Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. புலிகளும் வேண்டாம், இராணுவமும் வேண்டாம் என்று இடம்பெயராமல் தங்கள் வீட்டிலிருந்தவர்களையே இராணுவம் கொலை செய்து குழிதோண்டி புதைத்ததும் கிணறுகள் மலசல குழிக்குள் மூடியதும் தாங்கள் அறியாதது வியப்பே எனக்கு. தங்கள் காணிகளை, வீடுகளை பார்க்க சென்றவர்களை சுட்டுக்கொன்றதும் தெரியாததும் ஆச்சரியமே. கோவில்களிலும் வைத்திய சாலைகளிலும் தஞ்சம் புகுந்தவர்கள் மேல் குண்டுமழை பொழிந்ததும் கேள்விப்படாதது உங்கள் தவறே. எங்கெங்கோ வாழ்ந்தவர்களை விரட்டி புலிகளின் பின்னால் குவித்தது யார்? புலிகள் உருவாகமுதலே தமிழரை தேடித்தேடி கொன்றவர்கள் யார்? ஏதோ புலிகள் மக்களை தடுத்ததால்தான் இராணுவம் மக்களை கொலைசெய்ததுபோல் கதை பேசக்கூடாது. தங்கள் கைகளால் இராணுவத்திடம் கையளித்த தந்தையர், பிள்ளைகள், கணவன்மார் எங்கே? இவர்களை நம்பித்தானே கையளித்தார்கள்? பாடசாலைகள், வீடுகள் எல்லாம் ஏன் குண்டு வீசினார்கள்? புலிகளினாலா? புலிகளை அழித்தபின் தீர்வு என்று சொன்னார்களே, அந்த தீர்வு எங்கே? இன்னும் ஏன் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கிறார்கள்? விகாரைகளை எழுப்புகிறார்கள்? தன்னார்வ தொண்டு நிறுவனங்களை, போர்நிறுத்த கண்காணிப்பு குழுவை ஏன் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்? சிறுவன் பாலச்சந்திரன்! அவன் ஆயுதம் ஏந்தவில்லை, அரசியல் பேசவில்லை, தனக்கு என்ன நிகழப்போகுது என்பதையே அறியாதவன். அவனை ஏன் கொன்றார்கள்? புலிகள் பயங்கரவாதிகள் என்கிறார்கள், இவர்கள் மனிதரை மீட்க போர்புரிந்தவர்கள், பொறுப்புள்ளவர்கள் இவ்வாறு செய்யலாமா? எங்கு போனாலும் தங்களுக்கு பாதுகாப்பில்லையென மக்களே புலிகள் பின்னால் ஓடினார்கள். மக்களை மீட்பதற்காக போர் புரிந்தவர்கள் அந்த மக்களை தங்க வைக்க வசதிகள் செய்திருந்தார்களா? அடிப்படை வசதியேதும்......? மக்கள் வெளியேறா வண்ணம் பாதைகளை, உணவு மருந்து விநியோகத்தை தடுத்தவர் யார்? யாரையும் உள்ளே அனுமதிக்காததன் நோக்கம் என்ன? மக்கட்தொகையை குறைத்து சொன்னதன் காரணம் என்ன? எப்படியாகிலும் அங்குள்ள மக்களை ஒரே இடத்தில் கூட்டி கொன்றுவிட்டு, புலிகளை அழித்துவிட்டோம் என்று பரப்புரை செய்வதற்கே. அதைத்தான் இன்றுவரை சொல்கிறார்கள். ஆயுத விநியோகம் தடை செய்யப்பட்டுவிட்டது, புலிகள் சரணடைய வெள்ளைக்கொடியோடு செல்ல பேச்சுவார்த்தை, காத்திருப்பு நடந்திருக்கிறது. இதில உள்ளுக்கை வரவிட்டு அடிப்போமென யாரிடம் புலிகள் சொன்னார்கள்?
