Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தளபதி ரமணன் இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில் வீரச்சாவு!

Featured Replies

தளபதி ரமணன் இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில் வீரச்சாவு!

வேணு

Sunday, 21 May 2006

மட்டக்களப்பு மாவட்ட துணை தளபதி ரமணன் சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில் இன்று மாலை வீரச்சாவைத் தழுவினார் என செய்திகள் தெரிவிக்கின்றன. மாலை 4:30 மணிக்கு வவுணதீவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள முன்னணி அரண் பகுதியில் இச்சம்பவம் நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகளின் முன்னணி நிலைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த சமயம் சிறிலங்கா இராணுவத்தினர், தற்போதும் நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை அப்பட்டமாக மீறும் வகையில் சினைப்பர் தாக்குதலை தமது நிலைகளில் இருந்து மேற்கொண்டனர் என்று அந்த தகவல் மேலும் தெரிவிக்கின்றது.

இத்தாக்குதலுக்கு இலக்கான தளபதி ரமணன் வீரச்சாவை அணைத்துக் கொண்டார்.

ஈழநாதம்

தளபதி ரமணனுக்கு எனது வீர அஞ்சலிகள்.

தளபதி ரமணனுக்கு எனது வீர அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தளபதி ரமணனுக்கு வீரவணக்கங்கள்.

:lol::lol::(

தளபதிக்கு வீர வணக்கங்கள்.

ramanan7yz.gif

தளபதி றமணனுக்கு எமது வீரவணக்கங்கள். உதற்கான பதிலை விரைவில் செய்தவர்கள் விரைவில் அனுபவிப்பர்.

தளபதி ரமணனுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தளபதி ரமணனுக்கு எனது வீர அஞ்சலிகள்

இதற்கான விளைவை விரவில் எதிர்நோக்கட்டும் சிங்களம்

:twisted: :twisted: :twisted:

தளபதி ரமணனுக்கு வீரவணக்கம் அவர்களுக்கு மட்டும் தான் சினைப்பர் தாக்குதல் தெரியுமா? :twisted:

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16871

எதிர்வரும் காலங்களில் சினைப்பர் தாக்குதலின் முக்கியத்துவம் அதிகரிக்கப் போகிறது போலுள்ளது. இந்த நிகழ்வு இக்பால் அத்தாசின் வழமையான ஒப்பாரி போல் அல்லாது சிறீலங்கா அரசபடைகளும் அதற்கு தயார்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்களால

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி ரமணனுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த தளபதி ரமணனுக்கு வீரவணக்கங்கள்!!

இப்படியான தாக்குதல் மூலம் ராதா அம்மான், விக்டர் போன்ற தளபதிகளையும் இழந்திருக்கின்றோம்!! தளபதிகள் தங்களின் பாதுகாப்பில் அவதானம் தேவை!

தளபதி ரமணனுக்கு எனது வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி ரமணனின் இழப்பு - சோகத்தில் மட்டு. மாவட்டம்

மூத்த தளபதி ரமணன் அவர்கள் சிறீலங்கா படைகளின் தாக்குதலினால் வீரச்சாவைத் தழு விக் கொண்ட செய்தியறிந்து மட்டு - அம்பாறை மாவட்டங்கள் சோகத்தில் மூழ்க்கியுள்ளன. வீதிகள் எங்கும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் பொது இடங்களில் துக்க இசை ஒலிபரப்பப்பட்டு வருகின்றது.

பல்வேறு பகுதிகளில் வழமை மறுப்புப் போராட்டமும் இடம்பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு திருப்பளுகாமத்தை சொந்த இடமாகக் கொண்ட தளபதி ரமணன் அவர்கள் 1986ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். விடுதலைப் புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சியைப் பெற்றுக் கொண்ட தளபதி ரமணன் அவர்கள் இந்திய சிறீலங்கா படைகளிற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களில் பங்கு கொண்டதுடன் பல தாக்குதல்களையும் வழி நடத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் நீண்ட காலம் பணியாற்றிய ரமணன் அவர்கள் மட்டு - அம்பாறை மாவட்டங்களின் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக பொறுப்பேற்றபின் சிறீலங்கா படைகள் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய தேசவிரோதிகளிற்கும் எதிராக பல்வேறு நடவடிக்கைகளை வழிநடத்தியிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் துரோகத்தனம் அரங்கேறியவேளை அங்கிருந்து வெளி யேறி வன்னிக்கு வந்தடைந்த தளபதி ரமணன் அவர்கள் துரோகத் தனத்தை முறியடிக்கும் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியிருந்தார்;.

குறிப்பாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் வாழைச்சேனை - பொலநறுவை சாலையை தளபதி ரமணனின் தலைமையில் சென்ற படையணி கடந்தபோத பிரதேச வாதம் என்ற பெயரில் பெரும் துரோகம் புரிந்த கும்பல் மட்டு. மண்ணிலிருந்து தப்பியோடியது என்பது குறிப்பிடத்தக்கது.

துரோக முறியடிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து மாவடி முன்மாரிக் கோட்ட இராணுவத் தளபதியாக பணியாற்றிய ரமணன் அவர்கள் மட்டு - அம்பாறை தனித்தனி நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் மட்டு மாவட்டத்தின் துணை இராணுவத் தளபதி

யாக நியமிக்கப்பட்டிருந்தார்.

