Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 06

Featured Replies

உள்ளிச் சட்ணி .

இந்தப் பக்குவத்துக்கும் செஃப் எனது மனைவிதான் . இலகுவான உடலுக்கு மருத்துவரீதியில் நன்மை பயக்கக்கூடிய பக்குவத்தை நீங்களும் செய்து பார்க்கலாமே ?

தேவையான பொருட்கள் :

உள்ளி 10 - 12 பல்லு .

செத்தல் மிளகாய் 6 - 7 . ****

தக்காளிப்பழம் 2 .

கறிவேப்பமிலை 4 - 5 இலை.

கல்லு உப்பு ( தேவையான அளவு ) .

எண்ணை 5 தேக்கறண்டி .

கடுகு கால் தேக்கறண்டி .

பக்குவம் :

தோல் நீக்கிய உள்ளி , செத்தல் மிளகாய் , வெட்டின தக்காளிப்பழங்கள் , கறிவேப்பமிலை , உப்பு எல்லாவற்றையும் கிறைண்டரில் அரைத்துக்கொள்ளவும் . ஒரு தாச்சியில் எண்ணையை விட்டு கொதித்தவுடன் கடுகைப் போட்டு வெடிக்க விடவும் . கிறைண்டரில் அரைத்த கலவையைத் தாச்சியில் கொட்டி 2 - 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு , சூடாக எண்ணை மெதுவாக மேலே வரும்பொழுது இறக்கி விடவும் .

படிமானம் :

தோசை , இட்டலி , றொட்டி , பாணுக்கு சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கோ பேந்து விடமாட்டியள் .

***** நல்ல உறைப்பாக வேண்டுமானால் செத்தல் மிளகாயின் அளவைச் சிறிது கூட்டுங்கள் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கோமகன்

கொலஸ்ரோலை கட்டுப்படுத்த உள்ளி சிறந்த மருத்துவமாம்.

:)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி செப் பகிர்வுக்கு...அக்காவுக்கும் நன்றியை சொல்லிவிடுங்கள்..

***** நல்ல உறைப்பாக வேண்டுமானால் செத்தல் மிளகாயின் அளவைச் சிறிது கூட்டுங்கள் .

எனக்கு உறைப்பாய்த்தான் வேணும்..செத்தல் மிள்காய் கூடப் போட்டுத்தான் செய்து பாக்கப் போறன்....
  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கு நன்றி கோமகன், முக்கியமாய் மேலிடத்துக்கு!!

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள் வேலைக்குப் போகும்போது வெள்ளைகள் இரண்டடி எட்டி நிற்பதற்கு

இது நல்ல சட்ணி :D

  • கருத்துக்கள உறவுகள்

இலகுவான ஆனால் ருசியான சட்னி!

  • தொடங்கியவர்

பகிர்வுக்கு நன்றி கோமகன்

கொலஸ்ரோலை கட்டுப்படுத்த உள்ளி சிறந்த மருத்துவமாம்.

:)

கொலொஸ்திரோலை மட்டுமல்ல இன்னும் பல இன்னோரன்ன வாதங்களையும் விரட்ட வல்லது உள்ளி . பின்வரும் இணைப்பையும் பாருங்கோ . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துகளுக்கு .

உணவில் பூண்டு சேர்க்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? இல்லையெனில், இனியாவது சேருங்கள்; பூண்டில் இல்லாத சத்துக்களே இல்லை. உங்கள் குடும்ப டாக்டர் பில் குறையணும்; இருமல், காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், பூண்டை விட சிறந்தது வேறில்லை.

கடுகு, மிளகு, தனியா போன்ற அன்றாட உணவு தானியங்களில் ஆரம்பித்து, நாம் பல ஆண்டாக பின்பற்றும் தானியங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் சரி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் சரி, இந்த தானியங்கள் தான் சுவை சேர்க்கின்றன.

எளிய முறையில் பயன்படுத்தக்கூடிய இந்த உணவு தானியங்களில் உள்ள மகிமை, இப்போதுள்ள தலைமுறையினருக்கு தெரிவதில்லை என்பது வேதனை தான். இந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் பூண்டு, நமக்கு தரும் மருத்துவ பயன்கள் பட்டியலிட முடியாதவை. சீனாவில் யுன்னான் மாகாணத்தில் தான் முதன் முதலில் பிறந்தது இந்த வெங்காய குடும்ப வகையை சேர்ந்த பூண்டு. சீனாவை அடுத்து அதிகமாக உற்பத்தி செய்வது இந்தியா தான். மருத்துவ, உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், இப்போது தான் பூண்டு மகிமை பலருக்கு தெரிகிறது.

* தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.

* பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.

* பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.

* உணவில் சேர்த்தால் நல்லது தான்;ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.

* தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள்.

* சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.

* ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

* பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

* கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

* அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும்.

* பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.

சரியான “மேனியா’வா?

அநியாயத்துக்கு சிலருக்கு, அர்த்தமே இல்லாமல் கடுங்கோபம் வரும்; இந்த அனுபவம் உண்டா உங்களுக்கு? இப்படிப்பட்டவர்களை சரியான “மேனியா’வாக இருக்கிறாரே மனுஷன்…என்று அழைப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மேனியா என்றால் என்ன தெரியுமா? சாதாரண மனிதராக இல்லாமல், அடிக்கடி கோபம், தேவையில்லாமல் சீற்றம், எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள தயாரில்லா குணம் கொண்டவர் என்று பொருள். மனோரீதியான பிரச்னை உள்ளவர். சாதா மேனியாவாக உள்ளவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சில மணி நேரம், சில நாள், சில மாதம் தான் இப்படிப்பட்ட நிலை நீடிக்குமாம். ஆனால், மாதக்கணக்கில் நீடித்தால், மனோதத்துவ நிபுணரை பார்க்கத்தான் வேண்டும்.

யாருக்கு வருகிறது மேனியா? அதன் அறிகுறி என்ன?

* பகட்டாக தான் இருப்பர்; ஆனால், எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; எதிர்வாதம் எப்போதும் உண்டு. உச்சமாக சண்டையும் போடுவர்.

* திடீரென உணர்ச்சிவசப்படுவர்; “நீ சொல்றது தப்பு, உனக்கு ஒண்ணும் தெரியாது’ போன்ற வசனங்கள் அடிக்கடி வரும்.

* அதிகமாக செலவழிப்பர்; ஆடம்பரம் பிடிக்கும்; செக்ஸ் போக்கு அதிகமாக இருக்கும்.

* தூங்குவது குறைவாகத்தான் இருக்கும்; ஆனால் சோர்வே தெரியாது.

* எதிலும் திட்டமிடாத நிலை உள்ளதால், இவர்கள் கடனாளி ஆவதுண்டு. அதனால், மது, போதைக்கும் அடிமையாகிவிடுவர்.

* எந்த ஒரு சிறிய சண்டையும் விர்ர்ர்ரென தலைக்கு ஏறி விடும் என்பதால், எந்த விளைவுகளும் இவர்களுக்கு வந்து சேரும்.

* நார்மலான மனிதர்கள் அல்ல என்பதால், இவர்கள் சாப்பிடுவதிலும், சிரிப்பதிலும், அழுவதிலும் மிகவும் அதிகமாகவே இருப்பர். இவர்கள் எல்லா நடவடிக்கையும் நார்மலுக்கு மாறாகவே இருக்கும்.

http://elandangudi.b...og-post_23.html

நன்றி செப் பகிர்வுக்கு...அக்காவுக்கும் நன்றியை சொல்லிவிடுங்கள்..எனக்கு உறைப்பாய்த்தான் வேணும்..செத்தல் மிள்காய் கூடப் போட்டுத்தான் செய்து பாக்கப் போறன்....

எதுக்கும் சேதாரங்களையும் யோசிக்கவேணும் . பாத்துச்செய்யுமென் சுபேஸ் . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு .

செய்முறைக்கு நன்றி கோமகன், முக்கியமாய் மேலிடத்துக்கு!!

நீண்ட நாட்களின் பின்பு கண்டதில் மகிழ்ச்சி சுவியர் . உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் .

அடுத்த நாள் வேலைக்குப் போகும்போது வெள்ளைகள் இரண்டடி எட்டி நிற்பதற்கு

இது நல்ல சட்ணி :D

ஏன் வெள்ளையள் ஏதோ சுத்தபத்தமான ஆக்கள் மாதிரியல்லோ கதைக்கிறிங்கள் வாத்தியார் . உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோ

இலகுவானதும் ஆரோக்கியத்துக்கு தேவையானதுமான இணைப்புக்கு.

நானும் எத்தனை தரம் எந்த வழியில் உள்ளியை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினாலும் ஏதோ ஒரு வகையில் அது எனக்கு ஊட்டப்பட்டுவிடும். பருத்தித்துறையின் பரிசு அது.

  • கருத்துக்கள உறவுகள்

கொலொஸ்திரோலை மட்டுமல்ல இன்னும் பல இன்னோரன்ன வாதங்களையும் விரட்ட வல்லது உள்ளி . பின்வரும் இணைப்பையும் பாருங்கோ . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துகளுக்கு .

