Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88402
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8944
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    32727
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20186
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/08/26 in Posts

  1. அதில ஒரு கை கடும் கறுப்பா இருக்கட்டும்
  2. SIVARANCHAN THEVAKUMARAN A/C:- 300131108781 National Savings Bank Chankanai Branch Swift Code:- NSBALKLX முழுப்பெயர் போட்டுள்ளேன். முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 - யாழ் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டிற்கான செயற்பாடுகள் என்ற பெயரில் பனர் ஒன்றும் அடித்தால் நல்லது, கீழுள்ளது போல இலச்சினை ஒன்றும் வடிவமைத்தால் சிறப்பாக இருக்கும். @goshan_che @valavan @நிழலி @இணையவன் @மோகன் அண்ணாக்கள் கவனத்திற்கு.
  3. பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு பகுதி பகுதியாக பணத்தை வேலைகள் முடிய முடிய வைப்புச் செய்யும்படி காரைநகர் பிரதேச செயலக திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்திருந்தார். அவர்களுடைய தொழிநுட்ப உத்தியோகத்தர் கையெழுத்து போட்டு வங்கியில் மீள எடுக்கும் சீட்டு வழங்கினால் மட்டுமே பணம் வங்கியில் எடுக்கலாம். முதலாவது வேண்டுகோள் கடிதம் வட்டு தெற்கு, வட்டுக்கோட்டை யா/165 நாகன் பரராசசிங்கம் ஐயாவின் மலசல கூடம் பூரணப்படுத்த 150000 ரூபா தேவைப்படுகிறது. அவருடைய படங்கள், குறுங்காணொளிகள் குமாரசாமி அண்ணைக்கு அனுப்பிவிட்டேன். விரைவில் அந்தப் பணிகள் நடைபெறும் என நம்புகிறேன். பொன்னாலை விசேட தேவையுடைய சகோதரர்களின் பணியை அடுத்ததாக செய்வோம். அவர்களுடைய மலசல கூடக் குழி பெரிதாக நீளமாக இருப்பதாக பிளம்பிங் வேலை செய்யும் தம்பி குறிப்பிட்டார். அதனுடைய பிளாற் புதிதாக அமைக்க வேண்டும். கூரைப் பிளாற் வெடித்துள்ளதாகவும் தண்ணீர் தாங்கியை மேலே வைப்பது பாதுகாப்பு இல்லை என்றும் கூறினார்கள். முதலில் அவசரத் தேவையை நிறைவேற்றுகிறோம். தண்ணீர் தாங்கியை ஒரு ஸ்ராண்டில் வைப்போம் என தெரிவித்துள்ளேன்.
  4. இறுதி யுத்தத்தில் இந்திய இலங்கைக்கு எந்தெந்த வகையில் உதவியது? 1. புலநாய்வுத்தகவல்களைப் பரிமாறிக்கொண்டதுடன், புலிகளின் கப்பல்களைத் தொடர்ந்து கண்காணித்து இலங்கை இராணுவத்திற்கு அறியத் தந்தது. 1. Intelligence Sharing and Maritime Tracking India’s intelligence agencies (including RAW and naval intelligence) worked with Sri Lanka’s military to track LTTE movements, especially maritime logistics routes: India shared radar data, satellite imagery and naval intelligence on LTTE ship movements with the Sri Lankan Navy, significantly aiding the interdiction of arms and supplies. Grokipedia Sri Lankan naval commanders credited intelligence support in tracking and destroying LTTE “warehouse” vessels — large supply ships that brought arms and materiel from abroad — far out at sea (up to 1,600 + nautical miles from Sri Lanka). sangam.org Impact: These intelligence inputs reportedly helped cut the LTTE off from resupply, degrading its ability to fight in the final phase of the war. sangam.org இலங்கைக் கடற்படையுடன் இணைந்து ரோந்துக்களில் ஈடுபட்டதுடன், புலிகளின் கப்பல்களைத் தடுத்து அழிப்பதில் பங்குகொண்டது Naval Cooperation and Patrols India’s naval forces and Coast Guard engaged in joint maritime operations with Sri Lanka to pressure LTTE supply and Sea Tiger (LTTE naval) activities: Indian Navy and Coast Guard ships patrolled strategic sea lanes (e.g., Palk Strait, Gulf of Mannar) to deter Sea Tiger operations and monitor suspect vessels. Rediff Coordination between Indian and Sri Lankan naval forces helped identify and interdict LTTE supplies approaching Sri Lanka’s territorial waters. Rediff These patrols — while not a “formal blockade” in the legal sense — acted as a de facto maritime pressure mechanism on LTTE logistics. Rediff ஆயுதங்களை வழங்கி, இலங்கை இராணுவத்தைப் பயிற்றுவித்து, தொழிநுட்ப உதவிகளை வழங்கியது Military Hardware, Training, and Technical Support India provided various forms of material and technical support to Sri Lanka’s armed forces which indirectly affected the operational context of the final war: India supplied surveillance radars to Sri Lanka and has a longstanding program of training Sri Lankan military personnel at Indian defense institutions. Stiftung Wissenschaft und Politik (SWP)+1 Although formal export of lethal weapons was limited due to domestic politics, technical and tactical expertise (e.g., training, radar data) helped Sri Lanka’s forces operate more effectively in tracking LTTE Naval units. Stiftung Wissenschaft und Politik (SWP) இலங்கையின் அரச, இராணுவ அதிகாரிகளுடன் இறுதி யுத்தம் நடைபெறவேண்டிய விதம் தொடர்பாகத் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் போரின் போக்கினைத் தீர்மானித்தது Joint Condition Monitoring and Strategic Counseling Beyond hardware and intelligence: Indian and Sri Lankan military/intelligence officials regularly met and exchanged information during the years leading up to and including the final war, reflecting deeper cooperation than just high-level diplomacy. South Asia Journal This included informal high-level exchanges between strategic officials on both sides (national security advisors, defense secretaries, etc.) from about 2007–2009. South Asia Journal வெளியுலகில் இருந்து வந்த போர்நிறுத்தத்திற்கான அழுத்தங்களை முறியடிப்பதில் தனது இராஜதந்திரச் செல்வாக்கினைப் பாவித்து போர் தொய்விஒன்றி நடந்து, புலிகள் முற்றாக‌ அழிக்கப்படுவதை உறுதி செய்தது. Diplomatic Positioning — Shaping External Pressure India’s government took strategic positions that affected international pressure on Sri Lanka: India worked to ensure the LTTE remained widely designated as a terrorist organization, which undercut external pressure for a ceasefire that could have weakened Colombo’s military campaign. South Asia Journal At the United Nations and in international diplomatic fora, India supported Sri Lanka’s sovereignty and repeatedly opposed calls for a ceasefire during the final months, emphasizing civilian protection via safe zones rather than a complete stop to operations. South Asia Journal
  5. சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்! 1 Jan 2026, 8:53 PM மூன்றாம் உலகப் போர் எப்போது வரும் எப்போது வரும் என்று இன்னும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் மூன்றாம் உலகப் போர் வந்து நடந்து முடிந்து பதினாறு வருடம் ஆகி விட்டது. அந்தப் போரில்தான் ஈழம் அழிக்கப்பட்டது. தமிழினத்துக்கு எதிராக திராவிடம், தேசியம், கம்யூனிசம் எல்லாம் கரம் கோர்த்தன. அண்டை மாநில அரசியல்கள் வஞ்சகம் செய்தன. வட இந்தியா தமிழனை விட சிங்களனே தனக்கு சொந்தம் என்று, இறையாண்மை இல்லாத குறையாண்மையோடு செயல்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும், இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகள். ஆனால் ஈழத்தை அழிக்கும் விஷயத்தில் இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று ‘தொடுப்பு’ நாடுகளாக மாறி ஈழத்தை அழித்தன. ஐ நா சபையிலும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத் துறை செயலர் பதவிகளிலும் , இலங்கை ராணுவ ஆலோசனை பதவிகளிலும் மலையாளிகள் உட்கார்ந்து , ஒரு பக்கம் தமிழ் நாட்டில் மாய்மாலம் செய்து பிழைத்துக் கொண்டே . தமிழினத்துக்கு எதிராக அவிழ்த்துப் போட்டார்கள். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எப்போதும் இருப்போம் என்று வரலாற்றுப் புத்தகங்களை வழித்து நக்கிக் கொண்டிருக்கும் கியூபா, இலங்கைக்கு உதவி செய்ததன் மூலம் நியாயம் துறந்து அம்மணமாக நின்றது . பிரபாகரன் முன்பு பிச்சைக்காரன் ஆனான் பிடல் காஸ்ட்ரோ. இத்தனை ஈன தேசங்கள், ஈனப் பிறவிகள் தமிழினத்தின் மானத்தோடு விளையாடிய அதுதான் மூன்றாம் உலகப்போர். இனி ஒரு போர் வந்தால் அது நான்காம் உலகப் போர். உலகமே எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல் மானத்தோடு மனசாட்சியோடு போர் அறத்தோடு களமாடி தோற்றாலும், வரலாற்றில் வென்று, அந்த அநியாயத்துக்கு துணை போன தேசங்கள் ஒவ்வொன்றும் தனக்கு முகத்தில் தாங்களே காறி உமிழ்ந்து கொள்ளும் நிலைமையை உருவாக்கி வரலாற்றில் நிலைத்தது விடுதலைப் புலிகள் அமைப்பு. குறைகளே இல்லாத அமைப்பு அல்ல அது. ஆனால் அதை விட சிறப்பான ஓர் இனப் போராளிகள் குழுவை இந்த உலகம் கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை. தனது படையில் இருந்த கடைசி வீரனின் உயிரும் தனது மனைவி மகன்களின் உயிரும் ஒன்று என்று எண்ணிய ஒரு போராளி (வஞ்சகர்கள் பார்வையில் தீவிரவாதி; பயங்கரவாதி) இந்த உலகத்தில் இருந்தான் என்ற உண்மையை, இனி நீங்கள் கற்பனையில் சொன்னாலும் இந்த உலகம் நம்பாது. லாஜிக்கா இல்லையே என்று சொல்லி விட்டு நகர்ந்து விடும். ஒரு நாடே ஓர் பெரும்பான்மை இனமே, சுற்றி வளைத்து நிராயுதபாணிகளை ஆயுதத்தால் கொன்று பெண்களை எல்லாம் சீரழித்து