  2. இந்த மனிதன் நேரத்திற்கு ஒரு கதை பேசுபவர், இதனாற்தான் சிறையிலும் அடைக்கப்பட்டார். இவர், தான் போரை முடிவுக்கு கொண்டுவந்தேன் என்று வேறை பங்கு கேட்க்கிறார். தமிழர் எல்லோரும் வந்தேறு குடிகள் என்று சொன்னவருள் இவரும் ஒருவர். அமெரிக்கா சென்றபோது, தொலைக்காட்சி பேட்டியோ பத்திரிகைப் பேட்டியோ ஒன்றில் இவரது பேச்சுப்பற்றி கேள்வி கேட்டபோது, தான் அப்படி சொல்லவேயில்லை என மறுத்து விட்டார். சிறிது நாட்களில் நாடு திரும்பியவர் பின் அமெரிக்கா பக்கம் செல்லவேயில்லை. இவ்வளவுக்கும் இவர் அமெரிக்காவில் கிறீன் அட்டை பெற்றவர். வடக்கில் புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று முரசு கொட்டிக்கொண்டு பாதுகாப்பு பிரச்சினையாம். அப்போ தெற்கு, ஒரே கலவரமும் சூடுமாக இருக்கிறதே, நீதிமன்றத்துக்குள் சூடு நடத்தப்படுகிறதே, அதற்கு என்ன சொல்லப்போகிறார்? இவரை யாரும் தென்பகுதியில் கண்டுகொள்வதேயில்லை, ராஜபக்ஸக்கள் எடுக்கும் போர் வெற்றி விழாவிலேயே இவருக்கு அழைப்பு கிடைப்பதில்லை. போர்முடிந்த கையோடேயே சிறைக்குள் போடப்பட்டவர், அவமானப்படுத்தப்பட்டவர். இவருக்குத்தான் தேர்தலில் நம்ம தலைவர்கள் ஆதரவு வழங்கியவர்கள். பார்த்தீர்களா நன்றிக்கடனை? வெகு விரைவில் மஹிந்தா, நாமலோடு இணைவார் போலுள்ளது. பாலாய் வார்த்து தேனாய் ஊற்றினாலும் பாம்பு கடிச்சுக்கொல்லுமே.
  3. ஒன்றுஅனுரா இனவாதிகளுக்கு பணிந்து போக வேண்டும், அப்படியானால் நாட்டில் சமாதானத்தை, நல்லிணக்கத்தை அவரால் கட்டியெழுப்ப முடியாது. கட்டியெழுப்ப வேண்டுமாயின் இந்த அச்சுறுத்தலுக்கு பணியாது, உண்மையில் இவர்கள் செய்த வேலைக்கு, இவர்களை சிப்பாய் என்று அழைத்ததே மேல், போரில் என்ன நடந்தது என நடந்தவற்றை காட்டுகிறேன் பார்க்க தயாரா என கொக்கரிப்பவர்களிடம் கேட்க வேண்டும். அப்படி போரில் நடந்த அக்கிரமங்களை நீங்கள் பார்க்கதயாரென்றால் இவர்கள் போர்க்குற்ற வாளிகள் ஆவர், பிரச்சனையில்லையா என கேள்வி கேட்க வேண்டும். ஆனால் அனுரா அதை செய்யமாட்டார், அதை செய்யவில்லையென்றால்; இந்த பிரச்சனை தொடர்கதைதான். ஆனாலும் சர்வதேசம் ஒருநாள் இவற்றை வெளியிடத்தான் போகிறது. இலங்கையில் இனவழிப்பு நடைபெறவில்லை என்பவர்கள். அப்போ என்ன சொல்லப்போகிறார்கள்? இனவழிப்பு நடைபெறவில்லையென்றால் ஏன் சணல் நான்கை பார்ப்பதற்கு இலங்கையில் தடை செய்துள்ளார்கள்? உங்கள் வீரர்களின் வீரத்தை, தியாகத்தை பார்க்க அவ்வளவு வெறுப்பு உங்களுக்கே. ஆனால் வெற்றி விழா, கோசம். அவர்கள் ஒன்றும் சும்மா போரிடவில்லை. இருக்கும்போது சம்பளம், இறந்தபின் குடும்பத்தினருக்கு சம்பளம். அதுவும் ஏம்மாற்றப்பட்டே போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
  4. உறுதிப்படுத்தப்படாத செய்தியொன்று, வெகுவிரைவில் மஹிந்த குடும்பம் கைதுசெய்யப்படவுள்ளதாக வெளிவந்துள்ளது. அதனால் இவர்களும் இப்படியான செய்திகளை கசிய விடலாம். எல்லாம் ஆசுப்பத்திரி கேசுகள் தான். நேற்று நாமலின் அடிப்பொடிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்ததற்காக துள்ளிக்குதித்தார்கள், அதிலிருந்தே தெரிகிறது இவர்களுக்கு நாள் நெருங்கி விட்டது. அச்சுறுத்தல் அதே நேரம் அனுதாபம் இது இவர்களின் வழமையான வேலைதானே. கொந்தளிக்கிற நாலுபேரை உள்ள போட்டால் மற்றவர்கள் தானாக மறைந்துவிடுவார்கள்.
