Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10,000 பதிவுகளை தந்த விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்...........!

Featured Replies

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.. :)

  • Replies 88
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்! முன்னோக்கி சென்றுகொண்டே இருங்கள்!

பைபிளில் ஒரு வசனமுண்டு

"முந்துவான் பிந்துவான், பிந்துவான் முந்துவான்" என்று.

அந்த நம்பிக்கையோடு நாங்கள்!

[size=5]வாழ்த்துக்கள் விசுகு!![/size] :)

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா. தொடர்ந்தும் எழுதுங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் விசு..10000 பதிவுகள்...

உங்கள் பத்திகளில் ஒரு மாற்றம் வர விரும்பினால், உங்கள் அனுபங்களை பதியுங்கள். பல நேரங்களில் அவை- அகக் குறைந்தது என்னால் தன்னும் - விரும்பி வாசிக்க படுகிறது.

இங்கே உண்மைகள் தெரியாமல் இல்லை, அது உண்மையாக இருக்காமல் இருக்காத என்கிற எதிபார்ப்பில்தான் பலரும் இயங்குகிறார்கள். சமூகமாக அந்த இரண்டு தரப்பையும் இணைப்பதுதான் எங்கள் பணியாக இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறன். போலி முகம் கொண்டு மோதுவது, சிலருக்கு சிலவேளைகளில் பயன் தரலாம் anaal அதுவே வாழ்வாக மாறாது.

வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அன்பு அண்ணன் விசுகுக்கு எனது வாழ்த்துக்கள்...

யாழிழ் இனைந்த காலம் தொட்டு நான் விசுகு அண்ணாவோடை ஒரு நாள் பார்த்து முரன் பட்டது இல்லை..அவரின் ஒற்றுமை எனக்கு ரொம்ப பிடிக்கும்...பிரான்ஸ் வந்தா கண்டிப்பாய் உங்களை சந்திப்பேன் அண்ணா...

இன்னும் பல கருத்துக்கள் எழுத வாழத்துகிறேன்.... :D

நன்றி தம்பி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும்.

நிச்சயமாக காத்திருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துகள் விசுகு,

இன்னும் பல ஆயிரம் கருத்துக்கள் பதிவிட தொடருங்கள் யாழ் பயணத்தை...!!!

நன்றி உடையார்

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

தங்களையும் இங்கு காணமுடிவதில்லை.

கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே????

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழ்த்த விரும்பவில்லை

விசுகு தான் தரித்து இருக்கும் சில உடைகளை உரிந்து விட்டு உள் மனதில் படுவதை நேரிடையாக எழுதும் வரைக்கும் வாழ்த்தப் போவதில்லை.

பத்தாயிரம் பதில்களில் முக்கால்வாசிக்கும் மேலாக எழுதியவை "மற்றவர் முன் தன்னை எப்படி Project பண்ண முயலலாம்" எனும் விதத்தில் தான் எழுதப்பட்டவை.

தமிழ் தேசியப் போராட்டத்தில் புலம் பெயர் தேசமொன்றில் நேர்மையுடன் பங்களித்த ஒருவர் நேர்மையாக எழுதுவதில்லை என்ற பெருங்குறை எனக்குண்டு. விலாங்கு மீனாக தான் தெரிகின்றார் எனக்கு அவர்.

இது ஒரு மட்டுவாகவோ அல்லது யாழின் பொறுப்பாளராகவோ திமிர் கொண்டு எழுதவில்லை நான். விசுகுவிடம் நிறைய எதிர்பார்த்து எதுவும் கிடைக்காத சக கள உறவாக வெறுப்பில் எழுதுகின்றேன்... அவரின் அனுபவங்களை நேர்மையாக எழுதும் வரைக்கும் என்னால் இப்படித் தான் அவர் பற்றி எழுத முடியும். மன்னிக்கவும்

பி.கு:

இவற்றுக்கும் மேலாக என்னை எக்கணமும் வாழ்த்தும் அண்ணன் அவர். அவரின் ஆசிகள் என் வாழ்க்கையை பலப்படுத்தும் என்று நம்புகின்றேன். எனக்கு ஒரு அண்ணா இல்லை. ஒரு சக மனிதராக எனக்கு அவர் என்றென்றும் ஒரு அண்ணா தான்.

