Everything posted by satan
-
காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
வாகனங்களை வாங்கி பூசை செய்ய வருவோரை, பூசைக்கு முதல் விசாரணை செய்து பொலிஸாரின் சான்றிதழோடு வாருங்கள் என்று திருப்பி அனுப்பப்போகிறார் பூசாரி.
-
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
எனக்கொரு சந்தேகம். லலித், குகன் கொலைக்கு டக்கிலஸை பயன்படுத்தியிருக்கலாம் புலனாய்வுக்குழு. மாறி மாறி வந்த முன்னாள் அரசியல்வாதிகள் கொலை கொள்ளைகளை வளர்த்து இராணுவ போலீஸ் துறையை தமது பாதுகாப்பிற்க்கு அரணாக உருவாக்கியுள்ளனர்.இந்த துறைகளில் சுத்தமானவர்கள் என்று யாரும் இல்லை. அவர்கள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அதனாலேயே கோத்தாவும் நாட்டை விட்டு தப்பியோட வேண்டி வந்தது. அனுரா அரசியலில் வீரம் இருந்தாலும் இந்த நரிகளை சமாளிப்பதற்கு அனுபவம், செல்வாக்கு காணாது. உடனடியாக இவர்களில் கை வைக்க முடியாது. சாட்சிகள், தாங்கள் யார் அதிகாரத்தால் இப்படி நடந்து கொண்டோமென மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும், மக்களே இவர்களுக்கு நிரந்தர தீர்ப்பெழுத வேண்டும். இல்லையேல் இவர்களை ஐ .நா.வில் கையளிக்க வேண்டும். அதை அனுரா செய்ய மாட்டார். மக்கள் ஒரு நாள் செய்வார்கள். எங்கள் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இழந்து தனிமையிலும் வறுமையிலும் முதுமையிலும் வாடுவதுபோல் அதற்கு காரணமான இவர்களும் தவிக்க வேண்டும், தவிப்பார்கள் விதி வலிமையானது.
-
மன்னாரில் வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பியவர் கத்தி முனையில் கடத்தல்; போதைப்பொருள் மாபியாக்கள் அட்டகாசம்
அவர்கள் தானே விநியோகிஸ்தர்கள். எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? அவர்களே குற்றவாளிகள், பதவி இழப்பு, வேலை நீக்கம் என்று செய்திகள் வருகின்றனவே. இதுவரை காலமும் இவர்களை கேள்வி கேட்காமல் ஊட்டி வளர்த்தது யார்?
-
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
ஒன்றொன்றாக வெளிவந்து நாடே அலறப்போகுது. நாமல் நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு ஒத்திகை பாத்துள்ளார். பெரும்பாலும் மாலை தீவுக்குத்தான் போக முடியும், இல்லையென்றால் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டு ஆட்சியை கைப்பற்ற முனைவார்கள். அனுரவுக்கு எச்சரிக்கையும் விட்டுள்ளார் நாமலும் அவரது கட்சியினரும். எல்லாமே கொலை கொள்ளைக்கூட்டம்! கொஞ்சமாவது மனச்சாட்சி, படிப்பறிவு, அநுபவம் வேண்டும் அரசியலுக்கும் பொறுப்புள்ள அமைச்சர்களுக்கும். வெறும் இனவாதத்தையே முதலாக கொண்டு கொலையில், அழிவில் ஆட்சி செய்ய முடியாது. மகாவம்சத்தில் தங்கள் பெயர் இடம்பெற வேண்டுமென்பதற்காக எத்தனை பித்தலாட்டங்கள். இப்போ அதே மஹாவம்சம் இவர்களை எப்படி சித்திரிக்கும்? நாட்டை கொள்ளையடித்து சீரழித்த கூட்டம்!
-
காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
ஐயருக்கும் ஒரு பங்கு கொடுத்திருப்பார்கள். ம், நீங்கள் பள்ளிகூடத்தில் படிக்கிற காலத்தில இதுவே பெரிய விஷயம். இப்போ இருக்கிற தொழில் நுட்ப்ப வசதிகள் அப்போ இருந்திருந்தால்; எத்தனைபேர் மோட்டார் சைக்கிளென்ன? வீடு, நகை அதற்கு மேலேயும் வாங்கியிருப்பார்கள். உங்களுக்கு கொடுப்பினை இல்லை. இதுவும் ஒரு ஏமாற்றுத் தான்.