அழிக்கும் வன்முறையில் வெறியாட்டம் ஆடிய நிலையில், அண்டை நாடுகள் எல்லாம் வக்கிரத்தோடு வேடிக்கை பார்த்த சூழலில், புலிகள் படையில் காயம்பட்ட போராளிகளை மீட்டு, எந்த வசதிகளும் இல்லாத நிலையில், தரையில் தோண்டப்பட்டு உருவாக்கப்பட்ட – பங்கர்கள் எனும் – அடிப்படை வசதிகள் கூட இல்லாத, சிறிய, மண் சுரங்க அறைகளில், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் அந்த போராளிகளை மீட்க, உயிரைப் பணயம் வைத்து, பசி பட்டினி கிடந்து, குடும்பத்தை இழந்து வாழ்வை இழந்து, போராளிகளைக் காப்பாற்றிய, விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் பணி எப்படிப்பட்டது என்பதை சொல்லும் படம் இது. ஆம். விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவ அணியின் பெயர் சல்லியர்கள். சிங்கள மிருகங்களால் அம்மா, அப்பா, உறவுகள், காதல், பாசம் வீடு, வாசல், சொத்து சுகம் இழந்து, எங்கெங்கோ போய் ஒரு வழியாக மருத்துவம் படித்து… அயல்நாட்டுக்கு போய் மருத்துவம் பார்த்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற சூழலில் அதை விட்டு விட்டு… தாய் மண்ணை மீட்கும் போராளிகளைக் காப்பற்ற ஈழம் வந்து…. ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து… தங்கள் மேல் அதிக ஆத்திரத்தோடு குறி வைக்கும் சிங்களப் படையினரை சமாளித்து, பணியாற்றிய மாவீர மருத்துவர்கள் இந்த சல்லியர்கள். எத்தனை சிலுவைகளைப் போட்டாலும் இந்த சல்லியர்கள் சுமந்த சிலுவைகளை செஞ்சிலுவைச் சங்கம் கூட சுமந்தது இல்லை. எனினும் ஒருவன் அடிபட்டு உயிருக்கு ஆபத்து என்று வந்தால் அவன் யாராக இருந்தாலும் ஒரு மருத்துவர் என்ன செய்ய வேண்டும்? அதில் இந்த சல்லியர்கள் எவ்வளவு தெய்வத்தன்மையோடு இருந்தார்கள்… அதன் விளைவு என்ன? என்பதே இந்தப் படம். இன உணர்வு இல்லாவிட்டாலும் கூட, மனசாட்சி உள்ள, சாப்பாட்டில் கிரிஸ்டல் சேர்த்துக் கொள்கிற எல்லோரும் கூட, இந்த படத்தைப் பார்த்தால் நெகிழ்ந்து போவார்கள். அப்படி ஒரு கதை. அப்படி ஒரு களம். ஓர் இயக்குனராக மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் கிட்டு. தன்னை மேதகு முதல் பாகத்திலேயே நிரூபித்தவர் அவர். கதை நிகழும் பின்புலம், லொகேஷன்கள், ஷாட்கள், ஃபிரேம்கள், படத்துக்கு அவர் கொடுத்து இருக்கும் டோன் எல்லாம் அபாரம். நடிக நடிகையர் தேர்வு, அவர்களுக்கான கெட்டப் எல்லாம் அபாரம். சின்னச் சின்ன நடிகையர்களைக் கூட பொருத்தமாக தேர்ந்தெடுத்து சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு போராளியின் உயிரைக் காப்பாற்ற, ஒரு சல்லியர் மருத்துவர் ரத்தம் கொடுத்து விட்டு பட்டினியோடு அந்தப் போராளிக்கு, அறுவை சிகிச்சை செய்யும் பணியில், அந்த குண்டுக் காயம் பட்ட இடத்தைச் சுற்றி அந்த மருத்துவர் ஆட்காட்டி விரலால் அழுத்திச் சுழற்ற, அதே நேரம் சிங்கள ராணுவ முகாம் அதிகாரி ஒருவர், தான் சுகமாக அருந்தும் கோப்பைக்குள் விரலை விட்டு ஆள்காட்டி விரலால் சுழற்றும் காட்சியை, டிரான்சிஷன் செய்து ஒப்புமைப்படுத்திக் காட்டும் இடம், இயக்குனருக்கு மகுடம். ரிக்ஷாக்காரன் படத்தில் ”அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…” பாட்டில் எம் ஜி ஆர் பாதிக்கப்பட்ட குழந்தையின் புன் சிரிப்பை ரசித்துக் கொண்டிருக்க, அயோக்கியக் கூட்டம் ஆடிப் பாடிக் குடித்துக் கொண்டு ஆபாச நடனம் பார்த்துக் கொண்டு ஆணவச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கும். அதற்கு இணையான காட்சி, சல்லியர்கள் படத்தில் வரும் இந்தக் காட்சி. சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு ஒரு படிம ஓவியம் போல படத்துக்கு உயிர் கூட்டுகிறது. கென் மற்றும் ஈஸ்வரின் இசை, இளங்கோவனின் படத் தொகுப்பு இரண்டும் நேர்த்தியான பங்களிப்பை செய்துள்ளன. முஜிபுர் ரஹ்மானின் கலை இயக்கம், பூங்குயில் கிட்டுவின் ஆடை வடிவமைப்பு இரண்டுக்கும் நூற்றுக்கு நூறு மார்க். சிகையலங்காரமும் சிறப்பு. சற்றே துருத்திக் கொண்டு தெரிந்தாலும் அப்துலின் மேக்கப்பும் பல இடங்களில் அசத்துகிறது. நாயகியாக பெண் மருத்துவராக நடித்திருக்கும் சத்யா தேவியிடம் எல்லோரும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும்.கேட்காமல் விட்டு விடாதீர்கள். “உண்மையை சொல்லுங்கள். நீங்கள் விடுதலைப் புலிகள் படையில் எத்தனை நாள் பயிற்சி எடுத்தீர்கள். எத்தனை நாள் சல்லியர்கள் அமைப்பில் பணியாற்றினீர்கள். இல்லவே இல்லை என்று எல்லாம் பொய் சொல்லக் கூடாது” அப்படி ஒரு அட்டகாசமான நடிப்பு.. இல்லை இல்லை.. இருத்தல்.. இல்லை இல்லை அதுவாகவே ஆதல். அற்புதம் சத்ய தேவி. வாழ்க. வளர்க, சக மருத்துவராக வரும் மகேந்திரனும் அப்படியே சிறப்பாக நடித்துள்ளார். படமாக்கல் அளவுக்கு திரைக்கதை பலமாக இல்லை. சல்லியர்கள் வாழ்வு, இலங்கை ராணுவத்தின் கொடுமைகள், போராளிகளின் தனிப்பட்ட வாழ்வு இழப்புகள் இவற்றில் எதற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுத்து, எதை