நன்றி தம்பி

கருத்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும்.

(இந்த கருத்துக்கள் என்னை நோக்கி வரணும் என்பதற்காகவே எனது வாழ்த்து திரியை ஒரு நிறைகுறை சுட்டி நிற்கும் திரியாக நான் மாற்றினேன். ஏனெனில் எனது திரியிலேயே முழுமையாக நீங்கள் தங்கள் கருத்தை எழுதமுடியும். அதற்கு நானும் பதிலளிக்க முடியும். இந்த திரியில் தங்களது கருத்தே எனக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது)

முதலில்

எனது நோக்கம் என்ன?

அதன் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

என்னை அறிமுகம் செய்யாமல் நான் செய்ததைச்சொல்லாமல் எதையுமே முன் கொண்டு செல்லமுடியாது. நாம் செய்வதைச்சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பது எதையும் முன்னெடுக்க உதவாது. அது மற்றவரையும் அதையே செய்ய வைத்து தப்பிக்க வழி வகுக்கும்.

அதனாலேயே என்னை நான் அறிமுகம் செய்கின்றேன். நான் என்னோடு சேர்ந்த கூட்டம் செய்தவற்றை செய்யப்போறவற்றை முன் வைக்கின்றேன்.

(தற்பொழுது கூட எனது மகனது பள்ளி நண்பர்களுடன் நடந்த ஒரு இராப்போசன விருந்தில் நடந்த ஒரு மரியாதை நிகழ்வை எழுதி வைத்திருந்தேன். அதை இங்கு பதிய முன் இவர் விளம்பரம் செய்கின்றார் என்ற விமர்சனம் வந்ததால் அழித்துவிட்டேன். நான் நினைப்பது வேறு. ஆனால் என் மீது வீசப்படுவது வேறு. யாழில் வந்து விளம்பரம் தேடணும் என்ற எந்த அவசியமும் எனக்கு கிடையாது. ஏனெனில் அதையெல்லாம் நான் தாண்டி பலவருடமாகிறது))

நான் எனது குடும்பம் எனது வாழ்க்கை தொழில் எதிலும் பொய்யை மூலதனமாக்காது வெளிக்கொண்டு வருவதன் ஊடாக அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி அதனூடு ஏதாவது செய்ய முனைகின்றேன். அது யாழில் பல தம்பிகளை உறவுகளை எனக்குத்தந்திருக்கிறது. அதனூடாக பல விடயங்களை யாழ் ஊடாகக்கூட நாம் செய்திருக்கின்றோம்.

அது தொடரணும் என்பது தான் எனது அவா.

அது இல்லையென்றால் அடுத்த நிமிடமே இங்கு நான் யாழைவிட்டுச்சென்று விடுவேன்.

புலம் பெயர் தேசத்தில் நேர்மையாகப்பங்களித்த ஒருவர் விலாங்கு மீனாக இருப்பது வருத்தம் தருகிறது என்ற தங்கள் ஏக்கம் எனக்கு புரிகிறது.

எதற்காக பங்களித்தேன் என்பதில் நான் என்றும் உறுதி தளர்ந்ததில்லை. அந்த தளர்ச்சி வருமாயின் அது என்னை மட்டுமல்ல என்னைச்சுற்றியுள்ள பல நூறுபேரை முடமாக்கிவிடும். அதனால் மௌனமாக இருக்கின்றேன் அவ்வளவே. தமிழ் மக்களுக்கு தெரிந்த அத்தனையும் எனக்கும் தெரியும். அதை பேசித்தீர்த்துக்கொள்ள பலமுறை முயன்றும் தோல்வியால் மௌனமாக இருப்பதே தற்பொழுது உகந்தது என்பதே எனது நிலை.

நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பது தவறன்று. ஆனால் நான் படைப்பாளியோ கவிஞனோ கிடையாது. சராசரி மனிதன். இதற்கு மேல் என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். அதில் எனக்கு நாட்டமுமில்லை.

இறுதியாக

அண்ணன் இல்லாத குறைக்கு அண்ணா என்றுள்ளீர்கள். அது தான் எனக்கு வேண்டும். அதைத்தான் உருவாக்க நான் விளைகின்றேன். வெற்றியும் அடைந்துள்ளேன் என்று நினைக்கின்றேன்.

