ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ரசோதரன்
-
யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்
வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதற்கே, அதன் ஊடாக அந்தப் பிரதேச மக்களின் வசதிகளை அதிகரிப்பதற்கே, தேசிய மயமாக்கம் என்று சொல்கின்றனர். இரண்டு நாட்களின் முன்னர் அமைச்சர் பந்துல குணவர்த்தனா இதைச் சொல்லியிருந்தார். இலங்கையில் இப்பொழுது இரண்டு தேசிய வைத்தியசாலைகள் மட்டுமே இருக்கின்றன, ஒன்று கொழும்பில் இரண்டாவது கண்டியில். மூன்றாவது கரப்பிட்டியாவில் வருகின்றது என்று அமைச்சர் சொல்லியிருந்தார், அவர் யாழ் என்று சொல்லவில்லை.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
ஈழப்பிரியனுடன் ஒரு பகிடி விடுவதற்காகவே அதை எழுதியிருந்தேன்.....மற்றபடி எந்தக் கடவுளும் எந்த நோயையும் கொடுப்பதில்லை .......👍...எங்கள் ஊரில் இப்படியான சில நோய்களை அம்மாளாச்சி கொடுப்பதாக சொல்வார்கள். ஓரு வெருட்டல் தான்....😀
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣......... பலம் எங்களுக்கு வரவில்லை........நாங்கள் தான் யானைக்கு பழம் கொடுத்தோம், அது சாப்பிட்டு விட்டு பலமாகவே நின்றது.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
அப்படியா.... நாங்கள் வெளிநாட்டவர் என்றபடியால் தான் தலைக்கு ஐயாயிரம் ரூபாய்கள் கட்டணம் வசூலிக்கின்றனர் என்று நினைத்திருந்தேன். யானைகள் பெரிதாகத்தான் இருக்கின்றன, அதற்காக கட்டணமும் இவ்வளவு பெரிதாக இருக்க வேண்டுமா.......... 😀.
-
தொடர்ந்து கைத்தட்டினால் என்னவாகும்?
👏...... நல்ல விகடமாக கைதட்டும் விடயத்தை பற்றி எழுதியிருக்கின்றார். சில இடங்களில்/நிகழ்வுகளில் அவர்கள் தட்டுகின்றார்களே, நாங்களும் ஒரு தட்டு தட்டி வைப்போம் என்று தட்டுவதும் உண்மை தான். பெரிய சங்கீத, நாட்டிய நிகழ்வுகளில் நிகழ்வு முடிந்ததாக எண்ணி, மகிழ்ந்து, இடையிலேயே கைதட்டி, பின்னர் மெலிதாக அசடு வழிந்தும் இருக்கின்றோம்.......😀
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣..... அங்கு எடுத்த வீடியோக்களை பார்க்க 'funny' ஆக இருக்கிறது என்று இப்பொழுது சொல்கின்றனர். அடங்கமாட்டார்கள் போல....போகும் ஒவ்வொரு தடவையும் தலைக்கு ஐயாயிரம் இதுக்கு எடுத்து வைக்க வேணுமோ தெரியல .........😀
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்பது - யானைக்கு தீனி ------------------------------------------------------------------------------------------------ கடைசியாக 90ம் ஆண்டுகளின் நடுப்பகுதிகளில் சில தடவைகள் தலதா மாளிகைக்கு போயிருக்கின்றேன். பின்னர் ஒரு இருபத்தி சொச்ச வருடங்களின் பின் ஒரு தடவை கண்டி போயிருந்தாலும் மாளிகைக்குள் போகவில்லை. இந்த தடவை குடும்பமே உடன் வந்ததால், உள்ளே போக வேண்டும் என்று முன்னரேயே தீர்மானித்திருந்தோம். 'இலங்கையில் பௌத்தம்' என்ற தலைப்பில் ஒரு சின்ன அறிமுக உரையையும் பிள்ளைகளுக்கு ஆற்றியிருந்தேன். இனிமேல் எதிர்காலத்தில் அவர்கள் இருவரும் எங்களுடன் சேர்ந்து எங்கேயும் வரா விட்டால், அதற்கான ஒரு பிரதான காரணம் இந்த பயணத்தில் நான் ஆற்றிய சின்ன சின்ன உரைகளாகவும் இருக்கக்கூடும். தலதா மாளிகையின் ஒரு பக்கம் இருந்தது உள்ளே போகும் வழி. முன்னர் நடுவில் இருக்கும் பாதையே உட் செல்லும் வழியாக இருந்தது. நடுவில் இருக்கும் பாதை போய் வருவதற்கென்றே ஒரு தலைவாசலுடன் கட்டப்பட்டும் இருந்தது. பாதுகாப்பு கருதி அதை தடை செய்து வைத்துள்ளார்கள் போல. நாங்கள் உள்ளே போக, அங்கு சோதனையில் நின்ற போலீஸ்காரர்கள் படபடவென்று சிங்களத்தில் சொன்னார்கள். அவர்கள் என்ன சொல்கின்றனர் என்று