Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்12Points38756Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87990Posts -
செம்பாட்டான்
கருத்துக்கள உறவுகள்7Points1223Posts -
nunavilan
கருத்துக்கள உறவுகள்7Points53011Posts
Popular Content
Showing content with the highest reputation on 05/19/25 in Posts
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 61வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மிச்சல் மார்ஷினதும், எய்டன் மார்க்கத்தினதும் வேகமான அரைச் சதங்களுடனும், பின்னர் வந்து அதிரடியாக 45 ஓட்டங்கள் எடுத்த நிகொலஸ் பூரனினது ஆட்டத்துடனும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்களை அள்ளிக் குவிக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் அபிஷேக் ஷர்மாவினது மரண அடியான 20 பந்துகளில் எடுத்த 59 ஓட்டங்கள் இலக்கை துரத்துவதை இலகுவாக்கியது. ஹென்றிக் க்ளாஸன், இஷான் கிஷான், கமிந்து மெண்டில் ஆகியோரின் கமியோ ஆட்டங்களுடன் 18.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:3 points
-
முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
நீங்கள் கூறியது போல் தமிழ்கவி ஆழமான அரசியல் பார்வை கொண்டவரல்ல. அவர் புலிகளுடன் இருந்த போது கூட ஒரு கவிஞராக சாமான்ய மக்களிடையே போர்பரணியை ஊக்குவிக்கும் கலை நிகழ்வுகளை ஒருங்கு செய்யும் ஒருவராகவே இருந்தவர். பழைய ஒளிவீச்சு வீடியோகளைப் பார்ததால் இதைத் தெரிந்து கொள்ள முடியும் தனது பிள்ளைகளையும் மாவீரர் ஆக்கியவர். சாமான்ய மக்களுடன் வாழ்ந்தவர். அவரது அரசியல் கருத்துக்களில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், ஒரு சாதாரண மக்களின் குரலாக யுத்த இறுதி நாட்களில் நடந்த பல உண்மைகள் அவரின் செவ்வியில் இருப்பதை மறுக்க முடியாது. அதில் பலருக்கு உவப்பில்லாத அவர்கள் மறைக்க விரும்பும் உண்மைகள் இருக்கின்றன. தமிழ் மக்கள் அரசியல் விடுதலை அடைய அவர்கள் அரசியல் செய்ய வேண்டும். உண்மைகளை மறைத்து காவியம் எழுதி அதை அடுத்த சந்ததிக்கு கடத்தினால் மீண்டும் இதே கசப்பான அனுபவங்களே ஏற்படும் நிலாந்தன் அப்படிப்பட்டவர் அல்ல. வன்னியில் இருந்தபோது பல அரசியல் ஆய்வுகளை வெளியிட்டவர். சர்வதேச அரசியல் நிலை பற்றி அறிந்தவர். அப்போது புலிகளின் அரசியல் தவறுகளை விமர்சித்து அதை அவர்களுக்கு எடுத்து கூறாமல், அவர்களை தவறாக வழிநடத்தியவர். அதன் மூலம் நடந்த பேரழிவுக்கு பொறுப்பு கூற வேண்டியவர். இன்றும் கூட அந்த குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் நடைமுறை அரசியலுக்கு அப்பால் மக்களை கற்பனாவாதத்திற்குள் வைத்திருக்கும் அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்.3 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உஸ் ........ சத்தம் போடாதேயுங்கோ ........... இது செம்பாட்டானுக்காக அவ மேக்கப் போடமுதல் இரவோடு இரவாக அவசரமாக எடுத்துப் பதிந்த படம் . .......... நல்ல வடிவான மேக்கப்புடன் எடுத்த படம் கிருபன் போட்டிருக்கிறார் . ........ ! 😂3 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிருபன், பேசாம நந்தனுக்கும் புலவருக்கும் அவர்களோட சேர்ந்த ஏராளனுக்கும் புள்ளியக் குடுத்துட்டு, கடைய சாத்தி விடுங்க. உங்களுக்கும் நாளைக்கு வேலை மிச்சம். சென்னை வேற சுதப்புது. நந்தன் புலவர் கை வைச்சதெல்லாம் துலங்குது. ஒன்றையும் ஒன்றையும் கணக்குப் போட்டுப்பாருங்க. எல்லாம் சரியா வரும். எனக்கும் அந்த இருவரோட சேர்ந்தா ஆகாது. பிறகென்ன. சென்னை கதி அதோகதிதான்.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நந்தன் அண்ணைய இப்பவே நிரந்தர முதல்வர் என்று அறிவிக்கலாம்........................ எனது விருப்பம் எனது குரு ரசோதரன் அண்ண கிட்ட நெருங்கனும் ஆக தூரத்தில் நான் நின்றால் அது எனது கவுரவத்துக்கு வெக்கக் கேடு லொள்😁😛......................2 points
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
திராவிடம், தமிழ்த்தேசியம், தனித்தமிழ், பிராமணீயம், இந்துத்வா, முற்போக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் எந்தப் பிரிவும் இந்தச் சண்டையில் இந்தியாவிற்கு எதிராக ஒரு கருத்தையும் வைக்கவில்லை. மாறாக இந்தியாவின் மத்திய அரசுக்கு முழு ஆதரவையும், பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தையும் எல்லோரும் முன்னின்று நடத்தினார்கள். முழு இந்தியாவிலுமே இது தான் நிலைமை. இந்தியா என்றுமே உடையாது. பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடே இந்தியா, இந்தியன் என்று ஒரே குரலில் முழங்கியது ஈழத்தமிழர்களுக்கு பெரிய ஏமாற்றம். கடஞ்சா அடிக்கடி சொல்லும் யதார்த்தம் இது தான்...............🤣. அவர்கள் முதலில் எப்போதும் இந்தியர்கள். நாங்கள் ஈழத்தமிழர்கள் அவர்களுக்கு இடையிடையே அவர்களின் உள்ளூர் அரசியலுக்கு, சமூக ஊடக வருமானத்திற்கு தேவைப்படும் சிறு ஆயுதங்கள். தமிழ்நாட்டு தலைவர்களின் நேற்றைய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பத்திரிகை அறிவுப்புகள் போல. உலகெங்கும் இருக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கையும் தமிழ்நாட்டுடன், இந்தியாவுடன் எப்படி இணைந்திருக்குது என்று பார்த்தால், எங்களின் உழைப்பில் ஒரு பகுதியை இந்தியாவுக்கு நாங்கள் தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டிருப்பது தெரிகின்றது. நாங்கள் கேரளா போனால் என்ன, காசிக்கு போனால் என்ன, அவர்களின் சினிமாக்களை, தொலைக்காட்சி நிகழ்வுகளை விடாமல் பார்த்தால் என்ன, அவர்களின் கிரிக்கெட்டைப் பார்த்தால் என்ன, ஆடை அணிகலன்கள், பண்ட பாத்திரங்கள், உணவுப் பொருட்கள், இந்தியாவில் வீடு வளவுகள் முதலீடுகள்................. இந்தியாவும், தமிழ்நாடும் இல்லையென்றால் எங்களின் பல வீடுகளே வெற்றிடம் ஆகிவிடும் போல............................ ஆபிரிக்க தேசங்கள் கூட ஒரு நாள் முன்னேறிவிடும். ஆனால் பாகிஸ்தான் என்றும் முன்னேறாது. மாறி மாறி இராணுவ ஆட்சிகளும், பல பிரதேசங்களில் இருக்கும் ஆயுத குழுக்களின் ஆட்சிகளும், அடக்குமுறைகளும் அந்த தேசத்தை ஒரு இம்மியளவு கூட முன்னேற விடப்போவதில்லை. சீனாவும், இந்தியாவும் மக்கள் தொகையிலும் மற்றும் விவசாய உற்பத்திகளும் தவிர்த்து வேறு எந்த வகையிலும் ஒப்பிடப்பட முடியாதவை ஆகிவிட்டன. சீனாவின் சீரான தொழில்நுட்ப வளர்ச்சி சீனாவை அமெரிக்காவிற்கு அருகில் கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றது. இந்தியா ஒரு முட்டைக்கோது என்ற சந்தேகம் தான் இப்போது வலுத்திருக்கின்றது. ஆனால் பாகிஸ்தான் ஒரு உடைந்த முட்டைக்கோது.2 points
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அண்ணை கிட்டடியில பானிப்பூரி ஏதும் சாப்பிட்டனியளோ? அல்லது கொசு கடித்து தொற்று ஏற்பட்டுவிட்டதோ🤣.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தாலும், நெஹால் வதேராவினதும், ஷஷாங் சிங்கினதும் அதிரடியான அரைச் சதங்களுடனும், ஷ்ரேயஸ் ஐயர், ப்ராப்சிம்ரன் சிங், அஸ்மத்துலா ஒமார்சாய் ஆகியோரினது கமியோ ஆட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யஷஸ்வி ஜெய்வாலினது 50 ஓட்டங்களும், வைபவ் சூர்யவன்ஷியினது 40 ஓட்டங்களும் கைகொடுத்தாலும், பின்னர் வந்த வீரர்களின் துருவ் ஜுரேலின் அதிரடியான 53 ஓட்டங்களைத் தவிர பிறர் வேகமாக அடித்தாட முடியாத நிலையாலும், இறுதி ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்துச் சரிந்ததாலும், இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இரட்டையர் ஜோடிக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேஎல் ராஹுலின் அதிரடியான சதத்தின் (ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்கள்) உதவியுடனும், பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சாய் சுதர்சனினது மின்னல்வேகத்தில் எடுத்த சதத்தாலும் (ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்கள்), அணித்தலைவர் சுப்மன் கில்லினது புயல்வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 93 ஓட்டங்களுடனும் 19 ஓவர்களில் 205 ஓட்டங்களை எதுவித விக்கெட் இழப்புமின்றி எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. தமிழக வீரர் டி.நடராஜனின் பந்துவீச்சு பந்துவீசும் இயந்திரத்தில் இருந்து வருவது போல இருந்ததால், அவர் 3 ஓவர்களில் 49 ஓட்டங்களைக் கொடுத்தார். முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 6 பேருக்கும், "முடிவில்லை" எனக் கணித்த இரட்டையர் ஜோடிக்கும் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:2 points
-
"முள்ளிவாய்க்கால் கஞ்சி"
