Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்த இறுதி நொடிக்குரிய அழகிய சொற்றொடர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சாவு பற்றிய பிரக்ஞை இருப்பதால் தான் வாழ்வை மிகவும் ரம்மியமானதாக வைத்திருக்க விரும்புகின்றேன். முடிந்த போதெல்லாம் ஊர் ஊராகச் சுற்றி அங்குள்ள அழகிய இடங்களை பிள்ளைகளுக்கும் காட்டி மகிழ்கின்றேன். ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக சமைத்து சாப்பிட்டு ருசிக்க விரும்புகின்றேன். பாலியல் விடயங்களும் ஒன்றையும் மிச்சம் வைக்க கூடாது என்று எண்ணுகின்றேன். நான் செத்துப் போய் கிடக்கும் போது என் முகத்தில் நிச்சயம் புன்னகை இருக்கும்.

சாவு பயம் தரும் ஒன்றல்ல; மாறாக வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தப்படுத்தும் நிகழ்வு. அதற்கான முற்கூட்டிய தயார்படுத்தல்கள் அவசியம்.

இதேதான்..வாழ்க்கையை,அதை அனுபவிப்பதை,அணு அணுவாக ரசிப்பதை பற்றிய எனது பார்வையும் இதுதான்...வாழ்க்கையே அனுபவித்தலுக்கு உரிய ஒன்றுதான்

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சினர்க்க்குச் சத மரணம்!

அஞ்சாத நெஞ்சத்து ஆடவருக்கொரு மரணம்!

துஞ்சுவர் என்று அறிந்திருந்தும் சாதலுக்கு,நடுங்கும்,

துன்மதி மூடரைக்கண்டால், புன்னகை செய்பவன் நான்!

இந்தப் பாடல், சர்க்கரவர்த்தி அலெக்ஸ்சாண்டர் பாடுவது போல், யாரோ ஒருவர் எழுதியது!

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நேரமும் சாவைப் பற்றி யோசிப்பதற்கும், சாவு பற்றிய பிரக்ஞைக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கு ரதி. தான் செத்த பிறகும் தன் குடும்பம் வாழ வேண்டும் என நினைத்து ஆயுட்காப்புறுதி எடுப்பவருக்கும், பக்கத்து வீட்டில் தீப்பற்றும் போது தீயில் கருகி இறந்து விடுவமோ என நினைத்து ஓடிப் போய் காப்பாற்றாமல் இருப்பவர்களுக்கும் இடையிலான வேறுபாடு தான் இது. முன்னவருக்கு சாவு பற்றிய பிரக்ஞை அதன் பின்னான நிகழ்வுகள் பற்றிய அக்கறை இருக்கு, இரண்டாமவருக்கு சாவு பற்றிய பயம் இருக்கு.

எனக்கு சாவு பற்றிய பிரக்ஞை இருப்பதால் தான் வாழ்வை மிகவும் ரம்மியமானதாக வைத்திருக்க விரும்புகின்றேன். முடிந்த போதெல்லாம் ஊர் ஊராகச் சுற்றி அங்குள்ள அழகிய இடங்களை பிள்ளைகளுக்கும் காட்டி மகிழ்கின்றேன். ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக சமைத்து சாப்பிட்டு ருசிக்க விரும்புகின்றேன். பாலியல் விடயங்களும் ஒன்றையும் மிச்சம் வைக்க கூடாது என்று எண்ணுகின்றேன். நான் செத்துப் போய் கிடக்கும் போது என் முகத்தில் நிச்சயம் புன்னகை இருக்கும்.

சாவு பயம் தரும் ஒன்றல்ல; மாறாக வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தப்படுத்தும் நிகழ்வு. அதற்கான முற்கூட்டிய தயார்படுத்தல்கள் அவசியம்.

