Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

" கனாக்காணும் கனவுகள் "

Featured Replies

Sad-Dreams.jpg

Sad-Dreams.jpg

தினமும் என் இராப்பொழுதுகள்

விட்டுச்செல்லும் கனவுகளில்,

ஒரு காலைப்பொழுதும் மாலைப்பொழுதும்

அடிக்கடி கனவில் வரும்!

நிஜமாய் இருந்த பொழுதுகளைவிட

சுகமாய் இருந்தது... கனாக்காட்சிகள்!

சில்லென உணர்ந்த குளிரும் காலையிலும்

சுடுதேநீரின் இனிப்பான மாலையிலும்

என்னருகில் ஒட்டிக்கொண்டிருந்தவளின்

இதமான தேகச்சூடும்,

என் தோளில் பரவிநின்ற

அழகான அவள் கூந்தலும்,

அதனினிய வாசமும்,

எம் புன்சிரிப்பும்...

எம்முன்னே பூத்துச் சிரித்த பூக்களை

பொறாமைப்பட வைத்திருக்கும்!

உதட்டோடு சிரித்துக்கொண்டிருந்தவளை

மனதோடு ரசித்துக்கொண்டிருந்த...

என் இராப்பொழுதுகள் களித்த கனவுகள்,

கழிந்துபோன நாளிகைகளில்...

விடிகின்ற அதிகாலைகள் ஏமாற்றாமல்

உணர்த்துகின்றன... அனைத்தும் கனவுகளென!!

வெறுமைகளாய் தனிமையில் ஆரம்பிக்கும் என் காலைகள்!

இப்பொழுதும் என்முன்னே சிரிக்கின்றன... அதே பூக்கள்!!

[size=5]கவிதையின் கவிதைகள் .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை..

இதை அனுப்பி விடு

உன் நினைவுகளை சுட்டெரித்துக்கொண்டெரித்துக்கொண்டிருக்கும்

கவிதைக்கு....

புரிந்துகொள்

எறிந்து விளையாடும்

இறப்பர் பந்தல்ல

இதயம்...

உண்மை அன்பை

புரிந்துகொள்ளும் ஒரு

உண்மையான நாளில்

உன் கண்ணீரும்

இப்படித்தான்

உன் கன்னங்களை நனைக்கும்..

அப்பொழுது

தள்ளாடும்

உன் இளமையுடன்

உடலின் ஆட்டம்கள்

தளரும் கணங்களில்

கன்னங்களை கோடிடும்

கண்ணீர்த்துளிகளைப்போல

நீ தொட்டுவிடும்

தூரத்தில் இருக்காது

உன் உயிரைக் காதலித்த

உண்மை அன்பு...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கவிதையுடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது ஆபத்தான பயணத்தின் பாதி இடம் தாண்டியிருக்கிறார் மீதி இடத்தையும் நல்லபடியாக முடித்து யாழ் உறவுகளோடு உறவாடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் என்று தெரிவித்திருந்தேன் . விரைவில் கவிதை கவிதையோடு வரவேண்டும்

  • தொடங்கியவர்

கவிதை..

இதை அனுப்பி விடு

உன் நினைவுகளை சுட்டெரித்துக்கொண்டெரித்துக்கொண்டிருக்கும்

கவிதைக்கு....

புரிந்துகொள்

எறிந்து விளையாடும்

இறப்பர் பந்தல்ல

இதயம்...

உண்மை அன்பை

புரிந்துகொள்ளும் ஒரு

உண்மையான நாளில்

உன் கண்ணீரும்

இப்படித்தான்

உன் கன்னங்களை நனைக்கும்..

அப்பொழுது

தள்ளாடும்

உன் இளமையுடன்

உடலின் ஆட்டம்கள்

தளரும் கணங்களில்

கன்னங்களை கோடிடும்

கண்ணீர்த்துளிகளைப்போல

நீ தொட்டுவிடும்

தூரத்தில் இருக்காது

உன் உயிரைக் காதலித்த

உணமை அன்பு...

எசப்பாட்டுப் பாடிய சுபேசுக்கு நன்றிகள் .

  • தொடங்கியவர்

அண்மையில் கவிதையுடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது ஆபத்தான பயணத்தின் பாதி இடம் தாண்டியிருக்கிறார் மீதி இடத்தையும் நல்லபடியாக முடித்து யாழ் உறவுகளோடு உறவாடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் என்று தெரிவித்திருந்தேன் . விரைவில் கவிதை கவிதையோடு வரவேண்டும்

விரைவில் வீர நடை போட

காத்திருக்கிறது களம் ,

கவிதை வா

வந்து தை !!

எனக்கும் ஏறத்தாள இதே சாரம்சத்தில் மின்னஞ்சல் வந்திருந்தது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கோமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே எல்லாம் நல்லபடியாக முடியனும் கவிதைக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கவிதையுடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது ஆபத்தான பயணத்தின் பாதி இடம் தாண்டியிருக்கிறார் மீதி இடத்தையும் நல்லபடியாக முடித்து யாழ் உறவுகளோடு உறவாடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் என்று தெரிவித்திருந்தேன் . விரைவில் கவிதை கவிதையோடு வரவேண்டும்

ஊர் போய் வாற எல்லாரும் பயணம் அந்தமாதிரி நாடு அந்த மாதிரி என்று சொல்கிறார்கள் ....ஏன் கவிதைக்கு மட்டும் மாறாக இருக்கிறது ...