-
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
பாராளுமன்றம் அரசியல்வாதிகளை தவற விட்டு விட்டீர்கள். மனித புதைகுழி, ஊழல், கொலை, கொள்ளை, கடனால் சூழ்ந்துள்ள நாடு. இது இன்னும் இவர்களுக்கு புரியவில்லை. பிணந்தின்னி பேய்கள் அரசாளும் நாடு!
-
இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி
புழுகு மோடி அந்த நாடுகளின் பட்டியலை வெளியிடலாமே? விடுதலைப்புலிகளிடம் வலிய வந்து வாங்கிக்கட்டியதையும் சொல்லலாம். இலங்கை ஜனாதிபதியும் உப்பிடித்தான் கதை விட்டவர் உண்மையை, அவர்கள் செய்த கொடூரத்தை மறைக்க. பரவாயில்லையே, இலங்கைக்கு ஒன்றும் சளைத்தது இல்லை இந்தியா. எத்தனை அப்பாவிகளின் வீடுகளோ? காரணமானவர்களை அழிக்க முடியாவிட்டாலும் வீடுகளை அழித்து விட்டீர்கள். இனி பயங்கரவாதிகள் வாழவே முடியாது. குடிமக்களையும் அவர்களின் இல்லங்களையும் குண்டுபோட்டு அழித்து விட்டு, புலிகளையும் அவர்களின் முகாம்களையும் அழித்துவிட்டோம் என்பார்கள், பின் இராணுவத்திற்கு ஆள், பணம் சேர்ப்பார்கள். அதெப்படி என்று யாரும் கேட்க்கவுமில்லை, இவர்கள் சொல்லவுமில்லை.
-
ரஷ்யாவில் நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை - ஃபுகுஷிமாவில் என்ன நடக்கிறது?
இயற்கைக்கும் இறைவனுக்கும் முன் இவர்கள் ஒன்றுமேயில்லை. அதை உணரும் வரும்வரை ஆடுவார்கள். அவையும் ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.
-
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
இவர்களே குற்றவாளிகள். இதில இவர்களுக்கு காவற்துறை சேவை. இவர்கள் எப்படி குற்றவாளிகளை கைது செய்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது? இவர்கள் குற்றமற்றவர்களையே தண்டித்திருக்கிறார்கள். செய்த பாவத்திற்கு சரியான தண்டனை. இருபத்தைந்து ஆண்டுகளாக குற்றம் செய்து, சம்பளமும் பெற்று, இனிமேல் ஓய்வூதியம் கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டாலென்ன?
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
எனது ஊரில் உள்ள சில சமூக அக்கறை இல்லாத சில பொடியளை அங்குள்ள இராணுவம் போலீஸ் தமது வலைக்குள் இழுக்கும், இராணுவத்தின் நட்பு கிடைத்ததும் இவர்கள் அந்த ஊரில் பெரிய மனிதர்களாகிவிடுவார்கள். சண்டித்தனம், அடாவடி. அவர்களுக்கு வக்காலத்து வாங்க போலீஸ் வேற துணைக்கு. போலீசாரிடம் முறைப்பாடு அளித்தாலும் இந்த போக்கிலியள் சார்பாகவே போலீஸ் கதைத்து முறைபாடளித்தவர்களை அச்சுறுத்தும். இதனால் யாரும் அவர்களுக்கெதிராக முறைபாடளிக்க முன்வருவதில்லை. அவர்களை வைத்து, ஊரில் யாரெல்லாம் புலிகள் சார்பானவர்கள் ,யார் இராணுவத்துக்கு எதிரானவர்கள், போராளிகுடும்பங்கள், மாவீரர் குடும்பங்கள், அவர்களின் குடும்ப விபரங்களை திரட்டுவது. இதனால் இப்படிப்பட்டவர்களை ஊரவர் ஒதுக்கி விடுவர். அதன் பின் அவர்களை வைத்து இப்படியான கதைகளை புனைவது, போதைப்பொருள் தரகராக்குவது, பின் இள வயதிலேயே மரணம். ஒரு வேளை நிலைமை புரிந்து விலக நினைத்தாலும் முடியாது. நீர்ச்சுழியில் சிக்கியதுபோல அவர்கள் எதிர்காலம். இது புரியாமல் ஆமிக்காரன் சிரிக்கிறான், உதவுகிறான் என்று உறவு வைத்தால் அவ்வளவுதான். அது ஒரு விஷ ஜந்து என விலகி ஓடிவிட வேண்டும் இராணுவத்தை கண்டால்.