1 point"முள்ளிவாய்க்கால் கஞ்சி" ஓயாத எறிகணை வீச்சுகளுக்கும், பீரங்கித் தாக்குதல்களின் காது கேளாத எதிரொலிகளுக்கும் மத்தியில், முள்ளிவாய்க்கால் தமிழ் உணர்வின் இறுதி கோட்டையாக நின்றது. ஒரு காலத்தில் பசுமையான, உயிரைக் கொடுக்கும் வன்னி நிலங்கள், தரிசு நிலமாக, இரத்தத்தில் தோய்ந்து மூழ்கிய வயல்களாக மாறிவிட்டன. நம்பிக்கை உயிருடன் அங்கு இல்லை, பலவீனமாக இருந்தது, மங்கிப்போய் இருந்தது, அணையப் போகும் நெருப்பில் கடைசியாக ஒளிரும் நெருப்பைப் போல. என்றாலும் ஆறிலும் சாவு அறுபதிலும் சாவு என்ற வீர உணர்வுமட்டும் எரிந்துகொண்டே இருந்தது. பெருமைமிக்க மக்களின் வெடித்து சிதறிய எச்சங்கள் பதுங்கு குழிகளில் ஒன்றாகக் குவிந்தன. இன்னும் அந்த அவலங்களை பார்த்து அனுபவித்துக் கொண்டு எஞ்சி இருக்கும் வன்னி மக்களின் உடல்கள் மெலிந்தன. ஆனால் அவர்களின் ஆன்மா உறுதியாக இருந்தது. அது உடைக்கப்பட முடியாதது. இந்த பேரழிவு நிலப்பரப்பில்தான் அறிவு மற்றும் வான்மதியின் காதல் கதை முட்கள் நிறைந்த வயலில் ஒரு உடையக்கூடிய மலராக மலர்ந்தது! அந்த சாலைகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நாலப்பக்கமும் குண்டுகள் முழங்கி கொண்டிருந்தது. தெருவெல்லாம் குருதி ஆறு ஓடி கொண்டிருந்தது. எட்டுத்திக்கும் மரண ஓலங்கள், ஆண்களின் அலறல்கள் பெண்களின் கதறல்கள். ஆர்ப்பரித்து ஓடிய இரத்த வெள்ளங்களில் பல்லாயிரக்கணக்கான சடலங்கள். மூக்கை பழுது பார்க்கும் பிணவாடைகள். கைக்கடிகாரங்கள் அணிந்திருந்த கைகள், திருமண மோதிரங்கள் அணிந்திருந்த விரல்கள், விலையுயர்ந்த காலணி அணிந்திருந்த கால்கள், பால்சுரந்த கொங்கைகள் என அங்குமிங்குமாக சிதறிகிடந்தது ஏராளம் ஏராளம். வான் மழை கூட பெய்ய மறுத்த அந்த நிமிடங்களில் வானூர்திகள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது. இன்னும் அந்த சத்தங்கள் ஓயவில்லை, முறிந்து விழுந்த மரக்குற்றி ஒன்றின் மேல் அமர்ந்தபடி, அங்கு நடப்பவைகளை மெல்ல கவனித்து கொண்டிருந்த வான்மதி, பல மணி நேரமாக தூங்காத கண்ணுக்கு ஓய்வுகொடுத்து சற்று தன்னை மறந்து, அயர்ந்து தூங்கி விட்டாள். மூதாதையர்களின் கடுமையான மன உறுதியை இன்னும் தாங்கிய கண்களைக் கொண்ட இளம் தமிழ் மருத்துவர் அறிவு தற்செயலாக, அந்த வழியால் போகும் வேளையில், காலை சூரியனைப் போல மென்மையான இதயம் கொண்ட துடிப்பான தன்னார்வலரான வான்மதி மரக்குற்றியின் மேல், சரியான களைப்பில், தன்னையே மறந்து, தூங்கிக்கொண்டு இருக்கும் சங்கடமான நிலையைப் பார்த்து குழம்பினான். அங்கே கொஞ்சம் தூரம் தள்ளி மக்கள் குழப்பத்தின் மத்தியிலும், தங்கள் உயிரைப் பிடித்து வைத்திருக்க ஒரு தேங்காய் சிரட்டை கஞ்சியை குடித்துக்கொண்டு இருப்பதைக் கண்ட அவன், இரண்டு தேங்காய் சிரட்டைகளில், பலருக்கு இறுதி உணவாக மாறிய உயிர்வாழும் உப்பில்லா கஞ்சியை தானும் பெற்று அவளை நெருங்கினான். அவன், அவள் அருகில் வர, அவளும் கண் திறக்க சரியாக இருந்தது. எந்த வித சலனமும் இன்றி மெதுவாக அடிமேல் அடி வைத்து வந்த அவனைக் கண்டு அவள், தன் களைப்பிலும் சோர்விலும் பசியிலும் கூட சொக்கித் தான் போனாள். வழித்து வாரிய தலைமயிர், புருவம் உயர்த்திய சீரிய கண்கள், அளவான சிரிப்போடு இதழ்கள், மரண வாடையின் மத்தியிலும் மனம் தளரா கம்பீர நடை. அவனை வைத்த கண் வாங்காமல், அருகில் வரும் மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் அருகில் வரும்பொழுது தான், அவள் யார் என்று உற்றுக் கவனித்தான். அப்படியே ஒருகணம் தன்னை மறந்தான். 'கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்' ஒப்புமையில் கடலினையும்,மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும் , பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும் ,வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும் , விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடைய அவள், அந்த கண்களை இன்னும் மூடவில்லை. ஆனால் அப்படியே எந்தக் குறையும் இல்லாத சிற்பம் ஒன்று மரக்குற்றியின் மேல் செதுக்கியது போல, ஒய்யாரமாக ஒரு மரக்கிளையுடன் சாய்ந்து இருந்தாள். அவள் கண்கள் விழித்து இருந்தாலும் அதில் சோர்வைக் கண்டான். பசியின் ஏக்கத்தைக் கண்டான். அவன் தான் கொண்டுவந்த, தேங்காய் சிரட்டையில் உள்ள அந்த காஞ்சித் தண்ணீரில், மிதந்து கொண்டு இருந்த சோற்றைக் கிளறிக்கொண்டு அவள் அருகில் வந்தான். அவன் ஒரு மருத்துவன், அவனுக்கு அவளின் பசிக்கொடுமை மற்றும் பயம் புரிந்துகொண்டது. அவளின் தலை முடியை தடவிக் கொடுத்துக் கொண்டு, அந்த கஞ்சியில் கலந்து இருந்த சோற்றை பிரித்தெடுத்து அவளுக்கு முதலில் ஊட்டினான். முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உற்பத்தியாகி, அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, பின் கடலுடன் கலக்கும் நையாற்றின் நீரோட்டத்தால்,வரி வரியாகக் கருமணல் படிந்திருப்பதைப் போல, அவளின் கூந்தல் அவனுக்கு இருந்தது. அவள் நாணமிகுதியால் அவனை கள்ளப்பார்வையால் நோக்கி சாய்ந்திருந்தது கழுத்து. காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்கள், அவனை தடுக்க முற்பட்டு, ஆனால் மனமும் வயிறும் இடம் கொடுக்காமல் போராடிக் கொண்டு இருந்தது. சாதாரண நேரம் என்றால், அவள் கஞ்சியைத் தானே, அவனிடம் இருந்து எடுத்து சாப்பிட்டு இருப்பாள். ஆனால், இன்று எனோ அவனை ஊட்ட விட்டுவிடடாள். அவள் பேசவில்லை. அவனும் பேசவில்லை. ஏன், குண்டுகள் கூட அமைதியாக இருந்துவிட்டது. அவர்கள் இருவரும் வெறும் வார்த்தைகளை விட, அதிகமாகப் தங்கள் எண்ணங்களை உணர்வுகளை உள்ளத்தால், கண்களால் பரிமாறிக் கொண்டனர். அவர்களின் மௌனப் பார்வைகள் சொல்லப்படாத எதோ ஒன்றை ஒருவரின் மேல் ஒருவர் தேடிக்கொடு இருந்தன. அவள் ஒரு சிறிய புன்சிரிப்புடன், அவனைப் பார்த்தாள். பின் அவன் வைத்திருந்த கஞ்சி சிரட்டையை ஒருமுறைத் தொட்டாள். அவள் மனதில் சில வேதனைகள் ஊசல் ஆடுகிறது என்பதை அவன் அறிந்தான். அவள் அதை உணர்ந்தது போல, இரு நாளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை கூறத் தொடங்கினாள்: "அன்று சிறிய பதுங்கு குழி ஒன்றுக்குள் இருந்த நான் கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினேன். அரிசிக் கஞ்சி ஊற்றுகின்ற இடத்துக்குச் சென்று, வாங்கிய கஞ்சியின் சூடு ஆறுவதற்கிடையில் ஓட்டமும் நடையுமாக திரும்பி வந்தேன். ஆனால் என்னால் அந்த கஞ்சியைக் கூட பருக முடியவில்லை.பல் குழல் எறிகணை வீச்சில் வீழ்ந்த குண்டோன்று சிறுவர்களை பாதுகாத்து வைத்திருந்த பதுங்குகுழிமீது வீழ்ந்தது. என் கையிலிருந்த கிண்ணம் தன்பாட்டிலேயே கீழே வீழ்ந்து உருண்டது. கஞ்சி மண்ணோடு மண்ணாய்க் கலந்து. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஒருவர் பதுங்கி குழிக்கு அருகில் நிற்பதைப் என்னால் பார்க்க முடிந்தது. காயம்பட்ட காலோடு இலையான்கள் அவரை மொய்த்துக் கொண்டிருந்தது. என்றாலும் அவர் அதைப் பொருட் படுத்தாமல், என்னை கத்திக் கூப்பிட்டார். நான் கிடங்கின் அருகில் ஓடிச் சென்று பார்த்த பொழுது அது ஒரு மாபெரும் மனித படுகொலைக் கிடங்காக மாறிக் காட்சியளித்தது. அங்கே, என்னோடு சற்று முன் கஞ்சி அருந்திக்கொண்டு சிரித்துப் பேசிக்கொண்டு இருந்த அந்த சிறுவர்கள் சிதையுண்டிருந்தார்கள்." என கண்ணீருடன் அவனுக்கு கூறினாள். அவர்களின் கண்கள் ஒருவரை ஒருவர் சுற்றி சுற்றி வந்தது. "காதல் ஹார்மோன்" [The love hormone] என்று அழைக்கப்படும் ஆக்சிடாசின் (Oxytocin) கசிந்து அவர்களை கிளர்ச்சி அடைய செய்திருந்தது. 'உயிரும் உணர்வும் சங்கமிக்கும் பார்வையே பருவத்தில் பூத்து மாற்றிடும் மனதையே வேம்பும் கரும்பும் சேர்ந்தக் கலவையோ காமத்தின் பாதையில் புனிதப் பயணமோ இயற்கை உதிரும் இன்பச் சருகோ தெளிவாய்த் தெரியுதே குழம்பிய பார்வையில்! அவன் ஓர் மருத்துவன், நூற்றுக்கணக்கான பெண்களைப் பார்த்தவன். தொட்டவன், ஆனால் இன்று அது ... அதன் தாக்கம் அவனால் தாங்க முடியவில்லை. என்றாலும் அவன் அவளுக்கு உப்பில்லா கஞ்சியை ஊட்டிய பின், அவளை ஒரு மரத்தின் கீழ் தரையில் படுக்க விட்டுவிட்டு, தானும் ஒரு தேங்காய் சிரட்டை கஞ்சியை ஒரு பாறைக் கல்லில் இருந்து கொண்டு, அவளைப் பார்த்தபடியே குடித்தான். பின் அவளையும் அழைத்துக் கொண்டு, தன் கடமையை செய்ய புறப்பட்டான். தன் மருத்துவப் பணியை அடுத்த கிராமத்தில் தொடர, அங்கு எங்கும் பரந்து விரிந்து இருக்கும் அகழிகளில் குறுகிய, ஆபத்தான நடைப்பயணங்களை மேற்கொண்ட போது, தமிழ் காவியங்களிலிருந்து அல்லது தானே இயற்றிய சில வரிகளை வான்மதிக்கு, அவளை உற்சாகப்படுத்துவதற்காக, பயத்தை நீக்குவதற்காக அடிக்கடி கூறிக் கொண்டு போனான். அவன் சிலப்பதிகாரத்திலிருந்து மேற்கோள் காட்டினான். கண்ணகியின் தளராத மனப்பான்மைக்கும் தமிழ் மக்களின் உயிர்வாழ்வுப் போராட்டத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை வரைந்து காட்டினான். புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம், மந்துவில், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொக்கணை,வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு உட்பட்ட பகுதிகளில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர். அங்கு அந்த இறுதி நாளில் மிக சொற்ப மருத்துவர்களே கடமையாற்றினார். அவர்களில் ஒருவனே இந்த அறிவு! அவன் முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகிய கிராமங்களுக்கு அருகில் இருக்கும் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில் அருகில் சென்றதும், கண்ணகி என்ற பத்தினித் தெய்வத்தை அவளுடன் சேர்ந்து வணங்கி விட்டு, வன்னி நாட்டின் காவல் தெய்வமாகவும் தாய்த் தெய்வமாகவும் இருக்கும் கண்ணகி முன்னால், தன்னை வான்மதியுடன் இணைத்த உப்பில்லா முள்ளிவாய்க்கால் காஞ்சிக்கும் நன்றி தெரிவித்தான். பின் அவன் அங்கு காயப்பட்டிருக்கும் எல்லோருக்கும் ஆலய முன்றலில் தன்னால் இயன்ற வைத்தியம் செய்தான். இம் முறை வான்மதியும் அவனுக்கு உதவியாக அங்கு கடமையாற்றினாள். ஆனால் அந்த அவலம் நிறைந்த சூழலிலும், அவன் மேலும் அவளை ஈர்த்தான் அது அவன் வசிகரமா அல்லது அவள் பலவீனமா என்று ஆராய்வது தேவையற்றது. ஏனேன்றால் அது காதலின் இலக்கண விதி. அன்று முதல் அவனை