Everything posted by nedukkalapoovan
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
சிரியாவுக்குள் ஈரானிய தூதரகத்தை தாக்கியது மிகவும் மோசமான இஸ்ரேலின் சர்வதேச பயங்கரவாதமாகும். இதனை யதார்த்தமாக சர்வதேசம் கண்டித்திருக்க வேண்டும்..! ஆனால் இஸ்ரேலும் அதன் அமெரிக்க மேற்குலக அடிவருடிகளும் செய்தியை வெளியிடுவதோடு அடங்கிவிட்டார்கள். இரண்டாம் உலகப் போர் கூட ஒரு தூதரக அதிகாரியின் கொலையுடனே தான் ஆரம்பமானது... என்ன தான் பல உள் காரணிகள் இருப்பினும். இஸ்ரேலின் எல்லை தாண்டிய உலக பயங்கரவாதத்தை நிறுத்தாத வரை.. இஸ்லாமிய மதப் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது கடினம். ஈரான் என்ற சுயாதிபத்திய நாட்டின் தூதரகத்தை தாக்கி அதன் அதிகாரிகளை கொலை செய்த இஸ்ரேலின் பயங்கரவாதம் சர்வதேச நீதியின் பால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக.. ஈரானின் பலவீனமான பதில் தாக்குதலால் அல்ல என்பதுவே எங்கள் கணிப்பு.
-
யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!
இவருக்கு வாக்கு போடும் தீவகத்திற்கு.. ஏன் ஒரு திட்டமும் போகுதில்லை..??! மண்டைதீவு.. அல்லைப்பிட்டி.. வேலணை.. அல்லது ஊர்காவற்துறை போன்ற இடங்களில் மைதானம் அமைந்தால்.. ஊரவர்களுக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும்.. உல்லாசப் பயணமும் பெருகும்.. பின்ந்தகிய பிரதேசமாகவே இருக்கும்..தீவகம் முன்னேற வாய்ப்பும் அமையும். மேலும் மைதானம் அமைவதற்கான தரைத்தோற்ற நிலைமைகளும் அங்கு அதிகம். சகதிக்குள் மைதானம் அமைக்க முனைந்து கமிசன் அடிக்க நினைப்பதிலும்.
-
யாழ். நகரின் தூய்மை குறித்து அவதானம் : கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்
இவர் தன்னை ஒரு ரவுடிகளின் ஏக தலைவர் என்ற நிலையில் வைச்சிருக்கப் பார்க்கிறரோ..?! இவரின் அமைச்சு கடற்தொழில். இவர் பார்க்கிற வேலைகள்.. மாநகரின் வேலை.. விளையாட்டுத்துறையின் வேலை.. நீர் முகாமைத்துவத்தின் வேலை.. கல்வி அமைச்சின்/திணைக்களத்தின் வேலை.. இவர் தான் ஒரு அசகாயசூரன் என்ற நினைப்பில் இப்பவும் இருக்கிறார்.. இந்த நினைப்பு தான் வடமாகாணத்தில் தீவகம் மிகவும் பிந்தங்கிய பிரதேசமாக இருக்க முக்கிய காரணம். தனக்கு வாக்குப் போட்ட மக்களின் அடிப்படை தேவைகளை கூட.. பூர்த்தி செய்ய முடியவில்லை. யாழ் - ஊர்காவற்றுறை 779 பேரூந்துச் சாலை இன்னும் முழுமையடையவில்லை. இச்சாலையில் தான் பிரதான திணைக்களங்களும் பள்ளிகளும் அரச தனியார் மற்றும் விவசாயிகளும் தமது தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்கின்றனர். அந்த வீதி இன்று வரை முழுமை அடையாமக்கு.. காரணம்.. இவருக்கு சரியான கமிசன் கொடுக்கக் கூடிய கொத்தராக்கர் வராமையாம். தீவகத்தில் இருக்கும் பல பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. குறிப்பாக தொலைபேசி வசதி இல்லை. ஒலிபெருக்கி.. ஒலி வாங்கி வசதி இல்லை.. சரியான தொடர் குடிநீர் விநியோகம் இல்லை.. மதிய உணவு கூட இல்லை. காலையில் உணவருந்தாமல்.. 