எந்த அளவில் சொல்வது என்பதில் தெளிவின்மை காரணமாக, ஒன்றை இடித்துக் கொண்டு வந்து இன்னொரு விஷயம் நிற்கிறது. அதேபோல இந்தப் படத்தில் முக்கியமாக வலியுறுத்தப்படும் விஷயம் சிங்கள ராணுவத்தில் யாருக்கு நடக்கிறது என்ற விஷயத்தைக் கூட இன்னும் தீவிரமாக யோசித்து இருக்கலாம். அப்படி சொன்னால் அதில் தவறும் இருக்காது. சிங்கள அரசியல் தலைவர் ஒருவரின் மகன் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க யாழ்ப்பாணம் வருகிறான். ”சுட்டு விடுவோமா?” என்று கேட்கப்பட்ட போது,” நல்ல விசயத்துக்கு வருகிறான். இப்போது சுட்டால், நாம் விளையாட்டுக்கு எதிரான இயக்கம் என்று ஆகிவிடும். வேண்டாம் “என்றார் பிரபாகரன். ஆனால் அவன்தான் பிரபாகரன் இறந்த பிறகு யாழ்ப்பாணம் முழுக்க சாராயக் கடைகளைத் திறந்து போதை ஆற்றை ஓட விட்டான். எனவே அந்த சிங்கள கதாபாத்திரம் எது என்பதில் இன்னும் இறங்கி அடித்திருக்கலாம். அதே போல ரத்தம் சேகரிக்கப்பட்டு இருக்கும் பைகளை, சிங்கள ராணுவ அதிகாரி காலால் மிதித்து உடைப்பதை பெண் மருத்துவர் நேரில் பார்க்கவில்லை. ஆனால் அவர் யோசிக்கும் போது,அந்தக் காட்சி அவருக்கு விஷுவலாக வருகிறது. அது பொருத்தமாக இல்லையே. ‘இல்லை இல்லை.. நடந்த விஷயத்தை அவர் இமாஜினேஷன் செய்கிறார்..’ என்று ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டால் கூட, நடந்த சம்பவத்தில் மருத்துவர் இமாஜின் செய்து பார்க்க, அம்மா அப்பா கொல்லப்படுவது முதல் இதை விட முக்கிய சம்பவங்கள் அந்தக் காட்சியிலேயே இருக்கு, எனவே அப்போதும் பொருத்தமாக இல்லை. இப்படி சில குறைகள் இருந்தாலும், எடுத்துக் கொண்ட கதை, சூழல், படமாக்கல், நடிப்பு, கருத்தியல், போன்ற வகைகளில் உயர்ந்து நிற்கிறது படம். ஒவ்வொருவரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் சல்லியர்கள்.. கண்ணீரும் ரத்தமும்.. மகுடம் சூடும் கலைஞர்கள் சத்ய தேவி, கிட்டு. https://minnambalam.com/salliyargal-tamil-film-review-2026/
  6. ராஜதந்திரம் இவை கொஞ்சம் பழைய ஹெலிகள். அமெரிக்க கடற்படைக்கு புதியன வாங்கும் போது இதை கிளியரன்ஸ் உள்ளோருக்கு மட்டும் ஏலத்தில் குறைந்த விலைக்கே கொடுக்கலாம். டிட்வா புயலில் இலங்கையிடம் 3 ஹெலி மட்டும் இருந்தாதால் விரைந்து செயல்பட முடியவில்லை. இதை அறிந்துள்ள இலங்கை மக்கள்- இந்த 10 ஹெலியின் பின் அமெரிக்கா மீது கொஞ்சம் நல்லெண்ணம் அடைவர். திருத்தம், உதிரிபாகம் என அமெரிக்க நிறுவனம் தொடர்ந்து இலஙகையிடம் பணம் பார்க்கும். தொடர்ந்தும் இலங்கை விமானிகள் பயிற்ச்சிக்கென அமெரிக்கா போவார்கள், அவர்கள் வருவார்கள். இதன் மூலம் இலங்கை விமானப்படையின் அதிகார வர்க்கத்கை கையில் வைத்திருக்கலாம். தம்பரின் அதிரடி ராஜதந்திரத்துக்கு நேர் எதிரானது ஜூலியின் அணுகுமுறை. ஜூலி இனி எங்கே போகிறார் என்பது தெரியவில்லை - தம்பர் இருக்கும் மட்டும் இந்தவகை இராஜதந்திரிகள் முன்னிலை படுவது கடினமாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
  7. 28.86 கோடிக்கு ஏலம்போன புளூபின் டூனா (Bluefin Tuna)! இந்திய ரூபாய் என நினைக்கிறேன்.
  8. கு சா அண்ணை, ஒரு சின்ன தெளிவுபடுதலை வேண்டி நிற்கிறேன். நீங்கள் தனிமனிதனாக செய்யும் பங்களிப்புக்கு அப்பால் - முன்னோடிக்கான நிதி சேகரிப்பாளராகவும் நீங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்துகிறீர்கள் தானே? மற்றைய திரியில் எமது முதலாவது சம்பாசணையில் இதை சொன்னதன் பின் வேறு இடங்களில் இதை நாம் கதைக்கவில்லை என நினைக்கிறேன். இந்த முயற்சியில் மிக கடினமான பணிகளில் இது முதன்மையானது. அடுத்த கட்டத்துகு நகரும் போது, நாம் தனிநபர்களோ அல்லது யாழ் கள உறவுகளோ சேர்ந்து மட்டும் தேவைப்படும் தொகையை சேர்ப்பது கடினம். யாழுக்கு வெளியே இருந்தும் நிதி உதவிகள் வந்து சேரல் அவசியமாகும். திட்டம் தடையின்றி முன்செல்ல இந்த தெளிவு அவசியமாவதால் கேட்கிறேன். பிழை ஏதும் இருப்பின் மன்னித்தருள்க.
  9. மதில் உடையாமல் மெதுவாக காலடி எடுத்து வைத்து போகிறது.
  10. இந்தியாவில்தான் இப்படி நடப்பதாக இதுவரை செய்திகளில் பார்த்துள்ளதாக நினைவு.
  11. இதென்ன பேய்க்குப் பதிலாக பிசாசா?
  12. அவரால் இந்தியாவை எதிர்த்து, இந்தியா ஈழத்தமிழர்களுக்குச் செய்த அக்கிரமத்தைக் கூற முடியுமா? 1987 ஆம் ஆண்டிலிருந்து இந்திய சாத்தான்கள் 1990 இல் வெளியேறும்வரை மண்டையன் குழு எனும் கொலைப்படையினை நடத்தி, ஆயிரக்கணக்கான தமிழர்களின் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் எப்படி இந்தியாவைக் குறை கூறுவார். இந்தியாவிற்கு வெள்ளையடிப்பதே அவரது ஒரே பணி. இங்கு வசி இந்தியா செய்தவற்றை மறந்துவிட்டு, விட்டுக் கொடுத்துப் போங்கள் என்று சொல்லும்போது, இந்தியாவின் கொலைப்படையாக வலம்வந்த பிரேமச்சந்திரன் நிச்சயம் இந்தியா தமிழருக்கு எந்த அநியாயத்தையும் செய்யவில்லை என்று கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்வதில் வியப்பில்லை.
