Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி ஈழம் அமைய ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: டெசோ கூட்டத்தில் தீர்மானம்.

Featured Replies

தனி தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட ஐ.நா.மன்றம் தமிழர் வாழும் பகுதிகளில் பொதுவாக்கெடுப்பினை விரைவில் நடத்த வேண்டும் என திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இன்று (30.04.2012) சென்னை அண்ணா அறிவாலயத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில் ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்பட வேண்டும். தமிழர் பகுதிகளில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது. பொது வாக்கெடுப்பு அடிப்படையில் தமிழ் ஈழம் அமைவதற்கு ஐ.நா. சபை முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு தேவையான ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் இந்திய அரசு வழங்க வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=17535

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

தொடரட்டும் தங்கள் பணி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.. கூடிய விரைவில் இந்திய நாடாளுமன்றத்தில் இதை ஒரு தீர்மானமாகக் கொண்டுவருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.. :D

இந்தக் கூட்டத்தில், தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில் ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்பட வேண்டும். தமிழர் பகுதிகளில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது. பொது வாக்கெடுப்பு அடிப்படையில் தமிழ் ஈழம் அமைவதற்கு ஐ.நா. சபை முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு தேவையான ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் இந்திய அரசு வழங்க வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு கால தவணையும் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் என்னே செய்வீர்கள் (பொருளாதார தடை? ) எனவும் கூற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கால தவணையும் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் என்னே செய்வீர்கள் (பொருளாதார தடை? ) எனவும் கூற வேண்டும்.

இது ஏதோ சுடுகுது மடியைப்பிடி கணக்காகத்தான் நடந்துள்ளது.

உணர்வு பூர்வமாக திட்டமிட்டு செய்திருந்தால்............?

நீங்கள் சொல்பவை கணக்கில் எடுக்கப்பட்டிருக்கலாம்.

இது ஏதோ சுடுகுது மடியைப்பிடி கணக்காகத்தான் நடந்துள்ளது.

உணர்வு பூர்வமாக திட்டமிட்டு செய்திருந்தால்............?

நீங்கள் சொல்பவை கணக்கில் எடுக்கப்பட்டிருக்கலாம்.

இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்னால் காங்கிரஸ் இல்லை உளவு ரோ உள்ளதா? என்பதே எனது ஆதங்கம். அந்த உண்மையை இல்லை அது பொய் என்ற உண்மையை நாம் நம்பும் வரை இவர்களை நூறுவீதம் நம்ப முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

கலைஞர் நெருப்பைக்கடக்க வேண்டியிருக்கும் இனி தமிழரின் நெஞ்சில் இடம் பிடிக்க............. :(

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் கலைஞருக்கு இருக்கும் செல்வாக்கையும்

தன்னுடைய பலத்தையும் கலைஞர் வெளியுலகுக்குக் காட்டவேண்டிய

காலம் வந்துவிட்டது

கலைஞர் பாவம்! அவரும் அவரின் கூட்டத்தினரும் பெரும் நெருக்கடியில்,பரிதாபகரமான நிலையில் உள்ளனர்.

சகோதரயுத்தம்[முத்தம்] என்பதை மறைத்து திசைதிருப்பவேண்டிய அவசரம்; இழந்துவிட்ட மக்கள் ஆதரவை எப்படியாவது

பெறவேண்டும் என்ற முனைப்பு. அடுத்த இடைத்தேர்தல் ஒன்று விரைவில் வரவிருக்கிறது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

எனினும் நல்லது நடக்க அவர் உதவினால் அவருக்கும் நன்றி சொல்வோம்.

தமிழ்தா[த்]தா இவருக்கு இடைக்கிடை ஏதோ அகிறதுபோல்..........இவருக்கு ஏற்படும் கோளாறுகள் எமக்குசாதகமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவற்றையும் பயன்படுத்த முயற்சிப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு தேவையான ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் இந்திய அரசு வழங்க வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரும் ..! ஆனா வராது ..!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தீர்மானத்தில் உறுதியாக நின்று இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய வேகத்தை இந்தத் தீர்மானத்திற்கு மத்திய அரசு இணங்காவிட்டால் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதையும் சொல்ல வேண்டும்.உறதியான முடிவு வரும் வரைக்கும் இவர்களை நம்புவதற்கு தகுந்த மாதிரி அவர்களது கடந்தகால நடவடிக்கைகள் அமையவில்லை. ஆகவே நம்பத் துந்தமாதிரி அவர்கள்தான் செயலில் காட்ட வேண்டும்.எனினம் தீர்மானத்துக்கு நன்றி.

கலைஞர் முடிவு எடுத்திட்டார் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக அதற்காக தான் தமிழ்ஈழம் பற்றி கதைக்கிறார்

அவருக்கு தெரியும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் அடுத்த தேர்தலிலும் ஆப்பு தான்

இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்னால் காங்கிரஸ் இல்லை உளவு ரோ உள்ளதா? என்பதே எனது ஆதங்கம். அந்த உண்மையை இல்லை அது பொய் என்ற உண்மையை நாம் நம்பும் வரை இவர்களை நூறுவீதம் நம்ப முடியாது.

கருணாநிதியின் கருத்துக்களிற்கு தமிழர் எதிர்ப்பு சக்திகள் தொடர்ந்து அமைதி பேணுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது...

பார்ப்போம் எவ்வளவு தூரம் கருணாநிதி ஆட்டம் போடப்போகிறார் என்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.