Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குண்டுகளை வீசிய உலங்கு வானூர்தி ஒன்றரை இலட்சம் வாடகைப் பணத்திற்கு பூக்களைத் தூவியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோண்டாவில் கிழக்கு வல்லிபுர ஆலய தேர்த்திருவிழாவில் விமானப்படை உலங்கு வானூர்தி பூக்களைத் துவி பரபரப்பை ஏற்படுத்தியது.

பூக்களைத் தூவுவதற்காக ஆலைய நிர்வாகத்தினர் உலங்கு வானூர்தியை வாடகைக்கு வாடகைக்கு அமர்த்தியதாக தெரியவருகிறது. இந்த ஆலையத்திற்கான திருவிழா தற்போது நடந்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் (25.09.12) தேர் திருவிழாவாகும். தேர் வீதியுலா வரும் போது சிலர் விமானப்படை உலங்கு வானூர்தியை வாடகைக்கேனும் பிடித்து மலர் தூவ முற்பட்டிருந்தனர். எனினும் அதற்கு வாடகையாக சுமார் ஒன்றரை இலட்சம் கட்டணத்தை விமானப்படை கோரியிருந்தது. இக்கட்டணத்தை செலுத்தியதுடன் இருவர் நேரில் பலாலி சென்று குறித்த விமானப்படை உலங்கு வானூர்தியில் ஏறி ஆலயத்தை அடையாளம் காட்ட அழைத்தும் சென்றுள்ளனர்.

சுமார் ஏழு தடைவகளாக சுற்றி சுற்றி விமானப்படை உலங்கு வானூர்தி பூக்களை தூவிய போதும் ஒரு இதழ் தானும் தேரின் மீது விழவில்லை. அண்மையில் நல்லூர் ஆலயத்தின் தேர் திருவிழாவிலும் விமானப்படை உலங்கு வானூர்தி குண்டுகளுக்கு பதிலாக மலர்களை தூவியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/83466/language/ta-IN/article.aspx

[size=4]பச்சிளம் குழந்தை உயிர்ப் பிச்சை கேட்கிறது இங்கோ மாடப்புறாவுக்கு கோபுரம் உருவாகிறது [/size]

[size=4][செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-09-25 10:47:19| யாழ்ப்பாணம்]

ஈழத்தமிழர்கள் தங்கள் வரலாற்றை ஆவ ணப்படுத்தத் தவறியது மட்டுமல்ல, வரலாற்றிலி ருந்து கற்றுக்கொள்ளவுமில்லை என்பது நாம் செய்த வரலாற்றுத் தவறு. வரலாறுகளிலிருந்து கற்றல் இடம்பெற வேண் டும் என்ற தத்துவங்கள் எங்களிடம் படுதோல்வி கண்டுவிட்டது. இதனாலேயே எங்கள் வரலாறு முழுவதும் தோல்வியாகியுள்ளது. இத் தோல்வியை சரிப்படுத்த வேண்டுமாயின், சம காலத்திலேனும் வரலாற்றிலிருந்து படித்துக் கொள்வது மிகவும் அவசியம்.

அவ்வாறு படித்தல் என்ற முடிபை எடுத்துக் கொண் டால், மற்றவர்கள் தருவார்கள் என்று எதிர்பார்த் திருப்பதை முதலில் நாம் தூக்கி எறிய வேண்டும். நாங்கள் தான் எங்களுக்குத் துணை. எங்க ளால் முடியும் என்ற விடயங்களில் எங்களிடம் அதீத நம்பிக்கை ஏற்பட வேண்டும். இத்தகைய நம்பிக்கையின் மத்தியில் தான் நாங்கள் இதுகாறும் நம்பியிருந்த நம்பிக்கை யீனங்களை தெரிந்து கொள்ள முடியும். நம்பிக்கையீனங்களை நம்பிக்கையாகக் கொண்ட மிகப்பெரிய வரலாறு எங்களுக்குச் சொந்தமானது. எனவே நம்பக் கூடாதவற்றை நம்பிக் காலம் கடத்தும் மடமைத்தனத்தை எரித் தாக வேண்டும். அவ்வாறான எரிப்பு நடைபெறும்போது அரசி யல் சின்னத்தனங்கள் என்ற சுழல் காற்று கடுமை யாக வீசி எரிப்பை தணிக்க முற்படும். கூடவே எரிப்புக்கு பல்வேறு விமர்சனம் கூறும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பின்புலம், முன்புலம் என்று பெயர் சூட்டும் சம கால பண்பாட்டை பிரயோகிக்கும்.

