Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வந்தோரை வாழ வைத்த தமிழன்(ஏமாந்திட்டமே)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வந்தோரை வாழ வைத்த தமிழன் என்று எவ்வளவோ பெருமையாக இருந்தது.தமிழனுக்கென்று எத்தனை எத்தனை பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் எல்லாம் இருந்தன இன்னமும் இருக்கிறது.என்னைப் போலவே உலகெல்லாம் வாழும் எத்தனையோ தமிழர்கள் இன்றும் இதில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அண்மையில் ஒரு இந்திய நண்பர் இந்தப் பட்டம் தமிழர்களுக்கு எப்படி வந்தது என்று தெரியுமா? என்று கேட்டார்.

அடடே இதுக்கு வேறே ஒரு கதையும் இருக்கிறதா?தெரியாமல் போச்சே கொஞ்சம் விபரமாத் தான் சொல்லுங்களேன் என்றேன்.

சரி ஆரம்பத்தில் வியாபாரம் என்று நாடு பிடிக்க வந்தவர்கள் அத்துடன் மட்டும் நின்றுவிடாமல் மதம் பரப்பும் வேலையையும் வெகு மும்மரமாக செய்யத் தொடங்கினார்கள்.

ஆனால் அவர்கள் நினைத்தது போல் எல்லா இடங்களிலும் அவர்களின் முயற்சி வெற்றியழிக்கவில்லை.கடைசியில்த் தான் தமிழ் நாடு(அப்போது கேரளாவும்)க் கரையோரம் வந்த பாதிரியார்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது என்னவென்றால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஒவ்வொரு இடமாக ஓடித்திரிந்து கொண்டிருந்தவர்களுக்கு தெற்கிலே அமோக வரவேற்புக்கிடைத்தது.

ஆரம்பத்தில் மதத்தை பரப்புவது பெரிய ஒரு பிரச்னையாக மொழி இருந்தது.அவர்கள் எவ்வளவோ முயற்சி பண்ணியும் ஆமை வேகத்திலேயே பரப்புரைகள் நடந்து கொண்டிருந்தன.

அந்த நேரத்தில்த் தான் எல்லோருக்கும் ஆங்கிலம் கற்பித்து மதத்தைப் பரப்புவதை விட நாமே தமிழ் கற்றுக் கொண்டால் ஒரு வேலை தான் இருக்கும் என்றும் எல்லோர் மத்தியிலும் போய் பிரச்சாரம் செய்யலாம் என்றும் துரிதகதியில் தமிழைப் படித்து அவர்கள் எண்ணங்களையும் நிறைவேற்றிக் கொண்டனர்.

இன்றும் கூட தமிழ்நாட்டில் அதே பாணியில்த் தான் நடிகர்களோ அரசியல்வாதிகளோ ஏன் முதலமைச்சராக கூட வேற்று இனத்தவர்கள் வெகு சுலபமாக புகுந்து விளையாடுறாங்க.

இப்ப சொல்லுங்க இன்னும் கூட இதை நினைத்து பொருமைப்படுறீங்களா என்று கேட்டு பெரியதொரு அணு குண்டையே தூக்கிபோட்டுவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஹாங்கீர் காலத்திலே வந்து போட்டார்கள் பாதிரி மார்கள்..

போகட்டும் நல்ல ஆக்கம்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

அப்ப வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றினை சேவையெல்லாம் எங்கை போட்டுது???????????

அப்ப வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றினை சேவையெல்லாம் எங்கை போட்டுது???????????

அதுதானே ................

  • கருத்துக்கள உறவுகள்

வந்தாரை வாழவைத்தான் தமிழன், அதுமட்டுமா

தன்னிடம் தோற்று புறமுதுகிட்டோடும் எதிரியை பின்புறமாய் நின்று கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்று

அவனை இன்று போய் நாளை வா என்று சொல்லி வீட்டுக்கும் அனுப்பி வைச்சான்

இந்த பண்பு வேறு எந்த இனத்தின் கலாசாரத்தில் இருக்குமா தெரியவில்லை.

