Everything posted by nedukkalapoovan
-
யாழ் பெண்ணுக்கு மனித உரிமைகளுக்கான விசேட விருது!
தனக்கும் தன் சார்ந்த சமூகத்திற்கும் நிகழ்ந்த மகா கொடுமைகளை.. இத்துணை அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் விட்டுக்கொடுப்புக்கோ.. அடிபணிவுக்கோ.. சமரசத்துக்கோ.. இணக்கத்துக்கோ வாய்ப்பளிக்காமல்.. உலகிற்கு உணர்த்த போராடும் இந்த தாய்க்கு உண்மையான பாராட்டுக்கள். இன்னொரு பூபதியம்மாவைக் காண்பது போன்ற உணர்வு. இவா.. எங்க.. சிங்கள இராணுவம் காட்டும் வேடிக்கையை விடுப்புப் பார்க்கப் போகும் கூட்டமெங்க.
-
குஜராத் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டவர்களின் சகா இலங்கையில் கைது
சொறீலங்காவில் இருந்து சொறீலங்கா புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பில் இருக்கும் விமான நிலையம் ஊடாக ஹிந்தியா போகும் வரை.. இவர்களை சொறீலங்காவுக்கு ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகள் என்று தெரியல்லையாம்... இப்ப தானாம் தெரியுது..??! சொறீலங்கா திட்டமிட்டு ஹிந்தியாவில் உயர் பதவியில் இருக்கும் யாரையோ கொல்லச் சொல்லி இவர்களை ஏவி விட்டிருக்கலாம். இப்ப பிடிபட்டதும்.. ஐ எஸ் ஐ எஸ் என்றும்.. தெரியாத மாதிரியும் நடிக்கக் கூடும். சொறீலங்கா குறித்த ஹிந்தியாவின் அணுகுமுறை தவறு என்பதற்கு.. இதுவும் நல்ல உதாரணம்.
-
இந்துக்களை படுகொலை செய்வதற்காகவே 4 இலங்கையர்கள் இந்தியா சென்றுள்ளனர் - வீரசேகர
அப்போ தாங்கள் இலங்கை வாழ் இந்துக்களை இனக்கலவரங்கள் மூலமும் சிங்கள பெளத்த இராணுவ ஆக்கிரமிப்பு.. போர் மூலமும் கொன்று குவித்ததும்.. அதனை ஹிந்தியா விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்ததும்.. கூட உதவி நின்றதும்.. எந்த வகைக்குள் அடங்கும்...?! அப்ப ஏன் சொந்த நாட்டில் வாழும்.. இந்துக்கள் குறித்து இவருக்கு அக்கறை வரவில்லையாம்..?! இவரிடம் கேள்வி கேட்க உருப்படியான தமிழர்கள் சொறிலங்கா பாராளுமன்றத்தில் இல்லை.. அல்லது தூக்கமோ தெரியவில்லை.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
விடுப்புப் பார்ப்பதற்கும்.. விரும்பிப் போவதற்கும் வித்தியாசம் உள்ளது. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு இராணுவம் விடுப்புக்காட்ட அதை.. வேடிக்கை விடுப்பு பார்க்கப் போகின்றனர் வேலைவெட்டி இல்லாது வெளிநாட்டுக் காசில் வாழும் தமிழர்கள்.