  5. கனடாவுக்கு எதிராக கண்டனத்தை செய்யாமலா விட்டிருக்கும்? வழக்கு என்பது போடமுடியாது, எங்கே போடுவது, ஐ. நாவிலா? அங்கே இவர்களுக்கெதிரான இந ஒடுக்குமுறை பாக்கி இருக்கிறதே? அவர்கள் நாட்டில் எதை கட்டவேண்டும், கட்டக்கூடாது என தீர்மானிப்பது அந்த நாட்டு மக்களும் அரசாங்கமுமே தவிர இந அழிப்பை செய்த இலங்கை அரசாங்கமல்ல. தனது நாட்டில் இந, மத நல்லிணக்கத்தை குழி தோண்டி புதைத்துக்கொண்டு, மற்றைய நாடுகளுக்கு அச்சுறுத்தல், கண்டனம், போதிப்பு. இப்போ கனடா இலங்கையின் மொழியிலேயே பதில் கொடுக்க ஆரம்பித்து விட்டது. அதனால் தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றைய நாடுகளும் இதனை பின்பற்றக்கூடும். ஏனெனில் இந்தப்போரினாலேயே தமிழர் அந்தந்த நாடுகளில் தஞ்சம் புகுந்தனர், அந்த நாடுகளும் அவர்களை ஏற்றுக்கொண்டன.
  6. ஒன்றுக்கு தப்பினால், இன்னொன்றில் மாட்டத்தானே செய்வார். இங்கு எமது பதிவுகளை பலநாடுகளில் உள்ளோர் வாசிக்கின்றனர் போலுள்ளது. இனி காரியம் ஆகலாம். இல்லை அடுத்த விமானத்தில் பசிலே வந்து இறங்கி விடுவார். அதனை சிங்கள அரசு விரும்பாது செய்யாது அதற்கு காரணமும் உண்டு.
  7. ஏன் கொழும்பை தவிர்த்து விட்டீர்கள்? முன்பு கொழும்பில் பல சைவ உணவகங்கள், பயணிகள் தங்கும் விடுதிகள் கூட புங்குடு தீவாருடையதாம். இப்போ பிரான்ஸிலுள்ள தமிழரில் பாதிக்குமேல் பெரும் பணக்காரர் அவர்கள்தானாம். எனது தூரத்து உறவினர்கள் கூட புங்குடுதீவில் காதல் திருமணம் செய்துள்ளார்கள். பணத்துக்காக அல்ல பழக்கம். நாங்கள் இடம்பெயர்ந்து இருந்தபோது, பல குடும்பங்கள் எமது வீட்டை சுற்றி வசித்தார்கள். அவர்களும் இடம்பெயர்ந்தவர்களே. அருமையான, இரக்கமுள்ள குடும்பம் ஒன்று. அவர்கள் இப்போ பிரான்சில் இருப்பார்கள் என நினைக்கிறன். அப்பவே அவர்களது பெரும்பாலான உறவினர் பிரான்சில் இருந்தார்கள், இவர்களும் அங்கு போகப்போவதாக கூறியிருந்தார்கள். கந்தையர், இனிமேல் நீங்கள் எத்தனை தடவை வேண்டுமானாலும் புங்குடுதீவை குறிப்பிடலாம் அவர் கோவிக்கமாட்டார் பெருமைப்படுவார்.