பின் தொடர்வதையே வாடிக்கையாக்கி அவனை மணப்பதையே லட்சியமாக்கினாள். வைகாசி மாதத்தில் பூரணை நாளை அடுத்து வரும் திங்கள் நாளில் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் நிகழும் பொங்கல் விழாவில் தான் அவனுடன் கலந்து கொள்வேன் என்று தன் மனதில் வேண்டிக் கொண்டாள். நாள்பட நாள்பட, பஞ்சத்தினால் அங்கிருந்த மக்கள் முள்ளிவாய்க்காலில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தினர். தாக்குதல் கொடூரத்திலும் அதனை பொருட்படுத்தாது உணவு தேடும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இதனாலேயே பெரும்பாலான மக்கள் செல் வீச்சுக்களில் சிக்குண்டு மாண்டனர். தென்னங்குருத்து, பனங்குருத்து, கரையோர நண்டு,பனங்கீரை, இலைகள், குழைகள், காட்டுக்காய்கள், கடற்கரை ஏரல் (சிப்பி) கடல் மற்றும் குளத்து மீன்கள், ஆலமர குருத்துகள்,ஆலங்காய், ஈச்சம் வட்டு, இளநீர், தேங்காய் என இருக்கின்ற எல்லா வகையான பொருட்களையும் தமது உணவாக்கிக் கொண்டனர். எஞ்சி இருந்த ஆடு, மாடு, கோழிகள் அனைத்தையும் உணவாக்கி இனிகால் நடைகள் இல்லை என்ற நிலைக்கே முள்ளிவாய்க்கால் வந்திருந்தது. நாட்கள் செல்லச் செல்ல, நிலைமை மேலும் இருண்டது. சக்திவாய்ந்த சர்வதேசத்தின் அமைதியான உடந்தையால் இலங்கை அரசாங்கம் தங்கள்ப் பிடியை இறுக்கிக் கொண்டன. கொத்து குண்டுகள் மற்றும் வெள்ளை பாஸ்பரஸ் மழை பெய்தன, அவற்றின் வெடிப்புகள் தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் நெரிசலான பதுங்கு குழிகள் வழியாகச் சென்றன. பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்ட மனிதாபிமான வழித்தடங்கள் கூட பொறிகளாக மாற்றப்பட்டன, அப்பாவிகளை அவர்களின் கொடிய வலையில் சிக்க வைத்தன. ஒரு மாலை, புகை மூட்டம் நிறைந்த அடிவானத்திற்குப் பின்னால் சூரியன் மறையும் போது, அறிவு மற்றும் வான்மதி இருவரும் தங்கள் கடைசி உணவாக இருக்கலாம் என்று அஞ்சியதை பகிர்ந்து கொண்டனர் - அது ஒரு சிறிய சிரட்டை முள்ளிவாய்க்கால் கஞ்சி. அவர்கள் ஒருவருக் கொருவர் நெருக்கமாகப் பிடித்துக் கொண்டு, உள்ளக சுதந்திரம் பெற்று, 'சமஷ்டிக் கட்டமைப்பு அடிப்படையில், மொழிவாரியான வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் சுயாட்சிப் பிரிவு அமைந்து, மீண்டும் கட்டப்பட்ட அந்த தமிழ்த் தாயகம் ஒன்றில், ஒரு நாள் தெளிவான வானத்தின் கீழ் சுதந்திரமாக ஓடிவிளையாடும் குழந்தைகள் பற்றிய கனவுகளை கிசுகிசுத்தனர். பட்டினி முள்ளிவாய்க்காலை உலுக்கி எடுக்க ஆரம்பித்தது. சிறார்கள் எலும்பும் தோலுமாக காட்சியளித்தனர். கர்பிணித் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பெற்றெடுக்க போகின்றோம் என்ற ஏக்கத்திலேயே மயக்கமுற்று விழும் அளவிற்கு நிலைமை மாறிக்கொண்டு இருந்தது. அது மட்டும் அல்ல, கஞ்சிக்கு கை ஏந்தியவர்களும் கொன்று குவிக்கப் பட்டனர். துப்பாக்கி ரவைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் இடையறாது வந்து கொண்டிருந்தன. தனியே செல்லவும் பயமாக இருந்த காலம் அது. என்றாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, மறுநாள் காலையில், அருகிலுள்ள குழியிலிருந்து தண்ணீர் சேகரிக்க வான்மதி மற்றவர்களுடன் வரிசையில் நின்றபோது, திடீரென குண்டுகள் அந்த வரிசையைத் தாக்கின. குண்டுவெடிப்பு, சதை மற்றும் எலும்பைக் கிழித்து, காற்றில் ஒரு இரத்தம் கலந்த சிவப்பு மூடுபனி தொங்கியது. அருகில் இருந்த அறிவு, புகையை நோக்கி விரைந்தான். அவனது இதயம் பயத்தால் துடித்தது. ஒரு காலத்தில் மனித உருவங்களாக நடமாடியவர்களின் சிதைந்த எச்சங்களுக்கு மத்தியில் வான்மதியைக் கண்டான். அவளுடைய இடது கால் சேதமடைந்திருந்தது. அவளுடைய உடல் துண்டுகளால் சிக்கியிருந்தது. ஆனாலும் அவள் உயிருடன் இன்னும் ஒட்டிக்கொண்டு இருந்தாள், அவளுடைய கண்கள் இன்னும் அவனைத் தேடிக்கொண்டிருந்தன. அவன் அவளை ஒரு பதுங்கு குழிக்கு அழைத்துச் சென்று, எதோ கையில் கிடைத்ததை வைத்து தன்னால் இயன்ற வைத்தியம் செய்தான். சங்க இலக்கியங்கள் போற்றிய பண்டைய வசனங்களின் சிலவரிகளை, அவளை உற்சாகப்படுத்த காதில் கிசுகிசுத்தான். ஆனால் அவளுடைய இரத்தம் அவன் சட்டையில் ஊறி, எதை எதையோ வரையத் தொடங்கியது. அவளுடைய பிடி தளர்ந்தது, அவளுடைய மூச்சு மங்கியது, அவளுடைய கண்கள் பளபளப்பாக, அவனால் எட்ட முடியாத தூரத்தைப் பார்த்தன. அறிவு அவள் உடலை குளிர்ந்த பூமியில் கிடத்தி, இறுதி விடை கொடுத்தான்! "அழகான என் குட்டிச் செல்லமே அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே அளப்பெரும் துயரில் என்னைத் தள்ளி அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ?" "வாய் மடித்து கண் சுழன்று வான் உயர கை அசைத்து வாட்டம் இன்றி துள்ளிச் சென்றவளே வான்வழியால் உன்னை பொசுக்கியவன் யாரோ?" "மணலால் கதிரவன் எழும் காலையில் மனதை உறுதியாக்கி தண்ணீருக்கு நின்றவளே மரணப் பயமின்றி தொண்டு செய்தவளே மண்பானையில் கஞ்சி கொதிப்பது தெரியாதோ?" "செவ்வாய் நீயோ என்னைச் சந்தித்தாய் செவ் இதழ் கொண்டு கஞ்சி பருகினாய் செந்தமிழ் நிலைக்க துன்பம் சுமந்தாய் செல்லடித்து உன்னைச் சிதைத்தவன் யாரோ ?" முள்ளிவாய்க்கால் கஞ்சி ஒரு அடையாளமாக, உயிர்வாழ்வின் அமிர்த சுவையாக, துரோகம் செய்யப்பட்ட மக்களின் உப்புக் கண்ணீராக, சுதந்திரம் மீண்டும் மலரும் நாளைய தினம் பற்றிய அழியாத வாக்குறுதியாக, இன்று 'அறிவு'க்கு மட்டும் அல்ல, எல்லா ஈழத் தமிழர் மனதிலும் ஒட்டி நிற்கிறது! நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்1 point
-
ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு!
ஆசிய தொடர்களை மட்டுமல்ல பன்னாட்டுத் தொடர்களையும் இந்துஸ்தான் புறக்கணிக்கவேண்டும்.1 point
-
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
1 pointPublished By: VISHNU 18 MAY, 2025 | 07:55 PM உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று (மே 18) இல் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் குறித்த எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும் என தனது வணக்கத்தை பதிவில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/2150981 point -
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பாவம். ஏராளனும் அதுக்க மாட்டுப்பட்டுப் போனார். பூவோட சேர்ந்த நார்.1 point
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அதிபர் ட்ரம்ப் என்ற மனிதரைப் பற்றிய உங்களின் பார்வை மிகச் சரியானது. அவர் ஒரு தனிமனிதராக தன்னுடைய இலாப - நட்டக் கணக்கையே எங்கெனும் பார்க்கின்றார். நண்பர்கள், எதிரிகள் என்று இல்லாமல், இலாபம் வருகின்றதா, இல்லையா என்றே எண்ணுகின்றார். ஆனல் அவரின் பின்னால் ஒரு கூட்டம் இருக்கின்றது. நடு அமெரிக்காவில் இருக்கின்றனர்; வருமானம் பெரிதும் குறைந்தவர்கள்; ஒரு அடையாளம் கொண்டவர்கள். வேறு சிலர் மிகப் பெரும் வர்த்தகர்களாக இருக்கின்றனர். இவர்கள் இலாப நட்டக் கணக்கு பார்ப்பவர்கள் இல்லை. இங்கிருக்கும் குடியேறிகளை மனிதத்தன்மை அற்ற முறைகளினூடு வெளியேற்றிக் கொண்டே, தென் ஆபிரிக்காவில் இருந்து வெள்ளை இன மக்களை புதிய குடியேறிகளாக கொண்டு வருபவர்கள் இவர்கள். ஆங்கிலம் மட்டுமே இங்கு ஒரு மொழி என்பவர்கள் இவர்கள். DEI வேண்டாம் என்பவர்கள் இவர்கள். அதிபர் ட்ரம்ப் இந்த விடயங்களில் அக்கறை இல்லாதவராக இருக்கக்கூடும். ஆனால் அதிபரின் வாக்கு வங்கி இவர்கள் தான். அதனாலேயே இந்தக் கொள்கைகள் இன்று இங்கு முன்னிறுத்தப்படுகின்றன. இதன் வேர்கள் நீண்டு, அது இறுதியில் ஒரு இனப் பாகுபாடாக வருவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. ஆமாம், மோடி அவர்களில் ஒருவர், அவர் பாடம் கற்றதே ஆர் எஸ் எஸில் தான். அதன் பின்னர் தான் அரசியலுக்கே வந்தார்.1 point
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சீனாவோ அல்லது இன்னொரு மிகப்பெரிய வளமுள்ள நாடு விரும்பி, இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கினால், நிச்சயம் இந்தியா திணறும். ஆனால் இன்றைய உலகில் தங்களுக்கு சேதாரம் அதிகம் இன்றி எந்த ஒரு நாடும் இதைச் செய்வார்களா, செய்ய முடியுமா என்பது ஒரு கேள்வி. உக்ரேன் போன்ற ஒன்று கிடைத்ததால் அமெரிக்காவும், மேற்குலகும் ரஷ்யாவிற்கு இதையே செய்து கொண்டிருக்கின்றன. இந்தியாவால் ஒரு முனையில் போரை நடத்த முடியுமா என்பதே இப்பொழுது கேள்விக்குறியாகி இருக்கின்றது. பல முனைகளில் கிளர்ச்சிகள் ஆரம்பித்தால், இந்தியாவால் சமாளிக்கவே முடியாது. மற்றும் இன்றைய இந்தியாவின் பொருளாதாரமே உலகிற்கு சேவைகளை வழங்குதலில் தங்கியிருக்கின்றது. யுத்தமும், சேவைகள் வழங்குதலும் ஒன்றாக இருக்கமுடியாது. இந்தியா உடைந்து போக வேண்டும் என்பது ஈழத்தமிழர்களின் பெரும்பாலானவர்களின் விருப்பமே. அதன் மூலம் இந்திய வெறுப்பை காட்டவும், பிரிவதால் எங்களுக்கு சில அனுகூலங்கள் கிடைக்கும் என்றும் நினைக்கின்றனர். அதனாலேயே பலரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக மாறியுள்ளார்கள். நான் நடைமுறைகளையும், உலகின் போக்கையும் அடிப்படையாக வைத்தே எனது கருத்துகளை எழுதுகின்றேன். எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை இங்கு தவிர்த்து விடுகின்றேன். 'நீங்கள் எந்தப் பக்கம்..................' என்ற கேள்விக்கு முன்கூட்டிய பதில் இது..................🤣1 point
-
பிரித்தானியாவில் இராணுவத் தளபதியின் மகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி!