  13. ஏராளன் நிதியை கையாளும் விதம் மிகவும் சிறந்த முறை ஒரு உதவித்தட்டம் செயற்படுத்தும் வேளை அந்த வேலைத் திட்டத்தின் செயற்பாட்டைக் கண்காணித்து அந்த பிரதேசத்தின் பணிமனை யில் இருக்கும் அபிவிருத்தி தொடர்பான உத்தியோகத்தரின் அறிவுறுத்தலின்படியே நிதி ஏராளனால் விடுவிக்கப்படும் . இப்படியாக நிதி விடுவிக்கப்படும் நேரத்தில் பயனாளர் பக்கமும் உதவி செய்யும் எங்கள் பக்கமும் நிதியைக் கையாளும் ஏராளன் பக்கமும் உண்மைத் தன்மையும் வெளிப்படையான நிதி பரிமாற்றமும் தெரியவரும் சிறப்பான வழிமுறை ஆகவே இதற்கு இன்னுமொரு நிதிப் பொறுப்பாளர் தேவை இல்லை என்பது எனது கணிப்பு . முன்னோடி அடிப்படை வசதித் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் மொத்த நிதியும் சேரும் வரை காத்திருக்காமல் ஒருவருடைய தேவையை நிறைவேற்றத் தேவையான நிதி கிடைத்தவுடன் ஆரம்பித்து வைக்கலாம் என்பது எனது கணிப்பு 1.குமாரசாமி அண்ணா உதவி செய்யும் திட்டம் அது எதுவென அவர் விரும்பினால் இங்கே தெரியப்படுத்தலாம் 2.பொன்னாலை திட்டம் 3.சுழிபுரம் அல்லது காரைநகரில் ஒருவருடைய தேயைப் பூர்த்தி செய்தல் 4. இன்னுமொருவருடைய தேவையை பூர்த்தி செய்தல் இப்படி மாறி மாறி தேவையின் அடிப்படையில் வேலைகளைத் தொடங்கி இலகுவாகவும் விரைவாகவும் இந்தத் திட்டத்தை செய்து முடிக்கலாம்
  14. யாருடைய எதிர்காலத்தை கவனத்திற்கொண்டு நாம் இந்தியா எமக்குச் செய்தவற்றைக் கடந்து செல்லவேண்டும் என்கிறீர்கள்? எமது ஒரே நம்பிக்கையாக இருந்த விடுதலைப் போராட்டத்தை முழுமையாக அழித்து, இன்றுவரை தனது கட்டுப்பாட்டிற்குள் எம்மை வைத்துக்கொண்டு தீர்வொன்றையும் தராது அல்லது அதைத் தருவதற்கான அழுத்தத்தினை இலங்கையரசிற்குக் கொடுக்க விரும்பாத இந்தியாவின் துரோகத்தை, கபடத்தனத்தை எதற்காகத் தமிழர்கள் கடந்துபோகவேண்டும் என்கிறீர்கள்? எமது அன்றாட வாழ்வும் இருப்பும் இன்றுவரை இந்தியாவால் பாதிக்கப்பட்டு வருகையில் எதற்காக இதுகுறித்துப் பேசாது சென்றுவிட வேண்டும் என்கிறீர்கள்? அடுத்தது விட்டுக் கொடுப்பு. நாம் எதை விட்டுக்கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? எம்மிடம் விட்டுக் கொடுப்பதற்கு என்னவிருக்கிறது? எமது கவசத்தை முற்றாக களைந்து, அழித்து, எம்மை சிங்களப் பேரினவாதத்தின் கால்களில் அடிமைகளாக வீழ்த்திவிட்டுச் சென்றிருக்கும் இந்தியாவுக்குக் கொடுப்பதற்கு எம்மிடம் இன்னமும் என்ன மீதமாயிருக்கிறது என்கிறீர்கள்? ரஸ்ஸியாவின் அனுதாபியான நீங்கள், அதன் நேசநாடான இந்தியாவிடம் தமிழர்களைப் பார்த்து அடிபணிந்து போங்கள் என்று கூறுவதில் எனக்கு வியப்பில்லை. எமக்கு நடந்த, இன்றுவரை நடந்துவருகின்ற அநீதிகளை நாமே பேசாது, மெளனமாக, உங்கள் பார்வையில் "விட்டுக் கொடுத்து" கடந்து சென்றால் எமக்காக யார்தான் பேசப்போகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
  15. SIVARANCHAN THEVAKUMARAN A/C:- 300131108781 National Savings Bank Chankanai Branch Swift Code:- NSBALKLX உறவுகளே, மேலே உள்ளது "முன்னோடி - அடிப்படை சுகாதார வசதித்திட்டம் 2026" மட்டும் பயன்படுத்தும் வங்கிக் கணக்கு. உங்களிடம் (யாழில்) தகவல் தெரிவிக்காமல் ஒரு ரூபா பணமும் செலவளிக்கப்படமாட்டாது. பணம் அனுப்பினால் தகவல் தாருங்கள். நீங்கள் விரும்புகின்ற வகையில் யாழ் புனைபெயர்/ பெயர் குறிப்பிட விருப்பமில்லை/ சொந்தப்பெயர் தகவலைப் பகிர்வோம். என்னுடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் +94 77 959 1047, பொதுவானது +94 77 777 5448.(வட்சப், வைபர்)
  16. எப்போதும் வெறுமை வெறுமையாக இருக்காது, தற்போது ரொய்டர்ஸ் செய்தி வழங்கல் வெற்றிடம் எவ்வாறு ஈடுகட்டப்படுகிறது என கூறுகிறது, இது சொல்லாத செய்தி இதனூடாக அதிகார வெற்றிடம் மட்டும் நிரப்பப்படவில்லை மேலதிகமான விளைவுகளை உருவாக்கியுள்ளது. இது ஒன்றும் அமெரிக்காவிற்கு புதியதல்ல. பொதுவாக சீன வழங்கல் பாதை பன்முகத்தன்மை கொண்டது, தற்போது அது ஈரானை நோக்கி குவிக்க வைக்கின்ற செயலை செய்தது ஈரானின் இராஜதந்திர வெளியுறவுக்கொள்கை அல்ல அதன் எதிரி அமெரிக்காவே. இதனைத்தான் கடந்தகால வரலாற்றுத்தவறுகளில் இருந்து பாடம் கற்காத அமெரிக்கா என குறிப்பிட்டேன். எனது கருத்து தவறாக இருக்குமோ என கருதுகிறேன், இது ஒரு அமெரிக்காவின் கையறு நிலையாக இருக்குமோ என கருதுகிறேன். இந்த வெனிசுலா நடவடிக்கை பல மோசமான தெரிவுகளில் ஒரு ஓரளவு மோசமான தெரிவாக அமெரிக்காவிற்கு உள்ளதா? இது ஒரு ஆரம்பம் மட்டுமே பல கூட்டு விளைவுகளின் விளைவினை இனிமேல்தான் எதிர்கொள்ளவேண்டும்.
