Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாளனின் வரவு

Featured Replies

  • தொடங்கியவர்

ஐரோப்பிய தடைக்கு மனுவும் கனடிய தடைக்கு கண்டனமும் இடைக்காடரின் முயற்சிக்கு வாழ்த்தும் மயிலில் போய்விட்டது.

புலம்பெயர் மக்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றது. வேற்றின மக்களுக்குள் தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கான ஆதரவை பெருக்க வேண்டும்.

வல்லினமற்ற மெல்லின மக்கள் நாம் என்று புரியவைக்க வேண்டும்.

அதுசரி ! அல்லிகா நான் இல்லாளன் இல்லத்தை ஆள்பவன் அல்ல. எல்லோரையும் எல்லை வரை ஆள்பவன் எல்லாளன்.

பெயரை மாத்தி விட்டீர்கள். பாத்து..ம்..மா... :roll: :roll:

விளக்கத்துடன் -எல்லாள மஹாராஜா-

  • Replies 224
  • Views 23.6k
  • Created
  • Last Reply

வணக்கம் எல்லாளன் வாருங்கள்

  • தொடங்கியவர்

புயலுக்கு ஒரு வரவேற்பு

--------------------- :idea: :idea:

புயல் புலியாகி வருகின்றாதோ...

புவியாளும் நாள் தெரிகின்றதோ..

எல்லைகளின் நாயகன் எனைத் தேட...

எதிரிகளின் குலை நடுநடுங்க...

காத்திருந்தவரை காற்றாய் இருந்தோம்..

புறப்பட்டவுடன் புயலாய் எழுந்தோம்..

சுற்றும் பூமி இனி எமைச் சுற்றட்டும்..

சுதந்திர வானில் கொடி பறக்கட்டும்..

புலிக்கு ஒரு காலை புவிக்கு ஒரு நாளை

புத்தனின் பூமி அறியட்டும்..

எழுச்சியுடன் -எல்லாள மஹாராஜா-

:!: :!: :!: அடடா......

தமிழ், வரலாறு இரண்டும் கலந்து விளையாடும்

எல்லாளர் சபைக்கு வந்துவிட்டேனா..........

நல்லது, நல்லது

ஆதிவாசியாக......

யாம் உலவ வந்ததுபோல்

எல்லாளன் வடிவேற்று வந்தவரே!

வணங்குகிறோம்........ வரவேற்கிறோம்.

இனம்காக்கும் வரலாறும்இ இலக்கியப்பணியும்

தமிழர் நலங்காக்க புறப்பட்டது புரிகிறது.

வாழ்த்துக்கள்....

:lol::lol::D:D:D:D:D:D :P :P :P அவைக்கு வந்தவர் ஆதிவாசி......

  • தொடங்கியவர்

தந்தனத் தந்தன தாளம்

தகிக்கும் நல் ஞானம்

கொண்டு வளர் பூமியில்

கொலுவிருக்கும் நம் சபையில்

அனுமனின் வடிவே..

ஆதியின் வாசியே..

இளமையின் உருவே

ஈதலின் சிறப்பே

உதவியில் உலகே

ஊடலில் மடுவே

எண்ணத்தின் நிறைவே

ஏந்தலின் அருளே

ஐயனின் கொடையே

ஒன்றின் நிறைவே

ஓர்மத்தின் சிறப்பே

ஒளடதத்தின் வலிவே

வருக வருக வென்று (வாழைப்பழம் தந்து) :roll: :roll: வரவேற்கின்றோம்.

வாழைப்பழத்துடன் -எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணமுறு தமிழ்மகளின்

எண்ணமுறு பெருவேந்தே!

தொண்மையுறு வரலாறும்,

திசையொளிரும் பெரும் புறமும்

திண்மையுற வாழ்ந்த கோவே!

எல்லாள வடிவெடுத்து

எழுச்சியுூட்ட வந்த வேளே!

வில்லாண்ட அர்ச்சுனனாய்

வைத்த குறி தப்பாது

சொல்லாண்டு சேதி செப்பி

சொந்தநாடு காத்திடுக!

:? :? :? :? இருகரம் கூப்பி வரவேற்கும்

வல்வை சகாறா.

  • தொடங்கியவர்

வளம் மிகு வல்வைப் பதியில்

வண்ணத் தமிழின் காவலராய்

யாழின் இசை மீட்ட-இப்புவியில்

யாருமிலை எனுனிலை மாற்றி

புலியின் கொடி பறக்கும் எனும்சேதி

புல்லர்க்கு பகன்ற வீரம்

தமிழணங்கின் தலைக்கவசம்

தக தகக்க வெழுந்த வீரம்

தரணி நிலை நாளும்

தளராது சேதி சொல்லும்

வல்வை சகாறாவால்

வந்ததே தமிழுக்கு சகாயம் -என்றே

வரவேற்கின்றோம் எம் சபைதனைக்கே

வல் வில் திறம் மேவிய..

வரவேற்புடன் -எல்லாள மஹாராஜா- :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பூ நீ சொன்னது சிந்தப்பூ...(பாடல்)

அன்னையைத் தமிழ் வாயால் "மம்மி" என்றழைத்தாய்

"அம்மியை" அன்னிய வாயால் என்னவென்றழைப்பாய்...

