Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயேசுநாதர் திருமணமானவரா?... புதிய தகவலால் பரபரப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூயார்க்: இயேசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், இயேசுநாதரின் மனைவி என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான ஆதாரமும் கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் என்பவர்தான் இதுதொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார். இயேசுநாதர் குறித்த இந்த முக்கிய தகவலை வெளியிட்ட அவர் கூறுகையில், மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப்புல்லால் ஆன கையெழுத்துப் படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் இயேசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

முழுமையான வாசகங்கள் அதில் இல்லை. பண்டைய எகிப்திய கோப்டிக் மொழியில் வாசகங்கள் உள்ளன. அதை ஆராய்ந்து பார்த்ததில், இயேசுநாதரின் மனைவிதான் அவரது முதன்மையான பெண் சிஷ்யையான மேரி மெகதலீன் என்பது தெரிய வருகிறது. இருவரும் கணவன், மனைவியாக இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த கையெழுத்துப் படியானது 8 செமீ நீளமும், 4 செமீ அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த கையெழுத்துப் படியில் உள்ள வாசகங்கள் மூலம் இயேசுநாதரும், மேரி மெகதலீனும் கணவன் மனைவி என்பது திட்டவட்டமாக தெரிய வருகிறது.

ஒரு இடத்தில் மேரி மெகதலீனை எனது மனைவி என்று இயேசுநாதர் தனது சீடர்களிடம் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் மேரி மெகதலீன் எனது சிஷ்யையாக இருப்பார் என்று இயேசுநாதர் கூறுகிறார். அடுத்த 2 வரிகளில், நான் அவருடன் வசித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் இயேசுநாதர்.

இந்த கையெழுத்துப் படி நம்பகத்துக்குரியதாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறோம். அப்படி இருந்தால் இது மிகப் பெரிய ஆச்சரியகரமான தகவலாக அமையும் என்றார்.

ஏற்கனவே மேரி மெகதலீனும், இயேசுநாதரும் தம்பதியர் என்று அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுன் தனது தி டாவின்சி கோட் நூலில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புகளையும், புயலையும் கிளப்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மேரி மெகதலீன், இயேசுநாதரின் மனைவிதான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த மேரி மெகதலீன்?

மேரி மெகதலீன் குறித்து பைபிளில் பல்வேறு தகவல்கள் உள்ளன. அவர் குறித்த சர்ச்சைக்கிடமான கருத்துக்களும் நிறைய உள்ளன. மேரி மெகதலீன் இயேசுநாதரின் முதன்மையான பெண் சீடராக இருந்தவர். அவருக்கு சீடர்கள் குழுவில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது.

மேரி மெகதலீன் ஒரு விபச்சாரப் பெண்ணாக ஆரம்பத்தில் இருந்தார் என்று 591ம் ஆண்டு ஒரு குறிப்பு உள்ளது. பின்னர் இயேசுநாதர் அவரை சீர்திருத்தி தனது சிஷ்யையாக ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

மேரி மெகதலீன் குறித்து இயேசுநாதரின் சீடர்களான லூக், மார்க், ஜான் ஆகியோரும் நிறையவே குறிப்பிட்டுள்ளனர்.

இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவரது ஆண் சீடர்கள் பலரும் போய் விட்டனர். ஜான் மட்டுமே உடன் இருந்தார். அவருடன் உடன் இருந்தவர் மேரி மெகதலீன். அதேபோல இயேசுநாதர் உயிர்த்தெழுந்தபோது அதை முதலில் கண்டவர் மேரி மெகதலீன்தான். இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர்.

இந்த நிலையில்தான் இயேசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் இயேசுநாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

http://tamil.oneindia.in/news/2012/09/19/world-proof-jesus-was-married-found-on-ancient-papyrus-161752.html

இப்பத்தான் நபிகள் நாயகத்தை பற்றி சொல்லி ஒரு தூதுவர் சரி.

இனி ஜேசுநாதரின் முறை.. :lol::icon_idea:

இயேசுநாதர் மனிதனாகத் தானே பிறந்தவர்? மனிதராகத் தானே வாழ்ந்து, மனிதனாகத் தான் சாவில் கூட (ஒவ்வொரு சவுக்கடிக்கும், முள்முடி சூட்டியபோதும், சிலுவையைச் சுமந்த போதும்) உடலில் ஏற்பட்ட வேதனையை உணர்ந்தவர்.. ஒரு மனுசராப் பிறந்து வாழ்ந்தவர், திருமணம் செய்திருந்தால் தான் என்ன?? :rolleyes:

ஆணையும் பெண்ணையும் படைத்து புனிதமான திருமண பந்தத்தை உருவாக்கியவன் அந்த இறைவன் ..............அந்த புனிதமான உறவின்

உண்மையை காட்டுவதற்கு பல உவமானங்களையும் .படிப்பினைகளையும் பைபிள் மட்டுமல்ல பகவத் கீதையும்,குறாணும் கூறிநிற்கிறது ..

மனிதர்களுக்குள் புகுந்த சாத்தான் சும்மா விடுவானா........................மனிதன் திருமண பந்தத்தை பற்றி எவ்வளவுக்கு எவ்வளவு தப்பான ,தவறான கொள்கைகளை மனதில் வைத்திருக்கிறானோ ...........இறைவன் தானே உருவாக்கிய திருமண பந்தத்தை அதன் புனிதத்தை நன்கு அறிந்தவன்............பலவீனமான இந்த மனிதனை அந்த அன்பே சிவமாகிய இறைவன் மன்னிப்பான்............அவனே மன்னிக்கும்போது நாம் ஏன் தான் கோபப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு கலக்கம் செய்ய வேண்டும்??????........