-
விடுதலைப் புலிகள் படுகொலை செய்த சிங்களவர்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் அக்னெஸ் ஏன் நினைவுகூரவில்லை ? - சரத் வீரசேகர கேள்வி
விடுதலைப்புலிகள் சும்மா சிங்களவர்களைக் கொல்லவில்லை. ஒன்றில் ஊர்காவல் படை என்ற பெயரில் ஆக்கிரமித்து நின்ற சிங்களவர்களை தாக்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு வந்த சிங்களவர்களை தாக்கினார்கள்.. சிங்கள முப்படை பொலிஸ் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்களை தாக்கினார்கள். தென்னிலங்கை தாக்குதல் சம்பவங்கள் வடக்குக் கிழக்கில் சிங்களப் படைகளும் ஊர்காவற்படையும் செய்த படுகொலைகளின் பழிவாங்கல் மட்டுமே. சிங்களப் படைகள் 2 இலட்சம் தமிழர்களைக் கொன்றிருந்தால்.. புலிகள் ஒரு 2000 சிங்களவர்களை தான் கொன்றிருப்பார்கள். அதிலும் பல சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்கு எதிரான தாக்குதல்களில்.. தவிர்க்க முடியாமல் நிகழ்ந்த இழப்புக்கள். இதற்கும் திட்டமிட்டு இன அழிப்பு நோக்கில் சிங்கள பெளத்த பேரினவாத அரசுகளும் படைகளும் கொன்ற தமிழர்கள்..ஈடாக மாட்டார்கள்.
-
போதை பாவனைக்கு எதிரான செயற்திட்டம்- மரதன் மூலம் நிதி சேகரிப்பு - முடிந்தால் உதவிடவும்
இருந்தாலும் எங்கள் பங்களிப்பையும் வழங்கி உதவி இருக்கிறோம். ஏதோ நல்லது நடந்தால் சரி.
-
போதை பாவனைக்கு எதிரான செயற்திட்டம்- மரதன் மூலம் நிதி சேகரிப்பு - முடிந்தால் உதவிடவும்
https://www.justgiving.com/campaign/kilipeople-jmfoa-uk-emf2024 https://www.justgiving.com/search?includeBoostedQuery=true&q=KILIPEOPLE%20 https://www.justgiving.com/search?includeBoostedQuery=true&q=KILIPEOPLE%20 மொத்தமா எத்தனை பேர் ஓடுராய்ங்க. ஏன் ஆளாளுக்கு ஒரு கணக்குத் திறந்து சேகரிக்கினம்..?! இது இவைட நோக்கம் நல்லமா இருந்தாலும்.. கேள்விக்குரியதாக்குகிறது..!!
-
கண்ணீர்க் கோலம்.
நன்றி சுவி அண்ணா. =================== உண்மையில் இது ஒரு உண்மைச் சம்பவத்தை ஒட்டிய கிறுக்கல். காலை நேரம்.. வேலைக்கு கிளம்புகிறான் அந்த பையன். தன் துணைவி.. குடும்பத்திற்காகவும்.. தனக்காவும்.. நனிகுளிர் காலத்தின் அந்த நடுங்கும் குளிருக்குள் இருந்து தப்ப.... இழுத்துப் போர்த்திக் கொண்ட ஜாக்கட்டுக்குள் பதுங்கிய படி.. தொடரூந்தில் ஏறி அமர்கிறான். அதுவரை எதனையும் அவதானிக்காதவன்.. எதிர்முனையில் அமர்ந்திருந்த அந்த இளம் பெண்ணை காண்கிறான். தலையில் கறுத்த முக்காடு.. ஓரளவு மேக் கப்.. ஆனாலும் அவளுக்குள் ஏதோ ஒரு படபடப்பு என்பதை பார்த்த மாத்திரத்தில் உணர்ந்துவிடுகிறான். இருந்தாலும்.. அந்த நாட்டுச் சட்டப்படியும்.. அவனின் மனச்சாட்சிப்படியும்.... ஒருவரை அதிக