Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆக்காண்டி, ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்?: சண்முகம் சிவலிங்கம்

Featured Replies

ஆக்காண்டி ஆக்காண்டி...

சண்முகம் சிவலிங்கம்

ஆக்காண்டி, ஆக்காண்டி

எங்கெங்கே முட்டை வைத்தாய்?

கல்லைக் குடைந்து

கடலோரம் முட்டை வைத்தேன்.

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை

பொரித்ததுவோ நாலு குஞ்சு

நாலு குஞ்சுக் கிரை தேடி

நாலுமலை சுற்றி வந்தேன்,

மூன்று குஞ்சுக் கிரைதேடி

மூவுலகம் சுற்றி வந்தேன்.

ஆக்காண்டி, ஆக்காண்டி

எங்கெங்கே முட்டை வைத்தாய்?

கல்லைக் குடைந்து

கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு பசியோடு

கூட்டில் கிடந்த தென்று

இன்னும் இரைதேடி

ஏழுலகும் சுற்றி வந்தேன்.

கடலை இறைத்துக்

கடல் மடியை முத்தமிட்டேன்.

வயலை உழுது

வயல் மடியை முத்தமிட்டேன்.

கடலிலே கண்டதெல்லாம்

கைக்கு வரவில்லை.

வயலிலே கண்டதெல்லாம்

மடிக்கு வரவில்லை.

கண்ணீர் உகுத்தேன்

கடல் உப்பாய் மாறியதே.

விம்மி அழுதேன்

மலைகள் வெடித்தனவே.

ஆக்காண்டி, ஆக்காண்டி

எங்கெங்கே முட்டை வைத்தாய்?

கல்லைக் குடைந்து

கடலோரம் முட்டை வைத்தேன்.

வண்டில்கள் ஓட்டி

மனிதர்க் குழைத்து வந்தேன்.

கையால் பிடித்துக்

கரைவலையை நானிழுத்தேன்.

கொல்லன் உலையைக்

கொளுத்தி இரும்படித்தேன்.

நெய்யும் தறியிலே

நின்று சமர் செய்தேன்.

சீலை கழுவி

சிகையும் அலங்கரித்தேன்.

வீதி சமைத்தேன்.

விண்வெளியில் செல்லுதற்குப்

பாதை சமைக்கும்

பணியும் பல புரிந்தேன்.

ஆனாலும் குஞ்சுக்கு

அரை வயிறு போதவில்லை.

காதல் உருகக்

கதறி அழுது நின்றேன்.

கதறி அழுகையிலே

கடல் இரத்தம் ஆயினதே.

விம்மி அழுகையிலே

வீடெல்லாம் பற்றியதே.

கடல் இரத்தம் ஆகுமென்று

கதறி அழவில்லை.

வீடுகள் பற்றுமென்று

விம்மியழவில்லை.

ஆக்காண்டி, ஆக்காண்டி

எங்கெங்கு முட்டை வைத்தாய்?

கல்லைக் குடைந்து

கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு வளர்ந்தும்

குடல் சுருங்கி நின்றார்கள்.

பசியைத் தணிக்கப்

பலகதைகள் சொல்லி வந்தேன்.

கடலை இறைத்துக்

களைத்த கதை சொல்லி வந்தேன்.

வயலை உழுது

மடிந்த கதை சொல்லி வந்தேன்.

கொல்லன் உலையும்

கொடுந் தொழிற் சாலையதும்

எல்லா இடமும்

இளைத்த கதை சொல்லி வந்தேன்.

சொல்லி முடிவதற்குள்

துடித்தே எழுந்து விட்டார் -

பொல்லாத கோபங்கள்

பொங்கி வரப் பேசுகின்றார்.

"கடலும் நமதன்னை

கழனியும் நமதன்னை

கொல்லன் உலையும்

கொடுந் தொழிற்சாலையதும்

எல்லாம் நமது" என்றார்.

எழுந்து தடி எடுத்தார்

கத்தி எடுத்தார்

கடப்பாரையும் எடுத்தார்

யுத்தம் எனச் சென்றார்

யுகம் மாறும் என்றுரைத்தார்.

எங்கும் புயலும்

எரிமலையும் பொங்கி வரச்

சென்றவரைக் காணேன்

செத்து மடிந்தாரோ?