இறைவனும் மனிதனும் பயணம் செய்தால் எவரை எவர் வெல்லுவார்??????

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கு முன் வாழ்ந்தவர்களையே நாம் நம்பவில்லை.

இதில் யேசுபற்றி எதை எழுதினால் என்ன? :( :( :(

இயேசு நாதர் ஒரு இன மக்களின் வழிகாட்டி தலைவராய் இருந்தவர். சில உபதேசங்களைச் செய்து நல்வழிப்படுத்தியவர். அவ்வளவே..

அவரை உலக மக்களின் கடவுளாக்கியவர்கள் பிற்காலத்து வந்த "போப்" ஆண்டவர்களே.தங்களை முதன்மைப்படுத்துவதற்காகவே பல செதுக்கல் ,கழித்தல் ,கூட்டல் எனப் பலபித்தலாட்டங்களைச் செய்தார்கள். சிலுவை யுத்தம் அதில் முதன்மையானது.

ஒரு இனத்தின் அல்லது சிறு குழுவின் அல்லது தன்னைப் பின்பற்றியவர்களின் தலைவனாக முன்மாதிரியாக இருந்தவரை முழுமுதற்கடவுளாக்க முறபட்டால் இப்படியான "நம்பமுடியாத" பல பூதங்கள் வெளிக்கிடவே செய்யும்.

உலகம் தட்டையானது என்பதும் அதைச்சுற்றியே மற்றைய கோள்கள் இயங்குகின்றன என்பதும் இயேசு வழ்ந்த காலத்து மனிதரின் நம்பிக்கை. அதுவே பழைய ஆகமத்தில் யேசுவால் பிரசங்கிக்கப்பட்டது. பின்னர் சூரியனைச் சுத்தியே பூமியுட்பட்ட கோள்கள் இயங்குகின்றன என கண்டுபிடிக்கப்பட்டபோது அதை ஏற்றுக்கொள்ளாது கண்டு பிடிதவரையே எரித்து மாபாதகம் செய்தவர்கள் இவர்கள்.

மிக அண்மைய காலத்திலேயே மனம் மாறி இதனை கிறிஸ்தவம் ஏற்றுக்கொண்டது. உண்மையிலேயே இயேசு சர்வவல்லமையுள்ள ஆண்டவனின் குமாரன் என்றால் அந்த ஆண்டவனால் படைக்கப்பட்ட பிரபஞ்சம் பற்றி அறிந்து வைத்திருக்கவில்லையா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

பைபிள் கூற்றின் படி ஆண்டவனால் முதல் முதல் படைக்கப்பட்ட மனிதர்களாகிய ஆதாம் ஏவாளின் பிள்ளைகள் இருவரும் ஆண்கள். அதிலும் தம்பி அண்ணனால் கொல்லப்படுகின்றார். இவர்கள் மூலமே மனித சந்ததி பரம்புவதாகக் கூறும் பைபிளில் இன்னுமொரு இடத்தில் ஆதாம் ஏவாளின் உயிரோடு தப்பித்த பிள்ளைக்கு "கானான்" என்ற தேசத்தில் இருந்து பெண் எடுத்ததாக அறியப்படுகின்றது.

ஒரு குழுத்தலைவரின் ஆளுமையை உலகெங்குமுள்ள மக்களுக்கான "மதமாக மாற்றமுற்பட்டபோது இப்படியான குளறுபடிகள் ஏற்படவே செய்யும் . இயேசுவைப்போலவே முகமது நபிகள், புத்தர், குருநானக் போன்றவர்கள் ஒரு குழுவின மக்களின் ஆன்மீக/வழிகாட்டி தலைவர்களாக இருந்தவர்கள்.

இதில் இயேசுவையும் ,முகம்மது நபியையும் பிற்காலத்தவர்கள் முதன்மைப்படுத்த முயன்ற போது ஏற்பட்டவை /தொடர்ந்து கொண்டிருப்பவைதான் இவ்வகை மூர்க்கம் கொண்ட மதப்போர்கள்.

இதிலும் இயேசுவை அநாதிகாலம் முன்கொண்டு உலகைப்டைக்க வெளிக்கிட்டது ரோமிலிருந்த "சிலுவை" சாம்ராச்சியம். அன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சியோ தகவல் பரிமாற்ற வசதியோ அற்ற நிலையில் இப்புளுகுகளை நம்பிய மக்களால் இன்றைய நிலையில் உண்மைக்கிருத்துவர்களால் கூட இவற்றினை நம்ப முடியவில்லை. இனி வரும் காலங்களில் இதைவிட மோசமான கேள்விகள் ரோமாபுரியை நோக்கி நீட்சி பெறும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவிகளை மன்னித்தருளும் ஆண்டவரே.... :D

பாவிகளை மன்னித்தருளும் ஆண்டவரே....

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கு முன் வாழ்ந்தவர்களையே நாம் நம்பவில்லை.

இதில் யேசுபற்றி எதை எழுதினால் என்ன? :( :( :(

உங்களின் கருத்துத்தான் எனதும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.