நேரம் உற்றுப் பார்ப்பது.. வரவேற்கப்படவில்லை.. என்பதால்.. தன் நீளக்காற்சட்டை பொக்கட்டுக்குள் இருந்த போனை எடுத்து நோட்ட மிடுகிறான்.. என்ன ஒரு அதிர்ச்சி. எதிர்முனையில் அமர்ந்திருந்த பெண்.. அழுவது விம்பமாக விழுகிறது மீண்டும் அவன் கண் திரையில். எதற்கும் உறுதி செய்து கொள்ள நோட்டமிடுகிறான். ஆம் அவள் அழுகிறாள் தான். கண்ணீர் தாரையாகி கன்னங்களில் வழிந்தோடிய நெடிய கோடுகள் இரண்டு.. இரண்டு பக்க விழிகளின் கீழும்... பேட்டிருந்த மேக் கப்பை கழுவித்தள்ளியபடி.. வழிந்தோடி இருந்ததன் அறிகுறிகள் அவை. சிறிது நேரத்தில் மீண்டும் அதிர்ச்சி. தன் கைப்பையில் இருந்த பேனை எடுத்து தான் அழுவதை ஒரு செல்பி எடுக்கிறாள் அந்த இளம்பெண். அதனை அவசர அவசரமாக வாட்ஸ் அப் வழியாக அஞ்சல் செய்வது தெரிகிறது. மீண்டும்.. போனை கைப்பையில் இடுகிறாள். மீண்டும் இவன் நோட்ட மிடுகிறான். அவள் கண்களில் மீளவும்.. கண்ணீர் திரண்டு வழிகிறது. மீண்டும் செல்பி எடுக்கிறாள்.. இப்படியே.. செய்து கொண்டிருந்தவள்.. அவளின் தரிப்பிடம் வந்ததும் இறங்கிச் சென்று விடுகிறாள். ஆனாலும்.. அந்தப் பையனுக்குள் ஒரு கேள்வி.. அவளின் பரிதவிப்பு.. கண்ணீர் எல்லாமே.. பட்சாபத்திற்குரியது என்றாலும்.. எதற்கு அதனை செல்பி ஆக்கினாள்.. அஞ்சல் செய்தாள்.....???! விடை காண தேவையற்றவனாயினும்.. தனக்குள் எழுந்த வினாக்களோடு.. உலக மனித நடத்தைக் கோலங்களின் மாற்றங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதவனாய்.. தன் வேலையிடம் நோக்கிப் போகிறான் அவன். வினாக்களுக்கோ விடையில்லாமலே தன்னைச் சுற்றிய உலகத்தில் நடப்பவற்றை எல்லாம் நொந்தபடி...!
-
கண்ணீர்க் கோலம்.
தடம்புரண்டோடும் மனித வாழ்வில் தடம்புரளா வண்டி போல் அவன் தடம்பற்றி ஓடும் வண்டி ஒன்றில் தபுதாரனற்ற ஒருத்தன் தவிப்பில் அவள் தவிர்க்க முடியாது தவித்த அவன் விழிகள் தத்தை அவள் தகிக்கும் வதனம் காண...... தண்ணீர் போல் கண்ணீர் தத்தளிக்கும் துளிகள் தரவரிசையாய் சரிகின்றன. தவிக்கிறது அவன் மனசு தரமறியாது தவிர்க்கிறது வார்த்தை உதிர்க்க.. தவிர்த்த விழிகள் தகர்ந்து போகின்றன தகரடப்பா போல் போனுக்கு தத்தை அவள் கண்ணீர் கோலம் தரவாகிறது தகவலாய் மறுமுனை தாவ தத்தையும் தேடுறாள் பட்சாதாபம்...! தகர்கிறது தண்ணீராய் ஓடிய அவள் கன்ன அருவியில் தகரும் அவள் வதனப் பூச்சொடு தத்தை மேல் வைத்த காருணியம். தவித்தே போகிறது அவன் மனம் தரணியில் மனிதக் கோலங்கள் கண்டே...!
-
உடலிற்கு வலிமையை தரும் கஞ்சாவை சட்டமாக்குங்கள் : அரசிடம் தேரர் வலியுறுத்து
இப்ப விளங்குது.. தேரர்களின் உடல் வலிமையை எப்படி இருக்கென்னு. பாவம் புத்தருக்கு இது விளங்கேல்ல.
-
லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
நல்ல காலம் கடலுக்க இறங்காமல் விட்டிச்சே.. சொறீலங்காவின் தட்டுவண்டி.
