. தமிழ் கட்சிகளுக்கு உள்ள ஆதரவை இல்லாமல் பண்ணவே இப்படி செய்கிறார்களோ?
  30. 14 போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றதால் ஒப்பாரி வைத்தேன். அதாவது முதல் 20 போட்டியில் 5 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்றேன்.( முதல் 6 போட்டியில் 4 , அடுத்த 14 இல் ஒன்று) . மிகுதி 20 போட்டியில் 13 வெற்றிகள். பெங்களூர் அணி சொந்த மண்ணில் தோற்கும் என நினைத்து விடை எழுதியதும், ராஜஸ்தான் அணி பல போட்டிகளில் தோற்கும் என எழுதியதும், டெல்லி அணியின் பல வெற்றிகளும்தான் காரணம். சென்னை மும்பாய் இடையிலான போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாடும் அணிகள் வெற்றி பெறும் என்றும், பஞ்சாப் பங்களூர் இடையிலான போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாடும் அணிகள் தோற்கும் என நினைத்து எழுதிய விடைகள் புள்ளி பெற உதவின. எனினும் பெரிதாக நம்பிய SRH, CSK, MI, KKR அணிகளின் தோல்விகள் பல போட்டிகளில் புள்ளிகள் கிடைக்காததற்கு காரணங்கள்.
  31. பயப்பட வேண்டாம். இன்னும் இரண்டு போட்டியோட நான் வந்திடுவன்!! இந்தமுறை ராசி அப்படி!!
  32. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 40வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் எய்டன் மார்க்கமும் (52 ஓட்டங்கள்) மிச்சல் மார்ஷும் (45 ஓட்டங்கள்) நிலைத்து ஆடி முதலாவது விக்கெட் இணைப்பாட்டத்தில் 87 ஓட்டங்களை எடுத்திருந்தனர். 200 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கக்கூடிய நிலையிருந்தும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் இறுதியில் வேகமாக அடித்தாடிய ஆயுஷ் படோனியின் 36 ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே வேகமாக அடித்தாடினர். அபிஷேக் போரல் 51 ஓட்டங்களையும் கேஎல் ராஹுல் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும், அக்க்ஷர் பட்டேல் 4 சிக்ஸர்களுடன் 34 ஓட்டங்களையும் எடுத்து 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை இலகுவாக அடடைந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நிலாமதி அக்கா கடைசி இடத்தில் வந்து நிற்கின்றார்!
  33. கோத்தபய, ரனிலின் குற்ற செயல்களுக்கு எந்த வித சாட்சியங்களும் இது வரை கிடைக்கப்பெறவில்லையா? அல்லது அவர்கள் குற்றவாளிகளே இல்லையா?
  34. இனிய மாலை வணக்கம் அனைவருக்கும் . ........ அநேகரின் வேண்டுகோளுக்கு இனங்க .......... ! 😂
  35. இந்தப் பறவையை பார்க்க.. யார் போல் உள்ளது. நான் பார்த்த உடனே.. ட்ரம்ப் என்று நினைத்து விட்டேன். 😂
  36. மற்றைய நாடுகளில் எப்படியோ... ஸ்ரீலங்காவில் சிங்கம், வீட்டோடு மாப்பிள்ளைதான். 😂
  37. இந்தப் பாதிரிக்கு 250 சனம் செத்ததுதான் பெரிசாப் படுகுது ...எமது இனத்தில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட சன்ம் செத்தபோதூம் இராசபட்சவுடன் சேர்ந்து அதை நீதிப் படுத்தியவர் ....இவரெல்லாம் பாதிரியாக இருக்க லாயக்கற்றவர்
  38. நாங்கள் தெரிவு செய்யாத அணி தோக்குமென்டுதானே நாங்கள் சொல்ல வேணும் இல்லையா. அதுதானே உலக நியதி. அப்படித்தானே லோகமும் இந்தக் களமும் ஓடிக் கொண்டிருக்கு.😁 கேட்கும் போது நன்றாக இருக்கிறது. நீங்களும் எல்லாத்துக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறீங்கள் போல. ஒருத்தரையும் விடக்கூடாது. எல்லாரையும் ஓடவிடுவோம்.
