Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி கூட்டுப்படைத்தலைமையகத்தில் அவமதிக்கப்பட்ட இந்தியத் துணைத் தூதரக அதிகாரி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

v.mahalingam-100x100.jpg

யாழ். பலாலி கூட்டுப்படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற, வன்னிப் போரில் உயிரிழந்த முப்படையினருக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வின் போது யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரி சென்றிருந்த போதிலும் அவரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் என்னை ஏன் மதிக்கவில்லை என்று அவர் நேரடியாகவே இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பிக் கவலைப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

இன்று பகல், பலாலி கூட்டுப்படைத் தலைமையக மண்டபத்தில் இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது. நிகழ்விற்கென யாழ்ப்பாணத்தின் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். தென்னிலங்கையில் இருந்தும் மக்கள் அழைத்துவரப்பட்டிருக்கின்றனர்.

அவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் பெண்களுக்கு உயர்தர மாணவர்களைக் கொண்டு நிகழ்வுச் சின்னம் அணிவித்தலும் இடம்பெற்றிருக்கின்றது. நிகழ்விற்குச் சென்றவர்களை இராணுவத்தினரே வரவேற்றிருக்கின்றனர்.

இந்நிலையில் அங்கு சென்றிருந்த இந்தியத் துணைத் தூதரக அதிகாரி மகாலிங்கம், மற்றும் யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரை எவரும் திரும்பிப்பார்க்கவில்லை என்றும், இறுதியில் நிகழ்வு முடிவடையும் நேரத்தில் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியைச் சந்தித்த அதிகாரி மகாலிங்கம் ஏன் என்னைப் புறக்கணிக்கிறீர்கள்? என்று மிகுந்த மனவேதனையோடு கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு பதிலளித்த இராணுவத்தளபதி இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது வடமாகாண சபை என்றும் இதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

வடமாகாண ஆளுநர் சந்திரசிறீ நிகழ்விற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டிருந்தாக தெரியவருகிறது.

http://www.saritham.com/?p=59917

ம்ம்ம் இந்திய அவமதிப்பு என்பதே மாபெரும் தவறுகளில் ஒன்று .இந்தியா என்றாவது பழி வாங்கும் . பல வருடங்கள் கழித்து கூட

இந்தியா இலங்கையை மதித்து நடக்கிறதேதவிர, இலங்கை எப்போது இந்தியாவை இந்தியாவை மதித்து செயல்பட்டிருக்கிறது?

இந்தியா துணைத்தூதர் இதை அங்க்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டு மேலும் அவமானப்பட்டுள்ளார்.

கௌரவத்தை இலங்கையிடம் கேட்டு வாங்கும் நிலையில் இந்தியா இருப்பது வெட்கம்.

இந்தியா இலங்கையை மதித்து நடக்கிறதேதவிர, இலங்கை எப்போது இந்தியாவை மதித்து செயல்பட்டிருக்கிறது?

இந்தியா துணைத்தூதர் இதை அங்க்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டு மேலும் அவமானப்பட்டுள்ளார்.

கௌரவத்தை இலங்கையிடம் கேட்டு வாங்கும் நிலையில் இந்தியா இருப்பது வெட்கம்.

ஆகா ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்கையா

  • கருத்துக்கள உறவுகள்

87ல் கொழும்பில சிங்கள இராணுவீரர் ஒருவர் துப்பாக்கியினால் அடித்து இந்தியப் பிரதமருக்கு வரவேற்பு கொடுத்ததினை விட இது பரவாயில்லை மகாலிங்கம் அவர்களே.

சூடு, சொரணை, மானம், ரோஷம் இல்லாத கையேந்திகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் இந்திய அவமதிப்பு என்பதே மாபெரும் தவறுகளில் ஒன்று .இந்தியா என்றாவது பழி வாங்கும் . பல வருடங்கள் கழித்து கூட

அதுசரி எப்பொழுது என்ன செய்தற்காக

ஈழ தமிழர்களை பழிவாங்கியது இந்தியா ?

நான் இணைத்த கருத்தை காணோம் ! :rolleyes:

இந்தியக் காட்டுமிராண்டி பிச்சைக்கார ராஜதந்திரிகள் - மரியாதையைப் பிச்சையெடுப்பதில் என்ன புதினமோ?

