Everything posted by நிலாமதி
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
யாருடைய செல்லப்பிள்ளை ? 😃
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
மூன்றும் குழந்தைகள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கஞ்சியோ கூளோ,கத்தியோ கடப்பாரையோ,கறுப்போ வெள்ளையோ.... குமாரசாமி ஆகிய நான் நான்காம் இடத்தில் நின்று கர்ஜிப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.🤣 நலம் பெற்று களம் வந்ததில் மகிழ்ச்சி போட்டியை வழமை போல் தொடர்ந்து நடாத்தும் கிருபனுக்கு மீண்டும் நன்றிகள். முதல் மூன்று இடங்களை பிடித்த புலவர், நீர்வேலியான், நியாயம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். உற்சாகத்துடன் பங்கு பற்றிய அனைவரும் ஐபிஎல் போட்டியில் சந்தி ப்போம்
-
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
இந்தக் கதையின் சாயல் சற்று முன்னைய காலமாக இருக்கலாம். இப்போது சற்று விழித்து விடடார்கள் பெண்கள். முகம் தெரியாத அறிமுகம் இல்லாத பழகாத ஆண்களை நம்பி கழுத்தைக் கொடுக்க தயாரில்லை.
-
தன் உயிரை மாய்க்க முயன்ற பிரபல பாடகி கல்பனா! கணவரை கைது செய்த பொலிஸார்
- இரசித்த.... புகைப்படங்கள்.
ஒரு பழமொழி சொல்வார்கள் " பேய்க்கு வாழ்க்கைப்படடால் புளிய மரத்தில் ஏறு " என்றாலும் ஏறவேண்டுமாம். இது கமராக் காரனின் விளையாட்டு . அதுகளும் புத்தி கெட்டுப்போய் ... இது தான் ட்ரெண்டிங் ?- தன் உயிரை மாய்க்க முயன்ற பிரபல பாடகி கல்பனா! கணவரை கைது செய்த பொலிஸார்
நல்லதொரு திறமை மிக்க பாடகி . அமைந்த வாழ்கை சரியில்லைபோலும். நிறைய பிரச்சினைகளை சந்தித்து விட்டார். மகள் வந்து சாடசி சொல்கிறார் . அப்படி ஒன்றுமில்லை என , யாரையோ காப்பற்ற முயல்கிறார் போலும். .- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்திருந்த @சுவைப்பிரியன் க்கு மாத்திரம் மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது.- இரசித்த.... புகைப்படங்கள்.
இலையான் இரையாகிறது ....- சிரிக்கவும் சிந்திக்கவும் .
இதிலிருந்து என்ன தெரிகிறது எந்த வகை பாத்திரமானாலும் உணவு வெந்தால் சரி ....பசிவந்தால் பண்டமென்ன பாத்திரமென்ன ?- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ் கள விளையாட்டு போட்டி எதிர்வு கூறலில் முன்னணியில் நிற்பவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.- 14ஆவது முறையாக தந்தையானர் எலான் மஸ்க்!
ஐந்து பெண்களுக்கு வாழ்க்கை( பராமரிப்பு ) கொடுத்து 14 குடிமக்களை உலகிற்கு தந்த மனிதரை பாராடட தானே வேண்டும். நம்ம நாட்டில் ஒருத்திக்கு வாழ்கை கொடுத்து 14 க்குமேல் பெற்றும் இருக்கிறார்கள் விண்ணர்கள். 😃- பூனைகளின் பேச்சுவார்த்தை
சுண்டெலி தற்போதைக்கு சாமர்த்தியமாக தப்பி விட்ட்து. அநியாய பூனை இனி என்ன செய்யுமோ ? பூனைகளுக்கு எங்கு போனாலும் கபட புத்தி தான்.- அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’; விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர் - ட்ரம்ப் அறிவிப்பு
இவ்வளவு மில்லியனைக் கொட்டி வருவதற்கு அமெரிக்காவில் என்ன இருக்கிறது ?- உடல் நலப் பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி
பாப்பரசர் ,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் இருப்பவர் .எனவே இறுதி நிகழ்வுகள் பெரும் ஆயத்தங்களுடன்தான் தொடங்கும்.அதற்காக முற்கூட்டியே திடடமிடுகிறார்கள் என எண்ணுகிறேன்.- அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’; விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர் - ட்ரம்ப் அறிவிப்பு
புதிதாக பதவி ஏற்றவர் "காசு "விடயத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.விற்பனை முகவராய் இருந்தவருக்கு "காசு" தானே குறி ...- யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