  17. அல்லது யார் எவ்வளவு நிதி உதவி செய்கின்றார்கள் என்பதை மறைத்து அவர் அவர் தனது பங்களிப்பை வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடலாம் . ஏராளன் வரவுவில் வைக்கப்பட்ட தொகையை மட்டும் எங்களுடன் பகிரலாம். தேவையான தொகை சேர்ந்த கையுடன் முன்னோடிகளின் திட்டத்தை ஆரம்பிக்கலாம் எது சரியானது என்பதற்கு அப்பால் இந்தத் திட்டம் நிறைவேற வேண்டும் அதுவே எமது இலக்கு சரி இன்னும் சிலர் தங்களின் கருத்தையும் கூறட்டும்
  18. இப்படித்தான் ஒருகாலத்தில் ஜேர்மனியும் ஆடியது. முடிவு யாவரும் அறிந்ததே. அமெரிக்காவின் கொலம்பியா மீதான நடவடிக்கை கேள்விக்குள்ளாக்கப்படாத விடத்து எனைய வல்லரசுகளின் ஆக்கிரமிப்பும் கேள்விகளுக்கு உட்படாது. அமெரிக்கா அவுக்கு அதிகமாகத் தலையிடுவது உதாரணமாக கிரின்லாண்ட் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இதை ரசிக்கவில்லை. ஈயுவுக்கு வெளியே இருக்கும் யுகேயும் இதை ஆதரிக்கவில்லை. ரஸ்யா சீனா சொல்லத்தேவையில்லை. எல்லோருமு; ஒரு புள்ளியில் சந்தித்தால் விளைவு அமெரிக்காவுக்கு பாதகமாக முடியும்.
  19. ஒரு குறிப்பிட்ட தொகை மலசல கூடம் கட்ட தேவை என ஏராளன் அறியத்தந்துள்ளார்.அதை நான் அனுப்புகின்றேன். ஆடம்பர மலசல கூடம் கட்டுவதற்கு அந்த பணம் பயன்படாது என நான் நினைக்கின்றேன்.
  20. உண்மைதான் ஐயா… இப்போதைக்கு மேலே சொன்னபடி (பொன்னாலை திருத்த வேலை, காரைநகர்5, சுழிபுரம்-சார் பகுதிகள்5 என்பதை செய்வோம். இவை முடியும் தறுவாய்க்கு வரும் போது ஒரு திட்ட மீளாய்வை செய்வோம். அதன் போது பதிவதை செய்வதா அல்லது இன்னும் பொறுத்து செய்வதா என முடிவு செய்யலாம். நாட்டில் நடைமுறை மேலாண்மை ஏராளன்(project implementation oversight) . உதவி - வாத்தியார் அண்ணா மற்றும் நான். நிதி திரட்டல் (fund raising). குசா அண்ணா. ஏனையோர் எவரும் முன்வரலாம். ஏராளன் பகிருவார். Hybrid (இரெண்டு மாதிரியும்) முறையில் செய்யலாம். நான் முதலில் ஒரு தொகையை கொடுத்து விட்டு, பின்னர் மாதாந்தம் அனுப்பலாம் என நினைக்கிறேன். முயலுவோம். குறைந்தபட்சம் - பொன்னாலை வேலையை ஆரம்பித்து விட்டோம் எண்டால் deadline ஐ மீட் பண்ணியதாகும்.
  21. இறுதி யுத்தத்தில் இந்தியா எவ்வாறு நடந்துகொண்டது என்பதை அன்றைய சோனியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளான். What Menon Actually Says in Choices 1. India made a strategic choice to support Colombo’s campaign. Menon describes the 2009 war as one of India’s critical “choices” in foreign policy — choosing between humanitarian concerns/demands from Tamil Nadu and the strategic imperative of maintaining influence with Sri Lanka’s government and keeping other powers (notably China) at bay. India ultimately chose to support the Sri Lankan government’s military effort rather than push for a ceasefire that could undermine Colombo’s position. puradsimedia.com+1 2. India engaged closely with Sri Lanka’s leadership. He recounts regular, discreet visits by Indian officials — including himself and then-Foreign Minister Pranab Mukherjee — to Colombo during the war for direct briefing and coordination. World Socialist Web Site 3. Menon argues that standing aside would have politically ceded Sri Lanka to other powers. Menon justifies India’s support to Colombo on geopolitical grounds — that refusing support to the Sri Lankan government would have weakened Indian influence in its immediate neighborhood and allowed China or others to fill the vacuum. He frames it as a choice dictated by realpolitik, not altruism. World Socialist Web Site 4. Menon notes that the war ended with the military defeat of the LTTE rather than a negotiated settlement. He characterizes the war’s conclusion as a military end to terrorism and argues that this was one of the rare occasions where military force produced such an outcome, even though brutality was inevitable. puradsimedia.com 🛰️ India’s Practical Help to Sri Lanka (Context from Other Sources) While Menon’s book describes the rationale, other sources document how that support was operationalized — though some of these details are reported outside the Choices book itself: ✔️ Intelligence and Naval Support India’s navy and naval intelligence helped locate and destroy supply vessels and “floating warehouses” used by the LTTE, disrupting their logistics at sea. The New Indian Express Indian reconnaissance aircraft provided real-time tracking of Tiger maritime movements to the Sri Lankan Navy. The New Indian Express+1 ✔️ Military Hardware Transfers India quietly gifted Mi-17 transport helicopters that were used in combat support roles by Sri Lankan forces, despite publicly denying offensive weapons supply. The New Indian Express Indian Coast Guard gifted an offshore patrol vessel and patrolled jointly with Sri Lankan forces to help deter Sea Tiger movements. The New Indian Express ✔️ Strategic and Diplomatic Backing India discouraged international pressure for a ceasefire during the final offensive, arguing that this would prolong the conflict and strengthen the LTTE. (Menon suggests the international community was generally restrained and India did not push a ceasefire hard.) SBS Australia According to reporting about his book, Menon recalls that Tamil Nadu politicians privately supported opposing efforts by other countries (e.g., the US and Norway) to intervene or “rescue” LTTE leadership. The New Indian Express 🛥️ On Allegations like Blocking a US Naval Rescue There are claims circulating online and in some commentary that India worked to prevent the US Navy from attempting to rescue LTTE leaders or arms suppliers, but these are not substantiated in Menon’s own text. Menon does note rationales for opposing outside military missions that could complicate India’s strategic posture, but he does not explicitly describe blocking a specific US rescue operation in Choices. SBS Australia ✨ Summary — What Menon’s Book Really Says 🔹 Menon portrays India’s role as strategic support rather than strict