எனக்கு விளங்கியது. நல்ல நெற்றிப் பொட்டுடன் மனைவி முழித்துக் கொண்டு நின்றார். எது இடம் என்ற அவர்களின் ஒரு கேள்விக்கு மட்டும் நான் யாழ்ப்பாணம் என்று நல்ல தமிழில் பதில் சொன்னேன். மனைவி என்னவாம் என்று கேட்டார். நீங்களும், மகளும் உள்ளே போக முடியாதாம், நீங்கள் இருவரும் கை இல்லாத சட்டைகள் போட்டிருக்கின்றீர்களாம் என்றேன். கை உள்ள சட்டையைத் தேடி ஓடினோம். கண்டி நன்றாகத் தெரிந்த நகரம். எங்கே எந்தக் கடைகள் இருக்கின்றன என்று இன்னும் ஞாபகம் இருக்கின்றது. கடைக்காரர் இதற்கென்றே தயாராக இருந்தார், தலதாவின் உள்ளே போகும் முன் பலர் இந்தக் கடைக்குள்ளே முதல் ஓடிப் போவார்கள் ஆக்கும். எடுத்துப் பரப்பினார் கை உள்ள மேல் சட்டைகளை. இரண்டு வாங்கினோம். எட்டி என்னையும், மகனையும் கீழே பார்த்தார். அன்று அரைக் காற்சட்டை போடாமல், நாங்கள் இருவரும் நீட்டுக் காற்சட்டை போட்டிருந்ததால், கடைக்காரருக்கு அன்றைய வியாபாரம் கொஞ்சம் மந்தம் தான். அன்று மாளிகையின் உள்ளே சரியான கூட்டம். இப்பொழுது தினமும் இப்படித்தானா என்று தெரியவில்லை. பல வெளிநாட்டுப் பயணிகள் மேலேயும், கீழேயும் கலர் கலர் துணிகளை, துண்டுகளைச் சுற்றிக் கொண்டு வரிசைகளில் நின்றனர். உள்ளே ஒரு வரிசை இல்லை, பல வரிசைகள், ஆனால் எந்த வரிசையிலும் நில்லாமல், வெட்டி வெட்டி இலாவகமாக போய்க் கொண்டிருந்தனர் உள்ளூர் வாசிகள். அப்படி படம் எடுக்கக் கூடாது, இப்படி எடுக்கக் கூடாது, பின்பக்கத்தை காட்டக் கூடாது என்ற கட்டுப்பாடுகளால் யூடியூப்பர்கள் அங்கு இல்லை. வரிசையில் நின்று போனதால் அதிக நேரம் எடுத்தது. எல்லாம் பார்த்து முடித்த பின், என்ன பார்த்தோம் என்று பிள்ளைகள் கேட்டனர். ஓரளவு நியாயமான கேள்வியே. பேராதனை பல்கலைக் கழகம் ஒரு அழகிய இடம். பல்கலையின் ஊடே மகாவலி ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது. ஆற்றின் ஒரு பக்கம் பிரதான பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. மறு கரையில் பொறியியல் பீடம் மட்டும் அமைந்துள்ளது. பொறியியல் பீடத்தில் படிக்கும் மாணவர்கள் மிகவும் 'வறண்டவர்கள்/காய்ந்தவர்கள்' என்பதால், அவர்களை ஒதுக்கி ஒரு கரையில் தனியே விட்டு விட்டதாக மற்றைய பீட மாணவர்கள் பகிடி செய்வார்கள். இப்பொழுது பல்கலைக் கழகத்தின் உள்ளே பல இடங்களில் வெளியார்கள் அனுமதி இன்றி உள்ளே போக முடியாத வண்ணம் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் இருக்கின்றனர். அங்கு வேலை செய்யும் நண்பன் முன்னரேயே பொறியியல் பீட வாசலில் இருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் நாங்கள் வருவதாகச் சொல்லியிருந்தபடியால், அவர் எங்களையும், வாகனத்தையும் உள்ளே விட்டார். ஜனரஞ்சகமான துறைகள் அல்லாமல் வேறு துறைகளில் பெரும் மதிப்புடன் இருந்த, இருக்கும் ஒருவரை அந்த துறை சார்ந்தோர் அன்றி மற்றவர்கள் அவ்வளவாக அறிந்திருப்பதில்லை. ஆனால் பேராசிரியர் துரைராஜா அவர்கள் இதற்கு ஒரு விதிவிலக்கு. அவர் வாழ்ந்த காலத்திலும், இன்றும் பலரும் அவரையும், அவரது சேவைகளையும் அறிந்திருக்கின்றனர். நான் அவரிடம் நேரடியாக படிக்கவில்லை. அவர் அப்போது யாழ் பல்கலைக் கழகத்திற்கு போய் விட்டார். ஆனாலும் அவர் போட்டிருந்த பாதையிலேயே என் பயணமும், என் போன்ற பல மாணவர்களின் பயணமும் அமைந்தது. அவரின் நினைவாக அவரின் பெயரில் ஒரு செமினார்/மீட்டிங் இடம் ஒன்றை இப்பொழுது பேராதனையில் உருவாக்கியிருக்கின்றனர். அவரின் பெயரில் ஏற்கனவே பல்கலையில் ஒரு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில், பேராசிரியர் துரைராஜா அவர்கள் இலங்கையின் 'Father of Geotechnical