இதற்கெல்லாம் ஈடுகொடுத்து எங்களில் நாங் கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். வன்னியில் இன்று வரை எத்தனையோ குடும் பங்கள் இருக்க வீடின்றி படாப்பாடு படுகின்றன. வீட்டுத்திட்டம் வரும். அதில் இலங்கை அரசின் வீடு, இந்தியாவின் வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மூன்று ஆண்டுகள் தறப்பாளுக்குள் வாழ்ந்தாயிற்று.

ஓ! என் இனிய தமிழினமே! நீ கோயில் கட்டுவதற்கு செய்த செலவில் ஒரு வீதத்தைக் கொடுத்திருந்தால், எங்கள் புலம் பெயர் உறவுகள் ஒரு வீட்டுக்கு ஒரு வீடு என்று கட்டித்தந்திருந்தால் எங்கள் வன்னி உறவுகள் உங்கள் கொடையின் பெருமையைச் சொல்லிச்சொல்லி ஆறுதல் அடைந்திருப்பர். ஆனால் நீங்களோ மாடப்புறாவுக்கு கோபுரம் கட்டிக் கொடுக்கிறீர்கள். ஓ! மாடப் புறாவின் போகத்து இசையும் அதன் எச்சத்தின் வாசமும் இறைவனுக்கு இனியவை அல்லாவிடினும் உங்களுக்குப் பிடித் தமானவை போலும். அதோ தறப்பாளுக்குள் பச்சிளம் குழந்தை பச்சை விறகின் புகையில் மூச்சுவிட முடியாமல் உயிர்ப்பிச்சை கேட்கிறது. நாங்கள் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று பாவம் சேர்க்கிறோம்.[/size]

[size=4][size=1]http://www.valampuri...ws.php?ID=31099[/size][/size][size=4] [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ ராஜ சோழனின், தஞ்சைப் பெருங்கோவில் கனவு தான், ஆரியர்களைத் தமிழ் மண்ணில், வேரெடுக்க அனுமதித்தது!

இப்போது, எமது கோவில்களின், தேர்த் திருவிழாக்களில், நாம் எடுக்கும் இந்த எடுப்புக்கள் தான், எமது மண்ணையும் எதிரியிடம் தாரை வார்க்கப் போகின்றது!

என்றைக்குத் தான், தமிழன், இந்தப் போலிக் கவுரவங்களை, விடுகின்றானோ, அன்றைக்குத் தான் எமது இனத்தின் 'விடிவு' தொடங்கும்! :icon_mrgreen:

எங்கேயப்பா இந்த கோயில் இருக்கு .நான் பிறந்து வளர்ந்து ,உழுத இடம் .இப்படி ஒரு கோயில் நம்மட ஊரில் இருக்கென்று நான் கேள்விப்பட்டதே இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயப்பா இந்த கோயில் இருக்கு .நான் பிறந்து வளர்ந்து ,உழுத இடம் .இப்படி ஒரு கோயில் நம்மட ஊரில் இருக்கென்று நான் கேள்விப்பட்டதே இல்லை .

இப்பெல்லாம், அனுமார், ஐயப்பன் எண்டு சொல்லிப் புதுப் புதுக் கோயிலெல்லாம் வருகுதாம்!

நீங்களும், நானும், ஞான வைரவர் காலத்து ஆக்கள்!

கொஞ்சம், அவசரப் படாமல், அனுசரிச்சுக் கொண்டு போவம்!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன், அந்தக் கண்றாவிக் கோவிலை, இங்கே இணைக்கிறேன்!

தெரிகிறதா, என்று பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கண்டிக்கத்தக்கதும், வெட்கப்படும் செயலினை... இக்கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

90% சனத்திற்க்கு உதுல நல்ல ஈடுபாடு இருக்கு,யாழ் களத்தில் நாங்கள் ஒருசிலர் எழுதுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.....

மதங்களின் போட்டியில் உந்த இந்துமதம் நிலைத்து நிற்க்க வேண்டும் என்றால் உப்படி எல்லாம் செய்யத்தான் வேணும்போல கிடக்கு...இல்லாவிடில் புத்தர் வந்து குடி கொண்டுவிடுவார்.....:D

  • கருத்துக்கள உறவுகள்

இதனை ஏற்பாடு செய்தவர்கள் குடும்பத்தில் இருந்து யாரும் மாவீரகளாக மண்ணில் விதிக்கப்படவில்லை விடுதலைக்காக ஒருதுளிகூட எதனையும் அர்ப்பணிக்கவில்லை இப்போது எல்லாம் முடிந்தது கொண்டாடுகிறார்கள் ....... :( :( :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.