-
தமிழ் மக்களின் பிரச்சினைகள் சரியான முறையில் கையாளப்படவில்லை – அமைச்சர் டக்ளஸ்
அப்ப.. மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி.. ஓஓஒ.. அது புலிகள் இருக்கும் வரை தங்களின் கோசமோ..?! தாடியருக்கு அறளை பெயர்ந்துவிட்டது. எனியாவது.. ஒட்டுக்குழு அரசியலில் இருந்தும்.. ரவுடித் தனத்தில் இருந்தும் விடைபெற்றுக் கொள்வது சிறப்பு. ஏனெனில்.. தாங்கள் கடந்து வந்த தங்களால் நிறைந்த.. சொந்த இனத்தின்.. இரத்தக்கறை படிந்த பக்கங்களை அறிந்த மக்கள் பலர் இன்னும் வாழ்கிறார்கள்.. தாடியர்.
-
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.
இதைக் கூட தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழக திராவிட ஆட்சியாளர்களும் செய்யவில்லை.. நாம் தந்தை நாடு என்று சொல்லிக் கொண்டு இன்று வரை ஏதோ ஒரு வகையில் தாங்கி நிற்கும் ஹிந்தியாவும் செய்யவில்லையே..???! நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும்... அது இன்று வரை தொடர்கின்ற நிலையிலும்..!!
-
யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்.
அன்னை பூபதி அம்மாவுக்கு நினைவஞ்சலிகள்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
சொறீலங்கா அரசாங்கமே அப்படித்தானே இயங்குது. உதாரணத்துக்கு பேராதனை தாவரவியற் பூங்காவுக்கு உள்நுழைய வெளிநாட்டு பாஸ்போட் காரரிடம் 3000 ரூபா என்றால் உள்ளூர் ஆக்களுக்கு 200 ரூபா. அரசாங்கமே அப்படி இருக்கும் போது உள்ளூர் வியாபாரிகள்..???? Peradeniya Royal Botanical Garden – Kandy Entrance Ticket Fee -2022 Bellow, all the ticket prices have been updated on 10th September 2022. Peradeniya botanical garden has different ticket prices for local, and foreign travelers. No discount for travelers from SAARC countries. Per person entrance tickets for foreign travelers There is no discount for travelers from SAARC countries. Foreign adults (Age 12 years and above 12 years): 3000LKR (9US$) School children & university students (Upon producing satisfactory proof of the same to the curator of the Botanical garden) : 1200LKR (3.5US$) Foreign children (Age 5 years and between 5 years to 12 years): 1500LKR (5US$) Foreign infant and toddler (Bellow 5 years): Free entry Per Person entrance ticket price for local travelers Local adults (Age 12 years and above 12 years): 200LKR Local children (Age 5 years and between 5 years to 12 years): 30LKR Local infant and toddler (Bellow 5 years): Free entry Local Adults over the age of sixty (60) on producing national identity card: 20LKR
-
யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு!
எந்த நாட்டில் தான் வைத்திய தவறுகளால் உயிரிழப்பு இல்லை...??! இப்போ வைத்தியரிடம் நல்ல கவனிப்பை பெறனும் என்றால்.. கையில காசிருக்கனுன்ன நிலை ஊரில். வைத்தியத்துறை சேவை என்ற நிலை மாறி வருவாய்க்கான வியாபாரம் ஆகிவிட்டது.
-
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெட்ரோல் நெருக்கடி ஏற்படும் அபாயம்
ஈரானில் இருந்து ஹிந்தியா குழாய் வழியாக எண்ணை கொண்டு வருகுது. சொறீலங்கா எரிபொருள் விற்பனையில்.. ஹிந்தியாவை உள்ளிளுத்து விட்டாச்சு. பிறகேன்..விலை உயர்வு..??! ஈரான் - இஸ்ரேல் தகராறில் இழந்த அமெரிக்க டொலர்களை சரிக்கட்ட அமெரிக்க வளைகுடா கூட்டாளிகள்.. விலையை கூட்டி இருப்பாங்கள்.