Engineering' என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் அவரின் பல படங்களும், விபரங்களும் அங்கே இருந்தன. மிகையில்லாத கூற்றுகள் இவை. பல்கலையின் பல பரிசோதனை, செய்முறை கூடங்களுக்கு நண்பன் கூட்டிச் சென்றான். அப்படியே இருந்தன. எந்த மாற்றமும் இல்லை என்றே சொல்ல வேண்டும். எல்லாம் முடிந்த பின், எப்படியிருக்குது என்று பிள்ளைகளிடம் கேட்டேன். எல்லாமே மிகப் பெரிதாக இருக்கின்றன, ஆனால் மிகப் பழையவை என்றனர். வெளியில் பல்கலை முழுவதும் நிலத்துடன் உரசும் மரங்கள், தொங்கி விழும் கொடி போன்ற கிளைகள் உள்ள மரங்கள், மஞ்சள் பூக்களை கொட்டும் மரங்கள், பச்சை, மஞ்சள் மூங்கில்கள், வரிசையாக நிற்கும் கற்றாழைகள் என்று இன்றும் அதே அழகுடன் இருந்தது அந்த இடம். அங்கிருந்து அடுத்ததாக பின்னவல யானைகள் சரணாலயம் நோக்கிப் புறப்பட்டோம். இங்கு தான் ஆயுர்வேத தோட்டங்களும் இருக்கின்றன. பிரதான வீதியிலிருந்து பின்னவல சரணாலயத்திற்கு போகும் பாதையெங்கும் யானையில் ஏறுங்கள், யானையில் உலாவுங்கள், யானைக்கு உண்ணக் கொடுங்கள் என்ற அறிவிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சாரதியும் எங்களிடம் இதைப் பற்றி முன்னரேயே கேட்டு, நாங்களும் அதற்கு சம்மதித்திருந்தோம். அவர் இப்படியான ஒரு இடத்தில் நிற்பாட்டினார். இறங்கி ஓடினார். பின்னர் வந்தவர், இங்கு யானைகளில் ஏறலாம் என்றார். அவரை நாங்கள் ஓட விட்டிருக்கக் கூடாது. நானே இறங்கிப் போய் கதைத்திருக்க வேண்டும். ஒருவருக்கு ஐயாயிரம் ரூபாய்கள் என்றனர். நான்கு யானைகள் அங்கிருந்த சிறிய கட்டிடத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஓடையில் படுத்திருந்தன. நான்கிற்கும் நாலு பெயர்கள் சொன்னார்கள். குமாரி என்ற ஒரு பெயர் மட்டும் தான் நினைவில் இருக்கின்றது. பிள்ளைகளும், அவர்களும் சேர்ந்து ஒரு யானையை ஒரு மாதிரியாக நித்திரையிலிருந்து எழுப்பினார்கள். 'இது என்ன தொல்லை......' என்பது போல அது அசைந்தது. யானை எப்படி ஆட்களை அடிக்கும், யானை தூக்கி எறிந்தால் எப்படி எங்கள் எலும்புகள் முறியும் என்று முல்லைத்தீவில் பெரிய தோட்டங்கள் செய்யும் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் எனக்கு விளங்கப்படுத்தியிருந்தார். யானை துரத்தினால் ஓடித் தப்ப முடியுமா என்று அவரிடம் கேட்டும் இருந்தேன். கஷ்டம் என்று ஒரு சொல்லில் பதில் சொல்லியிருந்தார். யானை முதுகில் ஏற்றி வைத்து, அந்த ஓடையில் ஓடிக் கொண்டிருந்த சுத்த அழுக்கு நீரை தன் தும்பிக்கையால் அள்ளி, சோவென்று வாரி எங்கள் மீது இறைத்தது. யானைப் பாகன் போதும், போதும் என்று சொன்ன பின்பும், யானைகள் நிற்பாட்டவில்லை. 'இனிமேல் எங்கள் மேல ஏறுவீர்களா..........' என்று அவை கேட்டன போல. பின்னர் அந்த ஓடையில் யானைகள் நடந்தன. பின்னர் யானைக்கு நாங்கள் சாப்பாடு கொடுத்தோம். இரண்டு யானைப் பாகர்களும் தங்களுக்கும் ஏதாவது தரும்படி கேட்டார்கள். அதையும் கொடுத்தோம். முழுவதும் நனைந்து, களைத்தும் விட்டோம். அங்கேயே உடுப்புகளை மாற்றிக் கொண்டோம். சாரதி அடுத்தது ஆயுர்வேத தோட்டம் என்றார். தோட்டமும் வேண்டாம், மருந்தும் வேண்டாம், நேரே கொழும்புக்கு போங்கள் என்றோம். தோட்டத்திற்கு போவது இலவசம் என்றார். நீங்களே எங்களுக்கு காசு கொடுத்தாலும், எங்களால் இதுக்கு மேல் முடியாது என்றோம். 'அப்ப பின்னவல சரணாலயம்.......' என்று இழுத்தார் சாரதி. பின்னல் திரும்பிப் பார்த்தேன். யாராவது தங்களைக் காப்பாற்ற மாட்டார்களோ என்பது போல இரு பிள்ளைகளும் பின்னால் ஒரு இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒன்றும் வேண்டாம், கொழும்பிற்கே போவம் என்று அங்கிருந்து கிளம்பினோம். (தொடரும்...........)