  8. தமிழர் வாழும் நாடுகளெங்கும் நினைவுத்தூபிகள் எழும்பி இந அழிப்பை பறை சாற்ற வேண்டும். அப்போதான் சிங்களம் வாயை மூடிக்கொண்டு இருக்கும். எப்படியும் ஒருநாள் வளமாக சிக்கப்போகிறது. தான் எவ்வளவு மறைத்தாலும், தன்னை யாரும் நம்பவில்லை என்பதை இந்த ஒரு தூபியே சான்று. தெருவெங்கும் அரசியல்வாதிகளும், பிக்குகளும் நின்று தாங்கள் நடத்திய தமிழருக்கு எதிரான கொடுமைகளை சொல்லி இன்னும் அதுபோல் நடவாது ஒதுங்கி இருங்கள் என அச்சுறுத்திக்கொண்டு, சாட்சியம் சொல்லிக்கொண்டும் அவர்களின் நிலங்களில் அத்துமீறல்களை அரங்கேற்றிக்கொண்டும் இந அழிப்பு நடைபெறவில்லை என கூச்சல் போடுவது எந்தளவில் ஏற்றுக்கொள்ளப்படும் என சிந்திக்க தெரியாதவர்களாக இருக்கிறார்களே, இவர்களால் எப்படி சரியானதை சிந்திக்கவும் நாட்டை கட்டியெழுப்பவும் முடியும்?
  9. வேலன் சுவாமிக்கு இருக்கிற மரியாதை குறையுதா, சுமந்திரனுக்கு குறைந்த மரியாதை எகிறுதா என வரும் காலங்கள் நிரூபிக்கும்.
  10. இவர்கள் வாயை மூடிக்கொண்டிருந்திருந்தால் ஒரு நினைவுத்தூபியோடு நின்றிருக்கும். இப்போ, வாயைக்கொடுத்து கனடா முழு மாநிலத்திலும் சர்வதேச நாடுகளிலும் தமிழ் இந அழிப்பிற்கு சான்றாக நினவுத் தூபிகள் எழ தூண்டிவிட்டுள்ளது இலங்கையின் அவசியமற்ற, நிஞாயமில்லாத கண்டனம். உண்மையை ஏற்றுக்கொள்ள துணிவில்லை, மனச்சாட்சியில்லை, இதில் வேறு குரைப்பு.
  11. இன்னும் தீவிரமடைவதோடு தானாகவே இந்தியா மாட்டிக்கொள்ளும் .இலங்கை, இந்தியாவை கொம்பு சீவுவதுபோல் தெரிகிறது சில விடயங்களைப்பாத்தால். இது இந்தியாவின் யுத்தமென மஹிந்தா, பொன்சேகா அறிவித்துவிட்டனர். ஆனால் கனடாவில் இந்தியாவின் அச்சுறுத்தல் எல்லாம் வேகாது. அஇந்தியாவுக்கும் சேர்த்துதான் கனடா சொல்லும் செய்தி இந்த நினைவுத்தூபி. இந்தியாவுக்கு கனடாமேல் கடுப்பு இருக்கிறது அதை காட்ட முடியாது. உள்நாட்டில் சில கருத்துக்களை ஈழத்தமிழருக்கெதிராக விடலாம். இந்தியாவும் காலிஸ்தான், காஷ்மீர் மக்களை இப்படியொரு நிலையிற்தானே வைத்திருக்கிறது!
  12. இலங்கையில் அது நடக்கவில்லையென மறுக்கப்படும்போது, உலகெங்கும் தமிழ் இந அழிப்புக்கான தூபிகள் எழும். இறுதியில் இலங்கையும் வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொள்ள வைக்கப்படுமா? பொறுத்திருந்து பாப்போம். மனிதர் ஒருவழியை மறுக்கும்போது, பலவழிகள் திறக்கப்படும். விதி எங்கோ அழைத்துச்செல்கிறது.