எனக்கு நான் செத்தால் என்னை ஊரில கொண்டு போய் புதைக்க வேண்டும் என்று ஆசை அதற்கு நிறைய செலவாகும் ஆனால் இது வரை அதற்கென்று ஒரு சதம் கூட‌ சேர்த்து வைக்கவில்லை ஒரு வேளை என்னை நான் சாவுக்கு த‌யார்படுத்தவில்லையோ தெரியாது...சாவதற்கு முதல் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ட‌ உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் என்பது எப்போது யார்,யாருக்கு எப்படி வருகிறதோ தெரியாது..வாழ்ந்து கொண்டு இருக்கும் போது அதைப் பற்றியே ஆராச்சி செய்து கொண்டு இருப்பதிலும் அர்த்தம் இல்லை...என்னைப் பொறுத்த மட்டில் வந்தம்,போனம் என்று இருக்க கூடாது.மற்றவர்களுக்கு ஏதாச்சும் உதவி செய்து கொண்டே இருக்கவேணும்..என் தேவைகள் பூரணப்படுத்தப்படாது விட்டாலும் மற்றவர்களுக்கு ஒரு விடையத்தை செய்துட்டு அவர்கள் அதனால் முன்னேறும் போது அந்த சந்தோசத்தோடு,திருப்தியோடு போகனும்....மற்றப்படி படுக்கையில் எல்லாம் கிடந்துடக் கூடாது என்பதும் என் விருப்பங்களில் ஒன்று...என் தந்தையாரோடு ஏதாவது இது பற்றி கதைக்க தொடங்கிட்டால் ரொம்ப திட்டு வாங்க வேண்டி வரும்..காரணம் மிக இளம் வயதில் இப்படியான எண்ணங்கள் இருக்க கூடாது என்று சொல்வார்...ஆனால் மரணம் இவ் உலகில் மனிதனாக பிறந்த எல்லோருக்கும் நிச்சயிக்கப் பட்ட ஒன்று தானே.

  • கருத்துக்கள உறவுகள்

செத்த பிறகும் தன் குடும்பம் வாழ வேண்டும் என நினைத்து

. நான் செத்துப் போய் கிடக்கும் போது என் முகத்தில் நிச்சயம் புன்னகை இருக்கும்.

இந்த கருத்தை வாசித்து விருப்பு வாக்கு குத்தியபின் கீழே வந்து வாசித்தால்

ரதியின் கருத்து

மிகவும் சுட்டது.

எனக்கு நான் செத்தால் என்னை ஊரில கொண்டு போய் புதைக்க வேண்டும் என்று ஆசை அதற்கு நிறைய செலவாகும் ஆனால் இது வரை அதற்கென்று ஒரு சதம் கூட‌ சேர்த்து வைக்கவில்லை ஒரு வேளை என்னை நான் சாவுக்கு த‌யார்படுத்தவில்லையோ தெரியாது...சாவதற்கு முதல் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ட‌ உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்

இரண்டுக்கும் எவ்வளவு முரண்பாடு

இது தான் வாழ்க்கையின் தத்துவம்

எதை நீ தெரிவு செய்வாய்.

வாழும்போது வாழ்வதையா?

செத்த பின் உன் ஆசைகளையா?

இருக்கும் போது அனுபவிக்காமல் செத்த பின் மணி மகுடம் கட்டி என்ன பலன்???

ஆனால் செத்தபின்பும் நாம் வாழலாம்

அதற்கானவை என்ன???

இது பற்றியும் நாம் இங்கு பேசலாமே........

ஒவ்வொரு தடவையும் சத்திரசிகிச்சை ஆரம்பிக்கமுன் எனக்கு மயக்கமருந்து (anesthetics) ஏற்றப்படும்போது, 'உங்களை நான் இப்போது தூங்கவைக்கப்போகின்றேன், மூச்சை நன்கு இழுத்துவிடுங்கள்' என கையில் மயக்க ஊசியை செலுத்தும் மருத்துவர் கூறும்போது - நான் தன்னுணர்வுடன், சுயநினைவுடன் கடைசி மூச்சை இழுக்கும்போதும் குறிப்பிட்ட இந்த சொற்றொடரையே பயன்படுத்தி வருகின்றேன்.

நம்ம கம்பனி ஒரு தடவை தடிமன் காச்சலுக்கு போகவே உதவாது.

உங்க மெடிக்கல் இன்சூரண்ஸ் கம்பனி என்ன என்று கூறமுடியுமா? ^_^

அமெரிக்காவிலை இருக்கேக்கை சாவு வரும் போது சொல்ல நல்ல மந்திரம், நல்ல ஒரு மருத்துவ இன்சூரன்ஸ் கம்பனியின் பெயர்தான். அதை பாடமாக்கி வைத்திருந்தால் கடைசி பிள்ளைகள் தன்னும் கடன் இல்லாமல் சீவிச்சு சாகும். :D

கோவிக்காதையுங்கோ; நானும் யாரோடும் கோபமில்லை; யார் கருத்துக்கும் எதிர்ப்பும் இல்லை;வாசிச்ச குற்றத்திற்கா ஒரு கமெண்ட் எழுத்த வேண்டும் என்ற கடமை உணர்வு. அவ்வளவுதான் . " யாழிலை நித்தியானந்தாவும் சீடர்களும் சுத்த அலட்டல் மட்டும் தான்" :lol: :lol: :lol:

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் என்பதை, எனது இறுதியாக நான் நினைப்பதில்லை!

