Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்

ranvade_maharashtra_a_village_ruled_by_unity_not_politics_image_title_yykfu_490x490.jpg?w=510

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் அல்ல; ஆனால், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் கணிசமான பேர் திமுக காரர்கள்தான்.

விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, நன்கொடை தருவது என்பதை திமுகவின் தமிழ் உணர்வு கொண்ட தொண்டர்களிடம்தான் இன்றும் காண முடிகிறது.

தலைமையை மீறிய இந்த அரசியல் உணர்வு மரியாதைக்குரியதாக இருக்கிறது.

ஈழப் பிரச்சினையின் காரணமாகவே பல தொண்டர்கள் திமுகவிலிருந்து வெளியேறியும் இருக்கிறார்கள். (வைகோ மற்றும் அவரை ஆதரித்தவர்கள்)

இதற்கு நேர் எதிராக, அதிமுகவின் தலைவர் எம்.ஜி.ஆர் தீவிரமான விடுதலைப் புலிகளின் ஆதரவாளர், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிறைய பண உதவி செய்தவர் என்று அவரை பற்றிய புகழுரை இன்றும் பேசப்படுகிறது.

அதற்கு நேர் மாறாக, ஒரே ஒரு அதிமுக காரரைக்கூட விடுதலைப் புலிகள் ஆதரவாளராகவோ, ஈழ விடுதலை ஆதரவாளராகவோ பார்க்க முடியவில்லை.

குறிப்பாக, ஈழப் பிரச்சினையை தன் கட்சிக்குள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அவர் தன் தொண்டர்களிடம் அறிமுகம் கூட செய்யவில்லை.

அதற்கு அடையாளமாகத்தான் எம்.ஜி.ஆருக்கு பிறகு, தனி ஈழத்திற்கும், புலிகளுக்கும் எதிரான ஒருவர் அந்தக் கட்சிக்கு தலைவராகவும் வர முடிந்தது.

ஜெயலலிதா பகிரங்கமாக, புலிகளுக்கு எதிராகவும், தனி ஈழத்திற்கு எதிராகவும் கருத்து சொன்னபோது, விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான எம்.ஜி.ஆர் மீது, பக்தி கொண்ட தொண்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்ல,

“அய்யோ.. விடுதலைப் புலிகளா, அவுங்க மோசமான ஆளுங்கப்பா… ராஜிவ் காந்தியையே கொன்னுட்டானுங்கப்பா..” என்றும்,

“அட, இலங்கைக்குபோய் அவுங்க நாட்ல இருந்துகிட்டு.. தமிழ் ஆளுங்க ஏம்பா தனிநாடு கேக்குறாங்க? அதனாலதாம்ப அவன் இவனுங்கள சுடுறான்..” என்றும் பொறுப்பற்று பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு தீவிரமான ரகசியமாக ஆதரவு தெரிவித்த எம்.ஜி.ஆர்., தன் கட்சிக்குள் தொண்டர்களிடம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாககூட அல்ல, ஈழ மக்களுக்கு ஆதரவாகக்கூட அரசியல் உணர்வை ஊட்டாமல் போனது ஏன்?

எம்.ஜி.ஆர் தன் தொண்டர்களை அரசியல் படுத்தியிருந்தால் அது புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததைவிட மிகப் பெரிய உதவியாக ஈழ மக்களுக்கு இருந்திருக்கும்.

குறிப்பாக, லட்சக் கணக்கான தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட காலங்களில், தமிழகத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாக போராடுகிற அரசியல் உணர்வு இருந்திருந்தால், அந்த மக்களை நாம் காப்பாற்றி இருக்கலாம்.

http://mathimaran.wordpress.com/2012/05/30/536/

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க. வினர் வெளிப்படையாக குரல் கொடுக்காமைக்கு காரணம், பின்பு ஒரு நேரம் கட்சித் தலைமையால்... ஓரம் கட்டப்படலாம் என்ற முன் எச்சரிக்கை உணர்வாக இருக்கலாம்.