உண்மையில் இங்கு தான் தமிழனின் அழிவு தொடங்கியிருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன்.

அப்ப வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றினை சேவையெல்லாம் எங்கை போட்டுது???????????

அந்த நேரத்தில்த் தான் எல்லோருக்கும் ஆங்கிலம் கற்பித்து மதத்தைப் பரப்புவதை விட நாமே தமிழ் கற்றுக் கொண்டால் ஒரு வேலை தான் இருக்கும் என்றும் எல்லோர் மத்தியிலும் போய் பிரச்சாரம் செய்யலாம் என்றும் துரிதகதியில் தமிழைப் படித்து அவர்கள் எண்ணங்களையும் நிறைவேற்றிக் கொண்டனர்.

கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை........... ஏன் வறட்சியோ ????????? எங்கடை தமிழ் வாசத்தை வேறை இனத்து வெள்ளையன் வந்து கிண்டி மணக்க வைச்ச நிலமையில தான் கேடுகெட்ட தமிழன் இருந்தவன் . இதுக்குள்ளை வெள்ளை பாதிரியள் தங்களை ஏமாத்திப் போட்டாங்கள் எண்டு சவுண்ட் வேறை . திருக்குறளையும் சர்வதேச தரத்துக்கு கொண்டு வந்ததும் வெள்ளை பாதிரி போப் தான் . வந்துட்டினம் வெறும் வாய் மெல்லுறதுக்கு .

**** மற்றவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை தவறுதலாக எனக்கு குவாட் செய்து விட்டேன் . மன்னிக்கவும் .

Edited by கோமகன்

அப்ப வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றினை சேவையெல்லாம் எங்கை போட்டுது???????????

[size=1]

[size=4]வீரமாமுனிவர் நல்லவர், ஆனால் அவரை போன்றவர்கள் பதவிகளில் அதிகாரத்தில் இருக்கவில்லை, இன்றும் இல்லை. அதனால் தமிழுக்கு அவரால் முடிந்ததை செய்தார், நன்றிகள். [/size][/size]

[size=1]

[size=4]ஆனால் இன்றோ தமிழை விழுங்கும், அழிக்கும் ஆட்கள்தான் தமிழரை சுற்றி உலகில் உள்ளனர். [/size][/size]

வந்தாரை வாழவைத்தான் தமிழன், அதுமட்டுமா

தன்னிடம் தோற்று புறமுதுகிட்டோடும் எதிரியை பின்புறமாய் நின்று கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்று

அவனை இன்று போய் நாளை வா என்று சொல்லி வீட்டுக்கும் அனுப்பி வைச்சான்

இந்த பண்பு வேறு எந்த இனத்தின் கலாசாரத்தில் இருக்குமா தெரியவில்லை.

உண்மையில் இங்கு தான் தமிழனின் அழிவு தொடங்கியிருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன்.

[size=1]

[size=4]உண்மை. [/size][/size][size=1]

[size=4]அத்துடன் சோழன் வடக்கில் இருந்து பார்ப்பனர்களை வரவேற்றான். அவர்களோ இறுதியில் தமிழர்களின் தலையில் ஏறி நிற்கிறார்கள். [/size][/size][size=1]

[size=4]ஈழத்தில் எல்லாளன் கெமுனுவுடன் மோதினான் இன்று கெமுனு படைகள் தமிழரை இல்லாமல் செய்கின்றன. [/size][/size]

ஆம் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன் அகூதா ......இதனுடன் சம்பத்தப்பட்ட ஒரு நினைவுதான் எனக்கு நினைவு வருகிறது

சில வருடங்களிற்கு முன் பெல்ஜியம் நாட்டில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயமான பனு அன்னையின் ஆலய

யாத்திரை ஒன்றிற்கு சென்றிருந்தேன் ....அங்குள்ள வழிபாடு சம்பந்தமாக இசைப்பணிக்கு என்னையும் அழைத்திருந்தார்கள்

