Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறியச் செய்வேன்

Featured Replies

ஓடுகின்ற கால்கள்

ஓய்வெடுக்கும் போது

நான் எடுத்துக்கொண்ட பயணம்

முடிந்திருக்க வேண்டும்!

வாழ்ந்த நாட்களை

திரும்பிப் பார்க்கும் போது

என் பெயரை சிலர்

உச்சரிக்க வேண்டும்!

கோபுரங்களின் அழகை

அத்திவாரங்கள் தாங்குவது போல்

நான் பிறந்ததின் பயனை

ஊரறியச் செய்வேன்

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்ந்த நாட்களை

வாழும் நாட்களில்

திரும்பிப்பார்ர்க்கும்போது

வீணே வீழ்ந்த நாட்களாய்

வெறுமையாய் போன நாட்களாய்

இல்லாமல்

நான் பிறந்ததின் பயனை

ஊரறியச் செய்வேன்

என உறுதி எடுக்கும்

உங்கள் கவிதை அழகு...

பாராட்டுக்கள்... ஆனால் உவமானங்கள்தான் ஏதோ ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதைவைபோல் துருத்திக்கொண்டு நிற்கின்றன்..எடிற் பண்ணி இன்னும் மெருகேற்றினால் நன்றாய் இருக்கும்... :)

Edited by சுபேஸ்

நன்றாக இருக்கிறது. நீங்கள் நினைப்பது நிறைவேற என் வாழ்த்துகள். :) இது உங்கள் ஆசை மட்டுமல்ல. பலருடைய ஆசை இதுதான். :)

Edited by காதல்

  • தொடங்கியவர்

வாழ்ந்த நாட்களை

வாழும் நாட்களில்

திரும்பிப்பார்ர்க்கும்போது

வீணே வீழ்ந்த நாட்களாய்

வெறுமையாய் போன நாட்களாய்

இல்லாமல்

நான் பிறந்ததின் பயனை

ஊரறியச் செய்வேன்

என உறுதி எடுக்கும்

உங்கள் கவிதை அழகு...

பாராட்டுக்கள்... ஆனால் உவமானங்கள்தான் ஏதோ ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதைவைபோல் துருத்திக்கொண்டு நிற்கின்றன்..எடிற் பண்ணி இன்னும் மெருகேற்றினால் நன்றாய் இருக்கும்... :)

மிக்க நன்றிகள் சுபேஸ் உங்கள் பதில் கவிதைக்கு . உங்கள் அளவுக்கு என்னால் வரமுடியுமா ? ஏதோ நம்மளாலை முடிஞ்சது .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நன்றாக இருக்கிறது. நீங்கள் நினைப்பது நிறைவேற என் வாழ்த்துகள். :) இது உங்கள் ஆசை மட்டுமல்ல. பலருடைய ஆசை இதுதான். :)

ஏதோ ஒரு வேகத்தில் எழுதி விட்டேன்

பரீட்ச்சை முடிவுக்குக்

காத்திருக்கும் மாணவன் போல .

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இப்படிச் சொல்லிட்டிங்கள் கோமகன் ,

உங்கள் பெயரை உச்சரிக்கும் அந்தச் சிலரில் நானும் ஒருவனாய் இருப்பேன்!!

பாராட்டுக்கள்... ஆனால் உவமானங்கள்தான் ஏதோ ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதைவைபோல் துருத்திக்கொண்டு நிற்கின்றன்..எடிற் பண்ணி இன்னும் மெருகேற்றினால் நன்றாய் இருக்கும்... :)

கோவின் இந்தக் கவிதையில் துருத்திக்கொண்டு நிற்பதாய் "கோபுரம்" மட்டுந்தான் தெரிகிறது. கவிதையில் அதை அவர் தொட்டது தவறில்லைத்தானே???

எளிமையான வரிகளில்.... அழகான கவிதை!

கோவிற்கு பாராட்டுக்கள்!

***சுபேஸுக்கும் எனக்குமான புரிந்துணர்வின் அடிப்படையில் திருத்தப்பட்டுள்ளது***

சக கள உறவுகள் தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்!

Edited by கவிதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை .தொடருங்கள்.

லியோ

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அண்ணாவின் கவிதையைப் பார்த்த ஆர்வத்தில் எழுதியது......

ஓடுகின்ற கால்கள்

ஓய்வெடுக்கும் போது

என் உயிர் துடிப்பின்

கடைசி நிமிடங்கள்

விடைபெறும் போது

மரணத்தின் காலடியில் நான்

மண்டியிடும் போது

எடுத்துக்கொண்ட

என் பயணம்

முடிந்திருக்க வேண்டும்!

ஓய்ந்திருந்து ஒருபொழுது

நான் வாழ்ந்தழித்த

நாட்களை

என் வாழும் நாளில்

திரும்பிப்பார்ர்க்கும்போது

வீணே வீழ்ந்தழிந்த நாட்களாய்

வெறுமையாய் தேய்ந்தழிந்த நாட்களாய்

இல்லாமல்

என் பெயரையும் அழுத்தமாய்

பலர் உச்சரித்த நாட்களாய்

இருக்கவேண்டும்....