லண்டன் 🇬🇧" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t96/1/16/1f1ec_1f1e7.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> மாநகரின் மத்தியில் 150 மாணவர்கள் ஒன்று திரண்டு ஆற்றிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடனம் லண்டன் 🇬🇧 மாநகரின் மத்தியில் 1...3,410 个心情 · 421 次分享 | லண்டன் 🇬🇧 மாநகரின் மத்தியில் 150...லண்டன் 🇬🇧 மாநகரின் மத்தியில் 150 மாணவர்கள் ஒன்று திரண்டு ஆற்றிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடனம்1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை செவ்வாய் 20 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 62) செவ்வாய் 20 மே 2:00 pm GMT டெல்லி - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK எதிர் RR 20 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் மூன்று பேர் மாத்திரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் ராஜஸ்தான் ராயல்ஸ் ஏராளன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?1 point
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
அவ யாரையோ கண்டு நாணத்தால் நல்லா சிவந்துபோனா. யாராக இருக்கும்????? எனக்கு சாமியார்மேல் கொஞ்சம் டவுட்டு.🫣1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இருவரும் ஒன்றாகவே போகின்றார்கள், ஒன்றாகவே வருகின்றார்கள்.............. ஒரு இடைவெளி கிடைக்குதில்லையே இன்னுமொருவர் இவர்களுக்கு இடையில் போய் நிற்பதற்கு.................🤣. கிருபன் முன்னரே சொல்லியிருந்த அநதப் போட்டியும் வந்து போய்விட்டது..........🤣.1 point
-
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது ஆனால் யுத்த வெற்றிவிழாவும், வெற்றிநாயர்களாகவும் காட்டிக்கொள்வதும் எந்த வகையிலும் அர்த்தமற்றது - ராஜ்குமார் ரஜீவ்காந்
தாரளமாகப் போடலாம்1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எவ்வளவு முயன்றாலும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. ரசோதரனும் அவர்களைப் பிடிக்கலாம் என்று பார்க்கிறார். ம்க்கும்.1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நம்ம புலவர் அண்ணா நந்தன் அண்ண கூட்டனி தொடர்ந்து வெல்லுகினம் என்னவாய் இருக்கும்.........................1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுவும் சரிதான்👍...................... நடந்து முடிந்த சமியன்ஸ் கிண்ண தொடரில் இவருக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்க வில்லை................ போன வருடம் கர்வியன் தீவில் அமெரிக்காவில் நடந்த உலக கோப்பை போட்டிகளில் விளையாடினவர் , பெரிசா அடிச்சு ஆடா விட்டாலும் ஒரு சில விளையாட்டில் நல்ல ரன்ஸ் அடிச்சவர்.........................1 point
-
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது ஆனால் யுத்த வெற்றிவிழாவும், வெற்றிநாயர்களாகவும் காட்டிக்கொள்வதும் எந்த வகையிலும் அர்த்தமற்றது - ராஜ்குமார் ரஜீவ்காந்
1 point
- தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதியை அடைய எடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளை ஆதரிக்கிறோம் - கனேடிய பிரதமர்
18 MAY, 2025 | 08:08 PM பொறுப்புக் கூறலுக்கும் உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்ணி தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு கனேடியப் பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் ஆயுதப்போர் முடிவடைந்து இன்றுடன் 16 வருடங்கள் ஆகிவிட்டன. 26 வருடங்களுக்கும் அதிகமாக நீடித்த இந்தப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளில், இழந்த உயிர்களையும் சிதறிப்போன குடும்பங்களையும் பேரழிவடைந்த சமூகங்களையும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவே இருப்போரையும் நாம் நினைவுகூருகின்றோம். அத்துடன் தமது அன்புக்குரியவர்களின் நினைவுகளைச் சுமக்கும் கனேடிய தமிழ்ச் சமூகத்தையும் கனடாவின் பல பகுதிகளிலும் திட்டமிடப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளையும் நாம் மனதிற்கொள்கின்றோம். பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளைக் கனடா தொடர்ந்தும் ஆதரிக்கின்றது. இந்த நினைவேந்தல் நாளை நாம் கடைப்பிடிக்கும் போது, துணிவுடன் அஞ்சலி செலுத்துவதற்கான உறுதிப்பாட்டையும், நீடித்திருக்கும் அமைதிக்காகச் செயற்படுவதற்கான உறுதிப்பாட்டையும் அது பலப்படுத்தட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/2150991 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதைத்தான் உங்களிட்ட இருந்து எதிர்பார்த்தது. நீங்கள் என்ன என்டா, அவ உங்களுக்கு தனிப்பட அனுப்பினத இங்க போட்டு விட்டீங்கள் (அந்த makeup இல்லாத படம்). பரவாயில்லை. என்னைச் சாட்டி, எல்லாருக்கும் இனிப்பு குடுங்கோ. சமுகம் நல்லா சந்தோசமா இருந்தாச் சரிதானே.1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாக்கிஸ்தான் போரை தொடங்கவில்லை. இந்தியாவை பிடிப்பதும் அவர்கள் எண்ணமுல்லை. அடித்த அடியில் கேட்காமலே இந்தியா தண்ணீரை திறந்து விட்டது🤣 பாக்கிஸ்தானின் நீரில் இந்தியா கைவைத்தால், இந்தியாவுக்கு திபெத் பீடமேடையில் இருந்து வரும் பெரும்பகுதி நீரை சீனா தடுக்கலாம். எல்லாமுமே சர்வதேச ஒப்பந்த அடிப்படையில் பகிரப்படுவனதான். தோற்கடிக்கப்பட்டு, பல இனவழி தேசிய நாடுகளாக உடைக்கப்படவேண்டும். அப்போ எமக்கு நன்மை வரும்.1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியர்கள் ஒப்பாரியே வைப்பார்கள்🤣 இதுவரை போரில் மட்டும் அல்ல ஒரு சின்ன கைக்கலப்பில் கூட சீனாவை இந்தியா வெல்லவில்லை. சீனாவை சீண்டினால் இந்தியா நினக்கமுடியாத வழியில் எல்லாம் அடி விழும்.1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
1 point- தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
1 point- முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
தமிழ்க்கவி, நிலாந்தன் போன்றவர்களிடம் எனக்கு நன்மதிப்பு இல்லை. அவர்கள் இயக்கத்தோடு இருக்கும் வரை பிரசார பீரங்கிகளாகவும், ஊதுகுழலாகவும் இருந்தவர்கள்( 2009 முன்னைய காணொளிகளையும், அச்சு ஊடகங்களை பார்த்தால் தெரியும்) , போர் முடிந்த பின்னர் புதுவை இரத்தனதுரை, பாலகுமார் போன்றவர்கள் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டும், இன்னும் பலர் ஆயுத ஏந்தாமல் இயக்கத்தில் இருந்தவர்கள் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள் (கண்ணதாசன் சேர் - சிறுவயதில் நான் அவரிடம் மிருதங்கம் பழகியிருக்கின்றேன், மிகவும் இனிமையானவர்), ஆனால் இவர்கள் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பயணம் செய்து 180 பாகை திரும்பி கருத்து சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள், இதைத்தான் சாத்தன் வேதம் ஓதுவது என்பதா?1 point- நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் : இதுவே என்னுடைய ஒரே ஆசை - மஹிந்த ராஜபக்ஷ
சிங்க கொடியின் நிழலில் நாட்டை ஆள்வது முக்கியமல்ல. அனைத்து இனங்களும் தத்தமது பாதுகாப்பை உணரும் ஒரு அரசியல் பொறிமுறையை கொண்ட அரசியலமைப்பை உருவாக்காதது இவரது பாரிய தோல்வியாகும். இதுவே ஶ்ரீலங்கா நாட்டின் படிப்பினை. இப்போதைய ஆட்சியளர்கள் உணர வேண்டிய மிக முக்கிய விடயம். தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வெற்று கோஷங்களை விடுத்து இதை வலியுறுத்தி நடைமுறை சாத்தியமான அரசியலுக்கு வரவேண்டும்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்னோ அணி தற்பொழுது 10 புள்ளிகளுடன் இருக்கிறார்கள், மீதமுள்ள 3 போட்டிகளிலும் வென்றால் 16 புள்ளிகள் அவர்களுக்கு கிடைக்கும். (பங்களூர், குஜராத், பஞ்சாப் அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகி உள்ளன. )மும்பாய், டெல்லிக்கு தலா 2 போட்டிகள் இருக்குது. இரண்டு அணிகளும் பஞ்சாப் உடன் விளையாடவேண்டும். இரண்டும் பஞ்சாப் உடன் தோல்வி அடைந்தால் மீதமுள்ள டெல்லி மும்பாய் அணிக்கு இடையிலான போட்டியில் டெல்லி வென்றால் டெல்லிக்கு 15 புள்ளிகள் கிடைக்கும். மும்பாய் வென்றால் மும்பாய்க்கு 16 புள்ளிகள் கிடைக்கும். டெல்லி வென்றால் லக்னோ தெரிவாகி விடும். ஆனால் மும்பாய் வென்றால் மும்பாய், லக்னோ அணிகள் இரண்டும் 16 புள்ளிகளுடன் இருப்பார்கள். ஆனால் மும்பாயின் ஓட்ட விகிதம் இரு நாடுகளுக்கு இடையில் அதிகமாக இருக்கிறது. லக்னோ அடுத்த 3 போட்டிகளிலும் பெரிய வெற்றிகளை பெற்று, மும்பாய் மீதமுள்ள போட்டிகளில் பெரிய தோல்விகள் பெற்றால் லக்னோக்கு வாய்ப்பு இருக்கிறது.1 point- ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் - பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்
ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் - பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் Published By: Rajeeban 19 May, 2025 | 10:26 AM ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன்று நாங்கள் தமிழ் இனப்படுகொலை தினைத்தை நினைவுகூறுகின்றோம்.-தமிழ் மக்களிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் பாரிய இனப்படுகொலையில் ஈடுபட்ட யுத்தத்தின் 16வது வருட நிறைவை நினைவுகூருகின்றோம். உயிர் தப்பிய பலர் கனடாவிற்கு பாதுகாப்பிற்காக தப்பியோடிவந்தனர். நாங்கள் இழக்கப்பட்ட உயிர்களை சிதறடிக்கப்பட்ட குடும்பங்களை,நிரந்தரமாக பாதிக்கப்பட்ட சமூகங்களை நினைவுகூருகின்றோம். இந்த வலியின் சுமையையும் அன்புக்குரியவர்களின் நினைவுகளையும் தொடர்ந்து சுமக்கும் பிரம்டன் மற்றும் கனடா தமிழ் சமூகத்துடன் உறுதியாக இணைந்திருக்கின்;றோம். பிரம்டன் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் இருப்பிடம் என்பதால் இந்த வருடம் பிரம்டனிற்கு மிகவும் விசேடமானது.இது ஒரு சக்திவாய்ந்த நினைவுச்சின்னமாகும். இந்த நினைவுச்சின்னம் கடந்த காலத்தை நினைவூட்டுவதாகவும்,உண்மை பொறுப்புக்கூறல் மற்றும் அமைதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்திற்கான அழைப்பாகவும் விளங்குகின்றது. ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் நீதிக்காகவும் நினைவுகூரலிற்காகவும்,ஒற்றுமையுடன் ஒன்றாக நிற்பதற்கும் எங்களை அர்ப்பணிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்போம்.இன்றும் எப்போதும். https://www.virakesari.lk/article/2151221 point- ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு!
கொஞ்சகாலத்திற்கு முன்னர் எடுத்ததிற்கெல்லாம் புறக்கணித்த எம்மவர்கள் நிலையில் இந்தியா🤣, யார் இவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்கள். அனத்திலும் பிஜேபியின் அரசியல்.1 point- முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
எம்மை கடந்து சென்ற, நாம் கடந்து வந்த பெருந்துயரம். மீண்டும் இப்படியோர் காலம் வரக்கூடாது.1 point- முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