  13. விசுகர்! கட்டாயம் உங்கள் பணமும் இதில் இருக்குமென்றே நினைக்கிறன். தொண்ணூறு கோடியில் கட்டிடம் கட்டுமளவிற்கு அதை பராமரிப்பதற்கு, அங்கே அவ்வளவு மக்கள் இருக்கிறார்களா? வருங்காலத்தில் இதை பராமரிப்பார்களா? மக்களின் தேவைக்காக கட்டப்பட்டதாக தெரியவில்லையே?
  14. அது சாமியார், நீதிமன்றத்திற்காக விபத்து, வைத்தியசாலை அனுமதி, வைத்தியர் அறிக்கை. அமெரிக்க வைத்தியசாலையில் புத்தர் சிலை வைக்கலாமா, வைத்தியசாலை உடை தவிர வேறு உடை அணியலாமா என்பதை யஸ்ரின் உறுதிப்படுத்தவேண்டும். அல்லது பசில் வீட்டை வைத்தியசாலை ஆக்கிவிட்டார்களா தெரியவில்லை? ஒரு வைத்தியசாலை அறிக்கை, விமானப்பயணத்தை மட்டும் ஏன் விளித்து எழுதியது? நோயாளிகளுக்கு பொதுவான அறிவித்தல் கொடுப்பார்கள், நாம் பயணம் செய்ய இருப்பதை தெரிவித்தால் மட்டுமே பிரத்தியேக விளக்கம் கொடுப்பார்கள். ஒரு சாதாரண கதிரையில் இருந்து விழுந்து ஆறுமாதம்...... விளங்கவில்லையா? கைதை தடுக்கும் வழி! இங்கிருந்திருந்தாலும் இந்த நாடகந்தான் நடந்திருக்கும். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மஹிந்தவின் மகனை விசாரணைக்கு அழைத்தபோது, நான் நினைக்கிறன் ஒரு பாட்டி அவரின் பெயர் டெய்ஸீ என. அவருக்கு மறதி நோய் அவருடைய பணம் அது என்றும் அவரால் இப்போது நினைவு படுத்த முடியாதென்றும் அறிவித்தார்கள். உண்மையிலேயே அது அவரின் பணந்தானா? அவருக்கு மறதிநோய் இருப்பது உண்மைதானா என யாரும் உறுதிப்படுத்தியதாக தெரியவில்லை?
  15. அசைவ உணவகம் என்று போராட்டம் வெடித்தது இப்போ அனுமதியில்லாமல் திறக்கப்பட்டது சைவ நெறி கற்பிக்கப்படவேண்டும் என்று சைவத்தை முன்னிறுத்தி பல்வேறு கோரிக்கைகள் சிங்கள பௌத்தத்துக்கும் தமிழ் சைவத்துக்கும் அதிக வித்தியாசமில்லை நமக்கு சைவ தமிழ் ஈழம் கேட்க்கிறார்களா இதில நாம் எங்கே ஒன்றிணைந்து போராடுவது எங்கே சைவ கோவில்கள் இடிக்கப்படுகிறதோ முரண்பாடுகள் தோன்றுகிறதோ அங்கே எல்லா மத தமிழர்களும் எதிர்க்கிறார்கள் ஒரு சமூகத்தில் மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் போது ஏற்படும் அழிவுகளை கண்டும் நாம் திருந்தவில்லை ஏற்றத்தாழ்வுகளை முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பெயர் மதமோ அது சார்ந்த அபிமானமோ இல்லை மத வெறி இப்போ வேலன் சுவாமி பற்றிய தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது போகப்போக இன்னும் வரும் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி! ஓ, அப்படியா! நானேதோ இந்தத்திரியில் விவாதிக்கப்பட்டது என்று நினைத்து விட்டேன். பாவம் சுமந்திரனை நீங்கள் ஏன் இதற்குள் இழுத்து வந்து வேலனுக்காக வாதாட பரிந்துரைத்தீர்கள்? இதுதான் பக்கா அரசியல்!