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவு!
இவர்களும் இருக்கின்றார்கள் என்ற விசயம் மறந்தே போய் இருந்தது...........இனிமேல் கொஞ்ச நாளைக்கு ஞாபகம் இருக்கும்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
🤣........... சித்திரை, வைகாசியில் அம்மன் கோவில் போகாமல், வெசாக் பார்க்கப் போனால், இப்படித்தான் கூகைக்கட்டு வரும்.......😀.
-
சென்று வாருங்கள் அண்ணா!
🙏......... உங்களின் அண்ணாவின் மறைவிற்கு, இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், வாதவூரான்.
-
சென்னை ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையத்திற்கு 'இளையராஜா' பெயர் ஏன்? அவர் எவ்விதம் பங்களிப்பார்?
அவரின் பாடல்களை கேட்பது எனக்கு ஒரு பழக்கம், பின்னர் அதுவே ஒரு வழக்கமும் ஆகிவிட்டது. மற்றைய சில இசையமைப்பாளர்களின் பாடல்களையும் கேட்கின்றேன், ஆனால் இவரின் அளவிற்கு அல்ல. ஆனால் இன்று பல் வேறு விதமான கருத்துகளையும் கேட்டு, கட்டுரைகளையும் வாசித்த பின், மனதில் கேள்விகள் எழுவதை தடுக்க முடியவில்லை. சாரு மட்டும் இல்லை, ரியாஸ் குரானா, அராத்து, இப்படி இன்னும் பலரும் விமர்சித்து எழுதியிருக்கின்றனர். என் நட்பு வட்டத்திலேயே இந்த துறையில் பரிச்சயமும், பாண்டித்தியமும் உள்ள சிலர் பொது வெளியில் உலவும் பிம்பத்தை உடைக்கும் விதமாகவே கருத்துகள் சொல்கின்றனர்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣......... ஒரு முறை இவர்களிடம் அன்று வாகனம் இல்லாததால், கொழும்பில், வேறு ஒரு வாகனத்தை இவர்கள் அனுப்பியிருந்தனர். நீங்கள் சொல்வது போலவே அந்த வாகனம் புதியது. அதன் சாரதி அவருடைய சொந்த ஊர் முல்லைத்தீவு என்று சொன்னார்.
-
சென்னை ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையத்திற்கு 'இளையராஜா' பெயர் ஏன்? அவர் எவ்விதம் பங்களிப்பார்?
இந்த நிகழ்வு சம்பந்தமாக எழுத்தாளர் சாருவிற்கு வந்திருந்த கேள்வி ஒன்றும், அவர் அவரது இணைய தளத்தில் அந்தக் கேள்விக்கு இட்டிருந்த பதிலும் கீழே உள்ளது. ************************************************** நான் பாட்டுக்கு நான் உண்டு என் ஜோலி உண்டு என்று கிடக்கிறேன். ஆனாலும் சில நண்பர்கள் ’ஏன்டா சும்மா கிடக்கிறாய், எழுந்து ஆடு’ என்கிறார்கள். ஏற்கனவே அந்த நண்பரிடம் ’எனக்கு எதுவும் எழுதாதீர்கள்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் அவர் கேட்பது இல்லை. என் மேலும் தப்பு இருக்கிறது. கடிதத்தைப் பார்த்து அதைக் குப்பையில் போட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே? அதுதான் நம்மிடம் இல்லை. அப்படி இருந்திருந்தால் எப்போதோ உருப்பட்டிருப்பேனே? Kamakoti, The Director of IIT belongs to a family of Vedic Brahmins from Sri Sankara Math Kancheepuram as the name itself shows. He could have chosen a Sanjay Subramanian, but he chose Ilayaraja. A befitting reply to T.M. Krishna. V. Balasubramanian. இந்தக் கடிதத்தில் இருக்கும் அரசியலும், இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் காரியத்தில் உள்ள அரசியலும்தான் நான் இந்தக் கட்டுரையை எழுதக் காரணம். பிராமண சாதியுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் பிராமணர்கள் என்னை பிராமண வெறுப்பாளன் என்கிறார்கள். முஸ்லிம்கள் என்னை ஹிந்துத்துவா என்றும், பிராமண அடிவருடி என்றும் சொல்கிறார்கள். ஹிந்துத்துவர்கள் என்னை இஸ்லாமியச் சார்பாளன் என்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் என்னை செக்ஸ் எழுத்தாளன் என்கிறார்கள். ஆக மொத்தத்தில் நான் எல்லோராலும் வெறுக்கப்படுகின்றவனாக இருக்கிறேன். (சமீபத்தில் கூட கர்னாடக சங்கீதத்தின் சே குவேராவாகிய டி.