அதனால் முதல் நாளே அங்கு செல்லவேண்டிய தேவையினால் நானும் இன்னு பலரும் அங்கு சென்று எமக்காக ஒதுக்க

பட்ட விடுதியில் இரவு தங்கினோம் ......அங்கு ஒரு வெள்ளைக்கார பாதிரியாரும் எம்முடன் இருந்தார் ....ஆனால்

அவர் அழகான தமிழிலே எம்முடன் உரையாடினார். எனக்கு மகிழ்ச்சியாகவும்,வியப்பாகவும் இருந்தது....இங்கு கொடுமை என்னவென்றால் எம்முடன் தங்கியிருந்த எம்

தமிழர்களில் இருவர் அவர் தமிழில் கேட்ட கேள்விக்கு ஆங்கிலத்திலேயே பதில் கூறினார். அந்த இருவரும் நன்றாக

படித்த பெரியமனிதர்கள் என்னும் வட்டத்திற்குள் அடங்குபவர்கள் அவார்கள் ......எனக்கு பத்திக்கொண்டு வந்தது ...

அடே தமிழில் ஒரு வேற்று நாட்டவர் அழகாக பேசும்போது இவர்களும் தமிழில் பேசவேண்டியதுதானே ...என்ன கொடுமையடா இது என்று

நினைத்த வேளை அந்தப்பாதிரியார் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டார். ஏன் புராணங்களில் வரும் பாம்பை

நல்ல பாம்பு என்று கூறுவார்கள் என்று .இவர்களும் பதில் கூறினார்கள் ..கடிக்காத பாம்பு, தீங்கிழைக்காத பாம்பு ...

இப்படி பல விடைகள் ...இதற்கும் அதில் ஒருவர் தமிழ் மொழியிலே பண்டிதர் வேறு ........இறுதியில் அவர் சிரித்துவிட்டு

கூறினார் தமிழிலே நல்ல என்ற சொல் கருப்பு நிறத்தையும் குறிக்கும் என்று. அதனால் கருப்பு பாம்பை நல்ல பாம்பு என்று கூறுவார்கள் .........நானும் என்னுடன் இருந்த மற்றொருவரும் கெக்கட்டமிட்டு சிரிக்கத்தொடங்க்கினோம் ..

அத்துடன் அடங்கி விட்டனர் அந்த ஆங்கில மேதைகள்.......உண்மையில் வெளி நாட்டவருக்கு இருக்கும் எம் மொழி மேல் உள்ள ஆர்வம் .எம்மினத்தவர் பலருக்கு இல்லை என்பதுதான் எனக்குரிய கவலை ....இவர்களைபோன்றவர்களும்

எம் மொழியையும்,இனத்தையும் விற்கும் வட்டத்துக்குள்ளே தான் போட்டுப்பார்க்க வேண்டியுள்ளது ...அவர்கள் ஆங்கிலம் பேசியிருக்கலாம்

எம் மொழி தெரியாமல் அவர் இருந்திருந்தால் ......ஆனால் அவர்கள் காட்ட நினைத்தது அங்கு வேறு ஒன்று ...

பின் குறிப்பு ........நல்ல என்னும் அர்த்தம் கருப்பு என்பதையும் குறிக்குமா என்பது இன்றுவரை எனக்கு தெரியாது

தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.....நன்றி......

  • கருத்துக்கள உறவுகள்

-----

[size=1][size=4]உண்மை. [/size][/size]

[size=1][size=4]அத்துடன் சோழன் வடக்கில் இருந்து பார்ப்பனர்களை வரவேற்றான். அவர்களோ இறுதியில் தமிழர்களின் தலையில் ஏறி நிற்கிறார்கள். [/size][/size]

[size=1][size=4]ஈழத்தில் எல்லாளன் கெமுனுவுடன் மோதினான் இன்று கெமுனு படைகள் தமிழரை இல்லாமல் செய்கின்றன. [/size][/size]

எல்லாளன் நினைத்திருந்தால்.... தனது படைகளைக் கொண்டு, எழுத்து வடிவம் பெற்றிராத, சிங்கள மொழியைப் பேசும் இனத்தவர்களை அழித்திருக்கலாம். மற்றவனில் பாவம் பார்க்கப் போனதால் தான்... தமிழன் இன்று, நாடில்லாமல் வாழுகின்றான்.