-
சந்தேக நபர் தப்பியோட்டம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
ஏன் கையிலிருந்த துப்பாக்கி எங்கே போனது? இருவர் ஒருவரை மடக்கிப்பிடிக்க முடியவில்லை? யாரோ வேண்டுதலின் பேரில் தப்பிக்க வைத்திருக்கலாம், சில கடமைகளை நிறைவேற்றுவதற்காக.
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
புலிகள் இருந்த காலத்தில் போதைப்பொருள் நமது பிரதேசத்தில் கேள்விப்பட்டதே இல்லை, வாள் வெட்டு? இதெல்லாம் எங்கிருந்து யாரால் கொண்டுவரப்பட்டது?
-
லலித் குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு - யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது - கோட்டாபய தெரிவிப்பு
புலிகளை இல்லாமல் அழித்து விட்டோம், நாட்டில் மக்கள் அச்சமில்லாமல் எந்தப்பகுதிக்கும் போய்வரலாம், அந்த சுதந்திரத்தை நாங்கள் பெற்றுக்கொடுத்தோம், இலங்கை சிங்கள பௌத்த நாடு என்று கூறி, விகாரைகளையும் இராணுவ முகாம்களையும் எழுப்பி வெற்றி விழா கொண்டாடியவர்கள் இப்போ, தாங்கள் அந்தப்பகுதிக்கு வரத்தயாரில்லை. புலிகள் இல்லை நாட்டில் எங்கும், வடக்கில் இருப்பது புலிகளை அழித்த இராணுவம் (என்று சொல்லிக்கொள்கிறார்கள்) சிங்கள அரசின் காவற்துறை நீதி சட்டம். இருந்தும் வரத் தயக்கமேன்? செய்த கொலைகள். முதுகில புண்ணுள்ளவனுக்கு காடு நுழையப்பயம். லலித், குகனை கொன்றது இலங்கை புலனாய்வுப்படை கோத்தாவின் உத்தரவின் பேரில். அதன் அடுத்த கட்டம் குமார் குணரட்ணம் கடத்தல் நாடகம். அவரையும் போட்டுத்தள்ளி இருப்பார் கோத்தா அவுஸ்ரேலிய தூதரகம் நேரடியாகவே களத்தில் இறங்கி, கோத்தாவை தொடர்பு கொண்டதினால் குமார் தப்பினார். அப்போ சர்வதேச நாடுகளுக்கு தெரிந்திருந்தது, இலங்கையில் நடக்கும் கொலை கொள்ளை கூட்டத் தலைவன் கோத்தா, அதன் படைகள் இராணுவ காவற்துறை புலனாய்வாளர்கள் என்பது. நாட்டில் கொலை செய்வது, கொள்ளை அடிப்பது, சாட்சிகளை அச்சுறுத்துவது, காணாமல் போகச்செய்வது, தடயங்களை அழிப்பது, இந்த இராணுவ காவற்துறை அதிகாரிகள். இதற்கு சம்பள, பதவி உயர்வு, மக்களாணை பெற்ற அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.இவர்களுக்கு உயரதிகாரிகள் என்ற பட்டயம் வேறு. நாடு உருப்படுமா? நீதியை எதிர்பார்க்க முடியுமா? சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயக மூர்த்தி முரளிதரன் இவர்களுக்கே அமைச்சு பதவி சம்பளம் என்றால் அந்த துறை எப்படியானது என்று அதன் வண்டவாளங்கள் வரிசையாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. நாடே தாங்கமுடியாமல் தள்ளாடுது. அதை மறைக்க கொலைக்கு மேல் கொலை, திசை திருப்பும் குற்றச்சாட்டு. இந்தப்பிரச்சனை எங்கு போய் முடியுமென்று தெரியவில்லையே?
-
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த கைது.