தகவல்: சங்கதி

¾ÇÀ¾¢ ÃÁ½ÛìÌ ±ÁРţÃŽì¸í¸û

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி ரமணனுக்கு வீர அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுமை, பொறுமை, பொறுமை, பொறுமை, பொறுமை, பொறுமை, பொறுமை,பொறுமை இன்னும் எத்தனை நாளைக்கு எத்தனை ஆட்களை காவு கொடுக்கப் போகிறார்கள்.

தளபதி ரமணனுக்கு எனது வீர அஞ்சலிகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணுக்கு விதையான அந்த மாவீரனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்

தளபதி ரமணனுக்கு எனது வீர அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி ரமனனுக்கு எனது வீரவணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

தளபதிக்கு வீரவணக்கங்கள்...பாரிய ஒரு இழப்பு..

ம்ம்ம் இப்படியே போய்கொண்டு இருந்தால்.............என்னத்த சொல்ல... :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூத்த தளபதி ரமணன் அவர்கள் ஸ்ரீலங்கா படைகளின் தாக்குதலினால் வீரச்சாவைத் தழு விக் கொண்ட செய்தியறிந்து மட்டு - அம்பாறை மாவட்டங்கள் சோகத்தில் மூழ்க்கியுள்ளன. வீதிகள் எங்கும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் பொது இடங்களில் துக்க இசை ஒலிபரப்பப்பட்டு வருகின்றது.

பல்வேறு பகுதிகளில் வழமை மறுப்புப் போராட்டமும் இடம்பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு திருப்பளுகாமத்தை சொந்த இடமாகக் கொண்ட தளபதி ரமணன் அவர்கள் 1986ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். விடுதலைப் புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சியைப் பெற்றுக் கொண்ட தளபதி ரமணன் அவர்கள் இந்திய ஸ்ரீலங்கா படைகளிற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களில் பங்கு கொண்டதுடன் பல தாக்குதல்களையும் வழி நடத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் நீண்ட காலம் பணியாற்றிய ரமணன் அவர்கள் மட்டு - அம்பாறை மாவட்டங்களின் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக பொறுப்பேற்றபின் ஸ்ரீலங்கா படைகள் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய தேசவிரோதிகளிற்கும் எதிராக பல்வேறு நடவடிக்கைகளை வழிநடத்தியிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் துரோகத்தனம் அரங்கேறியவேளை அங்கிருந்து வெளி யேறி வன்னிக்கு வந்தடைந்த தளபதி ரமணன் அவர்கள் துரோகத் தனத்தை முறியடிக்கும் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியிருந்தார்;.

குறிப்பாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் வாழைச்சேனை - பொலநறுவை சாலையை தளபதி ரமணனின் தலைமையில் சென்ற படையணி கடந்தபோத பிரதேச வாதம் என்ற பெயரில் பெரும் துரோகம் புரிந்த கும்பல் மட்டு. மண்ணிலிருந்து தப்பியோடியது என்பது குறிப்பிடத்தக்கது.

துரோக முறியடிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து மாவடி முன்மாரிக் கோட்ட இராணுவத் தளபதியாக பணியாற்றிய ரமணன் அவர்கள் மட்டு - அம்பாறை தனித்தனி நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் மட்டு மாவட்டத்தின் துணை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

http://sankathi.com/content/view/3048/26/

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி ரமணனின் வித்துடல் கரடியனாறு தேனகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கின்றது. நேற்றைய தினம் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலில் தளபதி ரமணன் அவர்கள் வீரச்சாவைத் தழுவினார். இந்த துயரச் செய்தி கேட்டு மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் சோபை இழந்தது.

இவரது வீரச்சாவை அடுத்து படுவான்கரை, கொக்கட்டிச்சோலை, பளுகாமம், கரடியனாறு, இலுப்பையடிச்சேனை பகுதி எங்கும் மக்கள் தமது இயல்புவாழ்வை புறக்கணித்துள்ளனர்.

கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டு அஞ்சலிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

1966ஆம் ஆண்டு பிறந்த தளபதி ரமணன் மட்டக்களப்பு திருப்பளுகாமத்தை சேர்ந்தவர். 1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மூன்றாவது பயிற்சி பாசறையில் பயிற்சி பெற்றவர்.

இந்திய இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களிலும் அக்காலத்தில் துரோக கும்பல்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் அணித்தலைவராக திறமையுடன் செயலாற்றியவர்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவில் நீண்ட காலம் பணியாற்றி எதிரிகளினதும் துராகிகளினதும் பல்வேறு சதி நடவடிக்கைகளை முறியடிப்பதில் முன்னின்று செயற்பட்டவர். விடுதலைப் புலிகளின் படைத்துறை புலனாய்வு பிரிவில் பணியாற்றி முக்கிய தேசத்துரோகிகளுக்கு எதிராகவும் எதிரிகளுக்கு எதிராகவும் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்ட நடவடிக்கைகள் பலவற்றை நெறிப்படுத்தியவர்.

கருணாவின் தன்னிச்சையான நடவடிக்கையால் குழப்பம் ஏற்பட்ட போது தமிழீழத் தேசியத் தலைமைக்கு விசுவாசமான செயற்பாட்டளராக வன்னிக்கு சென்று, பின் வன்னியில் இருந்து நடவடிக்கைக்காக தன் அணியுடன் முதலில் மட்டக்களப்பைச் சென்றடைந்தவர்.

துரோகிகளை விரடடியடிப்பதில் இவரது பங்கு முக்கியமானதாக இருந்தது. பின்னர் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டு வீரச்சாவடையும் வரை பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழநாதம்

thalapathi ramana kku enathu kannir anchali :cry: :cry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.