-
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
அமெரிக்கா இஸ்ரேல் பிரிட்டன்.. மேற்கு ஐரோப்பா.. சண்டித்தனத்தில் நம்பிக்கை வைப்பது அதிகரித்து விட்டது. மேலும் அமெரிக்காவின் எதேச்சதிகார.. ஏகாதபத்தியம் தலைவிரித்தாடுவதும் அதிகரித்துவிட்டது. ஐநா வை கூட இஸ்ரேல்.. உக்ரைன் செவிமடுக்காத அளவிற்கு அமெரிக்காவின் செல்வாக்கு கூடி இருப்பது மொத்த உலகிற்கும் அதன் நலனிற்கும் நல்லதல்ல.
-
கொழும்பில் போதைப் பொருளுடன் இலங்கையின் கடற்படை உறுப்பினர்கள் கைது
இது முதற்தடவை அல்ல. சிங்கள முப்படை.. உளவுப்படை.. பொலிஸ்படை.. அரசியல்படை.. இவற்றின் ஒத்துழைப்பு இல்லாமல்.. சொறீலங்காவில்.. ஒரு ஊசி வியாபாரம் கூட செய்ய முடியாது. இந்த நிலையில்.. இவ்வளவு கோடிகள் புரளும் போதைவஸ்து வியாபாரம் மட்டும் நடந்திடுமா என்ன.
-
யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!
இது விடயத்தில்.. எங்கள் கருத்தையே சூழலியலாளரும் அரசியல்வாதியும் எங்கள் முன்னாள் ஆசிரியருமான ஐங்கரநேசனும் கொண்டிருக்கிறார். எதுக்கும் தாடியருக்கு உறைக்கச் சொல்லுங்கள்.
-
செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்
எங்கள் கருத்தையே ஐங்கரநேசனும் கொண்டிருக்கிறார். எதுக்கும் தாடியருக்கு உறைக்கச் சொல்லுங்கள்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
ஊழல்.. வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு.. ரவுடிசம்.. போலி வாக்குறுதிகள்.. பணப்பட்டுவாடா.. வெகுமதிகள்.. எதிர்கட்சி சின்னங்களை பறித்தல்.. வாக்கு இயந்திரத்தில் மோசடி.. வாக்காளர் நிரலில் மோசடி.. சொந்தக் கொள்கைகளை முன்னிறுத்தாது.. எதிர்கட்சிகளை வசைபாடும் பிரச்சாரங்கள்.. போலிக் கூட்டணிகள்.. என்று சனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் ஹிந்திய தேர்தல்களில் எந்த சனநாயகத்தன்மையும் இல்லை... என்ற அடிப்படையில்.. அதனை அங்கீகரிக்கும் விதமான இப்போட்டிகளில் ஈடுபடும் எண்ணமில்லை. அதுசரி.. வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி தேர்தல் வைக்கினம்.. அதையேன் நாடு பூரா ஒரே நாளில் வைச்சு அடுத்த நாளே முடிவுகளை வெளியிட முடியாது. சன நாயகம் பிறந்த அமெரிக்காவில் கூட.. தேர்தல் நடந்து மாதங்கள் ஆன பின் முடிவு அறிவிப்பு என்பது இல்லையே. முடிவுகளை மாதக்கணக்கிற்கு இழுத்தடிப்பது.. மோசடிகளுக்கு இன்னும் கூடிய சந்தர்ப்பம் அளிக்கும். தெரிவுக்கு நன்றி கோசான்.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம்.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அதேவேளை பிபிசியின் கணிப்பில் இதே 3.3 பில்லியன் மொத்தமாக. இஸ்ரேல்.. அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் மொத்தமாக செலவு செய்தது.. இந்த தாக்குதலுக்கு எதிராக.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
3.3 மில்லியன் அல்ல.. 3.3 பில்லியன்.. அமெரிக்க டொலர்... சொலவாகியுள்ளது.. ஈரானின் வான்வழி ஏவு கலன்களை அழிக்க.