சிங்கள அரச, நீதி, நிர்வாக, சேவை எல்லாமே கொலை கொள்ளை நிறைந்ததாக இருக்கிறது. அங்கே சட்டங்கள், நீதிமன்றங்கள் எல்லாமே கொலை கொள்ளை ஊழலை வளர்த்துக்கொண்டும் முண்டு கொடுத்துக்கொண்டும் இருந்திருக்கின்றன. நடவடிக்கை எடுக்கத்தொடங்கினால் ஒன்றுமே மிஞ்சாது. அனுராவின் கட்சியில் இருப்பவர்களில் அநேகர் கூட இதோடு தொடர்புடையவர்கள். எப்படி அனுரா சமாளிக்கப்போகிறார்? பலர் தாம் தப்புவதற்காக அரச சார்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றனர். அப்போ, சில குற்றவாளிகள் தப்புவதற்கு ஏது காணப்படுகிறது. முன்பே நான் சொன்னேன், அடிமரத்தை சாய்க்க வேண்டுமானால் அதனை தாங்கி பிடிக்கும் கிளைகள், இலைகள் அகற்றப்படவேண்டும் அப்போதான் பலமான மரத்தை இலகுவாக சரிக்கலாம் என.இங்கு சிலர், இதற்கென்றே இருக்கின்றனர், எள்ளி நகையாடினர். இப்போ மரத்தை தனிமையாக்கும் செயல் நடைபெறுகிறது. மரம் சரியுமா சறுக்குமா? பலம் எந்தப்பக்கமென பொறுத்திருந்து பாப்போம்.
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
ஹா ஹா..... இப்படித்தான் சிலர் எதையோ எதிர்பார்த்து எழுதுவதும், மற்றவர்களை எடை போடுவதும் நடைபெறுகிறது. நாம் நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறோம். சிறியர் ஒன்றும் கணக்கு தெரியாத, படிப்பறிவு இல்லாதவரல்லர். சிங்களம் போடும், காட்டும் கணக்குகளை வைத்தே எழுதியிருக்கிறார் என்று நான் நினைக்கிறன். அவரது முன்னைய பதிவுகள் கூட சிங்களத்தின் கணக்கு பிழைகளை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏளனமாக குத்திக்காட்டியிருக்கிறார். இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என எனக்கு விளங்கவில்லை? உள்ளே உள்ள வக்கிரம் வெளிப்பட சமயம் பார்த்து காத்திருக்கிறது போலுள்ளது!
-
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் சர்வதேச கண்காணிப்பும் நிபுணத்துவமும் உள்வாங்கப்படுவது அவசியம் - சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தல்
ஆட்சி மாற்றம் வந்தவுடன், தடபுடலாக ஆரவாரம் காட்டி தாங்கள் நல்லிணக்கத்தை காட்டுகிறோம் குற்றவாளிகளை விசாரிக்கிறோம் என்று போக்குக்காட்டி ஐ. நா. வையும் சர்வதேசத்தையும் நம்ப வைக்க போக்குக்காட்டி தங்களது ஆட்சிக்காலத்தை கழித்து விட்டு வீடு செல்வதும், பிறகு கதிரை ஏறுவோர் இப்படியே ஏமாற்றுவதும் தொடர் கதையாகிவிட்டது. அப்போ யார் இவற்றுக்கு பொறுப்பு கூறுவது? பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள வேண்டாமா? பொறுப்பெடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் இந்த நிலை தொடரும், தெருவில் நின்று வீரப்பேச்சும் அச்சுறுத்தலும் தொடரவே செய்யும். ஆட்சி மாறினானும் செயற்பாடு நிறுத்தப்படாமல் தொடர்ந்து சமாதானத்தை முன்னெடுக்கும் செயல் தொடரும்படியாக செய்யும் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
எனது சகோதரர்கள், அவர்களின் நண்பர்கள் எல்லாம் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து போய் வன்னியிற்தான் படித்து கல்விப்பொதுத்தராதரம் சாதாரணத்தில் சித்தியெய்தி உயர்தரம் போனார்கள். அவ்வாறே அங்கு பாடசாலைகளும் நடந்தன. அவரவர் தாம் அறிந்ததை வைத்து சிங்களத்திற்கு வெள்ளை அடிக்கிறார்கள். தாய்மொழிப்பற்று அது. அதற்காக நாங்கள் வரிஞ்சு கட்டிக்கொண்டு நிற்கத் தேவையில்லை. தமிழ்ப்பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பதற்காகவும் எதிர்கால சந்ததியை அழிக்க வேண்டுமென்றும் பாடசாலைகள், கோவில்கள், வைத்தியசாலைகள் என்று திரும்பிய இடமெல்லாம் கொட்டினவர்கள் தான். இருந்தாலும் பிள்ளைகள் படித்து பல்கலைக்கழகமும் போயிருக்கிறார்கள்.