  16. சாய், பக்கத்திலிருந்த புத்தர் கூட கைவிட்டு விட்டாரே பசிலை? கையிலை எத்தனை மீற்றர் நூல் கட்டியிருந்தும் பயனில்லை, பிறகேன் அதை ஓதி கட்டுகிறார்கள்?
  17. என்னது..... கதிரையிலிருந்து விழுந்து காயமடைந்து ஆறுமாதம் விமானத்தில் பயணம் செய்ய முடியாதா? அப்படியென்ன கதிரையது? அது கதிரையாக இராது, குதிரை என நினைக்கிறன். நீதிமன்றம் போகவேண்டி வந்தால் அரசியல்வாதிகள் பலருக்கு உடல்நல பிரச்சனை வருவது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வழமை.
  18. அது ஒன்றுமில்லை, ஒரு சில மாதங்களுக்கு முன், ஒரு இஸ்லாமியர் நல்லூருக்கு சொந்தம் கொண்டாடி, இப்படி ஒரு கதை சொன்னார். தாயின் கற்பத்தில் இருந்த குழந்தையை புலிகள், தாயின் வயிற்றை கீறி வெளியே எடுத்தார்கள் என்றொரு உண்மைக்கு புறம்பான கதையை பரப்பி அப்பப்போ முபாறக்அப்துல் மஜீத் என்பவர் தமிழர்மேல் தனக்குள்ள வெறுப்பை கக்குவார். அதை சிலர் உண்மையென நம்பி அனுதாபம் தெரிவிப்பது. அதுவே அவர்களுக்கும் சாதகமாகிறது, தாம் சொன்ன பொய் உண்மையென சாதிப்பார்கள் எதிரிகள். உங்களைப்போல் யார் ஆதாரம் கேட்டு தெளிகிறார்கள் நம்புவதற்கு முன்?
  19. நல்லூரில் கோயில் வலயத்திற்குள் வசிப்பவர்கள் அசைவம் சமைப்பதில்லை, சாப்பிடுவதில்லை. அப்போ அவர் அங்கே தனது நிறுவனத்தை நடத்துவதால் அவருக்கு என்ன பயன்? அங்கே கொள்வனவு செய்ய வருவோர் யார்? அவர்களுக்கு அந்த ஊரின் கோவிலின் புனிதம் தெரியாததா? ஒன்று புரிகிறது. இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு. அங்கே அசைவம் விற்பனை செய்யப்படுகிறது, அல்லது அங்குள்ளவர்கள் அசைவம் சாப்பிடுவதில்லை என்பது. ஒரு தொழில் ஆரம்பிப்பவர், அந்த சூழ்நிலை அறியாமல் அங்குள்ளவரின் அறிமுகமேதுமில்லாமல் விற்பனையை ஆரம்பித்து இருக்க வாய்ப்பில்லை. யாரோ ஒருவர் இதற்கிடையில் தரகராக இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
  20. இவரை தூஷண பிக்கர் என்பதை விட, அடாவடி பிக்கர் என்பது தான் பொருத்தம். ஒருதடவை ஒரு கிறிஸ்தவ பாதிரியார் கெல்மெட் போடாமல் பயணிக்கிறாரென நடுவீதியில் சட்டத்தை கையிலெடுத்து அடாவடி பண்ணினார், சில மாதங்களுக்கு முன் ஒரு பிக்கு இதே தவறை செய்த போது, காவற்துறையினர் விசாரிக்கும் போது, தான் ஒரு பிக்கு, கெல்மெட் போடத்தேவையில்லை, தனக்கு நாட்டுச்சட்டங்கள் பொருந்தாது என வாதிட்டார். சட்டம் ஏன், எதற்காக பாவிக்கப்படுகிறது? ஹெல்மெட் போடாவிட்டால் யாருக்கு கேடு என்பதை கூட புரியாமல் விவாதம் செய்தார். அது இருக்க, இவர் பாவித்த மின்கட்டணத்திற்கான நிலுவையை செலுத்தவில்லை, இணைப்பை துண்டிக்கப்போன ஊழியரை தூஷணத்தால் திட்டி அடித்து திருப்பி அனுப்பினார். அன்றிலிருந்துதான் இவருக்கு தூஷணப்பிக்கர் என்கிற பெயர் வெந்திருக்கும். இவர்களின் அடாவடிக்கு பணிந்து போகும் சட்டம், காவற்துறை, ஜனாதிபதி இவர்களால் தாக்கப்படுவார்கள். இவர்களுக்கு சட்டம் நீதியின் மரியாதை தெரிவதில்லை. ஒருதடவை ஒரு கட்டிடத்தில் ஏறி நின்று சண்டித்தனம் விட்டார். நமது சாணக்கியன் எம்பியின் கூட்டாளியும் கூட!
