Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

50 ஆண்டுகளில் 'ஆம்பளைகளையே' பார்க்க முடியாது..பகீர் ரிப்போர்ட்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை ரிப்போர்ட்...!

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 27, 2012, 10:11 [iST]

27-sperm-300.jpg

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறைபாட்டிற்கு காரணம்

விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.

விந்தணு வீழ்ச்சி

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கைக்கு எதிரான நிலை

தாமதமான திருமணங்களும் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதும் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள் என்கிறார் மருத்துவர் மல்பானி. ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் விந்தணுக்கள் குறைகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் அவர், விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதே.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

thatstamil.com

Edited by nedukkalapoovan

அண்மையில் ஆண் ஒருவர் தானம் செய்ததில் பல நூறு பிள்ளைகள் ஒரு ஊரில் ஒரே காலத்தில் பிறந்துள்ளனர். இவ்வாறான சில அறைச்சகோதரர்கள் தமக்குள்ளேயே திருமணம் செய்திருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது. இவ்வாறு பிறக்கும் குழைந்தைகள் மீது நோய்கள் அதிகம் வரும் சாத்தியங்கள் உள்ளன. இதனால் இவ்வாறு தானம் செய்யப்பட்டு பிறக்கும் பிள்ளைகளுக்கு தகப்பன் யார் என்று தெரியப்படுத்தப்பாடல் வேண்டும் என கோரப்படுகின்றது.

நெடுக்ஸ், கெதியா கலியாணம் கட்டிக்கிற வேலையைப் பார்க்கவும்! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், கெதியா கலியாணம் கட்டிக்கிற வேலையைப் பார்க்கவும்! :lol:

நான் கலியாணம் செய்வதால் இந்தப் பிரச்சனைக்கு எப்படி தீர்வு வரும்...??! எப்படி சூழல் மாசுறுதல் நிற்கும்..??! எப்படி பிளாஸ்ரிக் பாவனை நிற்கும்..??! இதுகளுக்குப் பதில் சொல்லுங்கோ.. அப்புறம் கலியாணம் செய்வதா விடுவதா என்று தீர்மானிச்சுச் சொல்லுறன்..! சும்மா சும்மா என்னை ஏன் படுகுழியில் தள்ள முயற்சிக்கிறீங்க. நீங்க விழுந்தது காணாது என்று மற்றவங்களையும் விழவைச்சு பார்க்கனுன்னு ஆசைப்படுவது அபந்தம்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான் கலியாணம் செய்வதால் இந்தப் பிரச்சனைக்கு எப்படி தீர்வு வரும்

திரியில் 2 விடயம் எமது கோரிக்கைக்கு ஆதாரமா இருக்கே.

1-தாமதமான திருமணங்களும்,

2-குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும்

:lol::icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

50 ஆண்டுகளில் 'ஆம்பளைகளையே' பார்க்க முடியாது

இப்பவே மூண்டு பெட்டையளுக்கு ஒரு ஆம்பிளை எண்ட கணக்கு வந்துட்டுதாம்...என்ரை கவலைமுழுக்க தங்கச்சியை நினைச்சுத்தான்...படைச்சவன் படியளப்பான் எண்டு கடவுள்மேலை பழியை போட்டுட்டு இருக்கிறன் ^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரியில் 2 விடயம் எமது கோரிக்கைக்கு ஆதாரமா இருக்கே.

1-தாமதமான திருமணங்களும்,

2-குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும்

:lol::icon_idea: :icon_idea:

நாங்கள் அறிவியலை அதிகம்.. நம்புகிறவர்கள். உது மரத்தை சுற்றும் தாலி கட்டிக் கூட்டங்களுக்கானது..!

இந்திய சமூகவியல் என்பது எம்மில் இருந்து.. மேற்குலகில் இருந்து மாறுபட்டது.

இந்தியாவில் ஒரு பெண் வயதுக்கு வந்ததும்.. அவளை மனிசியாக்கி 18 வயதில் திருமணம் செய்து வைத்து 25 வயதில் ஆன்ரி ஆக்கிவிடுவார்கள். அதேபோல்.. ஆண்களை அங்கிளாக்கி விடுவார்கள். அவர்கள்.. 35 வயதில் நீரிழிவு நோயோடு.. 60 வயதில் மண்டையைப் போட்டு விடுவார்கள்.

ஆனால்.. மேற்குலக வாழ்வியல் அப்படியான ஒன்றல்ல. அங்கு சராசரி ஆயுள் காலமே 90 ஐ கடக்கிறது. ஓய்வூதிய வயதெல்லை.. 65 தாண்டுகிறது. இந்த நிலையில் எவன் ஒருவர் 25 வயதில கலியாணம் செய்து 45 வருசம் பிள்ளைகளோடு வாழ முடியும்..! அந்த வகையில் இங்கு வாழ்வியல் முறை மாறுகிறது.