திமுகவினரும் வெளிப்படையாகக் குரல் கொடுத்தது இல்லை. ஆனால் ஈழ ஆதரவு நிகழ்ச்சிகளிலும், ஊர்வலங்களிலும் திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் பலர் உணர்வோடு கலந்து கொள்வார்கள். முத்துக்குமாரன் ஈகச்சவாவு நிகழ்வுகளிலும் அவர்களில் பலர் கலந்து கொண்டு, தொடர்ந்து பல வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.

இப்படியான இடங்களில் அதிமுக தொண்டர்களை பார்ப்பது அரிது. ஜெயலலிதா சொன்னால் போவார்கள். இல்லையென்றால் பேசாமல் இருந்து விடுவார்கள். ஆதரிப்பதும் ஏன் என்று அவர்களுக்கு தெரியாது. எதிர்ப்பதும் ஏன் என்று தெரியாது. ஒரு சில அதிமுகவினர் இதற்கு விதிவிலக்கு.

ஜெயலலிதா ஆட்சியை இழந்த பின்பு பல பிளவுகள் அதிமுகவுக்குள் ஏற்பட்டது. பல தலைவர்கள் ஒவ்வொரு அணியாக பிரிந்து போனார்கள். ஆனால் யாரும் ஈழப் பிரச்சனையைப் பற்றிப் பேசவில்லை.

இதற்கு காரணம் ஈழப் பிரச்சனையை சரியாக சொல்லிக் கொடுக்க அதிமுகவில் யாரும் இல்லை. அதற்கான அக்கறையும் அங்கே இல்லை.

மாறாக திமுகவில் சுபவீரபாண்டியன் போன்றவர்கள் பல பாசறைகளை நடத்தி ஈழப் பிரச்சனை, திராவிடக் கொள்கைகள் போன்றவற்றை திமுக தொண்டர்கள் மத்தியில் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்.

எம் இனத்தின் விடுதலைக்கான செயல்பாடுகளில் 6 கோடிக்கு மேல் இருக்கும் தமிழக மக்களிடம் அரசியல் கட்சி சார்ந்து ஆதரவை தேட முற்பட்டதின் மோசமான பின் விளைவுதான் இது, தமிழகத்தின் கட்சி அரசியலுக்குள் எம் போராட்டத்துக்கான ஆதரவை தக்க வைக்க முயற்சி செய்த புலிகளினதும் மற்ற இயக்கங்களினதும் செயல்பாடுகளின் விளைவுதான் இது

அ.தி.மு.க கட்சி தொண்டர்கள் எம்மை ஆதரிக்கவில்லை என்றால் அது எம்.ஜி.ஆர் இன் தவறல்ல, எம் தலைமைகளின் மகா தவறு. சக மொழி பேசும், சக இசை பாடும், ஒரே மொழியில் அமைந்த இதிகாசங்களை தமக்குள் பகிரும் ஒரே இனமான தமிழக மக்களிடமே எம் போராட்டத்துக்கான பெரும்பான்மை ஆதரவை கட்சி வேறுபாடு அற்று தேட முடியாத வங்குரோத்தன அரசியலை நடத்திக் கொண்டுதான் நாம் சர்வதேசத்தை வெல்ல முயன்றோம், ஐ.நாவை வளைக்க முயன்றோம், ஒபாமாவை எம் பக்கம் திருப்ப முயன்றோம் என்பதே ஒரு பெரும் முரண்நகை, அல்லது நகைப்புக்கிடமான செயல்.

இனியாவது தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் நாற்காலிச் சண்டைக்குள் எம்மை திளைக்காமல் அரசியல் பண்ணுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

MGR அவர்கள் கட்சிக்கு அப்பால் தலைவர் மேல் வைத்திருந்த நம்பிக்கை, அதுவே கலைஞருக்கு தலைவர் மேல் ஏற்பட்ட விரக்கி இதனிடையே அகப்பட்டு கொண்ட எமது போராட்டம், தமிழ்நாட்டு அரசியலில் சுயநல அரசியல் செய்யும் அரசியல் வாதிகள் இடையே ஏற்பட்ட இடைவெளி .....கலைஞரின் தற்பெருமை பாடும் அரசியலுக்கு சவாலாக தலைவரை மக்கள் நேசித்தமை இவைகள்தான் காரணிகள்.