வெள்ளைக்காரன் தான் உனக்கு அப்பனா? - அப்போ(து)

வீட்டிலிருப்பவன் என்ன சுப்பனா?..

தமிழா நீ பேசுவது "டமிலா" இல்லை "தமிழா"

எல்லாளன் அவர்களுக்கு, 'இது தமிழா நீ பேசுவது தமிழா!' என்ற கவிதை எனக்கு மிகவும் பிடித்த, ரசித்த கவிஞரான காசி ஆனந்தன் எழுதிய கவிதை. தமிழ் மீது காதல் கொண்டதினால் தான் இக்கவிதையிலிருந்து சிலவரிகளினை நான் இணைத்துள்ளேன். தயவு செய்து தமிழைப் பழிக்கவேண்டாம்.

எல்லாளனின் கருத்துக்களினை நான் விருப்பிபடிக்கிறனான். அழகிய தமிழில் எழுதும் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது.

  • தொடங்கியவர்

ஐயையோ... தவறாக விளங்கிக் கொண்டீர்களே...

கவிஞர் காசி அண்ணனின் கவினுறு நறுக்குகளில் காதல் கொண்டவன் நானும்.

தமிழைப் பழிக்கவில்லை. டமில் பேசும் தமிழரைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். பிழையாக விளங்கிக் கொள்ள வேண்டாம். :cry: :cry: :cry:

பனிக்கும் கண்களுடன் -எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

உலகம் உருண்டை என்பார்கள்.... அது சரியாகத்தான் இருக்கின்றது. என்னால் கொஞ்ச ஆட்களைத்தான் சந்திக்க முடிந்திருக்கின்றது.

ஏனென்றால் நான் இன்னும் பாலை வனத்தில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றேன்.

ஒட்டகத்தில் பயணிக்கும் -எல்லாள மஹாராஜா- :shock: :shock: :shock: :shock: :shock: :shock:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லாளன் புத்தனின் சரணங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஏ லொள்ளரே" இங்கே பாலைவனம் சோலைவனம் என்று லொள்ளடிக்காமல், துட்ட கைமுனியிடம் இழந்த தமிழர் ஆளுமையை கைப்பற்றுவதில் முயற்சியெடும் வீரரே! :P

அல்லிகா

வணக்கம் எல்லாளமகாராஐா

ஒரு கலக்குத்தான் கலக்குறீங்கள்.

உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

:P :lol:

கரி(யானை) யதனில்

கால் தடங்கி வீழ்ந்ததென்ன...?

துட்டனிடம்

துண்டாகிப் போனதென்ன..?

தமிழிற்கே

தலை குனிவை தந்ததென்ன..?

தள்ளாத வயதினில்

உனக்கு வில்லெதற்கு...?

பொல்லோடு

பொடிநடையாய் போய்விடு! :twisted:

  • தொடங்கியவர்

ஆனந்த மார்க்கத்தை அருளியவனே! நீ சரணா கதி அடைந்ததனால் தான் சிங்களவர் உனை மறந்தார்..உன் மார்க்கம் மறந்தார்... துன்மார்க்கத்தினராய் .. உன்மத்தம் கொண்டு உயிர் வாங்கி.. உதிரம் குடித்துத் திரிகின்றார்.

இன்னொரு முறை நீ பிறக்க வேண்டும். இச்சிறு மதியாளரின் பாவங்களை நீ துடைக்க வேண்டும்.

வேண்டுதலுடன் வரவேற்கும் -எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

அல்லிகா ! தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான் .. என் "தம்பி" இருக்கையில் தமிழர் ராஜ்ஜம் மீண்டும் கைவரப் பெறுவதில் ஏதும் ஐயமும் உளதோ?

நம்பிக்கையுடன் -எல்லாள மஹாராஜா- :):lol:

  • தொடங்கியவர்

சுபித்திரன்....

கலங்கின குட்டை தானே தெளியும். முடிந்தளவு கலக்கிவிடுவோம். தானே தெளிந்து விடும்.

பின்னர் தான் தெரியும். ஷேக்ஷ்பியர் சொன்னதைப்போல "ஆழ் கடலின் அடியில் தான் எத்தனை விலை மதிக்க முடியாத இரத்தினங்கள் இருக்கின்றன. பாலை வனத்தின் புழுதிக்காற்றில் தான் எத்தனை மணம் கமழும் மலர்கள் மலர்ந்து வீணே போகின்றன"

என்பதைப்போல் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும், எத்தனை அரிய இரத்தினங்கள் யாழ் களத்தில் மின்னப்போகின்றன என்று பார்ப்போமே. :?: :?:

வைரங்களை எண்ணப்போகும் ஆர்வத்துடன்

-எல்லாள மஹாராஜா-

வணக்கம் எல்லாளன் வாருங்கள்

  • தொடங்கியவர்

தம்பி நீர் கெளரி பாலனா? இல்லை குளறு படி பாலனா?