பிரச்சனை.. சூழல் மாசடைதலும்.. செயற்கைச் சூழலும் தான்..! அதற்குள் திருமணம் தாமதிப்பது.. குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவது அதிகம் செருகப்பட்டுள்ளது..! நல்ல இயற்கையான சூழலும் உணவு வழக்கமும் இருந்தால் 80 வயதிலும் ஒரு ஆண் குழந்தை பெற முடியும்...! பெண்... 35 தாண்டியும் வளமான குழந்தைகளைப் பெற முடியும்..!

ஆனால் இன்றைய செயற்கை இரசாயனங்கள் பொருந்திய செயற்கையான.. மாசான சூழலில்.. 20 வயதில் கூட குழந்தை இன்றி உள்ள பலர் இருக்கினம்..! அதற்கு காரணம்.. மனிதனின் தேவைகளும் அதனால் சூழல் கண்டுள்ள மாற்றங்களும்.. மாசுக்களுமே அன்றி வேறில்லை..! இங்கு தான் மாற்றம் வர வேண்டுமே தவிர வாழ்வியலில் அல்ல..!

இன்றைய நவீன மருத்துவ உலகம் ஆயுள் காலத்தை நீட்டியுள்ளது. அந்த பகுதியை பலர் மறந்துவிடுகிறார்கள். அதேபோல்.. தனி ஒரு விந்தில் இருந்து குழந்தை பெறும் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கிறது... அதை எவரும் கண்டு கொள்வதில்லை..!

இருந்தாலும்.. இந்த வெற்றிகர தொழில்நுட்பங்களோடு.. கூடிய இயற்கைத்தனமான வாழ்வியலுக்குள் மனித சமூக நுழையின் இப்படியான பக்க விளைவுகளை குறைக்க முடியும். இதுதான் அறிவியலின் அறிவுறுத்தலாகவும் இருக்க முடியும்..! அதற்காக பழையபடி காட்டு வாழ்க்கைக்குப் போய் 35 வயதில் மடியும் நிலையில் 16 வயதில் திருமணம் செய்வதை எல்லாம் இன்று கருத்தாக நோக்கக் கூடாது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே மூண்டு பெட்டையளுக்கு ஒரு ஆம்பிளை எண்ட கணக்கு வந்துட்டுதாம்...என்ரை கவலைமுழுக்க தங்கச்சியை நினைச்சுத்தான்...படைச்சவன் படியளப்பான் எண்டு கடவுள்மேலை பழியை போட்டுட்டு இருக்கிறன் ^_^

பெடியங்கள் என்டால் அண்ணா வடிவாய் இருக்கோணும் என்டு அவசியமில்லை அண்ணா ஓரளவிற்கு உயரமாய்,லட்சணமாய் இருக்க வேண்டாமோ நீங்களே சொல்லுங்கள் :D ...கொஞ்சப் பேரைப் பார்த்தால் கட்டையாய்,மெலிசாய் இருக்கிறாங்கள் :rolleyes: இன்னும் கொஞ்சப் பேரைப் பார்த்தால் உயரமாய்,குண்டாய் இருக்கிறாங்கள்...பார்ப்போம் எனக்கெண்டு ஒருவன் பிறந்திருக்க மாட்டான்?...இந்த உலகத்தில அவன் எங்கிருக்கானோ? ஆண்டவா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெடியங்கள் என்டால் அண்ணா வடிவாய் இருக்கோணும் என்டு அவசியமில்லை அண்ணா ஓரளவிற்கு உயரமாய்,லட்சணமாய் இருக்க வேண்டாமோ நீங்களே சொல்லுங்கள் :D ...கொஞ்சப் பேரைப் பார்த்தால் கட்டையாய்,மெலிசாய் இருக்கிறாங்கள் :rolleyes: இன்னும் கொஞ்சப் பேரைப் பார்த்தால் உயரமாய்,குண்டாய் இருக்கிறாங்கள்...பார்ப்போம் எனக்கெண்டு ஒருவன் பிறந்திருக்க மாட்டான்?...இந்த உலகத்தில அவன் எங்கிருக்கானோ? ஆண்டவா :lol:

லண்டனிலேயே சுத்தினா இப்புடித்தான்..............

அமெரிக்க அப்படி இப்படி என்று நாலு இடம் சுற்றி பார்க்க வேண்டாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனிலேயே சுத்தினா இப்புடித்தான்..............

அமெரிக்க அப்படி இப்படி என்று நாலு இடம் சுற்றி பார்க்க வேண்டாமா?

தங்கச்சி! நல்ல சம்பந்தம் ஒண்டு வந்துருக்குதடி...விட்டுடாதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.