எம் இனத்தின் விடுதலைக்கான செயல்பாடுகளில் 6 கோடிக்கு மேல் இருக்கும் தமிழக மக்களிடம் அரசியல் கட்சி சார்ந்து ஆதரவை தேட முற்பட்டதின் மோசமான பின் விளைவுதான் இது, தமிழகத்தின் கட்சி அரசியலுக்குள் எம் போராட்டத்துக்கான ஆதரவை தக்க வைக்க முயற்சி செய்த புலிகளினதும் மற்ற இயக்கங்களினதும் செயல்பாடுகளின் விளைவுதான் இது

அ.தி.மு.க கட்சி தொண்டர்கள் எம்மை ஆதரிக்கவில்லை என்றால் அது எம்.ஜி.ஆர் இன் தவறல்ல, எம் தலைமைகளின் மகா தவறு. சக மொழி பேசும், சக இசை பாடும், ஒரே மொழியில் அமைந்த இதிகாசங்களை தமக்குள் பகிரும் ஒரே இனமான தமிழக மக்களிடமே எம் போராட்டத்துக்கான பெரும்பான்மை ஆதரவை கட்சி வேறுபாடு அற்று தேட முடியாத வங்குரோத்தன அரசியலை நடத்திக் கொண்டுதான் நாம் சர்வதேசத்தை வெல்ல முயன்றோம், ஐ.நாவை வளைக்க முயன்றோம், ஒபாமாவை எம் பக்கம் திருப்ப முயன்றோம் என்பதே ஒரு பெரும் முரண்நகை, அல்லது நகைப்புக்கிடமான செயல்.

இனியாவது தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் நாற்காலிச் சண்டைக்குள் எம்மை திளைக்காமல் அரசியல் பண்ணுவோம்

நல்ல கருத்துக்கள்.

கிளிநொச்சி பத்திரிகையாளர் மாநாட்டில் தலைவர் வாயிலிருந்து எப்ப..

"தாய்த்தமிழகத்தையே நாங்கள் நம்பியிருக்கிறோம்"

"தமிழக மக்களே நன்றி"

இப்படியான வார்த்தைகள் வரும் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். (அல்லது நான் கவனிக்காமல் விட்டேனோ ?)

அந்த நேர்முகத்தை தமிழகம் உட்பட உலகமே பார்த்துக் கொண்டிருந்தது.

அதில் இன்னும் ஞாபகத்தில் இருக்கும் காட்சி..

சிங்களப் பத்திரிகையாளர் ஒருவர் "நீங்கள் மதிக்கும் ஓர் சிங்கள இராணுவ அதிகாரி யார் ?" என்று கேட்க, பாலசிங்கத்தார் கருணாவிடம் "உனக்கு யாரையாவது தெரியுமாப்பா ?" என்று கேட்கிறார்.

இவர்கள் என்ன என்னை மதிக்கிறார்கள் இல்லை என்ற தோறனையில் கருணா முகத்தைச் சுழித்துக் கொண்டு இல்லையெண்டது..

நல்ல கருத்துக்கள்.

கிளிநொச்சி பத்திரிகையாளர் மாநாட்டில் தலைவர் வாயிலிருந்து எப்ப..

"தாய்த்தமிழகத்தையே நாங்கள் நம்பியிருக்கிறோம்"

"தமிழக மக்களே நன்றி"

இப்படியான வார்த்தைகள் வரும் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். (அல்லது நான் கவனிக்காமல் விட்டேனோ ?)

அந்த நேர்முகத்தை தமிழகம் உட்பட உலகமே பார்த்துக் கொண்டிருந்தது.

இரண்டு தடவை (வடிவாக தெரியவில்லை) தலைவர் அவர்கள் மாவீரர் நாள் உரையில் தமிழக மக்களுக்கும் தமிழக தலைவர்களிற்க்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.