எம். கிருஷ்ணா விருது வாங்கியபோது அவரை விமர்சித்து எழுதினேன். அப்போது எல்லா பெரியாரியவாதிகளும் என்னை ஹிந்துத்துவா என்று திட்டினார்கள்.) காரணம் என்னவென்றால், நான் எப்போதுமே ஒரே கட்சியைச் சார்ந்தவனாக இருப்பதில்லை. எந்தெந்தப் பிரச்சினைக்கு எப்படி எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டுமோ, அப்படி அப்படி நிலைப்பாடு எடுப்பதால்தான் மேலே கண்ட குழப்படியான புரிதல்கள் உண்டாகின்றன. உதாரணமாக, ஜம்மு கஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து இருக்கக் கூடாது, எல்லா மாநிலமும் சமம்தான் என்ற நிலைப்பாடு உள்ளவன் நான். இதை எழுதினால் நான் ஹிந்துத்துவா. இந்தியாவில் கலாச்சாரத் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவது பிராமணர்கள் என்பது என் அபிப்பிராயம். இதை எழுதினால் நான் பிராமண எதிர்ப்பாளன். அந்த அர்த்தத்தில் பார்த்தால் இப்போது எழுதப் போகும் கட்டுரையை பிராமணர்கள் கடுமையான பிராமண வெறுப்பைக் கக்கும் கட்டுரை என்று கருதலாம். அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம். நான் என் குருநாதர்களில் ஒருவராகக் கருதுபவர் மஹா பெரியவர் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இப்போதைய மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் காமகோடி காஞ்சி காமகோடி மடத்துக்கு நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த ஐஐடி ஒரு சஞ்சய் சுப்ரமணியத்தின் பேரால் இல்லாமல் இளையராஜாவின் பெயரால் ஒரு இசை மையத்தைத் தொடங்கியிருக்கிறது. (IITM – Maestro Ilaiyaraaja Centre For Music Learning & Research) ஐஐடி ஏன் இளையராஜாவின் பெயரால் இசை மையத்தைத் தொடங்கியது என்றால், இளையராஜா ஒரு தலித் என்பதால் அல்ல. அவர் தலித் சமூகத்தில் பிறந்து பிறகு தன் வாழ்முறையால் பிராமணராக மாறியவர் என்பதால். ஆனால் சஞ்சய் சுப்ரமணியம் பிறவியிலேயே பிராமணர். அவரை விட தலித்தாகப் பிறந்து பிறகு பிராமணராக மாறியவர் முக்கியம் இல்லையா? செம்மங்குடி சீனிவாச அய்யரின் மரியாதையைப் பெற்ற இசைக் கலைஞர் இளையராஜா என்பதன் காரணம் என்ன? இளையராஜா பிராமணராக மாறி விட்டார் என்பதுதான். அது மட்டும் அல்ல. தன்னை தலித் என்று குறிப்பிடுபவர்கள் மீது வழக்குத் தொடுக்கும் வழக்கம் உள்ளவர் இளையராஜா. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த கே.ஏ. குணசேகரன் இளையராஜா பற்றி ஒரு நாமாவளிப் புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் இளையராஜாவை தலித் என்று குறிப்பிட்டு விட்டதற்காக குணசேகரன் மீது வழக்குத் தொடுத்து அவரை புதுச்சேரியிலிருந்து சென்னை நீதிமன்றத்துக்குப் பல முறை இழுக்கடித்தவர் இளையராஜா. இப்படி தனது எல்லா செயல்பாடுகளிலும் தன் தலித் அடையாளத்தை மறுதலித்து, பிராமண மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிப்பவர் இளையராஜா. நான் சந்தித்த நூற்றுக்கணக்கான பிராமணர்களும் இளையராஜா என்ற பெயரைக் கேட்டதுமே கைகால் நடுங்க, ரோமாஞ்சனம் துலங்க கண் கலங்குவதன் காரணம், இளையராஜாவின் இசை அல்ல. அவரது பிராமண மதிப்பீடுகள்தான். அவர் எழுதி இசையமைத்த ரமண மாலை அவரது பிராமண வாழ்வுக்கு மற்றொரு உதாரணம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இளையராஜா மட்டும் தனக்குப் பிடித்த உணவு பீஃப் பிரியாணி என்று சொல்லிப் பார்க்கட்டும். எல்லா பிராமணர்களும் அவரிடமிருந்து விலகி விடுவார்கள். இதே காரணத்தினால்தான் பிராமண சமூகம் ரஜினியை ஆதரிக்கிறது; கமல்ஹாசனை வெறுக்கிறது. ஏனென்றால், கமல் எல்லா இடங்களிலும் பிராமண மதிப்பீடுகளை விமர்சிக்கிறார். சமயங்களில் இகழ்கிறார். பார்ப்பான் என்கிறார். நான் பெரியாரிஸ்ட் என்கிறார். நான் நாத்திகன் என்கிறார். அதனால்தான் பிராமணர்களுக்கு கமலைப் பிடிப்பதில்லை, ரஜினியைப் பிடிக்கிறது. ரஜினியின் ஆன்மீகம், ராகவேந்திரா பக்தி எல்லாமும் பிராமண மதிப்பீடுகளோடு இணைத்துக் காணப்பட வேண்டியதுதான். கற்பனை செய்து பாருங்கள். இளையராஜாவும் பா. ரஞ்சித் போல சிகையலங்காரம் செய்து கொண்டு, தன்னுடைய எல்லா செயல்பாடுகளிலும் தலித் அடையாளத்தை முன்னிறுத்தியபடி