44 வருடம் ஒப்பாரும் மிக்காரும் இன்றி சிங்களத்தையும் என் காலடியில் போட்டு ஆட்சி செய்த நான் ..தமிழருக்கு தலை குனிவா?

பகைவனும் என் வீரத்தை மெச்சி 2000 வருடங்கள் என் சமாதிக்கு வீர வணக்கம் செய்தது... தமிழருக்கு தலை குனிவா?

வெல்லமுடியாத என் வீரம் கண்டு நயவஞ்சகத்துடன் தனிப்போருக்கு துட்டன் எனை அழைத்தபோது சூழ்ச்சி என்றறிந்தும்...

"தன் மகன் முதுகில் வேல் பாய்ந்து இறந்தான் என்று கேட்டு அவனுக்கு பால் கொடுத்த முலை அறுத்து எறிவேன்" என்று போர்க்களம் சென்று தன் மகன் மார்பில் வேலேந்தி வீரனாக இறந்தான் என்று அறிந்து உவகை கொண்ட வீரத் தமிழ் குடியில் பிறந்து....

தனிப்போருக்கு மறுத்தான் தமிழ் மன்னன் என்ற இழி சொல்லுக்குப் பயந்து தள்ளாத வயதிலும் வீரத்துடன் போரிட்டு உயிர் துறந்த நான்.... தமிழருக்கு தலை குனிவா?

சிங்களவரின் சீர்மையையே சொல்லப்புகுந்த என் மறைவின் பின் 2 நூற்றாண்டுகளின் பின்னே எழுதிப்போந்த பொய்யின் வடிவமாம் மஹாவம்சத்திலேயே என் கீர்த்தி மறைக்க விரும்பாது மாற்றானும் போற்றி விதந்துரைத்த புகழ் கொண்ட நான் ...தமிழருக்கு தலை குனிவா?

அன்றி அன்று விட்ட தமிழ் ராஜ்ஜத்தை இன்று வரை மீட்டெடுக்க வக்கில்லாது வெறுங்கதை பேசுவதில் வீணே காலத்தைக் கடத்தும் நீங்கள் ....தமிழருக்கு தலை குனிவா?

வெறுங்கதை பேசி...வீணே சோம்பி கிடந்து ...சோத்துக்கு அலையும் நீங்கள்...... தமிழருக்கு தலை குனிவா? இல்லை நானா?

சீரிய அறம் இழந்தான்... செவ்விரத்தம் இழந்தான்.. சிந்திக்கும் திறனும் இழந்தானோ தமிழன்....

முதுமையில் கோலூன்றுவது இழிவன்று... முழுமையின்மையால் அரற்றித் திரிவது தான் இழிவு... :evil: :evil:

ஆற்றாமையில் -எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

மட்டுறுத்துனர் மதன்... நீங்கள்

மற்றவருக்கு உறுத்தினரோ... இல்லை... உரித்தினரோ...

உள்ளபடியே அன்பு கொண்ட உளத்தினரோ...

யாழ் களம் சிறக்க.... யாப்பெழுதி...

யாமிருக்கப் பயமேன் -என

கை கொடுக்கும் தோழனுக்கு...

சபை நிறைந்த வரவேற்பளிக்கும்

-எல்லாள மஹாராஜா-

â¨É¸û þÉõ §À¡§Ä ÀÐí̾ø þƢšÌõ

ÒĢ¢Éõ ¿£ ±É¢ø ¦À¡Õ¾¢¼ šáö.....±É

þý¨¨È Ðð¼ý ÝúԼý «¨Æò¾§À¡Ðõ...

¾Á¢ú Áì¸Ç¢ý ±¾¢÷¸¡Äõ ¸Õ¾¢ «¾ü¸¡É ºÁÂõ ºó¾÷ôÀõ

À¡÷òÐ측ò¾¢Õ츢ȡý ჾó¾¢ÃÁ¢ì¸ ¿õ ¾¨ÄÅý

þÅý «ý¨È ±øÄ¡Çý «øÄ.......

  • தொடங்கியவர்

வரலாறு கற்றுக் கொடுத்திருக்கின்றது.

முருகா நீயே கிபீருக்குப் பயந்து தலைக்கவசத்துடன் பதுங்கித் திரியும் :):lol::lol: போது .....

மானுடர் நாம் எம்மாத்திரம்? முருகா நீ எங்கிருந்து பேசுகின்றாய்?

நீ எங்கிருக்கின்றாய் என்று தெரியாமல் எம் புலம் பெயர்ந்த மக்கள் வீதிக்கு வீதி கோவில் கட்டி "உண்டியலுக்கு" சண்டை பிடித்துத் திரிகின்றார்கள். :o:o:o:o

சண்டையைப் பார்த்து சகிக்காத -எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளனின் பதில்கள் கவிதை நடையுடன் நகைச்சுவையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

எல்லாளனின் பதில்கள் கவிதை நடையுடன் நகைச்சுவையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்

கவிதை நடை நொண்டாமலும் நகை சுமையாகவும் இல்லாதிருக்கும் வரை சேமமே....

நொ(நோ)ண்டப் பயத்துடன்

-எல்லாள மஹாராஜா- :roll: :roll:

வணக்கம் எல்லாளன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.