  39. பலவீனமான ஒவ்வொரு உயிரினமும் தன்னை பாதுகாத்துக்கொள்ள இயற்கையாக பாதுகாப்பு பொறிமுறைகளை உருவாக்கி அதனை அதன் கூர்ப்பில் வலுப்படுத்திக்கொண்டே வரும். வானில் பறக்கும் பறவைக்கூட்டம் ஒரே பாதையில் சீராக பறந்து கொண்டிருக்கும் போது முன்னால் செல்லும் பறவை மின்னல் வேகத்தில் எதிர்புறம் திரும்பினால் அதே போல அனைத்து பறவைகளும் மின்னல் வேகத்தில் திரும்பிக்கொள்ளுகின்றன, அதே போலவே மீன் கூட்டமும் அவ்வாறே செய்கின்றன இது அனைத்து ஜீவராசிகளும் தம்மை பலமாக பேண பயன்படுத்தும் பாதுகாப்பு பொறிமுறை. தனியாக நின்றால் இரையாகிவிடுவோம் என்பதற்காக இந்த பாதுகாப்பு பொறிமுறையினை அவை உயிரியல் ரீதியாக தலைமுறையாக கடத்தி வருகின்றன, ஆதி மனிதன் காட்டு வாழ்கையிலும் இவ்வாறே இருந்துள்ளது, ஆனால் நவீன உலகில் அதற்கான தேவை இல்லாமல் போய்விட்டாலும் மனிதர்களுக்குள்ளே இருக்கும் சுய பாதுகாப்பு பொறிமுறை இவ்வாறு மதம், சாதி, பிரதேசம் என கூட்டிணைய வைக்கின்றது. பிள்ளையான், கருணா போன்ற சுயநலமிகள் மக்களின் அறியாமையினை பயன்படுத்தி அவர்களை பிர்த்து அதன் மூலம் தமது இலாபத்தினை அடைகிறார்கள். மக்கள் சாதி, மதம், இடம் என பல ப்ரிவுகளாக பிரிந்து மேலும் பலவீனமாகிறார்கள், ஆரம்பத்தில் இந்த வேலையினை கருணா, பிள்ளையான் என தொடங்கினார்கள் புலிகளின் இல்லாமல் போன பின்னர் தமிழ் அரசியல் கட்சிகளும் அந்த கோதாவில் குதித்தார்கள், தற்போது தமிழர்கள் சில்லு சில்லாக உடைந்து பலவீனமாக உள்ளார்கள். சில சமயம் நான் நினைப்பது உண்டு ...இந்த பிள்ளையான் போன்றவர்கள் கூறும் கருத்தும் யாழ்களத்தில் எழுதுபவர்களின் கருத்தும் ஒரே மாதிரி இருக்கே ...இவர்கள் எல்லாம் ஒரே பாசறைக்கு சென்றவர்களோ... அவுஸ்ரேலியாவில் இருந்த ஒருவர் அவரது ஊரின் பெயரால் உருவாக்கப்பட்ட தொண்டு அமைப்பினூடாக அவரது ஊருக்கு செய்யப்பட்ட தொண்டு நடவடிக்கைகளை பயன்படுத்தி (அவர் ஊரில் அதன் மூலமான தொடர்பினூடாக) தனது பிள்ளையின் அரங்கேற்றத்திற்கான வாய்ப்பாக (செலவு குறைந்த அரங்கேற்றம் + உல்லாச பயணம்) அவர்களது ஊரில் உள்ள கோயில் நிகழ்வொன்றினை பயன்படுத்தினார், அவரிடம் கேட்டேன் அப்போ அங்கே வழமையாக பாடும் குழந்தைகளின் நிலை என்ன என அதற்கு அவர் கூறினார் அவர்கள் ஒவ்வொரு வருடமும் பாடுகிறார்கள்தானே இந்த வருடம் பாடாவிடால் ஒன்றும் குறைந்து போய் விடாது என அதில் நியாம் இருப்பதாக அவருக்கு இருக்கலாம். இப்படி பல மக்களை நாம் நாளாந்தம் சந்திக்கிறோம், இவர்கள் தமது சுயநலத்திற்காக பாவப்பட்ட தமது மக்களையே அறியாமல் சுரண்டுவதால் அதே போல தமது சுயநலனுக்காக செய்த தவறான செயல்களை செய்கின்ற கருணா, பிள்ளையா தமது தவறுகளுக்காக உருவாக்கின சித்தாந்தம்தான் இந்த பிரதேசவாதம், சுய நலன் இருப்பதில் தப்பில்லை ஆனால் அதனால் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்களா என பார்க்காமல் விட்டு விடுகிறோம். இந்த தவறிற்கு நானும் விதிவிலக்கில்லை, ஆனால் பெரும்பாலோனோர் இதனை புரியாமல் செய்கின்றனர், இதனை யாரும் குற்றமாக கூறுவதில்லை ஒரு மாற்றத்திற்காக கூறுவதால் அதனை நாம் தான் புரிந்து அது தொடர்பில் கோபம் கொள்ளாமல் சிந்தித்து முன் செல்லவேண்டும். ஒரு வகையில் இந்த கருணா பிள்ளையான் போன்றோரின் பிரதேச வாதம் எடுபட காரணமாக இருப்பதற்கான காரணியாக நாமும் இருக்கின்றோம்.
  40. 🤣🤣🤣 பிள்ளையானின் வயதை வைத்து பார்த்தால் - மங்கு, பொங்கு சனிகள் முடிந்து இது மரணச் சனியாகவே படுகிறது. கம்மன்பில அரசியலியே தேறாதா கேசு 🤣. கறுப்பு சட்டையை கூட வாடகைக்கு எடுத்திருக்க கூடும்🤣. இப்போ ஏதோ மகிந்த கேட்டு கொண்டதனால், எங்காத்து காரரும் கோர்ட்டுக்கு போறார் என்பது போல் போயுள்ளார். வேறு எவரையும் காட்டி கொடாதே, குற்றம் தீர்த்தாலும், நாம் வந்ததும் விடுதலைதான் என்பதே ரணில் பேச முனைந்து, முடியாமல் போனதும் கம்மன்பில மூலம் சூசகமாக பிள்ளையானுக்கு நாமல் தெரியபடுத்திய செய்தியாக இருக்கும். உடான்ஸ்சாமியார் கணிப்பின் படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த மேஷ ராசி அன்பரே, உங்கள் ஜெனன ராசி, லக்ன அமைப்புப்படி, முதலில் இரெண்டரை வருடம் கோர்ட் செலவில் விரையச்சனி வந்தாறுமூலை தென்னம்தோட்டம் ஈறாக கொண்டு போகும். அடுத்த இரெண்டரை வருடம் ஜென்மச்சனியில் வழக்குக்கு பாதகமாக தீர்ப்பு வரும். ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பாகி கண்ணில் சாவு பயத்தை காட்டும். கடைசி இரெண்டரை நடக்கும் போது மீளவும் ஜேவிபி ஆட்சிக்கு வரும் - பாதச்சனி பாடையில் ஏற்றும். மேஷம், முழுவதும் மோசம் 🤣 பரிகாரம் - தெரிந்தாலும் சொல்லமாட்டமே 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.