அண்மையில் கவிதையுடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது ஆபத்தான பயணத்தின் பாதி இடம் தாண்டியிருக்கிறார் மீதி இடத்தையும் நல்லபடியாக முடித்து யாழ் உறவுகளோடு உறவாடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் என்று தெரிவித்திருந்தேன் . விரைவில் கவிதை கவிதையோடு வரவேண்டும்

இந்த ஓட்டை வாய் சாத்துக்குச் சொன்ன கவிதையையும் சொல்லுங்கோவன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் போய் வாற எல்லாரும் பயணம் அந்தமாதிரி நாடு அந்த மாதிரி என்று சொல்கிறார்கள் ....ஏன் கவிதைக்கு மட்டும் மாறாக இருக்கிறது ...

கவிதை ஊர் போனது எண்டு யாரக்கா சொன்னது?

ஊர் போய் வாற எல்லாரும் பயணம் அந்தமாதிரி நாடு அந்த மாதிரி என்று சொல்கிறார்கள் .

என்னதான் சொல்லமாட்டார்கள்!!

Edited by அலைமகள்

  • தொடங்கியவர்

கருத்துக்களைப் பதிந்த குமாரசாமி அண்ணை , நந்தன்26 , அலைமகள் , யாயினி , தும்பளையான் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஓட்டை வாய் சாத்துக்குச் சொன்ன கவிதையையும் சொல்லுங்கோவன் :lol:

இந்த பட்டம் ஓட்டைவாய் சாத்து ஏற்கனவே எனக்கு கொடுத்து விட்டார்கள் எனவே இது செல்லாது... செல்லாது.. :lol:

Edited by sathiri

  • தொடங்கியவர்

இந்த பட்டம் ஓட்டைவாய் சாத்து ஏற்கனவே எனக்கு கொடுத்து விட்டார்கள் எனவே இது செல்லாது... செல்லாது.. :lol:

அப்ப வீரகேசரி எண்டு மாத்தி போடுவமே :lol::D:lol: .

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை ஊர் போனது எண்டு யாரக்கா சொன்னது?

தற்போது எல்லோரும் ஊருக்குத் தானே முண்டியடித்துக்கொண்டு போய் வருகிறார்கள் அதுதான் ஊர் என்று எழுதினேன்..மற்றப்படி ஒன்றும் இல்லை.
  • தொடங்கியவர்

தற்போது எல்லோரும் ஊருக்குத் தானே முண்டியடித்துக்கொண்டு போய் வருகிறார்கள் அதுதான் ஊர் என்று எழுதினேன்..மற்றப்படி ஒன்றும் இல்லை.

ஒரு ஊகத்தில எப்பிடிப் பிள்ளை சொல்லுவியள் ?? இது மற்றவையளுக்கு சீனி சாப்பிட்ட மாதிரியல்லோ இருக்கப்போகுது ??

அப்ப வீரகேசரி எண்டு மாத்தி போடுவமே :lol::D:lol: .

வீரகேசரியும் சில விடயங்களைத் தணிக்கை செய்வார்கள்.

[size=6]"சுபேஸ், ஜீவா and தமிழினி like this "[/size]

[size=5] [/size][size=6]பச்சை கவிதைக்குச் சேர வேண்டியது, ஆனால் நீங்கள் போடுவது கோவுக்கல்லவா!! :rolleyes: [/size]

  • தொடங்கியவர்

வீரகேசரியும் சில விடயங்களைத் தணிக்கை செய்வார்கள்.

[size=6]"சுபேஸ், ஜீவா and தமிழினி like this "[/size]

[size=6]பச்சை கவிதைக்குச் சேர வேண்டியது, ஆனால் நீங்கள் போடுவது கோவுக்கல்லவா!! :rolleyes: [/size]

உங்கள் முகக்குறி எனக்கு விளங்கவில்லை அலை . கோ வைப்பற்றிய புரிந்துணர்வு இவ்வளவுதானா :( :( ?

[size=4]கவிதை அழகான கனவுகள் கனவினில் வளர்க்கிறார். கனவுகள் நனவாக எனது வாழ்த்துக்கள்.

கோமகன், கவிதையை மிகவும் கேட்டதாகச் சொல்லுங்கள். நான் யாழில் வருவது மிகக் குறைவென்றாலும் உங்கள் அனைவருடைய படைப்புக்களைத் தவறாமல் வாசிப்பேன்.[/size]

[size=4]ஏன் நான் எழுதுவது இப்படி வருகிறது.?[/size]

உங்கள் முகக்குறி எனக்கு விளங்கவில்லை அலை . கோ வைப்பற்றிய புரிந்துணர்வு இவ்வளவுதானா :( :( ?

:lol: :lol: :lol: :lol: :lol:

கோ! எல்லாம் பகிடிக்குத் தான் இதுகளுக்கெல்லாம் கோபிக்கக கூடாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.