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
விருது கொடுப்பது யார், அது நீங்களா? அல்லது உங்கள் எஜமானாரா? அறிய ஆவல்! மற்றவர்களுக்கு விருது பற்றி கதைப்பவர்கள், தாமும் இதையே எதிர்பார்த்து கதைப்பதுபோல் தெரிகிறது.
-
இலங்கையில் ஊழலை ஒழிக்க போராடும் ஜப்பான்
எங்கே ஜப்பானுக்கு எதிராக ஒருவரும் குரைக்க காணோம்?
-
யாழில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்த கும்பல் கைது
கோயிலை உடைத்து மதுக்கடை திரிகிற திட்டமாயிருக்குமோ?
-
சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்
சோமரட்ன ராஜபக்சவும் பாதுகாக்கப்படவேண்டும். என்னை வற்புறுத்தி, பயமுறுத்தி வாக்குமூலம் பெற்றனர் என்கிற கதையெல்லாம் சோடிக்கப்படலாம். ஆனால் அவர் நீதிமன்றத்தில், நீதிபதியின் முன்னால் எந்த வற்புறுத்தலின்றி தானாகவே கேள்வி எழுப்பி வாக்குமூலம் அளித்திருந்தார். ஆகவே அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம். என்ன; உதயன் கம்மன், சரத் வீரசேகர, விமல் வீரவன்ச போன்றோர் களமிறங்கக்கூடும். ஆனால் முன்போல் கூட்டம் கூடாது இவர்கள் பின்னால். இனிமேலும் மக்களை ஏமாற்றி தம்மை பாதுகாக்க முற்பட்டால், பொதுமக்களால் தாக்குதலுக்குள்ளாகவும் கூடும். இவர்கள் ஊழையிட்டுக்கொண்டு ஓடி வருவதால், இவர்களுக்குப்பின்னால் பெரியதொரு குற்றப்பின்புலம் இருக்கிறது. இவர்களை அழைத்து விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் எல்லாம் வெளிவரும். எப்படியும் அகப்படத்தான் போகிறார்கள். இப்படியான அரைகுறைகளை உளறவிடுவதும் நல்லது. அண்மையில் கூட அருண் சித்தார்த் என்கிற குழப்ப காரன், ஒரு கதையை உருட்டிக்கொண்டு வந்தார் யாவரும் அறிந்ததே. அதாவது துணுக்காயில் புலிகளினால் கொலைசெய்யப்பட்ட மக்களின் புதைகுழி ஒன்றுள்ளது, அது தொண்நூறாம் ஆண்டு நடந்தது. அதை ஒருவர் நமக்கு சொன்னார், அவர் இங்கு வருவதற்கு அவருக்கு பயம் என்கிறார். அதே நேரம் புலிகளால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்கள் என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தன்னுடன் தொடர்பை ஏற்படுத்தி அறிவித்தார்களாம் என்று ஒரு முன்நாள் ஒட்டுக்குழுவின் பெயரையும் சொன்னார். சரி, புலிகள் செய்த கொலையை, புதைகுழியை அடையாளம் காட்ட சம்பந்தப்பட்டவர் ஏன், யாருக்கு பயப்படவேண்டும்? அங்கு சம்பவ காலத்திற்கு முன் தொடங்கி இன்றுவரை வாழும் மக்கள் கூறுகிறார்கள், அருண் கூறும் காலகட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில், இந்திய இராணுவத்தை தொடர்ந்து இலங்கை இராணுவமும் அவர்களுடன் ஒட்டி இருந்த ஒட்டுக்குழு, ஓணான் குழுவுமே இருந்தன அப்போ, அங்கு மக்களின் அலறல் சத்தம் கேட்ட வண்ணம் இருந்தன என்றும் புலிகளின் காலத்தில் அங்கே அரிசி ஆலை இயங்கியதாக கூறுகிறார்கள். இந்த இடத்தை வெளியார் யாரும் உடனடியாக அடையாளம் காண முடியாது, இது ஊரின் உள்ளே பல மைல் தூரத்தில் அமைந்துள்ளது, புதிதாக இந்த இடத்திற்கு வரும் யாரும், யாராவது உதவியின்றி உடனடியாக இங்கு வந்து சேர்ந்து விட முடியாது. சம்பவம் நடந்ததாக இவர்கள் கூறும் காலத்தில் சம்பந்தப்பட்டவருக்கு நான்கு வயது, இப்போ யாரையும் கேட்காமல், விசாரிக்காமல் இந்த இடத்திற்கு திடுதிப்பென்று வந்து, இங்கு தொண்நூறாம் ஆண்டு நாலாயிரம்பேர் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் அதில் எனது தந்தையும் ஒருவர் என்கிறார். அங்கு போலீசார் இருக்கவில்லை, விசாரணை இல்லை, முறைப்பாடு இல்லை, இந்த சம்பவம் பற்றி முன்னெப்போதும் அறியப்படவில்லை. அப்போ; இங்கு