Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திலிருந்து வெளியேறும் அறிகுறி!

Featured Replies

முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளைத் தடுக்க அரசாங்கம் தவறியுள்ளதால் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், இந்தத் தாக்குதலுக்கு வழங்கப்பட்ட ஆதரவு, பௌத்த பிக்குகள் இதற்கெதிராக தூண்டப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிராக ஜனாதிபதி இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது முஸ்லிம் சமுகம் தற்போது அதிருப்திகொண்டுள்ளது.

தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல் ஜனாதிபதியின் பூரண ஆதரவுடன், இமானுவேல் சுமங்கள தேரர், மதுபான வர்த்தகர் லக்ஸ்மன் பெரேரா எம்.பி ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான தகவல்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு தற்போது முழுமையாக கிடைத்துள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று (22) பகல் காணி அமைச்சர் ஜனகபண்டார தென்னகோனை சந்திக்க திட்டமிட்டிருந்ததாக கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

அமைச்சர் ஜனகபண்டார தென்னகோன் மாத்தளை மாவட்டத்தின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளராக பதவி வகித்த போதிலும், பள்ளிவசால் மீதான தாக்குதலை அந்த மாவட்டத்தின் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் பெரேராவை முன்னெடுத்திருந்தார்.

முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினால் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மாத்திரமே இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஜெனீவா கூட்டத்தில் தொடரில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளும், முஸ்லிம் மதத் தலைவர்களும் பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

http://thaaitamil.com/?p=16716

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் போதாது செய்ய வேணுமெல்ல ........ இவைகள் அடிக்கடி முடிவை மாற்றும் பச்சோந்திகள்.

இதெல்லாம் சும்மா டூப்பு.. பதவியை விட்டுப்போட்டு மயிரப் போனாங்கள்.

போனாலும் ஆறு மாசத்தில் பிசின் மாதிரி ஓட்டிடுவாங்கள்..

நாங்கள் என்ன செய்யிறது உங்க வரலாறு அப்பிடித்தானே இருக்கு!

முஸ்லீம் மக்கள் பெருமளவில் ஆத்திரம் கொண்டால் மட்டுமே ஹக்கீம் பதவிதுறப்பார், ஆனால் அதற்கு முன்னராக மகிந்த சமாளிப்பார். காரணம் சர்வதேச இஸ்லாமிய நாடுகளின் பலம், பணம், மசகு எண்ணெய்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசை நெருக்கடியிலிருந்து விடுவிக்கும் வகையில் எமது நிலைப்பாட்டினை எடுக்க முடியாது: ஹக்கீம்

150(26).jpg(ஹனீக் அஹமட்)

'தமிழ் சமூகம் தமது பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்தினைப் பயன்படுத்தியமை போன்று தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் சர்வதேசத்தினை மிகத் திறமையாகப் முஸ்லிம் காங்கிரஸால் பயன்படுத்த முடியும்.

ஆபத்தானதொரு கட்டத்தில் அரசாங்கம் இருப்பதை ஆட்சியிலுள்ளவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் வெறும் போடு காய்களாக எங்களைக் கணக்கில் எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் வழங்க முடியாது' என்று மு.காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.

காத்தான்குடி, பூநொச்சிமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் பேசும் போதே மு.கா. தலைவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

'மு.காங்கிரஸ் - இந்த அரசாங்கத்தோடு இணைந்தமையானது கண்ணைத் திறந்து கொண்டே குழியில் விழுந்தமைக்கு ஒப்பானதொரு செயலாகுமென்று - அந்த இணைவு இடம்பெற்ற மறு நாளே கல்முனையில் வைத்துக் கூறியிருந்தேன். அதேவேளை, இந்தக் குழியிலிருந்து வெளியில் வரும் உபாயங்களும் எமக்குத் தெரியும் என்பதையும் நான் அப்போது சொல்லியிருந்தேன்.

தம்புள்ளை பள்ளிவாசல் உள்ளிட்ட விவகாரங்கள் அரசாங்கத்துக்குள் இருக்கின்ற மு.காங்கிரஸினையும் முஸ்லிம் சமூகத்தினையும் பலவீனப்படுத்துகின்ற நிகழ்வுகளாக மாறியுள்ளன. இந்த நிலையில், அரசுடனான மு.காங்கிரஸின் இணைவானது சர்ச்சைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகிறது.