  21. கோவில் ஆலய வலயங்களுக்குள் வாழ்பவர்கள் அசைவம் சமைப்பதில்லை, சாப்பிடுவதில்லை என்றால், அவர் யாருக்கு, எப்படி அங்கு வியாபாரம் நடத்த முடியும்? எல்லா ஊரிலும் பல பிரபலமான சைவ, அசைவ உணவகங்கள் வந்துள்ளன. ஊர்விட்டு ஊர்வந்து யாரும் அசைவம் சாப்பிட வேண்டிய தேவையில்லை என நினைக்கிறன். ஒருவேளை தங்கள் இரகசிய உணவுமுறை, இந்தக்கடையால் வெளியே வந்துவிடுமென அச்சப்படுகிறார்களோ தெரியவில்லை. கீழ் சாதிக்காரர் தேர் இழுக்கக்கூடாது, ஆனால் பல உயிர்களை காவு கொண்ட ஆமிக்காரர், இயந்திரங்கள் தேர் இழுக்கலாம் என்னும் வாதம் போன்றது. இவர்கள் தங்கள் சண்டித்தனத்தை தையிட்டியில் காட்டி விகாரையை அகற்றியிருந்தால் பாராட்டியிருப்பேன். எல்லாம் பெலயீனர்களிடந்தான் தமது சண்டித்தனத்தை காட்டுவார்கள். சரியான அணுகுமுறையை கையாண்டு பிரச்சனையை சுமுகமாக தீர்த்திருக்கலாம். ஆனால் தேவையில்லாத பிரபல்யம் அடையப்போய் தங்கள் சண்டித்தனத்தை பிரபல்யப்படுத்தி பகைமையை வளர்த்திருக்கிறார்கள். எனக்கு அசைவம் பிடிக்காது, அசைவரையும் பிடிக்காது என்று அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது, அச்சுறுத்துவது மனித நேயமுள்ள செயலல்ல. அதை மதங்கள் போதிப்பதுமில்லை. எல்லோரையும் மதிக்கும் பண்பு வேண்டும். இந்த பின்போக்கு தனமும் பாராளுமன்றத்தில் ஒலிக்கலாம். நாங்கள் ஒரு பகுதியினரை எமது நலன்களுக்காக அடக்கலாம், வெறுக்கலாம், விரட்டலாம். ஆனால் நமக்கு யாரும் அதை செய்யக்கூடாது. இதுதான் எமது வாதம், அப்பப்போ வெளிவருகிறது. பொங்கல் முடிந்தவுடன் மீன்கடைக்கு போவோரையும் கண்டிருக்கிறேன், கோயில் கொடியேறி விட்டது, வீட்டில் மாமிசம் சமைக்கஊடாது என வீட்டுக்கோழியை பிடித்து அடுத்த வீட்டில் சமைத்து சாப்பிடவர்களையும் பார்த்திருக்கிறேன். இந்த வீடுகள் கோயிலின் பக்கத்திலேயே இருக்கின்றன. அது அவரவர் உணவுப்பழக்கம், சுதந்திரம். அதில் தலையிட நமக்கு உரிமையில்லை. நாங்கள் அசைவம் சாப்பிடுகிறோம், நீங்களும் அசைவம் சாப்பிடுவதென்றால் எங்கள் வலயத்தில் இருக்கலாமென யாரும் கட்டுப்பாடு போடுவதுமில்லை, அவர்களை விலக்கி வைப்பதுமில்லை. அடுத்தவரை மதித்து வாழ்வதே மதம். சாப்பாட்டில், சாதியிலில்லை. நாங்கள் வெளிநாடுகளில் அசைவம் சாப்பிடுபவர்களின் பக்கத்தில், வீடு வாங்குவோம், கோயில் கட்டுவோம். ஆனால் ஊரில் உள்ளவர்கள் சைவ சமய சட்ட திட்டப்படி வாழ வேண்டும். நமது வீடுகளை விற்கும்போது, யார் அதிக பணம் தருகிறார்களோ அவர்களுக்கு விற்போம், அங்கு சூழலில் இருப்பவர்களின் மனநிலையை கணக்கில் எடுக்க மாட்டோம், இந்த சாத்திரங்கள், வாதங்களை கையிலெடுக்க மாட்டோம். இதுதான் எமது நியதி.