10 க்கு குறைந்தது 5 பிள்ளைகள் பள்ளிக்கு வருகிறார்கள். இவரின் வாக்கு வங்கிக்கான களமாக இருக்கும் தீவகம் கூட இவரால்... முன்னேற்றம் அடைய முடியவில்லை.. இவர் யாழ் நகரை துப்பரவாக்குவாராம். சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பாராம். தீவகம் சர்வதேச கிரிக்கெட் மற்றும் விமான நிலையத்திற்கு தகுந்த இடம். உல்லாசப் பயணிகளை கவரக் கூடிய இடம். இருந்தும் ஒரு திட்டமும் அங்கு இல்லை. பெரும் கூச்சலில் ஆரம்பித்த.. வேலணை நகரத்திட்டத்தை.. வங்களாவடிச் சந்தியில் போய் பார்த்தால் தெரியும். இவர் ஆரம்பித்த எதுவுமே.. உருப்படியாக இல்லை. கமிசனை.. வாங்கி பொக்கட்டிக்குள் போட்டதோடு.. சில நாலு தாடிக்காரர்களை கூட்டிக் கொண்டு.. ஊடகக் கமராக்களுக்கு ஓசி விளம்பரம் கொடுப்பதே இவரின் இப்போதைய பணியாக இருக்கிறது. உருப்படியில்லாத தமிழ் தேசியக் கட்சிகளின் நடவடிக்கையால்.. இவரின் தில்லு முல்லு அரசியல் இன்னும்.. நீடித்து நிலைக்கிறது. இவர் உண்மையில் சிங்கள பேரினவாத அரச ஏஜெனட்.. அதாவது ஒற்றர். அதையே அவர் அன்றில் இருந்து இன்று வரை செய்கிறார்.
-
'கடவுளின் துகள்' விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்... மனித வரலாற்றில் முக்கியமானவர் - ஏன்?
பீட்டர் ஹிக்ஸூக்கு இரங்கல்கள். ஹிக்ஸ் போசான் என்பது துகள் அல்ல அலை - புலக் கூறு.. எங்கிறார்கள் விஞ்ஞானிகள்.. ஏனெனில்.. இதற்கு இருப்பது புறக்கணிக்கத்தக்க திணிவு. மேலும் ஹிக்ஸ் அலை- புலக்கூறுகள்.. மிகக் குறுகிய காலமே அவதானிக்கப்பட்டுள்ளன... அவை உருவாகிய மாத்திரத்திலேயே.. தாமாகவே பிரிந்து வேறு கூறுகளாகி விடுகின்றனவாம். அதனால்.. ஹிக்ஸ் அலை- புலக்கூறுகள்.. திணிவாகத்திற்கான.. கடவுளின் கூறு என்பதற்கான வாதம் பொய்த்துப் போய்விட்டது. ஆனால் ஹிக்ஸ் அலை-புலக்கூறுகள்.. வேறு போசான்கள்.. மற்றும் லப்ரன்களுடன் இடைதாக்கம் செய்து.. திணிவை உருவாக்கு உதவுவாதகச் சொல்லப்படுகிறது. இப்போ.. பேய்க் கூறுகளை (ghost particles) தேட வெளிக்கிட்டிருக்கிறார்கள். ஏனெனில்.. ஹிக்ஸ் உருவாகி பிரிந்து வேறு ஏதோ கூறுகளாகிச் செல்கிறது. அதென்ன கூறுகள் என்பது அடுத்த வினா..???! நாம் உருவாக்கியுள்ள சென்சர்களால் கண்டறியப்படக் கூடிய கூறுகள் அல்லாதவையாகக் கூட இருக்காலம். எதுஎப்படியோ.. ஹிக்ஸ் 1960களில்.. தன் சிந்தனையில் கண்டதை.. சுவிஸ் ஜெனிவா.. சேர்ன் ஆய்வுகூடம் நிஜயத்தில் அவதானித்ததாகச் சொல்லப்படுகிறது. What is the Higgs boson? In our current description of Nature, every particle is a wave in a field. The most familiar example of this is light: light is simultaneously a wave in the electromagnetic field and a stream of particles called photons. In the Higgs boson's case, the field came first. The Higgs field was proposed in 1964 as a new kind of field that fills the entire Universe and gives mass to all elementary particles. The Higgs boson is a wave in that field. Its discovery confirms the existence of the Higgs field. https://home.cern/science/physics/higgs-boson
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை விடுத்து.. சர்வதேச எல்லைகளை மதிக்காமல் ஊடுருவித் தாக்கும்.. இஸ்ரேலில வான்படை விமானங்களை சுட்டு வீழ்த்தலாமே. அதுக்கு வக்கில்ல... சும்மா வாயளவில் தான்.