தம்புள்ள விவகாரம் தோன்றியுள்ள இந்த நிலையில்தான் மு.காங்கிரஸ் எனும் கட்சி தன்னுடைய உண்மையான அடையாளத்தினைக் காட்ட வேண்டியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் மு.காங்கிரஸ் எடுப்பார் கைப்பிள்ளையாக இயங்க முடியாது. அரசாங்கத்தின் தேவைக்கும், அவர்களை நெருக்கடிகளில் இருந்து விடுவிப்பதற்காகவும் இந்த சந்தர்ப்பத்தில் எங்களுடைய நிலைப்பாட்டினை எடுக்க முடியாது!

தம்புள்ளயிலுள்ள பள்ளிவாயலை அகற்ற வேண்டும் என்கிறதொரு நிலைப்பாடு அநியாயமாக எடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளிவாயலை அகற்ற வேண்டும் என்பதை தம்புள்ளயிலுள்ள சிங்கள மக்களில் அதிகமானோரே எதிர்க்கின்றார்கள். நான் நேரடியாகச் சென்று பார்த்த போது சிங்கள மக்களே இதை என்னிடம் கூறினார்கள். இப்படியிருக்கும் போது – பள்ளிவாயலை அகற்ற வேண்டும் என்பதற்கு நாம் ஏன் உடன்பட வேண்டும்?

மேலிடத்திலிருந்து சில விருப்பங்கள் தெரியப்படுத்தப்படும் போது – அதற்கேற்றவாறு நாம் ஒரு பல்லவியைப் பாடுவதென்கிற விடயம் முஸ்லிம் காங்கிரசிடம் சரிப்பட்டு வராது!

அரசுடன் மு.காங்கிரஸ் இணைந்தமையானது ஒற்றுமையாகக் கையாளப்பட்டிருந்தால், அது மிகச் சிறந்ததொரு இணைவாக மாறியிருக்கும். ஆனால், இன்னுமொரு பிளவினை இந்தக் கட்சி தாங்கிக் கொள்ளாது எனும் நிலையில்தான் நாம் அரசுடன் இணைந்தோம். ஆயினும், இந்த இணைவின் பின் ஒருவருக்கும் அவர்கள் எதிர்பார்த்த எவையும் கிடைக்கவில்லை!

நமது கட்சியிலுள்ள சிலருக்கு பதவிகள் சம்பந்தமான ஆசைகள் தொடர்ந்தும் இருந்து கொண்டே வருகிறது. இதற்காக, கட்சிக்கு அப்பால் சென்று அரசாங்கத்துடன் தனிப்பாட்ட உறவுகளைப் பேணி தமது அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கு யாராவது முயன்றால், அவற்றினை முறியடிப்பதற்கு மு.கா. தலைமைத்துவம் நிச்சயமாக வியூகங்களை வகுக்கும்!

அரசாங்கத்தோடு மு.காங்கிரஸ் இணைந்ததன் மூலமாக மூன்றில் இரண்டு எனும் பெரும்பான்மையினை வழங்கியது. அதன் மூலமாக தம்புள்ளயில் இன்று அரசாங்கம் நினைத்ததைச் செய்வதற்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கின்றோம்.

ஆனால், எமது பலம் முழுமையாக அற்றுப் போகவில்லை. தமது பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் சமூகம் சர்வதேசத்தினைப் பயன்படுத்தியமை போன்று முஸ்லிம் சமூகத்தினால் ஏன் முடியாது! இந்த விடயத்தில் சர்வதேசத்தினை மிகத் திறமையாக முஸ்லிம் காங்கிரஸால் பயன்படுத்த முடியும். ஆபத்தான கட்டத்தில் அரசாங்கம் இருப்பதை ஆட்சியிலுள்ளவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் வெறும் போடு காய்களாக எங்களைக் கணக்கில் எடுப்பதற்கு நாங்கள் இடம் வழங்க முடியாது.