புதை குழி ஒன்று இருக்குமென்றால், அதை ஒருவர் இவர்களுக்கு அடையாளம் காட்டியிருந்தால், அதோடு சம்பந்தப்பட்ட ஒருவராலேயே அது சாத்தியம். அது யார்? அவர் கண்டறியப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு அருண் சித்தார்த்தை கைது செய்து உண்மையான குற்றவாளி(யை)வாளிகளை கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி, விசாரணை நடத்தி உண்மைகள் வெளிக்கொணரவேண்டும். நாடு கடனாலும் மனித புதை குழிகளாலும் சூழ்ந்திருக்கிறது. இதிலிருந்து நாடு மீளுமா? அரசியலாளர்கள் இராணுவத்தை வைத்து சாதித்துக்கொண்டதுமல்லாமல் அவர்களை காட்டி தப்பித்துக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள்.
-
யாழில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்த கும்பல் கைது
அதை செய்யாமல் விட்டதிலிருந்து உள்நோக்கம் புரிந்திருக்குமே? ஏவலர் கூட்டம் எப்போதும் காத்திருக்கும் ஏவல் செய்ய, இதுதானே அவர்களது தொழில். இப்போ புரியும் ஏன் நமது பிரச்சனை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது என.
-
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை
சம்பந்தப்பட்ட குற்றவாளி பொலிஸாரின் ஆயுதத்தை பறித்து போலீசாரை தாக்க முற்பட்டவேளை போலீசார் விரைந்து செயற்பட்டு திருப்பி சுட்டத்தில் தாக்குதலாளி சம்பவ இடத்தில் பலி! காயமடைந்த பொலிசதிகாரி வைத்தியசாலையில் அனுமதி! தடுப்புக்காவலில் இருந்த கைதி மின் கம்பியை கடித்து, உடுத்திருந்த ஆடையை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை! இது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் காவலிலுள்ள கைதிகளை கொலை செய்து விட்டு பொலிஸார் வழக்கமாக கூறும் காரணங்கள்.
-
செம்மணியில் பால் போத்தலுடன் காணப்பட்ட குழந்தையின் எலும்புக் கூடு அகழ்ந்தெடுப்பு
அதிகாலையில் கண்விழிக்கு முன்பே, வேலிகளை வெட்டிக்கொண்டும் மதில் பாய்ந்தும் உள்ளே நுழைவார்கள் இராணுவத்தினர். எல்லோரையும் ஒரு பொது இடத்தில கூடும்படி அறிவிப்பார்கள், அங்கே விழித்த கண்ணுடனும் கழுவாத முகத்துடனும் அப்பகுதியில் உள்ளவர்கள் கூடுவோம். தனித்தனியாக விசாரிப்பார்கள் சிலரை தடுத்துவிடுவார்கள். இந்த நேரத்தில் அப்பிரதேசத்திற்கு யாரும் வரவோ அல்லது அங்கிருந்து யாரும் வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள், சுற்றி வளைப்பு பெயர். அதன் பின் குடும்ப அட்டை என்று ஒன்று கொண்டு வந்தார்கள். அதில் வீட்டிலுள்ளோரின் பெயர்கள் பதியப்பட்டு கிராமசேவகர் பிரதேசசபையினரால் உறுதிப்படுத்தப்பட்டு அங்குள்ள இராணுவத்தினரால் சரி பார்க்கப்பட்டு வீட்டில் தொங்க விடப்பட்டிருக்கும். அவர்கள் சோதனைக்கு வரும்போது அந்த அட்டையில்உள்ளவர்கள் அங்கு இருக்க வேண்டும். ஆட்கள் யாராவது கூட்டியோ, குறைந்தோ இருந்தால் மேலதிக விசாரணை. யாராவது உறவினர்கள் வந்தால், அருகிலுள்ள இராணுவ காவலரணில் அறிவிக்க வேண்டும். அதைவிட வீட்டுக்குள் புகுந்து சோதனை. ஒரு சூட்கேஸு பூட்டி வைத்திருந்தால் கூட திறக்கும்படி செய்து சோதனை செய்வார்கள். இப்படி பல சோதனைகள் பல நேரங்களில் காலம் நேரம் அறிவிப்பு கிடையாது. அகால நேரங்களில் கைது செய்யப்பட்ட பெண்கள் குழந்தைகளின் உடலாக இருக்கலாம். இதை செய்தவர்கள் உயிரோடு இருந்தால் இவைகள் வெளிவரும்போது அவர்களது மனச்சாட்சியை உலுக்காதா? அவர்களால் நிம்மதியாக உறங்க முடியுமா? ஆம், மிருகங்கள் ஒவ்வொரு நாளும் அப்பாவி விலங்குகளை துடி துடிக்க கொன்று புசிக்கின்றன, அடுத்த நாளும், வாழ்நாளெல்லாம் அவர்களது வாழ்க்கை சூழல் அதுவாயிற்றே.