-
பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும்
புலி எதிர்ப்பு வாந்தி.. பிரபாகரன் வசைபாடல் எல்லாம் இப்ப புலம்பெயர் சும்மா இருப்பவர்கள்.. இலக்கியமாகி விட்டன. இவை 2009 மே முன் வேற மொழி பேசிச்சினம்.. மாற்றுக்கருத்து அரசியல்.. அதுக்கு என்னாச்சுப்பா. அதுவும் புலிகளோடு அழிஞ்சு போச்சுப் போல. இப்ப புலி எதிர்ப்பை இலக்கியமாக்கிட்டாங்கள்... வசதியாக தாம் சில கூடி வசைபாடி மகிழ.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
பொதுவெளியில் இந்தப் பெண் பேசும் வார்த்தைகள் சகித்துக் கொள்ளக் கூடியவை அல்ல. சிறுவர்களும் இதனை கேட்க முடியும். அந்த வகையில் இவரின் காணொளிகளுக்கு எதிராக முறைப்பாடுகளை செய்வதன் மூலம்.. இவரின் அநாகரிகத்துக்கு முடிவுகட்டலாம். இவர்கள் எப்பவும் நீடித்து நிலைக்கப் போவதில்லை. இப்படி சிலது காலத்துக்கு காலம் வந்து போயிடுங்கள். அதுகளை காலமே தண்டிக்கும். உணர்ச்சி வசப்பட்டு இவர்களை தண்டிக்க சட்டத்தை கையில் எடுத்து பிரான்ஸ் காவல்துறையின் அடாவடிக்கு இலக்காவதில் இருந்து இளைஞர்கள் புத்திசாதுரியுமாக விலகி இருந்து கொள்வதே சிறப்பு.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
தமிழினப் படுகொலையில் ஹிந்தியாவின் கூட்டுப்பங்களிப்பை ரசித்து உருசித்த சிங்களம்.. இப்போ தம் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுந்தவுடன்.. அதில் இருந்து தம்மை தற்காக்க ஹிந்தியாவை காட்டிக்கொடுக்கின்றனர். எவருக்காக எல்லாம் ஹிந்தியா தமிழினத்தை அழித்ததோ.. அவர்களால்.. ஹிந்தியா நிச்சயம் ஏமாற்றப்பட்டு.. சீனா அதன் அருகில் நிறுத்தப்படும் கால வெகு விரைவில் உருவாகும். இது இந்திராவுக்குப் பின்னான ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களின் மிகப்பெரிய ராஜதந்திரத் தோல்வி ஆகும்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம்.
-
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!
அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான். அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது. இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை. அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச். ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன.
- s1.jpg
- s2.jpg
- s3.jpg
- s5.jpg
- s4.jpg
-
அடேங்கப்பா😲 | யாழில் குவிந்த அழகிகள்💃 | Jaffna Bridal Show | Ks Shankar | Sri Lanka
அழகிகள் அழகா இல்லை.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள். வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார். தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு. அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது. பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல. கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை. ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல. அண்ணரும் சாட்சி. மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம். உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட. இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம். இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ.