சீனாவில் இந்திய வர்த்தகர்களுக்காக அடிவாங்கியவரும் ஒரு தமிழ் தூதர்தானே. மலையாளிகளுக்கு மட்டும் தானா கொழும்பு, அமெரிக்கா மாதிரி சோக்கு பண்ணத்தக்க இடங்கள் கொடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் இந்திய அவமதிப்பு என்பதே மாபெரும் தவறுகளில் ஒன்று .இந்தியா என்றாவது பழி வாங்கும் . பல வருடங்கள் கழித்து கூட

இந்திய மாயையில்.... சிக்கியுள்ளீர்கள், தமிழ்ப் பைத்தியம்.

இதனை, இந்திரா காந்தி காலத்தில் சொன்னால் ஏற்கக் கூடியது.

இப்போ... இருக்கும் காந்தி காலத்தில்.... சொல்லி, உங்களை.... நீங்களே... ஏமாற்ற வேண்டம்.

ம்ம்ம் இந்திய அவமதிப்பு என்பதே மாபெரும் தவறுகளில் ஒன்று .இந்தியா என்றாவது பழி வாங்கும் . பல வருடங்கள் கழித்து கூட

கஷ்டம்.

இந்தியாதான் அவர்களிடம் பின்னொருநாளில் மன்னிப்புக் கேட்க வேண்டி வரும்.

சிங்களவர்களின் இராஜதந்திரம் அபாரமானது.

வரலாறு, சிங்களவர்களுக்கு, சீனர்களை உபத்திரம் தராதஉண்மையான நண்பனாகக் காட்டிச் சென்றுள்ளது. அதையே சிறிலங்காவிற்கும் சீனாவும் செய்கிறார்கள்.

ஒரு நாளும் இந்தியாவை நம்பி உண்மையான சீன நண்பனைக் கைவிட கைவிட மாட்டார்கள்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சிங்கள அடிவருடி பலாலி விமானப்படைத் தளத்தில் சிங்கள கீழ்நிலை அதிகாரி ஒருவனால் அடக்கப்படும் காட்சி, ஆகா, காணக் கண்கள் இரண்டு போதவில்லையே. பின்னர் கடுப்பாகி முகத்தைக் குரங்கிடம் கொடுத்தவன் நிற்கும் காட்சி, அருமையோ அருமை !!!!

17_05_2012_Palaali_01_98140_445.jpg

17_05_2012_Palaali_05_98156_200.jpg

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சிங்கள அடிவருடி பலாலி விமானப்படைத் தளத்தில் சிங்கள கீழ்நிலை அதிகாரி ஒருவனால் அடக்கப்படும் காட்சி, ஆகா, காணக் கண்கள் இரண்டு போதவில்லையே. பின்னர் கடுப்பாகி முகத்தைக் குரங்கிடம் கொடுத்தவன் நிற்கும் காட்சி, அருமையோ அருமை !!!!

17_05_2012_Palaali_01_98140_445.jpg

17_05_2012_Palaali_05_98156_200.jpg

இவங்கள் இப்படி நடந்து கொள்வதால் தான் சிங்களவன் இவையளை கணக்கெடுப்பதில்லை :D :icon_mrgreen:

சிங்கவன் செய்வதையெல்லாம் பார்த்துகொண்டு இருப்பாங்கள் ஆனால் தமிழன் ஏதாவது சொன்னாலோ செய்தாலோ கோபம் புட்டுக்கொண்டுவருகுது சிலருக்கு :(

இந்திய சிங்கள அடிவருடி பலாலி விமானப்படைத் தளத்தில் சிங்கள கீழ்நிலை அதிகாரி ஒருவனால் அடக்கப்படும் காட்சி, ஆகா, காணக் கண்கள் இரண்டு போதவில்லையே. பின்னர் கடுப்பாகி முகத்தைக் குரங்கிடம் கொடுத்தவன் நிற்கும் காட்சி, அருமையோ அருமை !!!!

17_05_2012_Palaali_01_98140_445.jpg

17_05_2012_Palaali_05_98156_200.jpg

roflmao.gifroflmao.gifroflmao.gif

ஐயொ ஐயொ மகெ அம்மே

roflmao.gifroflmao.gifroflmao.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.