இருந்தால் பிராமணர்கள் இளையராஜாவைக் கொண்டாடுவார்களா? இளையராஜாவை பிராமணர்கள் கொண்டாடுவதன் காரணம், பிராமணர்கள் தாங்கள் இழந்து விட்ட மதிப்பீடுகளை இளையராஜா ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதுதான். பிராமணர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் குடியேறி விட்டார்கள். ஒரே காரணம். டாலர். இப்போது அவர்களின் பேரப் பிள்ளைகள் அமெரிக்கப் பள்ளிகளில் மாட்டுக் கறி தின்கிறார்கள். அதை பிராமணர்களால் தடுக்க முடியாது. அதன் காரணமாகவே, மாட்டுக் கறியை நிராகரித்து விட்டு, நெற்றியில் குங்குமப்பொட்டுடன் ரமண மாலை பாடிக் கொண்டிருக்கும் இளையராஜாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது பிராமண சமூகம். அதனால்தான் இளையராஜாவின் பெயரால் ஐஐடியில் இசை மையம் திறக்கிறார் காஞ்சி சங்கர மடத்துக்கு நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த திரு. காமகோடி. இதே காரணத்தினால்தான் இதற்கு முன்பு அப்துல் கலாமையும் கொண்டாடித் தீர்த்தது பிராமண சமூகம். அப்துல் கலாமும் இளையராஜாவைப் போலவே பிராமண மதிப்பீடுகளை ஏற்று, ஒரு பிராமணனைப் போலவே வாழ்ந்தவர் – முக்கியமாக, சைவ உணவுக்காரர் – என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். என் கேள்வி என்னவென்றால், இளையராஜா கைலியைக் கட்டிக்கொண்டு, எனக்குப் பிடித்த உணவு பீஃப் பிரியாணி என்றும், பிடித்த பானம் சாராயம், கஞ்சா என்றும் சொன்னால் ஐஐடி இயக்குனர் திரு. காமகோடி இளையராஜாவின் பெயரால் ஐஐடியில் இசை மையம் அமைப்பாரா? இதில் மற்றொரு பிரச்சினை என்னவென்றால், தமிழ்நாட்டில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கும் கல்வி நிறுவனமான ஐஐடி இம்மாநிலத்தையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் லும்பன் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக ஆகி விட்டதுதான். தியாகராஜரின் பஞ்சரத்னா கீர்த்தனைகள் உலகப் புகழ் பெற்றவை. ஆனால் அதை விட உலகப் புகழ் பெற்றவை இசைஞானியின் பஞ்ச ரத்னா கீர்த்தனைகள் என்று நினைத்துவிட்டது மெட்ராஸ் ஐஐடி என்பது இந்த நிலத்தின் துரதிர்ஷ்டங்களில் ஒன்று. இசைஞானியின் பஞ்சரத்னா: மச்சானைப் பாத்தீங்களா மலவாழத் தோப்புக்குள்ளே… நேத்து ராத்திரி யம்மா… நெலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா… குருவி கொடஞ்ச கொய்யாப் பழம் கொண்டு வந்து தரவா? இந்த சாகாவரம் பெற்ற பஞ்ச ரத்னா கீர்த்தனைகளுக்காகத்தான் ஐஐடி இயக்குனர் திரு காமகோடி இளையராஜா பெயரில் இசை மையம் ஆரம்பித்திருக்கிறாரா? அதே காரணத்தினால்தான், ”கடந்த இருநூறு ஆண்டுகளாக மொஸார்ட் போன்ற ஒரு இசைக் கலைஞர் தோன்றவில்லை. இந்த இசை நிறுவனத்தின் மூலம் இருநூறு இளையராஜாக்கள் தோன்ற வேண்டும்” என்று இளையராஜாவே திருவாய் மலர்ந்திருக்கிறார் போலும்! மொஸார்ட்டையும் தன்னையும் ஒப்பிட்டுக் கொள்ளும் ஒரு மௌடீகத்தை உலகத்தில் வேறு எங்குமே காண முடியாது என்பது ஒரு பக்கம் இருக்க, இளையராஜா இதுவரை இசைக்குச் செய்தது என்ன? பல நூறு குப்பைப் படங்களுக்கு இசை அமைத்ததுதானே? மணி ரத்னம், கமல்ஹாசன் ஆகிய இருவரைத் தவிர இளையராஜா வேறு என்ன தரமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்? தமிழ் சினிமா என்ன உலக சினிமா அரங்கில் பெயர் பெற்றிருக்கிறதா? மலையாளம், வங்காளம், கன்னடம், மராத்தி, ஹிந்தி போன்ற மொழிகளாவது உலக சினிமா அரங்கில் தங்கள் இருப்பை நிறுவியிருக்கின்றன. அதிலும் சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் ஆகிய இருவர் மூலம் உலகம் முழுவதிலும் மகத்தான இடத்தைப் பெற்றிருக்கிறது வங்காள சினிமா. ஆனால் தமிழ் சினிமாவோ உலக அரங்கில் வெறும் கேலிப் பொருளாகத்தானே கருதப்படுகிறது? கடந்த இருநூறு ஆண்டுகளில் மொஸார்ட் போன்ற ஒரு இசை மேதை தோன்றாமல் இருக்கலாம். ஆனால் இளையராஜா இங்கே வேலை செய்து கொண்டிருக்கும் அதே சினிமாத் துறையில்தான் ஹாலிவுட்டில் Philip Glass, Hans Zimmer போன்ற