1 pointஎமக்கு போராடுவதை நாமே செய்ய வேண்டும். ஆனால், இந்திய அதிகார பீடங்கலில் இருக்கும் தேவை இல்லாத பயமான, இலங்கைத் தீவின் வடக்குகிழக்கில் பிறிம்பான ( சுய) அதிகார அரச அதிதிகார பீடம் அமைவது ஒரு போதும். British Raj princely states நிலைக்கு கொண்டுவராது என்று அவர்களின் மதியில் இருக்கும் தேவை இல்லாத இருளை, பயத்தை தெடர்ந்து, பரந்த அதிகார பீடங்களுக்கு மீளமீள எடுத்து சொல்லி, இலங்கைத்தீவின் வடகிழக்கில்அரச அதிதிகார பீடம் உருவாக இந்திய அரசில் ஏது நிலையை தோற்றுவிக்க நீங்கள் முற்சி செய்யுங்கள். இது உங்களின் அரசியலை முன்னெடுக்கவும் உதவும் - ஒரு அட்டவணை அடிப்படையில் - ஒவொரு மாதமும் எதாவது 1 மத்திய அதிகார பீடம் 1 வேறு மாநில அதிகார பீடம் என்று சந்திப்பு , தமிழ் நாடு விடயங்களையும் சேர்த்து. உங்கள் சந்திப்பில் அரசியல் வாதிகளையும் சந்திப்பது (ஏனெனில் அப்படி பாரிய மாற்றத்துக்கு இரு பகுதியின் இணக்கமும் அவசியம் - அரசியல்வாதிகள், அதிகார பீடங்கள்) (இப்படியே இந்தியாவில் மிலிந்த மொரகொட செய்தது, தமிழருக்கு ஓன்றும் கொடுக்க கூடாது என்று. இந்தியா பிரிந்து இடும் என்று)1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஓம்… நானும் யோசிச்சனான். எத்தனை வீரர் 5 wickets எடுப்பார்கள், முதல் இனிங்சை ஏதாவது அணி டிக்லேர் பண்ணுமா? இப்படியும் கேள்விகளை யோசித்தேன். ஆனால் 5 நாள் போட்டிக்கு 8 கேள்வி காணும் என விட்டு விட்டேன்🤣.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை திங்கள் 19 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 61) திங்கள் 19 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG எதிர் SRH 13 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வீரப் பையன்26 நிலாமதி சுவி செம்பாட்டான் வாதவூரான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி கோஷான் சே அகஸ்தியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வாத்தியார் சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு ஏராளன் ரசோதரன் நுணாவிலான் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?1 point- தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
தங்கள் கனவுகளைத் தொலைத்து மண்ணுக்காய் மடிந்த மா வீரச்செல்வங்களுக்கு என் வீர வணக்கம். இருந்தால் தலைவன் மடிந்தால் இறைவன். சிந்திய ரத்தமும் கண்ணீரும் தியாகமும் என்றோ ஒரு நாள் மண்ணை விடுதலையாக்கும்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இலங்கையர்களுக்கு பிரித்தானியா விதித்த தடை .. மகிழ்ச்சியில் ஸ்டார்மர்
இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது தனது அரசாங்கம் தடைகளை விதித்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரித்தானிய (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கடந்த கால அட்டூழியங்களுக்கு ஒப்புதல் மற்றும் பொறுப்புக்கூறல் தேவை என்று ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேலும், "ஆயுத மோதலில் கொல்லப்பட்ட மற்றும் பரவலான மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூரும், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மற்றும் பிறருடன் நாங்கள் இணைகின்றோம். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் 16 ஆண்டுகளைக் குறிக்கும் வேளையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு மண்டலங்கள் என்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மீது செல் தாக்குதல் நடத்தியது. ஆயுத மோதல் முழுவதும், இலங்கை சட்டவிரோதக் கொலைகள், கட்டாயக் காணாமல் ஆக்கப்படல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளைச் செய்தது மற்றும் மோதலின் இறுதி மாதங்களில் அதன் இராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. கடுமையான தடை இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நால்வர் மீது எமது அரசாங்கம் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதித்தது. இந்த நடவடிக்கையில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், "நீதி மற்றும் அமைதியைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த புனிதமான நாள் நினைவூட்டுகிறது" என்று ஸ்டார்மர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை, கடந்த ஆண்டு பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், 2009 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், “15ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினத்தை” நினைவுகூரும் ஒரு செய்தியை வெளியிட்டார். அதில், "முள்ளிவாய்க்கால் என்பது காணாமல் போனவர்களை நினைவுகூருவதோடு, அட்டூழியங்கள் செய்தவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும் என்பதையும் நினைவூட்டுவதாக இருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இலங்கை தமிழர்கள் மேலும், "நமது நாடு முழுவதும் உள்ள தமிழ் சமூகங்கள் இந்த புனிதமான நாளைப் பற்றிச் சிந்திக்கும்போது, தமிழ் மக்களுக்கு நீடித்த அமைதி, நல்லிணக்கம் மற்றும் நீண்டகால அரசியல் தீர்வை நோக்கிச் செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை தொழிலாளர் கட்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது" எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில், பிரித்தானிய அரசாங்கம் இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூரியா, கடற்படைத்தளபதி வசந்த கரனாகொட மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி கருணா என அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்போருக்கு எதிராக தடைகளை விதித்தது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த நால்வருக்கும் தடை விதித்தமை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. . https://tamilwin.com/1 point- போக்காளி (நாவல்)
1 pointபோக்காளி (நாவல்) sudumanal எனது வாசிப்பு ஒரு போரின்போது மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு நாட்டுக்குள் மாறிமாறி இடம்பெயர்கிறார்கள். அயல் நாட்டுக்கு இடம்பெயர்கிறார்கள். தூர தேசங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இலங்கையிலும் போர் துரத்திய தமிழ் பேசும் மக்கள் இவ்வாறே ஆனார்கள். மேற்குலகுக்கு புலம்பெயர்ந்தோர் எல்லோரும்அரசியல் அகதிகளா பொருளாதார அகதிகளா என பலர் கேள்வி எழுப்புவதுண்டு. வெறும் பொருளாதாரக் காரணிகளால் போர்ப் பிரதேசத்திலிருந்து மேற்குலகுக்கு இடம் பெயர்பவர்களை அரசியல் அகதிகள் எனலாமா என்ற விவாதம் இங்கும்கூட நடைபெறுகிற ஒன்று. பொருளாதாரப் பிரச்சினை என்பதும் ஓர் அரசியல் பிரச்சினைதான் என்ற எதிர்வாதமொன்றும் வைக்கப்படுவதுண்டு. (எனக்கு இதில் உடன்பாடு உண்டு). இந் நாவல் இதற்கான ஒரு விடையை தருகிறதாக எனக்குப் படுகிறது. பொய்யாக ஒரு கதையைச் சொல்லி தாம் நேரடியாக இராணுவத்தாலோ புலிகளாலோ பாதிக்கப்படுவதாகக் கூறி சாதித்தாலொழிய அரசியல் தஞ்சம் கேள்விக்குள்ளாகிவிடும். அப்படியாக அகதி வாழ்வைத் தொடங்குபவர்கள் -தாம் விரும்பினாலும்கூட- தனி பொருளாதாரக் காரணிகளை நிவர்த்திக்கும் வேலையில் மட்டும் பயணிக்கவே முடியாமல் போகிறது. அது ஈழப் போராட்ட அரசியலை, அதன் சிந்தனை முறையை இழுத்துக்கொண்டுதான் பயணிக்கிறது. அது அவர்களின் புதிய வாழ்வியலையும் பாதிக்கிறது. நவமகனின் போக்காளி என்ற இந்த நாவல் அதை சிறப்பாக வெளிக் கொணர்கிறது. புலம்பெயர்ந்தபின் இவர்கள் அனுபவிக்கிற பிரச்சினைகள் புதிய வடிவங்களை எடுக்கின்றன. மேற்குலகுக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு மொழிவழி, கலாச்சாரவழி என ஆதரவுத் தளம் ஏதும் கிடைக்கவில்லை. ஓர் அந்நியமாதல் நிலவியது. ஆனால் பொருளாதார ரீதியிலும் பாதுகாப்பு ரீதியிலும் உத்தரவாதம் கிடைத்தது. அந்நியர்களாக, இந்த நாடுகளுக்கு புதியவர்களாக, காலநிலைக்கு புதியவர்களாக, பழக்க வழக்கங்களுக்கு புதியவர்களாக, முன்னுதாரணம் ஏதுமற்ற வாழ்வியலுள் புகுபவர்களாக வாழ்வு தொடங்குகிறது. இத்தோடு சேர்த்து நிறவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய புதிய பிரச்சினை சேர்ந்துகொள்கிறது. ஆனாலும் காலனிய மனோபாவத்துக்குப் பலியான மனநிலையில் நிறவாதத்தின் அரசியலை அதன் நுண் களங்களை புரிய முடியாதவர்களாகவும், அதுகுறித்த அறிவு விளக்கம் அற்றவர்களாகவும் கணிசமானோர் இருந்தனர், இருக்கின்றனர். மேற்கூறிய காரணிகளின் திரட்சி தோற்றுவித்த உள நசிவுகளை சுமந்து கொண்டு வாழும் நிலை அவர்களை பின்தொடர்ந்தபடியே இருக்கிறது. இந்தப் பின்னணியில் வாழ்வு அவர்கள் எண்ணியபடி இல்லாமல், ஊகித்தறியமுடியாத திருப்பங்களுடன் நகர்கிறது. புதிய புதிய பிரச்சினைகளையும் கலாச்சார ஒழுங்கமைவுகளையும் எதிர்கொண்டு அவர்கள் தனியர்களாய், பின் இணையர்களாய், பின் பிள்ளைகளோடு குடும்பங்களாய் ஆகின்றனர். இந்த வளர்ச்சி நெடுகிலுமே முன்னுதாரணமற்றதும் அவை குறித்த அனுபவமோ அறிவோ அற்றதுமான நிலை வாழ்வின் இறுதிவரை துரத்திக் கொணர்ந்து முதுமைக்குள் தள்ளி வீழ்த்திவிடும் வரையான கதையை போக்காளி நாவல் விபரிக்கிறது. சுமார் 30 வருட அகதி வாழ்வின் இந்தக் கதையை வாசிக்கும்போது அதேவகை அனுபவங்களை தரிசித்த அல்லது தரிசித்துக் கொண்டிருக்கும் நிலைமைகளின் பொதுத் தன்மையை இன்னொரு நாட்டில் இருக்கும் நான் உணர்ந்துகொண்டே இருந்தேன். வாசிப்பின்போது பழைய ‘நான்’ உடன் வாழ்ந்து கொண்டு இருந்தேன். பொருளாதார ரீதியில் ஒரு சாதாரண தொழிலாளியின் சம்பளத்தில், இன்னும் சொன்னால் வறுமைக் கோட்டின் மேலும் கீழுமாய் இயங்கும் ஒரு பொருளாதாரத்தில், வாழ்க்கை நடத்தும் நிலையில்தான் புகலிட வாழ்வு நகர்கிறது. ஒரு சுவிஸ் பிராங் அல்லது நோர்வேஜிய குரோணர் ஒரு இலங்கை ரூபாவுக்கு சமமாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். யுத்தம் இந்த எல்லைவரை வந்திருக்கவே இடமில்லை. அதைவிட இந்த அகதியர்களது குடும்பங்கள் இலங்கையில் என்ன நிலையில் இருந்திருப்பார்கள். இலங்கைக்கு எடுத்த எடுப்பிலெல்லாம் போய் வர பணவசதி இருக்குமா. சுருங்கச் சொன்னால் இந்த பணப் பரிவர்த்தனை (கரன்சி) மாற்றம் இல்லையெனின், போராட்ட வரலாறு இந்தப் பிரமாண்டத்தை அடைந்திருக்காது. அதேநேரம் இந்தப் பேரழிவையும் சாத்தியப்படுத்தியிருக்காது என்றுகூட யோசிக்க வைக்கிறது. இந்த நாவலின் நாயகன் குணா. நாவலாசிரியர் நவமகன் 1988 இலிருந்து தொடங்கி 2019 வரையான தனது புகலிட வாழ்வு அனுபவங்களை கட்டிச் சுமந்து நாவலில் ஏற்றியிருக்கிறார் என நினைக்கிறேன். புலம்பெயர்வது என்பது உடல் சார்ந்த -பௌதீக ரீதியிலான- பிரதேச மாற்றம் மட்டுமல்ல. உளம் சார்ந்த ‘நான்’ இனதும் மாற்றமும் போராட்டமும் ஆகிறது. ‘நான்’ என்பதே எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டதுதான். எனவே புலப்பெயர்வு என்பது அந்த ‘நான்’ இனைப் பிரிந்து -ஒரு வீட்டை கட்டுவது போல்- வாழ்வை கட்டுதலல்ல. அந்த ‘நான்’ இன் இடப்பெயர்வானது ஒரு தொலைதூரத்தில் எல்லாவழியிலும் அந்நியத்தை உணர்ந்தபடியும், புதிய புதிய சிக்கல்களை எதிர்கொண்ட படியும் எப்படி நகர்கிறது என்பதை ஆசரியர் நவமகன் குணாவினூடாகவும் அவரது மனைவி ஆதிரா ஊடாகவும் சொல்கிறார். எனவே அவர் விட்டுவந்த போராட்ட பூமியின் எண்ணங்களோடு அவரது பழைய ‘நான்’ இங்கும் வருகிறது. அந்த பழைய எண்ணங்களை புத்துருவாக்கம் செய்தபடி நகரும் ‘நான்’ க்கு இப்போ நேரடி சாட்சிகளோ அனுபவங்களோ கிடையாது. அந்தப் எண்ணப் பசிக்கு விடுதலைப் புலிகள் குறித்த மாயைகளும் உண்மைகளும் பிரச்சாரங்களும் தீனியாகின்றன. இந்த நான் அல்லது நான்களின் திரட்சியாக இந்த நாவல் சொல்வனமாகிறது. புகலிடத்தாரை போராட்டம் பாதிக்கிறது. போராட்டத்தை புகலிடத்தார் பாதிக்கின்றனர். அதன் அடிப்படையில் இரு வரலாறும் சமாந்தரமாகப் பயணிக்கின்றன இந் நாவலில். நாவலின் அத்தியாயங்களே ஆண்டுகளால்தான் குறிக்கப்படுகின்றன. 1988 இலிருந்து 2009 வரையான விடுதலைப் புலிகளின் போராட்ட களத்தின் தாக்குதல்களை, தனிநபர் கொலைகளை, வெற்றியை தோல்வியை, அவைகள் குணாவிடமும் அவனது நண்பர்களிடமும் ஏற்படுத்துகிற உற்சாகத்தை சோர்வை, குருட்டு நம்பிக்கைகளை, விசுவாசத்தை, நியாயப்படுத்தல்களை, மொக்குத்தனங்களை, மனிதாபிமானத்தை, சாகசங்களை, கொலைகளை கொண்டாடுவதை, அரசியற்ற சிந்தனை முறையை என பெரும் வெளியை இந் நாவல் பூராவும் காண முடியும். இந்த வழியிலேயே எழுச்சியும் வீழ்ச்சியுமான எண்ணங்கள் அவர்களது ‘நான்’களை கட்டமைத்தபடியே செல்கிறது. வெவ்வேறு இயக்கங்களுடன் சம்பந்தப்பட்ட மாறுபட்ட பாத்திரங்களினூடாக இக் கதைகளை சொல்லி நகர்த்துகிறார் நவமகன், தனது போக்காளி நாவலில்!. இந்தப் பொதுப் போக்கின் ஒரு வகைமாதிரியாக குணாவின் பாத்திரம் வருகிறது. மேற்குலக புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளை ஆதரித்த பலரினதும் ஒரு வகைமாதிரியான பொதுமகன் குணா. இதற்கு வெளியில் சிந்திக்கிற அரசியல் புரிதல் கொண்ட அழுத்தமான ஒரு பாத்திரம் விஸ்வா. விஸ்வாவும் குணாவின் நண்பனாக இருக்கிறான். அவனது தாக்கமும் குணாவின் மனிதநேய பண்புகளும் அவனது ‘நான்’ இனை பாதித்தபடியே இருக்கிறது. ஆனாலும் குணாவின் உணர்ச்சிவகை நிலைப்பாடுகளும், நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் அவனை சூழ்ந்தபடி நகர்வதுதான் அவனது வாழ்வு என்றாகிறது. 