எதற்காகவும் நாங்கள் பயந்து ஒதுங்க வேண்டிய அவசியமில்லை. தம்புள்ள பள்ளிவாசலை அகற்றுவது எனும் விவகாரத்திலுள்ள அநியாயம் குறித்து அரசாங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர்கள் எம்மிடம் பேசுகின்றார்கள். இதற்குப் பின்னரும் நாம் ஏன் பயந்து கொண்டிருக்க வேண்டும்.

ஜனாதிபதி எங்களை நம்ப வேண்டும். நாங்கள் நம்பும் படி அவரும் நடந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் ஒரு சகோதரர் மு.காங்கிரஸிடம் ஒரு விதமாக நோண்டுவதையும், அபிவிருத்தி விடயத்தில் சீண்டுவதையும் தொடர்ந்தும் எங்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது!

ஆனால், நாங்களாக அரசாங்கத்தை விட்டுச் செல்ல மாட்டோம். எம்னுடைய பலம் என்னவென்று எனக்குத் தெரியும். இந்த அரசாங்கத்துக்குள் நாங்கள் விருப்பத்தோடு வந்தவர்களுமல்ல, அதேபோல் விருப்பத்தோடு போகின்றவர்களாகவும் இருக்க மாட்டோம். நம்பிக்கையைக் கொடுத்தே நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்றார்.

அரசை நெருக்கடியிலிருந்து விடுவிக்கும் வகையில் எமது நிலைப்பாட்டினை எடுக்க முடியாது: ஹக்கீம்

150(26).jpg(ஹனீக் அஹமட்)

ஆனால், நாங்களாக அரசாங்கத்தை விட்டுச் செல்ல மாட்டோம். எம்னுடைய பலம் என்னவென்று எனக்குத் தெரியும். இந்த அரசாங்கத்துக்குள் நாங்கள் விருப்பத்தோடு வந்தவர்களுமல்ல, அதேபோல் விருப்பத்தோடு போகின்றவர்களாகவும் இருக்க மாட்டோம். நம்பிக்கையைக் கொடுத்தே நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்றார்.

அடிச்சுத் துரத்தினாலும் நாங்கள் போகமாட்டோம்.. எங்களை யாரெண்டு நினைத்தான் சிங்களவன்.

அடுத்தமுறை ஆட்சி மாறினாலே தவிர நாங்கள் விலகமாட்டோம்.

வேணுமெண்டால் ராசபக்ச விலகிப் போகட்டும்.

ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திலிருந்து வெளியேறும் அறிகுறி!

ஹக்கீமின் தொப்பியில் தெரியும் அறிகுறிதான் இறுதியானது!

நல்ல செய்தி

இரண்டு மூன்று நாளாய் நான் கொஞ்சம் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். இந்தப்பாடல் தான் அடிக்கடிமுணுமுணுக்கிறேன். எனது இசைவாத்தியத்தில் கை வைத்தாலும் இந்தப்பாடல்தான் விளையாட தோன்றுகிறது.

நினைத்தது நடக்கிறது என் நெஞ்சம் இனிக்கிறது........

ஆனந்த மழையினிலே கண்கள் நனைகிறது .................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்களூம் சும்மா இருக்க கூடாது இதை கொஞ்சம் ஊதிப்பெருப்பிக்கவேண்டும், மசூதி இடிக்கபடும் காட்சிகளையும், முஸ்லீம்கள் அஞ்சிநடுங்கும் காட்சிகளையும் யூத்ரூப் கணக்கில் ஏற்றி ஆங்கிலத்தில் தலைப்பிட்டு எங்கு எல்லாம் ஒட்ட முடியுமோ அங்கெல்லாம் ஒட்டவேண்டும்,சும்மா இருந்தால் வருவாளா சுகுமாரி. :) :) :)

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்

கொடுத்தவனே பறித்துகொண்டாடீ ..! :D :D

வெளியேறி ?????? :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வெளியேறி ?????? :rolleyes: :rolleyes:

பிறகென்ன, பின்கதவால் உள்ளே மீண்டும் நுழைய வேண்டியதுதான். என்னவிருந்தாலும் காக்கா ஒரு சிறந்த பேச்சாளாராக்கும்.........!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.