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை

பொரித்ததுவோ நாலு குஞ்சு

நாலு குஞ்சும் போர் புரிய

நடந்து விட்டார் என்ன செய்வேன்

ஆனவரைக்கும்,

அந்த மலைக் கப்பாலே

போனவரைக் காணேன்,

போனவரைக் காண்கிலனே.

ஆக்காண்டி, ஆக்காண்டி

எங்கெங்கு முட்டை வைத்தாய்?

கல்லைக் குடைந்து

கடலோரம் முட்டை வைத்தேன்.

http://padalkal.blogspot.ca/2004/06/blog-post.html

இந்த பாடலின் இசை வடிவம் என்னிடம் இருந்தது. 2007 இல் இணையத்தில் இணைத்திருந்தேன். இணைப்பு கலாவதி ஆகிவிட்டது. பாடலை எங்கு சேமித்து வைத்தேன் என நினைவில் இல்லை (கணணியிலோ அல்லது வேறு யு எஸ் பி யிலோ) கணணியை மாற்றிவிட்டேன் :(

விட்டில் போய் பழைய யு எஸ் பி களில் தேடி பார்க்க வேண்டும்.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்காண்டி ஆக்காண்டி...

சண்முகம் சிவலிங்கம்

ஆக்காண்டி, ஆக்காண்டி

எங்கெங்கே முட்டை வைத்தாய்?

கல்லைக் குடைந்து

கடலோரம் முட்டை வைத்தேன்.

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை

பொரித்ததுவோ நாலு குஞ்சு

நாலு குஞ்சுக் கிரை தேடி

நாலுமலை சுற்றி வந்தேன்,

மூன்று குஞ்சுக் கிரைதேடி

மூவுலகம் சுற்றி வந்தேன்.

------

மறைந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களது ஏக்கம் புரிந்த கவிதையை... வாசிக்க மனதை உருக்கியது.

இவர்கள் வாழும் போது.... அடையாளம் காணப்படாதது, எமது துர்ப்பாக்கியமே.

குளக்காட்டான், அந்தப் பாடலின் இசை வடிவத்தை, தேடி எடுத்துத் தருவீர்கள் என... ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்காடி என்று இந்த மெட்டை எடுத்து இந்தப்பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது

தேடி எடுத்துவிட்டேன்.

இந்த பாடல் புலரும் வேளை இறுவட்டில் இருந்து.

http://www.esnips.co...hp?pid=33979630

பாடியவர்கள்:ஞான ஆனந்தன் (சங்கீத் வர்மன், பிரகீத் வர்மன், டிலீப்குமார்)

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி,குளக்காடான்,வல்வைசகராவிற்கு என் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அறிஞராகவும் கவிஞராகவும் மட்டும் நின்றுவிடாது

விடுதலை விரும்பியாகவும் வாழ்ந்திருக்கின்றார்.

இணைப்புகளுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான.... பாடலை ஓளி, ஒலி வடிவில் இணைத்த...

வல்வை சகாராவிற்கும், குளக்காட்டானுக்கும் நன்றி.

நன்றி நிழலி அண்ணா, குளக்கட்டான், சகாறா அக்கா!

ஒரு அருமையான கவிஞரை,எழுத்தாளரை இழந்திருக்கின்றோம்! :(

என்றும் வாழும் அவர் எழுத்துக்கள்!

ஆக்காண்டி ஆக்காண்டி ஆங்கில மொழி பெயர்ப்பு இந்த இணைப்பில் உள்ளது (முன்றாவது கவிதை).

http://www.kalachuva...om/talisman.pdf

இந்த தொகுப்பில் வேறு பல ஈழத்து கவிஞர்களது கவிதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பும் உள்ளது.

4 கவிதை யாழ் களத்து பொயட் அவர்களது.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்காண்டி ஆக்காண்டி ஆங்கில மொழி பெயர்ப்பு இந்த இணைப்பில் உள்ளது (முன்றாவது கவிதை).

http://www.kalachuva...om/talisman.pdf

இந்த தொகுப்பில் வேறு பல ஈழத்து கவிஞர்களது கவிதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பும் உள்ளது.

4 கவிதை யாழ் களத்து பொயட் அவர்களது.

நாலாவது கவிதையைத் தவிர மிச்சம் எல்லாம்.... வாசிக்க வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.