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
ISIS அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அமைப்பு.. சிரியாவின் ஆசாத் அரசுக்கு எதிராக என்பதை சாதாரண பள்ளிக் குழந்தைகள் கூட அறியும். யாழ் கள புட்டின் எதிர்ப்பாளர்கள் அறியாதது போல இருப்பது அவர்களின் பலவீனம். ஐ எஸ் ஐ எஸின் பிற்காலப் போக்கறிந்து.. அதற்குப் போட்டியாக அமெரிக்கா இதர குழுக்களை ஊக்குவிக்க முயன்றமையால் வெடித்தது ஐ எஸ் ஐ எஸ் - அமெரிக்க + மேற்குலக அடிபாடு. இப்போ.. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் கடும் இஸ்லாமிய மதவாதப் பயங்கரவாத நிலைப்பாட்டு தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில்..சிரிய அரசுக்கு ஆதரவான ரஷ்சியாவின் தாக்குதலாலும்.. ஈரானின் தாக்குதலாலும் கூட.. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் எஞ்சியுள்ள அமெரிக்க சி ஐ ஏ விசுவாசிகளை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் உக்ரைனும் ரஷ்சியாவுக்குள் ஊடுருவித் தாக்க பயன்படுத்தி இருக்கலாம். அதற்கான சாத்தியம் 100 க்கு 200% சதவீதம் உண்டு. ஏலவே... ரஷ்சிய எல்லைகளில் பல ஊடுருவிகளை செய்து தோற்றுப் போனது அமெரிக்க உக்ரைன் கும்பல். ரஷ்சிய சகபாடி.. ஆயுதக் குழுவையும் புட்டினுக்கு எதிராக திசை திருப்ப முனைந்து அந்த அமைப்பின் தலைவரும் வலது கையும் விமான விபத்தில் போய் சேர்ந்துவிட்ட பின்னர்.. அமெரிக்காவுக்கு.. சி ஐ ஏ யின் நம்பகத்தன்மைக்கு.. இப்போ... ஐ எஸ் ஐ எஸ் பயன்பட்டிருக்கலாம். இதன் பின்னணியில்.. இஸ்ரேலும் கூட்டிணைந்து இயக்கி இருக்க வாய்ப்புள்ளது. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு ரஷ்சியாவுக்குள் ஊடுருவது அவ்வளவு கடினமல்ல. ஏலவே அவர்கள் ரஷ்சியாவின் பரந்த எல்லைகளின் ஊடாக ஊடுருவி மேற்கு நாடுகளில் இருந்து துருக்கி வழியாக.. சிரியா .. இஸ்ரேலை கடந்தவர்கள் தான். இப்போ.. சி ஐ ஏ... மொசாட்.. உக்ரைன் உளவு அமைப்பு கூட்டினைந்து மேற்குலக ஆதரவோடு இத்தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கவே சாத்தியமுள்ளது. மேலும்.. இதனை திசை திருப்பும் நோக்கில் அமெரிக்கா சில எச்சரிக்கைகளை ரஷ்சியாவுக்கு வழங்கி இருந்தாலும்.. உக்ரைன்.. பெலருஸ் வழியாக தாக்குதலாளிகளை வழிநடத்தி மொஸ்கோ வரை நகர்த்துவது உக்ரைனுக்கோ.. அமெரிக்காவுக்கோ கடினமல்ல. எதுஎப்படியோ.. பலமான எதிரிகள் பல மார்க்கங்களையும் கையாண்டு ரஷ்சியாவை தாக்குவார்கள் என்பதை ரஷ்சிய உளவு அமைப்புகளும் பாதுகாப்பு அமைப்புக்களும் புட்டினின் ஆலோசர்களும்.. அறியாமல் இருந்தது.. அல்லது அமெரிக்க மேற்கு நாட்டு சவால்களை எளிதாக எடுத்துக் கொண்டது.. இத்தாக்குதல் மூலம் ரஷ்சியாவுக்கு நல்ல பாடத்தைப் புகட்டி இருக்கும். ரஷ்சியாவின் பல இழப்புக்கள்.. அதன் உளவுத்துறை.. செயற்பாட்டுத் துறையின் வினைத்திறனற்ற தன்மையால் நிகழ்வதோடு.. அந்த அமைப்பு.. இலகுவில்.. விலைக்கு வாங்கக் கூடிய அமைப்பாக இருப்பது புட்டினுக்கு சவாலாகவே இருக்கும். புட்டின் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கனும். உக்ரைனின் ரஷ்சியாவுக்குள் அமையும் எல்லாத் தாக்குதல்களுக்கும்.. ரஷ்சிய உளவு அமைப்புக்களும்.. பாதுகாப்பு அமைப்புக்களும்.. புட்டின் ஆலோசர்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்களே. ஏனெனில்.. அவர்களின் செயற்பாட்டுத் தோல்வி அல்லது பலவீனமே இப்படியான நிகழ்வுகள்.. ரஷ்சிய எல்லைக்குள் ஊடுருவித் தாக்குதல்.. மற்றும் ரோன் தாக்குதல்கள் தொடர முக்கிய காரணமாகும். புட்டின் இது விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தாவிடில்.. ரஷ்சியா மேலும் பல இழப்புக்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக.. அமெரிக்க.. இஸ்ரேல்.. மேற்குலக பின்புலத்தில் இயங்கும் மத அடிப்படைவாதக் குழுக்கள் குறித்து ரஷ்சியா மிகுந்த அக்கறை கொள்வது அவசியம். உக்ரைன் இவர்களை தனது தேவைக்கு பயன்படுத்தும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. அதை எதிர்பார்க்காதது ரஷ்சியாவின் தவறே ஆகும்.