2009 பேரிடியாய் தாக்கிய தோல்வியை ஒப்புக்கொள்வது என்பதை அவனது ‘நான்’ ஏற்க மறுத்து அவனை சிப்பிலியாட்டுகிறது. அந்த உளவியல் சிதைவு குடும்பத்தை சமாந்தரமாகவே பாதிக்கிறது. அவன் முன்னரைப் போல் இல்லை. எடுத்ததுக்கெல்லாம் கோபப்படுவதும், எரிஞ்சுவிழுவதும், ஒரு கட்டத்தில் (முதன்முறையாகவும் கடைசிமுறையாகவும்) தனது மனைவி மீது வன்முறை பிரயோகிக்குமளவுக்கு போவதும், எப்போதுமான பதைபதைப்பும் என மாறிக்கொண்டிருந்தான். அது குடும்பத்தை பாதிக்கத் தொடங்குகிறது. அந்நிய மண்ணில் பிறந்து, அதன் கலாச்சாரத்துள் வாழுகிற, அந்த கல்விமுறையுள் வாழ்க்கையை தொடங்குகிற தனது பிள்ளைகளை எதிர்கொள்வது சிக்கலாக மட்டுமல்ல, அதிர்ச்சி தருவனவாகவும்கூட அமைந்துவிடுகிறது. எமது கலாச்சார மனத்தையும் பிள்ளைவளர்ப்பு முறைமையையும் தலைக்குள் வைத்துக் கொண்டு, பிள்ளைகளை புரிந்துகொள்வது, அவர்களுடனான முரண்பாடுகளை தீர்ப்பது சிக்கலாக இருக்கிறது. பாலியல் ரீதியிலான, ஏன் காதல் குறித்தான மதிப்பீடுகளையெல்லாம் பிள்ளைகளில் ஏற்றிப் பார்த்து பதட்டப்படுகிற நிலை இருக்கிறது. கல்யாண விடயத்தில் சாதியை தாண்டி செயற்பட முடியாமல் அவதிப்படுகிறான். பிள்ளைகளோ இந்தப் புதிரை அவிழ்க்க முடியாதவர்களாக, அதேநேரம் பெற்றோர் மீதான அன்பை இழந்துவிடாதபடி இருக்கப் போராடும் மனமுள்ளவர்களாக இரண்டு கலாச்சார மனங்களுக்கு இடையில் நசிபவர்களாக அந்தரிக்கிறார்கள். இவற்றை அற்புதமாக நாவல் விபரிக்கிறது. இந்த புது அனுபவங்களை பெறாமல் புகலிட வாழ்வு அமைந்திருக்க வாய்ப்பே இல்லை. கள்ள விசாவில் ஜேர்மன் வந்து, பின் பிரான்ஸ் க்கு போய், அங்கிருந்து ஜேர்மனிக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, பின் டென்மார்க் ஊடாக நோர்வேயை சென்றடைகிற அகதிவழிப் பயணம் என்பது ஆபத்தான வழி கொண்டது. புகையிரத கழிவறையின் கூரைக்குள் மறைந்தபடி முடங்கிக் கிடந்து எல்லை கடப்பது, விமானத்தின் சக்கரத்தை அணைத்தபடி எல்லை கடப்பது, பவுசர்களுக்குள் ஒரு சிறு துவாரக் காற்றை பகிர்ந்து கும்பலாய் எல்லை கடப்பது, பாரவூர்தியின் கொன்ரைனருக்குள் குறுகியிருந்து எல்லை கடப்பது என்பது போன்ற பயங்கரமான சாகசமான பயணங்களை மேற்கொண்டு அகதிகள் வருவது நிகழ்கிறது. இந்தவகைப் பயணங்களில் இறந்துபோனவர்கள் கணிசமானோர். இதையெல்லாம் தாண்டி வந்து இறங்கி தஞ்சக் கோரிக்கையை கேட்டபின்னும் திருப்பி நாட்டுக்கு அனுப்பப்படலாம் என்ற அச்சம் எழுகிறது. இதை மேவிய இன்னொரு அச்சம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த நாவலின் நாயகன் குணா புகையிரத கழிவறைக் கூரைக்குள் ஒளித்து பயணித்த அனுபவத்தை இந்த நாவல் பதட்டத்துடன் வாசிக்க வைக்கிறது. தனியாக தொடங்கும் குணாவின் அகதிப் பயணம் பின் திருமணத்தோடு அவனைப் பிணைக்கிறது. பின் வாழ்வு குழந்தைகளுடன் குடும்பமாகப் பயணிக்கிறது. பிள்ளைகளோடு ஏற்படும் இடைவெளி தலைமுறை இடைவெளி என்ற எல்லையைத் தாண்டி நகர்கிறது. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இருப்பது உலகப் பொதுமையானது. ஆனால் ஒரு அகதிக்கு இதனுடன் சேர்ந்து புதிய மொழி, புதிய கலாச்சாரம், முற்றாக வேறான சமூகம், பழக்கவழக்கங்கள், ஒழுங்குகள் என மேலதிக தடைகள் வருகின்றன. இவை இந்த சமூகத்துடன் மட்டுமல்ல, பிள்ளைகளுடனும் இணைவாக்கம் அடையவோ அவர்களை புரிந்துகொள்ளவோகூட விடாமல் படுத்துகிற கொடுமையை இந் நாவல் பரந்த அறிவுடன் சொல்லிச் செல்கிறது. முதலாளித்துவ வளர்ச்சி அடையாத, அதன் சமூகப் பெறுமதியை அறியாத சிந்தனையுடன் இலங்கையிலிருந்து வந்த ஓர் அகதியானவர் -வளர்ச்சியடைந்ததாகச் சொல்லப்படுகிற- முதலாளித்துவ சிந்தனை முறைக்குள் தன்னை பொருத்திக் கொள்வதில் சந்திக்க வேண்டியிருக்கிற இடர்ப்பாடுகள் உளநசிவுகள் இன்னொரு புறமாக திக்குமுக்காட வைக்கிறது. தாம் புலம்பெயர்ந்து வந்தபோது தமது தாய் தந்தையர் சகோதரம் நண்பர்கள் என்போரின் விம்பங்களை நினைவுச் சட்டகத்துள் தொங்கவிட்டுக் கொண்டு வருகிறார்கள். தனது குடும்ப நிலையை அந்த மனோரம்யமான மனநிலையை (சென்ரிமென்ரை) காவி வருகிறார்கள். தான் வாழ்ந்த சமூகத்தின் அசைவியக்கத்தை அப்படியே படம்பிடித்துக் கொண்டு வருகிறார்கள். இவைகள் எதையும் மாறா நிலையில் கற்பனை செய்துகொண்டு, அதனதன் இயங்கியலையும் இற்றைப்படுத்தல்களையும் கண்டுகொள்ள முடியாதவர்களாக மாறா எண்ணங்களுடன் வாழ்கிறார்கள். அதனால்தான் ஊருக்கு காலம் கழித்துச் சென்றுவிட்டு வந்து “அங்கை இப்பிடி மாறிப் போய்ச்சு அப்பிடி மாறிப் போய்ச்சு… நாங்களெல்லாம் முந்தி…” என ஒப்பீட்டு கதையாடல்களை தொடங்கி விடுகின்றனர். தாம் நாட்டைவிட்டு வெளியேறியபோது காவி வந்த கலாச்சார மதிப்பீடுகளை கட்டிக் காக்கும் ஒருவித பதற்றத்துடன் இருக்கிறார்கள். அதை கொண்டாட்டங்களில் பிரமாண்டத்தினூடாகக் கட்டிக் காக்க கலாச்சார மனம் வழிகாட்டுகிறது. இந்த நிலையில் அவர்களின் கண்முன்னே அவர்களது குழந்தைகள் வளர்ந்து, தமது கலாச்சார மதிப்பீடுகளை அச்சுறுத்துவதுபோல பிரமை கொள்கிறார்கள். இந் நாவலில் விஸ்வா தவிர நாவலின் நாயகனான குணா உட்பட மற்றைய எல்லோரும் இதை பிரதிபலிக்கிறார்கள். இதை நேர்த்தியாக நாவலில் பல இடங்களிலும் காண முடியும். ஒன்றைச் சொல்லியாக வேண்டும். நூலை வாசிக்கிறபோது புலம்பெயர் வாழ்வின் கதை என்றளவில் நாவல் தரும் அழகியலை மேவி, விடுதலைப் போராட்ட நிகழ்வுகளின் கதையாடல்கள் ஓர் ஆவணம் போல எழுகிறதான உணர்வு எனக்குப் பட்டது. அது செய்திகளாலும், உரையாடல்களாலும் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது தகவல்களின் மிகுதி காரணமாக இருக்கலாம். இந்த புலம்பெயர் வாழ்வில் நாற்பது ஆண்டுகளைக் கடந்திருக்கும் எனக்கு வாசிப்பு அனுபவம் இந்த பார்வையைக் கொடுக்கிறதாகவும்கூட இருக்கலாம். இதைத் தாண்டிய மாறுபட்ட வாசிப்புகள் நிச்சயமாக இருக்கவே செய்யும். மேற்குலகின் ஐரோப்பிய மையவாதமும், வெள்ளை மேலாதிக்க பெருமிதமும் சேர்ந்து -காலனிய காலத்திலிருந்து இன்றைய நவ காலனியம் வரையாக- நிறுவி வைத்திருக்கும் நிறவாதம் நாம் கடக்க முடியாத ஒன்று. அதுகுறித்த அனுபவங்கள் எனது வாசிப்பில் தவறிப் போயிருந்தது. நாட்டுக்கு நாடு இதன் அளவும் தாக்கமும் வேறுபட்டு இருக்கிறபோதும், ஐரோப்பிய மக்களின் பொது மனநிலையில் அதன் வெளிப்பாடுகள் நுண்மையாகவும் சில வேளைகளில் நேரடியாகவும் வெளிப்படுவது இன்றும்கூட நாம் காணும் அனுபவம். நாவலில் நான் அதை தரிசிக்கவில்லை. ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை இந்த எதிரம்சங்கள் நிராகரிப்பதில்லை. அந்த அச்சம் தேவையற்றது. நாவலின் உள்ளடக்க இயங்குதலையும், அது கொண்டலைக்கிற மனதையும் தாண்டி நாவல் இப்படியோர் முடிவை நோக்கி நகர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பட்டது. அந்த முடிவை ஒரு குறியீடாய்க் காணவும் முடியவில்லை. இது எனது வாசிப்பு அனுபவம் சார்ந்த கருத்து மட்டுமே. மேற்குலகுக்கு புலம்பெயர்ந்த அகதி வாழ்வினை அதன் தடங்களை ஒரு பெரும் விரிந்த பார்வையில் விரிந்த பரப்பில் முன்வைக்கிறது போக்காளி. நாவல்கள் வெறும் புனைவுகள் மட்டுமல்ல. வரலாற்றின் வேர்களினூடாக பயணிக்கும் ஆற்றல் கொண்டது. அந்தக் காலகட்டத்தின் ஒரு சமூகத்தை, அதன் மாற்றங்களை, அழிவுகளை, உருவாக்கங்களை, நிலைப்படுத்தலை என பலதையும் அது வரலாற்றினுள் சேர்த்துவிடுகிறது. மேற்குலகுக்கு புகலிடம் தேடி வந்த மூத்த தலைமுறையின் வாழ்வுப் பயணத்தை மிக விரிவாகவும், பல தளங்களுக்குள் உள் நுழைந்தும் சித்தரிக்கும் நாவல் போக்காளி. நவமகனின் பெரும் உழைப்பும், கடந்த காலத்தோடு மீண்டும் வாழ்ந்து எழுதலும் இன்றி இந் நாவல் 680 பக்கங்களில் விருட்சமாகி இருக்க வாய்ப்பில்லை. புகலிட இலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தை தேடிக்கொண்ட படைப்பு இது. வாழ்தல் என்பது புறத்தால் மட்டுமன்றி, அகத்தாலும் மேற்கொள்ளும் பயணம் என்பதை புரியாமல் அல்லது சக மனிதர்களுக்கு ஏற்றுக் கொள்ளாமல், புகலிடத்தாரை வெறும் காசு மரங்களாகப் பார்ப்போர் முக்கியமாக வாசிக்க வேண்டிய நூல்களில் இதுவுமொன்று!. ravindran.pa 09052025 போக்காளி (நாவல்) நவமகன் (ஆசிரியர்), நோர்வே. கருப்புப் பிரதிகள் (வெளியீடு) 680 பக்கங்கள் https://sudumanal.com/2025/05/09/போக்காளி-நாவல்/#more-71401 point- ஐந்து ரூபாய் கட்டணம்