அது போதும் எனக்கு. சாகும் போது நாலு தம்பிகள் நினைவு கூருவர்.

வணக்கம், வாழ்த்துக்கள். யாழ் இணையத்தில் எமது நிறுவனத்தின் அனுசரணையை பொற்கிளி(ழி) ஊடாய் செய்யும் முயற்சியில் ஆரம்பத்தில் தயங்கினாலும், சிறிது காலத்திலேயே அதன் மதிப்பை உணர்ந்து நீங்கள் வழங்கும் உங்கள் பங்களிப்பு அளப்பரியது. உங்கள் போன்ற பல கருத்தாளர்களின் ஆதரவினாலும், உற்சாகத்தினாலுமே தொடர்ந்து எட்டு சுற்றுக்கள் வரை பொற்கிளி(ழி)யை தொடர முடிந்தது. அதற்கு நன்றியையும் இத்தருணத்தில் தெரிவித்து கொள்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.. :)

நன்றி தம்பி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

இடைக்கிடை வந்து விருப்பு வாக்குகளிட்டு உற்சாகப்படுத்துவதை மட்டும் கண்டுள்ளேன்.

நீங்களும் எழுதணும் என ஆசைப்படுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்! முன்னோக்கி சென்றுகொண்டே இருங்கள்!

பைபிளில் ஒரு வசனமுண்டு

"முந்துவான் பிந்துவான், பிந்துவான் முந்துவான்" என்று.

அந்த நம்பிக்கையோடு நாங்கள்!

நன்றி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் உற்சாகத்திற்கும்

தங்களையும் தற்போது காண்பது அரிதாக உள்ளது.

எழுதணும்

நிலை நாட்டணும்

எமக்கு கனக்க வேலையிருக்கு.

இல்லையென்றால் எப்பொழுதோ கேள்விப்பட்டது போலாகிவிடும் எல்லாம்................

முன்னோக்கி மட்டுமே போவேன்

அதில் எந்த தடுமாற்றமும் இல்லை

[size=5]வாழ்த்துக்கள் விசுகு!![/size] :)

நன்றி சகோதரி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா. தொடர்ந்தும் எழுதுங்கள்..

நன்றி தம்பி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும்

உங்களிடம் நல்ல எழுத்தாற்றலும் நகைச்சுவையுமுள்ளது

பதிவுகளூடாக கனக்க எதிர் பார்க்கின்றேன்.

வணக்கம், வாழ்த்துக்கள். யாழ் இணையத்தில் எமது நிறுவனத்தின் அனுசரணையை பொற்கிளி(ழி) ஊடாய் செய்யும் முயற்சியில் ஆரம்பத்தில் தயங்கினாலும், சிறிது காலத்திலேயே அதன் மதிப்பை உணர்ந்து நீங்கள் வழங்கும் உங்கள் பங்களிப்பு அளப்பரியது. உங்கள் போன்ற பல கருத்தாளர்களின் ஆதரவினாலும், உற்சாகத்தினாலுமே தொடர்ந்து எட்டு சுற்றுக்கள் வரை பொற்கிளி(ழி)யை தொடர முடிந்தது. அதற்கு நன்றியையும் இத்தருணத்தில் தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி

வாழ்த்துக்கும ஊக்கத்துக்குகும் நேரத்திற்கும்

உங்களது பொற்கிளியில் முதலில் ஆளையறியாது தள்ளி நின்றாலும் அது தடைப்பட்டுவிடக்கூடாது என்று அதற்கு வேண்டிய கடைசி புள்ளியை இட்டு தொடக்கி வைத்ததாக ஞாபகம். அதை தாங்கள் இதுவரை ஞபகம் வைத்து நன்றி சொல்வது தங்களது பெரும் குணத்தைக்காட்டுகிறது. நன்றி. நாலு பேருக்கு உதவும் என்றால் எதையும் செய்து பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]வாழ்த்துக்கள்.நீடூழி வாழ்ந்து இன்னும் [/size][size=1]

[size=4]பல பத்தாயிரம் பதிவுகளை தர மிக்க அன்புடன் [/size][/size][size=1]

[size=4]வாழ்த்துக்கள் [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் களம் காண முடிந்தது.

வாழ்த்துக்கள் விசுவர் 'அன்னா' ! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.