neutrality. puradsimedia.com 🔹 India prioritized keeping Sri Lanka aligned with India and away from China over pressuring Colombo. World Socialist Web Site 🔹 India engaged with Sri Lanka’s leadership behind the scenes during the war. World Socialist Web Site 🔹 He argues that India’s actions, even if politically hard, were aimed at preserving India’s influence and regional stability. SBS Australia மேனனின் சொந்த கருத்துக்கள் அவன் எழுதிய "தெரிவுகள்" எனும் புத்தகத்தில் இவ்வாறு பதியப்பட்டுள்ளன. 1. Title and Opening Framing The chapter on Sri Lanka is explicitly titled: 2. India’s Role in Cutting Off LTTE Supplies Menon describes how the LTTE had been “starved of supplies by sea” by early 2009 and notes that this was achieved through effective intelligence and interdiction by the Sri Lankan armed forces with the help of others. puradsimedia.com He writes (verbatim from the chapter text available): This line makes clear that Indian naval intelligence and interdiction efforts were part of the campaign that cut the LTTE’s maritime lifelines — a major operational factor in the rebels’ defeat. puradsimedia.com 3. Structure of the Chapter Text The chapter opens with two epigraphs that reflect its theme: These quotations underwrite Menon’s framing of the end of the Sri Lankan war as ultimately a case where force – not diplomacy – resolved an entrenched 26-year conflict, even if at great human cost. puradsimedia.com 📌 What Choices Does and Does Not Include ✔️ What the Book Explicitly Says Menon’s chapter confirms India’s role in intelligence and maritime interdiction efforts against LTTE supply lines. puradsimedia.com He presents the outcome — defeat of the LTTE — as the result of sustained military pressure, not negotiated settlement. puradsimedia.com India is described as weighing strategic, domestic political, and humanitarian interests in determining what it did and did not do. icsin.org ❌ What Choices Does Not Contain (As Far as Public Excerpts Show) The publicly available chapter (and summaries) do not include direct extended quotations where Menon lists items like “naval blockade,” or “prevented US rescue operations” verbatim. These themes are reported by commentators and some newspaper coverage summarising Menon’s account — not verbatim text from the book itself. The New Indian Express The book does not print out all operational details in literal quotes beyond the introduction passage available on PDFs, so scholars normally obtain full text through the book itself. Penguin Random House India 📌 Contextual Observations from Reporting on Menon’s Account While not direct quotations, other reporting on Menon’s chapter highlights additional content reflected in his narrative: 🟦 India’s strategic rationale — Menon notes ― had India “stood aside” and pressed for a halt, it risked “defending the killers of an Indian Prime Minister” and ceding influence to other powers — an argument expressed as part of his assessment of India’s choices. The New Indian Express 🟦 Tamil Nadu political nuance — He discusses how Tamil Nadu political leaders privately supported the Indian government’s stance against external rescue efforts for LTTE leadership, despite public posturing — a nuance about domestic politics influencing foreign policy. The New Indian Express (Note: This is reflected in detailed reporting based on the book, not the PDF excerpt itself.) 🧠 Summary of Key Direct Text from Choices Here are the verified direct lines / paraphrased text from Choices based on available excerpts: 🔹 The LTTE was starved of supplies by sea due to intelligence and interdiction involving the Indian Navy. puradsimedia.com 🔹 The chapter is built around the idea that force ultimately worked where diplomacy had failed. puradsimedia.com 🔹 Menon titles the chapter to reflect that “Force Works” in the Sri Lankan context — a deliberately chosen framing. puradsimedia.com Overall Interpretation Shivshankar Menon’s Choices doesn’t deny India’s strategic involvement in the Sri Lankan war’s final phase. It explicitly frames India as part of efforts that cut off LTTE supply lines and worked with Colombo’s military strategy while weighing geopolitical and domestic pressures. What Menon doesn’t provide in the publicly available excerpts are extended direct quotations detailing every military assistance action — researchers generally access the full book (in print or e-book) for those exact lines, as publisher sites only preview parts. Penguin Random House India
  22. இல்லை, இது ஜப்பானின் மட்டும் அல்ல, அந்த பகுதியில் இருக்கும் நாடுகளின் கலாசாரம், அந்தந்த நாடுகளின் உணவுகளில் . அனால், மிகவும் வளர்ந்த ஜப்பானில் கூட விட்டுப்போகவில்லை. இதே போல, kobe மாட்டு இறைச்சி Wagyu என்ற மாட்டு இனத்தில், மிகவும் சுத்தம், சுகாதாரம், உணவு போன்றவை மிகுந்த கவனிப்பில் கீழ், குறிப்பிட்ட Hyogo Prefecture (கிட்டதட்ட எமது மாகாணத்துக்கு ஒப்பான நிர்வாக பிரதேசம்) வளர்க்கப்படும் Wagyu இன மாடுகளில் இருந்த்து பெறப்படுவதே Kobe மாட்டிறைச்சி. ஜப்பானில் எதிலும் மிகஉன்னத (perfection) நிலை அடைவதில் இருக்கும் சமூக மற்றும் வரலாற்று ஆவலும், உணவிலும் பிரதிபலிக்கிறது. உ.ம். நண்டு, இறால், கணவாய் போன்றவை ஒரு போதும் இறந்து விற்பது மிக குறைவு, ஏனெனில் இறப்பின் தாக்கத்தில், அழுத்தத்தில் அதன் தன்மை, ருசி போன்றவை மாறிவிடும் என்று.
  23. நல்லவேளை நீங்கள் இந்த படத்தை இதற்கு முன்பு பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன். பார்த்திருந்தால் தமிழர்களை படிக்க வைத்து கல்வியில் முன்னேற்றவே கடந்த ௩௦ வருடமாக சிங்கள இனவாத இராணுவம் போராடியது என்று சொல்லி இருப்பீர்கள். சாதாரண மீன் பிடிக்கவே தூண்டலில் ஒரு இரையை மாட்டிடவேண்டி இருக்கு. ஒரு இனத்தை ஏமாற்ற இதுகூட செய்யாவிடின் எப்படி?