மேதைகள் தோன்றியிருக்கிறார்கள். The Hours என்று ஒரு படம். ஃபிலிப் க்ளாஸ் இசையமைத்தது. அப்படி ஒரு இசையை இளையராஜா தான் இசையமைத்த ஒரு படத்திலாவது கொடுத்திருக்கிறாரா? அதற்கான ஒரு படம் அவருக்குக் கிடைத்திருக்கிறதா? The Hours மாதிரி ஒரு படம் தமிழில் வந்திருக்கிறதா? அதேபோல் இன்னொரு படம் Inception. அதற்கு இசையமைத்தவர் ஹான்ஸ் ஸிம்மர். இளையராஜாவுக்கு இசை தெரியும். ஆனால் சினிமா தெரியுமா? சினிமா தெரியாமல் சினிமாவுக்கு எப்படி இசையமைக்க முடியும்? நல்ல சினிமா என்றால் என்ன என்று தெரிந்தால்தானே The Hours, Inception போன்ற படங்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்? அது புரிந்தால்தானே அதற்கேற்ற இசையைத் தர முடியும்? அறிவுக்கான ஸ்தாபனங்களும் தமிழ்நாட்டின் லும்பன் கலாச்சாரத்துக்கு ஏற்ப தங்களைத் தரம் தாழ்த்திக் கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இனிமேல் மெட்ராஸ் ஐஐடி நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுப்பது பற்றி யோசிக்கலாம். http://charuonline.com/blog/?p=14649
-
இந்திய பிரதமருக்கு கொலை மிரட்டல்!
ஜீ சிரிப்பு செய்திகளில் தலைப்பு செய்தியாக வராத நாளே இல்லை போல........முன்னர் 'மிஸ்டர் எக்ஸ்' என்று ஒரு வகை பகிடிகள் வந்து கொண்டிருக்கும். அது போல இவை 'மிஸ்டர் ஜீ' பகிடிகள்..........
-
தனித்திரு - சோம.அழகு
நீங்கள் எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கும் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள். பல வருடங்களின் முன்னர், ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் நல்ல ஒரு எழுத்தாளராக வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஒரு பதில் சொல்லியிருந்தார். உலகில் உள்ள நல்ல சிறுகதைகளில் 500 ஐயும், நல்ல நாவல்களில் 50 ஐயும் முதலில் வாசிக்க வேண்டும் என்று அந்தப் பதிலில் சொல்லியிருந்தார். சிறந்த சிறுகதை, நாவல் வரிசைகள் பலரால், எஸ் ரா, ஜெயமோகன் மற்றும் சில விமர்சகர்களால் (க நா சு போன்றோர்) போன்றவர்களால், வெளியிடப்பட்டும் இருந்தன. அந்த வரிசைகளில் உள்ள சில படைப்புகள் இணையத்திலேயே கிடைத்ததால், வாசிக்க கூடியதாகவும் இருந்தது. ஆனால் பலவற்றை வாசித்த பின் பெரும் பிரமிப்பும், பயமுமே உண்டானது, எவ்வளவு பெரிய படைப்பாளிகள் வந்து போயிருக்கின்றனர், இதுவல்லவோ எழுத்து என்று.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣....... நான் தான் சொந்தப் பெயரைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சொல்லி விட்டேனே..........பேசாமல் அந்தப் பெயரிலேயே வந்திருக்கலாம், நாம தான் அடி பிடிக்கு போகாமல் ஒதுங்குகிற டைப் ஆயிட்டுதே......😀
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣........🙏......... பொடியன் தான், அதில் என்ன பல கேள்விக் குறிகள்........😀.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣... அங்கே என்ன தான் வாங்கப் போகிறோம் என்பது ஒரு 'த்ரிலிங்காக' இருக்கட்டுமே என்று தான் சாரதியை நாங்கள் ஒன்றும் கேட்கவில்லை. நாங்கள் மேற்கொண்டு எதுவும் கேட்காததே அவருக்கு ஒரு 'த்ரிலிங்காக' இருந்திருக்குமோ.... அங்கே என்ன வாங்கினோம் என்று எழுதுகின்றேன்........... கன்னியாவில் கடைகள் முழுவதும் சிங்களம் தான், அவர்கள் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கதைக்கின்றார்கள். அது நேவிக்காரர்களின் இடம், அவர்கள் தான் பழக்கி வைத்திருப்பார்களோ......😀. முதல் தரம் ஏசியா, இல்லையா என்று வாகனக்காரர் கேட்டார்கள். பின்னர் கேட்கவேயில்லை. நேற்று ஷாருக்கானை heat stroke தாக்கத்தால் ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக செய்தியில் இருந்தது. இலங்கை வெக்கையில் ஏசி இல்லாமல் வாகனத்தில் போய், எங்களுக்கு அப்படி ஆகி இருந்தால், செய்தியில் சொல்லியிருக்க மாட்டார்கள்.....😀 ஒரு பெரிய நெட் வேர்க்கே இருக்குது போல.........