உணவில் பூண்டு சேர்க்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? இல்லையெனில், இனியாவது சேருங்கள்; பூண்டில் இல்லாத சத்துக்களே இல்லை. உங்கள் குடும்ப டாக்டர் பில் குறையணும்; இருமல், காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், பூண்டை விட சிறந்தது வேறில்லை.

கடுகு, மிளகு, தனியா போன்ற அன்றாட உணவு தானியங்களில் ஆரம்பித்து, நாம் பல ஆண்டாக பின்பற்றும் தானியங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் சரி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் சரி, இந்த தானியங்கள் தான் சுவை சேர்க்கின்றன.

எளிய முறையில் பயன்படுத்தக்கூடிய இந்த உணவு தானியங்களில் உள்ள மகிமை, இப்போதுள்ள தலைமுறையினருக்கு தெரிவதில்லை என்பது வேதனை தான். இந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் பூண்டு, நமக்கு தரும் மருத்துவ பயன்கள் பட்டியலிட முடியாதவை. சீனாவில் யுன்னான் மாகாணத்தில் தான் முதன் முதலில் பிறந்தது இந்த வெங்காய குடும்ப வகையை சேர்ந்த பூண்டு. சீனாவை அடுத்து அதிகமாக உற்பத்தி செய்வது இந்தியா தான். மருத்துவ, உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், இப்போது தான் பூண்டு மகிமை பலருக்கு தெரிகிறது.

* தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.

* பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.

* பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.

* உணவில் சேர்த்தால் நல்லது தான்;ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.

* தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள்.

* சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.

* ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

* பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

* கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

* அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும்.

* பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.

சரியான “மேனியா’வா?

அநியாயத்துக்கு சிலருக்கு, அர்த்தமே இல்லாமல் கடுங்கோபம் வரும்; இந்த அனுபவம் உண்டா உங்களுக்கு? இப்படிப்பட்டவர்களை சரியான “மேனியா’வாக இருக்கிறாரே மனுஷன்…என்று அழைப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மேனியா என்றால் என்ன தெரியுமா? சாதாரண மனிதராக இல்லாமல், அடிக்கடி கோபம், தேவையில்லாமல் சீற்றம், எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள தயாரில்லா குணம் கொண்டவர் என்று பொருள். மனோரீதியான பிரச்னை உள்ளவர். சாதா மேனியாவாக உள்ளவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சில மணி நேரம், சில நாள், சில மாதம் தான் இப்படிப்பட்ட நிலை நீடிக்குமாம். ஆனால், மாதக்கணக்கில் நீடித்தால், மனோதத்துவ நிபுணரை பார்க்கத்தான் வேண்டும்.

யாருக்கு வருகிறது மேனியா? அதன் அறிகுறி என்ன?

* பகட்டாக தான் இருப்பர்; ஆனால், எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; எதிர்வாதம் எப்போதும் உண்டு. உச்சமாக சண்டையும் போடுவர்.

* திடீரென உணர்ச்சிவசப்படுவர்; “நீ சொல்றது தப்பு, உனக்கு ஒண்ணும் தெரியாது’ போன்ற வசனங்கள் அடிக்கடி வரும்.

* அதிகமாக செலவழிப்பர்; ஆடம்பரம் பிடிக்கும்; செக்ஸ் போக்கு அதிகமாக இருக்கும்.

* தூங்குவது குறைவாகத்தான் இருக்கும்; ஆனால் சோர்வே தெரியாது.

* எதிலும் திட்டமிடாத நிலை உள்ளதால், இவர்கள் கடனாளி ஆவதுண்டு. அதனால், மது, போதைக்கும் அடிமையாகிவிடுவர்.

* எந்த ஒரு சிறிய சண்டையும் விர்ர்ர்ரென தலைக்கு ஏறி விடும் என்பதால், எந்த விளைவுகளும் இவர்களுக்கு வந்து சேரும்.

* நார்மலான மனிதர்கள் அல்ல என்பதால், இவர்கள் சாப்பிடுவதிலும், சிரிப்பதிலும், அழுவதிலும் மிகவும் அதிகமாகவே இருப்பர். இவர்கள் எல்லா நடவடிக்கையும் நார்மலுக்கு மாறாகவே இருக்கும்.

http://elandangudi.b...og-post_23.html

எதுக்கும் சேதாரங்களையும் யோசிக்கவேணும் . பாத்துச்செய்யுமென் சுபேஸ் . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு .

நீண்ட நாட்களின் பின்பு கண்டதில் மகிழ்ச்சி சுவியர் . உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் .

ஏன் வெள்ளையள் ஏதோ சுத்தபத்தமான ஆக்கள் மாதிரியல்லோ கதைக்கிறிங்கள் வாத்தியார் . உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் .

நல்ல பயன் உள்ள தகவல்கள் நன்றி சகோதரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.