Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலித்தேவனை கட்டி வைத்து சூடுவைத்த இலங்கை இராணுவம்: புது போர் குற்ற ஆதாரப்புகைப்படங்கள் !

Featured Replies

புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் அவர்களை இலங்கை இராணுவம் கட்டி வைத்து நெருப்பால் சூடு வைத்துள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி, சரணடைய விரும்பிய புலித்தேவன் மற்றும் ப.நடேசன் ஆகியோரை வெள்ளைக்கொடியோடு தம்மிடம் வருமாறு இலங்கை இராணுவம் தெரிவித்தது. ஐ.நா அதிகாரி நம்பியார், இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் சமீபத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மேரி கொல்வின் ஆகியோர் அணுசரணை வழங்கிய நிலையில், இவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களோடு காயப்பட்ட போராளிகள் சிலரும் சென்றுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோரை இலங்கை இராணுவம், காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். புலிகள் இயக்கத் தலைவர் எங்கிருக்கிறார், அவரின் மனைவி மற்றும் மகள் எங்கே இருக்கிறார்கள் எனக் கேள்விகளைக் கேட்டுள்ளனர் இலங்கை இராணுவத்தினர். இறுதியாக ஒரு உயரதிகாரி ஒருவரோடு தொலைபேசியூடகத் தொடர்புகொண்ட இராணுவத்தினர், இவர்களை என்ன செய்வது என்று கேட்டுள்ளார். மறு பக்கத்தில் இருந்துவந்த பதிலைத் தெரிந்துகொண்ட ப.நடேசனின் மனைவை எங்களைச் சுடவேண்டாம் எனக் கதறியுள்ளார். இராணுவத்தின் கால்களில் விழுந்து மன்றாடியுள்ளார்.

இருப்பினும் அவரையும் சுட்டு, பின்னர் கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் ப.நடேசன் அவர்களை இராணுவம் கொண்றுள்ளது. அதன் பின்னரே புலித்தேவன் கொல்லப்பட்டுள்ளார். தீயினால் சுட்டும், எரிபொருள் திரவங்களை உடலில் தடவி உயிருடம் எரியூட்டி பின்னர் அதனை அணைத்துவிட்டு கேள்வி கேட்ப்பதும், சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் பின்னர் எரியூட்டுவதுமாக, புலித்தேவன் அவர்களை உயிருடன் வைத்துக் கொல்லாமல் கொண்றுள்ளனர் இராணுவத்தினர்.

இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அங்கிருந்து உயிருடன் தப்பிவந்த போராளி ஒருவரின் குறிப்புகளும் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களும் இதற்கு சான்றாக அமைந்துள்ளது.

http://thaaitamil.com/?p=15560

post-8002-0-40430000-1334251571_thumb.jp

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை!!!!!!!!!!!!!இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலித்தேவன் அண்ணாவுடன் பழகியவன் என்ற முறையில் கேட்கின்றேன். அந்த ராஐநடை போடும் அவரது கம்பீரநடை மட்டுமே என் கண்களில் உள்ளது. தயவு செய்து இந்தப்படங்களை அகற்றிவிடுங்கள்.

அவருக்கான அஞ்சலிக்காக நிச்சயம் ஒரு நாள் கணக்கு முடிக்கப்படும்.

இது கொடுமை..................இவையெல்லாம் தெரிந்துதான் இந்த புண்ணியவான்கள் எமக்காக களத்தில் இறங்கினார்கள்.நாம் புலம்புவதற்காகவும்,கதறுவதற்காகவும்.இவர்கள் தம்மை அர்ப்பணிக்கவில்லை.இவர்கள் வித்துடல்மேல், ஏறிநின்று இவர்களது பாதையை நாம் தொடரவேண்டும் என்பது தான் அவர்கள் விருப்பமாகும்.ஆம் போராடுவோம்...................... இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப,விவேகமாகவும்,வேகமாகவும்,அரசியல்ரீதியாக எம் போராட்டத்தை தொடருவோம்.........பாதைகள் வளையாது எம் பயணங்கள் முடியாது..............

கங்குல் விலக காலை மலர களத்தில் வீழ்ந்த கதை சொல்லும்.தங்கள் உயிர்களை தாரை வார்த்த எங்கள் செல்வர்கள் கதை சொல்லும்......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெருப்பூடி, கரண்ட அடித்தாலும். 

தமிழர் தாகம் தமிழீழ தாயகம்!  ✊

  • தொடங்கியவர்

அணைத்து தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற பாதையல் பயணித்தல் எமக்கான விடுதலையை அடையலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

புன்னாலைக்கட்டுவனில் வசித்த புலித்தேவன் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியில் படிக்கும் காலத்தில் கெட்டிக்காராக இருந்ததினால், அவர் க.பொ.த(உயர்தரம்) படித்தபின்பு சிலர்(அவரின் கிராமத்து நண்பர்களும் அயல் கிராமங்களின் நண்பர்களும்) அவரிடம் பரிட்சையில் குதிரை ஒடும்படி கேட்பார்கள். குதிரை ஓடக்கேட்பவர்கள் எல்லோரும் எல்லாப்படத்திலும் அதிக புள்ளிகள் பெற்றால் ,உண்மையில் படித்து எழுதுபவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் பாதிப்பு ஏற்படும் என்பதினால் புலித்தேவன் க.பொ.த உயர்தரப் பரிட்சையில் 4 பாடங்களில் 3 பாடங்களை நன்றாகவும் ,4வது பாடத்தினை 35 புள்ளிகளுக்கு குறைவாகக் கிடைக்கும் படி குதிரை ஓடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு சிங்களம் என்றோ ஒருநாள் பதில் செல்லியே ஆகவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.