  24. ஆயுதபலம், செல்வம் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. எங்கள் சரிதத்தை பார்த்தால் அங்கும் ஆயுதபலமே தீர்ப்பு எழுதியுள்ளது. வெனிசுவெலா அதிபர் எப்படிப்பட்ட அயோக்கியன் என எமக்கு தெரியாது. அதே சமயம் டிரம்ப் அவர்கள் யோக்கியன் என கூறுவதற்கு இல்லை. எவருக்கும் ஒரு பக்கம் ஆதரவும், ஒரு பக்கம் எதிர்ப்பும் காணப்படும். உங்களைப்போலவே நானும் எனது சொந்த கருத்துக்களை, புரிதலை வெளிப்படுத்துகின்றேன். நடைமுறை உலகை பார்த்தால் வெனிசுவெலா அதிபரின் கடத்தலின் பின் பங்கு சந்தையில் அமெரிக்க நிலவரம் உயர்ந்துள்ளது. அமெரிக்க யுத்த கப்பல்கள், போர் விமானங்கள், படைகள் வெனிசுவெலாவை கண்காணிப்பதாக கூறப்படுகின்றது. அதாவது வெனிசுவெலா அமெரிக்காவின் முற்றுகைக்குள் உள்ளது. தமக்கு தேவையான நேரத்தில் வெனிசுவெலா மீது தாக்குதல் நடாத்துவது, ஆட்களை தொடர்ந்து கடத்துவது, கொல்வது அமெரிக்க படைகளுக்கு இலகுவான ஒரு விடயம். அமெரிக்காவின் அனுமதி/அனுசரனை இல்லாமல் வெனிசுவெலா அரசாங்கத்தினால் செயற்பட முடியாது என சொல்லப்படுகின்றது. அதாவது ஆயுதபலம் மூலம் அமெரிக்கா வெனிசுவெலாவை முடக்கியுள்ளது. சீனா, ரஷ்யா போன்றவற்றை பொருத்தமட்டில் ஐயோ வடை போச்சே எனும் நிலமைதான்.
  25. செய்தியின் தலைப்பு எழுதப்பட்ட விதம் மயக்கத்தை தருகின்றது. இது மூன்றுவிதமான அர்த்தங்களை கொடுக்கலாம். பிரசுரம் செய்பவர்களுக்கு இதைவிட தெளிவான தலைப்பை எழுதமுடியாதோ?
  26. எல்லாம் நல்லதான் போய்கிட்டு இருந்திருக்கும், ஆன அவசரதில்ல Parking கியரை மாற்றி பிடிச்சு இழுந்திட்டா போல இருக்கு☹️
  27. அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்! கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி பார்க்கலாம்.. கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றி சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. களவழி நாற்பது: ''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கிலே - கார் நாற்பது கார்த்திகை சாற்றில் கழி விளக்குப் போன்றனவை - களவழி நாற்பது அகநானூறு: ''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு வந்த மழை'' சீவக சிந்தாமணி: குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை பைந்தார் நற்றிணை: சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக் காட்டுகிறது நற்றிணை. வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின் வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக் கையற வந்த பொழுது - நற்றிணை 58 மலைபடுகடாம் “கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்” - பரிபாடல் அகலிரு விசும்பின் ஆஅல் போல வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை” - மலைபடுகடாம். டிஸ்கி இன்று 3/12/2025 திருவண்ணாமலை அருள் மிகு அண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றபட்டது,,
  28. 07 Jan, 2026 | 05:02 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் எனக்கு பக்கத்தில் வலது பக்கமாக அமர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆசனத்தை வேறு இடத்திற்கு மாற்றுங்கள், இல்லையேல் தொடர்ந்தும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தன்னால் பொறுப்புக் கூற முடியாது. ஒழுக்கமற்ற வகையில் பேசும் அவருக்கு பக்கம் என்னால் அமரமுடியாது என யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சக உறுப்பினர் ஒருவர் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் தகாத மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களை செய்துள்ளமை தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பிப்பதாகவும், இதன்படி கடந்த டிசம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனக்கு தவறாக வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி ஒருமையில் மிகக் கேவலமாகவும், பொதுமக்களால் கேட்க முடியாதவாறு வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்தி தன்னை இழிவாக பேசியதாகவும் சபையில் முறையிட்டார். முறைப்பாட்டை முன்வைத்து உரையாற்றிய அர்ச்சுனா, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்னை கேவலமாக பேசினார். பாராளுமன்றத்தில் அவருக்கு அருகில் எனது ஆசனம் இருப்பது தொடர்பிலும் பேசினார். இது பாராளுமன்றத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்களிடையே தவறான கருத்துக்களை பரப்பும் வகையில் அமைந்துள்ளது . இதனால் இன்றில் இருந்து எனது ஆசனத்திற்கு வலது பக்கத்தில் அமைந்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆசனத்தை வேறு இடத்திற்கு மாற்றுங்கள். தொடர்ந்தும் இவர் தனது வலது பக்கத்தில் இருப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் பொறுப்புக்கூற முடியாது. இதேவேளை பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பான ஒழுக்காற்று குழுவில் அங்கம் வகிப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தகுதியற்றவர்.இதனால் அந்தக் குழுவில் இருந்தும் அவரை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒழுக்கமற்ற வகையில் பேசினார் ; அவரின் பக்கம் அமரமுடியாது - சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா | Virakesari.lk
  29. அமெரிக்காவிற்கு மேற்கு நாடுகளின் ஆதரவு கட்டாயம் தேவை. வெனிசுலா அமெரிக்க நடவடிக்கையில் கூட மேற்கு நாடுகள் அடக்கியே வாசிக்கின்றன, இரண்டு தரப்பிற்கும் மறுதரப்பின் உதவி தேவை. இது ஒரு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த நடவடிக்கை இட்டு செல்லும் (சர்வதேச கடல் சட்டத்தினை மீறும்), சர்வதே கடலில் இவ்வாறான சோமாலிய கடத்தல்காரர்கள் ரேஞ்சிற்கு அமெரிக்கா இறங்கி வந்திருப்பது பெரும் அதிர்ச்சியாகவுள்ளது. எதிர்காலம் ஒரு இக்கட்டான காலகட்டத்திற்குள் செல்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.