-
1983 கறுப்பு ஜூலை; பாதுகாப்பான எதிர்காலத்துக்காக கடந்த காலத்தை நினைவுகூருதல்
நாட்டில் நடந்தது பயங்கரவாதம் ஒழிய இனவாதமல்ல என்று கூறிய, எச்சரித்த இனவாதிகளுக்கு; செம்மணி புதைகுழியில் வெளிவரும் மனித எச்சங்கள், காலங்காலமாக நடந்த வன்முறைகள் அதற்கான சான்றுகள். இனிமேலும் மூடி மறைக்க முடியாதென்கிற சூழலையும், அதான் தாக்கத்தையும் உணர்த்த தொடங்கி விட்டன. அதற்காக எதையாவது செய்வதாக காண்பித்து தம்மை காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சிங்களம். அதற்காக ஏதேதோ சொல்லவும் செய்யவும் தலைப்படிருக்கிறது. அது நாங்களல்ல அந்தக்கட்சி என்று விரல் நீட்டி தப்பி விட துடிக்கின்றன. கட்சிகளின் பெயரில் மாற்றமிருந்ததேயொழிய கொள்கைகளில் மாற்றமில்லை என்பதையே தொடர்ந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகளும் நிரூபித்தன. நல்லாட்சி ஆட்சிக்கு வந்தபோது, ஏதோ செய்வதாக காட்டிக்கொண்டன. ஐ. நாவில் கால அவகாசமும் பெற்றுக்கொண்டன, இறுதியில் எல்லாவற்றையும் கைவிட்டு ராஜபக்சக்களை மின்சாரகதிரையிலிருந்து நாமே காப்பாற்றினோம் என்று புகழ்ந்து கொண்டார்களே ஒழிய பாதிக்கப்பட்ட தரப்புக்கு எதுவும் செய்யவில்லை. இப்போ, அனுரா ஐ .நா. வை சமாளிக்க இப்படி செய்து நாடகம் ஆடுகிறாரா அல்லது உண்மையிலேயே நாட்டை கட்டியெழுப்ப போகிறாரா? எடுத்த திட்டத்தை கைவிட்டால் அதற்கு இவரும் உடந்தையாவதோடு, இவர் வெகு விரைவில் அரசியலில் இருந்து தூக்கியெறியப்பட்டு, ஏளனம் செய்யப்பட்டு, கைதும் செய்யப்படலாம். இங்கு இனமோ இறைமையோ எதுவுமில்லை, அரசியல் அதிகாரமே முக்கியம். தமிழரை ஒடுக்குவதற்கும் அதுவே உண்மையான காரணம். அதை மறைக்க வேறேதோ புனைகிறார்கள். இந்த பெருச்சாளிகளை கைது செய்யாவிட்டால்; நாட்டை காப்பாற்ற முடியாது. குற்றவாளிகளுக்கு துணை போனவர்கள் இப்போ தம்மை பாதுகாத்து கொள்வதற்காக இரகசியங்களை வெளியிட்டு வருகிறார்கள். இங்கே அரசியல் பழிவாங்கல் என்கிற கூச்சலுக்கு இடமில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சாட்சிகளுக்கும் இந்த அரசுக்கும் ஆபத்தே.