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
ரஷ்சியா இப்படியான பெரும் மனிதப் படுகொலைகளை காண்பது இது முதற்தடவை அல்ல. எகிப்துக்கு மேல் வைச்சு ரஷ்சிய விமானம் குண்டு வைச்சு தகர்க்கப்பட்டு 200 மேல் மக்கள் கொல்லப்பட்ட பின் நடக்கும் பெரும் சம்பவம் இது. இது இஸ்லாமிய தீவிரவாதம் என்றால்.. இது மேற்குலகை அடைய அதிக காலம் எடுக்காது. இப்படித்தான் கடாபிக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்காவால் பயிற்சி அளித்தவன் தான்.. இங்கிலாந்தில் மாஜ்சட்டரில்.. இதே மாதிரியான நிகழ்வில் குண்டு தாக்குதல் நடத்தி 22 பேரைக் கொன்றான். இஸ்லாமிய பயங்கரவாத்தை விலைக்கு வாங்கி உக்ரைன் ஆயுதமும் ஒத்துழைப்பும் ஊடுருவலும் வழங்கி இதனை நடத்தி இருக்கவும் வாய்ப்புள்ளது. அல்லது உக்ரைனே நடத்தி விட்டு இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீது பழிபோட்டும் இருக்கலாம். இதனால் ரஷ்சிய - இஸ்லாமிய உலக உறவை சிதைப்பதுவும் நோக்கமாக இருக்கலாம். எதுஎப்படியோ.. உயிரிழந்த அப்பாவி ரஷ்சிய மக்களுக்கு அஞ்சலிகள்.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
கடந்த இரண்டு உலக யுத்தத்திலும் ஜேர்மனி - இத்தாலி - ஜப்பான்.. இவை எதிரிகளாகவும்.. அமெரிக்காவும் மிச்ச மேற்கும்.. நேச நாடுகளாகவும் இருந்தன. ரஷ்சியா அப்பவும் தனியாத்தான் சண்டை போட்டது. ஆனால் 3ம் உலகப் போரின் பரிமானம் வேறுபட்டதாக இருக்கும். ரஷ்சியாவோடு.. நேரடியாக நேட்டோ மோதினால்.. ரஷ்சியா.. கிழக்கு ஜேர்மனியில் நிற்காது.. பிரிட்டனிலும்.. அலஸ்கா வழியாக நியுயோர்க்கிலும் நிற்கும். ஏனெனில்.. கடந்த இரண்டு உலகப் போரின் போதும் அமெரிக்கா ரஷ்சியாவை எதிர்த்து சண்டை செய்யவில்லை. ஜேர்மனி தான் செய்தது. புட்டின் ஒரு உலகப் போருக்கு தானாகப் போகும் அளவுக்கு புத்திசாலித்தனமற்றவரல்ல.. ஆனால் போர் திணிக்கப்பட்டால் எதிர்கொள்வார். தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் புட்டினுக்கு வாழ்த்துக்கள். ரஷ்சியாவின் பொருண்மிய வளர்ச்சி.. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இவைகளே.. எதிரிகளுக்கு சரியான அடியாக இருக்கும். அதனை நோக்கி புட்டின் செயற்படுவார் என்று எதிர்பார்க்கலாம். சுவீடனும்.. பின்லாந்தும் ஏலவே அமெரிக்காவின் வால் தான். அது ஏலவே நேட்டோ ஆயுதங்களை தான் வைச்சிருக்கின்றன. இப்போ வெறும் பேப்பர்களில் கையெழுத்து போட்டிருக்கினம்..! அவ்வளவே. ஏலவே அவை நேட்டோ ஒத்துழைப்பு நாடுகள் தான்.
-
கோட்டாவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டாவின் வீட்டில் இருந்தார்! - முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார
முழுத் இனத்துவேசிகளை தான் கோத்தா அந்தரங்கச் செயலாளராக வைச்சிருந்திருக்கிறார் என்பதற்கு இவர் சாட்சி.