-
தனித்திரு - சோம.அழகு
👍..... எல்லாவறையும் உங்கள் மகள் இப்படி ஒரேயடியாக எழுதி விட்டாரே.... அவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு பந்தியும் நான் தேடிக் கொண்டிருந்தது. இடியப்பமும், இடி அமீனும் இனி என்னை பல இடங்களில் காப்பாற்றும்..........🤣 என் போன்ற பலர் ஏதாவது எழுதுவதற்கு தயங்குவதற்கு பிரதான காரணமே இப்படியான எழுத்துகள், ஆக்கங்கள் தான். இந்த எழுத்துகளின் தரத்தின் முன்னே நாங்கள் எழுத முயற்சிப்பது ஒன்றுமே இல்லை என்று தோன்றும்...👍👍
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
இப்பொழுதும் நேவியின் கட்டுப்பாட்டில் தான், கோஷான். உள்ளே அவர்களின் ஒரேயொரு கடை தான். கடலையும் பொதுக் கடல், அவர்களின் தனிப்பட்ட பாவனைக்கான கடல் என்று எல்லை போட்டு வைத்திருக்கின்றனர். அந்த எல்லையையும் தாண்டிப் போய் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். ஆனால் காவல் கோபுரத்தில் இருந்தவர் எதுவும் சொல்லவில்லை, வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார். வெளியில் இருந்த குளிக்கும் இடத்தை நல்ல சுத்தமாக வைத்திருக்கின்றனர்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣...... சாஸ்திரம் சொல்லும் அவர்களிடம் சில கதைகள் தான் இருக்குது போல. சூழலுக்கு ஏற்ப உள்ளதில் பொருத்தமான ஒன்றை எடுத்து விட வேண்டும் ஆக்கும்......எங்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்தவர்களுக்கு 'நீ ரோஷக்காரி தாயே.......' என்று சாஸ்திரம் ஆரம்பித்திருந்தது. தரகுக் கூலி முறை இருக்குதோ என்ற ஒரு சந்தேகம் வேறு சில இடங்களிலும் வந்திருந்தது, குறிப்பாக லவின்ஸ் உணவகத்தில் தோசைக்கும், பூரிக்கும் 24,000 ரூபாய்கள் கொடுத்த பிறகு........😀
-
மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம்
அவர் இப்ப 'வேற லெவலுக்கு' போய் விட்டார், ஜீ இனிமேல் இப்படியான சாதா விடயங்களுக்கு கீழ இறங்கி வருவாரா என்று தெரியவில்லை. ஜீ நியூஸ் 18க்கு கொடுத்திருந்த 'நான் கடவுள்' பேட்டியைப் பார்த்தேன். எனக்கு ஹிந்தி சுத்தமாகத் தெரியாது, ஆனால் ஜீயின் பாடி லாங்குவேஜ் நல்லாகவே விளங்கியது..........🫣
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🙏..... எட்டுடன் முடியும் என்று நினைத்தேன். இப்ப ஒன்பதுடனாவது முடியுமா என்று தெரியவில்லை, எழுதத் தொடங்கினால் ஏதோ எல்லாம் வருகின்றது.......😀
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கூகிள் படிவத்தை நேற்று இறக்கி வைத்திருக்கின்றேன். நிரப்பி அனுப்பி விடுகின்றேன்..........👍
-
தேசியத் தலைவர் பற்றி சிங்களசகோதரனின் கவிதை.
நல்ல ஒரு கவிதை, நான் அங்கே ஒரு பதிவும் போட்டிருந்தேன், அதனால் தான் ஞாபகம்........👍