[size=1]

[size=4]நான் அனுபவத்தில கண்டது, நாலு தமிழர்கள் சேர்ந்து ஒரு சிங்களவனை அடிக்கமுடியாது. அவன் பாவம் என்று அந்த நால்வரில் ஒருவராவது தடுத்து விடுவார். [/size][/size]

[size=1]

[size=4]ஆனால், நாலு சிங்களவர்கள் சேர்ந்து ஒரு தமிழரை அடிக்கும்பொழுது இருக்கும் நாற்பது தமிழர்களும் 'எமக்கு ஏன் பிரச்சனை?' என எண்ணி பயந்து போய்விடுவார்கள். [/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றினை சேவையெல்லாம் எங்கை போட்டுது???????????

இதே போல யாழ்பாணத்தில் கிரீன்

என்று ஒருவர் முதன் முதலில் இலங்கையில் மருத்துவம் படிப்பித்தார், படித்த முதல் தொகுதி மாணவர்கள் தென்பகுதிக்கு சென்று விட்டார்கள் வசதி வாய்ப்பு கருதி. பின் அவர் தமிழ் படித்து தமிழ்லேயே மருத்துவம் படிபித்தார்,. அவர் வேலை செய்த இடம் மானிப்பாய். அந்த நேரத்தில் நியூ யார்க் மேயர் ஆக இருந்தவர் அவரது சகோதரர் - அவர் அன்ன காவடி அல்ல என்று சொல்லுவதர்ர்காக சொல்லுகிறேன், அந்த மேயரே நியூ யோர்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க்கை கட்டினவர்/ திட்டமிட்டு தொடக்கினவர்.

அதே போல பீட்டர் பேர்சிவல், யாழ்பாணத்தின் முக்கிய கல்லூரிகளை இச்தாபித்தவர் - மத்திய கல்லூரி, ஹீர்த்லி, நினைக்கிறன் உடுவில் மகளீர் கல்லூரி, அதற்கு மேல் இப்போது நாங்கள் பேசும், எழுதும் தமிழையை நாவலருக்கு போதித்தவர் பாடசாலை சுவரில் உள்ள படத்தில் இருப்பதோடு சரி- நாவலரை பற்றி ஒரு ஆக்கம் அண்மையில் யாழிலோ வேறு எங்கேயோ வாசித்தேன், அதில் பேர்சிவல் ஐ பற்றி ஒரு தகவலும் இல்லை. நாவலரின் தமிழை பற்றி எழுதுகிறவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள் - நாவலர் தமிழ் படித்தது தமிழ் வாத்தியார்களிடம், ஆனால் அந்த தமிழை எழுத்து தமிழ் ஆக்கியது தான் படித்த ஆங்கில பாடசாலையில் பெற்ற அறிவால் என்பதை மறந்து விடுகிறார்கள்.

200 வருண்டன்களுக்குள் நடத்த வரலாறு தெரியாதவர்கள்தான்,, இலகுவாக மன்தோன்ர கல் தோன்றா கதை அளந்து கொண்டு திரிபவர்கள்...

மிக்க நன்றிகள் எரிமலை . ஒருவிடையத்தைச் சொல்லும்பொழுது நல்லதையும் கெட்டதையும் சொல்லவேண்டும் . ஆனால் எமது மேதைகளின் பார்வை எப்படியெண்டால் , உவப்பானது என்றால் ஒரேயடியாக புகழ்ந்து தள்ளுவது . இல்லையென்றால் எதிர்மறையாக செயல்படுவது . இதைத்தான் நான் எதிர்க்கின்றேன் . மதமாற்றம் நடந்தது என்று ஒப்பாரி வைப்பவர்கள் , ஏன் அப்படி நடந்தது என்பதற்கான காரணங்களை மூடிமறைத்து விடுவார்கள் ? இப்படிப்பட்ட ஒருதலைப்பட்சமான வாதங்கள் தொடர்ந்துவர அதுவே காலப்போக்கில் சரித்திரமாகின்றது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இது எனது வாதமல்ல நண்பர் சொன்ன கதை.நீங்க ரொம்ப உசார் பாட்டி போல.