அதனால் மரணம் என்னைப் பயமுறுத்துவது இல்லை!

ஆனால், அடிக்கடி மரணத்தை நினைவு கூருவது, வாழ்வின் நிலையாமையை அடிக்கடி நினைவு படுத்தும்!

இந்து மதம், புத்தமதம், ஆகியவற்றின் அடித் தளமே, வாழ்வின் நிலையாமை தான்!

நிலையாமையை அடிக்கடி நினைத்துக் கொள்வது, எமது வாழ்வை, ஓரளவுக்கு நெறிப்படுத்த உதவுகின்றது!

இதனால் தான் எனக்குப் பட்டினத்தாரை, சித்தர்களை அதிகம் பிடிக்கிறதோ தெரியவில்லை!

ஒருமடமாதும், ஒருவனுமாகி,

இன்பசுகம் தரம் அன்பு பொருந்தி....

மிகவும் பிடித்த பாட்டு.........

பட்டினத்தார், விரக்தியின் விழிம்புக்குப் போய்த் திரும்பி வந்து, வாழ்க்கையின் நிலையாமையை விளக்கியவர்!

இதே காரணத்தால், கண்ணதாசனையும் பிடிக்கும்!

அஞ்சினர்க்க்குச் சத மரணம்!

அஞ்சாத நெஞ்சத்து ஆடவருக்கொரு மரணம்!

துஞ்சுவர் என்று அறிந்திருந்தும் சாதலுக்கு,நடுங்கும்,

துன்மதி மூடரைக்கண்டால், புன்னகை செய்பவன் நான்!

இந்தப் பாடல், சர்க்கரவர்த்தி அலெக்ஸ்சாண்டர் பாடுவது போல், யாரோ ஒருவர் எழுதியது!

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!

விபுலானந்தர் - சேகிஸ்பிரயரின் நாடகத்தை தமிழில் மொழியர்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

விபுலானந்தர் - சேகிஸ்பிரயரின் நாடகத்தை தமிழில் மொழியர்தார்.

நன்றிகள், மல்லை!

எனக்கு சாவு பற்றிய பிரக்ஞை இருப்பதால் தான் வாழ்வை மிகவும் ரம்மியமானதாக வைத்திருக்க விரும்புகின்றேன். முடிந்த போதெல்லாம் ஊர் ஊராகச் சுற்றி அங்குள்ள அழகிய இடங்களை பிள்ளைகளுக்கும் காட்டி மகிழ்கின்றேன். ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக சமைத்து சாப்பிட்டு ருசிக்க விரும்புகின்றேன். பாலியல் விடயங்களும் ஒன்றையும் மிச்சம் வைக்க கூடாது என்று எண்ணுகின்றேன். நான் செத்துப் போய் கிடக்கும் போது என் முகத்தில் நிச்சயம் புன்னகை இருக்கும்

நீங்கள் உங்கள் வாழ்வு எப்படி போகும் எழுதி வைத்திருக்கிறீர்கள். தொடர்ந்து வரவிருக்கும் இன்பதை தவறவிட்டுவிடாமல் அனுபவிக்க தயாராக இருக்கிறிர்கள். ஆனால் மெனிக் பாமில் இருந்தவர்கள் சூரிய புரம் காட்டுக்குள் துரத்தபடும் முன் தாங்கள் தங்கள் வீடடுகளுக்கு திரும்புவதாக்தான் நினைத்தார்கள்.

ஒருவேளைஅப்படி நினைப்பதால் தன்னும் வரவிருக்கும் துன்பத்தை எதிர்கொள்ளாமல் இன்பம் கூடிய இன்பம் காணலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கல் இன்பம் இன்பம் என்று அலையாமல் கணை மூடித்தியானம் இருந்து இண்பதை அனுபவிக்க முடியாதா?

எல்லோரும் உங்களை பற்றியே மட்டும் சிந்தித்து அதையா "மெய் எனப்படுவதில்" எழுதிகிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.