1 pointஇன்று காலையில் சம்பளமாக கிடைத்தது ஐந்து ரூபாய் காசு. கோவை காவல் நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்கு காவல்துறை அதிகாரிகளுடன் நீதிக்காக பேசிய அந்த தருணத்தில், தன்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற உண்மை உரைத்த அந்த நொடியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்களில் இருந்து துளிர்த்த கண்ணீர் எனக்குள் ஏற்படுத்திய வலியும் வேதனையும் கொஞ்சம் நஞ்சமல்ல. சட்டப் போராட்டம் என்பது அவ்வளது எளிதானதல்ல. காவல்துறை அதிகாரமிக்கது. ஆளும் கட்சியின் ஆளுமையின் கீழ் உள்ளது. அது என்ன குற்றம் செய்தாலும், அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது சாதாரணமல்ல. ஜெய் பீம் படம் பார்த்திருப்பீர்கள். ஆளும் கட்சியின் அசுர பலத்துக்கு முன்னால் யாரால் என்ன செய்ய முடியும்? இது ஒரு வகை என்றால் சிவில் வழக்குகள் இருக்கிறதே அது இதை விடக் கொடுமையானது. படிக்காதவர்கள் என்றால் சிவில் வழக்குகளின் கொடூரமென்பது கொலையை விட கொடுமையான தாக்கத்தை அவர்கள் வாழ்வில் உண்டாக்கும். ஒரு வி ஏ ஓ செய்யும் ஒரு தவறை சரி செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என நினைத்துப் பாருங்கள். எத்தனை ஊழல் கைதுகள், எத்தனை சஸ்பெண்டுகள் நடக்கின்றன. செய்திகளைப் படித்து விட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால் உண்மையில் பாதிக்கப்படுபவர்களின் மன நிலையும், அவர்கள் அனுபவிக்கும் துன்பமும், துயரமும் எதை வைத்து சரி செய்ய முடியும்? நான் இறந்து விட்டேன் என சொல்லி ஒரு வி ஏ ஓ பட்டாவில் இருந்து பெயரை நீக்கி விட்டான். ஜமா பந்தியில் என் அம்மா, என்னைத் தூக்கி கொண்டு போய் டி. ஆர். ஓவிடம் விட்டு இவனை இங்கேயே கொன்னு போடுங்க. இவன் பெயரில் சொத்து பத்திரம் இருக்கிறது, இந்தப் படுபாவி இவன் இறந்து விட்டான் என பட்டா கொடுத்திருக்கிறான் என்று கதறியது. இப்படியெல்லாம் சொத்தினால் துன்பத்தில் ஆழ்ந்தவன் நான். இதுவே பணம் இல்லாதவர்கள் எனில் என்ன நடக்கும் என நினைத்துப் பாருங்கள். நிலத்தின் மீது நடத்தப்படும் அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா? ஒரு சாதாரணன் இனி ஒரு வீடு வாங்க முடியுமா? இப்போது சம்பளம் 12000 ரூபாயிலிருந்து 25000 வரைக்கும்தான் கொடுக்கிறார்கள். விலைவாசி உயர்வு, வீடு வாடகை உயர்வு, போக்குவரத்து கட்டணம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இப்படி சம்பாதிக்கும் பணமெல்லாம் வயித்துபாட்டுக்கே சரியாக இருக்கும் போது வீடு வாங்க முடியுமா? கல்லில் கடவுளைக் காணும் ஒவ்வொருவரும் பூக்களுக்காகவும், பூசைக்காகவும், பார்ப்பான் தட்டுக்களில் போடும் காசினால் அந்தக் கடவுள் அவர்களுக்கு எதையும் தருவதில்லை. கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை மட்டும் அவை தரும். நம்பிக்கையோடு வாழ்க்கையை வாழ்ந்து விட போராடும் ஒவ்வொருவரும் தன் வாழ் நாள் வரையிலும் ஏதோ நடக்கும் என்ற ஒரே ஒரு எண்ணத்துடன் வாழ்வை வாழ்ந்து விடுகிறார்கள். முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்த வீடு, இனி உனக்கு சொந்தமில்லை என ஒருவர் சொல்லும் போது, அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் ஒரு சாதாரண குடும்பத்தால்? இப்படியான ஒரு பிரச்சினை வந்தது. இரண்டு நாட்கள் ஆகின. உண்மை என்ன என கண்டுபிடிக்க. அடிக்கடி போன் செய்து கொண்டே இருந்தார்கள். அவர்களின் நிலை அப்படி. அது என்ன, எப்படி சரி செய்ய வேண்டுமென சரியான விபரங்களுடன் அவர்களுக்குப் புரிய வைத்து, அது தொடர்பான பணிகளைச் செய்ய சொன்னேன். அவர்களுக்கு இதை எப்படி கையாளனும் என சொல்லிக் கொடுத்தேன். இனி அந்தப் பிரச்சினை தொடர்ந்து நடக்கும். சிவில் பிரச்சினை அல்லவா? ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதம். எல்லோருக்கும் அது எளிதில் புரிந்து விடாது. சிவில் வழக்குகள் என்பவை சரியான ஆதாரங்களுடன் நடத்தப்பட வேண்டியவை. அப்படி இருக்கலாம், இப்படி இருக்காலம் என்பதற்கெல்லாம் வேலையே இல்லை. ஆவண சாட்சியங்கள் வேண்டும். அது இல்லாமல் சிவில் வழக்குகள் சரியான தீர்வைத் தராது. பணம் எல்லா இடத்திலும் வேலை செய்யாது. அதிகார மீறலும் வேலை செய்யாது. புத்திசாலித்தனமும், நிதானமும் வேண்டும். இன்று காலையில் அவர்கள் எனக்கு கட்டணமாக பெரிய தொகை கொடுத்தார்கள். அது அவர்களுக்கு ரொம்பவும் பெரியது. "ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள்" என்றேன். திகைத்து நின்றார் அவர். சட்டைப் பாக்கெட்டுக்குள் இருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து டெஸ்கில் வைத்தார். திடீரென்று என் கையைத் தொட்டு வணங்கினார். "அய்யா, அதோ என் குருநாதர் அவரிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னேன். அவர் என் குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமியை வணங்கிவிட்டு சென்றார். கோதையிடம் "இதை எடுத்துக் கொண்டு போய் பத்திரமாக வை" எனச் சொன்னேன். படிக்காதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் தொண்டு செய்வதை விட வேறு என்ன பெரியதாய் செய்து விட முடியும்? என்னால் நடக்க முடியாது. என் உடலே எனக்கு எதிரி. என் உடலை வெற்றி கொள்வதில் தான் என் வாழ்க்கை அமைந்திருக்கிறது. இல்லையெனில் இந்தியா இன்னொரு சேகுவேராவைப் பார்த்திருக்கும். ஒரு சக மனிதன் - இல்லாதாவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதிகாரத்தினால், சதியால் வாழ்வை இழந்தவர்களுக்கும் ஆதரவாய் போராடிக் கொண்டிருப்பான். இதைப் படிக்கும் எவராவது ஒருவர் துன்பத்தில் உழலும் சக மனிதனுக்கு உதவினால் அதை விட பெரியது எனக்கு எதுவும் இல்லை. இதை விட இன்னும் ஒன்று இருக்கிறது. எவருக்கும் எந்த துன்பமும் தராமல் இருந்தாலே அதுவே கடவுளை விட பெரியது. கருணை உள்ளம் கடவுள் இல்லம் அல்லவா? வளமுடன் வாழ்க. https://thangavelmanickadevar.blogspot.com/2025/05/blog-post_6.html1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointபருப்பு கீரை வளர்ப்பும் கறியும் செய்முறையுடன் . ...... அருமை .......... ! 👍1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தினை 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் சங்கம் இணையத்தளத்தில் எழுதிவந்தார். செய்திச் சேகரிப்பில் பல்லாண்டுகள் பயணித்த சபாரட்ணம் அவர்கள், இனச் சிக்கல் தோன்றியதற்கான மூலக் காரணங்கள் தொட்டு, போரினூடான காலம், இனச்சிக்கலின் பின்னால் இருந்தவர்கள், அவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றினை ஒரு செய்தியாளன் எனும் நிலையில் இருந்துகொண்டு எழுதுகிறார். முதலாவதாக, இவரால் தொகுக்கப்படும் செய்திகளின் விபரங்கள் வேறு எந்த இணையத்திலோ அல்லது அச்சாகவோ இதுவரை வெளிவரவில்லை என்பதாலும், இவரால் சங்கம் இணையத்தில் தரவேற்றப்பட்ட இத்தொடரின் சில அத்தியாயங்கள் அழிந்துவிட்டதனாலும், இவரால் பதியப்பட்ட பல பிரச்சினைகள் இன்றுவரை அவ்வாறே உயிர்ப்புடன் இருப்பதாலும் இத்தொடரினை முழுமையாக மீள்பிரசுரம் செய்கிறோம் என்று சங்கம் இணையம் கூறுகிறது. திரு சபாரட்ணம் அவர்கள் நீண்டகால செய்தியாளராக கடமையாற்றியதால் தமிழர் சரித்திரத்தின் மிக முக்கியமானவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை அவர் பெற்றிருந்தார் என்றும், ஒரு வரலாற்றாசிரியராக அவரால் எமது போராட்டம்பற்றியும், தேசியத் தலைவர் பற்றியும் இதுவரை எவரும் எழுதாதாத கோணத்திலிருந்து எழுத முடிந்ததாகவும் சங்கம் கூறுகிறது. மூன்று பாகங்களாக இத்தொடரினை எழுதிய சபாரட்ணம் அவர்கள் , பாகம் ஒன்றினை 1954 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியென்றும், பாகம் இரண்டினை 1983 இலிருந்து 1986 வரையான பகுதியென்றும், பாகம் மூன்றினை 1985 இற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தும் எழுதி வந்திருந்தார். ஆனால், 2010 இல் அவரது மறைவுடன் பாகம் 3 பதிவேற்றப்பட முடியாது போய்விட்டது. பாகம் மூன்று பதிவேற்றப்படாதுவிட்டாலும் கூட, பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவற்றின் தொகுப்பினை யாழில் பதிவிடலாம் என்று நான் நினைக்கிறேன். எமது போராட்டச் சரித்திரம், தலைவர் மற்றும் போராளிகள் பற்றிய பதிவொன்று எம்மிடம் இருப்பது நண்மையானதே. இத்தொடர் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்படுவது தேவையானது என்று யாழ்க்கள நண்பர்கள் நினைக்குமிடத்து, இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து எழுத யோசிக்கிறேன். உங்களின் கருத்துக்களைச் செவிமடுக்க விரும்புகிறேன், ரஞ்சித் https://sangam.org/pirapaharan-volume-1-and-2-by-t-sabaratnam-reposted/1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஅம்பாறை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சனத்தொகை வளர்ச்சி வீதத்திற்கு கல்லோயாக் குடியேற்றத்திட்டம் காரணமாயிருந்தது போல திருகோணமலை மாவட்டத்தின் அல்லை, கந்தளாய் ஆகிய பகுதிகளில் வலிந்து ஏற்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களும், புதிதாக ஏற்படுத்தப்பட்ட மொறவெவ, மஹதுவுலுவெவ ஆகிய குடியேற்றங்களும் காரணமாய் அமைந்திருந்தன. வவுனியா மாவட்டத்தின் தமிழர் சனத்தொகை வீதத்தை வெகுவாகக் குறைக்கவும், சிங்களவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கவும் பதவிய எனும் சிங்களக் குடியேற்றம் முடுக்கிவிடப்பட்டிருந்தது. தமிழரின் பூர்வீகத் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிகளுக்கான தனியான சிங்களத் தேர்தல்த் தொகுதிகளையும் சிங்கள அரசு அறிவித்தது. தமிழரின் பாரம்பரிய வாழிடங்களான அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்லை எனும் புதிய தேர்தல் தொகுதியும், திருகோணமலை மாவட்டத்தில் சேருவில எனும் புதிய தேர்தல் தொகுதியும் ஏற்படுத்தப்பட்டது. 1976 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்தத் தேர்தல் தொகுதிகள் மூலம் 1977 ஆம் பொதுதேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து இரு சிங்களவர்கள் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பும் இதனால் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் 1978 இல் ஏற்படுத்தப்பட்ட வீதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் இச்சிங்கள ஆசனங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதுபோல் வவுனியா மாவட்டத்திலிருந்தும் மேலதிகமாக ஒரு சிங்களவர் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது. 1977 இல் தந்தை செல்வா அவர்கள இறந்ததையடுத்து தமிழர் தாயகத்தில் அரச ஆதரவில் ஏற்படுத்தப்பட்டு வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அரசியல் - ராணுவப் பின்புலத்துடன் அசுர கதியில் முடுக்கிவிடப்பட்டன.தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கின் நிலத்தொடர்பினைத் துண்டிப்பதன் மூலம் அவர்களைன் தாயக் கனவைக் சிதைக்கவும் , தமிழ்ப் போராளிகளை வடக்கிற்குள் முடக்கி முற்றாக அழிக்கும் நோக்கிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றுப் பகுதியில் "வலிஓயா" எனும் பெயரில் முற்றான ராணுவப் பலத்துடன் சிங்களக் குடியேற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதுபற்றிப் பிரபாகரனின் கதையில் நாம் மேலும் பேசலாம். அதிகாரங்களைப் பகிர்தல் அரசாங்கத்தில் தமக்கு நீதியாகக் கிடைக்கவேண்டிய அதிகாரப் பகிர்வைத் தமிழர்கள் முற்றாக இழக்கும் சந்தர்ப்பம் உருவாகிவருவதுபற்றி தந்தை செல்வா அச்சம் கொண்டிருந்தார். ஒற்றையாட்சியின் கீழ் மொத்த ஆளும் அதிகாரமும் எண்ணிக்கையில் பெரும்பானமையினரான சிங்களவர்களிடமே குவிக்கப்படும் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். தமது பெரும்பான்மைப் பலத்தினூடாக தமிழர்களை அடக்கவும், வஞ்சிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு இதனால் ஏற்படுத்தப்பட்டது. தன்னால் ஆரம்பிக்கப்பட்ட சமஷ்ட்டிக் கட்சியினூடாக அவர் நிறைவேற்றிய தீர்மானத்தில் தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்காக சிங்களவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி முறைமையினை நீக்கி, அதிகாரங்களைப் பகிரும் சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் திட்டமொன்றை முன்வைக்குமாறு அவர் அரசைக் கேட்டுக்கொண்டார். அவரது தீர்மானத்தின் சாராம்சம் கீழே..... தமிழருக்கான சுயாட்சி அதிகாரமுள்ள பிரதேசம் ஒன்றினை சமஷ்ட்டி ஒன்றியமான இலங்கைக்குள் பெற்றுக்கொள்ளுதல்...... சமஷ்ட்டிக் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு திருகோணமலையில் 1951 ஆம் ஆண்டு சித்திரை 12 இலிருந்து 15 வரை நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இலங்கையில் தமிழருக்கு இருக்கும் ஒரே தீர்வு சம்ஷ்ட்டி ஒன்றியமான இலங்கைக்குள் அவர்களுக்கான சுயாட்சிப் பிரதேசம் ஒன்றினை உருவாக்குவதுதான் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1952 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் தமது தேர்தல் விஞ்ஞாபனமாக தமிழருக்கான