அவரின் கதை கேட்ட பின் எனக்குள் எழும் கேள்வி

மற்றைய இனத்துடன் ஒப்பிடும் போது எமது இனத்துக்கள் மற்றைய இனம் வெகு சுலபமாக உட்புகுந்து ஆட்டி வைக்கிறார்கள்.

இங்கு கருத்துக்கள் எழுதிய அனைவருக்கும் நன்றிகள்.

மிக்க நன்றிகள் எரிமலை . ஒருவிடையத்தைச் சொல்லும்பொழுது நல்லதையும் கெட்டதையும் சொல்லவேண்டும் . ஆனால் எமது மேதைகளின் பார்வை எப்படியெண்டால் , உவப்பானது என்றால் ஒரேயடியாக புகழ்ந்து தள்ளுவது . இல்லையென்றால் எதிர்மறையாக செயல்படுவது . இதைத்தான் நான் எதிர்க்கின்றேன் . மதமாற்றம் நடந்தது என்று ஒப்பாரி வைப்பவர்கள் , ஏன் அப்படி நடந்தது என்பதற்கான காரணங்களை மூடிமறைத்து விடுவார்கள் ? இப்படிப்பட்ட ஒருதலைப்பட்சமான வாதங்கள் தொடர்ந்துவர அதுவே காலப்போக்கில் சரித்திரமாகின்றது .

[size=4]உலகத்தில் இன்று உள்ள மதங்களில் பெரும்பாலான தமிழர்களின் மதமான இந்து / சைவ மதமே மிகவும் [/size][size=4]மென்[/size][size=4]போக்கானது என்பது என் கருத்து. அத்துடன் சேர்த்து எமக்குள் இருக்கும் குறைவான மொழிப்பற்றும் எமது இனப்பற்றை .. இல்லாமலே செய்துவருகின்றது. [/size]

  • 2 weeks later...

உலகத்தில் இன்று உள்ள மதங்களில் பெரும்பாலான தமிழர்களின் மதமான இந்து / சைவ மதமே மிகவும் மென்போக்கானது என்பது என் கருத்து. [size=4]அத்துடன் சேர்த்து எமக்குள் இருக்கும் குறைவான மொழிப்பற்றும் எமது இனப்பற்றை .. இல்லாமலே செய்துவருகின்றது. [/size]

ஏனுங்க அகோதா அண்ணன் யோசிச்சுதான் சொல்றீங்களா <_< <_< ? வன்முறை கடும்போக்கு எந்தமதத்திலதாங்க இல்ல ? அப்போ ராமஜென்மபூமி வெவகாரம் , ரெயிலு பயணீங்க எரிப்பு வெவகாரம் எலாம் இந்துமதத்தோட மென்போக்குங்களா <_<<_< .

[size=1][size=4]நான் அனுபவத்தில கண்டது, நாலு தமிழர்கள் சேர்ந்து ஒரு சிங்களவனை அடிக்கமுடியாது. அவன் பாவம் என்று அந்த நால்வரில் ஒருவராவது தடுத்து விடுவார். [/size][/size]

[size=1][size=4]ஆனால், நாலு சிங்களவர்கள் சேர்ந்து ஒரு தமிழரை அடிக்கும்பொழுது இருக்கும் நாற்பது தமிழர்களும் 'எமக்கு ஏன் பிரச்சனை?' என எண்ணி பயந்து போய்விடுவார்கள். [/size][/size]

ஏனுங்க அப்போ உங்க ஊரு தமிழ் ஈழ விடுதலை போராட்டம் எப்பிடீங்க வளர்திது :o:o:icon_idea:?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.