  22. யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை ஜே. வி. பி. ஆட்சியமைக்குமென. ஆனால் அது வென்றபோது அந்தக்கட்சியில் உள்ளோரும் எம்மைப்போன்று சித்திரவதைகளையும் இழப்புகளையும் வலிகளையும் சந்தித்தவர்கள், ஆகவே எமது வலி, இழப்பு, ஏக்கம் இவர்களுக்கு புரிந்திருக்கும், அதைவிட அனுரா மிகவும் இளமையானவர், முற்போக்காக சிந்திப்பார், மாற்றங்களை செய்வார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் அது கடந்தகாலத்தில் தமிழருக்கெதிராக செய்த அநீதிகளும் அறிந்தே இருந்தோம். ஜே. வி .பி. இல்லையென்றாலும் எங்களை நேரடியாக அழித்த ஒரு கட்சிதான் வந்திருக்கும். இந்த அனுரா ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி எமது காயங்களை ஆற்ற மறுப்பாரானால், இனி சிங்களத்தின் அழிவை யாராலும் தடுக்க முடியாது. எல்லோருக்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டு, அவகாசம் வழங்கப்படுகிறது. எவ்வளவுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறதோ அந்தளவுக்கு அவர்கள் தமக்குத்தாமே அழிவை தேடிக்கொள்கிறார்கள். இனப்படுகொலை நடைபெறவேயில்லை என தம் மனச்சாட்சியை, பதவிக்காக ஏமாற்றுகிறவர்கள், ஆதாரத்துடன் நிரூபிக்கும்போது எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள்? இதுவரை காலமும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, ஆதாரங்களை வெளிக்கொணரவுமில்லை இனிமேலும் எதுவும் நடைபெறாது என தைரியமாக ஏமாற்றுகிறார்கள். ஆனால் நினையாத நேரத்தில், நினைத்திராத மனிதர்களால் எல்லாமே வெளிவரும். அப்போ இவர்கள் எதையும் செய்யவோ, சொல்லவோ சந்தர்ப்பம் கிடைக்காது. அன்பையும் அஹிம்சையையும் கொண்ட மதத்தின்பேரால் இவர்கள் செய்த அனிஞாயங்கள் வெளிவரும்போது அந்த மதமே அவர்களுக்கு கைகொடுக்காது.
  23. ம், ஏமாந்து களைத்த மக்களை ஏமாற்றி பதவியில் அமர்ந்ததே ஜே .வி. பியின் வெற்றி. தமிழ் மக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிப்போம் என்றார்கள், அதுபற்றிய உரையாடலின் நடுவே வெளியேறினார்கள், இனவழிப்பு ஒன்று நடைபெறவே இல்லை என்கிறார்கள், உண்மையை கதைத்தால் சட்டத்தால் அடக்குவோம் என அச்சுறுத்துகிறார்கள், நேரம் ஒரு கதை, ஆளுக்கொரு பேச்சு பேசுகிறார்கள். இதுதான் இவர்களின் கள்ள மனச்சாட்சி, கோழைத்தனம். இதனை துணிச்சல் என பிதற்றுகிறார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.