சுயாட்சிப் பிரதேசம் எனூம் கோரிக்கையினை தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் தமிழரிடம் முன்வைத்ததோடு ஒற்றையாட்சி முறைமையினை முற்றாக நிராகரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்தனர். ஆனால் இத்தேர்தலில் இந்தக் கோட்பாட்டினைக் கண்டுகொள்ள மறுத்த தமிழர்கள் தமது தவறை உணர்ந்து 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் இக்கோரிக்கைக்கான தமது ஆதரவினை நல்கினர். இத்தேர்தலில் வடக்குக் கிழக்கின் 14 இடங்களில் போட்டியிட்ட தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஒற்றையாட்சிக்கெதிரான தமிழ் மக்களின் முற்றான நிராகரிப்பை பறைசாற்றியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களான பங்குனி 1960, ஆடி 1960 மற்றும் 1965, 1970 ஆகிய தேர்தல்களிலும் தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்கெதிரான தமது எதிர்ப்பினைக் காட்டியிருந்தனர். இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், 1977 ஆம் ஆண்டுப் பொதுதேர்தலில் தமிழருக்கென்று தனியான சுதந்திர நாடொன்றினை உருவாக்குவதற்கான தமது ஆணையினை தமிழ்மக்கள் வழங்கினர்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointரஞ்சித் அவர்களே காலத்தேவைகருதியதும், நாம் அறியாத பகுதிகளையும், உரையாடல்களையும் உள்ளடக்கியதாக உள்ளன. இது எமது இளைய தலைமுறை படித்தறிய வேண்டிய விடயமுமாகும். உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுகள். தமிழ்த்தலைவர்களில் பெரும்பகுதியானோர் இனத்துக்கான பேரம்பேசல்களில் ஈடுபடுவதில்லைத்தானே. அவர்கள் தமக்கான பெட்டிகளுக்கான பேரம்பேசல்களில் இருப்பதால் இனமாவது நிலமாவது....... தேவையேற்பட்டால் அவர்கள் பெயரைக்கூட மாற்றிக்கொண்டு வாழ்ந்துவிடுவர். அப்படியான சுயநலமிகளிட நீங்கள் எதிர்பார்க்கலாமா?1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 point1947 இல் சுதந்திரம் அடைந்தபின்னர் இலங்கையில் தமிழர்கள் இருவகையான ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தந்தை செல்வா எச்சரித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பேசிய தந்தை செல்வா அவர்கள் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலமும், ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் ஊடாகவும் இலங்கையில் தமிழர்களின் இருப்பிற்கு பாரிய அச்சுருத்தால் ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களை "நில அபகரிப்பு" என்றும், ஒற்றையாட்சிக் கோட்பாட்டினை "தமிழருக்கான அதிகாரங்களைக் கொள்ளையிடல்" என்றும் அவர் விழித்துப் பேசினார். இவையிரண்டின் மூலம் தமிழர்கள் வெகு விரைவில் சிங்களவர்களுக்கு அடிமையாக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பறிப்பு இலங்கையிலிருந்து தமிழினத்தை முற்றாக அழித்துவிடும் முயற்சியின் ஒரு அங்கம்தான் என்றும் அவர் முழுமையாக நம்பியிருந்தார், அதையே மக்களிடம் கூறிவந்தார். சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் தீர்வொன்றே இலங்கையில் தமிழர்களின் சுதந்திரத்திற்கும் அவர்களைன் அடையாளத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் முழுமையாக நம்பினார். தனது இந்தக் கண்ணோட்டத்தை மக்களிடையே பரப்புவதற்காக சமஷ்ட்டிக் கட்சியென்று புதியதொரு அரசியல்க் கட்சியை அவர் ஆரம்பித்தார். தனது புதிய கட்சியினை 1949, மார்கழி 18 இல் ஆரம்பித்து வைத்துப் பேசிய தந்தை செல்வா அவர்கள் பல்லின, பல்கலாசார மக்கள் வாழும் இலங்கை போன்ற நாட்டிற்கு ஒற்றையாட்சி ஒருபோதுமே தீர்வாக அமையாதென்றும், இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு சமஷ்ட்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே மிகவும் சிறந்தது என்று அவர் கூறினார். அவர் மேலும் பேசுகையில், "ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் கீழ் நாம் முதலில் அரசில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பங்கினை இழந்தோம். அடுத்ததாக தேர்தலில் எமது வாக்குப் பலத்தினைக் குறைப்பதற்காக இந்தியத் தமிழ்ச் சகோதரர்களின் பிரஜாவுரிமையினை அவர்கள் பறித்தார்கள். தமிழரின் பூர்வீக தாயகத்தைச் சிதைக்கும் நோக்குடன் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களை முடுக்கி விட்டிருக்கிறார்கள். ஆகவே, சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் தீர்வு தமிழருக்கு சட்டபூர்வமாகக் கிடைக்கவேண்டிய அரச அதிகாரத்தினைப் பெற்றுக்கொடுக்கும். இதன்மூலம், கட்டுபாடின்றி சட்டத்திற்குப் புறம்பான முறையில் தமிழர் தாயகத்தின் மேல் நடத்தப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படும்" என்று அவர் கூறினார். திட்டமிட்ட முறையில் அபகரிக்கப்பட்டு வந்த தமிழர் தாயகத்தைப் பாதுகாப்பதே தந்தை செல்வாவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதனால், "சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரைய முடியும்" எனும் சுலோகத்தினை அவர் முன்வைத்து வந்தார். தமிழர் தாயகம் அவர்களின் கைகளில் இருந்தால் மட்டுமே இனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும் என்று அவர் தொடர்ச்சியாக வாதாடி வந்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பிரதேசமான பட்டிப்பளை கல்லோயா எனும் சிங்களக் குடியேற்றமாக அரசினால் கபளீகரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தந்தை செல்வா மிகத் தீவிரமாக தமிழர் தாயகம் காக்கப்படல் வேண்டும் என்கிற கோரிக்கையினை முன்வைத்து பேசத் தொடங்கினார். இலங்கையின் இரு பிரதமர்களுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகளின் கருப்பொருளாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துவதே அமைந்திருந்தது. 1957, ஆடி 25 இல் பிரதமர் பண்டாரனாயக்கவுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி, தமிழர் தாயகத்தில் இடம்பெறும் குடியேற்றங்களை நிர்வகிக்கும் அதிகாரம் பிரதேச சபைகளுக்கே வழங்கப்படவேண்டும் என்று அவர் கோரினார். அவ்வுடன்படிக்கையின் சரத்து "பி" இவ்வாறு கூறுகிறது, "புதிதாக மேற்கொள்ளப்பட்டும் குடியேற்றத் திட்டங்கள் அப்பிராந்திய அதிகார சபைகள் ஊடாகவே நிர்வகிக்கப்படவேண்டும் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த குடியேற்றங்களை யார் யாருக்கு வழங்குவதென்கிற அல்லது யார் யார் இத்திட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவர் என்கிற தீர்மானத்தினை இந்த பிராந்திய நிர்வாகங்களே தீர்மானிக்கும். தற்போது கல்லோயா திட்டத்தை நிர்வகிக்கும் கல்லோயா சபையின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கப்படல் அவசியம்". அதேபோல 1965 , பங்குனி 24 இல் தந்தை செல்வா அவர்கள் அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்கவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தமிழரின் தாயகம் தமிழர்களினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுவதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று கோரியிருந்தார். அவ்வொப்பந்தம் பின்வருமாறு கூறுகிறது, சரத்து 4 ) நிலங்களை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரச் சட்டம் சீர்திருத்தப்பட்டு இலங்கையின் குடிமக்கள் நிலங்களை உரிமையாக்கிக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்படும். மேலும் தந்தை செல்வாவின் கோரிக்கைகளுக்கு இணங்கிய டட்லி, குடியேற்றத் திட்டங்களின் மூலம் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும்பொழுது பின்வரும் விடயங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கவனிக்கப்படுதல் அவசியம் என்றும் ஏற்றுக்கொண்டார். 1) வடக்குக் கிழக்கில் பகிர்ந்தளிக்கப்படும் நிலங்கள், இம்மாவட்டங்களில் வாழும் மக்களுக்கே முதலில் வழங்கப்பட வேண்டும். 2) இந்நிலங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். 3) வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் ஏனைய தமிழ் பேசும் மக்களுக்கு அடுத்ததாக முன்னுரிமை வழங்கப்படுதல் அவசியம். ஆனால், தமிழரின் தாயகத்தை காக்கவேண்டும் என்கிற நோக்கில் தந்தை செல்வா அவர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் இந்த இரு ஒப்பந்தங்களையும் சிங்களவர்கள் தூக்கியெறிந்ததன் மூலம் உருக்குலைந்து போயின. இவ்வொப்பந்தங்களின் தோல்வியே சிங்களத் தலைவர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வடக்குக் கிழக்கில் தமிழரின் நிலங்களை கூறுபோட்டு அபகரிக்கவும், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கவும் வழியமைத்துக் கொடுத்தன. இதன்மூலம் இப்பிரதேசங்களில் இருந்த தமிழருக்கான தேர்தல் பலமும் மிகப் பலவீனமான நிலைக்கு இழுத்து வீழ்த்தப்பட்டு, இப்பகுதிகள் சிங்களத் தேர்தல்த் தொகுதிகளாக மாற்றப்பட்டன. 1881 இலிருந்து 1981 வரையான நூற்றாண்டுக் காலத்தில் தமிழர் தாயகம் எவ்வாறு இனப்பரம்பல் மாற்றத்தை எதிர்கொண்டது என்பதை பின்வரும் அட்டவணை காட்டுகிறது. இதன்படி கிளிநொச்சி மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் அடங்கியிருந்தது. அத்துடன் 1965 இல் உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகத் தனியே காட்டப்பட்டிருக்கிறது. அம்பாறை மாவட்டம் என்பது தமிழ்பேசும் மாவட்டமான மட்டக்களப்பிலிருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்டு சிங்கள மாவட்டமாக உருவாக்கப்பட்டதென்பது குறிப்பிடத் தக்கது. Table-1 Demographic Change in the North-East Province 1881- 1981 Year 1881 1946 1981 District Sinhalese Tamils Muslims Sinhalese Tamils Muslims Sinhalese Tamils Muslims Jaffna 0.3 98.3 1.0 1.07 96.3 1.3 0.60 95.3 1.7 Mannar 0.67 61.5 31.1 3.76 55.1 33.0 8.10 50.6 26.6 Vavuniya 7.4 80.9 7.3 16.6 69.3 9.3 16.6 59.9 6.9 Batticoloa 0.4 57.5 30.7 4.0 69.0 27.0 3.2 70.8 24.0 Ampara 18.24 30.0 50.4 16.7 28.3 54.9 37.6 20.1 41.5 Trincomalee 4.2 63.6 25.9 20.7 40.1 30.6 33.6 33.8 29.0 The most significant change was in the Amparai District. Table 2- Demographic Change in the Amparai District – 1911- 1981 Year Sinhalese Tamils Muslims 1911 4762 7.0% 24733 37% 36843 55% 1921 7285 25203 31943 1953 26459 39985 37901 1963 62160 29% 49220 23.5% 97990 45.6% 1971 82280 30.% 60519 22% 126365 47% 1981 146371 38.01% 78315 20% 126365 47% Next comes the Trincomalee district. Table 3- Demographic change in the Trincomalee district 1901-1981 Year Tamils Muslims Sinhalese Others 1901 17069 60% 8258 29.90% 1203 4.2% 1921 6.8% 1911 17233 57.8% 9714 32.6% 1138 3.8% 1700 5.7% 1921 18556 54.5% 12846 37.7% 1501 4.4% 1179 3.5% 1946 33795 44.1% 23219 30.6% 15706 20.7% 3501 4.7% 1953 37517 44.7% 28616 34.1% 15296 18.2% 2488 3% 1963 54050 39.1% 42560 30.8% 39950 28.9% 1600 1.2% 1971 71749 38.1% 59924 31.8% 54744 29.1% 1828 1.0% 1981 93510 36.4% 74403 29.2% 86341 33.4% 2536 1.10%1 point - தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதியை அடைய எடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளை ஆதரிக்கிறோம் - கனேடிய பிரதமர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.