அஸ்திவாரங்களின் பெருமையை

அமைதியாய்

கோபுரங்கள் பேசுவதுபோல்

செத்துப்போனாலும் என் பெயரை

சாகவிடாமல்

நான் வாழ்ந்து சென்ற

நாட்கள் பேசட்டும்...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அத்திவாரம் என வரவேண்டுமோ..?...............அஸ்தி = சாம்பல்.........

***சுபேஸுக்கும் எனக்குமான புரிந்துணர்வின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது***

சக கள உறவுகள் தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்!

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

*

Edited by சுபேஸ்

***சுபேஸுக்கும் எனக்குமான புரிந்துணர்வின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது***

சக கள உறவுகள் தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்!

Edited by கவிதை

  • தொடங்கியவர்

இதென்ன இப்படிச் சொல்லிட்டிங்கள் கோமகன் ,

உங்கள் பெயரை உச்சரிக்கும் அந்தச் சிலரில் நானும் ஒருவனாய் இருப்பேன்!!

சந்தோசம் சுவியர் உங்கடை கருத்துக்கு .

அத்திவாரம் என வரவேண்டுமோ..?...............அஸ்தி = சாம்பல்.........

ரீச்சர் எண்டால் இப்பிடித்தான் இருக்கவேணும் . மூல இணைப்பில் மாத்தி விட்டிருக்கிறன் .

  • தொடங்கியவர்

நல்ல கவிதை .தொடருங்கள்.

லியோ

மிக்க நன்றிகள் லியோ உங்கள் கருத்துக்களுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்துக்கொண்ட கரு அருமை

வாழ்த்துக்கள் கோ.

மூன்றாவது பகுதியில் கரு தடுமாறுகிறது. அதனையே சிலர் இங்கு குறிப்பிடுகின்றனர்.

தொடரட்டும்

ஓடுகின்ற கால்கள்

ஓய்வெடுக்கும் போது

என் உயிர் துடிப்பின்

கடைசி நிமிடங்கள்

விடைபெறும் போது

மரணத்தின் காலடியில் நான்

மண்டியிடும் போது

எடுத்துக்கொண்ட

என் பயணம்

முடிந்திருக்க வேண்டும்!

ஓய்ந்திருந்து ஒருபொழுது

நான் வாழ்ந்தழித்த

நாட்களை

என் வாழும் நாளில்

திரும்பிப்பார்ர்க்கும்போது

வீணே வீழ்ந்தழிந்த நாட்களாய்

வெறுமையாய் தேய்ந்தழிந்த நாட்களாய்

இல்லாமல்

என் பெயரையும் அழுத்தமாய்

பலர் உச்சரித்த நாட்களாய்

இருக்கவேண்டும்....

அஸ்திவாரங்களின் பெருமையை

அமைதியாய்

கோபுரங்கள் பேசுவதுபோல்

செத்துப்போனாலும் என் பெயரை

சாகவிடாமல்

நான் வாழ்ந்து சென்ற

நாட்கள் பேசட்டும்...

  • தொடங்கியவர்

என்மீது கொண்ட அபிமானத்தாலும் , அன்பினாலும் எனது தம்பிகளான கவிதை , சுபேஸ் இருவரினது " விவாதங்கள் " என்கின்ற முரண்களை நான் ரசிக்கவுமில்லை , சந்தோசப்படவுமில்லை , மாறாக மிகவும் கவலையும் , விசனமும் அடைந்துள்ளேன் . நீங்கள் இருவரும் முரண்களைக் களைந்து முன்பு போல் பல படைப்புகளைக் வெளிக் கொண்டு வரவேண்டும் என்பதே எனது ஆவல் . நிறைவேற்றுவீர்களா ????

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

எடுத்துக்கொண்ட கரு அருமை

வாழ்த்துக்கள் கோ.

மூன்றாவது பகுதியில் கரு தடுமாறுகிறது. அதனையே சிலர் இங்கு குறிப்பிடுகின்றனர்.

தொடரட்டும்

புரிகிறது விசுகர் எழுத எழுத மெருகேறும் என்று நம்புகின்றேன் . நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

புரிந்துணர்வின அடிப்படையில் நீக்கப்பட்டது...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்

***சுபேஸுக்கும் எனக்குமான புரிந்துணர்வின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது***

சக கள உறவுகள் தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்!

என் சொல் கேட்ட இருதம்பிகளுக்கும் என்றுமே நன்றியுடையவனாக இருப்பேன் .

புரிந்துணர்வின அடிப்படையில் நீக்கப்பட்டது...

என் சொல் கேட்ட இருதம்பிகளுக்கும் என்றுமே நன்றியுடையவனாக இருப்பேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.