இந்த வருடத்துக்கான முதற்பரிசு பெற்ற ஜோக்.😄- விதியற்றவர்
நல்லதொரு கதையுடன் நீண்டநாட்களுக்குப்பின் வந்துள்ளீர்கள். நன்றி அதிகமானவர்களின் கதை இப்படியாகத்தான் இருக்கிறது. அவர்களிடம் நாம் பாடம் படிக்க வேண்டியிருக்கிறது.- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
கறிவேப்பிலை யில் இரும்புச்சத்து உண்டு ..வளர்ச்சிக்குஉதவும். தலைக்கு வைக்கும் எண்ணையில் கறிவேப்பிலைகள் தூளாக்கி போட்டு போட்டு (ஒருசொட்டும் தண்ணீர் இல்லாமல்) காய்ச்சி தலைக்கு தடவினால் முடிவளர்ச்சி கூடும்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும் தமிழ் சிறிக்கு, உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ❣️- கைவிலங்குகள்
நீ எதற்காக நிமிர்ந்து நிற்கின்றாய் உன் வாள்கள் ஏன் உயருகின்றன உன்னை அடக்க வருபவர்களுடன் உன்னால் சேர்ந்து வாழ முடியாதா............... நீ அடக்கி ஒடுக்கி நசுக்க முனைந்ததனால் தானே நான் வாளுடன் நிமிர்ந்தேன் . நீ வலிமை மிக்கவன் என்றால் நான் வீரம் , மானம் ரோஷம் மிக்கவன். உன் அடடூழியங்ககளினால் தானே நான் பொங்கியெழுந்தேன். இன்னும் மறந்து விடவில்லை ஆழ்மனதில் கனன்று கொண்டிருக்கிறது .ஒரு நாள் சுபமாய் முடியும். .- சும்மா ஒர் பதிவு
அன்று சிரமதானம் மூலம் கோவில்களில் பாடசாலைகளில் துப்புரவு செய்தோம் . இன்று வெளிநாட்டு காசில் சுகபோகமாக வாழ்ந்து பழகி விடடார்கள் .எல்லாவற்றுக்கும் வெளிநாட்டு காசு வேண்டும். அது சிலரது பொக்கற்றுக்கு போவது வேறு கதை.- நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் ஏமாற்றிவிட்டார்.. விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு
போட்டதே எல்லோரும் ஓடிவந்துபார்க்க வேண்டும் என்பதற்காக தானே- மாற்றங்கள்
யாழ்களத்தில் சில விரும்பக்கூடிய மாற்றங்கள் கண்டு மிக்கமகிழ்ச்சி . மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி- கனடாவும் கண்டறியாத சினோவும். ....
டிங் டிங்....... சிறீ : சாமி அண்ணோய் என்ன சங்கதி நாரியை பிடிச்சு கொண்டு நடக்கிறியள் சாமி : இருந்தா எழும்பே லாமல் கிடக்கு ...ஐயோ ....வந்தனெண்டா .எனக்கு வர கோவத்துக்கு ...உனக்கு பகிடியாய் இருக்கு . சிறீ : ஏன் அண்ணா சினோ வழிச்சு களைச்சு போட்டீங்களா ? இந்தமுறை ஒரு நாளிலேயே கொட்டித்தள்ளி போட்டுது சாமி : பரிமளம் ! ....இவன் தம்பி ஸ்ரீ வந்திருக்கிறான் . கொஞ்சம்கோப்பி போட்டு தாறீரோ ? இவள் கம்ப்யூட்டர் ஐ விட்டு அசையமாடடாள் . ... சிறீ : அப்பவும் சொன்ன நான் பெரிய வாசல் (drive way ) இருக்கிற வீடு வாங்க தீங்க என்று ... பரிமளம் : என்ன தம்பி விசேஷம்.? இந்தாங்கோ காப்பி சாமி : இவள் தான் பெரிய வீடு வேணும் என் இன சனம் எல்லாம் வந்து சேர்ந்தால் ஒன்றாக இருக்கலாம் என்று. .சும்மா சொல்ல கூடாது எல்லோரையும் வரவேற்று (கொஞ்ச ரூம் காசு தந்தவைதான் ) PR (permanent residence ) கிடைச்ச உடனே பறந்திட்டுதுகள். ம் சிறீ : நான் வந்ததென்ன என்றால் ...சினோ வழிச்சு கைவிறைச்சுப்போட்டுது . உங்கட ..snow blower ஐ தாறீங்களோ ? இவள் வேலையால் வரமுன்னம் வழிச்சுப்போட்டு நான் வேலைக்கு இறங்கவேண்டும். சாமி : இன்னும் இரண்டு நாளுக்கு கொட்டுமாம் ...இந்தா வழிச்சுப்போட்டு உடன் கொண்டுவந்து தா...இவன் அமேரிக்கண்ட பிளேன் விழுந்து தலைகீழபோச்சுதாம் .சிறீ : ஓம் ஓம் கேள்விப்படட நான் சாமி : ம் ம் ஊரில் இருந்தா.... இந்த சினோவும் இல்லை வழியல் உம் இல்லை ...ச் சா கை விறைச்சு போச்சு... பெஞ்சன்(pension ) எடுத்தப்புறம் ஊரோடு போய் இருந்திடனும். காலத்துக்கேற்ற உரையாடல். (சாமியாரும் சிறீத்தம்பியும் மன்னிக்கவும். ) - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.